Tuesday, September 30, 2008

M.G.R.,படப் பாடல்களும்..அறிவுரைகளும்.... பாகம்-1

M.G.R., படங்கள் என்றாலே...பொதுவாக பாடல்கள் இனிமையாக இருக்கும்.,அத்துடன்..சில அருமையான கருத்துக்கள்,அறிவுரைகள் எல்லாம் இருக்கும் அவற்றில் சில இப்பதிவில்.

மலைக்கள்ளன் படத்தில்..'எத்தனைக்காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டில்' பாடலில் வரும் வரிகள்.

'சத்தியம் தவறாத உத்தமர் போலவே நடிக்கிறார்
சமயம் பார்த்து பல வழிகளிலும் கொள்ளை அடிக்கிறார்'

மகாதேவி படத்தில்'தாயத்து..தாயத்து'பாடலில்

'குறுக்கு வழியில் வாழ்வு தேடிடும் குருட்டு உலகமடா-இது
கொள்ளையடிப்பதில் வல்லமை காட்டிடும் திருட்டு உலகமடா-தம்பி
விவரம் புரிந்து நடந்துக் கொள்ளடா -உலகம்
திருந்த மருந்து சொல்லடா'

திருடாதே படத்தில்-திருடாதே பாப்பா பாடலில்

'கொடுக்கற காலம் நெருங்குவதால் எடுக்கற அவசியம் இருக்காது
இருக்கிற தெல்லாம் பொதுவாய்ப் போன பதுக்கற வேலையும் இருக்காது
உழைக்கற நோக்கம் உறுதியாயிட்டா
எடுக்கற நோக்கம் வளாராது'

தாய்க்கு பின் தாரம் படத்தில்..

தரையைப்பார்த்து நிற்குது கதிரு
தன் குறையை மறந்து மேலே பார்க்குது பதரு
அடக்கமுள்ளது அடங்கிகிடக்கது வீட்டிலே -சில
ஆகாது சிலது ஆர்ப்பாட்டம் செய்யுது வெளியிலே
சின்னச்சின்ன கைகளை நம்பி பாடலில்

'அன்னையிடம் நீ
அன்பை வாங்கலாம்
தந்தையிடம் நீ
அறிவை வாங்கலாம்
இரண்டும் இருந்தால்
ஊரை வாங்கலாம்
ஊரை வாங்கினால்
பேரை வாங்கலாம்'

விவசாயி படத்தில்

'இருந்திடலாம் நாட்டில் பல அன்னக்கொடி
எத்தனையோ கட்சிகளின் எண்னப்படி
எங்கும் பறக்க வேண்டும் ஒரு சின்னக்கொடி
அது பஞ்சம் இல்லை என்னும் அன்னக்கொடி'

பாகம் 2 தொடரும்.

கலைஞர் ஆட்சியில் மணல் கொள்ளையாம்...மண்குதிரை சொல்கிறது

இப்படி சொல்பவர் யார்? காமராஜர் ஆட்சி அமைப்போம் என்று சொல்லிக்கொண்டு 40 ஆண்டுகளுக்கு மேலாக..யார் முதுகிலாவது ஏறி சவாரி செய்யுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாட்டு குட்டித் தலைவரில் ஒருவர்.
நேருக்கு நேர் ..பழி சொல்லிடும்.. எதிரியைக் கூட நம்பிடலாம்..ஆனால்..உடன் இருந்து கழுத்தறுக்கும் நண்பனை நம்பக்கூடாது என்னும் கூற்றுக்கு சரியான உதாரணம் இவர்.
ஒரு குட்டித் தலைவர்..ஆட்சியில் பங்கு வேண்டும் என்றார் சமீபத்தில்..
இப்போது இவர் .....ஆட்சியில் மணல் கொள்ளை என்கிறார்...
ஐயா..காங்கிரஸ் குட்டித் தலைவர்களே..முதலில் நீங்கள் ஒன்று சேருங்கள்..தேர்தலில் தனித்து போட்டி யிட்டு...மக்களிடம் உங்களுக்கு ஆதரவு எவ்வளவு இருக்கிறது என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள்.பின்னர் பேசுங்கள்.
எங்கள் ஆதரவு இல்லையென்றால்..திராவிட கட்சிகள் ஆட்சி அமைக்க முடியாது என்கிறீர்கள்.
ஆம்...உண்மைதான்..
ஆனால்..நீங்கள் சொல்லும் அந்த திராவிட கட்சிகள் ஆதரவு இல்லை என்றால் உங்களால் ஒரு சில எம்.பி.க்கள் கூட டெல்லி செல்ல முடியாது..தமிழகத்திலிருந்து.
யானைக்கு தன் பலம் தெரியாது என்பார்கள்.
ஆனால் உங்களைப்பார்த்தால்..பூனை தனக்கு யானை பலம் இருப்பதாக கனவு காண்பதைப்போல் இருக்கிறது.
உங்கள் வாய்க்கு..பூட்டு பூட்டிக் கொள்ளுங்கள்..இல்லையேல்..பாராளுமன்ற தேர்தலில் கலைஞரின் சத்துணவு திட்டத்தில் முட்டை போடுகிறார்களாம்...அதற்கு உதவி செய்தவர் ஆவீர்கள்.

Monday, September 29, 2008

இழிநிலையில் வாடும் மக்களை தூக்கிவிட 61 ஆண்டுகள் போதவில்லையா அரசியல்வாதிகளே!!!

மனிதக் கழிவுகளை அகற்றும் வேலை செய்வோர்..புண்ணியமான வேலையைச் செய்கிறார்கள்..என்று நரேந்திர மோடி சொன்னதும்...அதற்கு எல்லா இடங்களிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது.
அவர் சொன்னது சரியா..தவறா..என்ற கேள்விக்கே இடமில்லை.அப்படிப்பட்ட வார்த்தையை..ஒரு பார்ப்பன மோடி சொன்னார் என்பதால் வந்த எதிர்ப்பல்ல அது.அதே வார்த்தைகளை யார் கூறியிருந்தாலும் மனித நேயம் உள்ளவர் அனைவருமே பொங்கி எழுவர்.
ஆனால்...தாழ்த்தப்பட்டவர்கள்,பிற்படுத்தப்பட்டவர் களுக்காகவே வாழ்கிறேன். என் நெஞ்சில் தைத்த முள் ..என்றெல்லாம் பேசும் தமிழக முதல்வர் ஆளும் தமிழ்நாட்டின் நிலை என்ன?
மனிதக்கழிவுகளை மனிதனே அள்ளியெடுக்கும் கொடுமையை ஒழித்து..,அத் தொழிலில் ஈடுபட்டிருக்கும் பரிதாப ஜீவன்களுக்கு மறுவாழ்வு தரும் திட்டத்திற்கான மத்திய அரசின் நிதியை தமிழகம் முழுமையாக பயன்படுத்தி இருக்கிறதா?
தேசிய துப்புரவு பணியாளர் ஆணையத்தின் தலைவரான சந்தோஷ் சவுத்ரி..தமிழகத்துக்கு 54 கோடிக்கும் மேலாக ஒதுக்கப்பட்ட நிதியில் ,கணிசமான நிதி இதுவரை பயன்படுத்தப் படவில்லை என்ற புகாரைக் கூறியிருக்கிறார்.
முதல்வர் வழக்கம்போலவே,,முந்தைய ஆட்சியைக் குறை சொல்வதுபோல..'92ம் ஆண்டு இத் திட்டம் அமுலுக்கு வந்தது முதல் ,இன்றுவரை பெரும்பகுதியை மனிதக் கழிவு அள்ளுவோரின் மறுவாழ்வுக்கு தி.மு.க.பயன் படுத்தி இருக்கிறது.'.என புள்ளி விவரங்களை அள்ளித் தெளித்துள்ளார்.
இப்படி ஒருவர் மீது ஒருவர் பழி போடுவது நிறுத்தப்படும்வரை..இது போன்ற நல்காரியங்களுக்கு விமோசனமே இல்லை என்பதே சாமான்யரின் கருத்து.
அரசும்...தேர்தலை மாட்டும் மனதில் கொண்டு..இலவசங்களை வாரி வழங்குவதை விட்டு விட்டு..எதற்கு முன்னுரிமை தர வேண்டுமோ அதற்கு முன்னுரிமை தர வேண்டும்.
அதை விட்டு விட்டு...தாழ்த்தப்பட்டோர் நலன் பற்றி பேசுவது..ஏட்டு சுரைக்காய் போலத்தான்.

Sunday, September 28, 2008

மாண்புமிகு நந்திவர்மன் -நாடகம்

எனது சமீபத்திய மான்புமிகு நந்திவர்மன் என்னும் அரசியல் நையாண்டி நாடகத்திற்கு ஹிந்து பத்திரிகையில் வந்த விமரிசனம்

‘Maanbumigu Nandivarman’ written by T.V.Radhakrishnan and presented by the Sowmya Theatre Group was a stinging political satire. The situations and characters were thinly disguised.

In recent times one has not seen a play so cleverly written and so bold in its indictment of politicians and their ways. The much used device of God coming down to earth to participate in the doings of men was employed here in an effective and fresh manner. Concluding that politics is all corrupting and the lucre lure does not escape even divine beings, He leaves the earth a wiser god.

t is a play that has an immediate relevance for those in this State and are familiar with the political events here. Though it was entertaining and well directed, it would have been better if the play had been more broad based Being so close to the bone deprives it of poetic and artistic merit at times.

Good timing in the delivery of lines by Radhakrishnan as Siva and Karur Rangaraj as the freedom fighter gave the play its racy quality.

Saturday, September 27, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.அந்த டாக்டர் ஐயப்ப பக்தர்னு எப்படி சொல்ற..
தலைவலின்னு போனாக்கூட படிப்படியா 18 நாள் மருந்து சாப்பிடணும்னு சொல்வார்.

2.அந்த டாக்டர் முன்னாலே சினிமா டைரக்டரா இருந்தார்னு எப்படி சொல்ற
நோயாளிகிட்டே 4 ரோல் எக்ஃஸ்ரே ஃபிலிம் எடுத்துடுங்கன்னு சொல்றாரே!!

3.புயல் மழையாலே மாமூல் வாழ்க்கை பாதிக்கப்பட்டதுன்னு சொல்றாங்களே..ஏன்?
மாமூல் வாங்கறவங்க வாழ்க்கை பாதிக்கப்பட்டதை அப்படி சொல்றாங்க போல யிருக்கு.

4.தயாரிப்பாளர்-கண்ணே..கலைமானே ங்கிற பாட்டை நீங்க எழுதினீங்களா?
கவிஞர்- ஆமாம்
தயாரிப்பாளர்- வாங்க கண்ணதாசன் ஐயா...இவ்வளவு நாட்கள் நீங்கள் அமரர் ஆகிட்டீங்கன்னு நினைச்சுக்கிட்டு இருந்தேன்.

5.உன் பையன் புதுசா..ஏதோ பிஸினஸ் ஆரம்பிக்கப்போறதா சொன்னியே..என்ன பிசினஸ்
மெகா சீரியல் பார்க்கறச்சே எப்படி அழணும்னு சொல்லிக்கொடுக்கப் போறானாம்.

6.கல்யாணம் ஆனதிலே இருந்து..வனஜாவுக்கு கர்வம் ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்
அவ புருஷன் அருமையா சமைக்கிறானாம்.

Friday, September 26, 2008

ரஜினியின் அரசியல் பிரவேசம்

ரஜினியின் அரசியல் பிரவேசம் பற்றிய ஹேஸ்யங்களுக்கு இனி இடமில்லை. ஒன்றரை வருடங்களுக்கு முன்பு, அரசிய லில் நுழைவது பற்றி எடுத்த முடிவை ரஜினி இப்பொழுதுதான் உறுதி செய்து கொண்டுள்ளார்.

ரஜினியின் பொதுவான வழக்கம், எந்த ஒரு விஷயத்திலும் தனக்கு முழுமையான தெளிவு பிறக்காதவரை அதுபற்றி அவ்வப்பொழுது சில கருத்துக்களை வெளியிடுவார். அதற்கு வரும் எதிர்ப்புகள், ஆதரவுகள், விளக்கங்கள் அனைத்தையும் உற்று கவனித்து தனக்குள் யோசிப்பார். அந்த மாதிரி சிந்தனையின்போது பொறிபோல் தோன்றும் முடிவில் உறுதியாகிவிடுவார்.

அந்தப் பாணியில்தான் அரசியலைப் பற்றியும் தனது இறுதி முடிவை ரஜினி எடுத்துள்ளார். அது என்ன முடிவு என்கிற அறிவிப்பு, வரும் அக்டோபர் 9 ரஜினி பிறந்த திருவோணம் நட்சத்திரத்தில் வரும் விஜயதசமியன்று வெளியாகும். ரஜினியின் ரசிகர்கள் விஜயதசமியன்று வெற்றிக் கொடிகட்டி பட்டாசு வெடிக்கலாம்!'' என்று சூப்பர் ஸ்டாரின் நீண்டகால நண்பரும், கலைக் குடும்பத் தலைவர், நாட்டாமை நடிகரின் தூரத்து உறவினருமான பட்டுக்கோட்டைக்காரர் பளிச்சென்று சொல்ல, நம்மால் நம்பவே முடியவில்லை... ஆனால் படிப்படியாக நடந்த விஷயங்களை அவர் பட்டியல்போட நமக்குள்ளும் படபடப்பு கூடியது.

``எந்த ஒரு விஷயத்திலும் ரஜினி கமிட் ஆகும் ஸ்டைலே தனி. ஒரு படத்தை ஒப்புக்கொள்வது முதல் ஒரு பயணத்தை மேற்கொள்வதுவரை எதுவாயினும் இறுதி முடிவு என்று ஒன்றை ரஜினி எடுத்துவிட்டார் என்றால், உடனே அதை அந்த சமயத்தில் கையில் கிடைக்கும் காகித்தில் தன் கைப்பட எழுதி பத்திரப்படுத்திக் கொள்வார்... அப்படி எழுத்து வடிவம் பெற்ற எந்த முடிவையும் அவர் ஒருநாளும் மாற்றமாட்டார்.

ஒரு படத்தில் நடிப்பது பற்றி முடிவு செய்வது, அதற்கான கால்ஷீட்டை ஒதுக்கித் தருவதுகூட இந்தத் துண்டுச் சீட்டு வழி முறையினால்தான். முத்திரைத்தாள்கள் எல்லாம் ஒரு நாளும் ரஜினியின் முடிவைக் கட்டுப்படுத்தியதில்லை.

தனக்குத் தோன்றியபோது துண்டுக் காகிதத்தில் சில தேதிகளை எழுதி வைத்திருப்பார். எதிர்பாராத சமயத்தில் யாராவது ஒரு தயாரிப்பாளரின் கையில் அந்தக் காகிதத்தைத் திணித்து, ``இதுதான் டேட்ஸ்... மற்ற ஏற்பாட்டை கவனிங்க!''ன்னு ஒற்றை வரியில் சொல்லிவிட்டு சடக்கென திரும்பி ஸ்டைலாக காரில் ஏறிப் போய்விடுவார்...

அடுத்த விநாடி அந்தக் காகிதம் கையில் கிடைத்த தயாரிப்பாளர் கோடீஸ்வரன்.. அப்படியொரு காகிதம் இளையராஜாவின் அண்ணன் ஆர்.டி.பாஸ்கருக்கும் கிடைத்தது. அதன்பின் உருவான படம்தான் `ராஜாதி ராஜா'. ரஜினி கைப்பட தேதிகளை கிறுக்கிக் கொடுத்த அந்தக் காகிதத்தை தன் இறுதிக்காலம் வரை பர்ஸில் பொக்கிஷமாக வைத்திருந்தார் பாஸ்கர். இதுபோல் பட உலகில் ரஜினி கொடுத்த பல பொக்கிஷங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன.

இதே பாணியில்தான் தனது அரசியல் முடிவையும் ரஜினி ஒன்றரை வருடங்களுக்கு முன்பே முடிவு செய்து காகிதத்தில் எழுதி பத்திரப்படுத்திவிட்டார். அந்த முடிவை வெளியிடும் நேரம் இப்பொழுது வந்துவிட்டதால், அரசியல் பிரவேசத்திற்கு ஆலோசனையும், அருள்வாக்கும் தந்த முக்கியமான ஒருவருக்கு முதலில் நன்றி தெரிவித்து கைப்பட கடிதம் எழுதி, பத்தாயிரம் ரூபாய் பணமும் அனுப்பி வைத்துள்ளார்!'' என்று மொத்தக் கதையையும் சொல்லி பல முடிச்சுகளையும் போட்டுவிட்டார் அந்தப் பட்டுக்கோட்டைக்காரர்.

பத்தாயிரம் ரூபாயை யாருக்கு அனுப்பினார் என்பதைச் சொல்ல அவர் மறுத்தாலும் அந்த நபரின் ஊரைத் தெரிவிக்க, நாம் நமது உளவுத்துறையை ஏவினோம்.

காஞ்சிபுரம் காமாட்சி அம்மன் கோயில் நடராஜ குருக்கள்தான் அந்த நபர். பின்னிமில்லில் `சிவாஜி' படத்தின் ஷூட்டிங்கின்போது, காரவனுக்குள் வைத்து நடராஜ குருக்கள் ரஜினிக்கு அருள்வாக்கை வழங்கியிருக்கிறார்... `அக்டோபர் 9 விஜயதசமியன்று வெற்றிக்கொடி ஏற்றுங்கள்!' என்பதுதான் அந்த அருள்வாக்கு.

அதைக் கேட்டுக் கொண்ட ரஜினி பதில் எதுவும் சொல்லாமல் குருக்களை அனுப்பி வைத்துவிட்டார். பல நாட்கள் கழித்து அந்த முடிவில் தான் ஃபிக்ஸ் ஆகிவிட்டதை, மகிழ்ச்சியுடனும், நன்றியுடனும் தெரிவிக்க எழுதப்பட்டதுதான் அந்தக் கடிதம். முடிவின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அன்பளிப்புதான் அந்த பத்தாயிரம் ரூபாய்.

நடராஜ குருக்கள் ரஜினி யின் அரசியல் முடிவை பரம ரகசியமாகப் பாதுகாத்து வைத்திருந்தாலும் சில நாள் முன்பு தன் நண்பர் ஒருவருக்கு ரஜினியின் கடிதத்தைக் காட்டியிருக்கிறார். அந்த நண்பர் நம் உளவுத் துறையின் ரேடாருக்குள் வந்தபொழுதுதான் மொத்த விஷயமும் நமக்குத் தெரிந்தது.

இறுதி முயற்சியாக நாமும் நடராஜ குருக்களை நேரில் சந்தித்து ரஜினியின் கடிதத்தைக் கேட்டோம். சந்திப்பை ஒப்புக்கொண்ட அவர், `கடிதத்தைக் காட்டுகிறேன். ஆனால் தருவது தர்மமல்ல' என்று நம்மிடம் காட்டிவிட்டு வாங்கிக் கொண்டார். எது எப்படியானாலும் அக்டோபர் 9 விஜயதசமிக்கு ரஜினிவெடி தயாராகிவிட்டது. அது வெடிக்குமா, மீண்டும் ஒரு புஸ்வாணமா என்பது தொடரும் மர்மம்....

கிணற்றுத் தவளைகளின் கதை

ஒரு பாழடைந்த கிணற்றில் தங்கியிருந்த நீரில் பல தவளைகள் வறட்டு கத்தல் கத்திய படியே வாழ்ந்துக் கொண்டிருந்தன, இவர்களுக்குள் ஒரு கிழத்தவளை ஒன்றும் இருந்தது.அது தன் மனம் போன போக்கில் நடந்து..பாக்கி தவளைகளுக்கு தொந்தரவு கொடுத்து வந்தது.
அவ்வப்போது சில தவளைகள் ஒன்றுக் கூடி அந்த மூத்த தவளையை அழிக்கப் பார்த்து ஏமாந்தன.நாளாக ஆக மூத்த தவளை தன் குடும்பத்தைப் பற்றியே கவலைப் பட ஆரம்பித்தது.
இச் சமயத்தில்..சில நாட்களுக்கு முன்..புதிதாக ஒரு தவளை..மூத்த தவளையை அழிக்கிறேன் என கிளம்பியது...அது அதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருந்த போதே..வேறோரு குட்டி தவளை..புதிய தவளைக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பித்தது.
இப்படியாக..அந்த தவளைகள் தங்களுக்குள் சண்டை போட்டுக்கொண்டே பாழும் கிணற்றுக்குள்ளேயே இருந்தன.
வெளியே ஒரு உலகம் இருக்கிறது எனத் தெரியாமல்.

Thursday, September 25, 2008

இருவரும்..குசேலனும்..பின்னே சிவாஜியும்...

இருவர் படம் சரிவர ஓடாததால்..பட வினியோகஸ்தர்களுக்கு ஒரு பகுதி பணத்தை திருப்பிக் கொடுத்தாராம் மணரத்னம்..
அதேபோல..பாபா படம் ஓடாததால் ரஜினி கொஞ்சம் பணத்தை திருப்பிக்கொடுத்தாராம்.
குசேலன் படமும் நொண்டுவதால் சில கோடிகளை விநியோகஸ்தர்களுக்கு திருப்பிதருவதாக செய்திகள் வந்தன.
கொடுத்தாரா என இந்த நாள்வரை தெரியவில்லை.
இது போன்று திருப்பிக் கொடுப்பதில் மணிரத்னம் முன்னோடியாக இருந்தார் என செய்திகள் வருகின்றன.,
ஆனால் இந்த பழக்கத்தைவிட.பெருந்தன்மையாக சிவாஜி கணேசன் நடந்துள்ளது...பாதி பேருக்குத் தெரியாது..பாதி பேருக்கு மறந்திருக்கும்.
சிவாஜி நடித்து பத்மினி பிக்சர்ஸ் சார்பில் பி.ஆர்.பந்துலு ..மா பெரும் பொருட்செலவில் கர்ணன் படம் எடுத்த்தார்.
படம் சாந்தி தியேட்டரில் வந்தது.,ஆனால் எதிர்பார்த்த அளவு ஓடவில்லை....பட அதிபருக்கும் நஷ்டம்.,
உடனே சிவாஜி பந்துலுக்கு ஒரு படம் இலவசமாக பண்ணித்தருவதாகக் கூறினார்.,
அப்படி அதிக செலவில்லாமல் எடுக்கப்பட்ட படம் முரடன் முத்து.
சுமாராக ஓடியது.
ஆனால்..என்ன காரணத்தாலோ... பந்தலு சிவாஜியை விட்டு விட்டு எம்.ஜி.ஆரை வைத்து பல படங்களை பிறகு எடுத்தார்.

உண்மையா..பொய்யா..என்னவோ நடக்குது

பல விஷயங்களில்..நாட்டு நடப்புக்களைப் பார்த்து நாம் சொல்லும் வார்த்தைகளே இவை.
இன்று...உண்மை மட்டுமே பேசுவேன்..என்று ஒருவன் சொல்வானானால் அவன் பொய் சொல்கிறான் என்று அர்த்தம்.
பொய் பேசாதவர்களே இன்று இருக்க முடியாது.
அலுவலகத்தில் விடுமுறை தேவையானால்..எற்கனவே செத்துவிட்ட நம் தாத்தா,பாட்டிகள் உதவிக்கு வந்து..அன்றுதான் மீண்டும் சாகிறார்கள்.
தான் வாங்கும் உண்மை சம்பளத்தை மனைவியிடம் கூறுபவர்கள் எத்தனை.
5000 ரூபாய்க்கு ஒரு புடவையை வாங்கிவிட்டு அத விலை 3000 என்று சொல்லாத மனைவிகள் இருக்கிறார்களா?
தன்னைவிட மதிப்பெண் அதிகம் வாங்கினவனைப் பற்றி பேசாமல்...தான் தான் முதல் மதிப்பெண் வாங்கினது போல் நடிக்கும் மாணவர்கள் எத்தனைப் பேர்,
சுருங்கச் சொன்னால்..பொய் ..நம் வாழ்வில் நம்முடன் ஒன்றிவிட்டது.
நாம் பேசுவது பொய் என்று தெரிந்துவிட்டால்...
தப்பிக்க நமக்கு இருக்கவே இருக்கிறான் வள்ளுவன்.,'பொய்மையும் வாய்மை இடத்தே என்று வள்ளுவனே சொல்லி இருக்கார்'என அவரை துணைக்கு இழுத்து விடுவோம்.

ஒரு சமயம்..அக்பர்..பீர்பாலிடம் 'உண்மைக்கும் பொய்க்கும் அப்படி என்ன வித்தியாசம் என்றார்.
உடனே பீர்பால்'நான்கு விறர்கடை வித்தியாசம்'என்றாராம்.
நான்கு விரல்களை காதுக்கும்,கண்ணுக்கும் இடையில் வைத்து'காதால் கேட்பதெல்லாம் உண்மையாகி விடாது..ஆனால் கண்ணால் காண்பது நிஜம்.அதனால் காதுகளால் கேட்பதை வைத்து எதையும் தீர்மானிக்கக் கூடாது..கண்ணால் பார்த்து தீர விசாரித்தே உண்மையை நிர்ணயிக்க முடியும்'என்றார்.
அதனால் காதிலே கேட்பதையெல்லாம் நம்பிவிடக் கூடாது.
ஆமாம் கண்ணால் பார்த்தால் அது நிஜமா...தெரியவில்லையே..
'கண்ணை நம்பாதே..உன்னை ஏமாற்றும்..'என ஒரு கவிஞன் சொல்லி இருக்கானே!!!!

Wednesday, September 24, 2008

நடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் காரணம்

அரசியல் களத்தில் தனியொரு மனிதனாக நின்று, ஹீரோ ரேஞ்சில் போராடிக் கொண்டிருந்தார், தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த். அவரை காமெடி நடிகர் வடிவேலு எதிர்த்துக் குரல் கொடுத்து, ``ஒத்தைக்கு ஒத்தையா வாரியா'' என்ற ரீதியில் கேட்க ஆரம்பித்து விட்டார்.

அதிலும் வடிவேலு வீடு மற்றும் அலுவலகம் தாக்கப்பட்ட சம்பவத்தில், விஜயகாந்த் உள்பட அடையாளம் தெரியாத முப்பது பேரின் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது காவல்துறை. அதுவும் கொலை முயற்சி வழக்கு என்பதால் இப்பிரச்னை பரபரப்புக்குப் பஞ்சமில்லாமல் பற்றி எரிகிறது.

அதற்குப் பதில் கூறியுள்ள விஜயகாந்த், `வடிவேலு தி.மு.க.வின் கைப்பாவையாகச் செயல்படுகிறார். பாவம் அவர்!' என்று பத்திரிகையாளர் சந்திப்பில் கூற, வடிவேலு கடுப்பாகி, `நானொன்றும் கைப்பாவையோ, கைப்பிள்ளையோ அல்ல. இப்படியெல்லாம் என்னைப் பற்றி அவதூறு பேசும் விஜயகாந்தால் பாதிக்கப்பட்டவன். அவர் தூண்டுதலால் என் வீடும் அலுவலகமும் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது. இந்தப் பாதிப்பால் என் மனைவியும் குழந்தைகளும் உடல்நலம் சரியில்லாமல் போய்விட்டார்கள். இதற்கெல்லாம் காரணமான விஜயகாந்தின் அடாவடிக்கு முடிவு கட்டத் தயாராகிவிட்டேன்' என்று கூறி ஆவேசப்பட்டார் வடிவேலு.

ஏன் இந்த ஆக்ரோஷம்? என்று வடிவேலுவிடமே விசாரித்தோம். மனிதர் பொரிந்து தள்ளிவிட்டார். ``இந்தப் பிரச்னை போன வருஷம், இதே செப்டம்பர் மாதம் ஆரம்பித்தது. விஜயகாந்த் நடித்த `பேரரசு,' `தர்மபுரி,' `சபரி' போன்ற படங்களில் என்னை நடிக்க கால்ஷீட் கேட்டார்கள். இப்படியான படங்களில் இவரை (விஜயகாந்தை) `வல்லவன், நல்லவன்' என்று சொல்லிப் புகழ்வதுடன், `நாளை தமிழகமும், முதல்வரும் நீதான்' என்றெல்லாம் வசனம் பேச வேண்டும் என்றார்கள். இதுபோன்று, பொய்யான வசனங்களைப் பேசுவதில் இஷ்டம் இல்லை என்று கூறியதுடன் உண்மையிலேயே என்னிடம் தேதிகள் இல்லாததால் இவர் படங்களில் நடிக்க முடியவில்லை. இதனால் அவருக்கு என் மீது கடும் கோபம் வந்துவிட்டது போலும். இந்த நிலையில், கடந்த செப்டம்பரில் விஜயகாந்தின் நெருங்கிய உறவினர் ஒருவர் இறந்துவிட்டார்.

இறந்தவர் வீடு விருகம்பாக்கத்தில் உள்ள என் அலுவலகத்துக்குப் பக்கத்தில் உள்ளது. துக்கம் விசாரிக்க வந்தவர்களில் பெரும்பாலானோர், என் அலுவலக வாசலில் தங்கள் வாகனங்களை நிறுத்தியிருந்தார்கள். அது எனக்குத் தொந்தரவாக இருந்ததால் அந்த வாகனங்களை எடுக்கச் சொன்னதற்கு, மறுத்து கன்னாபின்னாவென்று பேசி, அடிக்க வந்துவிட்டார்கள். அவர்கள் எல்லாம் விஜயகாந்த் கட்சியின் நிர்வாகிகளாக இருந்தவர்களாம். அவர்கள் என்னிடம், நான் கால்ஷீட் கொடுக்காததைக் கூறி வம்பு பேசி, என் அலுவலகத்தை அடித்து நொறுக்க ஆரம்பித்துவிட்டார்கள். இதுபற்றி, புகார் கொடுக்க போலீஸ் ஸ்டேஷன் போன என்னை நள்ளிரவில் மூன்று மணிநேரம் உட்கார வைத்து நோகடித்ததெல்லாம் பழைய கதை. அதுபற்றி அப்போது விரிவாகவே உங்கள் `குமுதம் ரிப்போர்ட்டரில்' என் பேட்டியாகச் சொல்லியிருக்கிறேன்.

அந்தத் தகராறு குறித்து நடந்து வரும் விசாரணை இப்போது சைதாப்பேட்டை கோர்ட்டில் நடக்கிறது. என் அலுவலகத்தைத் தாக்கியவர்கள் பதின்மூன்று பேரை அடியாளம் காண்பிப்பதற்காக, கோர்ட்டுக்குப் போக வேண்டிய நிலையில், இப்போது மறுபடியும் என் வீட்டையும் அலுவலகத்தையும் தாக்கியிருக்கிறார்கள். இது முழுக்க முழுக்க விஜயகாந்தின் தூண்டுதலில் நடந்த விஷயம் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை. மக்களைச் சிரிக்க வைக்கப் பாடுபடும், என்னை பாதிப்படைய வைப்பவர், மனிதனே அல்ல'' என்றார் வடிவேலு.

நடந்த சம்பவத்துக்கு விஜயகாந்தின் தூண்டுதல் தான் காரணம் என்று எப்படி உறுதியாகக் கூறுகிறீர்கள்?

``கைப்புண்ணுக்கு எதற்குக் கண்ணாடி? இப்போதும் தாக்குதல் நடத்தியவர்கள், விஜயகாந்த் பெயரைச் சொல்லி `வாழ்க' கோஷம் போட்டார்கள். `விரைவில் முதல்வர் ஆகப்போகும் எங்கள் தலைவரை எதிர்க்கக் கூடாது. மீறினால் வீட்டைத் தீ வைத்துக் கொளுத்துவோம். குண்டு வைத்துத் தகர்ப்போம்' என்றெல்லாம் பேசியதை இங்குள்ள ஏரியா மக்கள் பலரும் காது கொடுத்துக் கேட்டார்கள். இதற்கு மேலும் இது விஜயகாந்த் ஆட்களின் வேலை இல்லை என்று யாராவது சொல்ல முடியுமா? இப்படியெல்லாம் செய்யும் போக்கு என்பது விஜயகாந்தின் கோழைத்தனத்தையும் கையாலாகாத்தனத்தையும் பெட்டைத்தனத்தையும்தான் காட்டுகிறது. இவரின் வீரத்தை, அரசியல் கட்சிகளிடம் காண்பிக்கட்டும். மக்களிடம் காண்பிக்கட்டும். மாறாக, என்னைப் போன்ற சாதாரண மானவர்களிடம் காண்பிக்க வேண்டிய அவசியம் என்னவென்று புரியவில்லை! வெட்கங்கெட்ட அரசியலை வெளிப்படுத்துகிறார், விஜயகாந்த்''.

இவ்வளவு ஆவேசமாக நீங்கள் பேசுவதற்கும், செயல்படுவதற்கும் பின்னணியாக இருப்பது ஆளும் தி.மு.க.தான் என்றும் இதற்காக, ஆற்காடு வீராசாமி மற்றும் ஸ்டாலின் போன்றோர் உங்களை அழைத்துப் பேசியதாகவும் கூறுகிறார்களே?

``இப்படியெல்லாம் நீங்கள் கேட்பதே, மனசுக்குக் கஷ்டமாக இருக்கிறது. உண்மையில் நான் தமிழகத்தில் உள்ள எல்லா கட்சித் தலைவர்களுக்கும் வேண்டியவனாகவே இருக்கிறேன். அண்ணா தி.மு.க. அம்மாவுக்கும், தி.மு.க. ஐயாவுக்கும், காங்கிரஸ் தலைவர்களுக்கும் மட்டுமின்றி இங்குள்ள ஒவ்வொரு கட்சித் தலைவரின் குடும்பத்திற்கும் அறிமுகமானவனாகவும் வேண்டியவனாகவும் இருக்கிறேன். இப்படியெல்லாம் இருந்தாலும் நான் எந்தக் கட்சிக்கும் அனுதாபி கிடையாது. அப்படிப்பட்ட நிலையில் என்னை யாரோ பயன்படுத்துவதாக அபாண்டமாகக் கூறுவது அநியாயம்; அக்கிரமம். உண்மையில் போன வருஷம் என் அலுவலகத்தைத் தாக்கியவர்களை கோர்ட்டில் அடையாளம் காண்பிக்க இருந்தேன். இதைத் தடுக்கவே என்னை மிரட்டிப் பார்க்கிறார்கள். இதன் மூலம், என்னை ஓர் எதிரியாகவே பாவிக்க ஆரம்பித்துவிட்டார். விஜயகாந்திற்கு கேடுகாலம் தொடங்கிவிட்டது. இனி, என் வாழ்க்கையில் ஒரே எதிரி என்றால், அது இந்த விஜயகாந்த் தான். இவரின் அராஜகப் போக்கைத் தடுக்க எல்லா வழிகளையும் கையாளப் போகிறேன்''.

அப்படியானால், நீங்களும் அரசியல் கட்சி ஆரம்பித்து, தேர்தலில் இறங்கப்போகிறீர்களா?

``தேவைப்பட்டால் அதற்கும் தயாராவே இருக்கிறேன். இவரின் போக்கைத் தடுக்க, தேவைப்படும் ஆதரவை இங்குள்ள ஒவ்வொரு கட்சித் தலைமையிடமும் கேட்பேன். எந்த இடத்திலும் இவரை எதிர்த்துப் போட்டியிட வேண்டுமென்றாலும், தயாராகி விட்டேன். ஒரு காமெடியன் குடும்பத்தையும் சொத்துக்களையும் சேதப்படுத்தும் மகாபாவத்தைச் செய்யும் ஓர் அரசியல்வாதியை எதிர்ப்பதே என் ஒரே லட்சியம்''.

அதிருக்கட்டும், இந்தப் பிரச்னையில் நடிகர் சங்கத்தில் இருந்து யாராவது உங்களுடன் ஆறுதலாகவோ அக்கறையாகவோ பேசினார்களா?

``அதை ஏன் கேட்கிறீர்கள்? நடிகர் சங்கத்தின் மீதான நம்பிக்கையே போய்விட்டது. இப்போதைக்கு காவல்துறை மற்றும் நீதித்துறை மீதான நம்பிக்கை மட்டுமே எஞ்சியிருக்கிறது''.

ஆனால் தி.மு.க. அரசுதான் உங்களைப் பகடைக் காயாகப் பயன்படுத்துவதாக விஜயகாந்த் கூறியிருக்கிறாரே?

``இதெல்லாம் குழந்தைத்தனமான குற்றச்சாட்டு. இந்த அரசு, மக்களுக்கு நல்லது பண்ணவே நினைத்துக் கொண்டிருக்குமே தவிர, இவரை ஒழிப்பதற்கு ஒருபோதும் யோசனை செய்யாது. அதிலும், இந்த அரசு என்னைப் பயன்படுத்தி இவரை அழிக்கத் திட்டமிடுவதாக கற்பனை செய்வது ரொம்ப ஓவராக இருக்கு. உண்மையில் நடந்த தவறுக்கும் தனக்கும் தொடர்பில்லை என்பதை சட்டத்தின் முன் நிரூபிக்கட்டும். அதைச் செய்யாமல் அடுத்தடுத்து என்னையும் என் குடும்பத்தையும் தாக்கு.ம் வேலையை அவர் நிறுத்திக் கொள்ளட்டும்!'' என்று சொல்லி முடித்துக் கொண்டார் வைகைப்புயல்.

இவ்வளவு அதிரடியாக பல விஷயங்களைப் பேசிய வடிவேலுவின் குற்றச்சாட்டுகள் பற்றி விஜயகாந்தின் ரியாக்ஷனை அறிய முயன்றோம். நாள் முழுவதும் அவரைச் சந்திக்க முயன்ற நிலையில்தான் அவர் நிருபர்களை அழைத்து தன்னிலை விளக்கம் அளித்தார். அதில், ``பரபரப்பான செய்திகள் என்னைப்பற்றி வந்துள்ளதால் விளக்கம் கொடுக்க உங்களை எல்லாம் சந்திக்கிறேன். நான் யாரையோ தூண்டிவிட்டு வடிவேலுவைத் தாக்கியதாகக் கூறியிருக்கிறார்கள். அது மிகவும் தவறான செய்தி. இது ஆளுங்கட்சியின் தூண்டுதலால் போடப்பட்ட பொய்ப் புகார் மற்றும் பொய் வழக்கு என்றுதான் கூறுவேன். இதற்குப் பலிகடா ஆகியுள்ளார், வடிவேலு.

எங்கள் கட்சியின் வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல், ஆளுங்கட்சியினர் சுமத்தியுள்ள வீண்பழி. சமீபத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் என்னை சந்தித்ததில், அப்செட்டாகி குறுக்குப் புத்தியைப் பயன்டுத்தி என் இமேஜைக் குறைக்க முயல்கிறார்கள். இதற்கெல்லாம், அடிப்படைக் காரணம் நான் இதுவரை `கலைஞர்' என்று குறிப்பிட்டு வரும் கருணாநிதிதான். இப்படியெல்லாம் நடப்பதைப் பார்க்கும் போது `அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்ற பழமொழியை நினைவுப் படுத்தி அமைதி காக்கிறேன்'' என்று விளக்கம் அளித்தார்.

விஜயகாந்தின் இந்த தன்னிலை விளக்கப் பேட்டியை சன் நியூஸ் சேனல் நேரடியாக ஒளிப்பரப்பியது தனிக்கதை. இந்நிலையில் இந்தப் பேட்டி முடிந்ததும் விஜயகாந்திடம் ஒருசில வார்த்தைகள் நம்மால் பேசமுடிந்தது.

``இந்த வழக்கில் மட்டுமல்ல. நாளை தமிழகத்தில் எந்த வழக்கு வந்தாலும் அதிலும் என்னைச் சேர்க்கலாமா? என்று யோசிப்பார்கள். இப்படியெல்லாம் என்னை யாரும் ஒருபோதும் மிரட்டிப் பணியவைக்க முடியாது. என் தைரியத்தைப் பறிக்க எந்த சக்தியாலும் முடியாது. ஒருவேளை இந்த ஆட்சியாளர்கள், என்னைக் கைது செய்து சிறை வைத்தால் அதையும் சந்திக்கத் தயாராகவே இருக்கிறேன். அதுபோல் நடந்துவிட்டால், தி.மு.க. மற்றும் அண்ணா தி.மு.க. போல, எங்களது தே.மு.தி.க. தொண்டர்கள் பஸ்களைக் கொளுத்தவோ, ரயில் மறியல் செய்யவோ, பெட்ரோல் குண்டுகளை வீசி வன்முறைச் செயல்களில் ஈடுபடுவதோ நடக்கவே நடக்காது. இங்கு ஜனநாயகம் செத்துவிட்டது என்பதற்கு கருப்பு பேட்ஜ் அணிந்து சட்டம் ஒழுங்கு அறவே இல்லை என்பதை நிரூபிக்க அமைதி வழியில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவதுடன், தமிழகத்தில் கொடுங்கோலாட்சி ஒழிய வேண்டும் என்பதற்காக உண்ணாவிரதம் மேற்கொள்வார்கள்'' என்று நம்மிடம் ஆவேசப்பட்டார் கேப்டன்.

ஒரு சாவு வீட்டில் நடந்த கைகலப்புச் சம்பவம், தே.மு.தி.க. தலைவர் கேப்டனையும் காமெடி நடிகர் வைகைப் புயலையும் நேரடியாகவே மோதவிட்டிருக்கிறது. மதுரைக்காரர்களான இருவரும், மோதிக்கொள்ள `அவரது படத்தில் நான் நடிக்க மறுத்ததுதான் காரணம்' என்று வடிவேலுவும் `இதற்குக் காரணம் ஆளுங்கட்சியின் தூண்டுதல்' என்று விஜயகாந்தும் மாறிமாறி பேட்டி அளித்துக் கொண்டிருக்கிறார்கள். தே.மு.தி.க.வின் வளர்ச்சியினால் கடுப்பாகியிருக்கும் திராவிடக் கட்சிகளும் கூட்டணிக்கு சம்மதிப்பாரா? என்று எதிர்பார்த்திருந்த தேசியக் கட்சிகளும் இந்த விவகாரத்தை அரசியலாக்க ஆயத்தமாகிவிட்டார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. (நன்றி-குமுதம் ரிப்போர்ட்டர்)

தமிழக முதல்வர் ஆகிறார் மன்மோஹன் சிங்

2011ல் யார் முதல்வர் ..என்ற என் பதிவை பிரதமரிடம் ஆங்கிலத்தில் சொல்லப்பட்டதாம்.ஒரு மாநில முதல்வராக இவ்வளவு பேருக்கு ஆசையா? என்று வியந்தாராம் பிரதமர்.உடன் நமது சரடு நிருபர்..இந்த லிஸ்ட் இப்போதைக்கு...போகப்போக இதில்..வடிவேலு, டி.ராஜேந்திரன் போன்றவர்கள் பெயர்களும் இடம்பெறும் என்றாராம்.
திடீரென மன்மோஹன்'எனக்கும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஆசை இருக்கிறது..அதற்கு வழி என்ன? என்று கேட்டாராம்.
அதற்கு நிருபர்..முதலில் தமிழ் படம் ஒன்றில் நீங்கள் நடிக்க வேண்டும் என்றாராம்.
மன்மோஹன் தமிழ் பட தயாரிப்பாளர்கள் பட்டியல் கேட்டிருக்காராம்.கூடிய விரைவில் சான்ஸ் கேட்டு அவர்களிடம் வரப்போகிறாராம் பிரதமர்.
இதற்கிடையே..தன் நண்பர்களிடையே பேசிய பிரதமர்...'நாட்டின் பிரதமரைவிட..தமிழக முதல்வருக்கு பவர் அதிகம் இருக்கிறது..என்றும்..இட ஒதுக்கீடானாலும் சரி,அணு ஆயுத ஒப்பந்தம் ஆனாலும் சரி,மீனவர்கள் பிரச்னை என்றாலும் சரி,மின் பற்றாக்குறை யானாலும் சரி..வேறு பிரச்னைகளுக்கும் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதி விட்டால்..மாநில முதல்வரின் பணி முடிந்து விடுகிறது.ஆனால் இங்கு எல்லாவற்றிற்கும் நான் சோனியாவிடம் அனுமதி வாங்க வேண்டி இருக்கிறது.மேலும் அவ்வப்போது..முதல்வருக்கு மனம் கோணும்படியான முடிவு எடுத்தால்..ஆதரவை வாபஸ் வாங்கி விடுவேன் என்றும் பயமுறுத்தலாம்,'என்றெல்லாம் கூறி..தன் அவல நிலையைத் தெரிவித்தாராம்.
நமது நிருபர்..ஆமாம்..உங்களுக்கு வேண்டாதவர்களை வசைப் பாடி கவிதை எழுதத் தெரியுமா?முதல்வராக அது முக்கிய தகுதி ஆயிற்றே..என்று கூறிவிட்டு..சோனியா வரும் சப்தம் கேட்டதால் அங்கிருந்து எஸ்கேப் ஆனாராம்.

நாம் லட்சியத்தை அடைவது எப்படி....

அவனுக்கு பறவைகள் என்றால் பிடிக்கும்.,
தினமும் காலை ஜன்னலைத் திறந்தால்..அவனுக்காக காத்திருக்கும் புறாக்கள்..
அவனைக் கண்ட சந்தோஷத்தில்..கா கா என கூவி தன் இனத்தை அழைத்து அவனைக் காணச்சொல்லும் காகங்கள்.,
சில கிளிகள்..மரங்ங்கொத்திகள்,குருவிகள்..சுருங்கச் சொன்னால்..அவன் ஒரு பறவைகளின் சரணாலயமாகவே திகழ்ந்தான்.
அவைகள் அவன் கொடுக்கும் தானியங்களையும்,பழங்களையும்...அவன் பக்கத்தில் வந்து உண்ணும்.

ஒருநாள் அவன் மகன் 'அப்பா..எனக்கு விளையாட ஒரு கிளி பிடித்துத் தாயேன்' என்றான்.

மறுநாள் அவன் லாவகமாக ஒரு கிளியைப் பிடித்து மகனிடம் கொடுத்தான்..அவனை அக்கிளி பயந்தபடி பார்த்தது.மற்ற பறவைகள் பறந்து செல்ல கிளியின் கண்களில் ஒரு ஏக்கம்.
மறுநாள் காலை..ஜன்னலைத்திறந்தான்...
பறவைகளை காணவில்லை.
மீண்டும் அவை வரவேயில்லை.
மனதில் இரக்கம் இருந்தவரை பறவைகளின் சரணாலயமாக திகழ்ந்தவன்..இரக்க குணத்தை விட்டதும்...தண்ணீர் அற்ற இடம் என எண்ணி அவை வரவில்லையோ?

பிறர்க்கு தொல்லை கொடுக்கும் போது..அவருக்கு வேண்டியர்களால் வெறுக்கப்படுகிறோம்.,
ஒரு லட்சிய பாதையில்..வேறு எண்ணங்கள் குறுக்கிட்டால்..நாம் லட்சியத்தை அடையும் காலம் நம்மை விட்டு அகன்றுக் கொண்டே இருக்கும்.

Tuesday, September 23, 2008

வாழ்வில் எல்லாம் இன்பமயமே....

நன்மை..தீமை
இரவு..பகல்
பிறப்பு-இறப்பு
இன்பம்--துன்பம்

வாழ்வில் எந்த ஒன்றிற்கும் மறுபக்கம் உண்டு.
அது உணராமல்..நம்மில் பலர்..ஆண்டவன்(?) எனக்கு மட்டும் ஏன் துன்பத்தையே கொடுக்கிறான்? என அங்கலாய்ப்பதை பார்க்கிறோம்.
யாருக்குத்தான் துன்பம் இல்லை
பணக்காரனுக்கு.துன்பம் இல்லை என நினைத்தால் அது தவறு.அவனை கேட்டுப்பாருங்கள் ..சொல்வான்..கூடை ..கூடையாய்.
பணம் இருந்து என்ன பயன் ..பணத்தையா சாப்பிடமுடியும் என்பான்.உடம்பு முழுதும் வியாதி.
இரத்த அழுத்தம்...உப்பை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார். உப்பில்லா உப்புமாவை சாப்பிடுவான்.
சர்க்கரை வியாதி...சர்க்கரையை குறைக்கச்சொல்லி மருத்துவர் சொல்லி இருப்பார்.விஷேச தினங்களில் கூட இனிப்பு சாப்பிட முடியாது.
அது மட்டு மல்ல...வாழ்நாள் முழுதும் மருந்து,மாத்திரை சாப்பிட வேண்டும்.
காரில் போய்..பீச்சிலோ..பார்க்கிலோ ..பார்க் செய்துவிட்டு..மேல் மூச்சு ..கீழ் மூச்சு வாங்க நடப்பான்..ஓடுவான்..
'ஆண்டவா..பணம் இல்லையென்றால் கூட பரவாயில்லை..உடலில் வியாதி இல்லாமல் வை" என மனதில் அழுவான்.

ஆனால்..எழைக்கோ..பணம் இல்லை என்ற குறைதான்..ஆனால் எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம்..வாழ்க்கையை நன்கு அனுபவிக்கலாம்.
இருந்தா நவாப்..இல்லையினா பக்கிரி.

அதனால் தான் நம் பெரியோர்கள் நோயற்ற வாழ்வே பெரும் செல்வம் என்றார்கள்
பசித்திரு என்றார்கள்.
மேலும் இறக்குமதி சரியாய் இருந்தால்..நம்மை எந்த நோயும் அணுகாது.
அதற்கு தேவை...
சோம்பலில்லா வாழ்க்கை..
உடற்பயிற்சி...
தூய மனம்...தூய எண்ணங்கள்.
மனித நேயம்...
பேராசை இல்லாமை..

வாழ்க்கைக்கு பணம் தேவை...ஆனால்..பணமே வாழ்க்கை இல்லை..என்பதை உணர்வோம்.
சிக்கனமாய் இருந்தால்..சீராய் வாழலாம்.
வரவிற்கு மேல் செலவு வேண்டாம்.

'ஆகாறு அளவிட்ட தா யினும் கேடில்லை
போகாறு அகலாக் கடை'
குறள் படி நடப்போம்...பின் நம் .........பதிவின் தலைப்பை மீண்டும் படியுங்கள்.

2011ல் யார் முதல்வர் - அதிபுத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்

அடுத்த முதல்வராக யார் வருவார் என அரசியலில் அரைவேக்காடு அண்ணாசாமிக்கு தினம் தினம் சந்தேகம் வலுக்கிறதாம்.
அவர் பட்டியல்படி கீழ்கண்டவர்கள் அப்பதவி தனக்குத்தான் என எண்ணுகிறார்களாம்.
1.கலைஞர் (ஸ்டாலின்).,அன்பழகன் 2ம் இடம் கிடைத்தால் போதுமாம்.
2.ராமதாஸ் (அன்புமணி)
3.காங்கிரஸ் அனைத்து கோஷ்டிகளும் அவரவர் தலைவரை எதிர்ப்பார்க்கின்றனர் .
(சந்துலே சிந்து பாட நினைக்கும் சிதம்பரம்)
4.விஜயகாந்த்
5.சரத்குமார்
6.திருமாவளவன்
7.கார்த்திக்(முதலில் அடுத்தவருஷம் எம்.பி. பின்2011ல் முதல்வர்)
2011க்குள் இப்பட்டியல் மேலும் நீடிக்கக்கூடுமாம்.
என்ன செய்வது என அறியாது தன் தலைவன் சொல்வதை எதிர்ப்பார்த்துக்கொண்டிருக்கும் ரஜினி ரசிகர்கள் வேறு.

Monday, September 22, 2008

இறங்கி வரும் கலைஞர்...

இவ்வளவு நாட்கள் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்றாலும்..தனித்தே ஆட்சி அமைத்து வந்தது தி.மு.க., அக்கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மையும் கிடைத்து வந்தது.இந்நிலையில் 2006 தேர்தலில்..காங்கிரஸ்,பா.ம.க.,வலது,இடது கம்யூனிஸ்ட்..மற்றும் சில உதிரி கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது.90 இடங்களே தி.மு.க.வென்றது.ஆனாலும் கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சி அமைத்தது.
இதனால்..பிரதான எதிர்கட்சியான அ.அ.தி.மு.க., மைனாரிட்டி தி.மு.க.அரசு என்றே கூறி வந்தது.
அண்மையில்..பா.ம.க.ராமதாஸ் அரசை கடுமையாக விமரிசித்து வந்ததால்..அவர் கட்சியைச் சேர்ந்த முன்னாள் சட்டசபை உறுப்பினர் ஒருவர்.,கலைஞரை என்றோ விமரிசித்து பேசியதை..ஆற்காட்டாரை விட்டு மீண்டும் ஞாபகப்படுத்தி வைத்து..கலைஞரும் பேச...பா.ம.க.கூட்டணியிலிருந்து விலகியது.காடுவெட்டி கைது செய்யப்பட்டார்.
கம்யூனிஸ்ட் கட்சிகள்..மத்தியில் ஆதரவை வாபஸ் பெற....ஸ்டேட்டில் அவர்கள் ஆதரவு கேள்விக்குறியானது.
கம்யூனிஸ்ட் யூனியங்கள் நிலைப்பாட்டால்...கலைஞர் கம்யுனிஸ்ட் தலைவர் ஒருவரை வசைப்பாட...நிலை முற்றி இரண்டு கம்யூனிஸ்ட் களும் ஆதரவை வாபஸ் பெற்றது.
மீண்டும் பா.ம.க.வை உள்ளே கொண்டுவர திருமாவளவன் முயற்சி தோற்றது. பின் ப.சிதம்பரம் ,கலைஞரை சந்தித்ததும்...பா.ம.க.மீண்டும் இணைந்தால் சந்தோசப்படுவேன் என்றார் முதல்வர்.இச்சமயத்தில் தான் அவருக்கு தனது ஆட்சி மைனாரிட்டி அரசு என தெரிந்தது என எண்ணுகிறேன்.
உடனே...ஆட்சியைக் காப்பாற்றிக்கொள்ளவும்...தேர்தல் வந்தால் அதை சந்திக்கவும் 1 ரூபாய்க்கு அரிசி திட்டம் அமுல்படுத்தப்பட்டது.
ஆனால்..வில்லனாக..நாட்டில்..இதுவரை இல்லாத மின்வெட்டு.
சட்டசபை குளிர்காலக் கூட்டம் தொடங்கும் நேரம்...தனது ராசி சரியில்லை என உணர ஆரம்பித்திருக்கிறார் முதல்வர்.அவருக்கு தன் ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்ள காங்கிரஸ் ஆதரவு அவசியம் தேவை.அதனால் தான்...இவ்வளவு நாள்..காங்கிரஸ் மாநில தலைவர்கள்..ஆட்சியில் பங்கு கேட்டது காதில் விழாது இருந்தவர்...திருச்சி கூட்டத்திற்குப் பிறகு..சோனியா
விரும்பினால்..அது பற்றி பரிசீலிக்கப் படும் என இறங்கி வந்திருக்கிறார்.
கலைஞரின் முதல் சறுக்கல் ஆரம்பமாகி விட்டது.

வடிவேலு..விஜய்காந்த் விவகாரம்-விஜய்காந்த் பேட்டி

ஊரில் கேட்ட அனைவருக்கும் ..வடிவேலு விவகாரம் கருணாநிதியின் சதி என்று கூறிய விஜய்காந்த்..எங்கள் சரடு பத்திரிகைக்கு பிரத்யேகப் பேட்டிக் கொடுத்தார்.
அப்போது சரடு நிருபர் கேட்ட கேள்விகளும்..அதற்கு விஜய்காந்த் பதில்களும்

நிருபர்-கலைத்துறையில் இருக்கும் நீங்கள் இருவரும் சண்டை போட்டுக் கோள்வது நன்றாகவா இருக்கிறது

விஜய்காந்த்-இதற்கு யார் காரணம் என நான் விரிவாக அனைவருக்கும் விளக்கி விட்டேன்..ஆனால் இதுவரை சொல்லாத தகவலை உங்களுக்கு சொல்கிறேன்.2011ல் நான் முதல்வராய் வந்ததும்..கலைத்துறை அமைச்சர் பதவி கேட்டார் வடிவேலு..அதற்கு நான் மறுத்துவிட்டேன்.

நிருபர்_ஏன்

விஜய்-மக்கள் விரும்பினால் தருகிறேன் என்றேன்

நிருபர்-மக்கள் என்றால்

விஜய்-என் மனைவி பிரேமாவும்,மச்சான் சதீஷூம்

நிருபர்- ஆமாம்..இதில் கலைஞர் எங்கு வந்தார்

விஜய்-நான் நடித்து சமிபத்தில் பெட்டிக்குள் போன படத்தை கலைஞர் டி.வி.க்கு கேட்டனர்..நான் மறுத்து விட்டேன்..அந்த கோபத்தில் வடிவேலுவை கிளப்பி விட்டுள்ளார்.இப்போதைக்கு இதுதான் சொல்வேன்

நிருபர்-மதுரைக்காரர் என்ன சொல்கிறார்.

விஜய்-நீங்கள் யாரைச்சொல்கிறீர்கள் என புரிகிறது. நான்,வடிவேலு,லீலாவதிகொலை வழக்கில் தற்போது விடுதலையாகி உள்ளவர் ஆகிய அனைவரும் மதுரைதான்.இப்போதைக்கு இதைத்தான் சொல்வேன்.மற்ற விஷயங்களை தேர்தல் வரும்போது சொல்வேன்.

இத்துடன் பேட்டியை முடித்துக்கொண்டார்.

Sunday, September 21, 2008

எனக்கு வழங்கப் பட்ட சிறந்த பதிவாளர் விருது

சிறந்த பதிவாளர்களுக்கான விருது யாருக்கு வழங்குவது என்பது இந்த ஆண்டு கடும் போட்டியில் இருந்தது.கடைசியில் ..இந்த ஆண்டுக்கான சிறந்த பதிவாளர் விருது எனக்கு வழங்கப்படுகிறது என்பதை மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
பலர் இதற்கான போட்டியில் இருந்தாலும்..இவ் விருது நானே வழங்குவதால்..எனக்கே வழங்கிக் கொள்கிறேன்.ஆச்சரியத்துடன்
அதுக்குள்ள பதிவுக்குள்ளே வந்துட்டீங்களா?
D.M.K., கலைஞருக்கு பெரியார் விருதை வழங்குவது போலத்தான் இதுவும்.,
ஹி...ஹி...ஹி...

வாய் விட்டு சிரியுங்க

1.கணவன்- எனக்கு இதுவரைக்கும் தலைவலிகூட வந்ததில்லை
மனைவி-உங்களுக்கு எப்படி வரும்..உங்களாலே மற்றவங்களுக்குத்தானே தலைவலி.

2.கால் சென்டரில் வேலை கிடைத்தும் வேண்டாம்னு சொல்லிட்டியா?ஏன்?
எனக்கு முழு சென்டர்ல வேலை செய்யத்தான் ஆசை.

3.தலைவர்-(பொதுக்கூட்டத்தில்)இவர்கள் ஆட்சியில் கம்ப்யூட்டர் சயின்ஸ்தான் பள்ளியில் கற்றுக்கொடுக்கிறார்கள்.நாங்கள் ஆட்சிக்கு வந்தால் கம்ப்யூட்டர் ஜியாகரபியும் சொல்லித் தருவோம்.

4.அந்த டாக்டர் முன்னலே ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்றே
வெளியில போர்டுலே'வியாதியஸ்தர்கள் உள்ளே வரக்கூடாது" ன்னு போட்டிருக்காரே

5.தலைமறைவா இருக்கும் தீவிரவாதியை பிடிக்க மீனவர்கள் ஒத்துழைக்க வேண்டும்னு போலிஸ் கமிஷனர் சொல்றாரே..ஏன்?
வலை வீசி தேடச்சொல்லி உத்தரவாம்

6.இந்த இஞ்செக்ஷன் ரொம்ப வலிக்கும்...பல்லைக் கடிச்சுக்கிட்டு பொறுத்துக்கங்க
அப்போ..முதல்லே பல் டாக்டரைப் பார்த்து பற்களை கட்டிக்கிகிட்டு வந்துடறேன் டாக்டர்

Saturday, September 20, 2008

கருத்து வேறுபாடுகள்

மனிதன்..ஆறறிவு படைத்தவன். அவனுக்கென்று விருப்பு,வெறுப்புகள் உண்டு.
சாதாரண விஷயங்களையே எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒருவருக்கு இட்லி.காலை உணவிற்கு பிடிக்கும்..ஒருவருக்கு தோசை இப்படி..
எனக்கு வெளியே செல்ல பேண்ட் போட்டு செல்லப் பிடிக்கும்.
ப.சிதம்பரத்துக்கு பொதுக்கூட்டம்..பார்லிமெண்ட் என்றால் வேஷ்டி பிடிக்கும்.,குடும்பத்துடன் வெளியே செல்ல பேண்ட்..சூட்.,
கலைஞருக்கு மஞ்சள் சால்வை.

ஒருவருக்கு சூப்பர் ஸ்டாரை பிடிக்கும்
மற்றவர்க்கு கமலைப் பிடிக்கும்..
ஒவ்வொருவருக்கும் ஒரு மாறுபட்ட ரசனை..
தான் விரும்புபவரை..மற்றவர் விமரிசத்தால் ..அவரை கீழ்த்தரமாக பேசுவது..அவர் மதத்தை இழுப்பது..அவர் ஜாதியை இழுப்பது எல்லாம் இன்று நம்மிடையே சர்வ சாதாரணம்.
நமக்கு ஒரு கண் போனாலும் பரவாயில்லை..அடுத்தவனுக்கு இரண்டு கண்களும் போக வேண்டும் என எண்ணுபவர்கள்.
இவர்களெல்லாம்..ஏன் புரிந்து கொள்ளமாட்டேன் என்கிறார்கள்.
உனக்கு பிடிப்பது..மற்றவனுக்கு பிடிக்க வேண்டிய அவசியமில்லை.
அவன் எப்படி வேண்டுமானாலும் இருக்கட்டும்...அவன் சுதந்திரத்தில்...எண்ணத்தில் தலையிட நாம் யார்.
ஒரு கணம்...மற்றவர்கள் பற்றி பேசும் முன்

மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு என்ற அண்ணாவின் வாசகத்தை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு பிடிக்காததை ஒருத்தர் செய்தால்...அந்த இடத்தை விட்டு நகர்ந்து விடுங்கள்.

ஒருவன் தவறிழைத்தால்..சாத்வீக முறையில் திருத்தப்பாருங்கள்.

உங்களுக்கு ஒருவன் தவறிழித்தால்..நீங்கள் உடனே பழிக்குப்பழி வாங்க எண்ணாதீர்கள்.

அவனை மன்னியுங்கள்..முடிந்தால் அவனுக்கு நல்லது செய்யுங்கள்.

கோபத்தை அகற்றுங்கள்.

அப்படியும் அவன் திருந்தவில்லையென்றால் உங்களை மலையாக நினையுங்கள்...

தாய்ப்பால் நினைப்பால்

ஆண் பால் பெண் பால்
பலர்பால் , பலவின்பால்
தமிழ்ப்பால் போதித்தாள்
தமிழாசிரியை பள்ளியில்
வீட்டிலோ குழந்தை
விறைத்தது தாய்ப்பால்
நினைப்பால்.


தெய்வம் யார் அவரவர் பாணியில்

...

தெய்வம் இல்லை என்றான்

நாத்திகன்

தெய்வம் கோவிலில் என்றான்

ஆத்திகன்

தெய்வம் தாய்தான் என்றான்

அன்புமகன்

தெய்வம் செய்யும் தொழில் என்றான்

உழைப்பாளி.

Thursday, September 18, 2008

நான் பாதியில் எழுந்து வந்த திரைப்படங்கள்

பெரும்பாலான திரைப்படங்கள் பாதியில் எழுந்து வரவேண்டியவைகளாக இருப்பதால்...ஒரு சில நல்ல படங்கள் விமரிசனம் வந்தபின் சென்று பார்ப்பது என் வழக்கம்.மணிரத்னம்,பாலுமஹேந்திரா போன்ற சிலர் படம் விதிவிலக்கு...
ஆனால்..அவர்கள் படத்தில் நான் பாதியில் வெ
ளியே வந்திருக்கிறேன்.

இருவர் - இந்த படம் நான் செல்ல ஒரே காரணம்..மணிரத்னம் படம்.முதல் வாரத்திலேயே சென்னை உட்லண்ட்ஸ் தியேட்டரில் பார்த்தேன்..பிரகாஷ்ராஜ்,மோஹன்லால் நடித்திருந்தனர்.ஒரு நல்ல படம் பார்க்கப்போகிறோம்..என்ற மகிழ்ச்சி சுத்தமாக போனது..படம் ஓட..ஓட..கொட்டாவி..மேல்..கொட்டாவி..
இவரது படம் எப்போதும் சற்று இருட்டாக இருக்கும்..அப்படி இந்த படம் இருந்திருந்தால்...ஏ.சி.தியேட்டரில் தூங்கியிருப்பேன்..ஆனால் சற்று வெளிச்சமாக வேறு எடுத்திருந்தார்.அரை மணி நேரம் சென்றிருக்கும்..திடீரென..வித..விதமான சத்தம்..ஏ.ஆர்.ரஹ்மான்..ரீரிகார்டிங்கில் கோளாறா..என்று பார்த்தால்..வந்திருந்த ரசிகர்கள் எழுப்பிய குறட்டை சத்தங்கள் அவை என உணர்ந்தேன்.
என்னை ஏமாற்றிய படம் இது.

ஜூலி கணபதி -நான் மதிக்கும் மற்றோரு இயக்குநர் பாலு மஹேந்திரா.இவரது இந்த படம் சத்யம் காம்ப்ளஃக்ஸில் பார்த்தேன்..நீண்ட நாளைக்குப் பிறகு சரிதா நடித்திருந்ததாலும்,என் அபிமான இயக்குநர் படம் என்பதாலும் முதல் வாரத்தில் தியேட்டரில் ஆஜர்.பிறகு தான் என் விதியை நொந்துக்கொண்டேன்.திரை முழுக்க ஆக்ரமித்துக்கொண்ட சரிதா..பாலக்காட் தமிழ் ஜயராம்..இப்போது நினைத்தாலும் வயிற்றைக் குமட்டுகிறது.மூன்றாம் பிறையில் நளினமாக கமல்..சில்க் நடனம் எடுத்தவரா...ரம்யாகிருஷ்ணனை வைத்து..ஒரு ஆபாச பாடல்/நடனம் எடுத்தார்.
கொஞ்சமும் லாஜிக் பற்றிக்கவலைப்படாத படம்.

பாபா -என்னை ஏமாற்றிய ..நான் பாதியில் வந்த மற்றோரு படம்..இப் படம் பற்றி எழுதுவதை விட வாளா இருப்பதே சிறந்தது.எங்கிருந்தோ ஓடி வந்து கையெழுத்துப்போட இருந்த விசுவின்
பேனாவை தட்டிவிடும்..ருத்ராக்க்ஷக்கொட்டை படத்தைக்கூட ரசித்த என்னால்..இந்த படத்தை...
ஒரு பகுதி பணத்தை விநியோகஸ்தர்களுக்கு ரஜினி திருப்பிக் கொடுத்தாராம்.நான் வாங்கிய டிக்கட் பணத்தில் ஒரு பகுதியை தியேட்டர்காரர்கள் எனக்குத் திருப்பித் தரவில்லை.

வாய் விட்டு சிரியுங்க

மங்களூர் சிவாவிற்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

எனக்கு துன்பம் வந்தப்போ என் ஃப்ரண்ட்ஸ் எல்லாம் என் கூடவே இருந்தாங்க
உனக்கு என்னிக்கு துன்பம் வந்தது
கல்யாணமாச்சே எனக்கு மறந்துட்டியா?

2.நான் மனைவி சொல்லைக் கேட்காம எதுவுமே செய்ய மாட்டேன்.இதுவரை ஒரு காரியம் தான் தெரியாம செஞ்சேன்.அதுக்காக அவஸ்தை பட்டுக்கிட்டு இருக்கேன்
அது என்ன காரியம்
அவளை மணந்து கொண்டதுதான்

ஆற்காடு வீராசாமிக்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

3.முன்பெல்லாம் மேலதிகாரியைப் பார்த்தா பயப்படுவே..இப்ப அந்த பயம் போயிடுச்சா
இனிமே..அவர் என்னை மின்சாரம் இல்லா காட்டுக்கு மாற்றுவேன்னு பயமுறுத்த முடியாதே

கோவிகண்ணனுக்கும் இந்த ஜோக்கிற்கும் சம்பந்தமில்லை

4.புள்ளி விவரப்படி..தினமும் ஒரு ஆள் இந்த இடத்தில் விபத்தில் மாட்டிக்கொள்கிறான்
ஐயோ..பாவம்..தினமும் அந்த ஆளே ஏன் மாட்டிக் கொள்கிரான்

இந்த ஜோக்கிற்கும் ச்சின்னப்பையனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை

5.ஆஃபீஸிற்கு வந்ததும்..பத்தரையிலிருந்து 11 வரை எங்க அதிகாரி தூங்கிடுவார்..அந்த நேரத்தில் தான்...நான் பதிவுகளூம்,பின்னூட்டங்களும் இடுவேன்

இந்த ஜோக்கிற்கும் டோண்டு ராகவனுக்கும் சம்பந்தமில்லை

1.நீ எப்படி ஒரே சமயத்தில இரண்டு இடத்திற்கும் போவேன்னு சொல்றே!
ஒரு இடத்துக்கு நான் போவேன்..ஒரு இடத்திற்கு என் போலியை அனுப்புவேன்

Wednesday, September 17, 2008

உங்களுக்குத்தெரியுமா?

நமக்கெல்லாம் பொன்னி அரிசியைத் தவிர வேற எந்த ரக அரிசியும் தெரியாது.அந்த நாள்லே நெல் ரகங்கள்லே 4லட்சம் இருந்ததாம்.தினமும் மனுஷன் ஒரு ரக அரிசியை சாப்பிட்டா அவன் எல்லா அரிசியையும் சாப்பிட்டு முடிக்க 500 வருஷங்கல் ஆகுமாம்.ஆனா இன்னிக்கு இருக்கிற அரிசிகள் விரல் விட்டு எண்ணிடலாம்.ஸீரக சம்பான்னு ஒரு அரிசி...அது ருசி சொல்லமுடியாது.அப்பிடிப்பட்ட ருசி.அதுலே எத்தனை வகை தெரியுமா?ஈர்க்குச்சி சம்பா,ஊசி சம்பா,இலுப்பை சம்பா,கருவாலன் சம்பா,கம்பஞ்சம்பா,கனகசம்பா,கோட்டைசம்பா,மல்லிகைசம்பா,மாப்பிள்ளைசம்பா,மூங்கில்சம்பா,பொய்கைசம்பா,பொட்டிச்சம்பா,வரகசம்பா,சின்னட்டிசம்பா,சீரகசீம்பா,சுண்டரப்புழுகுசம்பா,சூரியசம்பா,சொல்லச்சம்பா,ரங்கச்சம்பா,அரைச்சம்பா,பூலன்சம்பா,இடயப்பட்டிசம்பா,காச்சம்பா,அரைச்சம்பா,பூவானிசம்பா,டொப்பிச்சம்பா,பிரியாணிசம்பா,ஆனா இன்னிக்கு ...என்னிக்கு ரசாயண உரங்கள்வர ஆரம்பிச்சுதோ.. அன்னியிலிருந்து நிலத்தோட சத்தும் குறைய ஆரம்பித்துவிட்டது.

பெரியாரின் பெருந்தன்மை

கல்கி அவர்களின் மகள் ஆனந்திக்கு திருமணம் நிச்சயமாகி...கல்கி திருமண அழைப்பிதழை எடுத்துக் கொண்டு பெரியாரை அழைக்கப் போனார்.பெரியாரும் தனக்கு அன்று எதுவும் வேலை இல்லை என்றும்,கண்டிப்பாக வருவதாகவும் கூறினார்.திருமணம் கல்கி தோட்டத்தில் நடந்தது.காலையில் பெரியார் வரவில்லை.
ஒரு வேளை..பெரியாருக்கு..அவசர வேலை ஏதாவது வந்திருக்கும் என கல்கி எண்ணினார்.
மதியம் 12மணி வாக்கில்..கல்கியின் வீட்டிற்கு ஒரு வேனில் பெரியார் வந்தார்.
திருமணம் நடந்த இடத்திற்கு அருகில்..கல்கியின் இல்லம் இருந்தது.அவரது இல்லத்தில் அப்போது கலைவாணர்,சின்ன அண்ணாமலை..மற்றும் சில எழுத்தாளர்கள் பேசிக்கொண்டிருந்தனர்.
பெரியாரைப் பார்த்த அவர்கள் உடனே..ஓடோடி..கல்கியை அழைத்து வந்தனர்.
கல்கி..ஆனந்தியையும்..புது மாப்பிள்ளையையும் பெரியார் காலில் விழுந்து ஆசி பெறச் சொன்னார்.பெரியார் உடனே...கொஞ்சம் விபூதி..குங்குமம் கொண்டுவரச்சொல்லி அவர்கள் நெற்றியில் இட்டார்.
பின்..கல்கி..அவரிடம்..'ஐயா..காலையில் உங்களை எதிர்ப்பார்த்தேன்...ஏதாவது வேலை வந்துவிட்டதா' என்றார்.
அதற்கு பெரியார் 'எந்த வேலையும் இல்லை..திருமணத்திற்கு பல உறவினர்கள்,நண்பர்கள் வந்திருப்பார்கள்.அவர்கள் எதிரே,திருமணத்திற்கு கறுப்பு சட்டையுடன் நான் வருவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.அதனால் தான் வரவில்லை'என்றார்.
அடுத்த கல்கி இதழில்..பெரியார் மணமக்களுக்கு விபூதி,குங்குமம் இடுவதை புகைப்படத்துடன் வெளியிட ஆசிரியர் குழுவினர் முயல..கல்கி அவர்களைக் கூப்பிட்டு..கண்டித்ததுடன் 'பெரியார் விபூதி இட்டது..அவர் நம்பிக்கையால் அல்ல...அவர் தன் கொள்கைகளை விட்டுக்கொடுத்ததாக அர்த்தம் இல்லை.நமது நம்பிக்கைகளை அவர் மதித்தார் அவ்வளவுதான்.இது அவர் பெருந்தன்மையைக் காட்டுகிறது'என்று சொல்லி அந்த புகைப்படங்களைக் கிழித்தார்.
இது கல்கியின் பெருந்தன்மை.
(டி.வி.நிகழ்ச்சி ஒன்றில் தென்கச்சி சுவாமினாதன் கூறியது)

Tuesday, September 16, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்

அண்ணாசாமி தன் மனைவிக் கூப்பிட்டு உடனே கடைக்குப் போய் 6 டம்ளர் வாங்கிவரச் சொன்னார்
மனைவி எதற்கு என்று கேட்க 'டாக்டர் தினமும் என்னை 10டம்ளர் தண்ணீர் குடிக்கச் சொல்லியிருக்கார்.
நம்ம வீட்ல 4 டம்ளர் தானே இருக்கு" என்றார்.

2.அண்ணாசாமி-(டாக்டரிடம்)எனக்கு இந்த ஜுரம் எப்படி வந்தது.
டாக்டர்-கொசுவாலேதான்.இந்தாங்க ..கொசு கடிக்காம இருக்க இந்த கிரீமை தடவுங்க
அண்ணாசாமி-அதெப்படி டாக்டர் ஒவ்வொரு கொசுவா பிடிச்சு இந்த கிரீமை தடவ முடியும்?

3.அமெரிக்க அதிபர் புஷ், பில் லேடனைப் பிடிச்சா 10 லட்சம் பரிசுன்னு அறிவித்தார்.
அண்ணாசாமி உடனே புஷ்ஷை தேடிப்போனார் 'எனக்கு 10லட்சம் தாருங்கள் என்றார்.புஷ்
எதற்கு எனக் கேட்க அண்ணாசாமி'எனக்கு பில் லேடன் ஐ பிடிச்சிருக்கு'என்றார்.

4.அண்ணாசாமி தசாவதாரம் பார்க்க தியேட்டருக்குப் போனார்.டிக்கெட் வாங்கினார்.திரும்ப வந்து
டிக்கெட் வாங்கினார்.கௌண்டர் கிளார்க் 'நீங்க தானே முன்னாலே வாங்கினீங்க என்றார்.
ஆமாம்..ஆனால் உள்ளே நுழையும் போது ஒருத்தன் அந்த டிக்கட்டை வாங்கி பாதியா கிழுச்சிட்டானே என்றார்

Monday, September 15, 2008

நாடக விழா

சென்னை ஸ்ரீ பார்த்தசாரதி சபாவின் 108 வருடம் முடிந்தவிழா...என்.எஸ்.கிருஷ்ணனின் சென்டினரி விழாவாக கொண்டாடப்படுகிறது.13ம் தேதி முதல் 25ம்தேதி வரை நடைபெறும் நாடகவிழாவாகவும் இது அமைகிறது.இதில் எனது' மாண்புமிகு நந்திவர்மன்' என்ற அரசியல் நையாண்டி நாடகம் நடைபெற உள்ளது.நீங்கள் சென்னை வாசியாக இருந்தால் நாடகத்திற்கு வருகைதர அழைக்கிறேன்.



Sri Parthasarathy Swami Sabha at TP Koil Street in Triplicane is holding its 108th year celebration of NS Krishnan birth centenary drama festival at Mylapore Fine Arts Club Hall.

The festival would be inaugurated by president of Tamilnadu Iyal Isai Nataka Mandram Rama Narayanan and president of Sri Parthasarathy Swami Sabha Nalli Kuppuswami Chetti will preside over the function be held on 13 September (Saturday).

.
In view of the celebrations, various dramas would be staged at the Fine Arts club in the evenings till 25 September.

The dramas to be staged include T V Varadharajan’s Real Estate, Ananthu’s Oru Saadha Daadha Agiran, Ranganathan Photo Studio by Augusto, Paaru Paaru Pattanam paaru by Ezhichur Aravindan, Rathnam’s Jeshtakumara, Venkat’s Sponsor Kalyanam, T V Radhakrishnan’s Manbumigu Nandhivarman, Sri hari’s Pradosha Nayakan

சென்னையைப் பற்றி தெரிந்துக் கொள்ளுங்கள்

சென்னையில் தான் நான் பல வருஷங்களாக வசித்து வருகிறேன்., இந்நகரில் பஸ் போக்குவரத்து அதிகம்.முன்பெல்லாம் சிவப்பு நிறத்தில் மட்டுமே பஸ்கள் இருக்கும். இப்போது பல வண்ணங்களில் பேருந்து (இப்படித்தான் சொல்ல வேண்டும்...பஸ்..என சொல்லக்கூடாது)கள் ஓடுகின்றன.சாதாரண கட்டணமுள்ள பேருந்து,விரைவுப் பேருந்து.சொகுசுப் பேருந்து.குளிர் சாதன பேருந்து என பல ஓடுகின்றன.ஒவ்வொன்றிற்கும் ஒரு மாதிரி கட்டணம்..விரைவுப் பேருந்து வேகமாகச் செல்லும் என எண்ணி சிலர் ஏறுவர்..கடைசியில் ஏமாறுவர்..ஏனெனில் அந்த பேருந்துகளும் எல்லா நிறுத்தத்திலும் நிற்கும்.பேருந்தில் 25 பயணிகள் மட்டுமே நிற்கலாம்..ஆனால் 2க்கு முன்னால் 1செர்த்து 125 பயணிகள் கூட இருப்பார்கள்.எந்த வாகன ஒட்டும் சட்டமும் இதை கண்டுக்கொள்ளாது.
சரி..ரயிலில் போகலாம் என்றால்..நீங்கள் மாதாந்திர சீசன் அட்டை வைத்திருந்தால்..பிழைத்தீர்கள்..இல்லவிட்டால்..நீங்கள் நிலயத்தில் டிக்கட் வாங்க நிற்கும் நேரத்தில்...நடந்தே செல்லும் இடத்துக்கு சென்று விடலாம்.சென்னை கடற்கரை நிலையத்திலிருந்து வேளச்சேரி வரை பறக்கும் ரயில் உண்டு.உடனே ரயில் பறக்குமா என கேட்கக்கூடாது.அந்த ரயில் செல்லும் பாதை
நிலமட்டத்திலிருந்து உயரத்தில் இருப்பதால் இந்த பெயர்.ஊருக்குள்ளே ஓடும் ரயில் இது என்று சொல்லலாம்.
இது எல்லாம் வேண்டாம்...ஆட்டோ வில் செல்லலாம் என்று நீங்கள் நினைத்தால் அதற்கும் வசதி உண்டு.ஆட்டோவிற்கு மீட்டர் உண்டு..ஆனால் டிரைவர்கள் மீட்டர் போட மாட்டார்கள்.வாய்க்கு வந்த கட்டணம் கேட்பார்கள்..மீட்டர் போட்டால் தான் வருவேன்..என்று புத்திசாலியாக சொல்லலாம்...அப்படி மீட்டர் போட்டு பயணம் செய்தால் ஆட்டோ டிரைவர்..முதலில் கேட்ட தொகையை வட மீட்டர் இரு பங்கு காட்டும்.(மீட்டர் சூடு போட்டதாக இருக்கும்)..நீங்கள் அதைக் கொடுத்துவிட்டு...சூடுபட்ட பூனையாய்..அடுத்த நாள் முதல் ஆட்டோவைக் கண்டால் காத தூரம் ஓடுவீர்கள்.இதையும் போலிஸ் கண்டுக்கொள்வதில்லை...பல ஆட்டோக்கள் போலிசாருடையது என்கிறார்கள்.அந்த காரணமாயும் இருக்கலாம்.
சென்னையில் தங்க சொந்தமாக ஒரு இடம் இருந்தால் தப்பித்தீர்கள்.இல்லாவிட்டால்..நீங்கள் வாங்கும் சம்பளத்தில் வீட்டு வாடகை பாதியை விழுங்கி விடும்.அபார்ட்மெண்டில் வசித்தால் மெயிண்டனேன்ஸ் என 500ஓ 1000மோ அதகப்படியாக மினி ரெண்ட் போலஆகிவிடும்.வாடகை பாதி.போக்குவரத்து செலவு கால் பகுதி..போக..மீதி கால் பகுதியில் தான் உணவு,உடை,குழந்தைகள் பள்ளிச்செலவு.மருத்துவ ச்செலவு.பொழுதுபோக்கு செலவு எல்லாம்.சிதம்பரத்தின் நாட்டு பண வீக்க கவலையை விட..நமக்கு நம்ம வீட்டு பணவீக்கம் கவலையைத் தரும்.
முக்கியமாக சொல்ல மறந்தது...சம்பளத்தன்று...பேருந்தில் வந்தால் ..பிக்பாக்கட்டுக்களால் முழு சம்பளத்தையும் இழக்க நேரிடும்.பிறகு கடன்தான் மாத செலவுக்கு.
மறந்து போன மற்றவை அடுத்த பதிவில்

Sunday, September 14, 2008

நாத்திகர்களும் இறைவனை காணும் தினம்

இன்று கலைஞர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்..அதன் விவரம்..இன்று அண்ணனின் பிறந்தநாள்.
இன்று தமிழக மக்கள் அனைவரும் புண்ணியம் செய்துள்ள நாள்
நாத்திகவாதிக்கும் இறைவன் காட்சியளிக்கப் போகிறான்.
என் கனவில் அண்ணா வந்து தினசரி கேட்டுக் கொண்டிருந்தார்.
'தம்பி நான் உன்னை விட்டுப் பிரிந்து..ஆண்டுகள் பல கடந்தும்..என் மன
வேதனையை நீ போக்கிடவில்லை.ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்
என்பதாலேயே..ஒன்றே குலம்..ஒருவனே தேவன் என்று நான் உரைத்தேன்.
அவன் சிரிப்பைக் காண வேண்டும் என்றுதான்..ரூபாய்க்கு ஒரு படி அரிசி
போட்டிட எண்ணினேன்..ஆனால் அத்திட்டத்தை அன்று நடைமுறைப்படுத்த
முடியவில்லை..அந்த முள் என் இதயத்தில் தைத்துள்ள நிலையில்..உன்னிடம்
அவர்களை ஒப்படைத்து சென்றேன்.நீ இதுநாள் வரை அதை போக்கிட வில்லை'
என்றிட்டார்.
ஐயகோ..அண்ணா என்னிடம் ..என்னை நம்பி..இவ்வளவு பெரிய பொறுப்பை
ஒப்படைத்துப் போகிறாயே..அதை நான் எப்படி நிறைவேற்றுவேன்..உன் இதயத்தில்
தைத்துள்ள முள்ளை எப்படி அகற்றுவேன்...என்றிட்டேன்.
இன்றுதான் அந்த முள் அகற்றப்பட்டிருக்கிறது.
ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண நினைத்த அண்ணனின் கனவை இன்று
அவர் தம்பி நனவாக்கி உள்ளேன்.
இனி ஏழை சிரிப்பான்...இறைவனைக்காணலாம்.
(ஹி..ஹி..எப்பவும் போல கற்பனை பேட்டிதாங்க)

பின் சேர்க்கை-உப்பும் கிலோ 1ரூபாய். தமிழன் நன்றி உள்ளவனாக இருக்கத்தான்
அதன் விலையையும் கொடுத்துள்ளேன்.

வாய் விட்டு சிரியுங்க

1.நண்பர்-(அலுவலக மதிய உணவு இடைவேளையில்)இன்னிக்கு நீ லஞ்ச் கொண்டுவரலியா?
நண்பர்2-கொஞ்சம் gas டிரபுள்..அதுதான் கொண்டுவரல்ல
நண்பர்- இப்பத்தான் சொன்ன உடனே gas கொண்டு வந்துடறாங்களே

2.இந்த வாரம் @@ சானல்ல
உலக தொலைக்காட்சி வரலாற்றில் முதன் முறையா...
என்ன படம் போடப்போறாங்க
தமிழில் 1931ல் வந்த முதல் படம் காளிதாஸ்

3.மனைவி(கணவனிடம்)- ஏங்க ...நம்ம மகனுக்கு தலையிலே மூளை கிடையாது..களிமண்ணுதான்னு சொல்வீங்களே..உண்மைதாங்க...தலையிலே செடி முளைச்சிருக்கு

4.டாக்டர்-(நோயாளியிடம்) வயிற்றுவலியா...மோஷன் எல்லாம் ஃப்ரீயா போறீங்களா?
நோயாளி-ஃப்ரீயா..எங்க டாக்டர் போக முடியுது..இப்பக்கூட இரண்டு ரூபா கொடுத்துத்தான் பப்ளிக் டாய்லட்லே போயிட்டு வரேன்.

5.மனைவி-(கணவனிடம்)என்ன அநியாயம்..பாருங்க..நம்ம பையன் மேத்ஸ் ஹோம் ஒர்க் சரியா செய்யலைன்னு..உங்கப்பாவை கூட்டிக்கிட்டு வான்னு சொன்னாங்களாம்...நியாயமாப்பார்த்தா...நீங்க தானே உங்கப்பாவை கூட்டிக்கிட்டு போகணும்.

6.உன் புடவை எல்லாம் எப்படி இவ்வளவு வெளுப்பா இருக்கு?
என் புடவையை என் கணவர் துவைக்கறப்போ சண்டை போட்டுடுவேன்...என் மேல் உள்ள கோபத்தை துணிகளில் காட்டி அடி அடி ன்னு அடிச்சு தோய்ச்சுடுவார்.

Saturday, September 13, 2008

பதிவாளர்களிடம் நான் பகிரங்க மன்னிப்பு கேட்கிறேன்

நான் செய்ததை நினைத்துப் பார்க்கிறேன்...என்ன தவறு செய்துவிட்டேன்...இதுநாள் வரை ஏதும் தெரியாமல் போயிற்றே!
கர்நாடகா மக்களை தண்ணீர் கொடுக்க மறுப்பவர்களை உதைத்தால் என்ன? என்று கேட்ட ரஜினி...குசேலன் வரும் சமயம் மன்னிப்பு கேட்டார்..ஆனால் அது வருத்தப்படுகிறேன் என்பதற்கான அர்த்தம் என பின் உணர்ந்துக்கொண்டேன்.
ஜயலலிதா பற்றி விகடன் ஏழுதப்போக..அவர் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்ப..சுதாகரித்துக்கோண்ட விகடன் பகிரங மன்னிப்பு கேட்டதாகச் செய்தி வந்தது..பிறகு பார்த்தால் ..அது விகடன் தன் வருத்தத்தை தெரிவித்தாக பின் தெரிந்தது.
இப்பொது எல்லாம் வருத்ததை தெரிவிப்பது என்றால் அதற்கு மன்னிப்பு கேட்பதாகப் பொருள் என உணர்ந்துக்கொண்டேன்.
அதனால் யார் வீட்டிற்காவது இழவுக்கு நீங்கள் சென்றால்..அங்கு நீங்கள் மன்னிப்பு கேட்க சென்றுள்ளதாக பொருள் கொள்ள வேண்டும்.
ஆமாம்...நான் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்கிறீர்களா?
எனக்கு எந்த வருத்தமும் இல்லை..
பின்...
இப்படி பெயர் போட்டதால் தானே வந்து படித்திருக்கிறீர்கள்? ஹி..ஹி..ஹி...அதனால்தான்...
ஆமாம்..இப்பதிவை படித்ததும் நீங்கள் வருத்தப்படாதீர்கள்..
ஏனெனில் அது நீங்கள் மன்னிப்புக் கேட்டதாய் ஆகிவிடும்.

அதிபுத்திசாலி அண்ணாசாமியின் சந்தேகம்

அண்ணாசாமிக்கு திடீரென ஒரு சந்தேகம்..நம் நாட்டு நிதித்துறைப் பற்றி.
அங்கு யாருக்கும் எதுவும் தெரிவதில்லை என்கிறார்.
நிதி அமைச்சரைப் பார்க்கப் போகிறாராம்.
அவர் சந்தேகம் என்ன?
விவசாயிகளுக்காக 71000 கோடி கடன் ரத்து என்று சொல்கிறார்கள்.
நம் நாட்டில் மொத்த ஜனத்தொகை 112கோடி.
அவ்வளவு பேரும் விவசாயிகள் இல்லை.அவர்கள் விவசாயிகள்
என வைத்துக்கொண்டாலும்...அனைவருக்கும் ஒரு கோடி கடன் என்றாலும்
மொத்தம் 112 கோடிதானே கடன் இருக்கும்.ஆனால் நிதியமைச்சகம்
71000 கோடி என்று சொல்கிறார்களே...எங்கேயோ ஏதோ ஊழல் நடக்கிறதாம்..
நிதியமைச்சர் உடனே விசாரிக்க வேண்டுமாம்

Thursday, September 11, 2008

தங்கவேலு..ஒரு மறக்கமுடியாத கலைஞன்

இன்று பதிவு ஏதும் போடவில்லையே..என்ன எழுதலாம் என்று நினைத்தபோது...பைரவன் ஞாபகம் வந்தது..ஆம்..நகைச்சுவை நடிகர் டணால் தங்கவேலுவின் ஞாபகம்..
அவர் தன் மனைவியிடம் தான் வேலை செய்யுமிடம் மன்னார் & கம்பனி என்று சொல்லி தினமும் காலையில் டிபனை கட்டிக்கொண்டு கிளம்பி விடுவார்.ஒரு பூங்காவில் அமர்ந்திருந்து விட்டு மாலை வீடு திரும்புவார்.ஒரு நாள் இந்த விஷயம் மனைவிக்கு தெரியவர..அடுத்த பொய்யாக..தான் ஒரு எழுத்தாளன் என்று கூறுவதுடன், தன் புனைப் பெயர் பைரவன் என்று சொல்வார்.
ஒருநாள் பேப்பரில் பைரவனுக்கு பாராட்டு விழா என்ற செய்தியைப் பார்த்ததும்..அவள் மனைவி அவருக்கு பாராட்டு விழாவா? என வினவ...'ஆமாம்..நான் வேண்டாம்னு தான் சொன்னேன்..கேட்கமாட்டேன்னு சொல்லிட்டாங்க..'என்பதுடன்..அப்பாராட்டு விழாவிற்கு மனைவியை வரவேண்டாம் என்பார்.அவர் மனைவியோ ..தன் கணவர் பற்றி பெருமையாகக்கூறி..தனது தோழிகளுடன் விழாவிற்குப் போவார்..ஆனால் அங்கே..பைரவன் என்னும் வேறு ஒருவருக்கு விழா நடக்கும்.அப்போதுதான் தன் கணவர் சொன்ன பொய் தெரியவரும்.கோபத்துடன் வீட்டில் காத்துக்கொண்டிருப்பவரிடம்...தங்கவேலு ஒரு மாலையை கடையில் இருந்து வாங்கி வந்துவிட்டு சமாளிப்பார்.கடைசியில் தன் குட்டு வெளிவந்தது தெரிந்துவிடும்.அடுத்த நாள் அவர் மனைவி
அவரை ஒரு அறையில் பூட்டிவைத்து கதை எழுதச் சொல்வார்.
இந்த காமெடியை மிஞ்சிய ஒன்று இதுவரை தமிழ் படங்களில் வரவில்லை என்பது என் எண்ணம்.
இன்றும்..நண்பர்கள் பேசும்போது..எங்கே மன்னார் & கம்பனிலே வேலைசெய்யறியா? என கிண்டல் செய்வதுண்டு.
தங்கவேலு ..ஒரு பிறவி காமடியன்.அவர் ஆரம்ப காலங்களில் வயதான பாத்திரங்களிலேயே நடித்தார்.பலருக்கு அவர் வயதானவர்தான் என்ற எண்ணம் இருந்தது.பிறகு மாதர் குல மானிக்கம் ,ரம்பையின் காதல் போன்ற படங்கள் வந்து அவர் இளைஞர்தான் என்று சொன்னன.
தேன் நிலவு,இதயத்தில் நீ,பாசமலர் இப்படி பல படங்கள் இவர் திறமையை பறைசாற்றின.
கல்யாணபரிசு..பைரவன் போல் ..நம் ஞாபகத்தில் மறக்க முடியாத மற்றோரு படம்..தெய்வப்பிறவி..இதில் இவர் பண்ணும் கதாகாலெட்சபம் அருமை.
தங்கவேலு...கடைசி வரை நாடகங்களில் நடிப்பதையும் விடவில்லை.
தன் மனைவி எம்.சரோஜாவுடன் சேர்ந்து நம்மை மகிழ வைத்தவர்.என்.எஸ்.கிருஷ்ணன்..மதுரம் ஜோடிக்கு பிறகு திறையுலக காமெடி ஜோடி இவர்களுடையது.கடைசிவரை..காமெடியன் என்பவர் பொதுவானவன்..மக்கள் அனைவருக்கும் வேண்டப்பட்டவனாய் இருக்க வேண்டும் என யார் மனதையும் புண்படுத்தாமல்..எந்த கட்சியிலும் சேராமல்..வாழ்ந்தவர்.

வாய் விட்டு சிரியுங்க

ஊர்லே பவர் கட்டுன்னு எல்லாரும் ஆற்காடு வீராசாமியையே திட்டறாங்களே ..அதைப்பற்றி என்ன நினைக்கிற..
சரிதான் போப்பா..என் மனைவி என் பவரை கட் பண்ணி ரொம்ப நாளாச்சு

2.வர வர எங்க மாதர் சங்கத்திலே தேவை இல்லாததுக்கு எல்லாம் கூட்டம் போடறாங்க
அப்படி என்ன தேவையில்லா விஷயம்
கணவனுக்கு அடங்குவது எப்படி ன்னு இன்னிக்கு கூட்டம்.

3.இந்த காலத்து பொண்ணுங்களுக்கு கல்யாண ஆசையே இல்லை
எப்படி சொல்ற
நிறைய பொண்ணுங்களுக்கு லவ் லெட்டர் கொடுத்து பார்த்துட்டேன்..நோ ரெஸ்பான்ஸ்

4.தலைவர் ஏன் சுடுகாட்டில மீட்டிங்க் வைக்கணும்னு சொல்றார்
அங்க அடக்கமானவங்க பெயர் எல்லாம் வோட்டர்ஸ் லிஸ்ட்ல இருக்காம்

5.என் மனைவி என்னை மனுஷனாகவே மதிக்க மாட்டேன்னு சொல்றா
எதை வைச்சு சொல்ற
இலை போட்டிருக்கு..சாப்பிட்டு போங்க ன்னு சொல்றா

6.உங்க ஏரியாவில தங்க வீடு கிடைக்குமா?
ஓட்டுவீடு,அபார்ட்மென்ட் இப்படித்தான் கிடைக்கும்...தங்க வீடெல்லாம் கிடையாது.

Wednesday, September 10, 2008

பகுத்தறிவாளன் என்பவன் யார்?

"இதனை இதனால் இவன் முடிக்கும் என்று ஆய்ந்து அதனை அவன் கண் விடல்" ஆய்ந்து...ஆராய்ந்து..அதுதான் பகுத்தறிவு.

எந்த ஒரு செயலைச் செய்தாலும்..அதனால் கேடு விளையுமா...நன்மை விளையுமா..என்று பகுத்து அறிந்து பார்ப்பவனே பகுத்தறிவாதி.
மின்சார கம்பியைத் தொட்டால்.."ஷாக்"அடிக்கும்..என்பது நம் நம்பிக்கை..ஆனால் மின்சாரவெட்டு இருக்கும்போது கம்பியைத் தொட்டுவிட்டு ஷாக் அடிக்கவில்லை பாரு என்று சொல்வதில் சாமர்த்தியம் என்ன இருக்கிறது? மின்சாரம் வரும்போது அதை செய்து காட்டி சொன்னால் ஷாக் அடிக்கும் என்னும் தன் நம்பிக்கையை அவன் விட்டு விடுவான்.

கடவுள் இருக்கிறார் என்பவன் ஆத்திகவாதி....இல்லை என்பவன் நாத்திகவாதி...

கோவிலுக்கு செல்பவன் ஆத்திகவாதி..மற்றவர்கள் நாத்திகவாதி என்பது சரியில்லை.நான் கோவிலுக்கு செல்வதில்லை..அதனால் ஆத்திகவாதி இல்லை என்றாகிவிடுமா? நான் கடவுளை நம்புவன்.கோவிலில்தான் கடவுள் இருக்கிறார் என்பதை நம்பாதவன். கடவுளிடம் இதைத்தா...அதைத்தா..என வேண்டாதவன்..ஏனெனில்...அவன் இருக்கிறான்..என்பதால்..அவனுக்கு எனக்கு என்ன தேவை? எனக்கு என்ன கொடுக்க வேண்டும் என அவன் அறிவான்.இதை நீ நம்ப வேண்டும்.எனக்கு அந்த நம்பிக்கை இருப்பதால் நான் அவனை வேண்டாதவன்.
ஆனால் ஒருவனே தேவன்... என எண்ணுபவன்..அவன் உருவம் இல்லாதவன்..இயற்கைதான் அவன் என்பவன்...இப்படி நான் சொல்வதால் நான் பகுத்தறிவற்றவன் என்று கூறிட முடியுமா?இறைவன்...எனப்படுபவன்..யார்..என்பதை பகுத்தறிந்து நம்புவதாகவே எண்ணுகின்றேன்.

அதனால்..ஆத்திகவாதி பகுத்தறிவாளன் இல்லை என்பதையும்...நாத்திகவாதி பகுத்தறிவாளன் என்பதையும் என்னால் ஏற்றுக்கொள்ள முடியாது.சிந்திக்கும் திறனுள்ளவன் மனிதன்.ஆகவே..அவனுக்கு பகுத்தறியும் குணம் இயற்கையிலேயே அமைந்து விடுகிறது.

நாத்திகவாதிகள்...தாங்கள்தான் பகுத்தறிவாளர்கள் என்பதை ஏற்க முடியாது.

மேலும்..பார்ப்பனர்கள் எனப்படுபவர்..அனைவரும் ஆத்திகவாதிகள்..பகுத்தறிவாதிகள் இல்லை..என்பவர்கள் தங்கள் அறிவைப் பயன்படுத்தி பகுத்தறிந்துள்ளனர்.

இப்படி சொல்ல..அவர்களுக்கு எவ்வளவு உரிமை உண்டோ..அவ்வளவு உரிமை உடன் தங்கள் அறிவை பகுத்தறிந்து..ஆண்டவன் இருக்கிறான் என ஆத்திகவாதி எண்ணுகிறான்.அதற்கு அவனுக்கு உரிமை உண்டு.அவன் எண்ணம் அவனைப் பொறுத்த அளவில் சரி.அது அவன் நம்பிக்கை.அதில் நாம் ஏன் தலையிட வேண்டும்?

என்னைப் பொறுத்தவரை..சிந்திக்கும் அனைவரும் பகுத்தறிவாளரே!! இதில் ஒரிஜனல் பகுத்தறிவுவாதி...போலி பகுத்த்றிவு வாதி என்ற பேச்சுக்கே இடமில்லை.

Tuesday, September 9, 2008

சொந்த சரக்கும் ..இரவல் சரக்கும் (ஹைக்கூ)

சந்நியாசிகளின்
சரணாலயம்
காவல் நிலையம் !!!!

வேதம் ஓதும் வேதியர்
ஹோமம் வளர்க்கின்றனர்
நற்குணங்களை அதில் இட.,

பிராணிவதைத் தடுப்பு
தலைவனாய்
கசாப்பு காதர்.

சாமியாரைச் சுற்றி
தாய்க்குலங்கள்
குழந்தைப்பேறு வேண்டி!!!

தமிழ் செம்மொழி
பெருமைப்படுகிறான்
தமிழன் ஆங்கிலத்தில்.

இயற்கையை போற்றுவோம்
போதனை செய்தனர்
விறகு வெட்டி கள்.

'திரு'வோடு வாழ்கிறான்
திருவோடு ஏந்தியதால்
தமிழ்க்கவி அவன்.

வாய் விட்டு சிரியுங்க

அதிகாரி- என்னப்பா வேலை செஞ்சிருக்கே!!உன் கிட்ட எல்லாம் வேலை வாங்க வேண்டியிருக்குப்பார்..அதுக்குப் பதிலா எங்கயாவது போய் சாகலாம்.
ஊழியர்- இந்த முறை மன்னிச்சுடுங்க..அடுத்த முறை இப்படி நடந்தா..உங்க இஷ்டம் போல செய்யுங்க.

2.என் கனவுலே கவர்ச்சி நடிகைங்க வராங்க டாக்டர்
இந்த வயசுலே இதெல்லாம் சகஜம்..கவலைப்பட வேண்டாம்
ஆனா..அவங்க முழுசா டிரஸ் பண்ணிட்டு இல்ல வராங்க

3.அங்க தாடியோட போறாரே..அவரை ஒரு காலத்தில நீ காதலிச்சயா?
நோ..நோ..நெவர்..தாடி வைச்ச யாரையும் நான் காதலிக்கலை

4.வக்கீல்-(கட்சிக்காரரிடம்) எந்த சிக்கலான கேஸ்னாலும் ஜெயிச்சுடுவேன் என்பதற்காக மலச்சிக்கல்னு வந்தா எப்படி

5.உனக்கும்..உன் மனைவிக்கும் சண்டையா? கடைசிலே என்ன ஆச்சு
நான் கொவிச்சுக்கிட்டு..பிறந்த வீடு வந்துட்டேன்

6.ஜோசியர்- உங்களைத்தேடி மஹாலட்சுமி வரப்போறா
கேட்பவர்- ஏற்கனவே...வீட்ல இருக்கிற தனலட்சுமி கிட்ட அனுபவிச்சுக் கிட்டு இருக்கேன்..மஹாலட்சுமியும் வந்துட்டா அவ்வளவுதான்

Monday, September 8, 2008

மின்சாரவெட்டு=சம்பளவெட்டு

வங்கி ஒன்றில் வேலை செய்த்க் கொண்டிருந்தான் அவன்.
கனவில்கூட ..தான் அரசியலில் நுழைவோம் என அவன் எதிர்ப்பார்க்கவில்லை.
அதுவும்..பொருளாதார மேதைகளே..திண்டாடும்..பணவீக்கம் அதிக மாகிக்கொண்டிருக்கும் நாட்டில்..தான் நிதி அமைச்சர் ஆவோம் என்று அவனால் எப்படி எதிப்பார்த்திருக்க முடியும்.
கட்சியின் தலைவரும்,பிரதமரும் அவனைக்கூப்பிட்டு 'வங்கியில் நீ வேலை செய்ததால்..பொருளாதாரம் பற்றி உனக்குத் தெரியும்'என்றனர்.
'வங்கியில் வேலை செய்தால்...எல்லாம் தெரிந்து விடுமா..'என மறுத்தான்.
'தமிழகத்தைப்பார்...மின்சார இலாக்காவில் வேலை செய்தவர்..ஆற்காட்டார்..என்ற காரணத்தால் தான் அவருக்கு மின்துறை அமைச்சர் பதவி தரப்பட்டது.அதை அவர் எவ்வளவு அழகாக நிர்வகித்துக் கொண்டிருக்கிறார்(???!!!)..அதுபோல நீயும் நிதித்துறையை செவ்வனே கவனித்துக் கொள்ளமுடியும்"என்றார் பிரதமர்.
பிரதமர் சொல்லில் இருந்த நியாயத்தை உணர்ந்து அவன் நிதி அமைச்சர் ஆனான்.
'ஆற்காட்டாரை பின்பற்றி நாட்டில் அனைவருக்கும் சம்பளவெட்டு செய்தால் போயிற்று' என்ற எண்ணத்தில்.

பின்னூட்டம் வேண்டுமா பதிவர்களே..இனி பதிவிடாதீர்கள்

பதிவர்கள் பதிவிடும் போது..பதிவை எவ்வளவு பேர் படிக்கிறார்கள் என்பதைவிட எத்தனைப்பேர் பின்னூட்டம் போட்டார்கள் என்று பார்ப்பது வழக்கம்.இவர்களை ஏமாற்றாமல்..எக்ஸாம் பேப்பர்களை திருத்தும் +2 ஆசிரியர்கள் மதிப்பெண் வழங்குவது போல் மானாவரியாக பின்னூட்டம் இட்டு நமக்கு தெம்பைக் கொடுத்து வருபவர்களில் முதன்மையானவர் நம்ம மங்களூர் சிவா.அவர் திருமணம் வியாழக்கிழமை சென்னையில் நடக்கிறப்படியால்..அவர் இன்று சென்னை கிளம்பிவிட்டதாக தகவல்.ஆகவே..பதிவுகளுக்கு பின்னூட்டப் பாதிப்பு ஏற்படும்.அதனால் சில நாட்கள் பதிவர்கள் தங்கள் பதிவுகளை நிறுத்திவிட்டு..முடிந்தவர்கள் அவர் திருமணத்திற்குச் செல்லவும்.திருமணம் முடிந்ததும்,வாழ்த்து தெரிவித்ததும், அவர் வேலைக்கு போகும் தினத்தை துப்பறிந்து அதற்குப் பின் பதிவிடவும்

Sunday, September 7, 2008

சஞ்செய்யின் விடுப்பட்ட கிராம நினைவு

கிராமத்தில் விடுபட்டுப் போனவை
கொடுக்காப்புளிக்காய்
ஸ்லேட் அழிக்க பறிக்கும் கோவக்காய்
காக்கா கடி கமர்கட்,டைமன்ட் மிட்டாய்
சுட்ட சோளம்
புளியம்பழம்
சூடுகொட்டையால் பக்கத்து பையனுக்கு வைக்கும் சூடு
நேரத்துக்கு நேரம் தெரிவிக்கும் சங்கோசை
வாரம் தவறாமல் தலையில் எண்ணெய் வைத்து அம்மா செய்து வைக்கும் குளியல்
வாரம் தவறாமல் விளக்கெண்ணெய் குடித்தல்
ஏரியில் நீச்சல் குளியல்
மாட்டு வண்டி சவாரி
சைக்கிள் டயர் உருட்டி ஓட்டம்

Saturday, September 6, 2008

சொந்த சரக்கும்... இரவல் சரக்கும்

சுதந்திரம் பிறப்புரிமை
மீன்களின் ஆர்ப்பாட்டம்
கண்ணாடித் தொட்டிக்குள்.

கைம்பெண்ணுக்கு
கணவன் சொத்து
மஞ்சள் குங்குமம் கடை

பிறைநிலவு நுதலில் தொடங்கி
வளர்பிறையாய் வளர்ந்து
பௌர்ணமி ஆனது தலை.

காற்று வாங்கப்போனேன்
காற்றின்றி
மூச்சற்று கிடந்தது பீச்சு!!!

விண்ணில் மாவின்றி
செம்மண் கோலம்
சந்தியா காலம்.

வெள்ளிக் காசுகள்
கொட்டும் சப்தம்
மங்கை உன் சிரிப்பு..

Friday, September 5, 2008

அடுத்த படத்துக்கு தயாராகிறார் ஜே.கே,ரித்திஷ்

ச்சின்னப்பையன்..நம்ம அடுத்த படம் ஹிட்ன்னு கிண்டல் பண்றார்.அடுத்தும் நாயகன் மாதிரி ஒரு ஹிட் படம் கொடுக்கணும்.என சொன்ன ரித்திஷ்..படத்தோட பெயர் தளபதி என்றாராம்.நண்பர்கள் கதையைப் பற்றி கேட்க...அதை பற்றி கவலை இல்லை...என் கையில் துப்பாக்கி ஒன்று இருந்த்விட்டால் போதும்..சேஸிங் சீன்ஸ்..தோட்டா சத்தம்..என் தலைக்கு மேல் பறக்கும் ஹெலிகாப்டர்னு கதை பண்ணிடுவேன் என்றவர்..பாட்டுக்கள் மட்டும் 'நிலா..நிலா.'.போல் சாங்க்ஸ் வேண்டும் என்றிருக்கிறார்.தயாராய் இருந்த பாடலாசிரியர் மூவர் தங்கள் பாடல்கைள்க்
காட்டினர்
முதல் பாடலாசிரியர்-பா பா பிலாக்சீப் ஹேவ் யௌ எனி வுல்...எஸ் சார் எஸ் சார் திரீ பேக்ஸ் புல்

ரித்திஷ்- நோ..நோ..இந்த பாட்டு வேண்டாம்..தமிழில் வேண்டும்..என் தானைத்தலைவனுக்கு அதுதான் பிடிக்கும்.(இரண்டாம் பாடலாசிரியரிடம்) நீங்க சொல்லுங்க..

இரண்டாம் பாடலாசிரியர்-அம்மா..அம்மா..வா..வா..ஆசை முத்தம் தா தா.இலையில் சோறு போட்டு ஈயை தூர ஓட்டு..உன்னை போல் அம்மா ஊரில் யாரும் இல்லை.என்னால் உனக்குத் தொ
ல்லை ஏதும் இனி இல்லை...

ரித்திஷ்_ போதும் போதும் ..மன்னன்ல ரஜினி பாட்டு 'அம்மா என்று அழைக்காத..' மாதிரி இதுவும் ஹிட் ஆயிடும்..இந்த பாட்டு இருக்கட்டும்.(3வது பாடலாசிரியரிடம்) உங்க பாட்டு..

3ம் பாடலாசிரியர்- யானை யானை அரசரானை..அரசரும் அரசியும் ஏறும் யானை..கட்டிக் கரும்பை முறிக்கும் யானை..

ரித்திஷ்-பியூட்டிஃபுல்..இந்த பாட்டும் கண்டிப்பாய் ஹிட் ஆகும்

(அதற்குள் ஃபோன் வருகிறது..கலைஞர் பேசுகிறார்)

கலைஞர்- தம்பி..கழகக் கண்மனி ரித்திஷ் உன் படத்திற்கு அருமையான பாட்டு வேண்டும்..என்றாயாம்..வசைபாடும் பாடல்களாகவே சில காலமாக எழுதிவரும் நான்..உனக்காக இப்பாட்டை எழுதி உள்ளேன்..கேட்டிடுவாய்
'அ என்றால் அஞ்சா நெஞ்சன்
அ என்றால் அன்னை அஞ்சுகம்
அ என்றால் அண்ணா
அ என்றால் அன்பழகன்
ஆ என்றால் ஆதவன்
ஆ என்றால்.."

ரித்திஷ்-தலைவா இது போதும்..படம் சூபர் ஹிட்தான்.கண்டிப்பாக இது கலைஞர் டி.வி.யில் டாப் டென்னில் முதல் இடம் பிடிக்கும்.

கலைஞர்- தம்பி..இதைத் தவிர அழகின் ஓசை என ஒரு கதையும் உனக்காக வைத்துள்ளேன்

ரித்திஷ் ராங்க் நம்பர் என ஃபோனை வைக்கிறார்.

Thursday, September 4, 2008

ஒரு ரூபாய் அரிசி தரும் கலைஞருக்கு ஒரு வேண்டுகோள்

1967ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் நின்ற தி.மு.க. தேர்தல் அறிக்கையில்..ரூபாய்க்கு மூன்று படி அரிசி போடுவோம் என்றது.வந்ததும் ஒரு படி ஒரு ரூபாய்.படிப்படியாக 3 படி போடுவோம் என்றனர்.இல்லாவிட்டால் சவுக்கால் அடியுங்கள் என்றனர்.எதிர்பாராது கிடைத்தது வெற்றி.அண்ணா முதல்வர் ஆனார்.சென்னையிலும்,கோவையிலும் முதலில் படி அரிசி திட்டம் அமுல் செய்யப்பட்டது.ஆனாலும்..நிதிநிலையைக் காரணம் காட்டி அதையும் பின்னர் விலக்கிக்கொண்டனர்.
பின்னர்..இவ்வளவு ஆண்டுகள் கழிந்து 2006 தேர்தலில் கலைஞர் தேர்தலில் ஜெயித்து வந்ததும் 2ரூபாய்க்கு அரிசி போட்டார்.இப்பொழுது செப்டம்பர் 15..அண்ணா பிறந்தநாள் முதல் ரேஷனில் ரூபாய்க்கு ஒரு கிலோ என அறிவித்திருக்கிறார். 41 ஆண்டுகள் கழித்து..அண்ணாவின் கனவை நிறைவேற்றி வைத்துள்ள கலைஞரை மனதார பாராட்டுகிறேன்.
ஆனால் இச்சமயத்தில் ஒரு சில வேண்டுகோள்.
தேவையில்லாதவர்களுக்கும்,மாதம் கணிசமாக சம்பாதிப்பவர்களுக்கும் கூட அரிசி கார்ட் உள்ளது.அவர்கள் ரேஷனில் அரிசி வாங்குவதில்லை.ஆனால்..கடைகளில்..அவர்கள் கார்டிலும் பில் போடப்பட்டு அரிசி திருடப்படுகிறது.அண்டை மாநிலங்களுக்கு அதிக விலைக்கு கடத்தப்பட்டு ஆயிரக்கணக்கில் அரசுக்கு பொருளாதார இழப்பை எற்பட காரணமாக ஆகிறது.இந்த சமூக விரோதிகளை அடையாளம் காணமுடியாது.அப்படியே யார் என்று தெரிந்தாலும்,அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது..ஏனெனில் அவர்கள் ஏதாவது அரசியல் கட்சியைச் சேர்ந்தவராய் இருப்பார்கள்.
ஆகவே..அரிசி கார்ட் வைத்திருப்பவர்களுக்கு அரிசி விலையை 5 ரூபாய்க்கு உயர்த்துங்கள்.உன்மையிலேயே கஷ்டப்படுபவர்களுக்கு இலவசமாகவே அரிசி கொடுங்கள்.ஒவ்வொரு வார்டிலும் கஷ்டப்படுபவர்கள்,நிரந்தர வருமானம் இல்லாதவர்கள் கணக்கெடுங்கள்.அந்த பொறுப்பை அரசியல்வாதிகளிடம் கொடுக்காதீர்கள்.சமூக ஆர்வலர்களிடம் ஒப்படையுங்கள்.தேவையானவர்களுக்கு அரிசி போய் சேரட்டும்.
மற்றவர்களுக்கு சற்று உயர்வு விலையால் பாதிப்பு இருக்காது..இதனால் வரும் அதிகப்படி வருவாய் இலவச அரிசிக்கு ஈடுகட்டிவிடலாம்.
பிறகு என்ன 39ம் நமதே..

Wednesday, September 3, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.பழைய பேப்பர் வாங்கறவருக்கும்,ரேஷன் கடைக்காரருக்கும் உள்ள முக்கிய வேற்றுமை என்ன?
பழைய பேப்பர்காரர் இரண்டு கிலோவை ஒரு கிலோ என்பார்.ரேஷன் கடைக்காரர் ஒரு கிலோவை இரண்டு கிலோ என்பார்.

2.எங்கப்பா சொத்து முழுதையும் குடிச்சே அழிச்சுட்டார்
அப்போ உனக்குன்னு எதுவும் வைச்சுட்டுப் போகலியா?
ஒரு குவார்ட்டர் கூட வைச்சுட்டுப் போகலை.

3.டாக்டர்-உங்களுக்கு தூக்கத்திலே நடக்கிற வியாதின்னு எப்படி சொல்றீங்க?
நோயாளி-ஆஃபீஸ்ல சீட்ல இல்லாம நடந்துகிட்டே இருக்கேன்

4.பீச்சில் காதலி-முந்தாநாள் இங்க நாம பேசிக்கிட்டு இருந்ததை என் ஃபிரண்ட் சுமதி பார்த்துட்டா..எங்கப்பா கிட்ட சொல்லிடுவாளோன்னு பயமா இருக்கு
காதலன்- அப்படி அவள் சொல்லிட்டா...நேற்று நானும்..அவளும் இங்க பேசிக்கிட்டு இருந்ததை நீ அவங்க அப்பா கிட்ட சொல்லிடு

5.தலைவரே போன தேர்தல்ல வீட்டுக்கு ஒருத்தருக்கு வேலை தருவோம்னு சொன்னீங்களே...
அதுக்குத்தான்..வீட்ல ஒருத்தனான என் மச்சானுக்கு வேலை வாங்கி கொடுத்துட்டேன்

6.நீதிபதி-சீட்டுக்கம்பேனி நடத்தி மக்களிடம் திரட்டிய பணத்தை என்ன செய்தாய்?
குற்றவாளி-சீட்டாடியே தொலைச்சுட்டேங்க

Tuesday, September 2, 2008

சின்னத்திரை நடிகர்களை சந்திப்பது குறித்து...ஒரு தன்னிலை விளக்கம்...

சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து கோவி சார் ஒரு பதிவு போட்டிருந்தார்.அவர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தையும் போட்டிருந்தார்.அதற்கு பின்னூட்டமாக நான் 'கோவி நீங்களுமா?' என பின்னூட்டம் இட்டிருந்தேன்.சமீபத்தில் ஒரு கேள்விக்கு பதில் சொன்ன கோவி 'சின்னத்திரை நடிகர்களை சந்தித்தது குறித்து எழுதியபோது "நீங்க எல்லாம் இதை பெரிய விஷயமாக எழுதுகிறீர்களே"என உயர்வை கற்பித்து ஒரு கேள்வி இட்டிருந்தனர்' என்றிருக்கிறார்.
அது என்னைத்தான் என்பதால்..இது குறித்து அவருக்கு பதில் எழுத வேண்டியது என் கடமை ஆகிறது.
கோவி சார்..நானும் ஒரு நாடக எழுத்தாளன்,நாடக இயக்குநர்,நாடக நடிகன் தான். என்னுடைய 4 கதைகள் பொதிகையில் ஒலி/ஒளி பரப்பப்பட்டிருக்கிறது.காவிரி தண்ணீர் பிரச்னை பற்றி நான் எழுதிய 'சொல்லக் கொதிக்குது நெஞ்சம்'2006ல் சிறந்த நாடக விருதை பெற்றது நாடகவிழாவில்.
இதையெல்லாம் ஏன் சொல்கிறேன்..என்றால்..நானும் கலைஞர்களை மதிப்பவன்தான்..ஏனெனில் நானும் ஒரு கலைஞன்.
ஆனால் கலைஞர்கள் இதை வைத்துக்கொண்டு மக்களை ஏமாற்றக்கூடாது.
ஒரு உதாரணம்
சமீபத்தில் சின்னத்திரையில் பிரபல நடிகர் ஒருவர்..பழைய நாடகம் ஒன்றை மீண்டும் போட்டார் திடீரென.
அதற்கு சொல்லப்பட்ட காரணம்..இந்த நாடகத்தை..சிங்கப்பூர்,மலேசியா,துபாய் ஆகிய இடங்களில் போட்டால்...சில்லறை தேற்றலாம் என்பதுதான்...
இப்போது சொல்லுங்கள்..இவர்கள் உண்மை கலைஞர்களா? அல்லது மக்களை ஏமாற்றுபவர்களா?
கலைஞ்ர்களைப் பொறுத்தவரை...பணம் சம்பாதிக்கும் இடங்களாகவே..சிங்கையும்,மலேசியாவும்,துபாயும் உள்ளன.
அங்குவாழ் மக்கள்..தாங்கள் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தில் ஒரு பகுதியை..சக்திக்கு மீறி கொடுத்து டிக்கட் வாங்குகின்றனர்.
இதைத்தான் சொல்ல ஆசைப்பட்டேனே தவிர..உயர்வு..தாழ்வு என்ற பேச்சுக்கே அதில் இடமில்லை.
இது என் தன்னிலை விளக்கமாகக்கூட கொள்ளலாம்.

தயவு செய்து யாராவது உதவுங்களேன்...

கலைஞர் டி.வி.யில் ..வினாயகசதுர்த்தி முன்னிட்டு சிறப்பு நிகழ்ச்சிகள் என்று சொல்லாமல்..விடுமுறை தினத்தை முன்னிட்டு என்றார்கள்.கீழ் கண்ட தினத்தை என்ன வென்று சொல்வார்கள் என விடை தெரியாது குழம்புகிறேன்..யாராவது உதவி..என் சந்தேகத்தை தீர்த்து வையுங்க்ளேன்.
ஜனவரி 14 பொங்கல்தினம் என்று நிகழ்ச்சிகள் வழங்குவார்களா? அல்லது தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்பார்களா? அல்லது விடுமுறை தினத்தை முன்னிட்டு என்றுதான் சொல்வார்களா?
ஏப்ரல் 14 அன்று தமிழ் புத்தாண்டை முன்னிட்டு என்பார்களா? அல்லது டாக்டர் அம்பேத்கர் தினத்தை முன்னிட்டு என்பார்களா?அல்லது விடுமுறை தினத்தை முன்னிட்டு என்பார்களா?
சரஸ்வதி பூஜை யன்று என்ன சொல்வார்கள்,விஜயதசமியை என்ன என்று சொல்வார்கள்? தீபாவளியை என்ன என்பார்கள்.,
தமிழக அரசு..இன்ன இன்ன தினங்களுக்கு இதற்காக விடுமுறை என அறிவிக்கிறார்களே...அதை சொல்லாமல் கலைஞர் டி.வி.அரசை அவமதிக்கிறதா?
உயர் மட்டத்தை திருப்தி படுத்த என்றால்...அது யார் ஆணை?
இந்த சந்தேகம் எல்லாம் சாமான்யனுக்கு வருவதால்...இனி அரசு வருடம்தோறும் வெளியிடும் விடுமுறைதினங்களுக்கான அறிவிப்பை எதற்காக விடுமுறை என்று சொல்லாமல்.....விடுமுறை..விடுமுறை என்றே அறிவிக்குமா?

Monday, September 1, 2008

வினாயகர் சதுர்த்தியும், சினிமாக்களும்

வினாயகசதுர்த்தி நாளை(3-9-08) கொண்டாடப்படுகிறது. என் நண்பர் ஒருவர் பழுத்த ஆன்மீகவாதி.அவரை..அன்று முழுவதும் என்ன செய்வீர்கள் என்று கேட்டேன்.அதற்கு அவர் என்ன சார் இப்படி கேட்கிறீர்கள்..அன்று முழுவதும் நான் பிசி என்றார்.
'எனக்குத் தெரிந்து..காலையில் குளித்து முடிந்ததும்..கடைத்தெருவிற்கு சென்று களிமண் பிள்ளையார்,அவருக்கு ஒரு குடை.பூ,பழங்கள் இவற்றை நீங்கள் வாங்கி வரவேண்டும்..வீட்டில் மனைவி எப்போதும் போல் சமைப்பதுடன்..கொழுக்கட்டை,வடை,பாயாசம் செய்வார்கள்.பின்..சாமி கும்பிடுவீர்கள்..எல்லாம் 10மணிக்குள் முடிந்துவிடுமே'என்றேன்.
அதற்கு நண்பர்,'அது எல்லாம் வெறும் ஃபார்மாலிட்டி தான்...அதற்குப் பின்னால் தான்..சன் டி.வி.யில்,சாலமன் பாப்பையா .பட்டிமன்றம்..ராஜா கூட இருக்கார்..தமாஷா இருக்கும்.
அப்புறம் 11மணிக்கு ஒரு படம்..அதுமுடிந்ததும் இன்னோருபடம்..மாலை 6 மணிக்கு ஒரு படம்,9.30 மணிக்கு ஒரு படம்னு நாலு படம் இருக்கு..நடு நடுவே பல சினிமா பிரபலங்கள் பேட்டி..
மத்யானம்..தூங்கக்கூட நேரம் இல்லை'என்றார்.
அடப்பாவிகளா..இந்த பண்டிகை..முக்கியமானது என்றுதானே..விடுமுறையே விடுகிறார்கள்..என்றேன் நக்கலாக.
'ஒரு மணி நேர பூஜைக்கு..முழுநாள் விடுமுறை யார் விடச்சொன்னது?'எடக்குமடக்கான பதில்.
தனி மனிதனே..சற்று சிந்தித்துப்பார்..
விடுமுறை விட்டதால் எல்லா மக்களின் நேரமும்...எவ்வளவு கோடிக்கணக்கான மணி நேரம் வீண்?
உற்பத்தி எவ்வளவு பாதிக்கப்படுகிறது.
நாட்டுக்கு எவ்வளவு கோடிக்கணக்கான பணம் இழப்பு..
பொழுதுபோக்கு அவசியம் தான்...24 மணி நேரமும் அது தேவையா.