Thursday, January 29, 2009

வாய் விட்டு சிரியுங்க..

1.அதோ போறாரே..அவருடைய பையன் பிஞ்சிலேயே பழுத்துட்டான்
என்ன சொல்றீங்க
சின்ன வயசிலேயே சாமியார் ஆயிட்டான்

2.நாயுடன் வரும் ஒருவர்- சில சமயம் மனுஷனைவிட நாய்களுக்கு புத்தி அதிகமாயிருக்கு
நண்பர்- உங்க நாயைப் பார்த்ததுமே தெரியுது.

3.உங்க நெஞ்சு எரிச்சலுக்கு மருந்து கொடுத்தேனே...இப்ப எப்படியிருக்கு? சரியாயிடுச்சா?
அதுக்கு உங்க ஃபீசை பார்த்ததும்..வயிற்றெரிச்சலா மாறிடிச்சு

4.(குற்றவாளி கூண்டில் நிற்பவரிடம்) சத்தியமா சொல்றேன்னு சொல்லுங்க..
ஆரம்பத்திலேயே பொய் சொல்லச் சொல்றீங்களே

5.அரசியல்வாதி- மக்களுக்கு நல்லது செய்யறதுன்னு தீர்மானிச்சுட்டேன்
தொண்டர்-தலைவா...அரசியல்லே இருந்து விலகப்போறீங்களா?

6.நேற்று எங்க வீட்ல கெஸ்ட் கூட்டம்..பெண்டு நிமிர்ந்துப்போச்சு
யார் உனக்கா?
என் ஹஸ்பெண்டுக்கு

4 comments:

shabi said...

nanraha siritthen idhupol innum niraya padividungal

T.V.ராதாகிருஷ்ணன் said...

வருகைக்கு நன்றி shabi

மதன் said...

சிரிக்க வைத்ததற்கு நன்றி.. TVR..!

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி மதன்