Thursday, January 5, 2012

தலைவர் போகாத சிறை...




நான் கடைசியா எழுதிய புத்தகத்தை படித்து விட்டீர்களா?
உங்கள் ஒவ்வொரு புத்தகத்தையும் படித்ததும் , இது அப்படித்தான் இருக்க வேண்டும் என எண்ணுகிறேன்..ஆனால் எண்ணம் நிறைவேறவில்லையே

அந்த எழுத்தாளரின் நாலாவது படைப்பு சிம்ப்ளி சூபர்ப்
அப்படியா..அந்த புத்தகம் பெயர்..
நான் அவரது நாலாவது பெண் சுஜாதாவைச் சொன்னேன்

தலைவர்- (மேடையில்) நம் நாட்டில் எத்தனையோ சிறைச்சாலைகள் உள்ளன.ஆனால் நானோ என் குடும்பத்தைச் சேர்ந்தவர்களோ இது வரை ஒரு சிறைச்சாலைக்கு போனது இல்லை
தொண்டர்-போகாத அந்த ஒரு சிறைச்சாலை எது தலைவா?

உங்க உடம்பை முழுதும் சோதனை பண்ணியாச்சு...நோய்க்கான காரணம் தெரியலை..ஆமாம்..புகையிலை போடற பழக்கம் உண்டா?
அஞ்சாறு ஏக்கரிலே போட்டிருக்கேன்..

அந்த டைலர் கிட்ட எதைக் கொடுத்தாலும் பிடிக்கிற மாதிரி தைத்துடறார்..அதற்குத் தான் சண்டை போட்டுட்டு வரேன்..
 பிடிச்சா மகிழ்ச்சி அல்லவா அடையணும்..ஏன் சண்டை போடறே!

அந்த எலிமெண்டரி ஸ்கூல் வாசல்லே ஏன் போலீஸ் கூட்டம்..
இரண்டாவது படிக்கிற பையன் செல்ஃபோன்ல சில்மிஷம் பண்ணிட்டானாம்

(டிஸ்கி_-  கடைசியில் சொல்லியுள்ளது சற்று வேதனையாய் இருந்தாலும்..நாட்டில் நாளைக்கு இப்படியும் நடக்குமோ என்று சற்று அச்சத்தையே ஏற்படுத்துகிறது)

1 comment:

T.V.ராதாகிருஷ்ணன் said...

நன்றி நண்டு @நொரண்டு