Thursday, March 8, 2012

இந்திய அரசும்..இலங்கைக்கு எதிரான தீர்மானமும்..




//சிங்கப்பூர் செல்லும் வழியில் சென்னை வந்த எஸ்.எம்.கிருஷ்ணா, விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
 ஜ.நா. மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை இந்தியா ஆதரிக்க வேண்டும் என முதல்வர் ஜெயலலிதாவின் கடிதம் பரிசீலனையில் உள்ளது. இதில்,ஆழமாகச் சிந்தித்து முடிவு எடுக்கப்பட வேண்டும்.
 இது இரு நாடுகள் உறவு தொடர்பான விஷயம். இலங்கை சகோதர நாடு என்ற நட்புணர்வுடன் கூடிய அண்டை நாடாகும். இதில் அவசரப்பட்டு எந்தவித முடிவும் எடுக்க முடியாது. எனவே இதுவரை மத்திய அரசு எந்த முடிவும் எடுக்கவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளும் இதில் கருத்தில் கொள்ளப்படும்.//

இது செய்தி...

நாளை என்ன நடக்கும் என ஒரு ஆருடம்..

"இந்தியா இலங்கையை ஒரு சகோதர நாடாகவே பார்க்கிறது..அதற்காக இலங்கை தமிழர்கள் விஷயத்தில் இந்தியா இலங்கையை ஆதரிக்கும் என்பதற்கில்லை.நடந்துள்ள எல்லா விஷயங்களையும் மனதில் கொண்டு..ஓட்டெப்பில் கலந்து கொள்ளாது இந்தியா நடுநிலை வகிக்கும்.....என்கிறார் ..இந்திய அரசியல் தெரிந்த அரசியல்வாதி ஒருவர்.

1 comment:

ஹேமா said...

அநேகமாக உங்கள் ஊகம்தான் நடக்குமென நானும் நினைக்கிறேன் !