Friday, March 30, 2012

பறக்குது..பறக்குது..பணம்...





மின்கட்டண உயர்வு..பால், பேருந்து கட்டண உயர்வு, பெட்ரோல்/டீசல் விலை உயர்வு, வாடகை உயர்வு
..அடேங்கப்பா..

ஆனாலும் 28 ரூபாய் செலவு செய்யறவன் வறுமைக் கோட்டிற்குள் அல்ல..

என்ன உலகமடா..இது....

'இரும்புத்திரை' படத்தில் பட்டுக்கோட்டையார் எழுதிய இப்பாடல் தான் நினைவிற்கு வருகிறது..இதில் சில வரிகள் மாற்றப்பட்டால்/சேர்க்கப்பட்டால் இன்றைய நிலைக்கும் பொருந்தும். தீர்க்கதரிசி அந்தக் கவி.


கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே

மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…)

சொட்டுச் சொட்டா வேர்வை விட்டா
பட்டினியால் பாடுபட்டா
கட்டுக்கட்டா நோட்டுச் சேருது
கெட்டிக்காரன் பொட்டியிலே _ அது
குட்டியும் போடுது வட்டியிலே (கையிலே…)

விதவிதமாய்த் துணிக இருக்கு
விலையைக் கேட்டா நடுக்கம் வருது
வகைவகையா நகைகள் இருக்கு
மடியைப் பார்த்தா மயக்கம் வருது
எதைஎதையோ வாங்கணுமின்னு -அண்ணே        -எதை
எண்ணமிருக்கு வழியில்லே _ இதை
எண்ணாமிலிருக்கவும் முடியல்லே (கையிலே…)

கண்ணுக்கு அழகாப் பொண்ணைப் படைச்சான்
பொண்ணுக்குத் துணையா ஆணைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
ஒண்ணுக்குப் பத்தா செல்வத்தைப் படைச்சான்
உலகம் நிறைய இன்பத்தைப் படைச்சான்
என்னைப் போலே பலரையும் படைச்சு _ அண்ணே
என்னைப் போலே பலரையும் படைச்சு
இதுக்கும் அதுக்கும் ஏங்க வைச்சான்
ஏழையைக் கடவுள் ஏன் படைச்சான்? (கையிலே…)

நிகழ்வு- வறுமைக்கோடு

No comments: