Sunday, June 10, 2012

வெளிநாட்டில் பதுக்கியுள்ளது அனைத்தும் கறுப்பு பணமல்ல...-நிதி அமைச்சர்..




சட்டத்துக்கு முரணான செல்வத்தை வெளிநாடுகளில் பதுக்கிவைத்தால், அது தொடர்பான தகவல்களைப் பெறுவதற்கு 37 நாடுகளுடன் இந்தியா கையெழுத்திட்டுள்ளது. அந்த நாடுகள் விவரங்களைத் தரட்டும். அதன் பின்னர் அது கறுப்புப் பணமா? இல்லையா? என்று முடிவு செய்யலாம்.

அந்த பணம் வர்த்தக நிறுவனங்களில் முதலீடு செய்யப்பட்டதாகக் கூட இருக்கலாம். வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியப் பணத்தின் மதிப்பை அளவிட சிறிது காலமாகும்.

மத்திய அரசின் கைகள் கட்டப்பட்டுள்ளன. உணவுப் பொருள்களுக்கும் பெட்ரோல் பொருள்களுக்கும் மத்திய அரசு அதிக அளவில் மானியம் தர வேண்டியிருப்பதால், மாநில அரசுகள் கேட்கும் அளவுக்கெல்லாம் நிதிதர முடியவில்லை என்றார் அவர்.

கறுப்புப் பணம் தொடர்பாக அண்மையில் மக்களவையில் பிரணாப் முகர்ஜி தாக்கல் செய்த வெள்ளை அறிக்கையில் பல்வேறு திட்டங்களை அறிவித்திருந்தார். 97 பக்கம் கொண்ட அந்த வெள்ளை அறிக்கையில் கறுப்புப் பணம் வைத்திருப்போர் பெயர் எதுவும் குறிக்கப்படவில்லை.

டிஸ்கி - ஜனாதிபதிக்கான வேட்பாளர் தயார்..சிங்க்..சாங்க்..


1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அட பாவிகளா ! இந்த நாடு உருப்படுமா ?