Sunday, October 9, 2016

ஓடிடிவோம்..ஓடிடிவோம்

                 


ஓடிடிவோம்..ஓடிடிவோம்
விரைவாய் ஓடிடிவோம்
அ்டைத்திட சித்த ராமய்யா வரார்
வத்த வைக்க வட்டள் வரார்
தேமென்னு கிடக்க வேண்டிய தேவே வரார்
எட்டிக்காய் எட்டிடு வரார்

நாம் இவர்கள் சொத்தா
இயற்கையின் சொத்து
தேவை உள்ளோர்க்கு
உதவிடுவோம்
வீணில் பேசுவோரான
அவர்களை ஓடவிட்டு
ஓ்டிடுவோம் ஓடிடுவோம்
தெற்கு நோக்கி...

ஓடிடுவோம்

திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்

திருக்குருகூர் என்ற திருத்தலத்தில் நம்மாழ்வார் அவதரித்தார். அத்தலத்திற்கு அருகில் உள்ள திருக்கோளூரில் மதுரகவியாழ்வார் தோன்றினார். சைவத்தில், வேளாளர் குலத்தில் தோன்றிய திருநாவுக்கரசரை, வேதியர் குலத்தில் பிறந்த அப்பூதியடிகள் குருநாதராகக் கொண்டார். அது போல், வைணவத்தில், வேதியர் குலத்தவராகிய மதுரகவி ஆழ்வார், வேளாளர் குலத்தில் தோன்றிய நம்மாழ்வாரை, குருநாதராகக் கொண்டார். திருக்கோளூரில் வைத்தமாநிதிப் பெருமாள் என்ற பெயருடன் திருமால் எழுந்தருளியுள்ளார். உடையவராகிய இராமானுஜர் வைத்தமாநிதிப் பெருமாளை, சேவிக்கத் திருக்கோளூருக்கு எழுந்தருளினார்.
இராமானுஜர் ஊருக்குள் நுழைந்த நேரத்தில், ஒரு பெண்மணி திருக்கோளூரை விட்டு வெளியேறிக்கொண்டிருந்தாள். அவளைக் கண்ட இராமானுஜர், “தாயே! அடியேன் ஊருக்குள் வரும்பொழுது, தாங்கள் ஏன் வெளியேறுகிறீர்கள்?” என்றார். “சுவாமி! தங்களைப் புறக்கணிக்கும் நோக்கம் எதுவும் எனக்கில்லை” என்றாள் அப்பெண்மணி.
காலந்தோறும் தோன்றிய திருமாலடியார்கள் போல், தான் எதனையும் சாதித்து விடவில்லை என்றும், அவர்கள் செய்தவை மகத்தானவை என்றும் கூறினாள். அத்துடன், அவர்களுடைய செயற்கரிய செயல்களைப் பட்டியலிட்டுக் கூறினாள். இராமாயணம், மகாபாரதம், பாகவதம், ஆழ்வார்களின் வரலாறுகள் ஆகியவற்றில் குறிப்பிடப்படும் சான்றோர்கள் செய்த எண்பத்தோரு அருஞ்செயல்களைக் கவிதை வடிவில் கூறினாள்.
அத்தகைய சான்றோர்கள் செய்தது போன்ற செயல்கள் எதனையும் தான் செய்யவில்லையே என்ற ஏக்கத்தை அக்கவிதை அடிகளில் வெளிப்படுத்தினாள். மிகச் சிறந்த திருத்தலமாகிய திருக்கோளூரில், தான் தொடர்ந்து வசிக்கத் தகுதியற்றவள் என்று குறிப்பிட்ட அப்பெண்மணி, அதனால்தான் அவ்வூரை விட்டு வெளியேறுவதாகக் கூறினாள். வயலில் கிடக்கும் முயல் புழுக்கையைப் போல், தான் திருக்கோளூரில் பயனற்றவளாக இருப்பதாகக் கூறினாள்.
இராமானுஜரும் திருக்கோளூர்ச் சான்றோர்களும் அப்பெண்மணியின் ஞானத்தையும், பணிவையும் கண்டு வியந்தனர். அப்பெண்மணியை இராமானுஜர் தன்னுடன் அழைத்துச் சென்று, வைத்தமாநிதிப் பெருமாளைச் சேவிக்கச் செய்தார். அப்பெண்மணியின் இல்லத்திற்கும் இராமானுஜர் எழுந்தருளித் திருவமுது செய்தார்.
அப்பெண்மணியை, ‘திருக்கோளூர், பெண்பிள்ளை’ என்று குறிப்பிடுவர். அவள் இயற்றிய நூலை, ‘திருக்கோளூர் பெண்பிள்ளை ரகசியம்’ என்று போற்றுகின்றனர். திருமாலடியார்களின் செயற்கரிய செய்லகளை இரண்டிரண்டு அடிகளில் குறிப்பிட்டுப் பாடியுள்ளார். அவற்றுள் இதிகாச புராண வரலாறுகள் அடங்கியுள்ளன. ஒவ்வொரு வரலாற்றிலும் ஒவ்வொரு ரகசியம் (மறைபொருள்) அடங்கியுள்ளது.

அவள் சொன்ன 81 செயல்கள்

1. அழைத்து வருகிறேன் என்றேனோ அக்ரூரரைப் போலே!
2. அகமொழித்து விட்டேனோ விதுரரைப்போலே!
3. தேகத்தை விட்டேனோ ரிஷி பத்னியைப் போலே!
4. தசமுகனைச் செற்றேனோ பிராட்டியைப் போலே!
5. பிணமெழுப்பி விட்டேனோ தொண்டைமானைப்போலே!
6. பிணவிருந்திட்டேனோ கண்டாகர்ணனைப்போலே!
7. தாய்கோலம் செய்தேனோ அனுசூயையைப் போலே!
8. தந்தை எங்கே என்றேனோ துருவனைப்போலே!
9. மூன்றெழுத்து சொன்னேனோ க்ஷத்ரபந்துவைப்போலே!
10.முதலடியை பெற்றேனோ அகலிகையைப் போலே!
11.பிஞ்சாய்ப் பழுத்தேனோ ஆண்டாளைப் போலே!
12.எம்பெருமான் என்றேனோ பட்டர்பிரானைப் போலே!
13.ஆராய்ந்து விட்டேனோ திருமழிசையார் போலே!
14.அவன் சிறியனென்றேனோ அழ்வாரைப் போலே!
15.ஏதேனும் என்றேனோ குலசேகரரைப் போலே!
16.யான் சத்யம் என்றேனோ அழ்வாரைப் போலே!
17.அடையாளம் சொன்னேனோ கபந்தனைப் போலே!
18.அந்தரங்கம் சொன்னேனோ திரிஜடையைப் போலே!
19.அவன் தெய்வம் என்றேனோ மண்டோதரியைப் போலே!
20.அஹம் வேத்மி என்றேனோ விஸ்வாமித்திரரைப் போலே!
21.தேவுமற்றரியேனோ மதுரகவியாரைப் போலே
22.தெய்வத்தை பெற்றேனோ தேவகியைப் போலே!
23.ஆழிமறை என்றேனோ வசுதேவரைப் போலே!
24.ஆயனை(னாய்) வளர்த்தேனோ யசோதையைப் போலே!
25.அநுயாத்திரை செய்தேனோ அணிலங்கனைப் போலே!
26.அவல் பொரியை ஈந்தேனோ குசேலரைப் போலே!
27.ஆயுதங்கள் ஈந்தேனோ அகஸ்தியரைப் போலே!
28.அந்தரங்கம் புக்கேனோ சஞ்சயனைப் போலே!
29.கர்மத்தால் பெற்றேனோ ஜநகரைப் போலே!
30.கடித்து அவனைக் கண்டேனோ திருமங்கயாரைப் போலே!
31.குடை முதலானதானேனோ ஆனந்தால்ழ்வான் போலே!
32.கொண்டு திரிந்தேனோ திருவடியைப் போலே!
33.இளைப்பு விடாய் தீர்த்தேனோ நம்பாடுவான் போலே!
34.இடைக்கழியில் கண்டேனோ முதலாழ்வார்களைப் போலே!
35.இருமன்னரைப் பெற்றேனோ வால்மீகரைப் போலே!
36.இருமாலை ஈந்தேனோ தொண்டரடிப்போடியார் போலே!
37.அவனுரைக்க பெற்றேனோ திருக்கச்சியார் போலே!
38.அவன்மேனி ஆனேனோ திருப்பாணரைப் போலே!
39.அனுப்பி வையுமென்றேனோ வசிஷ்டரைப் போலே!
40.அடி வாங்கினேனோ கொங்கில் பிராட்டியைப் போலே!
41.மண்பூவை இட்டேனோகுரவ நம்பியைப் போலே!
42.மூலமென்றழைத்தேனோ கஜராஜனைப் போலே!
43.பூசக் கொடுத்தேனோ கூனியைப் போலே!
44.பூவைக் கொடுத்தேனோ மாலாகாரரைப் போலே!
45.வைத்தவிடத்து இருந்தேனோ பரதரைப் போலே!
46.வழி அடிமை செய்தேனோ இலக்குவணனைப் போலே!
47.அக்கரைக்கே விட்டேனோ குகப்பெருமாளைப் போலே!
48.அரக்கனுடன் பொருதேனோ பெரியவுடயாரைப் போலே!
49.இக்கரைக்கே செற்றேனோ விபீஷணனைப் போலே!
50.இனியதென்று வைத்தேனோ சபரியைப் போலே!
51.இங்கும் உண்டென்றேனோ பிரஹலாதனைப் போலே!
52.இங்கில்லை என்றேனோ ததிபாண்டனைப் போலே!
53.காட்டுக்குப் போனேனோ பெருமாளைப் போலே!
54.கண்டுவந்தேன் என்றேனோ திருவடியைப் போலே!
55.இருகையும் விட்டேனோ திரெளபதியைப் போலே!
56.இங்குபால் பொங்கும் என்றேனோ வடுகனம்பியைப் போலே!
57.இருமிடறு பிடித்தேனோ செல்வப்பிள்ளையைப் போலே!
58.நில்லென்றெனப் பெற்றேனோ இடையற்றூர்நம்பியைப் போலே!
59.நெடுந்தூரம் போனேனோ நாதமுனியைப் போலே!
60.அவன் போனான் என்றேனோ மாருதியாண்டான் போலே!
61.அவன் வேண்டாம் என்றேனோ ஆழ்வானைப் போலே!
62.அத்வைதம் வென்றேனோ எம்பெருமானாரைப் போலே!
63.அருளாழங் கண்டேனோ நல்லானைப் போலே!
64.அனந்தபுரம் புக்கேனோ ஆளவந்தாரைப் போலே!
65.ஆரியனைப் பிரிந்தேனோ தெய்வவாரியாண்டானைப் போலே!
66.அந்தாதி சொன்னேனோ அமுதனாரைப் போலே!
67.அனுகூலம் சொன்னேனோ மால்யவானைப் போலே!
68.கள்வனிவன் என்றேனோ லோககுருவைப் போலே!
69.கடலோசை என்றேனோ பெரியநம்பியைப் போலே!
70.சுற்றிக்கிடந்தேனோ திருமாலையாண்டான் போலே!
71.சூலுறவு கொண்டேனோ திருக்கோட்டியூரார் போலே!
72.உயிராய பெற்றேனோ ஊமையைப் போலே!

73.உடம்பை வெறுத்தேனோ திருனறையூரார் போலே!
74.என்னைப்போல் என்றேனோ உபரிசரனைப் போலே!
75.யான் சிறியன் என்றேனோ திருமலைநம்பியைப் போலே!
76.நீரில் குதித்தேனோ கணப்புரதாளைப் போலே!
77.நீரோருகம் கொண்டேனோ காசிசிங்கனைப் போலே!
78.வாக்கினால் வென்றேனோ பட்டரைப் போலே!
79.வாயிற் கையிட்டேனோ எம்பாரைப் போலே!
80.தோள் காட்டி வந்தேனோ பட்டரைப் போலே!
81.துறை வேறு செய்தேனோ பகவரைப் போலே!

இனி ஒவ்வொன்றைப் பற்றியும் பார்ப்போம்