Showing posts with label சினிமா-இயக்குநர்-பந்துலு. Show all posts
Showing posts with label சினிமா-இயக்குநர்-பந்துலு. Show all posts

Wednesday, October 20, 2010

திரைப்பட இயக்குனர்கள் - 7 B.R.பந்துலு

(Photo courtesy-chennai 365)

தென்னிந்திய மொழிகளில் 57 படங்கள் தயாரித்து இயக்கியவர் பந்துலு ஆவார்.இவர் 26-7-10ல் பிறந்தவர்.ஒரு நடிகராக வாழ்க்கையை துவக்கியவர் பின் பத்மினி பிக்சர்ஸ் என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனத்தைத் தொடங்கி மா பெரும் பல படங்களை தயாரித்தார்.

சிவாஜி கணேசன் நடித்த, வீர பாண்டிய கட்டபொம்மன் இவருக்கு ஆஃப்ரோ ஆசிய ஃபில்ம் ஃபெஸ்டிவல் விருதப் பெற்றுத் தந்தது.மேலும் கப்பலோட்டிய தமிழன்,கர்ணன் ஆகிய படங்கள் பெரும் புகழைப் பெற்றுத் தந்தன.

இவர் இயக்கத்தில் வந்த மற்ற படங்கள் முதல் தேதி,,சபாஷ் மீனா,பலே பாண்டியா,கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி,தங்கமலை ரகசியம்,முரடன் முத்து ஆகியவை.

எம்.ஜி.ஆர்., நடிக்க இவர் இயக்கியவை ஆயிரத்தில் ஒருவன்,ரகசிய போலீஸ்115,தேடி வந்த மாப்பிள்ளை,நாடோடி,மதுரை மீட்ட சுந்தர பாண்டியன்.

ஜெயலலிதாவை முதன் முதல் திரையுலகிற்கு அறிமுகப் படுத்தியவர் இவர்.'சின்னட கோம்பே' என்னும் கன்னடப் படத்தில் அறிமுகப் படுத்தினார்.பின் எம்.ஜி.ஆரின் ஜோடியாக முதலில் அறிமுகப் படுத்தப்பட்டது ஆயிரத்தில் ஒருவன் படத்தில்.

என்.டி.ராமாராவ்,நாகேஸ்வர ராவ் அவர்கள் நடித்த பல தெலுங்கு படங்கள் இயக்கியுள்ளார்.

இவரது கப்பலோட்டிய தமிழன் படத்தைப் பார்த்த அன்றைய பிரதமர் இந்திராகாந்தி மனம் மகிழ்ந்து இப்பத்திற்கு வரி விலக்கு அளித்தார்.

'குழந்தைகள் கண்ட குடியரசு' என்ற இவர் படம் தேசிய விருது பெற்றது.

பலே பாண்டியா, கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி இரண்டும் நல்ல நகைச்சுவைப் படங்கள்.

பள்ளி ஆசிரியர் பற்றிய ஸ்கூல் மாஸ்டர் என்ற படத்தில் இவர் பிரதம வேடத்தில் நடித்தார்.இப்படம் அனைத்து தென்னிந்திய மொழிகளிலும் வெளியானது.

1974 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

இவர் படத்திலிருந்து ஒரு பாடல்