Saturday, August 2, 2008

வாய் விட்டு சிரியுங்க

1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?

11 comments:

  1. நல்லா இருக்குங்க. சிரிச்சேன்.

    ReplyDelete
  2. /
    கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?
    /

    ஹா ஹா

    :))))))))

    ReplyDelete
  3. நான் ஜோக்குன்னு சொன்னப்பிறகு நீங்கள் சிரிக்கலைன்னா எப்படி வேலன்

    ReplyDelete
  4. நேற்று எங்க காணும்..சிவா

    ReplyDelete
  5. /
    kanchana Radhakrishnan said...

    நேற்று எங்க காணும்..சிவா
    /

    லேட்டா ஆனா லேட்டஸ்ட்டா வந்துட்டேன்.

    :))

    ReplyDelete
  6. //.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
    தெரியுமா?
    எப்படி
    மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..
    //
    ஹா...ஹா... நல்ல கற்பனை...டாக்டர்.விஜய் வீட்டுக்கும் அப்படித்தான் போறாங்களோ...?!

    ReplyDelete
  7. நான் கம்பேனி லீவோன்னு நினைச்சேன் சிவா

    ReplyDelete
  8. /
    kanchana Radhakrishnan said...

    நான் கம்பேனி லீவோன்னு நினைச்சேன் சிவா
    /

    ஹா ஹா
    கம்பேனி ரகசியத்தை கண்டுபிடிச்சிட்டீங்களே
    அவ்வ்வ்வ்

    ReplyDelete
  9. டாக்டர்.விஜய் வீட்டுக்கு 'போக்கிரி'களாகப் போவார்கள்

    ReplyDelete