Sunday, November 23, 2008

மாறன்..நினைவு நாள்...கலைஞர் எழுதாத கவிதை...

மாசறு பொன்னே..வலம்புரி முத்தே..

அருமைக் கண்மணியே..அன்பு மாறனே..

உன்னுடைய மகன்களை

தத்தித் தவழ்ந்த பருவம்

தளிர்நடை போட்ட பருவம் முதல்

என் அரவணைப்பில் வளர்த்து..

சன் டிவி ஆரம்பிக்க உதவி

ஒருவனை மத்திய அமைச்சராக்கி..

என் சிந்தை குளிர்ந்து..

கண்களுக்கு ஆச்சரியக் குறியாய்..

அழகும்..அறிவும்

கலந்த மகன்களாய் ஆக்கினேன்

ஆயின் இன்றோ

தேளாய்..பாம்பாய்..நண்டாய்

கொட்டுகிறார் என்னை..

எதைச்சொல்லி மனதைத் தேற்றிக் கொள்வது

யாரை நினைத்து மனதை மாற்றிக் கொள்வது?

6 comments:

  1. மாசறு பொன்னே..வலம்புரி முத்தே..

    அருமைக் கண்மனியே..அன்பு மாறனே..

    உன்னுடைய மகன்களை

    தத்தித் தவழ்ந்த பருவம்


    ஆயின் இன்றோ

    தேளாய்..பாம்பாய்..நண்டாய்

    கொட்டுகிறார் என்னை..
    மூற்பகல் செய்யின் பிற்பகல் விளையும்:-))))

    ReplyDelete
  2. முரசொலி யிலே கவிதை வர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி விலெகா

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி நசரேயன்

    ReplyDelete
  5. //ஆயின் இன்றோ

    தேளாய்..பாம்பாய்..நண்டாய்

    கொட்டுகிறார் என்னை..//



    எதுக்காக கொட்டுறாங்கன்னு கலைஞருக்கு தெரியாதா என்ன???hihii

    மாறனுக்கு எதிரா கலைஞர் அறிக்கை விட்டு பின் அமைதியாயிட்டாரே ஏன்?

    நல்ல கவிதை.

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி அத்திரி

    ReplyDelete