Monday, December 1, 2008

அதி புத்திசாலி அண்ணாசாமியின்10 சந்தேகங்களும் ...சன் டீ.வி.யும்

மாறன் சகோதரர்களுக்கும், கலைஞர் குடும்பத்திற்கும் சமரசம் எழுந்ததை ஒட்டி சன்,கலைஞர் டீவி க்கள் சம்பந்தமாக அண்ணாசமிக்கு சந்தேகம் வந்து..இரவு முழுதும் உறக்கமில்லையாம்.
அவர் சந்தேகங்கள்

1.டாப் டென் படங்களில் இனிமேல் முதலில் வாரணம் ஆயிரம் வருமா..இல்லை தெனாவட்டு வருமா?

2.தசாவதாரம்,குசேலன் படங்களை சன் டீ.வி,யிலும் பார்க்க முடியுமா பின்னாட்களில்

3.தூசிதட்டி சில நாட்களாக போட்டு வரும் விஜய்காந்த்,சரத்குமார் படங்கள் நிலை என்ன ஆகும்.

4.மானாட மயிலாட சன்னில் வருமா? சன் டி.டி.எச்.இல்லாமல் அனைவரும் சன்னின் காமெடி சேவை நிகழ்ச்சியை பார்க்க முடியுமா?

5.கருத்துக்கணிப்பு சன்/தினகரன் இனி நடத்துமா?

6.ஆற்காட்டார் நிலைமை என்ன?

7.ஸ்பெக்ட்ரம் ஊழல் இனி அடைக்கி வாசிக்கப்படுமா?

8.மாறன் நினைவு நாளன்று ,ஒரு வேளை மாறன் கலைஞர் கனவில் வந்து ஏதெனும் கூறியிருப்பாரா?

9.தயாநிதிக்கு வரும் பாராளுமன்ற தேர்தலில் டிக்கட் உண்டா?

10.முக்கியமான சந்தேகம்...சமரசம் என்று சும்மா கிண்டலுக்கு சொன்னேன் என்று திடீரென கடைசியில் கலைஞர் கூறிவிடுவாரா?

16 comments:

  1. எனக்கு வந்திருக்க அம்புட்டு சந்தேகமும் அண்ணாசாமிக்கு வந்திருக்கு. குறிப்பாக முதல் சந்தேகம்.

    ReplyDelete
  2. //கோவி.கண்ணன் said...
    எனக்கு வந்திருக்க அம்புட்டு சந்தேகமும் அண்ணாசாமிக்கு வந்திருக்கு. குறிப்பாக //


    வருகைக்கு நன்றி கோவி

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    முரளிகண்ணன்

    ReplyDelete
  4. ?????!!!!!!))))))))))))

    பாவம் தமிழ்நாட்டு மக்கள்

    ReplyDelete
  5. ///அத்திரி said...
    ?????!!!!!!))))))))))))///
    வருகைக்கு நன்றி அத்திரி

    ReplyDelete
  6. நம்மள இதவிட முட்டாளாக்க எவனாலயும் முடியாது.

    ReplyDelete
  7. /// வடகரை வேலன் said...
    நம்மள இதவிட முட்டாளாக்க எவனாலயும் முடியாது.///


    இவர்களை நம்பி செயல்பட்டவர்கள் நிலையைப் பாருங்கள் வேலன்..

    ராமதாஸ் பற்றி எழுதிய முரசொலி ஊழியர் இருவர் வீட்டுக்கு அனுப்பப்பட்டனர்.ஏன்..இவர்கள் என்ன எழுதப்போகிறார்கள் என்பது &கோ விற்கு முன்னமே தெரியாதா?
    தினகரன் அலுவலக வெறியாட்டத்தில்,இறந்த ஊழியரின் தாய், அழகிரியையும் வழக்கில் சேர்க்க வேண்டும் என நீதிமன்றத்தில் மணு போட்டதை,எவ்வளவு முறை சன் டீ.வி.யில் சொன்னார்கள்.அந்த தாயின் கதி என்ன?
    கலைஞர் டீ.வி.வந்த போது..சன்னிலிருந்து எவ்வளவு பேர் வலுக்கட்டாயமாக அழித்து வரப்பட்டனர்..அவர்கள் நிலை என்ன/
    இப்படி எழுதிக்கொண்டே போகலாம்.
    வருகைக்கு நன்றி வேலன்.

    ReplyDelete
  8. தமிழ்நாட்டில் தமிழனை காப்பாற்ற யாருமே இல்லையா?

    தனது மகிழ்ச்சியே தமிழ்நாட்டின் மகிழ்ச்சி...

    தனது துக்கமே தமிழ்நாட்டின் துக்கம்...

    தனது எதிரியே தமிழ்நாட்டின் எதிரி...

    தனது நண்பனே தமிழ்நாட்டின் நண்பன்...

    தனது உறவே தமிழ்நாட்டின் உறவு...

    என்ற கருத்தை தமிழனின் மண்டையில் திணித்து தமிழனின் இதயத்தை கடித்துக் குதறித்திண்ணும் குள்ளநறிக் கூட்டத்திடமிருந்து தமிழ்நாட்டை யார்தான் காப்பாற்றுவது...

    ReplyDelete
  9. /// கரிகாலன் said...
    தமிழ்நாட்டில் தமிழனை காப்பாற்ற யாருமே இல்லையா?///


    அரோக்யமான விமரிசனத்தைக்கூட ஏற்கமுடியா மக்கள் இருக்கும்வரை உங்கள் கேள்விக்கு விடை இல்லை கரிகாலரே!

    ReplyDelete