Thursday, December 4, 2008

கத்திரிக்காய் முற்றல் என்றால் கோபம் வருவானேன்?

எனக்கு பிடித்த காய் கத்திரிக்காய்..ஆஹா!அதன் மணம்,சுவை என நாளெல்லாம் புகழ்ந்துக் கொண்டே இருக்கலாம்.ஆனால் அழுகல் கத்திரிக்காய் பிடிக்காது.கடையில் காய்கறி வாங்கப்போகும் போது,கடைக்காரரிடம் 'ஐயா..கத்திரிக்காய் நன்றாக இல்லையே!'என்றேன்.

உடனே கடைக்காரர்'என்ன தைர்யம் இருந்தால் இப்படி சொல்வ..பக்கத்துக்கடையில் பீன்ஸ் முத்தலா கிடக்கு..அங்கப் போய் சொல்லிப்பார்'என்றார்.

'ஐயா..எனக்கு பிடித்ததைத் தானே ,நன்றாக இல்லாவிடின் குறை சொல்ல முடியும்..எனக்குப் பிடிக்காத ஒரு காயைப் பற்றி எனக்கு கவலையில்லை'என்று சொல்லிவிட்டு கிளம்பினேன்.

உங்களுக்கு பிடித்தது பொதுவில் இருக்கும்போது,அதைப் பற்றிக்கூற உங்களுக்கு உரிமை உண்டு என்பது கடைக்காரருக்கு ஏன் தெரியவில்லை?

14 comments:

  1. இதுல ஏதோ உள்குத்து, நுண்ணரசியல் இருக்கு தெரியுது...ஆனா என்னன்னு தான் தெரியல :((((

    ReplyDelete
  2. கமல் :- உங்க புத்திசாலிதானத்த கண்டு மெச்சினோம்.

    ReplyDelete
  3. கடைக்காரர் என நீங்கள் சொல்வது தங்கமணியையா?? கத்திரிக்காய் அவர்கள் செய்ததா??

    இப்படி எல்லாம் எனக்கு எதுவும் தோன்றவில்லை!!

    :)))))))))))))))))

    ReplyDelete
  4. /// Kamal said...
    இதுல ஏதோ உள்குத்து, நுண்ணரசியல் இருக்கு தெரியுது...ஆனா என்னன்னு தான் தெரியல :((((//


    வருகைக்கு நன்றி
    Kamal

    ReplyDelete
  5. /// ச்சின்னப் பையன் said...
    ????????????????????///

    !!!!!!!!!!!!!

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி மணிகண்டன்

    ReplyDelete
  7. ///மங்களூர் சிவா said...
    கடைக்காரர் என நீங்கள் சொல்வது தங்கமணியையா?? கத்திரிக்காய் அவர்கள் செய்ததா??

    இப்படி எல்லாம் எனக்கு எதுவும் தோன்றவில்லை!!///

    :-)))))))))))
    வருகைக்கு நன்றி

    ReplyDelete
  8. அய்யா நீங்கள் சொல்வது புரிகிறது, என்னதான் குறை சொன்னாலும் நாம் உண்ணபோவது என்னமோ,கத்தரிக்காய்தான்.

    ReplyDelete
  9. ///குடுகுடுப்பை said...
    அய்யா நீங்கள் சொல்வது புரிகிறது, என்னதான் குறை சொன்னாலும் நாம் உண்ணபோவது என்னமோ,கத்தரிக்காய்தான்.///


    கடைக்காரருக்கும் அது தெரியும் ..இவங்க நம்மை விட்டு போகமாட்டாங்கன்னு

    ReplyDelete
  10. ஒண்ணுமே புரியலை, கத்தரிக்காயை தவிர

    ReplyDelete
  11. நசரேயன்..இவ்வளவு அப்பாவியா நீங்க?

    ReplyDelete
  12. உடன்பிறந்தோர்க்கு உள்குத்தா ?

    :)

    ஐயாவுக்கு அரசியல் நல்லா வருது.

    ReplyDelete