Monday, December 15, 2008

இறைவன் இருக்கின்றானா?

ஆண்டவன் என்று ஒருவன் இருக்கின்றானா?

மூடநம்பிக்கை..என்று நாத்திகம் பேசும் பகுத்தறிவாளர்கள் கூட சிலசமயம் ..இறைவன் இருக்கின்றானா என தங்களுக்குள்ளாகவாவது கேட்டுக்கொண்டு இருப்பார்கள்.

தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.

இறைவன் இருக்கின்றானா-அவன்
இருந்தால் எங்கே வாழ்கிறான்.
நான் ஆஸ்திகன் ஆனேன்
அவன் அகப்படவில்லை
நான் நாத்திகன் ஆனேன்
அவன் பயப்படவில்லை என்றும்

தெய்வம் என்றால் அது தெய்வம்
வெறும் சிலை என்றால் வெறும் சிலைதான்
உண்டு என்றால் அது உண்டு
இல்லை என்றால் அது இல்லை

என்றும் பாடல் எழுதியிருக்கிறார்.பின் நாட்களில் அவரே ஆஸ்திகனாக மாறி கடவுள் இருக்கிறார் என்று நம்பியதுடன் ....அர்த்தமுள்ள இந்துமதம் தந்தார்.

இறை நம்பிக்கை இல்லா கலைஞரும் பல சமயங்களில் "என் ஜாதகம் அப்படி" என்று கூறியதுண்டு.

பகுத்தறிவாளரான அறிஞர் அண்ணா கூட "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்றிருக்கிறார்.

பின் அதுவே ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம் என்று சொல்லப்பட்டது.

இதுபற்றி சத்குரு-ஜக்கி வாசுதேவ்விடம்" நீங்கள் கடவுளைப் பார்த்திருக்கிறீர்களா?"என்று ஒரு முறை கேட்கப்பட்டது.அதற்கு அவர் பதில்

"கடவுள் என்று நீங்கள் எதைக்சொல்கிறீர்கள்?உங்களைச்சுற்றி படைக்கப்பட்டு இருக்கும் இந்த பிரம்மாண்டத்தை உருவாக்கிய சக்தியைத்தானே? அந்த சக்தி எங்கே குடியிருக்கிறது?
எங்கே எல்லாம் படைப்பு நிகழ்கிறதோ ..அங்கல்லாம் தானே...அதோ அந்த மேகத்தில்,மணல் துகளில்,இந்த பூவில்,உங்களில்,என்னில் என்று எங்கும் நீக்கமற கடவுளைத்தவிர வேறு எதை
நீங்கள் காணமுடியும்.?ஒவ்வொரு படைப்பிலும்..அதைப் படைத்தவன் இருக்கின்றான் என்பதை புரிந்துக் கொண்டால்...தினம்..தினம்..கணத்துக்கு கணம்..உங்களைச் சுற்றியுள்ள ஒவ்வொன்றிலும் கடவுளைக் காணலாம்.." என்றார்.

அது சரி..இந்த பதிவு எழுதும் நீ இறைவன் இருக்கிறான்..என்று சொல்கிறாயா? என்கிறீர்களா?

அதற்கு என் பதில்'நான் எங்கே அப்படிச் சொன்னேன்? ஆனால் இருந்தால் நன்றாயிருக்கும்."

20 comments:

  1. ஐயா, முதல் வணக்கம்!

    ReplyDelete
  2. நம்பிக்கைதான் கடவுள்!

    ReplyDelete
  3. //////தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.////////

    தவறு. அவர் வாழ்ந்‍த காலம் 54 ஆண்டுகள். அதில் ஆத்திகர்களோடு (சொல்லைக் கவனிக்கவும்) அவர் இருந்‍த காலம் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே!

    ReplyDelete
  4. கடவுளுக்கு புள்ளைக் குட்டி (விநாயகர், முருகன், ஐயப்பன் பேருக்கு ஒரு மகள் இல்லையான்னு கேட்கப்படாது) இருப்பதாகவும், மச்சான்(பெருமாள், சிவனும்) இருப்பதாகவும், அவங்க மனைவி மார்கள் அவர்களைப் படித்து வைப்பதாகவும், மனிதனைப் போல அடித்துக் கொள்வதாகவும் சொல்வதெல்லாம் டூ டூ மச் இல்லே ?

    :)

    ReplyDelete
  5. //SP.VR. SUBBIAH said...
    //////தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.////////

    தவறு. அவர் வாழ்ந்‍த காலம் 54 ஆண்டுகள். அதில் ஆத்திகர்களோடு (சொல்லைக் கவனிக்கவும்) அவர் இருந்‍த காலம் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே!

    December 15, 2008 4:40:00 PM PST
    //

    சர்கரை கொஞ்சமாகத்தான் சாப்பிட்டாருன்னு சொல்வது போல் இருக்கு. ஆண்டுக் கணக்கில் முன்னே பின்னே இருந்தால் என்ன தவறு ? கவியரசரின் மற்ற விசயங்களைச் சொல்லவில்லையே...நாத்திகனாக இருந்ததைத் தானே சொன்னார். சுப்பையா சார் என்ன சொல்லவர்றாரு ... நாத்திகனாக அவர் இருந்தது பெரும் தவறு ஆனால் அது குறுகிய காலம் தான் என்கிறாரா ?

    ReplyDelete
  6. கடவுள் தீ அணைப்பு வண்டி மாதிரி...எல்லாம் முடிந்ததும் வருவார் ஐ மீன் கலியுகம் முடியப் போகிற சமயத்தில்

    :)

    ReplyDelete
  7. // SP.VR. SUBBIAH said...
    //////தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.////////

    தவறு. அவர் வாழ்ந்‍த காலம் 54 ஆண்டுகள். அதில் ஆத்திகர்களோடு (சொல்லைக் கவனிக்கவும்) அவர் இருந்‍த காலம் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே!
    //


    இந்த இடம் குழப்பமா இருக்கே? ஆத்திகராக பத்து ஆண்டுகள், மிச்சம் அவர் நாத்திகரா இருந்ததா எடுத்துக்கலாமா?

    ReplyDelete
  8. அன்பே சிவம் படம் பார்க்கிறவரை நான்கூட நாத்திகந்தான்

    ReplyDelete
  9. //பழமைபேசி said...
    ஐயா, முதல் வணக்கம்!//
    வருகைக்கு நன்றி

    உண்மை

    ReplyDelete
  10. //பழமைபேசி said...
    நம்பிக்கைதான் கடவுள்!//


    உண்மை

    ReplyDelete
  11. //செந்தழல் ரவி said...
    ம்ஹும்...//

    ம்ம்ம்ம்

    ReplyDelete
  12. ///SP.VR. SUBBIAH said...
    //////தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.////////

    தவறு. அவர் வாழ்ந்‍த காலம் 54 ஆண்டுகள். அதில் ஆத்திகர்களோடு (சொல்லைக் கவனிக்கவும்) அவர் இருந்‍த காலம் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே!///


    நீங்கள் சொல்வது புரியவில்லை ஆசிரியரே...
    அவர் வாழ்நாளின் கடைசி 10 ஆண்டுகள் ஆத்திகர்களுடன் நாத்திகராய் இருந்தார் என்கிறீர்களா?

    ReplyDelete
  13. ///கோவி.கண்ணன் said...
    கடவுளுக்கு புள்ளைக் குட்டி (விநாயகர், முருகன், ஐயப்பன் பேருக்கு ஒரு மகள் இல்லையான்னு கேட்கப்படாது) இருப்பதாகவும், மச்சான்(பெருமாள், சிவனும்) இருப்பதாகவும், அவங்க மனைவி மார்கள் அவர்களைப் படித்து வைப்பதாகவும், மனிதனைப் போல அடித்துக் கொள்வதாகவும் சொல்வதெல்லாம் டூ டூ மச் இல்லே/// ?


    இதைவிட த்ரீ மச் எல்லாம் இருக்கிறது கோவி

    ReplyDelete
  14. ////கோவி.கண்ணன் said...
    //SP.VR. SUBBIAH said...
    //////தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.////////

    தவறு. அவர் வாழ்ந்‍த காலம் 54 ஆண்டுகள். அதில் ஆத்திகர்களோடு (சொல்லைக் கவனிக்கவும்) அவர் இருந்‍த காலம் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே!

    December 15, 2008 4:40:00 PM PST
    //

    சர்கரை கொஞ்சமாகத்தான் சாப்பிட்டாருன்னு சொல்வது போல் இருக்கு. ஆண்டுக் கணக்கில் முன்னே பின்னே இருந்தால் என்ன தவறு ? கவியரசரின் மற்ற விசயங்களைச் சொல்லவில்லையே...நாத்திகனாக இருந்ததைத் தானே சொன்னார். சுப்பையா சார் என்ன சொல்லவர்றாரு ... நாத்திகனாக அவர் இருந்தது பெரும் தவறு ஆனால் அது குறுகிய காலம் தான் என்கிறாரா ?///

    :-)))))

    ReplyDelete
  15. // கோவி.கண்ணன் said...
    கடவுள் தீ அணைப்பு வண்டி மாதிரி...எல்லாம் முடிந்ததும் வருவார் ஐ மீன் கலியுகம் முடியப் போகிற சமயத்தில்

    :)//


    இதைவிட...தமிழ் படங்களில் கிளைமாக்ஸில் எல்லாம் முடிந்ததும் வரும் காவல்துறை போல என்பது சிறப்பாக இருக்கும்.

    ReplyDelete
  16. ///பழமைபேசி said...
    // SP.VR. SUBBIAH said...
    //////தன் வாழ்நாளில் பெரும் பகுதியை நாத்திகனாக கழித்தவர் கவிஞர் கண்ணதாசன்.////////

    தவறு. அவர் வாழ்ந்‍த காலம் 54 ஆண்டுகள். அதில் ஆத்திகர்களோடு (சொல்லைக் கவனிக்கவும்) அவர் இருந்‍த காலம் சுமார் 10 ஆண்டுகள் மட்டுமே!
    //


    இந்த இடம் குழப்பமா இருக்கே? ஆத்திகராக பத்து ஆண்டுகள், மிச்சம் அவர் நாத்திகரா இருந்ததா எடுத்துக்கலாமா?///


    உங்கள் கேள்வி சுப்பையா ஐயாவிற்கு அனுப்பப்படுகிறது

    ReplyDelete
  17. //SUREஷ் said...
    அன்பே சிவம் படம் பார்க்கிறவரை நான்கூட நாத்திகந்தான்//


    அப்போ...அன்புதான் கடவுள்னு சொல்றதாக எடுத்துக்கொள்ளலாமா? SUREஷ்

    ReplyDelete
  18. enaivathil magizhgiren...

    kadavul endra sollukku sollivaikkappata karuthil paarthaal..
    athu porulatrathu, moodathanamanathu endru ethainaiyo murai niroopikkappatta onru..

    anbu seluthuthal....
    unmai pesuthal....
    nampikkai...

    endra vilakkangal kodukkappadumpothu...
    antha nerathil mattum athu antha porulil (anbu, unmai, nampikkai)kollappatalum..

    meendum kadavul endra sol (mooda nambikkaiyaka)nilaipetru vidukirathu...

    kadavul endra sol thevaiyatrathu.

    pakuthariyum thiranudaiya naam anaivarum

    kadavul endra sollukku "mooda nambikkai" endra neradi porulaiye kolvom.

    ReplyDelete