Thursday, June 4, 2009

கலைஞர் என்ன செய்திருக்க வேண்டும்...

கடந்த ஓரிரு மாதங்களாக..கலைஞர்பால் அன்பு கொண்டவர்களும்..என்னைப்போன்ற கழக ஆதரவாளர்களும்..அவரை பற்றி
சிறு குறைகளையும்...நமது அதிருப்தியையும் தெரிவித்துக் கொண்டுதான் இருக்கிறோம்.

ஆமாம்..அவர் என்னதான் செய்திருக்க வேண்டும்..

1.தமிழக எம்.பி.க்கள் ராஜிநாமா செய்திருக்க வேண்டும்

2.கலைஞர் ராஜினாமா செய்திருக்க வேண்டும்

இந்த இரண்டு ஆப்ஷன்ஸ் தான் செய்திருக்க முடியும்..

முதலில் சொன்ன எம்.பி.க்கள் ராஜிநாமா...செய்திருந்தால் என்னவாகி இருக்கும்...சற்று யோசிப்போம்..

நாடாளுமன்ற தேர்தல் சற்று முன்னரே வந்திருக்கும்...காங்கிரஸுடன்..கூட்டணி இல்லாமல் போயிருக்கும்.இச் சந்தர்ப்பத்திற்காகவே காத்துக்கோண்டிருந்த அம்மா..காங்கிரஸ்,பா.ம.க.,உடன் கூட்டு சேர்ந்திருப்பார்.தி.மு.க., தனித்து விடப்பட்டிருக்கும்.தி.மு.க., எம்.பி.,க்கள் இல்லாத நாடாளுமன்றம் அமைந்திருக்கக்கூடும்.

நாம் எதிர்ப்பார்ப்பு..இதுதானா..கட்டாயம் இல்லை..ஆகவே ராஜிநாமா என்ற விஷயம் உதவாது.

அடுத்து..கலைஞர் ராஜிநாமா...இதைச் செய்திருந்தால்..ஏற்கனவே..மைனாரிட்டி அரசு என சொல்லிக் கொண்டிருப்பவர்..மற்றவர்களுடன் சேர்ந்து..ஆட்சியை கவிழ்த்திருப்பார்.இப்படி நடந்ததற்கான முன்னுதாரணமும் உள்ளது.

கலைஞர் ஆட்சியில் இருந்தால் தான்..எதாவது பேச முடிகிறது..இல்லாவிட்டால்..என்ன ஆகும்.என வை.கோ.,வைத்தான் கேட்க வேண்டும்..

ஆகவே..இப்படிப்பட்ட சூழலில்..கலைஞர் என்ன செய்திருக்க முடியும்?

உண்மையாகவே.. கலைஞரின் நடவடிக்கைகள் சற்று அதிருப்தியைத் தந்தாலும்...சற்று யோசித்தால்..இதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.

ஆகவேதான்..இலங்கை தமிழர் விஷயத்தில்..மைய அரசுக்கு அதிகாரம்..இருந்தாலும்..அது தமிழ் இனம் பற்றி கவலைப்படாததால்...காங்கிரஸ் போட்டியிட்ட தொகுதிகளில்..அந்த வேட்பாளர்களை தோல்வி அடையச் செய்யுங்கள் என..கூக்குரல் கொடுக்க முடிந்தது.

ஆகவே..நண்பர்களே..கலைஞரை குறை சொல்வதை விட்டுவிடுங்கள்..

34 comments:

  1. கலைஞர் என்ற சொல்லை பார்த்தாலே சில துரோகிகள் தமிழ்மணம் நெகடிவ் ஓட்டை குத்திவிடுகிறார்கள் அவ்வளவு வெறுப்பு அந்த துரோகிகளுக்கு

    ReplyDelete
  2. பேரன்புடன் பெரியவருக்கு ஒரு கடிதம்

    http://visaran.blogspot.com/

    ReplyDelete
  3. //உண்மையாகவே.. கலைஞரின் நடவடிக்கைகள் சற்று அதிருப்தியைத் தந்தாலும்...சற்று யோசித்தால்..இதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.//

    மக(ன்/ள்)சூழ் நிலை கைதி அவர் என்ன செய்வார். பாவம் தான் !

    ReplyDelete
  4. கலைஞர் ராஜினாமா செஞ்சுட்டு ரெண்டு நாளுக்கப்புறம் ஸ்டாலினை முதல்வராக்கி இருக்கனும். கலைஞர் மட்டும் ராஜினாமா பண்ணினா மைனாரிட்டு அரசுக்கு ஒன்னும் ஆவாதே

    ReplyDelete
  5. சரி.. இந்த மாசம் இனிமேல குறை சொல்லலை

    ReplyDelete
  6. // உடன்பிறப்பு said...
    கலைஞர் என்ற சொல்லை பார்த்தாலே சில துரோகிகள் தமிழ்மணம் நெகடிவ் ஓட்டை குத்திவிடுகிறார்கள் அவ்வளவு வெறுப்பு அந்த துரோகிகளுக்கு//

    இது மட்டுமல்ல..என்னோட தேங்காய்..மாங்காய்..பதிவுக்குக் கூட..என் பதிவென்றால் நெகடிவ் ஓட்டுதான் போடப்படுகிறது.
    விட்டுத்தள்ளுங்கள் உடன்பிறப்பு.

    ReplyDelete
  7. //sanjayan said...
    பேரன்புடன் பெரியவருக்கு ஒரு கடிதம்

    http://visaran.blogspot.com///
    கனத்த மனதுடன் படித்தேன் sanjayan

    ReplyDelete
  8. // கோவி.கண்ணன் said...
    //உண்மையாகவே.. கலைஞரின் நடவடிக்கைகள் சற்று அதிருப்தியைத் தந்தாலும்...சற்று யோசித்தால்..இதைத்தவிர அவருக்கு வேறு வழியில்லை.//

    மக(ன்/ள்)சூழ் நிலை கைதி அவர் என்ன செய்வார். பாவம் தான் !//
    ???!!!

    ReplyDelete
  9. //ILA said...
    கலைஞர் ராஜினாமா செஞ்சுட்டு ரெண்டு நாளுக்கப்புறம் ஸ்டாலினை முதல்வராக்கி இருக்கனும். கலைஞர் மட்டும் ராஜினாமா பண்ணினா மைனாரிட்டு அரசுக்கு ஒன்னும் ஆவாதே//

    அது பெரியதாக மாற்றத்தை ஏற்படுத்தி இருக்காது என்பதே என் எண்ணம்

    ReplyDelete
  10. //நசரேயன் said...
    சரி.. இந்த மாசம் இனிமேல குறை சொல்லலை//

    ஒவ்வொரு மாதமும்..முதல் நாள் இப்பின்னூட்டம் படி செயல்படவும்.

    ReplyDelete
  11. நண்பரே !!!
    மன்னிக்கவும் ..உங்கள் கருத்தில் எனக்கு முழு ஒப்புமை இல்லை. ஆனால் உங்கள் பதிவை படித்த பின்பு தான் எனக்கு என்னுடைய முதல் பதிவை எழுத்தும் எண்ணம் வந்தது ..
    மன்னிக்கவும் நான் முதலில் போடும் ஓட்டே நெகடிவ் ஒட்டு தான் !!!

    ReplyDelete
  12. தங்கள் பின்னூட்டம்..உங்கள் மீது மதிப்பை ஏற்படுத்துகிறது.
    ஒவ்வொருவர் விருப்பு,வெறுப்பு, எண்ணங்கள் மாறுபடும்.
    அதை மற்றவர் மனம் புண்படாமல் சொல்லும் திறமை உங்களிடம் உள்ளது.
    எழுதுங்கள்..நிறைய..வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அய்யா நான் சொல்வதை தயவு செய்து யோசிக்கவும். இன்று நமது அண்டை மாநிலங்கள் எல்லாம் முன்னேரியத்துக்கு காரணம் அவர்களின் சுய சிந்தனை. ஏனன்றால் இவன் குடுமப்த்தில் உள்ளொருக்கு இந்தி அங்கிலம் தெரியும், ஆனால் நம் அனைவரயும் தமிழ் என்ற ஒரு வார்த்தையால் ஐம்பது வருடங்களாக ஏமாற்றி வரும் இவனுக்ககவ வருதபடுகிரிர்கள். த்மிழ்னட்டுகு பிடித்த சனி. இவனுக்கு இவ்வளவு முட்டாள்கள் அதரவு மற்றும் ஓட்டு. நான் சொல்வது தாய் மொழியை மறக்ககுடாது. அந்நேரம் நம்மை நாம் கப்பற்றிகொள்ளவும் வேண்டும்,

    ReplyDelete
  14. all things are ok. but what about 20,000 killed people?. if he did this those people will be saved. what you are going to tell about this?

    ReplyDelete
  15. //மக(ன்/ள்)சூழ் நிலை கைதி அவர் என்ன செய்வார். பாவம் தான் !
    //

    கோவி அண்ணன் அச்சு அசலாக ஜீரோ பன்னீர்செல்வம் மாதிரியே பேசுகிறார் :-)

    ReplyDelete
  16. // இன்று நமது அண்டை மாநிலங்கள் எல்லாம் முன்னேரியத்துக்கு //

    ஆமைய்யா ..மற்ற மாநிலமெல்லாம் அசுர வளர்ச்சி ..தமிழ்நாடு தான் கடைசி இடம்.. எங்கிருந்து தான் கெளம்புறாய்ங்களோ தெரியல்ல !

    http://thatstamil.oneindia.in/news/2009/06/05/tn-the-best-state-says-central-finance-commission.html

    ReplyDelete
  17. Here is a small list of things he could have done..

    1. For Tamil Elam, he could have spent 1% of effort of what he spent on getting minister post
    2. He could have given due credit to the sacrifice of Muthukumar by not announcing holidays to colleges and killing the movement
    3. He could have shown some kindness to the lawyers by not beating them up!
    4. He could have helped Nedumaran send the humanitarian aid he collected for Tamil Elam
    5. He could have restrained from making a mockery of 'Unna viradham' by not observing a world's shortest 'Unna Viradham'
    6. He could have said something when Stalin said that 'Elam' will not be an issue in the election
    7. He could have resigned on Moral grounds. When biharis' were attached in Mumbai, Nithish party MPs resigned in protest. They did not justify that it will not have any material effect. Because of that, the resignation had an effect. Here, he is more bothered about the power and keeps justifying that his resignation will not have any effect. Congress also knows that he will never resign

    please, do not say that they lost power for the cause of sri lanka twice. Repeating the lies again and again will not make that a truth!

    ReplyDelete
  18. மாநில முதல்வர் பதவி என்ன அமெரிக்க அதிபர் பதவி போன்றதா. என்ன குட்டிகரணம் அடித்தாலும் ஓரளவுக்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது. இதை எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.

    ReplyDelete
  19. ராஜினாமா, உண்ணா விரதம் ..... அதையெல்லாம் தாண்டி, கொஞ்சம், மருந்து, உணவு, கூடாரங்கள் .... இது போல அடிப்படை தேவைகளை, எப்படி அனுப்பலாம், எங்கு அனுப்பலாம், ... மருத்துவர்களை அனுப்புவது, ...இதை எல்லாம் எப்படி செய்வது, ....அப்படின்னு யோசிச்சிருந்தார்னா ... நீங்கள் சொல்லும் வயது, சேவை, தமிழ இது எல்லாத்துக்கும் மரியாதை கொடுத்ருக்கலாம்....ஆனால், இப்ப, ....... நீங்களே முடிவு செஞ்சுக்குகங்க

    ReplyDelete
  20. "மாநில முதல்வர் பதவி என்ன அமெரிக்க அதிபர் பதவி போன்றதா"

    ஆனால் ஒரு அமெரிக்க அதிபரைவிட அதிகமாக சொத்து சம்பாதிக்க முடிகிற பதவி. இங்கு இந்தியா இல்லை, இந்தி யார் படித்தாரோ அவருக்கு தான் மத்திய மந்திரி பதவி என்று சொன்ன ஒரு சந்தர்பவாதிக்கு பரிந்து கொண்டு வரும் என் மக்களை யார் காப்பது

    ReplyDelete
  21. // இய‌ற்கை said...
    100% உண்மை//

    நன்றி இயற்கை

    ReplyDelete
  22. // Vishalivinh said...
    அய்யா நான் சொல்வதை தயவு செய்து யோசிக்கவும். இன்று நமது அண்டை மாநிலங்கள் எல்லாம் முன்னேரியத்துக்கு காரணம் அவர்களின் சுய சிந்தனை. ஏனன்றால் இவன் குடுமப்த்தில் உள்ளொருக்கு இந்தி அங்கிலம் தெரியும், ஆனால் நம் அனைவரயும் தமிழ் என்ற ஒரு வார்த்தையால் ஐம்பது வருடங்களாக ஏமாற்றி வரும் இவனுக்ககவ வருதபடுகிரிர்கள். த்மிழ்னட்டுகு பிடித்த சனி. இவனுக்கு இவ்வளவு முட்டாள்கள் அதரவு மற்றும் ஓட்டு. நான் சொல்வது தாய் மொழியை மறக்ககுடாது. அந்நேரம் நம்மை நாம் கப்பற்றிகொள்ளவும் வேண்டும்,//

    தமிழகத்தின் அபரித வளர்ச்சி உங்கள் கண்களில் படாதது துரதிருஷ்டமே

    ReplyDelete
  23. //லக்கிலுக் said...
    //மக(ன்/ள்)சூழ் நிலை கைதி அவர் என்ன செய்வார். பாவம் தான் !
    //

    கோவி அண்ணன் அச்சு அசலாக ஜீரோ பன்னீர்செல்வம் மாதிரியே பேசுகிறார் :-)//
    அப்போ..கோவி எப்ப இடைக்கால முதல்வராவார்?

    ReplyDelete
  24. //ஜோ/Joe said...
    // இன்று நமது அண்டை மாநிலங்கள் எல்லாம் முன்னேரியத்துக்கு //

    ஆமைய்யா ..மற்ற மாநிலமெல்லாம் அசுர வளர்ச்சி ..தமிழ்நாடு தான் கடைசி இடம்.. எங்கிருந்து தான் கெளம்புறாய்ங்களோ தெரியல்ல !

    http://thatstamil.oneindia.in/news/2009/06/05/tn-the-best-state-says-central-finance-commission.html//

    தூங்குபவர்களை எழுப்பலாம்...நடிப்பவர்களை...?

    ReplyDelete
  25. // Ravi said...
    Here is a small list of things he could have done..

    1. For Tamil Elam, he could have spent 1% of effort of what he spent on getting minister post
    2. He could have given due credit to the sacrifice of Muthukumar by not announcing holidays to colleges and killing the movement
    3. He could have shown some kindness to the lawyers by not beating them up!
    4. He could have helped Nedumaran send the humanitarian aid he collected for Tamil Elam
    5. He could have restrained from making a mockery of 'Unna viradham' by not observing a world's shortest 'Unna Viradham'
    6. He could have said something when Stalin said that 'Elam' will not be an issue in the election
    7. He could have resigned on Moral grounds. When biharis' were attached in Mumbai, Nithish party MPs resigned in protest. They did not justify that it will not have any material effect. Because of that, the resignation had an effect. Here, he is more bothered about the power and keeps justifying that his resignation will not have any effect. Congress also knows that he will never resign

    please, do not say that they lost power for the cause of sri lanka twice. Repeating the lies again and again will not make that a truth!//

    ஒரு முதல்வர்..என்ற அளவில்..அவர் எல்லைகளுக்குட்பட்டு..என்னவெல்லாம் செய்யமுடியுமோ,அதை எல்லாம் செய்துள்ளார்.நம்மைப்போன்றோர்க்கு..அது அதிருப்தியை அளிப்பது தவிர்க்கமுடியாது.

    ReplyDelete
  26. //ananth said...
    மாநில முதல்வர் பதவி என்ன அமெரிக்க அதிபர் பதவி போன்றதா. என்ன குட்டிகரணம் அடித்தாலும் ஓரளவுக்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது. இதை எல்லோரும் ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும்.//

    உண்மை ஆனந்த்...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

    ReplyDelete
  27. //அது ஒரு கனாக் காலம் said...
    ராஜினாமா, உண்ணா விரதம் ..... அதையெல்லாம் தாண்டி, கொஞ்சம், மருந்து, உணவு, கூடாரங்கள் .... இது போல அடிப்படை தேவைகளை, எப்படி அனுப்பலாம், எங்கு அனுப்பலாம், ... மருத்துவர்களை அனுப்புவது, ...இதை எல்லாம் எப்படி செய்வது, ....அப்படின்னு யோசிச்சிருந்தார்னா ... நீங்கள் சொல்லும் வயது, சேவை, தமிழ இது எல்லாத்துக்கும் மரியாதை கொடுத்ருக்கலாம்....ஆனால், இப்ப, ....... நீங்களே முடிவு செஞ்சுக்குகங்க//

    பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு அவ்வப்போது அனுப்பிய உதவிகள், உணவுப்பொருள்கள்,மருந்துப்பொருள்கள்...இவைப்பற்றி நீங்கள் அறிந்திருக்கவில்லை என தெரிகிறது

    ReplyDelete
  28. //Vishalivinh said...
    "மாநில முதல்வர் பதவி என்ன அமெரிக்க அதிபர் பதவி போன்றதா"

    ஆனால் ஒரு அமெரிக்க அதிபரைவிட அதிகமாக சொத்து சம்பாதிக்க முடிகிற பதவி. இங்கு இந்தியா இல்லை, இந்தி யார் படித்தாரோ அவருக்கு தான் மத்திய மந்திரி பதவி என்று சொன்ன ஒரு சந்தர்பவாதிக்கு பரிந்து கொண்டு வரும் என் மக்களை யார் காப்பது//
    :-))

    ReplyDelete
  29. //tamil said...
    all things are ok. but what about 20,000 killed people?. if he did this those people will be saved. what you are going to tell about this?//

    மைய அரசின் வெளியுறவு கொள்கைகளில் ஒரு மாநில முதல்வரால்..ஒரு நிலைக்கு மேல் தலையிட முடியாது..என்பது உங்களுக்குத் தெரியாதா?
    இடையெல்லாம் மனதில் வைத்துத்தான் கலைஞர்..மாநில சுயாட்சி பற்றி பேச ஆரம்பித்துள்ளார் மீண்டும்..என்பதை நீங்கள் உணரவில்லையா?

    ReplyDelete
  30. // Ravi said...
    Here is a small list of things he could have done..

    1. For Tamil Elam, he could have spent 1% of effort of what he spent on getting minister post
    2. He could have given due credit to the sacrifice of Muthukumar by not announcing holidays to colleges and killing the movement
    3. He could have shown some kindness to the lawyers by not beating them up!
    4. He could have helped Nedumaran send the humanitarian aid he collected for Tamil Elam
    5. He could have restrained from making a mockery of 'Unna viradham' by not observing a world's shortest 'Unna Viradham'
    6. He could have said something when Stalin said that 'Elam' will not be an issue in the election
    7. He could have resigned on Moral grounds. When biharis' were attached in Mumbai, Nithish party MPs resigned in protest. They did not justify that it will not have any material effect. Because of that, the resignation had an effect. Here, he is more bothered about the power and keeps justifying that his resignation will not have any effect. Congress also knows that he will never resign

    please, do not say that they lost power for the cause of sri lanka twice. Repeating the lies again and again will not make that a truth!//

    ஒரு முதல்வர்..என்ற அளவில்..அவர் எல்லைகளுக்குட்பட்டு..என்னவெல்லாம் செய்யமுடியுமோ,அதை எல்லாம் செய்துள்ளார்.நம்மைப்போன்றோர்க்கு..அது அதிருப்தியை அளிப்பது தவிர்க்கமுடியாது.

    //
    Of these points, as a human being, he could have done #1
    As a CM he could have done #2, #3 and #7
    As a politician, he could have done #5 and #6

    Do you honestly believe that he did what he could as a CM?

    ReplyDelete
  31. //Do you honestly believe that he did what he could as a CM?//

    Yes...அரசியல் தலைவராகவும் இருந்துவிட்டாரே அவர்.
    பெரும்பான்மை மக்களும்..அதனால்தான் தேர்தலில்..சற்று வீக்கான கூட்டணி என ஊடகங்கள்,நாம் எல்லாம் நினைத்தும்..அவரை விட்டால் வேறு இல்லை என தி.மு.க.,வைத் தேர்ந்தெடுத்தனர்.அதே நேரம் ஈழ தமிழர் பிரச்னையை புறக்கணித்த கட்சியைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்களை தோற்கடித்தனர்.

    ReplyDelete
  32. கலைஞர் மீது எனக்கும் அதிருப்தி உண்டு...ஆனால் அவர் நிலையில் இதைத்தான் செய்யமுடியும்.

    ReplyDelete
  33. //கலைஞர் ஆட்சியில் இருந்தால் தான்..எதாவது பேச முடிகிறது..இல்லாவிட்டால்..என்ன ஆகும்//

    இதனால் இறந்த 50000 தமிழரில் ஒருவரையாவது காப்பாற்ற முடிந்ததா?.

    ReplyDelete