Thursday, June 18, 2009

எஸ்.வி.சேகர் தி.மு.க.,வில் சேர்ந்தால்...

சட்டசபையில்..எஸ்.வி., சேகர் அ.தி.மு.க., எம்.எல் ஏ., என்ற முறையில்..நடந்துக் கொண்ட விதம்..சரியா..சரியில்லையா..என்ற சர்ச்சைக்கான பதிவல்ல இது.

சேகரே அ.தி.மு.க.,விலிருந்து வெளியே வந்தால்..எம்.எல்.ஏ., பதவி பறி போகும்..அதுவே..கட்சி அவரை நீக்கினால்..சபையில் ஓரத்தில் அமர்ந்துக் கொண்டு அடுத்த இரண்டு வருடங்களை ஓட்டிவிடலாம்.அதற்குண்டான..சலுகைகளை அனுபவித்துக் கொண்டு.

அதற்கு பிறகு சேகர் கட்சி ஆரம்பித்தால்...அதில் அவர் கூறும் சமூகத்தினர் அனைவரும் சேருவார்கள்..என்ற எதிர்ப்பார்ப்பு தவறு.ஏனெனில்..அவர் தற்போதுள்ள கட்சியின்..தலைவிக்கும்..இவருக்குமே பரஸ்பரம் ஒற்றுமை இல்லையே.

ஒரு சமயம்..தனிக் கட்சி என்று சொல்லிக் கொண்டு...வரும் சட்டசபை தேர்தலில்...தி.மு.க.,உடன் கூட்டணி வைத்து..தனக்கான எம்.எல்.ஏ., சீட் வாங்கும் திட்டம் கூட இருக்கலாம்.

அதை விடுத்து..தி.மு.க.,வில் சேரும் முடிவெடுத்தால்..அதிகபட்சம் அவரால்..இயல்,இசை,நாடக மன்றத்தின் செயலர் ஆகவோ..தலைவர் ஆகவோ மட்டுமே முடியும்.

இதுதான் நடைமுறை உண்மை..கலைஞரின் நண்பர் சாவி க்கும் இப்பதவி கிடைத்ததை..இப்போது அவர் நினைத்துப் பார்க்கட்டும்.

16 comments:

  1. சாவி உங்களுக்கு நல்ல அறிமுகமோ?

    ReplyDelete
  2. சாவியை அதிக பழக்கமில்லை..சாவி பத்திரிகை ஆசிரியர் என்ற முறையில்..தினமணி கதிர் ஆசிரியராய் இருந்த போது..எனது இரு கதைகள் பிரசுரமாகியுள்ளன.

    ReplyDelete
  3. சாவி மீது மிகுந்த மதிப்பு உண்டு அவர் தலைவரின் தோழர்

    ReplyDelete
  4. // உடன்பிறப்பு said...
    சாவி மீது மிகுந்த மதிப்பு உண்டு அவர் தலைவரின் தோழர்//

    நம்மைப்போல என்று சொல்லலாமா உடன்பிறப்பு((ஏனெனில் எனக்கு உங்கள் மீது மதிப்பு உண்டு)

    ReplyDelete
  5. //அக்னி பார்வை said...
    solrathukku onnumillai//

    :-)))

    ReplyDelete
  6. ஆரிய முன்னேற்ற கழகத்திற்கு என் ஆதரவு உண்டு

    ReplyDelete
  7. //குடுகுடுப்பை said...
    ஆரிய முன்னேற்ற கழகத்திற்கு என் ஆதரவு உண்டு//

    வருங்கால முதல்வர் ஆசை போய்விட்டதா?

    ReplyDelete
  8. //நசரேயன் said...
    உள்ளேன் ஐயா//

    yes

    ReplyDelete
  9. ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் போது எஸ் வி சேகர் கட்சி ஆரம்பித்தால்...
    ஐயோ பாவம் ..

    ReplyDelete
  10. //goma said...
    ஆடிக்காற்றில் அம்மியே பறக்கும் போது எஸ் வி சேகர் கட்சி ஆரம்பித்தால்...
    ஐயோ பாவம் ..//

    :-)))

    ReplyDelete