Wednesday, July 15, 2009

கலைஞர் கதை வசனத்தில்..மத்திய அமைச்சர் நடிக்கும் படம்..

கலைஞர் இதுவரை 70 படங்களுக்கு திரைக்கதை..வசனம் எழுதி சாதனைப் படைத்துள்ளார்.

இப்போது அவர் எழுதிய பொன்னர்-சங்கர் திரைப்படமாக உள்ளது.அப்படத்திற்கான தொடக்க விழா சமீபத்தில் நடந்தது.

வள்ளுவர் கோட்டத்தில் நடைப்பெற்ற இவ்விழாவில்..ஏ,வி.எம்.சரவணன் கிளாப் அடிக்க...கலைஞர் காமிராவை இயக்கி திரைப்படத்தை தொடங்கி வைத்தார்

இப்படத்தில்..பிரசாந்த் தவிர..மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சரான நெப்போலியனும் நடிக்க இருக்கிறார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதி பெற்றே தான் நடிப்பதாக அவர் தெரிவித்தார்.நெப்போலியன் எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதும்..திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

பொன்னர்-சங்கர் வெற்றிவிழா காணும் என கலைஞர் கூறியுள்ளார்.

17 comments:

  1. நாந்தான் முதல்ல

    கலைஞரின் படம் வெற்றி பெற வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. நல்லா கொடுக்கறீங்க சாமீ தலைப்பு.

    டெர்ரர்ர்ர்ர்ர்ர்ர்ரா இருக்கதுங்க.

    படமும் டெரராத்தான் இருக்கும்னு நெனைக்கிறேன்.

    ReplyDelete
  3. நான் கூட முதல் முறை எம்.பி.ஆன நடிகர் தான் நடிக்கிறாரோ என்று நினைத்துவிட்டேன்

    ReplyDelete
  4. இப்படத்தில்..பிரசாந்த் தவிர..மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சரான நெப்போலியனும் நடிக்க இருக்கிறார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதி பெற்றே தான் நடிப்பதாக அவர் தெரிவித்தார்.நெப்போலியன் எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதும்..திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

    வார்த்தை மாறுவதெல்லாம் எங்க அகராதியிலேயே கிடையாதுங்கோ...எம்.பி.ஆன பிறகுதான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் மந்திரியானதும் நடிக்க மாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே..

    ReplyDelete
  5. சூப்பர். நான் மறுபடியும் திரைவிமர்சனம் எழுதலாம்.:)

    ReplyDelete
  6. நான் எம்.பி ஆனா கூட நடிக்கமாட்டேன்...

    கலைஞர் படம் பற்றிய பதிவில் இவ்வளவு ஆங்கில சொற்களா...

    உங்களுக்கு வலைப்பதிவு வரி போட்டு விடப் போகிறார்...

    ReplyDelete
  7. அழகிரிகிட்ட சொல்லிட்ட அதிலும் வெற்றி தான்

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி
    Starjan
    இளைய பல்லவன்

    ReplyDelete
  9. //உடன்பிறப்பு said...
    நான் கூட முதல் முறை எம்.பி.ஆன நடிகர் தான் நடிக்கிறாரோ என்று நினைத்துவிட்டேன்//
    நீங்கள் நினைத்ததில் தவறில்லை..இவரும் முதன் முறை எம்.பி., தானே

    ReplyDelete
  10. மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கதை தெரியுமா தல?

    ReplyDelete
  11. // goma said...
    இப்படத்தில்..பிரசாந்த் தவிர..மத்திய சமூக நீதித் துறை இணை அமைச்சரான நெப்போலியனும் நடிக்க இருக்கிறார்.பிரதமர் மன்மோகன் சிங்கின் அனுமதி பெற்றே தான் நடிப்பதாக அவர் தெரிவித்தார்.நெப்போலியன் எம்.பி., ஆக தேர்ந்தெடுக்கப்பட்டதும்..திரைப்படங்களில் இனி நடிக்க மாட்டேன் என்று கூறியிருந்தார்.

    வார்த்தை மாறுவதெல்லாம் எங்க அகராதியிலேயே கிடையாதுங்கோ...எம்.பி.ஆன பிறகுதான் நடிக்க மாட்டேன்னு சொன்னேன் மந்திரியானதும் நடிக்க மாட்டேன்னு நான் சொல்லவே இல்லையே..//

    :-))
    வருகைக்கு நன்றி goma

    ReplyDelete
  12. //மணிகண்டன் said...
    சூப்பர். நான் மறுபடியும் திரைவிமர்சனம் எழுதலாம்.:)//
    எழுதலாம்..வாசகர் பரிந்துரையிலும் வரலாம்.

    ReplyDelete
  13. ///அத்திவெட்டி ஜோதிபாரதி said...
    நான் எம்.பி ஆனா கூட நடிக்கமாட்டேன்...

    கலைஞர் படம் பற்றிய பதிவில் இவ்வளவு ஆங்கில சொற்களா...

    உங்களுக்கு வலைப்பதிவு வரி போட்டு விடப் போகிறார்...//

    ஆஹா...அரசுக்கு வருவாய்க்கு..இப்படிப்பட்ட ஒரு வரியும் போடலாம் போல இருக்கே...நிதி அமைச்சர் கவனத்திற்கு அனுப்பப்படுகிறது.

    ReplyDelete
  14. //அக்னி பார்வை said...
    அழகிரிகிட்ட சொல்லிட்ட அதிலும் வெற்றி தான்//

    வெற்றியின் நாயகன் அழகிரி வாழ்க

    ReplyDelete
  15. //SUREஷ் (பழனியிலிருந்து) said...
    மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் கதை தெரியுமா தல?//
    ஓ..அந்த பாண்டியனை மறக்க முடியுமா? ஆமாம்..இப்போது மதுரை யாராவது சுந்தரரிடம் மாட்டிக்கொண்டிருக்கிறதா? அதை மீட்க...
    ஏதும் பின்னூட்டத்தில் உள்குத்து இல்லையே!

    ReplyDelete
  16. ***
    எழுதலாம்..வாசகர் பரிந்துரையிலும் வரலாம்.
    ***

    ஹா ஹா ஹா. அதுக்கு நான் router ஆப் ஆப் பண்ணி வோட்டு போடனுமே ! அது அன்றைய மூட் பொறுத்து இருக்கு :)-

    ReplyDelete
  17. //மணிகண்டன் said...
    ***
    எழுதலாம்..வாசகர் பரிந்துரையிலும் வரலாம்.
    ***

    ஹா ஹா ஹா. அதுக்கு நான் router ஆப் ஆப் பண்ணி வோட்டு போடனுமே ! அது அன்றைய மூட் பொறுத்து இருக்கு :)//

    :-))

    ReplyDelete