Wednesday, July 22, 2009

அ.தி.மு.க., மெல்ல இனி....??

அ.தி.மு.க., இடைத் தேர்தலை புறக்கணிக்கும் என அறிவித்துள்ளது.ஜெ யை எதிர்த்து பேசத்தெரியா கூட்டணிக் கட்சிகளும்..புறக்கணிக்கப் போவதாக அறிவித்துள்ளன.

அதற்கான காரணங்கள் பலவற்றைக் கூறினாலும்..உண்மைக் காரணம் தோல்வி பயமே.

தேர்தல் ஆணையமும்..இத்தொகுதிகளில் வாக்களிக்க புது மின்னணு இயந்திரம் வாங்கியுள்ளதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில்..ஒரு பொறுப்பான எதிர்க்கட்சி..ஆளும் கட்சி செய்யும் தவறுகளை தட்டிக் கேட்க வேண்டும்..அதைவிடுத்து...பயந்து நடப்பது போல இருக்கிறது அதன் இன்றைய செய்கை.

1991 சட்டசபைத் தேர்தலில்..ராஜிவ் காந்தி மறைந்த சமயம் அது..224 தொகுதிகளில் அ.தி.மு.க.,கூட்டணி வெற்றி பெற்றது.பெரம்பூர் தொகுதி..ஒரு வேட்பாளர் மறைவால்..தேர்தல் ஒத்திவைக்கப்பட்டது.கலைஞர் மட்டுமே..துறைமுகத்தில் வென்றார்.அப்போதும் மனம் உடையாமல்..தன் தோல்வியை ஒப்புக்கொண்டதுடன்..எம்.எல்.ஏ., பதவியை ராஜிநாமா செய்தார்.

ஆனால் ஜெ யோ..ராஜிவ் இறந்த அனுதாப அலையில் வென்றாலும்..அதை ஒப்புக் கொள்ளாமல் அது தன் வெற்றி என்றார்.

பின் நடந்த இடைத்தேர்தலில் பெரம்பூரிலும்..துறைமுகத்திலும் தி.மு.க., வென்றது.

தேர்தலில்..வெற்றி..தோல்விகள் சகஜம்..அது எந்த காரணத்தால் ஏற்பட்டாலும்..அதை பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

பெருந்தலைவர்..ஒரு மாணவனிடம்..தன் சொந்த ஊரிலேயே தோற்ற போதும்..அதை ஏற்றார்..வென்றவர்க்கு வாழ்த்து சொன்னார்.

அந்த பெருந்தன்மையை..இன்றைய தலைவர்களிடம்..எதிப்பார்க்கமுடியாவிடினும்...இதுதான் ஜனநாயகம் என்ற அளவிலாவது ஒப்புக்கொள்ள வேண்டும்..

அதை..விடுத்து...தேர்தலை புறக்கணிப்போம் என்பது..ஜனநாயகத்தை..அக்கட்சி மதிக்கவில்லை என்றே ஆகிறது.

இந்நிலை நீடிக்குமேயாயின்..அ.தி.மு.க., மெல்ல இனி....

7 comments:

  1. இவர்களெல்லாம் மக்கள் ஆதரவு இல்லை என்பதை ஏற்றுக் கொள்ளாமல், பணம் கொடுத்து ஓட்டுக்கள் வாங்கப்பட்டன, குண்டர் கும்பல் தாக்குதல், இன்னும் என்னென்னவோ காரணம் சொல்கிறார்கள். எவ்வளவு பணம் கொடுத்து எத்தனை பேரை விலைக்கு வாங்க முடியும்.

    ReplyDelete
  2. ///பெருந்தலைவர்..ஒரு மாணவனிடம்..தன் சொந்த ஊரிலேயே தோற்ற போதும்..அதை ஏற்றார்..வென்றவர்க்கு வாழ்த்து சொன்னார்.
    //

    அப்போது காமராஜர் சொன்ன முக்கிய வரி..

    “ஜனநாயகம் ஜெயிச்சிது, இதுக்கு எதிர்கட்சி கள்ள்தனமா ஜெயிச்சுதுன்னு சொல்றது நியாமில்ல”

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி
    ஆனந்த்
    அக்னி

    ReplyDelete
  4. Hello its not 1960s..2009..neenga yaravathu thirumangalathula iruntheeha na thrinjurukkum..

    Ganesh

    ReplyDelete
  5. Then how Mr.Chidambaram won ?. Do you have any good reason?. Please think and post your views.

    ReplyDelete
  6. mother selvi JEYALALITHA.
    MP election la money kottukama , athika vottu vankina pothu atmk nalla munatram inu ellathukum tharium , nan kuda DMK kida rs.500 vakidu ATMK iku vottu potan,
    DR.MOTHER. SELVI. JEYA LALITHA.
    intha 5 thokkuthi electiona, kalanthu kathathu nallathu inu nan solluvan, unmaya votu kakuravankaluku makal votu potta matanka, money kottu than vottu poturanka, 1991 inla ATMK 229 place illa win pannathu unmathan, appa money kottuthu vottu kakalai anal ippa money illam && GAS illamal,t.v. ILLAMAL PUPLIC votu potamadankuranga, intha puthu palagatha nama DR.KALAINGAR.kondu vanthathuthana kanna,
    kanna atuthu AMMA win panni
    C.M. akkanum, apparam iruku ellathukum innam 2 years than challam iruku, next electionla papom
    DMK va nank maindula vachurukom
    valka ATMK
    endrum unkal M.SG

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி
    Ganesh
    Karthik
    kanna ATMK na summava

    ReplyDelete