Saturday, December 19, 2009

நாங்களும் எழுதுவோம்ல..

1)நேற்றுவரை நீ யாரோ
உன் அருகாமையில்
இன்று நான் யாரோ!!

2) நீ யாரை நேசிக்கிறாய் என்றேன்
என்னை ஏறிட்டாய்
வேறு பெயரை சொல்லிடாதே!!!

3)உலகத்து பெண்களில்
நீயும் ஒருத்தி - எனக்கோ
உலகமே நீ ஒருத்தி

4)மெகா சீரியல்
நாயகி கண்ணீர் - பார்த்த
மக்கள் அழுகை
டி ஆர் பி ரேட்டிங் உச்சம்
தயாரிப்பாளர் வெற்றி சிரிப்பு

5)போ..போ..போ..
நீ போகுமிடமெல்லாம்
நானும் வருவேன்
உனைவிடமாட்டேன் என்றது
அவனது நிழல்

36 comments:

  1. எல்லா கவிதையும் சூப்பர். இதுவரைக்கும் உங்களுக்கு நெகடிவ் வோட்டே போட்டதில்லை :)-

    ReplyDelete
  2. அருமையான கவிதை வாழ்த்துக்கள் சார்

    ReplyDelete
  3. ஆஹா..நம்ம TVR சாரும் கிளம்பிட்டாரா கவித எழுத..இப்பவே கண்ணை கட்டுதே :)
    கவிதை நல்லா இருக்கு பாஸ்.

    ReplyDelete
  4. எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு டிவிஆர்.இரண்டாவது கவிதை ரொம்ப நல்லா இருக்கு.

    ReplyDelete
  5. very nice
    எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு..இரண்டாவது கவிதை ரொம்ப நல்லா இருக்க..

    ReplyDelete
  6. //மணிகண்டன் said...
    எல்லா கவிதையும் சூப்பர். இதுவரைக்கும் உங்களுக்கு நெகடிவ் வோட்டே போட்டதில்லை :)-//


    வருகைக்கு நன்றி மணி.எங்க ரொம்ப நாட்களாகக் காணோம்..

    ஆமாம் ..அது என்ன..எங்கப்பன் குதிருக்குள்ள இல்லைன்னு சொல்றமாதிரி ஒரு ஸ்டேட்மென்ட்

    ReplyDelete
  7. // Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அருமையான கவிதை வாழ்த்துக்கள் சார்//

    நன்றி Starjan

    ReplyDelete
  8. //பூங்குன்றன்.வே said...
    ஆஹா..நம்ம TVR சாரும் கிளம்பிட்டாரா கவித எழுத..இப்பவே கண்ணை கட்டுதே :)
    கவிதை நல்லா இருக்கு பாஸ்.//

    சொல்லிட்டீங்க இல்ல..இனிமே பின்னி எடுத்துடறேன்

    ReplyDelete
  9. //பா.ராஜாராம் said...
    எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு டிவிஆர்.இரண்டாவது கவிதை ரொம்ப நல்லா இருக்கு.//


    நன்றி பா.ரா

    ReplyDelete
  10. //கமலேஷ் said...
    very nice
    எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு..இரண்டாவது கவிதை ரொம்ப நல்லா இருக்க..//


    நன்றி கமலேஷ்

    ReplyDelete
  11. கவிதைச் சாரலில் நனைந்தேன்
    அருமையான வெளிப்பாடு

    ReplyDelete
  12. ஐயாவுக்குள்ள இவ்ளோ கவிதை ஒளிஞ்சிருக்கா

    ReplyDelete
  13. "நேற்றுவரை நீ யாரோ
    உன் அருகாமையில்
    இன்று நான் யாரோ!!"

    அட்ரா! அட்ரா! அட்ராசக்க!
    ஆரம்பிசிட்டாங்கப்பா! ஆரம்பிசிட்டாங்கப்பா!
    ரொம்ப நல்லாருக்கு!

    அன்புடன்
    வந்தியத்தேவன் (எ) காஞ்சி முரளி

    ReplyDelete
  14. பின்னிட்டேள் போங்கோ!

    ReplyDelete
  15. //goma said...
    கவிதைச் சாரலில் நனைந்தேன்
    அருமையான வெளிப்பாடு//


    வருகைக்கு நன்றி Goma

    ReplyDelete
  16. //அத்திரி said...
    ஐயாவுக்குள்ள இவ்ளோ கவிதை ஒளிஞ்சிருக்கா//


    வருகைக்கு நன்றி அத்திரி

    ReplyDelete
  17. //Kanchi Murali said...
    "நேற்றுவரை நீ யாரோ
    உன் அருகாமையில்
    இன்று நான் யாரோ!!"

    அட்ரா! அட்ரா! அட்ராசக்க!
    ஆரம்பிசிட்டாங்கப்பா! ஆரம்பிசிட்டாங்கப்பா!
    ரொம்ப நல்லாருக்கு!

    அன்புடன்
    வந்தியத்தேவன் (எ) காஞ்சி முரளி//

    வருகைக்கு நன்றி Murali

    ReplyDelete
  18. //கே.ரவிஷங்கர் said...
    பின்னிட்டேள் போங்கோ!//

    நன்றி ரவிஷங்கர்

    ReplyDelete
  19. இப்படி எழுதினா நாங்களும் படிப்போம்ல

    ReplyDelete
  20. அண்ணே பிரமாதம். தூள் கிளப்பிட்டீங்க.

    கண்டினியூ பண்ணுங்க. படிக்க நாங்க இருக்கோமில்ல.

    ReplyDelete
  21. // goma said...
    இப்படி எழுதினா நாங்களும் படிப்போம்ல //

    டபுள் ரிப்பீட்டோய்..

    ReplyDelete
  22. // பா.ராஜாராம் said...
    எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு டிவிஆர்.இரண்டாவது கவிதை ரொம்ப நல்லா இருக்கு. //

    வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி ...

    ReplyDelete
  23. // goma said...
    இப்படி எழுதினா நாங்களும் படிப்போம்ல//
    இப்படி எழுதலன்னாலும் படிக்கணும்..ஆமாம்..சொல்லிட்டேன்

    ReplyDelete
  24. //இராகவன் நைஜிரியா said...
    அண்ணே பிரமாதம். தூள் கிளப்பிட்டீங்க.

    கண்டினியூ பண்ணுங்க. படிக்க நாங்க இருக்கோமில்ல.//

    ஆமாம்ல

    ReplyDelete
  25. //இராகவன் நைஜிரியா said...
    // goma said...
    இப்படி எழுதினா நாங்களும் படிப்போம்ல //

    டபுள் ரிப்பீட்டோய்..//

    நன்றி ராகவன்

    ReplyDelete
  26. //இராகவன் நைஜிரியா said...
    // பா.ராஜாராம் said...
    எல்லா கவிதைகளும் நல்லா இருக்கு டிவிஆர்.இரண்டாவது கவிதை ரொம்ப நல்லா இருக்கு. //

    வசிஷ்டர் வாயால் ப்ரம்மரிஷி ...//


    அதே..அதே

    ReplyDelete
  27. வருகைக்கு நன்றி அமுதா கிருஷ்ணா

    ReplyDelete
  28. வருகைக்கு நன்றி நர்சிம்

    ReplyDelete
  29. நீ யாரை நேசிக்கிறாய் என்றேன்
    என்னை ஏறிட்டாய்
    வேறு பெயரை சொல்லிடாதே!!!

    இந்த டென்ஷன் தான் நம்மள படுத்துது எப்பவும்!

    ReplyDelete
  30. // ரிஷபன் said...
    நீ யாரை நேசிக்கிறாய் என்றேன்
    என்னை ஏறிட்டாய்
    வேறு பெயரை சொல்லிடாதே!!!

    இந்த டென்ஷன் தான் நம்மள படுத்துது எப்பவும்!//

    :-)))

    வருகைக்கு நன்றி ரிஷபன்

    ReplyDelete
  31. நானும் படிச்சேன்ல.
    "நேற்று வரை நீ யாரோ",
    "நீ போகும் இடமெல்லாம் நானும் வருவேன்" ரெண்டு வரியும் பழைய பாடல்களை ஞாபகப் படுத்துகிறது. நல்ல முயற்சி. எழுதுங்கள்.

    ReplyDelete
  32. வருகைக்கு நன்றி சகாதேவன்

    ReplyDelete