Sunday, January 24, 2010

கண் தானம்





கடைசியாய் செயலிழக்கும்

உறுப்பு கண்தானாம்

ஏட்டில் படித்ததுண்டு

நிரந்தரமாய் கண்மூடிவிட்ட என்னை

இடுகாட்டிற்கு எடுத்துப் போகையில்

என் இழப்பு யார் யாரை

பாதித்துள்ளது என

பார்க்க விரும்புகையில்

கும்மிருட்டு

ஒன்றுமே தெரியவில்லை

இறந்ததும் கண்களை தானம் செய்தனராம்

யாரோ சொல்வது

திறனிழந்துக் கொண்டிருக்கும்

செவியில் மெலிதாகக் கேட்கிறது

22 comments:

  1. இறந்த பின் சொர்க்கம் நரகம் என்பதெல்லாம் நம் கற்பனைகள்!!

    நிகழ்கால உண்மை உடல் இறந்த பின்னும் உயிர் வாழ முடியும் என்பது..

    ஆம் கண்தானத்தால்!!

    கவிதை நன்றகாவுள்ளது!

    ReplyDelete
  2. மனதை நெருடும் கவிதை...

    ReplyDelete
  3. // ஈரோடு கதிர் said...
    அருமை//

    நன்றி கதிர்

    ReplyDelete
  4. // முனைவர்.இரா.குணசீலன் said...
    கவிதை நன்றகாவுள்ளது!//

    நன்றி குணசீலன்

    ReplyDelete
  5. //Sangkavi said...
    மனதை நெருடும் கவிதை...//

    நன்றி Sangkavi

    ReplyDelete
  6. உண்மை உரைக்கிறது வார்த்தைகள்.

    ReplyDelete
  7. //அன்புடன் அருணா said...
    ஏதோ ஒன்று மிஸ்ஸிங்க்!//

    என்னவென்று சொன்னா மாத்திடுவோம்

    ReplyDelete
  8. //ஹேமா said...
    உண்மை உரைக்கிறது வார்த்தைகள்.//

    நன்றி ஹேமா

    ReplyDelete
  9. சார்..அருமை..கவிதை வழி நல்ல செய்தி..:))

    ReplyDelete
  10. நெஞசைத்தொடும் கவிதை.

    ReplyDelete
  11. நல்லா இருக்கு ஐயா

    ReplyDelete
  12. //பலா பட்டறை said...
    சார்..அருமை..கவிதை வழி நல்ல செய்தி..:))//

    நன்றி பலா பட்டறை

    ReplyDelete
  13. //கண்ணகி said...
    நெஞசைத்தொடும் கவிதை.//

    நன்றி கண்ணகி

    ReplyDelete
  14. //அக்பர் said...
    அருமையான கவிதை.//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி பின்னோக்கி

    ReplyDelete