Tuesday, February 9, 2010

நீதி வழங்குவது யார்?


பாய் விரித்து

பணம் பெற்று அணைப்போரை

பிணம் என்கிறான் வள்ளுவன்

பணம் பெற்று

வாக்களிப்போரை

என்னவென்பது?


2)விளக்குகள் அணைவதில்லை

திரியை தீண்டிவிடுவோரும்

எண்ணெய் ஊற்றுவோரும்

இருக்கின்றவரை


3)அரசியல்வாதிக்கு

இதய நோயாம்

அவனுக்கு ஏது இதயம்


4)காற்றடித்தது

தூசு பறக்கிறது

மலை அப்படியே இருக்கிறது


5) நீதி வழங்குமுன்

நீதிபதி சென்ற இடம்

நீதிமன்ற வளாக

நீதி வழங்கும்

நித்ய வினாயகரைத் தேடி

15 comments:

  1. அருமையான வைர வரிகள்.

    ReplyDelete
  2. திரியைத் தூண்டிவிடுவோரும்?.. நல்லாருக்கு

    ReplyDelete
  3. தூண்டிவிடுவோர்..என்பது சரியானதே..ஆனால்..தூண்டுகையில்..திரி சற்று அதிகமாக வெளியேறி சுடரின் அளவு அதிகரிக்கக்கூடும். ஆனால் சாதாரணமாக அத் திரியை..தீண்டினால்..(தொட்டாலே)திரி சிறிது முன்னேறும் என்பதாலேயே அதை எழுதினேன்.மேலும் தீண்டுதல் என்று போடும்போது வேறு ஒரு அர்த்தமும் வருகிறதை கவனிக்கவில்லையா பாலா..

    ReplyDelete
  4. நல்லாருக்கு சார்..

    ReplyDelete
  5. //வித்யா said...
    நல்லாருக்கு சார்..//


    நன்றி வித்யா

    ReplyDelete
  6. அது மக்களோட குணம்ன்னு சொல்லலாமா சார்.

    லஞ்சம் இந்தியாவின் தேசிய வியாதி.

    கவிதைகள் அனைத்தும் அருமை சார்.

    ReplyDelete
  7. கவிதையிலும் நீதி பிறழாமல் செங்கோல் ஆட்சி செய்கிறதே !!

    அவன் பார்வை அவளை நோக்கி ...
    என் பார்வையோ எங்கே ...
    தட்டுதடுமாறி யாராவது
    உதவி செய்ய மாட்டாங்களா
    என்ற எண்ணத்தோட ....

    ReplyDelete
  8. //அக்பர் said...
    அது மக்களோட குணம்ன்னு சொல்லலாமா சார்.

    லஞ்சம் இந்தியாவின் தேசிய வியாதி.

    கவிதைகள் அனைத்தும் அருமை சார்.//

    வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி அக்பர்

    ReplyDelete
  9. //Sangkavi said...
    நல்லாருக்கு....//

    நன்றி sangkavi

    ReplyDelete
  10. வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி starjan

    ReplyDelete
  11. Unga blog romba nalla iruku
    (`*•.¸(`*•.¸ ¸.•*´)¸.•*´)

    Make Money Online - Visit 10 websites and earn 5.5$. Click here to see the Proof

    Download Youtube Videos free Click here

    தினசரி 10 இணையதலங்களை பார்பதான் மூலம் இணையதளத்தில் 5$ சம்பாதிக்கலாம். நன் இந்த இனையதளம் மூலம் 5$ பெற்றேன். அதற்கான ஆதாரம் இந்த தலத்தில் உள்ளது. Click Here

    ReplyDelete
  12. /அரசியல்வாதிக்கு

    இதய நோயாம்

    அவனுக்கு ஏது இதயம்/

    அருமை

    ReplyDelete