Friday, February 12, 2010

வாடா மலர் (காதலர் தின ஸ்பெஷல்)


1)தங்கமானவளை நம்பாதே

செம்பு போன்றவளை நம்பு

அவளிடம் தான்

கலப்படம் இல்ல



2) இன்று பூத்து

நாளை வாடிவிடும்

மலரல்ல காதல்

சாகாவரம் பெற்ற

வாடா மலர் அது


3)ஊரறியாமல்

சன்னல் வழியே காதலியுடன்

உரையாடுவதாக எண்ணாதே

எதிர் சன்னல் வழியே

ஊர் உன்னைப் பார்த்துக் கொண்டிருக்கிறது


4)நீ நடக்கையில்

உன் கொலுசு சப்தமும்

உன்னைக் காதலிக்கிறேன்

உன்னைக் காதலிக்கிறேன் - என

உன்மத்தம் பிடித்து உளருகிறது


5)கவிதை என்றால்

என்ன என அறியாதவன்(ள்)

உன்னை காதலிக்க ஆரம்பித்ததும்

எழுதித் தள்ளுகிறேன்

கவிதை என்ற பெயரில்


6)நான் அன்பானவள்

நான் அன்பானவள்

சொல்லிக் கொண்டே இராதே

செயலில் காட்டு

16 comments:

  1. அழகான ஆழமான வரிகள்...

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி அத்திரி

    ReplyDelete
  3. காதலர்தினக் கவிதைகள் கலக்கல்தான்.

    ReplyDelete
  4. கவிதைகள் அனைத்தும் நல்லாயிருக்கு சார்.

    ReplyDelete
  5. "இன்று பூத்து

    நாளை வாடிவிடும்

    மலரல்ல காதல்

    சாகாவரம் பெற்ற

    வாடா மலர் அது"

    வார்த்தை விளையாட்டு அருமை.

    ReplyDelete
  6. அருமையான கவிதை வரிகள் டிவிஆர் சார்

    /// இன்று பூத்து

    நாளை வாடிவிடும்

    மலரல்ல காதல்

    சாகாவரம் பெற்ற

    வாடா மலர் அது ///

    வாடா மல‌ருக்கு இப்படியும் ஒரு கதை உண்டோ ...

    ReplyDelete
  7. //இய‌ற்கை said...
    super o super:-))//

    நன்றி Raji

    ReplyDelete
  8. //அக்பர் said...
    கவிதைகள் அனைத்தும் நல்லாயிருக்கு சார்.//

    நன்றி அக்பர்

    ReplyDelete
  9. //Madurai Saravanan said...
    vaata malar. arumai . kavithaiyil kaathal manakkuthu.//

    வருகைக்கு நன்றி Saravanan

    ReplyDelete
  10. //அபுல் பசர் said...
    வார்த்தை விளையாட்டு அருமை.//

    நன்றி அபுல் பசர்

    ReplyDelete
  11. //Starjan ( ஸ்டார்ஜன் ) said...
    அருமையான கவிதை வரிகள் டிவிஆர் சார்//


    நன்றி Starjan

    ReplyDelete