
தமிழகம்,கேரள மாநிலத்தின் மலபார்,ஆந்திராவின் கடற்கரைப் பகுதிகள் மற்றும் ராயல்சீமா,கர்நாடகாவின் பெல்லாரி,தெற்கு கர்நாடகம்,உடுப்பி ஆகியவை இணைந்து சென்னை மாகாணமாய் இருந்தது.1670ல் ஒரே ஒரு செயலாளர் தலைமையில் தொடங்கப்பட்ட தலைமைச் செயலகம் 1920ல் சற்று விரிவுப் படுத்தி 6 துறைகளும்..ஒவ்வொன்றிற்கும் ஒரு செயலாளர்களும் நியமிக்கப் பட்டனர்.1920ஆம் ஆண்டுதான் முதன் முதலாக தேர்தல் நடத்தப் பட்டு சட்டப் பேரவை அமைக்கப் பட்டது.அப்போது பேரவையின் ஆட்சிக் காலம் 3 ஆண்டுகளாய் இருந்தது.132வ் உறுப்பினர்களில் 34 பேர் ஜனாதிபதியால் நியமிக்கப் பட்டனர்.1937ல் சட்டப்பேரவை 215 உறுப்பினர்கள் ஆனது.மேலவையில் 56 உறுப்பினர் இருந்தனர்.
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் 1947-49 களில் சென்னை மாகாண முதலமைச்சராய் இருந்தவர்.இவருக்கு முன் நீதிக்கட்சியைச் சேர்ந்த ஏ.சுப்பராயலு,பனகல் அரசர்,முனுசுவாமி நாயுடு,ராமகிருஷ்ண ரங்கா ராவ்,பி.டி.ராஜன் ஆகியவர்கள் முதல்வராக இருந்தார்கள்.பி.சுப்பராயன் சுயேச்சை உறுப்பினரும் 1926ல் முதல்வராய் இருந்தார்.
பின்னர் 1937ல் ராஜாஜி..சென்னை மாகாண முதல்வர் ஆனார்..1946ல் டி.பிரகாசமும்,1947ல் ஓமந்தூராரும் முதல்வர்கள்.இவர்கள் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்தவர்கள்.
ஓமந்தூரார்..தமிழ்நாடு என்று பெயரிடப்படுவதற்கு முன்..சென்னை மாகாணமாய் இருந்தகாலத்தில்..பத்தாவது முதலமைச்சராய் இருந்தவர்.1947ல் காமராஜரின் ஆதரவோடு முதல்வரானார்.முன்னதாக ஜஸ்டிஸ் கட்சி 1921ல் பெண்களுக்குத் தேர்தலில் வாக்களிக்கும் உரிமை வழங்கிய சட்டத்தை நிறைவேற்றியது.பின் 1921ல் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்கள் வாழ்வில் வகுப்புவாரி பிரதிநிதித்துவ ஆணையை நிறைவேற்றியது.
1947ல் ஓமந்தூரார்..ஆட்சியில்..எல்லாஜாதியினரும் கோயில்களுக்குள் சென்று வழிபடும் சட்டம், தேவதாஸி முறை ஒழிப்பு ஆகிய சட்டங்கள் உருவாக்கியது இவரது சாதனைகள் எனலாம்.சென்னை மாகாண அரசுக்கான கோபுர சின்னத்தை ஏற்படுத்தியவரும் இவரே..ஒரு குறிப்பிட்ட மதம் தொடர்பான சின்னம் இருக்கக் கூடாது என எதிர்ப்புகள் இருந்தும்,,அந்த விவகாரத்தை புத்திசாலித் தனமாக கையாண்டார்.இன்றும் அந்தச் சின்னமே தமிழக அரசின் சின்னமாய் இருந்து வருகிறது.(ஸ்ரீவில்லிபுத்தூர் கோவில் கோபுரம் அது)
இவர் பெயர் கொண்ட ஓமந்தூரார் தோட்டத்தில்தான் புதிய சட்டசபை வளாகம் கட்டப்பட்டுள்ளது.
(சட்டசபை தொடரும்)
அரிய தகவல்கள் சார். நன்றி.
ReplyDeleteநன்றி Bala
ReplyDeleteஅருமையான தகவல்கள். பகிர்வுக்கு நன்றி டிவிஆர் சார்.
ReplyDeleteவருகைக்கு நன்றி Starjan
ReplyDeleteஅரிய தகவல்கள் நன்றி சார்.
ReplyDeleteவருகைக்கு நன்றி அக்பர்
ReplyDelete:) :)
ReplyDeleteவருகைக்கு நன்றி doctor
ReplyDeleteHello Friend, Hope everything is fine.
ReplyDeleteI am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My research topic is "Bloggers, Internet users and their intelligence". In connection with my research I need your help. If you spare your time, I will be sending the research questionnaire's to your mail Id. You can give your responses to the questionnaire. My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose. Please reply. Thank you
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
(Pls ignore if you get this mail already)
அரிய தகவல்கள். தொடருங்கள். வாழ்த்துகள்
ReplyDeleteவருகைக்கு நன்றி Uzhavan
ReplyDeleteஇரண்டாம் பாகத்திற்கு காத்திருக்கிறோம்..,
ReplyDeleteவருகைக்கு நன்றி SUREஷ் (பழனியிலிருந்து)
ReplyDelete