Saturday, March 6, 2010

செய்நன்றி




கரையோரம்

கடலை வெறித்து நிற்கிறேன்

என்னால் இனி

எப்பயனும் இல்லையாம்

இவ்வளவு நாட்கள்

என் உழைப்பை

நொடியில் மறந்தனர்

என்னைப் போன்றோர்

கரையில் நிற்கக் கூடாதாம்

நீரில் பயணிக்க வேண்டுமாம்

என்னுடன் பயணித்த நாட்களை

என்னால் உயிர் காப்பாற்றப் பட்டதை

எல்லாம் மறந்தனர்

செய்நன்றி கொன்றவர்கள்

15 comments:

  1. நச்
    நச்
    நச்சினார்க்கினியர்

    ReplyDelete
  2. ஏதாவது பணி நிறைவு விழாவுக்கு சென்றிருந்தீர்களா..,

    ReplyDelete
  3. அருமை... அருமை..

    உலகம் இவ்வளவுதான் என்பதை சொல்லாமல் சொல்லிவிட்டீர்கள்..

    கவிதையைப் படிக்கும் போது இறைச்சிக்காக அடிமாட்டை விற்பது ஞாபகத்திற்கு வருவது தவிர்க்க இயலவில்லை.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    Sangkavi
    goma
    அக்பர்
    SUREஷ் (பழனியிலிருந்து)

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி
    இராகவன் நைஜிரியா
    பா.ரா.
    Bala
    Madurai saravanan

    ReplyDelete
  6. இதுதான் உலகம்... இதுதான் வாழ்க்கை...

    ஏற்றிவிடும் ஏணியை யாரும் நினைப்பதில்லை!

    அருமை அய்யா!

    பிரபாகர்.

    ReplyDelete
  7. பலமுறை பார்த்தது :)))

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி
    பிரபாகர்
    ரவி

    ReplyDelete
  9. நல்ல கவிதை..........

    நம்ம பக்கமும் வாங்க........

    ReplyDelete