Monday, December 27, 2010

வாய் விட்டு சிரிங்க..

தலைவர்- ஸ்பெக்ட்ரம் ஊழல் நாட்டுக்கு இழப்பு..நாட்டுக்கு இழப்பு இல்லை ன்னு இரண்டுவிதமா பேச்சு தயாரிக்கச் சொல்லியிருக்கார்
ஏன்?
ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி, எதிர்க்கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசலாமேன்னு தான்

2)என் பெண்ணை கல்யாணம் செய்துக் கொடுத்தப்போ கண் கலங்காம பாத்துப்பேன்னு சொன்னதை நம்பினேன் மாப்பிள்ள..கடைசியிலே வெங்காயம் வாங்காம இருக்க நீங்க போட்ட ப்ளான் அது ன்னு தெரியலை

3)நீதிபதி- (குற்றவாளியிடம்) உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி- வேணாங்க..பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணக்கு ஏற்பாடு செய்யுங்க அது போதும்

4)நீதிபதி தன் தீர்ப்பைப் படிச்சுட்டு தானே ஏன் கண்ணீர் வடிக்கிறார்
நியாயமான் தீர்ப்பு வழங்க முடியாமல் தன் கைகள் கட்டுப் போடப்பட்டதை எண்ணி நீதிதேவதை முன் கண்ணீர் விடுகிறார்

5)தொண்டர்களே! உஷாராய் இருங்கள்..எதிர்க்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்' என்கிறார்கள்..இந்த உலகத்தை அபகரித்துச் செல்ல அவர்கள் போடும் திட்டம் இது.

6)எங்க தலைவர் மாநில பிரச்னைகள் குறித்து மத்திய அரசுக்கு 1600 கடிதங்கள் எழுதியுள்ளார்..
எங்க தலைவர் மாநில அரசைக் கண்டித்து 1601 ஆர்ப்பாட்டங்கள் நடத்தியுள்ளார்

7)டாக்டர்..மாநில பிரச்னைகள் குறித்து..நான் நாளை உண்ணாவிரதம் இருக்க ஆரம்பிக்கப் போகிறேன்..என் உடல் சக்திக்கு ஏதேனும் மாத்திரைகள் கொடுங்கள்..
இந்த மாத்திரையை தினமும் காலை, மாலை சாப்பிடுங்கள்
சாப்பாட்டுக்கு முன்னரா..சாப்பாட்டுக்கு பின்னரா

23 comments:

  1. //நண்டு @நொரண்டு -ஈரோடு said...
    ஹா ....ஹா ....ஹா ....//


    சிரித்ததற்கு நன்றி நண்டு @நொரண்டு

    ReplyDelete
  2. நீண்ட நாட்கள் கழித்து நம்ம வலைப்பூ பக்கம் வந்ததற்கு நன்றி பா.ரா.

    ReplyDelete
  3. உண்மைகள் சில சமயங்களில் பயங்கர சிரிப்பை வரவழைக்குதுங்க..

    1,3,4, 5,6,7 - நடப்பதற்கு வாய்பில்லை என்று சொல்ல முடியாது.

    ReplyDelete
  4. //இராகவன் நைஜிரியா said...
    உண்மைகள் சில சமயங்களில் பயங்கர சிரிப்பை வரவழைக்குதுங்க..

    1,3,4, 5,6,7 - நடப்பதற்கு வாய்பில்லை என்று சொல்ல முடியாது//


    வருகைக்கு நன்றி..
    அது சரி..எங்க ரொம்ப நாட்களாக ஆளை நம்ம வலைப்பூ பக்கம் காணோம்

    ReplyDelete
  5. சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த விசயங்கள்.

    ReplyDelete
  6. அட...நாட்டு நடப்பில நகைச்சுவைகள்.சில சமயம் இப்பிடித்தான் நடக்குது !

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி சிநேகிதன் அக்பர்

    ReplyDelete
  8. இப்பல்லாம் பெப் கூட:))

    ReplyDelete
  9. சூப்பர் ஜோக்ஸ் வாழ்த்துக்கள் குமுதம் இதழுக்கு அனுப்புங்க

    ReplyDelete
  10. அய்யா.. கலக்கலான சிரிப்பு வெடிகள்..

    ReplyDelete
  11. நன்றி சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete
  12. வருகைக்கு நன்றி க.பாலாசி

    ReplyDelete
  13. //நீதிபதி- (குற்றவாளியிடம்) உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
    குற்றவாளி- வேணாங்க..பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணக்கு ஏற்பாடு செய்யுங்க அது போதும்



    அருமை

    ReplyDelete
  14. நகைச்சுவை நல்லாயிருக்கு.

    ReplyDelete
  15. உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!

    http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html

    ReplyDelete
  16. //எம் அப்துல் காதர் said...
    உங்களுக்கு அவார்ட் கொடுத்திருக்கிறேன். பெற்றுக் கொள்ளுங்கள். நன்றி!!

    http://mabdulkhader.blogspot.com/2010/12/blog-post_26.html//



    நன்றி அப்துல் காதர்

    ReplyDelete