Tuesday, February 22, 2011

திருமாவளவனுக்கு ஒரு கேள்வி

பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்களை கலந்து கொள்ள சென்ற தன்னை கொழும்பு விமானநிலையத்தில் தடுத்தி மீண்டும் திருப்பி அனுப்பிய இலங்கையைக் கண்டித்து, சென்னையில் அந்நாட்டு தூதரகத்தை முற்றுகையிட்ட திருமாவளவன் கைது செய்யப்பட்டார்.

விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன் தாயார் பார்வதி அம்மாள் இறுதிச் சடங்கில் பங்கேற்க விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் அவரது தனிச் செயலாளர்கள் மடிப்பாக்கம் வெற்றிச் செல்வன், இளஞ்சேகுவாரா ஆகியோர் இலங்கை சென்றனர்.

அவர்களை வல்வெட்டித் துறைக்கு அனுப்ப மறுத்து திருப்பி அனுப்பிவிட்டனர்.
திருமாவளவன் நிருபர்களிடம் கூறுகையில், "நான் பார்வதி அம்மாள் இறுதி சடங்கில் கலந்து கொள்ளவிடாமல் இலங்கை அரசு தடுத்ததற்கு மத்திய அரசுதான் காரணம். ஒரு எம்.பி.யை திருப்பி அனுப்பியது வெட்கக்கேடானது. எனவே மத்திய அரசு இலங்கை அரசை கண்டிக்க வேண்டும். அதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சியினரின் போராட்டம் தொடரும்.

சென்னையில் உள்ள இலங்கை தூதரகத்தை மூட வேண்டும். என்னை திருப்பி அனுப்பியதன் மூலம் இந்தியாவை இலங்கை அரசு அவமதித்துள்ளது...", என்றார்.
  திருமாவளவனுக்கு ஒரு கேள்வி

மத்திய அரசை குறைசொல்லும் இவர் அவர்கள் இணைந்த கூட்டணி யில் 
இருந்து  வெளியே வருவாரா ?

27 comments:

  1. கேள்வி கேக்க வேற ஒரு நல்ல ஆள் கிடைக்கலையா உங்களுக்கு!!!?

    ReplyDelete
  2. நல்ல கேள்விதான்..
    இவரே மத்திய அரசில் இருந்து கொண்டு மத்திய அரசு தான் காரணம் என்பது நகைப்பிற்குரியது..

    ReplyDelete
  3. ///(உதா. பன்னிகுட்டி, கோமாளி, அஞ்சா சிங்கம், ரொம்ப நல்லவன்.. பட்டாபட்டி.. டெரர்.. சேட்டைக்காரன்.. ஓட்டவடை)///////

    என்ன இது தெரிந்து கொள்ள கவி‌தை வீதி வாங்க...

    ReplyDelete
  4. அரசியல்வாதிகள் அனைவரும் ஓட்டுப்பொறுக்கிகள் தானே

    ReplyDelete
  5. //ஈரோடு கதிர் said...
    கேள்வி கேக்க வேற ஒரு நல்ல ஆள் கிடைக்கலையா உங்களுக்கு!!!?//

    :)))

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி .செந்தில்குமார்

    ReplyDelete
  8. பதிவு அருமை.டி வி ஆர் . கதிரும்., செந்தில் குமாரும் சொன்னதும் சரிதான்..

    ReplyDelete
  9. எல்லாம் நாடகம் மக்கா....

    ReplyDelete
  10. அய்யாங். இது போங்காட்டம் சார். அவங்கள நடவடிக்கை எடுக்க சொன்னா நீங்க கட்சியை கலைக்க வழி சொல்றீங்க:)). திருமா அப்புறம் வெறும் மா தான்.

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி தேனம்மை லெக்ஷ்மணன்

    ReplyDelete
  12. இதற்காக ஒரு பதிவா? நீங்கள் இன்னமும் கற்றுக்கொள்ளவேண்டும் தோழரே! திருமாவளவன் பற்றி அறிந்தவர்கள் எவரும் இப்படி ஒரு பதிவை எழுதவே மாட்டார்கள். அது ஒரு கிரிமினல் வேஸ்ட் என்பதை அறிவார்கள். அதற்க்கு அவர் தகுதியானவரும் அல்ல என்பதே உண்மை.

    ReplyDelete
  13. வருகைக்கு நன்றி கக்கு - மாணிக்கம்

    ReplyDelete
  14. அது மாணங்க்கெட்டக் கூட்டணி கதிர் சொல்வதுப்போல ஆள் கிடைக்கலையா..?

    ReplyDelete
  15. வருகைக்கு நன்றி மதுரை சரவணன்

    ReplyDelete
  16. இந்தாளை தமிழன் எப்போதோ அடையாளம் கண்டு கொண்டான்

    ReplyDelete
  17. //கேள்வி கேக்க வேற ஒரு நல்ல ஆள் கிடைக்கலையா உங்களுக்கு!!!?//

    அதானே..

    ReplyDelete
  18. அவருக்கு தேவை விளம்பரம் ,அது அவருக்கு கிடைத்தது .அங்கேயே திரும்பிப் போக மாட்டேன் என்று போராட வேண்டியது தானே ?

    ReplyDelete
  19. நல்லா கேக்கறீங்கய்யா டீட்டெய்லு...

    அதுக்கும் முன்னாடி என் கேள்வி. இப்போ மட்டும் இந்திய இறையாண்மைக்கு அவமதிப்புங்குறாரே...இந்தியா மேல இவருக்கு மரியாதை இருக்குதா என்ன?

    ReplyDelete
  20. வருகைக்கு நன்றி ஆர்.கே.சதீஷ்குமார்

    ReplyDelete
  21. வருகைக்கு நன்றி கே.ஆர்.பி.செந்தில்

    ReplyDelete
  22. வருகைக்கு நன்றி பூங்குழலி

    ReplyDelete