Thursday, February 17, 2011

வழக்கு





தாத்தா சொத்தை

அப்பா விற்று

உருவாக்கினார்

அறிவாளியாய் அவனை

வளர்ந்ததும்

வேலை கிடைத்ததும்

காதல் திருமணமானதும்

தனக்கு சேர வேண்டிய

சொத்தை விற்றதற்காக

நீதிமன்றத்தில்

வழக்குத் தொடர்ந்தான்

அப்பா மீது

14 comments:

  1. நல்ல கவிதை...

    // உறுவாக்கினார் //

    உருவாக்கினார்...

    ReplyDelete
  2. இப்படியும் கூட மகன்கள் இருக்கிறார்களா...!!!!!!!!!

    வழக்கில் அந்த உத்தமபுத்திரன் ஜெயித்தானா?????

    ReplyDelete
  3. இப்படி நிறைய பேர் இருக்காங்க..

    ReplyDelete
  4. ஒர் உண்மையை கவிதையாய் சொல்லியிருக்கிரீர்கள்.. அருமை ..

    ஓட்டும் போட்டுட்டோம்ல்ல...

    ReplyDelete
  5. இது கற்பனையா, இல்லை உண்மை சம்பவமா?
    :-(

    ReplyDelete
  6. வருகைக்கு நன்றி பிரபாகர்

    ReplyDelete
  7. வருகைக்கு நன்றி சங்கவி

    ReplyDelete
  8. வருகைக்கு நன்றி sakthistudycentre-கருன்

    ReplyDelete
  9. // Chitra said...
    இது கற்பனையா, இல்லை உண்மை சம்பவமா?
    :-(

    //
    கற்பனை

    ReplyDelete
  10. நாட்டில் நடக்கும் அருமை..
    இப்படிதான் சில பிள்ளைகள் இருக்கிறது..
    என்ன செய்ய..
    கவிதை அருமை..

    ReplyDelete
  11. வருகைக்கு நன்றி # கவிதை வீதி # சௌந்தர்

    ReplyDelete
  12. இன்றைய நிதர்சனம் கவிதை !

    ReplyDelete