அவ்வப்போது பெட்ரொல் விலையேறுகையில்..ஆளும் கட்சித் தவிர வேறு எதிர்க்கட்சிகள் அதை எதிர்ப்பதும்...மூன்று ரூபாய் ஏறினால்..மைய அரசு 25 காசுகள் அப்போது குறைப்பதும்..கட்சிகள் அடங்குவதும்...சாதாரண குடிமகன் இதயம் கண்ணிர் வடிப்பதும்..இதுதான் தருணம் என ஆட்டோக்கள் தங்கள் குறைந்த பட்ச ரேட்டை மக்களிடம் ஐந்து ரூபாய் ஏற்றிவிடுவதும் வாடிக்கை ஆகிவிட்டது.
ஆனால்..அவ்வப்போது ரிசர்வ் வங்கி ரெபோ ரேட்டை ஏற்றுகையில் வங்கிகளின் வாகனக் கடன், வீட்டுக் கடன் .25 ஏறுவதும்..அது நம்மைப் பாதிக்காது என கடன் வாங்கியவர்கள் எண்ணுவது போல இருப்பது..அவருக்கு நீண்ட கால அடிப்படையில் எவ்வளவு கடன் அளவு ஏறுகிறது தெரியுமா?
உதாரணமாக 15 ஆண்டுகள் தவணையில் வீட்டுக் கடன் வாங்குகிறார் ஒருவர் என்றால் அவரது கடைசித் தவணை 2026 செப்டம்பரில் முடியும்.ஆனால் வட்டிவிகிதம் ஏறுகையில் தவணை கட்ட வேண்டிய பணத்தை ஏற்றாமல்..வங்கிகள் தவணை முடியும் காலத்தை மாற்றி அமைக்கின்றன.அதாவது ஒவ்வொருமுறை வட்டி விகிதம் ஏறும் போதும் கட்ட வேண்டிய தவணைக் காலம் ஆறு முதல் பத்து..பன்னிரெண்டு மாதங்கள் தள்ளிப் போகிறது.
உழுபவன் கணக்குப் பார்த்தால் உழக்குக் கூட மிஞ்சாது என்பார்கள்..
அதுபோல பாவம்..வங்கியில் வீட்டுக் கடன் வாங்குபவர்கள் கணக்குப் பார்த்தால் ஒரு லட்சம் கடனுக்கு வட்டி தவணை முடிகையில் மொத்தமாக கிட்டத்தட்ட இரண்டு லட்சம் கட்டியிருப்பார்.
வாகனக் கடனும் இப்படியேத்தான்..
பிறந்தாலும்.. மத்தியத் தரமான குடும்பத்தைல் பிறக்கக் கூடாது..
அப்படியே பிறந்தாலும்..வங்கி என்றாலும்...ஆசைப்பட்டு..கடனை வாங்கக் கூடாது..
என்னவோடா மாதவா. சொல்ல நினைத்தேன்..சொல்லிவிட்டேன்.

கல்விக்கடன் பெற்ற என்னைப் போன்ற மாணவர்களுக்கு இதுப் எப்படி பாதிக்கும்.
ReplyDeleteகல்விக் கடன்கள் பாதிக்கப்படாது
ReplyDeleteஉங்கள் தகவலுக்கு நன்றி.
ReplyDeleteநன்றி,
கண்ணன்
http://www.tamilcomedyworld.com