Friday, November 18, 2011

பேருந்து கட்டண உயர்வுக்கு கலைஞரே காரணம் - மக்கள்




தமிழகத்தில் பேருந்து கட்டணம், பால்விலை மற்றும் மின் கட்டணங்கள் ஒரே சமயத்தில் ஏற்றப்பற்றுள்ளது போல இதுவரை நடந்ததில்லை எனவும், இது சம்பந்தமாக ஜெ புது வரலாறு படைத்துள்ளதாக வரலாற்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

இந்நிலையில்..பேருந்து கட்டணங்கள் ஏற..முழுக் காரணம் கலைஞரே என மக்கள் கருதுகின்றனர்.ஒரு சாரார் கலைஞர் மீது அதிருப்தியையும் தெரிவிக்கின்றனர்.

அவர்கள் கூறுகையில்,'கலைஞர் ., அவரது ஆட்சியில் பேருந்து கட்டணத்தை உயர்த்தவில்லை..அப்படி அவர் உயர்த்தியிருந்தால்..கலைஞர் செய்த செயல் அது என ஜெ இன்று அந்த உயர்வை திரும்பப் பெற்றிருப்பார் எனக் கூறுகின்றனர்.

ஆகவே இந்த ஏற்றத்திற்கு..முழு பொறுப்பும் கலைஞரே சேரும் என்கின்றனர் மக்கள்.


5 comments:

  1. முடியல சாமி...
    வயிறு வலிக்கு ஏதாவது மாத்திரை இருந்தா சொல்லுங்க
    "தமிழர்களே, தமிழர்களே, என்னை கடலில் தூக்கி போட்டாலும்..."

    ReplyDelete
  2. எது எப்படியிருந்தாலும்..

    விலையேற்றத்தாலும் சில நன்மைகள் ஏற்பட்டிருக்கிறது அன்பரே..

    காணத் தங்களை அன்புடன் அழைக்கிறேன்..


    http://gunathamizh.blogspot.com/2011/11/blog-post_733.html

    ReplyDelete