வாழ்த்துச் சொல்லி
பூங்கொத்து கொடுக்கையில்
விரல்கள் தீண்டின
பூவினும் மெல்லிய
மலர் ஒன்றை
2) உனக்கு என்ன வேண்டும்
என்றேன்
கூலிங் கிளாஸ் என்றாய்
ஏறிட்ட என்னிடம்
என்னை நீ பார்க்கையில்
நீ அறியாது
உன்னை நான் பார்க்கலாமே
என்றன உன் கண்கள்
3)பிரியும் நாள்
கண்களின் நீர் துடைத்த
கைக்குட்டையை யாசித்தேன்
வரும் நாட்களில்
என் கண்ணீர் துடைக்க
4)தினமும் ஒருமுறை
உன்னை தழுவிட
அனுமதித்தாய்
அப்போது உணரவில்லை
சாவையும் ஒருநாள்
தழுவிட வேண்டுமென

முடிவில் வரிகள் மனதை நெகிழ வைத்தன... (TM 2)
ReplyDeleteVarikal anaithum alakaka korkkappaddullthu
ReplyDelete