Showing posts with label ஒரு பக்கக் கட்டுரை-TVR. Show all posts
Showing posts with label ஒரு பக்கக் கட்டுரை-TVR. Show all posts

Thursday, July 28, 2016

ஒரு பக்கக் கட்டுரைகள்- 2

நலம் நலம் அறிய அவா>>

பொதுவாக நம்மில் பலர் நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒருவரைப் பார்த்தால்'என்னங்க பார்த்து ரொம்ப நாளாச்சு..
சௌக்கியமா?'என்று கேட்போம்.
அவரும் 'நான் நல்லாயிருக்கேன்..நீங்க எப்படி இருக்கீங்க?' என்பார்.உடனே நாம் ' நான் நல்லாயிருக்கேன் 'னு
சொல்ல மாட்டோம்.'ஏதோ காலம் ஓடிக்கிட்டு இருக்கு"என்போம்.
கல்யாண வீடுகளிலே ..கூட்டத்துக்கு நடுவே காதலர்கள் கண்ணாலேயே நலம் விசாரிப்பதுண்டு.
தில்லானா மோகனாம்பாள் படத்திலே சிவாஜி கையிலே கத்தி குத்துடன் நாதஸ்வரம் வாசிப்பார்.ரத்தம் வழியும்..
பத்மினி'நலம்தானா"என விசாரிப்பார்.சிவாஜியும் நலமாயில்லாவிட்டாலும் கண் அசைவிலேயே நலம் என்பார்.
காதல் கோட்டை படத்திலே காதலனும்,காதலியும்'நலம்..நலம் அறிய ஆவல்..நீ இங்கு நலமே..நான் அங்கு நலமா?"
என்று கேட்பார்கள்.அதாவது உன் நினைவு என்னிடம் நலமாய் இருக்கிறது..என் நினைவு உன்னிடம் நலமாய் இருக்கிறதா என்று அர்த்தம்.
மரணப்படுக்கையில் இருப்பவரைப் பார்க்க மருத்துவமனைக்கு போவோம்.அவருக்கு உடலில் உள்ள அத்தனை ஓட்டைகளிலும் tube செருகி இருப்பார்கள்.நாம் அவரைப் பார்த்து 'எப்படி இருக்கீங்க?' என்போம்.அவரும்
"நேற்று இருந்ததிற்கு இன்று பரவாயில்லை(??!!)"என்பார்.
பெரிசுகள் தினமும் பேப்பர் வந்ததும் பார்க்கிற முதல் செய்தி obituary coloumn தான்.தனக்குத் தெரிந்த யாராவது
மண்டையை போட்டு விட்டார்களா? என தெரிந்துகொள்ள ஆவல்
நான் எவ்வளவு சுயநலவாதி பார்த்தீர்களா?
என் பதிவை நீங்கள் படித்துக் கொண்டு இருக்கீங்க..உங்களை நான் நலம் விசாரிக்கலையே..
நலமாய் இருக்கிறீர்களா.

Monday, January 11, 2016

வாள்...வாள்..எனக் கத்துபவரா நீங்கள்?



அப்படிப்பட்ட ஒருவர் நோய்வாய்ப் பட்டார்.அவர் பார்க்காத வைத்தியம் இல்லை.

ஒருநாள் அவர் மனைவி அவரை ஒரு நல்ல வெட்னரி மருத்துவரைப் பார்க்கச் சொன்னாள்

'என்னது மிருக டாக்டர் கிட்டேயா? உனக்கென்ன மூளை கெட்டுப் போச்சா?'ன்னு சீறினான் கணவன்.

'எனக்கொண்ணும் மூளை கெட்டுப் போகலே! உங்களுக்குத்தான் எல்லாமே கெட்டுப் போய் கிடக்கு! காலங்காத்தாலே கோழி மாதிரி விடியறதுக்கு முன்னால எழுந்துக்கிறீங்க! அப்புறம் காக்காய் மாதிரி குளிச்சுட்டு, குரங்கு மாதிரி 'லபக் லபக்' னு ரெண்டு வாய் தின்னுட்டு, பந்தயக்குதிரை மாதிரி வேகமா ஓடி ஆஃபீசுக்கு போறீங்க.! அங்கே போய் மாடு மாதிரி உழைக்கறீங்க! உங்களுக்குக் கீழே வேலை செய்யறவங்க மேல கரடியா கத்தறீங்க! அப்புறம் ஆஃபீஸ் விட்டவுடனே, ஆடுமாடுங்க மாதிரி பஸ்ல அடைஞ்சு வீட்டுக்கு வர்றீங்க! வந்ததும் வராததுமா, நாள் பூரா வேலை செஞ்ச களைப்பில, நாய் மாதிரி என் மேல சீறி விழறீங்க! அப்புறம் முதலை மாதிரி ராத்திரி சாப்பாட்டை 'சரக் சரக்' ன்னு முழுங்கிட்டு, எருமை மாடு மாதிரி போய் படுத்து தூங்கறீங்க! மறுபடியும் விடிஞ்சா அதேமாதிரி கோழி கதைதான்! இப்படி இருக்கிறவ்ங்களை மனுஷ டாக்டர் எப்படீங்க குணப்படுத்த முடியும்? அதனால தான் சொல்றேன் நாளைக்கே ஒரு கால் நடை டாக்டரைப் போய்ப் பாருங்க" என்று ஒரே மூச்சில் சொல்லி முடித்தாள் மனைவி.

என்ன பதில் சொல்வதென்று தெரியாமல் கணவன் முழிக்க, - 'கோட்டான் மாதிரி முழிக்காதீங்க" என்றாள் மனைவி