Wednesday, August 12, 2009

கமல் பொன்விழாவும்..மறக்கமுடியா பாத்திரங்களும்..


தமிழ் திரை உலகில்..நடிப்பு ஒன்றையே முழு மூச்சாய் எண்னிய நடிகர் திலகத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஒருவரைத்தான் சொல்லமுடியும்.களத்தூர் கண்ணம்மா படத்தில் 50 வருஷங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமலஹாசன்..சிறுவன் கமலுக்கு ஏ.வி.எம்., சந்தர்ப்பம் கொடுத்தது என்றால்..அவரை நடன இயக்குநர் ஆக்கியது டேன்ஸ் மாஸ்டர் தங்கப்பன் அவர்கள்.அவர் வாலிப வயதை அடைந்ததும்..பாலசந்தர் அவர்களால் அரங்கேற்றம் படத்தில் சாதாரணமான ஒரு பாத்திரம் தரப்பட்டது.பின்..கமலின் திறமையை உணர்ந்த பாலசந்தர் தொடர்ந்து அவருக்கு..அவர்கள், மன்மத லீலை,அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள் ,மூன்று முடிச்சு என பல படங்களில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர் திறமையை வெளிக் கொணர்ந்தார்.பின்..கமலுக்கு எறுமுகம் தான்.

16 வயதினிலே சப்பாணி,கல்யாணராமன்,எல்லாம் இன்ப மயம்,கைதியின் டயரி,சிகப்பு ரோஜாக்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,சகலகலாவல்லவன்,மூன்றாம் பிறை, ராஜ பார்வை,இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான்,நாயகன்,மீண்டும் கோகிலா,வாழ்வே மாயம் என பல படங்களில் தன் திறமையைக் காட்டினார்.மறக்கமுடியா படங்கள் அவை.

ஆனாலும்..கமல் என்னும் நடிகரை நான் முழுமையாக ரசித்த படங்கள்..

சலங்கைஒலி - தனது நாட்டிய திறமையயும் இப்படத்தில் காட்டினார்.கிளைமாக்ஸ் காட்சியில்..கிணற்றின் மேல் நடனமாடும்..இவர் ..எங்கே கிணற்றில் விழுந்து விடுவாரோ என மனம் பதைபதைக்க வைத்தார்.

மகாநதி-கமலின் மாஸ்டர் ஃபீஸ் படம் இது..இன்று நினைத்தாலும் கல்கத்தாக் காட்சி கண்முன்னேயே நிற்கிறது.

அபூர்வ சகோதரர்கள் அப்புவை மறக்கமுடியுமா?

அன்பே சிவம்-இப்படத்தில் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது..வார்த்தைகளே இல்லை..விபத்தில்..முகமே மாற இழுத்து..இழுத்து பேசும் போது நமக்கு வாய் வலிக்கும்.கமல் நீ ஒரு பிறவி நடிகன் என்பதைச் சொன்ன படம் இது.

தேவர்மகன்- சிவாஜி பெரியதேவராக நடிக்க..கமல் கதாநாயகன்..குறை சொல்லமுடியா நடிப்பு..சொந்த குரலில் கமல் பாடிய..இஞ்சி இடுப்பழகி...கமலை சகலகலாவல்லுநராக ஆக்கியது.

விருமாண்டி-இப்படத்தை வெளியிடுவதற்குள்..எத்தனை இடையூறுகள்..எல்லாம் தாண்டி விருமாண்டியாக கண் முன்னே நின்றார்.

ஒரு படத்தின் நாயகன் பாதி படத்திற்கு மேல் பெண் வேடம் தாங்கி அதை வெற்றி படமாகவும் ஆக்கினார் எனில் அது கமல் மட்டுமே..படம் அவ்வை சண்முகி

இந்தியனையும்..இந்திய தாத்தாவையும் மறக்கமுடியுமா?

படம் முழுதும் வசனமே இன்றி..ஊமைப்படங்களாக முதன் முதல் திரைப்படங்கள் உருவானது என்பதை நாம் அறிவோம்..ஆனால்..கலைமேதை கமல் அவர்கள்..படம் முழுதும் வசனமே இல்லாது..ஆனால்..படத்தின் பெயரை பேசும்படம் எனக் கொடுத்து..வெற்றியடைய வைத்தார்.

மற்றும் நாயகன்,புன்னகை மன்னன்,ஆளவ்ந்தான்,சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் கமலின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்

கமல்..பல பரீட்சார்த்த படங்களை எடுத்து..கையை கடித்துக் கொண்டவர்.உதாரணத்திற்கு ஹே ராம்...குணா,நம்மவர்கள்.. சொல்லலாம்.

வசூல்ராஜா..மருத்துவர்களின் போராட்டங்களுக்குப் பின் வெளியானது.இப்படம் ஹிந்தியில் வந்த போது..கண்டனம் சொல்லாத மருத்துவர்கள்..தமிழில் வரும் போது வெகுண்டு எழுந்தது..கமலின் துரதிருஷ்டமே.

ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் சேர்ந்து ..மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது போன்று 17 படங்களில் நடித்துள்ளார்.

கமல் தன்னால் நகைச்சுவை படங்களிலும் பிரகாசிக்க முடியும்..என பல படங்களில் நிரூபித்திருந்தாலும்..சமீப காலங்களில் வந்த..மைக்கேல் மதன காமராஜன்,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்சதந்திரம்,மும்பை எக்ஸ்பிரஸ்,தெனாலி,சிங்காரவேலன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

கமலின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல் தசாவதாரம்..10 வேடங்களில் நடித்தார்.ஃபிளச்சரும்,பல்ராம் நாயுடுவும் இன்றும் நம் கண்முன்னே நிற்கிறார்கள்.

கமல் படங்களையும்..அவர் நடிப்பையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தால்...அதற்கு முடிவே இருக்க முடியாது..

அப்படிப்பட்ட உயர்ந்த மாபெரும் கலைஞன் மலையாளம்,ஹிந்தி படங்களிலும் திறமையைக் காட்டியுள்ளார்.

இன்று அக்கலைஞன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.

நேற்று சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் 1952ல் நடிக்க ஆரம்பித்து 1999 படையப்பாவரை 47 ஆண்டுகள் நடித்தார்.

இன்று கமல் என்ற கலைஞன் 1959ல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்து இன்று பொன்விழா கொண்டாடுகிறார்.

இரு மாபெரும் கலைஞனும் நம் காலத்தில் வாழ்ந்ததற்கு நாம் பெருமைப் படுவோம்.

கமல் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

இந்தியாவில் கலைஞர்கள் வாழும் போது சரியாக போற்றப்படுவதில்லை..என்ற கூற்றை பொய்யாக்கி..கமலின் திறமையை அரசு மதித்து..அவருக்கு உரிய மரியாதையை தரட்டும்..

வாழ்க கமல்..வளர்க அவர் கலைப்பணி..

(இப்பதிவிடும்போது நினைவிற்கு வந்த படங்களே பட்டியலிடப்பட்டுள்ளன..பல முக்கிய படங்கள் விட்டுப் போயிருக்கலாம்)

21 comments:

  1. வாழ்க கமல்..வளர்க அவர் கலைப்பணி..

    ReplyDelete
  2. வருகைக்கு நன்றி பிரியமுடன் பிரபு

    ReplyDelete
  3. கமல் ஒரு நடிகனாக மட்டுமல்லாமல், போலித்தனம் இல்லாத மனிதானகவும் எனக்கு மிகவும் பிடிக்கும்.

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    குடுகுடுப்பை
    ஜோ/Joe

    ReplyDelete
  5. \\நம்மவர்கள்.. \\

    இந்தப்படம் நம்மவர், கமலின் தயாரிப்பு இல்லை.


    \\சிவாஜி, படையப்பா வரை.\\

    சிவாஜியின் கடைசிப் படம் பூப்பறிக்க வருகிறோம் (அஜய், மாளவிகா நடிக்க வெங்கடேஷ் இயக்கியது)

    படையப்பா - ஏப்ரலிலும், இப்படம் செப்டம்பரிலும் வெளியானது.

    ஆனால் ரஜினி படம், வெற்றிப்படம் என்பதாலும்

    பராசக்தி முதல் படையப்பா வரை எனச் சொல்ல ரைமிங்காக இருப்பதாலும்
    பலரும் இதையே குறிப்பிடுகிறார்கள்.



    இங்கேயும் கமலுக்கு வாழ்த்துக்களைச் சொல்லிக்கொள்கிறேன்.

    பதிவிற்க்கு நன்றி டிவிஆர் சார்.

    ReplyDelete
  6. வருகைக்கும்..தகவலுக்கும் நன்றி முரளி

    ReplyDelete
  7. கமல் என்கிற மாபெரும் நடிகன் வாழ்ந்த களத்தில் தான் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

    ReplyDelete
  8. முரளி, நான் சொல்லவந்தது சிவாஜி 47 ஆண்டுகள் கலையுலகில் இருந்தார் என்பதுதான்.நான் சிவாஜி பற்றி எழுதி வரும் தொடரில் நீங்கள் சொல்லும் படம் பற்றி எழுதுவேன்

    ReplyDelete
  9. //sikkandar said...
    கமல் என்கிற மாபெரும் நடிகன் வாழ்ந்த களத்தில் தான் நானும் வாழ்கிறேன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்//

    வருகைக்கு நன்றி sikkandar

    ReplyDelete
  10. //மருதநாயகம் said...
    நல்ல பதிவு//

    நன்றி மருதநாயகம்

    ReplyDelete
  11. கமல் ஒரு சகாப்தம்

    சில படங்கள் தோல்வியடைந்தாலும் பேர் சொல்லும் பிள்ளை

    மக்கள் மனதில் தனி இடம் பிடித்தவர்

    ReplyDelete
  12. //அன்பே சிவம்-இப்படத்தில் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது..வார்த்தைகளே இல்லை..விபத்தில்..முகமே மாற இழுத்து..இழுத்து பேசும் போது நமக்கு வாய் வலிக்கும்.கமல் நீ ஒரு பிறவி நடிகன் என்பதைச் சொன்ன படம் இது.
    //
    http://www.payanangal.in/2008/09/12.html

    இப்படத்தில் கமலின் உழைப்பை அளவிட முடியாது.
    ஒரு காட்சியில் கமல் தரையில் படுத்திருப்பார். இரண்டு கால்களும் வேறு நீளத்தில் இருக்கும். என்னைக்கவர்ந்த காட்சி அது. உடல் ஊனமான பாத்திரங்களில் பலர் நடித்திருக்கலாம். ஆனால் படுக்கும் ஒரு காட்சியில் கூட இரு கால்களையும் வேறு நீளத்தில் இருக்கும் படி காட்டியது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

    ReplyDelete
  13. நீங்கள் பேசும் படம் பார்க்கவில்லையா ??

    மறந்துவிட்டீர்களா!!

    ReplyDelete
  14. //புருனோ Bruno said...
    நீங்கள் பேசும் படம் பார்க்கவில்லையா ??

    மறந்துவிட்டீர்களா!!//

    ஆஹா..எப்படியான படத்தை மறந்து விட்டேன்..பதிவிடுகையில் ஞாபகம் இல்லை டாக்டர்.
    வருகைக்கும்...தகவலுக்கும் நன்றி..பதிவில் சேர்த்து விட்டேன்.

    ReplyDelete
  15. சிப்பிக்குள் முத்து மற்றும் புன்னகை மன்னன் ஆகிய இரு முக்கிய படங்கள் விடுபட்டுவிட்டன

    ReplyDelete