அவன் அவளைக் காதலித்தான்.பணி நிமித்தம் சில காலம் அவளை பிரிய நேரிடுகிறது..அவளின் பிரிவு அவனை நெருப்பாய் சுடுகிறது.
அவன் திரும்ப வந்து அவளை அடையும் போது அவளுடன் சேர்ந்ததும் குளிர்ச்சியாய் இருக்கிறது.
அவளிடம் நெருப்பு உள்ளதாக எண்ணுகிறான்.ஆனால் இவ்வுலகில் உள்ள நெருப்பு அதன் அருகில் சென்றால் சுடும்..அதைவிட்டு நீங்கிச் சென்றால்..சுடாது..குளிர்ச்சி பெறலாம்.ஆனால் தன் காதலியிடம் உள்ள நெருப்போ..அத்தகையது அல்ல..அவளருகில் சென்றால் குளிர்கிறது..பிரிந்தால் சுடுகிறது..உலகத்தில் இல்லாத இத்தகைய அதிசயத் தீயை இவள் இந்த உலகத்திலிருந்து பெற்றிருக்க முடியாது.வேறு எந்த உலகத்திலிருந்து இந்த அற்புத நெருப்பை இவள் பெற்றாளோ அறியேன்..என வியப்படைகிறான்.
இதையே வள்ளுவர்..
நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
என்கிறார்.
ஒரு பொருளை உலகியலுக்கு மாறுபட்ட ஒன்று போல எடுத்துக் காட்டி அப்பொருளின் உண்மை இயல்பை புலப்படுத்துவது வள்ளுவரில் காணும் இலக்கிய அழகாகும்..
காமம் நெருப்புப் போல சுடுவது என்பதை இலக்கியத்தில் காணலாம்.ஆனால் வள்ளுவரோ காமத்தை உலகத்தில் இல்லாத ஒரு நெருப்பு என்று வியப்புச் சுவை அமைத்துக் காட்டுகிறார்.
அவன் திரும்ப வந்து அவளை அடையும் போது அவளுடன் சேர்ந்ததும் குளிர்ச்சியாய் இருக்கிறது.
அவளிடம் நெருப்பு உள்ளதாக எண்ணுகிறான்.ஆனால் இவ்வுலகில் உள்ள நெருப்பு அதன் அருகில் சென்றால் சுடும்..அதைவிட்டு நீங்கிச் சென்றால்..சுடாது..குளிர்ச்சி பெறலாம்.ஆனால் தன் காதலியிடம் உள்ள நெருப்போ..அத்தகையது அல்ல..அவளருகில் சென்றால் குளிர்கிறது..பிரிந்தால் சுடுகிறது..உலகத்தில் இல்லாத இத்தகைய அதிசயத் தீயை இவள் இந்த உலகத்திலிருந்து பெற்றிருக்க முடியாது.வேறு எந்த உலகத்திலிருந்து இந்த அற்புத நெருப்பை இவள் பெற்றாளோ அறியேன்..என வியப்படைகிறான்.
இதையே வள்ளுவர்..
நீங்கின் தெறுஉம் குறுகுங்கால் தண்ணென்னும்
தீயாண்டுப் பெற்றாள் இவள்
என்கிறார்.
ஒரு பொருளை உலகியலுக்கு மாறுபட்ட ஒன்று போல எடுத்துக் காட்டி அப்பொருளின் உண்மை இயல்பை புலப்படுத்துவது வள்ளுவரில் காணும் இலக்கிய அழகாகும்..
காமம் நெருப்புப் போல சுடுவது என்பதை இலக்கியத்தில் காணலாம்.ஆனால் வள்ளுவரோ காமத்தை உலகத்தில் இல்லாத ஒரு நெருப்பு என்று வியப்புச் சுவை அமைத்துக் காட்டுகிறார்.
குறள் விளக்கம் இனிமை
ReplyDeleteநன்றி Mrs.Dev
ReplyDelete:)
ReplyDeleteநன்றி கேசவன் .கு
ReplyDeleteஅழகாக விளக்கம் தந்திருக்கிறீர்கள்.வள்ளுவர் உங்களை வாழ்த்துவார்
ReplyDeleteஅழகான விளக்கம்f
ReplyDeleteநன்றி goma
ReplyDeleteநன்றி அக்பர்
ReplyDelete