Tuesday, April 13, 2010

நான் போலி இல்லை

வெளியே கிளம்பியதும்

குறுக்கே ஓடியது பூனை

சகுனம் சரியில்லை

சட்டெனக் கூறினாள் இல்லாள்

பாய்ந்து ஓடி வந்த நாயொன்று

பூனையைக் கவ்வ

சகுனம் சரியில்லைதான்

பூனைக்கு


2)கவிஞர்கள் அதிகமாகக்

கவிதைகளைப் படிப்பதால்

கவிஞர்கள் படிக்க

கவிதை ஒன்று எழுதிட்டேன்

கவிதை எப்படி என

கவிஞர்கள் படித்து

கவிதை வடிவிலேயே

கூறட்டுமே!


3)என்னை விமரிசிக்க

உரிமை உனக்கு

உண்டெனில்

உன்னை விமரிசிக்க

எனக்கும் உரிமை உண்டு


4)என்னைச் சுற்றி

ஆதரவு யாருமில்லை

ஏனெனில்

நான் போலியில்லை

40 comments:

  1. பூனை சகுனம், கவிஞருக்கே கவிதை, என்னை...உன்னையும், போலியல்ல!... எல்லாம் நல்லாருக்குங்கய்யா!

    பிரபாகர்...

    ReplyDelete
  2. ஐயா..
    ஹய்யா...
    மெய்யா?

    ReplyDelete
  3. அய்யோ ஒரு பூனை கொன்னுபோட்டீங்களே!!!!

    :)))))

    ReplyDelete
  4. அருமை.

    முதல் இரண்டும் பிடித்திருந்தது.

    ReplyDelete
  5. இரண்டு மூன்று வார்த்தைகள் டைப் செய்தவுடன் என்டர் கீ தட்டும் (கெட்ட) பழக்கம் உங்களுக்கும் உண்டா?

    ReplyDelete
  6. //Vidhoosh(விதூஷ்) said...
    ஐயா..
    ஹய்யா...
    மெய்யா?//

    யா

    ReplyDelete
  7. //ஈரோடு கதிர் said...
    அய்யோ ஒரு பூனை கொன்னுபோட்டீங்களே!!!!

    :)))))//


    நன்றி கதிர்

    ReplyDelete
  8. //அகநாழிகை said...
    முதல் இரண்டும் பிடித்திருந்தது.//

    நன்றி வாசு

    ReplyDelete
  9. //Robin said...
    இரண்டு மூன்று வார்த்தைகள் டைப் செய்தவுடன் என்டர் கீ தட்டும் (கெட்ட) பழக்கம் உங்களுக்கும் உண்டா?//
    இதுக்குத்தான் புரிவதுபோல எழுதக்கூடாது என்கிறார்களோ!!!

    ReplyDelete
  10. //மங்குனி அமைச்சர் said...
    1,4, 3, 2..

    றிநன்

    ReplyDelete
  11. //என்னைச் சுற்றி

    ஆதரவு யாருமில்லை

    ஏனெனில்

    நான் போலியில்லை //


    யார் சொன்னா, நிறைய பேர் இருக்கோம்!(ஆதரவு தர)

    ReplyDelete
  12. //வால்பையன் said...
    யார் சொன்னா, நிறைய பேர் இருக்கோம்!(ஆதரவு தர)//

    நன்றி Arun

    ReplyDelete
  13. //அக்பர் said...
    கலக்கல் சார்.//

    வருகைக்கு நன்றி அக்பர்

    ReplyDelete
  14. //T.V.ராதாகிருஷ்ணன் said...

    //மங்குனி அமைச்சர் said...
    1,4, 3, 2..

    றிநன்///

    சார் , யோசிச்சு யோசிச்சு ரொம்ப நேரம் சிரிச்சேன்

    ReplyDelete
  15. மாங்கு மாங்குன்னு நான் எழுதுவதை
    மூன்றே வரியில் யார் சொன்னாலும்
    அது கவிதை.

    ஆமா!இந்த போலின்னா என்னங்க?
    பல காரமா?

    ReplyDelete
  16. :) கவிதைகள் அருமை. பூனையின் மரணத்தை கவிஞர்களை கொண்டு கவிதையாக்கி அனைவரும் ரசித்திட போலியாக எதுவும் தெரிவதில்லை.

    ReplyDelete
  17. //ஈரோடு கதிர் said...

    அய்யோ ஒரு பூனை கொன்னுபோட்டீங்களே!!!!

    :)))))//

    ஏனுங்க மாப்பு எழுத்துல ஐய்யோ. இளிப்பான்ல சிரிப்போ..அது :)))) இல்லை :((((

    ReplyDelete
  18. // மங்குனி அமைச்சர் said...
    சார் , யோசிச்சு யோசிச்சு ரொம்ப நேரம் சிரிச்சேன்//

    நன்றி :))

    ReplyDelete
  19. //ராஜ நடராஜன் said...
    மாங்கு மாங்குன்னு நான் எழுதுவதை
    மூன்றே வரியில் யார் சொன்னாலும்
    அது கவிதை//

    :))))

    //ஆமா!இந்த போலின்னா என்னங்க?
    பல காரமா?//

    நீங்க சொல்ற பலகாரம் "போளி" ன்னு நினைக்கிறேன்..இதுக்கு மேல தூங்கறமாதிரி இருந்தா என்ன செய்ய முடியும்

    ReplyDelete
  20. //V.Radhakrishnan said...
    :) கவிதைகள் அருமை. பூனையின் மரணத்தை கவிஞர்களை கொண்டு கவிதையாக்கி அனைவரும் ரசித்திட போலியாக எதுவும் தெரிவதில்லை.//

    வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி V.Radhakrishnan

    ReplyDelete
  21. //வானம்பாடிகள் said...
    ஏனுங்க மாப்பு எழுத்துல ஐய்யோ. இளிப்பான்ல சிரிப்போ..அது :)))) இல்லை :((((//

    அதானே! வருகைக்கும்..கருத்திற்கும் நன்றி bala

    ReplyDelete
  22. யதார்த்தமாய் உதிக்கும் எண்ணங்களை அழகான வரிகளாக்கியிருக்கிறீர்கள்.
    அருமை.

    ReplyDelete
  23. //ஹேமா said...
    யதார்த்தமாய் உதிக்கும் எண்ணங்களை அழகான வரிகளாக்கியிருக்கிறீர்கள்.
    அருமை.//

    வருகைக்கு நன்றி ஹேமா

    ReplyDelete
  24. //பட்டாபட்டி.. said...
    கலக்கல் சார்//


    நன்றி பட்டாபட்டி

    ReplyDelete
  25. Kadaisi kavithai arumai. Yosikka vaiththathu! Vaalthukkal. Nanadrigal pala nalla kaviathaikku.

    Karthick
    eluthuvathukarthick.worpress.com

    ReplyDelete
  26. நன்றாக இருந்தது.

    இளமுருகன்
    நைஜீரியா

    ReplyDelete
  27. ///Imayavaramban said...
    Kadaisi kavithai arumai. Yosikka vaiththathu! Vaalthukkal. Nanadrigal pala nalla kaviathaikku.

    Karthick
    eluthuvathukarthick.worpress.com//

    நன்றி Imayavaramban

    ReplyDelete
  28. //இளமுருகன் said...
    நன்றாக இருந்தது.//

    நன்றி இளமுருகன்

    ReplyDelete
  29. கடைசிக் கவிதையா நச்

    ReplyDelete
  30. ஒவ்வொன்றும் அருமை... ரசித்தேன்... முதல் டாப்...

    ReplyDelete
  31. என்னை விமரிசிக்க

    உரிமை உனக்கு

    உண்டெனில்

    உன்னை விமரிசிக்க

    எனக்கும் உரிமை உண்டு

    ReplyDelete