Monday, September 19, 2011

எங்கேயும் எப்போதும்...என் பார்வையில்..




நமக்கு சந்தோஷத்தைக் கொடுக்கும் நிகழ்ச்சியை மற்றவர்களுடன் பகிர்ந்துக் கொள்வதில் இரட்டிப்பு சந்தோஷம் அடையலாம்.
அந்த எண்ணத்தை தோற்றுவித்ததால்..இப்படம் பற்றி எழுதுகிறேன்..
அவ்வப்போது தமிழில் சில நல்லப் படங்கள் வந்துக் கொண்டிருக்கின்றன..அப்படிப்பட்ட லிஸ்டில் இருக்கிறது இந்த படம்.
மேலும் இப்படம் ஒரு செய்தியையும் சொல்கிறது.
சரவணன் அவர்கள் இயக்குநராக அறிமுக மாகியுள்ள இப்படத்தின் கதையையும் அவரே எழுதியுள்ளார்.
தேசிய நெடுஞ்சாலையில் இரு பேருந்துகள் நேருக்கு நேர் மோதிக்கொள்வதால் உண்டாகும் மரணம்..அதனால்அவதிப்படும்..பாதிக்கப்படும் மக்கள்...இதுதான் கதையின் ஒன் லைன்..
அதில் இளம் காதலர்கள்,வெளிநாட்டிலிருந்து பல ஆண்டுகள் கழித்து தன் குடும்பத்தை காணவரும் நபர்..புதிதாக காதல் அரும்பும் கல்லூரி இளசுகள்...என சிறு சிறு நிகழ்வுகள்..காட்சிகள்.
கதிரேசன் என்னும் இளம் தொழிலாளி (ஜெய்)..அவனுடன் மனதில் தோன்றியதை..யதார்த்தத்தை பட்..பட் ..என பேசும் நர்ஸ் மணிமேகலை(அஞ்சலி)திருச்சியில் வாழ்பவர்கள்.திருச்சியை இது வரை படங்களில் வராத கோணங்களில் படமாக்கியுள்ளார் ஆர்.வேல்ராஜ்.இவர்கள் திருச்சியிலிருந்து பேருந்தில் பயணிக்கின்றனர்.
கிராமத்துப் பெண் அமுதா (அனன்யா)..சாஃப்ட்வேர் இஞ்சினீயர் கௌதம் (சர்வா) என மற்ற ஜோடி.நடிப்பில் ஒருவருக்கு ஒருவர் போட்டிப் போட்டு நடிக்கின்றனர்.அப்பாவியாக ஜெய் தூள் கிளப்பினால்..அடாவடியாக அஞ்சலி அருமை.
கிராமத்துப்பெண்ணாக ஏதுமறியாதவளாக அனன்யா அசத்தினால் சாஃப்ட்வேர் இஞ்சினியராக சர்வா அட்டகாசம்.
ஆங்காங்கே இந்த ஜோடிகள் வரும்போது வசனங்களில் நகைச்சுவை எட்டிப் பார்க்கிறது.சிறந்த திரைக்கதை..திறமையான இயக்குநர் ,டெக்னீஷியன்ஸ் இருந்தால் படம் வெற்றி பெரும் என்பதற்கு இப்படம் மற்றொரு உதாரணம்.
இப்படிப்பட்ட படங்களுக்கு தனியாக நகைச்சுவை நடிகரோ..நகைச்சுவை டிராக்கோ தேவையில்லை என்பதை மற்ற இயக்குநர்களுக்கு உணர்த்தியுள்ள படம்.
பேருந்தில் நடைபெறும் நிகழ்வு..பழைய ஃப்ளாஷ்பேக் என மாறி மாறி காட்டினாலும்..சற்றும் குழப்பாத திரைக்கதை அமைப்பு.படத்தின் எடிட்டர் கிஷோர்..அவருக்கு பாராட்டுகள்.
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோ நிறுவனத்துடன்..(Fox star studios) A.R.முருகதாஸ் இணைந்து எடுத்துள்ள படம்..
பேருந்து வெகு வேகமாக சாலை விதிகளை மதிக்காமல் செல்வது..பார்க்கும் போது ஆடியன்சும் அந்த பேருந்தில் பயத்துடன் இருப்பது போன்ற சூழலை உருவாக்குகிறது.இதற்காகவே இயக்குநருக்கும்..சினிமாடொகிராஃபி வேல்ராஜுக்கும் மீண்டும் பாராட்டுகள்.விபத்திற்குப் பின் நடைபெறும் சூழல் அருமை.

கண்டிப்பாக அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

 

5 comments:

  1. படம் சூப்பர்.

    நன்றி,
    கண்ணன்
    http://www.tamilcomedyworld.com

    ReplyDelete
  2. நண்பரே...நான் சமீபத்தில் ரசித்த மிக நல்ல படம்.
    இப்படம் பற்றி நானும் பதிவெழுதி உள்ளேன்.

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி உலக சினிமா ரசிகன்

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி உலக சினிமா ரசிகன்

    ReplyDelete
  5. வருகைக்கு நன்றி கண்ணன்

    ReplyDelete