Thursday, November 24, 2011

வரவில்லை கவிதை





தவம் கிடக்கிறேன்

தாள்களின் முன்

வரவில்லை கவிதை

பேருந்து கூட்ட நெரிசலில்

 தீப் பொறியாய்

 வந்து அமர்கிறது

வானத்தில் நிலவை

ரசிக்கையில்

வரவில்லை கவிதை

சாலையோர சிறுமியின்

கையேந்தலைப் பார்த்ததும்

வந்து அமர்கிறது.

6 comments:

  1. கனநாளைக்குப்பிறகு குட்டிக்கவிதை.இப்படியான குட்டி வரிகளில் சிந்தனைகள் வருவதும் அற்புதம் !

    ReplyDelete
  2. கடுகு தான் ஆனாலும்.. காரம் குறையல

    ReplyDelete
  3. வருகைக்கு நன்றி ராமலக்ஷ்மி

    ReplyDelete
  4. வருகைக்கு நன்றி
    சி.பி.செந்தில்குமார்

    ReplyDelete