Sunday, July 15, 2012

ஜனாதிபதி தேர்தலும்..திருமங்கலம் ஃபார்முலாவும்...




பல ஆண்டுகளாக வாக்காளர்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை வாங்கும் வழக்கத்தை அனைத்து கட்சிகளும் செய்து வந்தாலும், திருமங்கலம் இடைத் தேர்தலுக்குப் பிறகே, அப்படிப்பட்ட செயலில் வெல்லும் கட்சி திருமங்கலம் ஃபார்முலாவில் வென்றதாக ஊடகங்கள் சொல்லின.

கிட்டத்தட்ட அதே நிலை இன்றைய ஜனாதிபதி தேர்தலில் நடை பெற உள்ளது.

என்ன ..ஒரு வித்தியாசம்...தேர்தல்களில் மக்களின் வாக்குகள் விலைக்கு வாங்கப்பட்டன..

ஆனால் இத்தேர்தலில் எம்.எல்.ஏ., எம்.பி.க்கள் வாங்கப்படுகிறார்கள்..அக்கட்சியின் மூலம்...அதாவது அக்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு சிறப்பு நிதி என கோடிக்கணக்கில் வழங்கப் படுகிறது.

ஜனாதிபதி தேர்தலில் பீகாரில் நிதிஷ்குமார் ஆதரிப்பதால் சிறப்பு நிதி வழங்கப்பட்டது.உத்தரபிரதேசத்திற்கும், முலாயம் சிங் ஆதரவு கிடைத்துள்ளதால் நிதி வழங்கப்பட உள்ளது.

மம்தா ஆதரவு கிடைக்குமேயாயின்..மேற்கு வங்கத்திற்கும் அவர் கேட்கும் நிதி வழங்க மைய அரசு தயாராய் இருக்கும்.

சாதாரண வாக்காளர் ஓட்டு போட சில ஆயிரம்...

மாநில அரசு ஆதரிக்க பல கோடி.

வாழ்க இந்திய ஜனநாயகம்.


(செய்தி - உத்தரப்பிரதேசத்திற்கு கிட்டத்தட்ட 450 பில்லியன் ரூபாய்க்கான ஃபைனான்சியல் பேக்கேஜ் தர மைய அரசு ஒப்புக் கொண்டுள்ளதாம்.இது ஜனாதிபதி தேர்தலில் மைய அரசை ஆதரித்ததற்காகவும், எதிர்காலத்தில் காங்கிரஸ் அரசுக்கு ஏதேனும் சிக்கல் வந்தால் காக்கவும்தானாம்)

No comments:

Post a Comment