Tuesday, November 19, 2013

பொங்கல் நாளில் படம் வந்தால் அள்ளலாம் வசூலை...



பொங்கலுக்கு வெளிவரும் பட வரிசைகளில் முக்கிய நடிகர் நடிக்கும், நீண்ட நாள் தயாரிப்பில் இருந்த படமும் உள்ளது.முக்கியமாக இந்நாளில் படத்தை வெளியிட பல தயாரிப்பாளர்கள் வரிசையில் நிற்பது ஏன்?

இப்போதெல்லாம், பெரிய பட்ஜெட் படங்கள் சென்னை போன்ற நகரங்களில் மட்டும் ஒரே நாளில் 300 காட்சிகளுக்கு மேல் நடைபெறும் வண்ணம் திரையிடப்படுகின்றன.படம் தோல்வியடைந்தாலும், வசூலைக் குறி வைத்தே இப்படி நடக்கின்றன.

பொங்கல் சமயம் வந்தால்...

ஜனவரி 10ஆம் நாள் வெளிவரும் பட மென்றால், அன்று வெள்ளிக்கிழமை, சனி, ஞாயிறு அரங்கம் நிறைவது 'டப்பா' படத்திற்கும் நிச்சயம்.

தவிர்த்து, 13 நாம் நாள் போகி, அடுத்து மூன்று நாட்கள் பொங்கல், திருவள்ளுவர் தினம், காணும் பொங்கல்...ஆகக் கூடி படம் வெளியாகி ஏழு நாட்கள் அரங்கு நிறைவது நிச்சயம்.

சென்னையில் மட்டும் கிட்டத்தட்ட பிரபல நடிகர் படம் என்றால் 2100 காட்சிகள்.வசூல் வேட்டை அபாரமாய் இருக்கும்.பிறகு பட வசூல் பற்றி , கவலை இல்லை..படம் ஓடினாலும், ஓடாவிடினும்.

பார்ப்போம்...இந்த ரேசில் யார் யார் ஜெயித்து படத்தை வெளியிடுகிறார்கள் என்று.