Sunday, March 2, 2014

கேபிள் நீங்கள் தொட்டால்...தொடரும்



மெய்வருத்தம் பாரார் பசிநோக்கார் கண்துஞ்சார்
எவ்வெவர் தீமையு மேற்கொள்ளார் - செவ்வி
அருமையும் பாரா ரவமதிப்புங் கொள்ளார்
கருமமே கண்ணா யினார் ( 53)

ஒருவன் தன் கடமை மட்டிலும் கவனம் செலுத்தி வருவானால் அவன் வாழ்வில் வெற்றி அடைந்தவன் ஆகிறான்.
அவனது தன்மை எத்தகையதாயிருக்கும் என இப்பாடல் காட்டுகிறது. தன உடல் சுகதிற்கு முன்னுரிமை வழங்கான்;
பசி அறியும் தன்மை அதிகம் இல்லாதவன்; உறங்கும் வேளை சொற்பமே உடையவன்; யாரெவர் எத்தகு தீங்கு செய்யினும் அதை
ஒரு பொருட்டாகக் கொள்ளான்; தன்னை பாராட்டிச் சொல்லப்படும் உரைகளிலோ, விமரிசித்து சொல்லப்படும் அவமதிப்பிலோ
மனம் செலுத்தி உழலமாட்டான்; தன் கடமை எது, அதை செயலாற்றும் சிந்தை எது என்பதில் மட்டுமே கவனம் செலுத்துவான்.

.....குமரகுருபரர்

மேற்கண்ட பாடலுக்கு உதாரணமாகக் கூற வேண்டுமாயின்..என் முன்னே முதலில் இருப்பவர் கேபிள் சங்கர்.
எனக்கு அவரை கடந்த ஆறு ஆண்டுகளாகத் தெரியும்.பார்த்த நேரங்களில் எல்லாம், கதைகள் பற்றியும், திரைப்படங்கள் பற்றியும்,இயக்குநர் ஆக விரும்பும் அவாவினைப் பற்றியும் மட்டுமே பேசுவார்.அவர் நினைவுகளிலும் சரி, கனவுகளிலும் சரி..இதையேத்தான் அவர் நினைந்திருந்தார்.
காலம் கனிந்தது..
அவரது ஆசை நிறைவேறியுள்ளது.
படம் நன்றாகவே வந்திருக்கும் என்பது நிச்சயம்.
அவர் திரைப்பட இயக்கத்தைத் தொட்டுவிட்டார்..இனி அது தொடரும்.
கடின உழைப்புக்கும், தனது குறிக்கோள் நிறைவேறவும் தளராது உழைத்தால்..வெற்றி நிச்சயம்.
கேபிள் உங்கள் வெற்றி நிச்சயம்.
முன்னதாகவே எனது அட்வான்ஸ் வாழ்த்துகள்.
கார்க்கிக்கும் சேர்த்துதான் வாழ்த்து.