Thursday, September 30, 2010

கவிதையின் கரு

அவன்

பசி அகல அன்று

அம்புலியை விண்ணிலிருந்து

அழைத்தாள் அன்னை

இன்று

காமப்பசி தீர

நிலவொன்றை

மண்ணில் சாய்த்தான்



2)கவிதை எழுத

வெள்ளைத் தாளில்

நேர்க்கோடிட்டேன்

ஆகா..அற்புதம்

கவிதை அற்புதம்

என்றிட்டான் ஒருவன்

மற்றவனோ

நேர்மையை வலியுறுத்தும்

பாங்கு அருமை என்றான்

அடுத்தவன்

வாழ்வில் நிமிர்ந்து நில்

வளமாய்ச் சொல்கிறது

என்றான்

நானோ

கவிதையின் கரு தேடி

விட்டத்தைப் பார்த்தேன்
 
 

நகைச்சுவை நடிகர் சந்தானத்திற்கு ஒரு மடல்..

நண்பர் சந்தானம் அவர்களுக்கு



வணக்கம்..



உங்களை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலிருந்து பார்த்து வருகிறேன் என்னும் ஒரே காரணமே..இந்தக் கடிதம் எழுத என்னைத் தூண்டியது.



அப்போதே..இதோ மற்றுமொரு நகைச்சுவை நடிகர் உருவாகிக் கொண்டிருக்கிறார்..என்ற எண்ணம் ஏற்பட்டது.



அதற்கேற்றார் போல..படிப்படியாக முன்னேறி..விவேக், வைகைப் புயலை நெருங்கமுடியாத தயாரிப்பாளர்களுக்கு மாற்று நகைச்சுவை நடிகர் சந்தானமே என்ற எண்ணத்தைத் தயாரிப்பாளர்கள் மனதில் தோற்றுவித்து விட்டீர்கள்.



நகைச்சுவை நடிகர்களில் பலவகை உண்டு..அங்க சேஷ்டை செய்து முன்னேறுவது, டைமிங்க் காமெடி, டயலாக் காமெடி, அருமையான உச்சரிப்பு என்று..



தங்கவேலு,வி.கே.ராமசாமி ஆகியோர் தங்கள் வசன உச்சரிப்பாலும்..டயலாக் காமெடியாலும்..வாயைத் திறந்தாலே ரசிக்க வைத்தார்கள்.



சற்று அங்க சேஷ்டை, அசைவுகள் என அசைக்க முடியா நகைச்சுவை நடிகர்கள் நாகேஷ்,சந்திர பாபு..



முக பாவம்..தனித்துவத்தில் சிறந்தவர் பாலையா



சுருளி ராஜன், தேங்காய் ஸ்ரீனிவாசன் இருவருக்கும் குரல் ஒரு சொத்து.



மற்றவரை வைத்து ஏசி நகைச்சுவை விருந்தளித்தவர் கவுண்ட மணி, செந்தில்.



நகைச்சுவையோடு..சமுதாய நலனையும் யோசித்தவர் கலைவாணர்.



ஆனால் நீங்கள் இதில் எந்த வகையில் வருகிறீர்கள்?



டயலாக் காமெடியில்..



சமீபத்தில் பாஸ் என்னும் பாஸ்கரன் படத்தில்..சந்தானம் இல்லாவிடில் படம் இல்லை..சந்தானத்தின் நகைச்சுவை படம் முழுதும் சிரிக்க வைத்தது என ஒருமித்த கருத்து ஏற்பட்டுள்ளது..



ஆனால்..என்னைப் போன்றவர்கள் கருத்து..



உங்க வசன உச்சரிப்பு சிறப்பாய் உள்ளது..ஆனால் வசனத்தை ஒப்புவிக்கிறீர்கள்..அதில் சிறிதும் மாடுலேஷன் இல்லை..



இந்தக் குறையை நிவர்த்தி செய்துக் கொண்டால்..முண்ணனி நகைச்சுவை நடிகன் ஆவதில் எந்த தடையும் இருக்காது.



எந்திரனில் ரஜினியுடன் நடித்துள்ளீர்கள்..சரக்கில்லாமல் இது சாத்தியமில்லை.



ஆனாலும்..நான் சொன்ன இந்த சின்னக் குறையை சரி செய்துக் கொண்டால்...திரையில் சந்தானம் பல ஆண்டுகள் நிலைத்திருப்பார் என்பது நிச்சயம்.



நன்றி



அன்புடன்

உங்கள் ரசிகன்

Wednesday, September 29, 2010

கலைஞரே இதற்கு அர்த்தம் என்ன

 தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புகிறோம் என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தங்கபாலு கூறியுள்ளார்.



அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி வரும் 9ம் தேதி திருச்சி வருகை தர உள்ளார். இதையொட்டி தமிழகம் முழுவதும் தங்கபாலு காங்கிரஸ் செயல்வீரர்கள் கூட்டம் நடத்தி வருகிறார்.



நாகர்கோவிலில் உள்ள பெருமாள் மண்டபத்தில் கன்னியாகுமரி மாவட்ட காங்கிரஸ் கட்சியின் செயல்வீரர்கள் கூட்டத்தில் தங்கபாலு பேசுகையில்,



காங்கிரஸ், திமுக கூட்டணி வெற்றிக் கூட்டணி. இந்தக் கூட்டணி 10 இடைத் தேர்தல்களிலும் வெற்றி பெற்றுள்ளது.



வர உள்ள சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் போட்டியிடும் இடங்கள், கூட்டணி பற்றி இப்போது எதுவும் நாம் சொல்ல முடியாது. தேர்தல் நேரத்தில் அது தொடர்பாக சோனியா காந்தி தான் இதை முடிவு செய்வார்.



ஏற்கனவே, கூட்டணி குறித்து சென்னையில் அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் குலாம்நபி ஆசாத் தெளிவுபடுத்திவிட்டார். மத்தியில் காங்கிரஸ்- திமுக கூட்டணி ஆட்சி தொடர்கிறது.



தமிழகத்திலும் காங்கிரஸ் கட்சி தலைமையில் ஆட்சி அமைக்க விரும்புகிறோம். அதற்கான சூழல், நேரம், காலம் ஆகியவற்றை காங்கிரஸ் தலைமை தீர்மானிக்கும் என்றார்.
(நன்றி தட்ஸ்தமிழ் )


இனி நாம் 
இதற்கு என்ன அர்த்தம்  என கலைஞரே ..சொல்லுங்கள்

சிறகில்லை அவனுக்கு

ஆமை புகுந்த இல்லம்



உருப்படாதாம்



பொறாமையில் பொருமுகிறான்





2) எழுதுவது கவிதையா



நான் அறியேன்



கவிதை வானில்



கல்கண்டாய் இல்லாவிடினும்



சர்க்கரைத் துகளாய்



இருந்து விடுகிறேன்





3)பாவம்



விட்டுவிடுங்கள்



பறக்கும்வரை பறக்கட்டும்



சிறகில்லாததை மறந்து

Tuesday, September 28, 2010

கல்லீரலைப் பாதிக்கும் குடியும், கொழுப்பும்

நமது உடலில் நடைபெறும் இரசாயன மாற்றங்கள் அனைத்திற்கும் அடிப்படையாகத் திகழ்கிறது கல்லீரல். கல்லீரல் பாதிக்கப்படும் போதுதான் மஞ்சள் காமாலையில் இருந்து நமது உடலை பெரிதும் பாதிக்கும் பல வியாதிகள் ஏற்படுகின்றன. எனவே கல்லீரலை முறையான உணவு மற்றும் ‘இதர’ பழக்கங்களில் மூலம் பாதிக்காமல் காப்பது உடல் நலத்தை காப்பதற்கு ஒப்பானதாகும்.



நமது நாட்டைப் பொறுத்தவரை கல்லீரல் தொடர்பான நோய்கள் ஏற்படுவதற்கு இரண்டு காரணிகளே முக்கிய பங்கு வகிக்கின்றன. ஒன்று, குடிப் பழக்கம். இரண்டாவதாக, கொழுப்பு நிறைந்த உணவுகள்.



அளவிற்கு அதிகமாக குடிப்பதனால் (மருத்துவரை கலந்தாலோசித்து மது அளவை நிர்ணயித்துக் கொள்ளவும்) கல்லீரலிற்கு ஏற்படும் பாதிப்பே சாதாரண மஞ்சள் காமாலை நோயிலிருந்து ஹெப்பாடிடிஸ் பி ஆகியனவும், நீரிழிவு உள்ளிட்ட நோய்களும் ஏற்படுகின்றன. இவற்றை ஆல்கஹால் தொடர்பான கல்லீரல் நோய்கள் என்று மருத்துவம் கூறுகிறது.





FILEமற்றொரு வகையான பாதிப்பு கல்லீரலில் கொழுப்பு அதிகமாகச் சேர்வதால் உண்டாகிறது. இதனை ஆல்கஹால் அல்லாத கல்லீரல் கொழுப்பு வியாதிகள் (Non-alcoholics fatty liver disease - NAFLD) என்று மருத்துவம் வகைப்படுத்துகிறது.



இந்த இரண்டாவது வகை - அதாவது கொழுப்பு சேகரிப்பால் கல்லீரல் கெடுவது - ஒருவருக்கு 35 வயதில் ஏற்படுகிறது என்று வைத்துக் கொண்டால், அவர் 55 வயதை அடையும்போது, கல்லீரல் வீக்கம் ஏற்பட்டு, அதனை மாற்றுக் கல்லீரல் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய அவசியத்தை ஏற்படுத்துகிறது. கல்லீரல் வீங்கி சிகிச்சையால் குண்பபடுத்த முடியாத நிலையைத்தான் லிவர் சிர்ரோசிஸ் என்றழைக்கின்றனர்.



நமது நாட்டைப் பொறுத்தவரை பலரும் மதுவினாலும், கொழுப்பு உணவுகளாலும் கல்லீரல் பாதிப்பிற்குள்ளானவர்களாக உள்ளனர். மது குடிப்பவர்கள் குடிக்கும் போது சாப்பிடும் உணவு வகைகள் பொதுவாக எண்ணெய் கலந்து தயாரிக்கப்படும் உடனடி உணவுகளாகவும் (fast foods), கொழுப்புச் சத்து அதிகம் கொண்ட உணவுகளாகவும் இருப்பதால் கல்லீரலிற்கு பாதிப்பு அதிகமாகிறது. இதுவே கல்லீரலை பலவீனப்படுத்தி, அது தொடர்பான எல்லா நோய்களுக்கும் வெற்றிலை பாக்கு வைத்து அழைக்கிறது.



அளவான குடிப்பழக்கம், முறையான உணவுப் பழக்கம், காலையில் உடற்பயிற்சி ஆகியன கல்லீரலை பாதுகாக்கும் மிகச் சாதாரண வழிகளாகும். பாதிக்கப்பட்டாலும் மருத்துவத்தின் உதவியால் மீண்டும் பழைய நிலைக்கு வந்து செயல்படும் திறன் பெற்ற உடலின் ஒரே உறுப்பு கல்லீரல் என்பதும் நினைவில் கொள்ளத்தக்கதாகும். எனவே, அதிகமாகக் குடித்தல், கொழுப்பு உணவுகளை அதிகம் சாப்பிடுதல் ஆகியவற்றை தவிர்த்தால் போதும். நல்ல கல்லீரலுடன் வாழ்நாள் முழுவதும் நன்றாக வாழலாம்.



“நமது உடலில் கல்லீரல் தான் நமக்கு மிகவும் உதவும் உறுப்பு. நமது உடலில் ஏற்படும் பல இரசாயன மாற்றங்களுக்கு அதுவே அடிப்படையாக உள்ளது. காயப்பட்டாலும் மீண்டும் பழைய நிலைக்கு வரும் திறன் கொண்டது. ஆனால் குடிப்பழக்கம், கொழுப்புணவுகள் மூலம் அதனை அதிகமாக கெடுத்துவிட்டீர்களானால், அது செயலற்றுப் போய்விடும். அதன் விளைவாக மற்ற உறுப்புகளும் பாதிக்கப்படும்” என்று எச்சரிக்கிறார் மருத்துவர் கோமதி நரசிம்மன். இவர் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சையில் சென்னையிலுள்ள குறிப்பிடத்தக்க நிபுணர்களில் ஒருவர்.



குடிப்பழக்கத்தால் கல்லீரல் பாதிக்கப்பட்டவர்களிடம் களைப்பு, மலச் சிக்கல், மஞ்சள் காமாலைக்கான லேசான அறிகுறி ஆகியன இருக்கும். இதனைக் கண்டவுடன் உடனடியாக மருத்துவரை அணுகி, இரத்தச் சோதனை உள்ளிட்ட உடல் சோதனைகளைச் செய்து, நிலையை அறிந்து உரிய சிகிச்சை பெற வேண்டும். அதனைச் செய்யத் தவறினால் அது கல்லீரல் வீக்கத்தில் (லிவர் சிர்ரோசிஸ்) சென்று முடியும். அந்த நிலையில் கல்லீரல் மாற்றுச் சிகிச்சை தவிர வேறு வழி இல்லை.



எனவே, வெளியில் உணவு அருந்தும் போதும், நண்பர்களுடன் வாழ்வின் ஆனந்தமான அந்தப் பொழுதை மதுபானத்துடன் கழிக்கும்போதும் நினைவில் நிறுத்துக: கல்லீரல் நலம்
                                                                                 
(நன்றி வெப்துனியா)

Monday, September 27, 2010

எந்திரன்..நொறுக்ஸ் - 2

1)ஐரோப்பாவில் பிரம்மாண்ட கொலோசியம் கினோ 1 திரையரங்கில் எந்திரன் சிறப்பு காட்சி திரையிடப்படுகிறதாம்.கடந்த பத்து ஆண்டுகளில் இங்கு வெளியாகும் முதல் இந்தியப் படம் இதுதான்.இந்த அரங்கில் 975 இருக்கைகளாம்.நார்வேயில் மொத்த தமிழர்கள் எண்ணிக்கை 14000.அதில் 20 விழுக்காடு திரையரங்கில் படம் பார்ப்பவர்கள்.அதனால் சின்ன தியேட்டர்களில்தான் படங்கள் வெளியாகுமாம்.ஆனால்..இந்நிலையில் 'எந்திரன்' சிறப்பு காட்சி இங்கு வெளியாகிறது.பின்னர் இது சின்ன தியேட்டருக்கு மாற்றப்படுமாம்



2)எந்திரன் சென்னை உரிமையை தி.மு.க., வைச் சேர்ந்த அன்பழகன் வாங்கினாராம்.பின்னர் சில கோடிகள் அதிகமாக சேர்த்து சத்யம் தியேட்டர் உரிமையாளர்களுக்கு விற்று விட்டாராம்.



3)அண்ணாசாலையில் மட்டும் 12 தியேட்டர்களில் படம் வெளிவருகிறது.சென்னையில் 30 தியேட்டர்களில் வெளிவருகிறது.உலகம் முழுதும் ஒரே வாரத்தில் நூறு கோடிகளுக்கு மேல் வசூல் இருக்குமாம்



4)படம் வெற்றியா..தோல்வியா என்பது பிரச்னை அல்ல..(படம் வெற்றி படம் என்பது தெரிந்த விஷயம்)உலக அளவில் பிரம்மாண்டமாய் பேசப்படும் இப்படம்..அதிக பொருட் செலவில் தயாரிக்கப் பட்ட இப்படம்...ஒரு தமிழ்ப்படம் என்பதை நினைக்கையில்( எல்லாவற்றையும் தாண்டி )சற்று பெருமையாகத்தான் உள்ளது



 கேரளாவில் எந்திரன் படத்திற்கான முன்பதிவு நேற்று தொடங்கியது. சில மணி நேரத்திலேயே 2 நாட்களுக்கான அனைத்து காட்சிகளுக்கும் டிக்கெட் விற்றுத் தீர்ந்தது.



கேரளாவி்ல் எந்திரன் படம் 125 தியேட்டர்களில் வெளியாகிறது. இது கேரள சினி்மா வரலாற்றில் புதிய சாதனை ஆகும். மலையாளத் திரைப்பட வரலாற்றில் இதுவரை எந்த ஒரு படமும் 100 தியேட்டர்களுக்கு மேல் திரையிடப்பட்டதில்லை. முதல் முதலாக எந்திரன் தான் இந்த சாதனையை படைத்துள்ளது.



5)எந்திரன் பட முதன் முதல் ஷூட்டிங் மச்சு பிச்சு மலையில் 'கிளிமஞ்சாரோ' பாடலுக்கான நடனக் காட்சி எடுக்கப்பட்டதாம்.ஐஸ்வர்யா ராய் வருவதற்குள் மேக்கப் போட்டுக் கொண்டு ரஜினி 20,30 வரை நடன மூவ்மெண்டை ஒத்திகப் பார்த்தாராம்.

இதோ அந்த பாடல்

Sunday, September 26, 2010

நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் -2 காதலிக்க நேரமில்லை

இத் தொடரின் ஆரம்பப் பதிவில் அடுத்த வீட்டுப் பெண் படம் பற்றி பார்த்தோம்.



இப்பதிவு மற்றொரு மிகச் சிறந்த நகைச்சுவை திரைப்படம் பற்றியது..



தமிழ்த்திரையுலகில்..இதுவரை வந்த நகைச்சுவை படங்களில் முதல் இடத்தைப் பிடிப்பது 'காதலிக்க நேரமில்லை' திரையுலக மும்மூர்த்திகளில் ஒருவராகத் திகழ்ந்த ஸ்ரீதர் கதை,வசனம்,இயக்கத்தில் அவர் சொந்த நிறுவனமான சித்ராலயா தயாரிப்பு இப்படம்.



இப்படத்தில் முத்துராமன்,பாலையா,நாகேஷ்,ஆகியோர் நடித்துள்ளனர்.ரவிச்சந்திரனின் முதல் படம்.



கதாநாயகிகளாக காஞ்சனா,ராஜஸ்ரீ ஆகியோர் நடித்திருந்தனர்.



கண்ணதாசன் பாடல்களை எழுத எம்.எஸ்.விஸ்வநாதன் இசை அமைத்திருந்தார். அனைத்துப் பாடல்களும் அருமை.



'என்ன பார்வை உந்தன் பார்வை' 'நெஞ்சத்தை அள்ளித் தா' உங்க பொன்னான கைகள்' அனுபவம் புதுமை' நாளாம் நாளாம் ஆகிய பாடல்கள் இனிமை என்றாலும், சர்க்கரைப் பந்தலில் தேன் மாரி பெய்தது போன்ற இனிமை..'விஸ்வநாதன் வேலை வேணும்' பாடலும், சீர்காழி கோவிந்த ராஜன் பாடிய 'காதலிக்க நேரமில்லை' பாடலும்.



எம்.எஸ்.விஸ்வநாதன் இசை.பி.பி.ஸ்ரீநிவாஸ்,ஜேசுதாஸ்,சுசீலா ஆகியோர் கலக்கியிருப்பார்கள்



இப்படம் வெள்ளிவிழா கண்டது.இப்படம் ஹிந்தியில் ரீமேக் செய்யப்பட்டு அங்கும் வெற்றி பெற்றது.



இப்படத்தை மீண்டும் எடுக்கும் உரிமையை மனோபாலா வாங்கியுள்ளார்.ஆகவே மீண்டும் இக்கதையை வேறு நடிகர்கள் நடிக்க..நாம் பார்க்கும் சந்தர்ப்பம் வரும்.



நாகேஷ், பாலையா பற்றி குறிப்பிடாவிடின்..இந்த இடுகை முற்று பெறாததாகவே இருக்கும்.



இருவர் நடிப்பும் அருமை.குறிப்பாக நாகேஷ் தான் எடுக்கப் போகும் படத்தின் கதையை பாலையாயிடம் கூறும் இடம்..உம்மணாமூஞ்சிகளையும் வாய் விட்டு சிரிக்க வைக்கும்.



இப்படிப்பட்ட நகைச்சுவைப் படம் ஒன்று மீண்டும் தமிழில் வருமா?



காலம்தான் பதில் சொல்லும்.



இப்படப் பாடல் ஒன்று

Saturday, September 25, 2010

மனிதன் மட்டுமல்ல..நாயும் தீண்டத்தகாதது..

தீண்டாமை பாவம்.பெருங்குற்றம் என்றெல்லாம் அனைவருக்கும் தெரியும்.ஆனாலும் ஆங்காங்கே அது தொடர்ந்துக் கொண்டுதான் இருக்கிறது.வட மாநிலங்களில் இது அதிகமாகவே உள்ளது.

தீண்டாமைக் கொடுமையின் கோர முகமே கௌரவக்கொலைகள்.தன் வீட்டைச் சேர்ந்த பையனோ, பெண்ணோ..தலித் வகுப்பைச் சார்ந்தவரைக் காதலித்தால், தங்கள் வீட்டு பிள்ளையையும் சேர்த்து கௌரவக் கொலை செய்துவிடுகின்றனர் உயர் சாதியினர்.

இந்நிலையில் தான் கௌரவக் கொலைகளைத் தடுக்க மத்திய அரசு சட்டம் கொண்டுவர யோசித்துள்ளது.

அப்படிப் பட்ட தீண்டாமை அவலங்களில் சொல்லப்போவது புதுமையானது.

மத்திய பிரதேச மாநிலம், மொரேனா என்னும் மாவட்டத்தில் ஒரு அவலம் நடந்துள்ளது.

இதுவரை மனிதனிடம் மட்டுமே காட்டப்பட்டு வந்த தீண்டாமை நாயிடமும் காட்டப் பட்டுள்ளது.உயர் வகுப்பைச் சேர்ந்த ஒருவரது நாய்க்கு தலித் பெண்ணொருத்தி ஒரு ரொட்டித் துண்டைக் கொடுத்துவிட்டார் என்பதற்காக, அந்த நாயையே தீண்டாமையாக கருதி, அதனை விரட்டியுள்ளார் அதனை வளர்த்தவர்.

மொரேனா மாவட்டம் மானிக்பூர் என்னும் கிராமத்தைச் சேர்ந்தவர் ரம்பால் சிங்க்.இவர் உயர் சாதியைச் சேர்ந்தவர்.நிலச்சுவான்தார்.கூடவே அரசியல் செல்வாக்கு உடையவர்.இவர் ஒரு நாயை வளர்த்து வந்தார்.

இந்த நாய்.கடந்த வாரம் ஒரு நாள் அவர் வீட்டு அருகே வசித்த தலித் பெண் சுனிதா என்பவர் வீட்டருகே சென்றுள்ளது.

அப்போது சுனிதா தன் கணவருக்கு உணவு பரிமாறியுள்ளார்.அந்த நாயைப் பார்த்ததும்..ஒரு ரொட்டித் துண்டை நாய்க்குப் போட்டுள்ளார்.

நாய் அந்த ரொட்டித் துண்டை சாப்பிட, ராம்பால் சிங் பார்த்துவிட்டார்.

உடனே சுனிதாவிடம் 'என் நாய்க்கு நீ எப்படி ரொட்டியைப் போடலாம்' என சத்தம் போட்டார்.

பின்னர், தலித்திடம் ரொட்டி சாப்பிட்ட அந்த நாய் தீண்டத்தகாதது என விளக்குக் கம்பத்தில் அதைக் கட்டிப் போட்டுவிட்டு, பன்சாயத்தைக் கூட்டினார்.

பஞ்சாயத்தும், அந்த நாய் தீண்டத்தகாதது எனக் கூறி அது இனி சுனிதாவின் வீட்டில் வளர வெண்டும் என உத்தரவிட்டது.தவிர்த்து சுனிதாவிற்கு 15000 அபராதம் விதித்தது.இதைக் கண்டு சுனிதாகாவ நிலையத்தில் புகார் செய்தார்.

ஆனால் காவல்துறையினர் எஸ்சி/எஸ்டி வன்கொடுமைக் குற்றப்பிரிவினரிடம் புகார் அளிக்கும்படி அவளை விரட்டினர்.

அங்கு 'நீ ஏன் உயர்சாதியை சேர்ந்தவர் வளர்க்கும் நாய்க்குட்டிக்கு ரொட்டி கொடுத்தாய்' என்று கேட்டார் அங்கிருந்த அதிகாரி.

ஆனலும் சுனிதாவும் விடாது குற்றப்பிரிவின் டிஎஸ்பி யிடமும்,மாவட்ட ஆட்சியினரிடமும் மனு அளித்தார்.

ஆனால் இதுவரை முதல் தகவல் அறிக்கை கூட பதிவாகவில்லை.அதிகாரிகளோ விசாரித்துக் கொண்டிருக்கிறோம் என்கிறார்களாம்.

Friday, September 24, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (24-9-10)

இந்திய நிறுவனமான ஏர்டெல், ஐ.பி.எம்.மிற்கு 15ஆயிரத்து 750 கோடி ரூபாய்க்கு ஆர்டர் கொடுத்துள்ளது.இதனால் அமெரிக்காவில் வேலை வாய்ப்புகள் அதிகரிக்கக்கூடும் எனத் தெரிகிறது

2)பூமி தனது 460 கோடி ஆண்டுகள் வரலாற்றில் ஐந்து முறை பேரழிவுகளைச் சந்தித்துள்ளதாம்.இப்போது ஆறாவது பேரழிவிற்கான அறிகுறிகள் தெரியத் துவங்கி விட்டதாகத் தெரிகிறதாம்.ஒரு விநாடிக்கு ஒரு கால் பந்து மைதான அளவு காடுகள்/இயற்கை வளங்கள் அழிந்து வருகின்றனவாம்.3000 வகை உண்வுத் தாவரங்கள் பயிரிட்டுவந்த நிலையில்..இப்போது 150 வகை மட்டுமே பயிராகின்ரனவாம்.

3)நான் கூட்டணி பற்றி குழப்புவதாகக் கூறுகிறார்கள்.நான் தெளிவாகத்தான் இருக்கிறேன்.அவர்கள்தான் (?) கூட்டணி பற்றி குழம்பிப் போய் இருக்கிறார்கள் என்கிறார் விஜய்காந்த்

4)சீனாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் காஸ்மெட்டிக் பொருள்களுக்கு சிங்கப்பூர் தடைவிதித்துள்ளதாம்.தலைமுடிக்கு உபயோகிக்கும் காஸ்மெடிக் பொருள்களில் மினோக்சிடிவ் எனப்படும் கெமிகல் பொருள்கள் கலந்துள்ளாம்.இதனால் இதய பாதிப்பு, அலெர்ஜி ஆகியவை உருவாகும் என்கிறார்கள்.அதனால் என்ன..அந்த்ப் பொருள்களை சீனா நமக்கு அனுப்பிவிடும்.நாமும் பெற்று கொள்வோம்.

5)தில்லியில் காமன்வெல்த் போட்டி நடத்தும் உரிமையைப் பெற 72 நாடுகளுக்கு சுமார் 46 கோடி இந்தியா லஞ்சமாகக் கொடுத்துள்ளதை ஆஸ்திரேலிய பத்திரிகையான 'தி டைலி டெலிகிராஃப்' அம்பலப்படுத்தியுள்ளதாம்.அரசியல்வாதிகள் தான் லஞ்சப் பேர்வழிகள் என்றால்..நாட்டையே லஞ்ச நாடாக்கிவிடுவார்கள் போல் இருக்கிறதே

6)காமென்வெல்த் போட்டி ஊழல்கள் பற்றி நாம் அறிந்திருந்தாலும்..எல்லாவற்றையும் ஒன்று படுத்தி அழகாகச் சொல்லியுள்ள பரிதிநிலவனின் இந்த இடுகை
http://vanakkamnanbaa.blogspot.com/2010/09/blog-post_23.html
 இந்த வாரம் நான் படித்த இடுகைகளில் சிறந்ததாக இருப்பதால்..தமிழ்மணத்தின் இந்தவார மகுட இடுகை இது என தேர்ந்தெடுக்கிறேன்.வாழ்த்துகள் பரிதி நிலவன்.

7)கொசுறு ஒரு ஜோக்..

ஆசிரியர்- முட்டைப் போடும் ஒன்றை சொல்..

மாணவன் 1- ஆசிரியர்

ஆசிரியர்-தவறு..வேற யாருக்குத் தெரியும்

மாணவன் 2- சத்துணவுக் கூடம்

Thursday, September 23, 2010

கான்கிரீட் சிறை

மழை வந்து

குறுவை சாகுபடியானால்

தற்கொலைகள் குறையும்


2)தம்பதிகளை ஆசிர்வதித்து

அடுத்த ஆண்டு

பிள்ளை பிறக்கும்

உத்தரவாதம் அளிக்கிறார்

சாமியார்


3)கான்கிரீட் சிறையில்

தொலைக்காட்சி அலறலுடன்

அரங்கேறுகிறது

என் கவிதை


4)பசுமையான கரை

ஈர நெல் வாசம்

காவிரியில் நீர்

5)தன் நலம் வேண்டி

நெடுதுயர்ந்த அனுமன்

நலம் எண்ணாது

வெண்ணெய் வீசுவோர்

திரைப்பட இயக்குனர்கள் - 6 P.புல்லையா


பி.புல்லையா 1911 ல் பிறந்தவர்.

பிரபல தெலுங்கு இயக்குனரான இவரைப் பற்றி தமிழ்த் திரைப்பட இயக்குனர் வரிசையில் எழுதக் காரணம்..இவர் இயக்கிய தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை குறைவாய் இருந்தாலும்..அவை வெற்றி படங்கள் என்பதால் தான்.

திரையுலக சேர,சோழ,பாண்டியரான எம்.ஜி.ஆர்., சிவாஜி, ஜெமினி மூவர் படங்களையும் இவர் இயக்கியுள்ளார்.

1937ல் சாரங்கதாரா வை இயக்கியவர்..1943ல் பாக்யலட்சுமியையும், 1945ல் மாயமச்சீந்திராவையும் இயக்கினார்.

1953ல் ஜெமினி, சாவித்திரி நடித்த மனம் போல மாங்கல்யம்..வெற்றி படம்..இதற்கு பிறகு இந்த ஜோடி பிரபலமானது.

1956ல் சிவாஜி,ஜெமினி,சாவித்திரி நடிக்க பெண்ணின் பெருமை படத்தை இயக்கினார்.இப்படத்தில் அப்பாவியாக ஜெமினியும், வில்லனாக சிவாஜியும் நடித்தார்கள்.

1957ல் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது..சிவாஜி,சாவித்திரி நடிக்க இவர் இயக்கிய 'வணங்காமுடி' அருமையான பாடல்கள்..இப்படத்தின் வெற்றிக்கு துணையிருந்தன.

1958ல் ஜெமினி,அஞ்சலி நடித்த இல்லறமே நல்லறம் படம் வந்தது.இப்படத்தில் ..'மைனர் லைஃப்ஃபு ரொம்ப ஜாலி..மானம் மணிபர்ஸ் இரண்டும் காலி' என்ற பாடல்..இன்றும் பலர் உச்சரிக்கும் பாடல்களில் ஒன்றாகிவிட்டது.

1959ல் ஜெமினி நடித்த 'அதிசயத் திருடன்" படம் வந்தது.(முருகா என்றதும் உருகாதா..என்ற பாடல் பிரபலம்)

1965ல் எம்.ஜி.ஆர்., நடிக்க ஆசைமுகம் இயக்கினார்.

1966ல்..சிவாஜி கௌரவ வேடத்தில் நடிக்க..தாயே உனக்காக என்ற படத்தை இயக்கினார்..கருநீல மலை மீது தாய் இருக்க காஷ்மீரப் பனி மலையில் மகன் இருக்க' என்ற பாடல்..போருக்கு ராணுவத்தில் மகன் இருக்க தாய் வாடும் காட்சியாக எடுக்கப்பட்டது.

கிட்டத்தட்ட 10 படங்களுக்கு மேல் தமிழ்ப் படங்களை இயக்கியவர் இவர்.

1939ல் என்.டி.ராமாராவ் நடிக்க வெங்கடேஷ்வர மகாதிமியம் என்ற தெலுங்குப் படம் மாபெரும் வெற்றி பெற்றது.

பி.பானுமதியை ஸ்வர்கசீமா என்னும் படத்தில் அறிமுகப்படுத்தியவர் இவர்.

1985ல் அமரர் ஆனார்

Wednesday, September 22, 2010

ப.சிதம்பரம் இப்படிச் சொல்லலாமா?





ஒரு வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

அந்த வழக்கிற்கான தீர்ப்பு அளிக்கப்படும் நாள் வருகிறது.

நாடே அந்த வழக்குத் தீர்ப்பு என்னவாகும் என அறிய காத்துக் கொண்டிருக்கிறது.

தீர்ப்பு எத்தகையது ஆனாலும்..சட்டம் ,ஒழுங்கு காக்கப்பட வேண்டும் என ஆயிரக் கணக்கில் ஆங்காங்கே காவல்துறையினர் குவிக்கப் பட்டுள்ளனர்.

இந்நிலையில்..தீர்ப்பு எத்தைகையது ஆனாலும்..நீதிக்கு தலை வணங்கி அமைதி காக்க வேண்டும்..என அரசியல் தலைவர்கள் மக்களுக்கு வேண்டுகோள் விடுப்பதில்..எந்த தவறும் இருக்க முடியாது.

ஆனால்..நாட்டின் மிக முக்கியத் துறையின் அமைச்சர்..விடுத்துள்ள அறிக்கை சற்றி வினோதமாகவே உள்ளது..

அலகாபாத் உயர்நீதிமன்ற தீர்ப்பு வரவுள்ளது.இது இறுதி தீர்ப்பல்ல..பாதிக்கப்பட்டவர்கள் மீண்டும் முறையீட்டிற்கு செல்லலாம்..அதனால் அமைதி காக்க வேண்டும் என்றுள்ளார்.

அவர் கூற்றுபடி உயர்நீதி மன்றம் அளிக்கும் தீர்ப்புக்கு யாராயிருந்தாலும் முக்கியத்துவம் தர வேண்டியதில்லை என்றாகிறது.

இந்த செய்தியை சாதாரண குடிமகன் சொல்லலாம்..

உள்துறை அமைச்சர் சிதம்பரம் சொல்லலாமா?..தெரியவில்லை..

எந்திரன்..சில நொறுக்ஸ்..



1) சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் படத்துக்கான அட்வான்ஸ் புக்கிங் அமெரிக்கா வில் தொடங்கிய வேகத்தில் முடிந்துவிட்டது. வட அமெரிக்கா முழுவதற்குமான எந்திரன் பட டிக்கெட்டுகள் விற்பனை துவங்கிய பத்தே நிமிடங்களில் விற்றுத் தீர்ந்துவிட்டன.

முதல் ஒருவாரத்துக்கான டிக்கெட் விற்பனை நிலவரம் இது. 'அமெரிக்காவில் இதுவரை எந்த ஒரு இந்தியப் படத்துக்கும் இத்தனை வேகமாக டிக்கெட்டுகள் விற்பனையானதில்லை. அந்த வகையில் மிகப் பெரிய சாதனை இது', என்கிறார்கள் சன் பிக்சர்ஸ் தரப்பில்.

பொதுவாக, அமெரிக்காவில் வெளியாகும் இந்தியப் படங்களுக்கு, வெளியாகும் தேதிக்கு ஒரு வாரத்துக்கு முன்புதான் டிக்கெட் விற்பனை துவங்கும். ஆனால் எந்திரனுக்கு 12 தினங்களுக்கு முன்பே டிக்கெட் விற்பனை துவங்கிவிட்டது.

2)இந்த படத்தில் ஒரு எலெக்ட்ரானிக் கொசு நடித்திருக்கிறது. அதற்கு எழுத்தாளர் சுஜாதா 'ரங்குஸ்கி' என்று பெயர் வைத்திருக்கிறார். சின்ன வயதில் அவரை அவரது நண்பர்கள் அப்படி அழைப்பார்களாம்.

ஒரு ஸ்கிரிப்ட் எழுதுகிற அளவுக்கு பா.விஜய் பாடலை எழுதிக் கொடுத்தார். அதுதான் 'கிளிமஞ்சாரோ' பாடல். ட்ரெய்லர் உருவாக்க, தனி ஸ்கிரிப்ட் எழுதிக் கொடுங்கள் அதை வைத்து நான் உருவாக்குகிறேன் என்று எடிட்டர் ஆண்டனி சொன்னார். அதன்படி பிரமாதமாக உருவாக்கிக் கொடுத்திருக்கிறார்.

சந்தானமும் கருணாசும் காமெடி செய்திருக்கிறார்கள். கருணாஸ் இயக்குனரின் நடிகர். தனியாக வசனம் பேசாமல் இயக்குனர் சொல்கிற வசனத்தை மட்டும் பேசக் கூடியவர்.

ரஜினி சயின்டிஸ்ட் வேடத்தில் கம்பீரமாக நடித்திருக்கிறார். எந்திர மனிதனாகவும் நடித்திருக்கிறார். மூன்றாவதாக ஒரு சஸ்பென்ஸ் கேரக்டர் இருக்கிறது. கடைசி 45 நிமிடம் கலக்கும்

நியூயார்க்கின் ஜாக்ஸன் ஹைட்டில் டிக்கெட் விற்பனை கவுன்டர் திறக்கப்பட்ட அடுத்த 10 நிமிடங்களில் முழுவதுமாக விற்றுத் தீர்ந்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து டிக்கெட்டுகளை பெற்றனர். பலர் டிக்கெட் கிடைக்காத ஏமாற்றத்தில் திரும்பிச் சென்றனர்..

3)இன்னும் சில தினங்களில் எந்திரன் வெளியாகப் போகிறது. எனவே வாக்களித்தபடி ரசிகர்களைச் சந்திக்கவும், மகள் சௌந்தர்யாவின் திருமணத்துக்காக அவர்களுக்கு சிறப்பு விருந்தளிக்கவும் ரஜினி முடிவு செய்துள்ளார்.

3)சூப்பர் ஸ்டார் ரஜினியின் எந்திரன் திரைப்படத்துக்கான டிக்கெட் முன்பதிவு தமிழகத்திலும் துவங்கியது.

வரும் அக்டோபர் 1-ம் தேதி சென்னை யில் 32 திரையரங்குகளிலும், சென்னை புறநகர் பகுதிகளில் 30க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும் எந்திரன் படம் வெளியாகிறது. அண்ணா சாலையில் மட்டும் 12 திரையரங்குகளில் எந்திரன் திரையிடப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 1000க்கும் மேற்பட்ட அரங்குகளில் எந்திரன் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் 2250 பிரிண்டுகளுடன் 3000 அரங்குகளில் திரை விருந்து படைக்கவிருக்கிறது எந்திரன்.

இந்தப்படத்தின் இறுதி கட்ட சவுண்ட் மிக்ஸிங் பணிகள் நேற்று முடிவுக்கு வந்தது. இயக்குநர் ஷங்கர் மேற்பார்வையில் ஏ ஆர் ரஹ்மானும் ரசூல் பூக்குட்டியும் இந்தப் பணிகளை மேற்கொண்டனர்.

அனைத்தும் முடிந்ததும், ஷங்கர் உள்ளிட்ட குழுவினர் ரஜினிக்கு எந்திரனின் முதல் பிரதியை போட்டுக் காட்டுகின்றனர். படத்தைப் பார்த்த கையோடு இமயமலைக்குச் செல்லும் ரஜினி, ஒரு மாத ஓய்வுக்குப் பிறகு சென்னை திரும்புகிறார்.

4)சூப்பர் ஸ்டார் ரஜினி - ஐஸ்வர்யா ராய் நடிப்பில், ஷங்கர் இயக்கியுள்ள விஞ்ஞானப் படம் எந்திரன் - தி ரோபோ. தமிழ் மற்றும் தெலுங்கில் பல ஆண்டுகளுக்குப் பிறகு வெளியாகும் முதல் விஞ்ஞானப் படம். உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்ப கலைஞர்களை இந்தப் படத்தில் ஒருங்கிணைத்துள்ளார் இயக்குநர் ஷங்கர். மாட்ரிக்ஸ், தி போர்பிட்டன் கிங்டம் போன்ற படங்களின் ஸ்டன்ட் இயக்குநர் யான் வூ பிங்தான் எந்திரன் சண்டைப் பயிற்சி ஒருங்கிணைப்பாளர். அவருடன் பீட்டர் ஹெயினும் இணைந்துள்ளார்.

ஏலியன்ஸ், டெர்மினேட்டர் 2, ஜூராஸ்ஸிக் பார்க் என ஹாலிவுட் பிளாக்பஸ்டர் படங்கள் மூலம் பிரமிக்க வைத்த ஸ்டான் வின்ஸ்டன் ஸ்டுடியோ எந்திரனுக்கு அனிமேட்ரானிக்ஸ் பணிகளைச் செய்துள்ளது.

5)படத்தின் ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் பணிகளை ஹாலிவுட்டின் லைட் அண்ட் மேஜிக் நிறுவனம் செய்துள்ளது.அவதார், ஸ்டார் வார்ஸ், டைடானிக் போன்ற மெகா ஹிட் படங்களுக்கு ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ் செய்தவர்கள் இந்த நிறுவனத்தினர்தான். படத்தின் மொத்த பட்ஜெட்டில் 40 சதவீதம் ஸ்பெஷல் எஃபெக்டுக்காகவே செலவிடப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து வெளியாகும் முதல் உலக சினிமா ரஜினியின் எந்திரன்.

Tuesday, September 21, 2010

போடாங்க..நீங்களும் உங்க கொள்கையும்..


சமீபத்திய இரு செய்திகள்


மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ள, வறுமைக் கோட்டுக்குக் கீழ் வசிப்போருக்கான இலவச செல்போன் வழங்கும் திட்டம் இன்று திருப்பூரில் தொடங்கி வைக்கப்பட்டது.

திருப்பூர் மாவட்டம் பாலக்கரை அவினாசியில் வறுமைக் கேர்ட்டிற்கு கீழ் வாழம் ஏழை மக்களுக்கு, இலவச செல்போன்கள் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா நடைபெற்றது. அமைச்சர் சாமிநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழாவில், மத்திய தொலைதொடர்புத்துறை அமைச்சர் ஆ.ராசா பயனாளிகளுக்கு வழங்கினார்.

அவினாசி ஒன்றியத்துக்கு உட்பட்ட 36 கிராமங்களைச் சேர்ந்த 1200 குடும்பங்களுக்கு இலவச செல்போன்களை ராசா வழங்கினார். நிகழ்ச்சியில் அவர் பேசுகையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் தொலைபேசி மற்றும் செல்போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 70 கோடியாக உயர்த்தப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.






2) மக்களுக்கு இலவச கோதுமை வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசின் கொள்கை வடிவமைத்தலில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து....இது நமது பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளது


டிஸ்கி..இடுகையின் தலைப்பிற்கும் ,செய்திகளுக்கும் தொடர்பிருப்பதாக நீங்க நெனச்சா கம்பெனி பொறுப்பல்ல

Monday, September 20, 2010

அம்மா- தன்னலம் கருதாத ஒரே உயிர்



சமீபத்தில் ஒரு வார இதழில் ஒரு பெண் மருத்துவர்..அம்மாவின் பாசத்தையே ஒரு கேள்விக்குறியாக்கி இருக்கிறார்.

சமீபகாலங்களாக இவர் எதை எழுதினாலும்..படிக்க, கேட்க ஆட்கள் இருப்பதாக எண்ணிக்கொண்டுள்ளார்.

ஆனால் சமீபத்திய அஸ்திரங்கள் யாரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் இல்லை.

1) பத்து மாதம் சுமந்து பெற்றேன் என்றாலே..பையனுக்கு அம்மா சென்டிமென்ட் அதிகம் என்பதால் சரெண்டர் ஆகி விடுவானாம்.ஆனால் மகள் அப்படியில்லையாம்.காரணம் அவளும் பிற்காலத்தில் பிரசிவிப்பதால்தானாம்...
உண்மையில், நடைமுறையில்..பெண்கள் தான் தாயிடம் பாசமாய் இருக்கிறார்கள்..காரணம் அவர்கள் தான் வலியை உணர்கிறவர்கள்.
அம்மா சென்டிமென்ட் உள்ளவர்கள் அறிவியல் பூர்வமாக சிந்திக்கும் திறன் அற்றவர்களாம்..
என்னே..ஒரு கண்டுபிடிப்பு.

2)ஆண் குழந்தையை பெற்றெடுப்பது..அவளே செய்த சாதனையாக பெண்கள் நினைக்கிறார்களாம்..தன் மகனை அதனால் பொத்தி பொத்தி வளர்க்கிறார்களாம்..இப்படி நடப்பதால் பையன் முதிர்ச்சி இல்லாமல் ஆகிறானாம்.
ஐம்பது வருடங்களுக்குமுன்னர் இருக்கிறார் அவர்..
நிகழ்காலத்திற்கு வந்து..நாட்டு நடப்பைப் பார்க்கட்டும்..இருபது வயது எட்டுவதற்குள்ளேயே இன்றைய இளைஞன் தன் எதிர்கால வாழ்வை திட்டமிட்டுக் கொள்கிறான்.சென்ற தலைமுறையில் தான் முதிர்ச்சி இன்றி இருந்தனர்

3)குழந்தை வளரும் போது..தாய்,தந்தை பாசக்கதைகளை சொல்லி வளர்க்கிறாளாம்.இது தன் தாய் தன்னை பாதுகாத்துக் கொள்ள ஒரு உத்தியாம்..
என்ன கதை சொல்லி வளர்க்கிறாள் என்பது இருக்கட்டும்..இன்றைய காலகட்டத்தில்..பெண்கள்..யார் கையையும் எதிர்பார்ப்பதில்லை.ஏன்..கணவனைக் கூட என்று சொல்லலாம்.அவள் வேலைக்குப் போகிறாள்.மற்ற ஆண்களைப் போல.இன்னும் சொல்லப் போனால், குடும்பத்தையே பல இடங்களில் பெண் தன் சம்பாத்தியத்தில் நடத்துகிறாள்.
இவர் சொல்வதைப் பார்த்தால், பெண், கடைசிவரை ஆணாதிக்கத்தில் கட்டுப்பட்டு இருப்பது போல உள்ளது.
நல்ல கதைகளை சொல்லி வளர்க்க வேண்டும்..அவற்றில் நீதி இருக்க வேண்டும்.அது, எந்த கதையாய் இருந்தால் என்ன.
இவர் சொன்னது போல காந்தியின் தாய், ஹரிசந்திரன் கதையையும் சொல்லி வளர்த்ததால்..கடைசிவரை உண்மை பேச வேண்டும் என்ற எண்ணம் பிள்ளைப்பருவத்தில் இருந்தே காந்தியின் மனதில் படிந்ததை ,சௌகரியமாக மறந்து விட்டார்.

4)ஆண் குழந்தைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வளர்க்கிறார்களாம்..
ஆணுக்கு நிகராக..இன்று பெண்ணை படிக்க வைக்கிறார்கள்..
திருமணத்திற்கு பெண் இன்று நிபந்தனை விதிக்கிறாள்.

தன் பாதுகாப்பை அதிகரித்துக் கொள்ள தாய் ஆணுக்கு அதிக முக்கியத்துவம்,சலுகைகள்,சொகுசுகள் தந்து அவனை வளர்க்கிறார்களாம்.தன் பாதுகாப்பை வளர்த்துக் கொள்ள தாஜா செய்கிறாளாம்.அதனால் மகன்கள் 'நம் மேல் இவளுக்கு எவ்வளவு ஆசை..இவளுக்கு என்ன கைமாறு செய்யப்போகிறேனோ 'என எண்ணுவார்களாம்.என்ன ஒரு கண்டுபிடிப்பு..

அடடா..இவர் அம்மாக்களை என்னமாய் புரிந்து வைத்திருக்கிறார்!!!

அம்மாவிற்கு அனைத்து பிள்ளைகளும் சமம்..இன்னும் சொல்லப் போனால்..தான் துயரம் அடைந்தாலும்..ஆண் குழந்தையாய் இருந்தாலும், பெண் குழந்தையாய் இருந்தாலும் பாகுபாடின்றி பிள்ளைகள் நலம் நாடுபவள் அவள்.

5)ஆண்களுக்கு, சமையல், சலவை,வீட்டு துப்புரவு ஆகிய வேலைகளை சொல்லித் தருவதில்லையாம்.அவன் இதற்கெல்லாம் சுயமாய் பழகிவிட்டால்..அவளை விட்டுவிடுவானோ என எண்ணி.அவர்கள் நிரந்தரமாக தன்னை நம்பி வாழ வேண்டியவர்களாக மகனை ஆக்கிவிடுகிறார்களாம்.கட்டுரையாளர், ஜாக்கிரதையாக இந்த இடத்தில் சில தாய்மார்கள் என்று எழுதிவிட்டார்.

அவர்களுக்கு வீட்டு வேலையெல்லாம் சொல்லித்தராதது..தாய் அல்ல..சமுதாயத்தின் ஆணாதிக்கம்..
அதுவும் சில காலமாக மாறி வருகிறது.இன்று பல வீடுகளில் அனைத்துப் பொறுப்பையும் இரு பாலாரும் கவனித்துக் கொள்கின்றனர்.
நாளடைவில் முற்றிலும் மாறிவிடும்.

தாய், அன்பெனும் ஆயுதத்தை பயன்படுத்தி மகனை அடிமையாக்கிவிடுகிறார்களாம்.இது தெரியாமல்'எங்க அம்மா மாதிரி வருமா?' என கண்மூடித்தனமாக ஆண் நினைக்கிறானாம்..

அபூர்வ கண்டுபிடிப்பு..

தாயின் அன்பிற்கும், பாசத்திற்கும் காரணம்..அவள் சுயநலம் என்னும் அர்த்தத்தில் கட்டுரையை முடிக்கிறார் இவர்.

இவர் தாயையும், அவர் அன்பையும் புரிந்துக் கொண்டதில் ஏதோ ..தவறிழைத்திருக்கிறார் என்றே தோன்றுகிறது.

நகைச்சுவை தமிழ்த் திரைப்படங்கள் - 1 அடுத்த வீட்டுப் பெண்

தமிழ்த் திரைப்படங்களில் சிறந்த நகைச்சுவைப் படங்கள் என கணக்கெடுத்தால்..விரல் விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே இருக்கும்.

அப்படிப்பட்ட சில படங்களைக் காண்போம்.

முதலாவதாக...மறக்கமுடியாத படம், அஞ்சலி பிக்சர்ஸ் 'அடுத்த வீட்டுப் பெண்'

1960ஆம் ஆண்டு இப்படம் வந்தது.டி.ஆர்.ராமச்சந்திரன்,தங்கவேலு,சாரங்கபாணி,ஃப்ரண்ட் ராமசாமி.ஏ.கருணாநிதி..ஆகிய சிரிப்பு நடிகர்கள் பட்டாளமே நடித்திருந்தனர்.அஞ்சலிதேவி கதாநாயகியாய் நடித்ததுடன்..இப்படத்தின் தயாரிப்பாளராயும் இருந்தார்.படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகியும்..இன்றும் பார்த்தால் ரசிக்கவைக்கும் படம்.

கதாநாயகன்..அடுத்த வீட்டுப் பெண்ணை காதலிக்கும் படம்.அவளைக் கவர தான் ஒரு பாடகன் என்று சொல்லி..தான் வாயை அசைக்க..நண்பனை பாட வைக்கும் யுக்தி முதலில் இப்படத்திலேயே காட்டப்பட்டது.பின்னாளில் இதே போன்ற காட்சி பல படங்களில் காபி அடிக்கப்பட்டது.

ஆதி நாராயண ராவ் இசையில்..தஞ்சை ராமையாதாஸ் எழுதியிருந்த அனைத்துப் பாடல்களும் அருமை.

பி.சுசீலா பாடிய, 'கன்னித் தமிழ் மனம் வீசுதடி' 'மலர்க்கொடி நானே' ஆகியபாடல்களும்

பி.பி.எஸ்.பாடிய, 'மாலையில் மலர்ச் சோலையில்' வாடாத புஷ்பமே' ஆகிய பாடல்கள் தேனாய் இனிப்பவை.

'கண்ணாலே பேசி..பேசி' என்ற பாடலில் ராமையாதாஸ் சொல் விளையாட்டு விளையாடி இருப்பார்..
கில்லாதே..செல்லாதே,துள்ளாதே
வாடுதே,ஓடுதே,ஆடுதே
அழகிலே,நினைவிலே,மலரிலே,வலையிலே
என்றெல்லாம்..அருமை..அருமை..

இப்படம் தமிழ்,தெலுங்கு,ஹிந்தி ஆகிய மொழிகளில் வந்து மாபெரும் வெற்றி பெற்றது.

இயக்குநர் வேதாந்தம் ராகவையா..

இன்று நகைச்சுவை படம் எடுக்க நினைக்கும்..தயாரிப்பாளர்கள் கதை வேண்டி நின்றால்..இப்படத்தை ரீமேக் செய்யலாம்.அப்படி ரீமேக்கில் வந்தாலும் இப்படம் மாபெரும் வெற்றி பெறும் என நிச்சயம் சொல்வேன்.

அடுத்த இடுகையில் வேறொரு நகைச்சுவை படம் பற்றி பார்ப்போம்.

Sunday, September 19, 2010

தமிழுக்கு கொம்பு முளைக்க வைத்தவர்..கொஞ்சி விளையாடும் தமிழ்-22

தமிழில் 'எ' கரம்.'ஒ' கரம் உயிரெழுத்துக்களின் மேலும், உயிர்மெய் எழுத்துக்களின் மீதும் குறில் ஓசைக்குப் புள்ளி வைத்துக் கொண்டிருந்தார்கள்.அவைகளின் நெடில் ஓசைஎக்கு புள்ளி வைக்காமல் விட்டார்கள்.

உதாரணமாக..கெ,பெ,செ இவைகள் மீது புள்ளி வைத்தால் குற்றெழுத்துக்கள்

கெ,பெ,செ எனப் புள்ளி வைக்காமல் எழுதினால் நெட்டெழுத்துக்கள்..என உச்சரிக்கப் பட்டன.

தொல்காப்பியக் காலத்திலிருந்து வழங்கி வந்த இந்த முறையை 18 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் வீரமாமுனிவர் மாற்றி அமைத்தார்.

நெட்டெழுத்துக் கொம்பை மேலே சுழித்தெழுதும் வழக்கத்தை உண்டாக்கினார்..(கே,பே,சே)

இந்த அருமையான சீர்திருத்தம் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு விட்டது.

இந்த வீரமாமுனிவர் தான் தேம்பாவணி எழுதியவர்..தவிர்த்து, இன்று வரை பிரபலமாயுள்ள பரமார்த்தகுரு கதைகளை எழுதியவர் ஆவார்.

அதுபோல..தேவையில்லாத கொம்பை நீக்கியவர் தந்தை பெரியார் ஆவார்..

னை, லை,ணை ஆகியவை முன்னர் கொம்பு முளைத்து எழுதப்பட்டவை. அவற்றை மாற்றி..மற்ற எழுத்துகள் போல (கை,சை) எழுத்தில் கொண்டுவந்தார்.

Saturday, September 18, 2010

மூன்றாம் பிறை..

முந்தைய பேருந்தில்

கடைசி இருக்கைகளில்

மூன்றாம் பிறை நிலவுகள்


2)தக்காளி விலை என்ன

என்றவன்

கன்னங்கள் தக்காளியாயின


3)தேங்கிய தண்ணீரில்

டீசல் உண்டாக்கிய

வானவில்


4)சாலையோரப் பூக்களாய்

பறிப்பாரின்றி

முதிர் கன்னிகள்

Friday, September 17, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்..(17-9-10)

காங்கிரஸிற்கு 110 தொகுதிகளும், ஆட்சியில் பங்கும் வேண்டும் என்று கூட்டணிக் கட்சியிடம் கேட்குமாறு காங்கிரஸ் தலைமையை வலியுறுத்துவோம் என்கிறார் இளங்கோவன்

2) ப.சிதம்பரத்தின் பிறந்த நாள் நேற்று..ஆனால் , பத்திரிகையாளரான சாயல்ராமை இரு தினங்களுக்கு முன்னதாக 14ஆம் தேதியே போலீசார் அழைத்துச் சென்று சட்ட விரோதமாக காவலில் வைத்து..நேற்று விடுவித்தனராம்.இந்த சாயல்ராம்..வேறுயாருமில்லை..கடந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது ..ப.சிதம்பரம் மீது செருப்பை வீசியவர்

3)அமெரிக்க அதிபர் ஒபாமா தனது இந்திய சுற்றுப்பயணத்தின் போது, பொற்கோவிலுக்குச் செல்வார் என அமெரிக்காவில் உள்ள சீக்கிய அமைப்பு தெரிவித்துள்ளது

4)சீனா, தரையில் இருந்து தரையிலும்,தரையில் இருந்து விண்ணிலும் தாக்கும் அதி நவீன ஏவுகணைகளைக் கொண்ட போர்க்கப்பலை பாகிஸ்தானுக்கு வழங்கியுள்ளது.இது சீனா ..பாகிஸ்தானுக்கு வழங்கும் 3ஆவது போர்க்கப்பல் ஆகும்.

5)கிரிக்கெட்டில் ஊழலை எக்காரணம் கொண்டும் ஏற்கமுடியாது என சர்வதேச கிரிக்கெட் கவுன்ஸில் தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.(ஊழல் அரசியல்வாதிகளுக்கு மட்டுமே..சொந்தம் என்கிறாரோ)

6)சிறந்த பிண்ணனி இசைக்காக 'பழசிராஜா' மலையாளப் படத்திற்காக இளையராஜாவிற்கு தேசியவிருது வழங்கப்பட்டுள்ளது..தமிழனை வேறு மொழிபடங்கள் தான் அங்கீகரிக்கன்றனவோ!!ராஜாவின் பிண்ணனி இசை அஞ்சலி படத்தில் சூபர்.அப்படத்திலிருந்து ஒரு பாடல்..




7)சென்றவாரம் நான் படித்த இடுகைகளில் தமிழா தமிழா வின் மகுட இடுகையாக சந்தனமுல்லையின் இந்தப்பதிவை தேர்ந்தெடுக்கிறேன்.வாழ்த்துகள் முல்லை

Thursday, September 16, 2010

பொருளாதார வளர்ச்சி மட்டுமா? ஊழலும்தான் பெருகுகிறது!




காலனியாதிக்கத்தின் கீழ் இருந்த நாடுகளில் சுதந்திரத்திற்குப் பிறகு இந்தியாதான் பொருளாதார வளர்ச்சியில் சிறப்பிடம் பிடித்திருக்கிறது என்ற செய்திகள் நம் காதில் தேனாகப் பாயும் அதே வேளையில் சுதந்திர இந்தியாவின் ஊழலும் விண்ணை முட்டிக்கொண்டிருக்கிறது என்ற எட்டிக்காயையும் நாம் சீரணித்துதான் ஆகவேண்டுமா?

வாஷிங்டனில் உள்ள 'உலக நிதியியல் நேர்மை' (குளோபல் ஃபினான்சியல் இன்டெக்ரிட்டி) என்ற அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் 2000ஆம் ஆண்டு முதல் 2008ஆம் ஆண்டு வரை இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்றுள்ள கறுப்புப் பணம் 125 பில்லியன் டாலர்கள் (ஒரு பில்லியன் என்பது 100 கோடி ரூபோய்) என்று மதிப்பிட்டுள்ளது.

இந்தப் பணம் இந்தியாவில் சம்பாதிக்கப்பட்டு அயல்நாட்டுக்க்கு சட்டவிரோதமாக, கறுப்புப் பணமாகச் சென்றுள்ளது. என்று கார்லி கர்சியோ என்ற பொருளாதார நிபுணர் தனது வலைப்பதிவில் கூறியுள்ளார். இவர் உலக நிதியியல் நேர்மை அமைப்பில் உள்ளவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒரு புறம் புறப்பொருளாதார வளர்ச்சி இருந்து கொண்டிருப்பதாக மத்திய அரசு தம்பட்டம் அடித்துக் கொண்டாலும் மறுபுறம் இணைப்பொருளாதாரமாக இந்த கள்ளபொருளாதாரமும் நிழல் பொருளாதரமும் இதனை விட துரித கதி வளர்ச்சியடைந்துள்ளது.

பணம் பெரிய அளவில் வந்தாலும், ஏழைகள் ஏழ்மையிலேயே தொடர்ந்து நீடிக்கின்றனர். ஊழல் அரசியல்வாதிகளின் கறுப்புப் பணமும் கார்ப்பரேட் நிறுவனக் கறுப்புப் பணங்களும் மக்களின் ஏழ்மையைப் போக்க உதவ வேண்டி மைய நீரோட்ட பொருளாதாரத்திற்கு வந்து சேர்ந்திருக்க வேண்டிய பணமே. ஆனால் இது அரசியல் மற்றும் தனியார்துறை மேட்டுக்குடி மக்களின் சூறையாடலுக்குட்பட்டுள்ளது என்பதைத்தான் இது காட்டுகிறது.

பொருளாதாரம் வளர்கிறது, ஆனால் வறுமைச்சாவு அதிகரிக்கிறது. பொருளாதாரம் வளர்கிறது ஆனால் குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைவால் சாவு அதிகரிக்கிறது. ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி ஆகியவை இன்னும் முழுமையடையவில்லை. வடமாநிலங்களின் பல கிராமங்களுக்கு இன்னமும் மின்சாரம் கிடைக்கவில்லை. போக்குவரத்து வசதிகள் கிடையாது. சாலை, மருத்துவமனை வசதிகள் கிடையாது. விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கின்றனர்.

ஆனால் பெருநகரங்களில் கட்டப்பட்டும் பாலங்களும் பளபள வாழ்க்கை முறையும் இந்தியர்களை நாம் ஏதோ பயங்கரமாக வளர்ந்து விட்டோம் என்ற மாயையைகு உட்படுத்தி வருகின்றன.

காரணம் ஊழல். சுவிஸ். வங்கியில் வேறு எந்த நாட்டினரின் கறுப்புப் பணத்தை விட இந்தியர்களின் கறுப்புப் பணமே அதிகமாக உள்ளது என்று செய்திகளெல்லாம் கூறிவருகின்றன. தலை கிறுகிறுக்க வைக்கும் அளவுக்கு சுவிஸ்.வங்கியில் இந்தியக் கறுப்புப்பணம் முடங்கியுள்ளது.

இந்தக் கறுப்புப் பணம் விவகாரத்தை அவ்வப்போது வெளியே கொண்டுவரப்போவதாக அரசியல் கட்சிகள் சூளுரைக்கும் ஆனால் எதுவும் நடக்காது. பிரதமரும் இது குறித்து பேசிக்கொண்டுதான் இருக்கிறார்.

சில விஷயங்கள் இந்த நாட்டில் ஒரு போதும் நடைபெறாது என்பதில் நாம் தெளிவாக இருக்கலாம். ஏழமைக்குக் காரணம் எதுவென்று யோசிக்கவேண்டிய அவசியமில்லை. நிச்சயம் கறுப்புப் பணம் எனும் அரக்கன் இதில் பெரும்பங்கு வகிக்கிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

ஒரு சில நாடுகள் கூட்டாக இணைந்து சுவிஸ். வங்கிக் கணக்கு விவரங்களைப் பெற முடிவு செய்து முயற்சி செய்தாலும் அந்த விவரங்கள் எந்த அளவுக்கு பொதுமக்களிடத்தில் வெளியிடப்படும் என்பதெல்லாம் உறுதியாகத்தெரியாத விஷயங்கள்.

(நன்றி வெப்துனியா )

Wednesday, September 15, 2010

நெருக்கடியான நிலையில் வை.கோ.,

தி.மு.க.,விற்கு எதிராக தமிழகத்தில் ஆவேச அலை வீசுவதாகவும், தி.மு.க., இனி வெற்றி பெற முடியாது என்கிறார் வை.கோ., அ.தி.மு.க., கூட்டணியே வெற்றி பெறும் என சமீபத்தில் செய்தியாளர்களிடம் வை.கோ., கூறினார்.

இந்நிலையில்..விஜய்காந்திற்கும்..அ.தி.மு.க.,விற்கும் ஒரு உடன்பாடு எட்டப்பட்டு விட்டதாகவும் தே.மு.தி.க.,60 இடங்களில் போட்டியிடும் என்றும் ஒரு அதிகாரப் பூர்வமற்ற செய்தி ஒன்றும் கூறுகிறது.இது உண்மையானால் மீத முள்ள தொகுதிகளில் பெரும்பான்மை அ.தி.மு.க. எடுத்துக் கொள்ளும்.தோழமைக் கட்சிகளுக்கு சொற்பத் தொகுதிகளே கிடைக்கும்.அப்போது வை.கோ.விற்கு எதிர்பார்த்த அளவு தொகுதிகள் கிடைப்பதற்கான வாய்ப்புகள் குறைவே!

சென்ற சட்டசபைத் தேர்தலில்..இங்கும்,அங்கும் அவர் அல்லாடியது போல இம்முறையும் அவரை பந்தாடுவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம்.ஆகவே சிறிது காலம் அவர் தி.மு.க., வை கண்மூடித்தனமாக எதிர்ப்பதை தவிர்ப்பது நலம் என்றே தோன்றுகிறது.

இதற்கிடையே விடுதலை சிறுத்தைக் கட்சி திருமாவளவன், காங்கிரஸ் கட்சியின் தலைமையில் சிறிய கட்சிகள் எல்லாம் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைக்கும் என்றும்..தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமையும் என்றும், அதற்கான திட்டம் இருப்பதாகக் கூறியுள்ளார்.

சமீபத்தில் மூப்பனார் நினைவு நிகழ்ச்சியில்..விஜய்காந்த்,இளங்கோவன், ஜி.கே.வாசன் ,திருமாவளவன் ஆகியோர் ஆலோசனை நடத்தியதையும் மறப்பதற்கல்ல.

இந்நிலையில்..மேற்கு வங்க சட்டசபை தேர்தலில்...காங்கிரஸ் கட்சிக்கு மரியாதை, கௌரவம் தராத கட்சிகளுடன் கூட்டணி அமைக்க வேண்டிய அவசியம் இல்லை என்றுள்ளார் ராகுல்.இது திரினாமுல் காங்கிரஸிற்கு மட்டும் சொல்லியிருக்க மாட்டார் என்றும் தோன்றுகிறது

திரைப்பட இயக்குனர்கள் - 5 எல்லிஸ் ஆர்.டங்கன்


பொன்முடி படத்தில் ஒரு காதல் காட்சியை இயக்குகிறார் (புகைப்படம்-நன்றி தி ஹிந்து)

11-5-1909ல் பிறந்த எல்லிஸ் ஆர்.டங்கன் ஐரீஷ் நாட்டைச் சேர்ந்த அமெரிக்கன் ஆவார்.1936 ஆண்டு முதல் 1950 வரை இந்தியாவில் பல தமிழ், ஹிந்தி படங்களை இயக்கினார்.

எம்.ஜி.ஆர், எம்.கே.ராதா, பாலையா, என்.எஸ்.கிருஷ்ணன் ஆகியோரை திரைக்கு அறிமுகம் செய்த பெருமை இவருக்கு உண்டு..

நந்தனார் என்னும் தமிழ் படத்தில்..இவர் பங்கு இருந்தாலும்..இவர் இயக்கிய முதல் படம்..எஸ்.எஸ்.வாசனின் கதையான சதி லீலாவதி ஆகும்.இது எம்.ஜி.ஆரின் முதல் படம்.1936ல் இப்படம் வெளிவந்தது.

பின், சீமந்தனி, இரு சகோதரர்கள்,அம்பிகாபதி,சூர்ய புத்திரி,சகுந்தலா,காளமேகம்,தாசிப்பெண்,வால்மீகி,மீரா, பொன்முடி ஆகிய படங்களை இயக்கினார்.

சகுந்தலா, மீரா ஆகிய படங்களில் எம்.எஸ்.சுப்புலட்சுமி நடித்தார். .மீரா படத்தை ஹிந்தியிலும் இயக்கினார்

பொன்முடி என்ற படம்..புரட்சிக் கவிஞரின் கதை ஆகும்.

இவர் இயக்கிய கடைசி படம் கலைஞரின் மந்திரி குமாரி ஆகும்.

தமிழ்த்திரைப்பட வரலாற்றில்..கண்டிப்பாக இவருக்கு ஒரு இடம் உண்டு.இந்தியாவில் இருந்த 15 ஆண்டுகளில் 17 படங்களை இயக்கியுள்ளார்.


1950க்குப் பின் அமெரிக்கா திரும்பியவர் 2001ல் அமரர் ஆனார்.

அந்நாளில் தமிழ்த் திரையில் அமெரிக்க கலாசாரத்தை பரப்பியதாகவும்..ஊடகங்கள் இவரை குறை சொன்னதுண்டு.

ஆனால்..திரைப் படங்களில் காபரே நடனத்தை அறிமுகப்படுத்தியது இவரே ஆவார்.

Tuesday, September 14, 2010

தமிழ்மணத்திற்கு நன்றி






நம் எண்ணங்களை அச்சில் பார்த்தால் ஏற்படும் மகிழ்ச்சிக்கு இணை..இணையத்தில் திரட்டிகளில் பார்ப்பது.

இந்த அரும் பணியை இலவசமாக பிளாக்கர்களுக்கு செய்து வருகிறது பல திரட்டிகள்.

அவற்றுள் தமிழ்மணம்,இண்ட்லி,சங்கமம்,தமிழ்வெளி,திரட்டி ஆகியவற்றின் பணி பாராட்டிற்கு உரியது.

இந்நிலையில்...சமீபத்தில்..தமழ்மணத்தில் இடுகைகளை இணைப்பதில் எனக்கு சிக்கல் இருந்தது.

அதை தமிழ்மணத்திற்கு மின்னஞ்சலில் தெரிவித்திருந்தேன்..

செல்வராசு அவர்களிடமிருந்து..சரி பார்ப்பதாக பதில் வந்தது.இப்போது..பின் தமிழ்மணத்தின் கருவிப்பட்டையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. வெகுவிரைவில் இடுகைகள் இணைக்கப்படுகின்றன.

நான் அனுப்பிய மின்னஞ்சலை ஞாபகம் வைத்துக் கொண்டு..கீழ்கண்ட மின்னஞ்சல் எனக்கு அனுப்பப்பட்டது.


'உங்களுக்கு இப்போது பிரச்சினை இல்லை என நினைக்கி்றேன்.

புரிந்துணர்வுடன் தொடரும் உங்களின் ஒத்துழைப்புக்கு நன்றி.

இரா. செல்வராசு
தமிழ்மணம் உதவிக்குழு'

பதிவாளர்களுக்கு அரும் பணி ஆற்றிவரும்..தமிழ்மணத்திற்கு நன்றி சொல்லும் அதே நேரத்தில்..எனது பிரத்தியேக நன்றியை நண்பர் செல்வராசுவிற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, September 13, 2010

திருப்பதி சென்று திரும்பி வந்தால்....


திருப்பதி சென்று திரும்பி வந்தால்....

கண்ணதாசன் எழுதிய திரைப்படப் பாடல் ஒன்று உண்டு...அது..

'திருப்பதி சென்று திரும்பி வந்தால் ஒரு திருப்பம் நேருமடா..-நம்
விருப்பம் கூடுமடா' என்றபாடல்..

இது கண்ணதாசனின் இறை நம்பிக்கை.

அதுபோல வாழ்வில் நமக்கும் பல சமயங்களில்..எதிர்பாரா திருப்பம் ஏற்பட்டு..வாழ்க்கைப் பாதையையே மாற்றி அமைத்ததுண்டு.

'பராசக்தி' என்ற படம் நடிகர் திலகத்தின் வாழ்வில் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தியது.

அண்ணாவின் மறைவு..கலைஞரின் அரசியல் வாழ்வில்..மா பெரும் திருப்பத்தை ஏற்படுத்தியது..'வடை போச்சே..' என நெடுஞ்செழியனை எண்ண வைத்தது.

ரஜினி, கமல் ஆகியவர்கள் வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியவர் கே.பாலசந்தர்..

பாரதிராஜா வருகை..தமிழ்த் திரையில் மற்ற தயாரிப்பாளர்களையும் கிராமத்தை நோக்கி ஓடும் திருப்பத்தை ஏற்படுத்தியது.

அவசரகால அறிவிப்பு இந்திரா காந்தியின் அரசியல் வாழ்க்கையில் சிறு மாற்றத்தை ஏற்படுத்த..மொரர்ஜியின் பிரதமர் ஆகும் ஆசை நிறைவேறிய திருப்பத்தை ஏற்படுத்தியது.

அரிசி தட்டுப்பாடு..தமிழகத்தில் காங்கிரஸ் ஆட்சி மறையும் திருப்பத்தையும்...

வெங்காயத் தட்டுப்பாடு ஒரு சமயம் பா.ஜ.க., ஆட்சி மாறவும் காரணமாய் அமைந்த துண்டு.

பெரியாரின் மணம் ஒரு திருப்பத்தை ஏற்படுத்தி..தி.மு.க., உருவாகக் காரணமாய் அமைந்ததுண்டு..

வாகன ஓட்டிகள்..பலவேலைகளில்..திருப்பங்களை சரியாக பார்க்காததால் போக்குவரத்து போலீசிடம் மாட்டிக் கொண்டதுண்டு.

ஆகவே...திருப்பங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திவிடும் சக்தியைக் கொண்டவை..

இப்படிப்பட்ட ஒரு திருப்பம் தமிழ் வலைப்பதிவாளர் இடையே என்றேனும் கண்டிப்பாக உண்டாகும்..

அன்று..

பெண் பதிவாளர்கள் .ஆண் பதிவாளர்களை தவறாக எண்ணும் போக்கையும்..

ஆண் பதிவாளர்களின் ஆணாதிக்கப் போக்கையும்..

சர்ச்சையைத் தூண்டுவோர் போக்கையும்

கண்டிப்பாக மாற்றி..அனவரும் ஒரே குடும்பம் என எண்ணும் எண்ணத்தை அனைவரிடமும் உண்டாக்கும் என நம்புவோம்.


Sunday, September 12, 2010

காதலனும்..சந்தேகக் காதலியும்...கொஞ்சி விளையாடும் தமிழ் - 21




(132- புலவி நுணுக்கம் தொடர்ச்சி)

முந்தைய பதிவிற்கு

எதற்கெடுத்தாலும்..சந்தேகப் படுகிறாளே..இவள் நம் மீது சந்தேகப் படக்கூடாது, அதே நேரம் அவளை மகிழ்விக்கவும் வேண்டும்..என்ன செய்வது என எண்ணிய காதலன்..'உன்னை நினைத்தேன்' என்கிறான்..

ஆகா..இவர் நம்மை நினைத்தாரே என காதலி மகிழ்வாள் என எண்ணுகிறான்..அவளோ..'அப்படியானால்..இவ்வளவு நாளாக என்னை மறந்திருந்தீரா..ஏன் மறந்தீர்? என அவனிடம் ஊடல் கொள்கிறாள்.காதலன் பாடு திண்டாட்டம் ஆகிவிடுகிறது..அந்த சமயம் அவனுக்கு தும்மல் வர..தும்முகிறான்..'யார் உன்னை நினைத்தார்கள்..என்னைவிட முக்கியமானவர் யார்..' என ஊடல் மாற அழத் தொடங்குகிறாள்.அவனுக்கு அடுத்த தும்மல் வர, எதற்கு வீண் வம்பு..என தும்மலை அடக்குகிறான்.அதைப் பார்த்த அவள்..'ஓஹோ..உமக்கு நெருக்கமானவர் உம்மை நினைப்பதை..என்னிடம் இருந்து மறைக்க..வரும் தும்மலை அடக்குகிறீர்களா..என்கிறாள்.

அவளை சமாதானப் படுத்த வேறு வழி அறியாத அவன் தன்நிலை இறங்கி, பணிந்து..அவள் ஊடலை நீக்கி..மகிழ்விக்க எண்ணுகிறான்..அப்போதும் அவனிடம்..'இப்படித்தான் மற்ற பெண்களிடமும் இப்படித்தான் அசடு வழிய நடந்துக் கொள்வீரா?' என்று கோபப் படுகிறாள்.

அவள் அழகில் மயங்கியவன்..அவளை இமைக் கொட்டாமல் பார்க்கிறான்..இதற்கும் கோபமுற்று..இப்படி என்னைப் பார்த்து..யாருடன் என்னை ஒப்பிடலாம் என என்னை இப்படி பார்க்கிறீர்..என கோபத்தின் உச்சிக்குப் போகிறாள்.

உள்ளினேன் என்றேன்மற் றென்மறந்தீர் என்றென்னைப்
புல்லாள் புலத்தக் கனள் -1316

('உன்னை நினைத்தேன்' என்று காதலியிடம் சொன்னதும்..'அப்படியாயின் நீர் என்னை மறந்திருந்ததால் தானே நினைத்திருக்க முடியும்?' எனக் கேட்டு "ஏன் மறந்தீர் ?" என்று அவள் ஊடல் கொண்டாள்)

வழுத்தினாள் தும்மினேன் ஆக அழித்தழுதாள்
யாருள்ளித் தும்மினீர் என்று -1317

(தும்மினேன்.. என்னை வாழ்த்தினாள்..உடன் சந்தேகத்துடன்..'யார் உம்மை நினைத்ததால் தும்மினீர்' என்று அழத் தொடங்கினாள்)

தும்முச் செறுப்ப அழுதாள் நுமருள்ளல்
எம்மை மறைத்திரோ என்று -1318

(தும்மலை அடக்கிக் கொள்வதைப் பார்த்தவள்..நீர் உள்ளத்தில் உள்ளவரை என்னிடம் மறைக்கிறீர் என அழுதாள்)

தன்னை உணர்த்தினும் காயும் பிறர்க்கும்நீர்
இந்நீரர் ஆகுதிர் என்று -1319

(தான் பணிந்து போனாலும் உடன் இப்படித்தான் மற்ற பெண்களிடமும் நடப்பீரா என்று கோபம் அடைகிறாள்)

நினைத்திருந்து நோக்கினும் காயும் அனைத்துநீர்
யாருள்ளி நோக்கினீர் என்று -1320

(அவளையே நினைத்து பார்த்தாலும்..யாருடன் ஒப்பிட்டு நோக்கினீர் என்று கோபம் கொள்வாள்)

இப்படிப்பட்ட சந்தேகமும்...கோபமும் கொண்ட காதலியுடன் (தலைவியுடன்) காதலன் (தலைவன்) எப்படி காலம் தள்ளுவான்...பாவம் அவன் நிலை

Saturday, September 11, 2010

கோவில், சர்ச் கட்டலாம் என்றால் மசூதி கட்டக் கூடாதா?-ஒபாமா

ஒரு இந்துக் கோவிலை, ஒரு சர்ச்சை, ஒரு யூத ஆலயத்தைக் கட்டலாம் என்றால் ஏன் ஒரு மசூதி கட்டுவதற்கு நாம் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார் அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா.

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து வந்த உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுர கட்டடங்கள் விமானம் கொண்டு தீவிரவாதிகளால் தகர்க்கப்பட்டதன் 9வது நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது.

இரட்டைக்கோபுரம் இருந்த இடத்திற்கு அருகே ஒரு இஸ்லாமிய வழிபாட்டு மையம் கட்டப்படவுள்ளது. ஆனால் இதற்கு அமெரிக்கர்களிடையே கடும் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அதிபர் ஒபாமா, நிச்சயம் அங்கு மசூதி கட்டப்படும் என்று கூறி வருகிறார்.

இந்த நிலையில் இரட்டைக் கோபுர தாக்குதல் சம்பவ நினைவு தினத்தையொட்டி அவர் நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது ஒபாமா கூறியதாவது...

நியூயார்க் மசூதி விவகாரம் குறித்து நான் ஒன்றை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும், அவரது மதத்தை சுதந்திரமாக பின்பற்ற அனைத்து உரிமைகளும் உள்ளது என்பதில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டுள்ளது அமெரிக்கா .

இந்த பூமியில் உருவாக்கப்பட்ட அனைத்து ஆண்களும், பெண்களும் சமமானவர்களே. அனைவருக்கும் சம உரிமைகள் உள்ளன. அனைவரும் அவரவர் மதத்தை சுதந்திரமாக கடைப்பிடிக்கலாம்.

ஒரு இடத்தில் உங்களால் சர்ச் கட்ட முடியும்போது, ஒரு யூத ஆலயம் கட்ட முடிகிறபோது, ஒரு இந்துக் கோவிலை கட்ட முடியும் என்கிறபோது, ஏன் ஒரு மசூதியையும் கட்ட முடியாது.

செப்டம்பர் 11 சம்பவத்தில் பலியான அனைவருக்காகவும் நான் அனுதாபப்டுகிறேன். அவர்களது குடும்பங்களைச் சேர்ந்தவர்களை நான் முன்பு சந்தித்துள்ளேன். அவர்களது இழப்பும், துயரமும் நீண்டது, அவ்வளவு சீக்கிரம் அடங்க முடியாதது என்பதை நான் உணர்கிறேன், அவர்களது சோகத்தில் நானும் பங்கேற்கிறேன். அனைத்து அமெரிக்கர்களும் இந்தசோகத்தில் பங்கேற்கின்றனர் என்றார் ஒபாமா.

(நன்றி தட்ஸ்தமிழ்)

Friday, September 10, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல்(10-9-10)

நகமும் சதையும் ஒட்டிக்கொண்டு இருந்தாலும்..நகம் சதையிலிருந்து பிய்த்துக் கொண்டு வந்தால் வலிக்கத்தான் செய்யும்.ரத்தம் பெருக்கெடுக்கவே செய்யும்.ஆனாலும் புண் ஆறுவது இல்லையா..அது போல நாட்கள் ஆக ஆக மன வேதனையும் கொஞ்சம் கொஞ்சமாக ஆறிவிடும்..ஆகவே எப்போதும் நிதானத்தை இழப்பது தவறு.

2)உறவு என்பது தண்ணீரில் எண்ணெய் கலப்பது போல இருக்கக் கூடாது.தண்ணீரில் பால் கலந்தது போல இருக்க வேண்டும்.

3)கார் நன்றாக இருந்தாலும் பயணிக்கும் பாதையும்,ஓட்டுநரும் முக்கியம்.பாதை நன்றாக இருந்தால் பயணம் நன்றாய் இருக்கும்.ஓட்டுநர் நன்றாக இருந்தால் பயணம் பாதுகாப்பாய் இருக்கும்.வாழ்க்கைக்கும் இது பொருந்தும்

4)Marriage - It is an agreement..in which a man loses his bachelor's degree and a woman gains her masters

5)ஃபோட்டோகிராபி தொழிலில் முன்னேற திறமை அவசியமா? அதிருஷ்டம் அவசியமா
இரண்டுமில்லை..காமிரா அவசியம்

6) இந்த வாரம் நான் ரசித்த ஒரு விளம்பரம்




Wednesday, September 8, 2010

சிந்து சமவெளி - போலீசார் விசாரணை



சிந்து சமவெளி பட விவகாரத்தால் தனது கார் உடைக்கப்பட்டதாகவும், இந்தப் படத்தில் விவகாரமான கேரக்டரில் நடித்ததால் தனக்கு மிரட்டல் வருவதாகக் கூறிய நடிகை அனகாவிடமும் போலீசார் விசாரணை நடத்தினர்.

சாமியிடம் நடத்தப்பட்ட விசாரணையின்போது அவர் மீதே போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

கார் உடைக்கப்பட்டது தொடர்பாக அவர் போதிய விவரங்ளைத் தரவில்லை என்றும், அவரை செல்போனில் மிரட்டியதாகக் கூறப்படும் விஷயத்திலும் அவர் மீதே போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் தெரிகிறது.

படத்தை ஓட வைக்க சாமியே திட்டமிட்டு இந்த பரபரப்பை கிளப்புகிறாரோ என்ற சந்தேகம் போலீசாருக்கு ஏற்பட்டுள்ளது.

அவரோ, இந்த மிரட்டல் பற்றி இயக்குநருக்குத்தான் தெரியும் என்று நழுவிவிட்டார்.

மிரட்டல் ஆசாமிகள் குறித்து முன்னுக்குப்பின் முரனாண தகவல் கொடுத்து வருவதால் படத்துக்கு பப்ளிசிட்டி தேட சாமி இப்படிச் செய்தாரா என்று போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது.

அவர் தவறு செய்தது உறுதியானால் அவரையே கைது செய்யவும் போலீஸார் திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

இந் நிலையில் படத்தில் மாமனாருடன் கள்ளக் காதலில் ஈடுபடும் மருமகள் கேரக்டரில் நடித்ததால் தனக்கும் மிரட்டல்க் வந்ததாகக் கூறிய அனகாவிடமும் சென்னை கே.கே.நகர் போலீசார் 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளனர். ஆனால், இந்த மிரட்டல்கள் குறித்து இயக்குனருக்குத்தான் தெரியும் என்று அவர் நழுவியுள்ளார்.

தனக்கு பலரிடமிருந்தும் தொடர்ந்து மிரட்டல்கள் வருவதாகவும் போனிலும் மிரட்டல்கள் வருவதாகவும் அனகா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

(நன்றி தட்ஸ்தமிழ் )

Tuesday, September 7, 2010

வங்கி நிர்வாகத்தினரின் மனிதாபிமானம்






8-9-10

நேற்று தொழிற்சங்கங்கள் நடத்திய நாடு தழுவிய வேலை நிறுத்தத்தால் இயல்பு வாழ்க்கை பல மாநிலங்களில் பாதிக்கப் பட்டது.

விலைவாசி உயர்வு,தொழிலாளர் விரோதக் கொள்கை,தனியார் மயமாக்கல்,காலி பணியிடங்களை நிரப்புதல் போன்ற காரணங்களை வேலை நிறுத்தம் வலியுறுத்தியது.

வங்கி ஊழியர்கள் 5 லட்சத்திற்கும் மேற்பட்டோர் வேலைநிறுத்ததில் கலந்துக் கொண்டனர்.

இப்போது இடிகையின் தலைப்பிற்கு வருவோம்...


வங்கிகளில் ஓய்வூதிய திட்டம் 1993ஆம் ஆண்டு வந்தது.பென்ஷன் விரும்பும் ஊழியர்..அதற்கான விருப்பத்தை தெரிவித்தால்..வங்கியின் வருங்கால வைப்பு நிதிக்கான சேமிப்பு பென்ஷன் நிதியில் சேர்க்கப் படும்.ஓய்வு பெறுகையில்..நமது PF Contribution மட்டுமே தரப்படும்.வங்கி சேமிப்பு பென்சனாக மாதா மாதம் தரப்படும்.அதற்கு விருப்பப் படாதவர்கள்..பென்ஷன் ஸ்கீமிலிருந்து விடுவிக்கப் பட்டு தனது பங்கு,வங்கியின் பி.எஃப்,., பங்கு இரண்டும் ஓய்வு பெறுகையில் பெறலாம்.

நீண்ட கால சேமிப்பு அதிகம் கிடைக்கும் என்பதால் பலர் பென்ஷன் ஸ்கீமில் சேராமல்..PF ஐ ஆப்ட் செய்தனர்.

இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு விருப்ப ஓய்வு திட்டம் அறிவிக்கப் பட்டு..பலர் விருப்ப ஓய்வு பெற்றனர்.அப்போது அவர்களுக்கு கிடைத்த பி.எஃப்.,ஐ பெற்றனர்.அவர்கள் முழு சர்வீஸ் செய்யாத நிலையில் பென்ஷனையும் இழந்து இரு தரப்பு பணம் சேர்ந்தும் குறைந்த அளவே பி.எஃப்., , தொகை கிடைத்தது.

அப்படிப்பட்டவர்களுக்கு..வங்கி வழங்கிய பி.எஃப்., தொகையை வட்டியுடன் திருப்பிச் செலுத்தினால்..பென்ஷன் நவம்பர் 27 /2009 முதல் வழங்கப்படும் என வங்கி நிர்வாகிகளுக்கும்..தொழிற் சங்கங்களுக்கும் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

வங்கியை விட்டு, ஓய்வு பெற்று கிட்டத்தட்ட 10 ஆண்டுகள் கழிந்தும்..ஓய்வு பெற்ற ஊழியர்கள் நலனை உத்தேசித்து..இப்படிப்பட்ட திட்டம் வெளிவந்ததை ஊழியர்கள் அனைவரும் போற்றுகின்றனர்.

இதைப் போன்று பல ஆண்டுகள் முன்னர் ஓய்வு பெற்ற ஊழியர் நலனுக்கான திட்டத்தை இதற்கு முன் கேள்விப் பட்டு இருக்கிறோமா?

ஓய்வு பெற்ற ஊழியர் நலனை மறவாமல்..இத் திட்டம் கொண்டுவர காரணமாயிருந்த அனைவருக்கும் பாராட்டுகள்.

ஈரான் பெண்ணுக்கு 99 கசையடி கொடுத்து தண்டனை-விரைவில் கல்லால் அடித்து மரண தண்டனை




ஈரானைச் சேர்ந்த சகினே முகம்மதி அஷ்டியானி என்ற பெண்ணுக்கு 99 கசையடிகள் கொடுத்து தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. விரைவில் அவரை பொதுமக்கள் மத்தியில் நிறுத்தி கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படவுள்ளது. இதனால் உலகம் முழுவதும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அஷ்டியானிக்கு வயது 40. இரண்டு குழந்தைகளின் தாய். இவருக்கு வேறு ஒரு ஆணுடன் தொடர்பு இருப்பதாக குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்ய தண்டனை விதிக்கப்பட்டது. மேலும், இவரது முகத்தை வெளியில் தெரியும்படி புகைப்படம் வெளியானதற்காக 99 கசையடி தண்டனையும் கொடுக்கப்பட்டது.

கல்லால் அடித்துக் கொல்லும் தீர்ப்புக்கு உலக நாடுகளிலிருந்து கடும் கண்டனங்களும், எதிர்ப்புகளும் எழுந்தன. மேலும் ரம்ஜான் மாதத்தின்போது இவ்வாறு செய்வதற்கு இஸ்லாமிய நாடுகளிலும் கூட கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து தண்டனையை நிறுத்தி வைத்தது ஈரான் இஸ்லாமிய கோர்ட்.

இந்த நிலையில் ரம்ஜான் பண்டிகை முடிந்த பிறகு அஷ்டியானிக்கு கல்லால் அடித்து மரண தண்டனை நிறைவேற்றப்படலாம் என தகவல்கள் கூறுகின்றன. இதை அவரது வழக்கறிஞர் ஜாவித் ஹட்டன் கியான் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், அஷ்டியானிக்கு விரைவில் தண்டனை நிறைவேற்றப்படலாம் என நானும், அவரது இரு குழந்தைகளும் அஞ்சுகிறோம்.

இன்னும் ரம்ஜானுக்கு 3 நாட்களே உள்ளதால் ரம்ஜான் முடிந்தவுடன் தண்டனை நிறைவேற்றப்படும் என அச்சமாக உள்ளது என்றார்.



இதற்கிடையே, இன்னொரு தண்டனையான 99 கசையடிகள் தரும் தண்டனையை நிறைவேற்றி விட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதை ஒரு வழக்கறிஞர் உறுதிப்படுத்தியுள்ளார். இன்னொருவர் சரியாகத் தெரியவில்லை என்று கூறியுள்ளார்.

சிறையிலிருந்து விடுதலையாகி வெளியே வந்த ஒரு பெண்தான், அஷ்டியானிக்கு கசையடி தண்டனை கொடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

(நன்றி தட்ஸ்தமிழ்)

(தர்மபுரி பஸ் எரிப்பு வழக்கில் தூக்கு தண்டனை வழங்கப் பட்டதை எதிர்த்தவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்)

Monday, September 6, 2010

'A Bunch of Jokers'




மக்களுக்கு இலவச கோதுமை வழங்குவது குறித்து சுப்ரீம் கோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.அரசின் கொள்கை வடிவமைத்தலில் நீதிமன்றங்கள் தலையிடக் கூடாது என்பது என் கருத்து....இது நமது பிரதமர் பத்திரிகையாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளது.

உச்ச நீதி மன்றம்..அரசு கிடங்குகளில் வீணாகக் கெட்டுப் போகும் தானியங்களை இலவசமாக ஏழைகளுக்குக் கொடுக்கலாம்..என்று சொன்னபோது..சரத்பவார்..இலவசமாக கொடுப்பது பற்றி உச்ச நீதிமன்ற யோசனையை..ஏற்கமுடியாது எனக்கூறியதும்...நீதிபதிகள் இது யோசனை அல்ல உத்தரவு என்று சொன்னார்கள்.

அதற்கான பிரதமரின் பதில்தான் மேலே சொல்லப்பட்டது..

சரி..விஷயத்திற்கு வருவோம்...

கடந்த 1997 முதல் 2007 வரை 1.83 லட்சம் டன் கோதுமை,6.33லட்சம் டன் அரிசி,2.20 லட்சம் டன் நெல்,111 லட்சம் டன் மக்காச்சோளம் வீணாகி உள்ளன.




ஆண்டுக்கு சரியான பராமரிப்பு இல்லாமல் 50000 கோடி ரூபாய் மதிப்பிற்கான உணவு தானியங்கள் வீணாகின்றன.

தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் என்ற ஆயுதம் மிக முக்கியமானது.'மக்களுக்கு பலனில்லா சட்டம் என்ன சட்டம் ' என்று கேட்கிறது நாட்டின் உச்ச நீதிமன்றம்.

பொருள் வீணாய் போனாலும்..பரவாயில்லை..கொள்கை முக்கியம் என்கிறார் பிரதமர்..ஆனால் அவரே நாட்டில் 37 விழுக்காடு வறுமை கோட்டின் கீழ் உள்ள ஏழைகள் என்கிறார்.

சரி..அவர்களுக்குக் கொடுக்க வேண்டாம்..பள்ளிக் குழந்தைகள் உணவு திட்டத்திற்குக் கொடுக்கலாம்...முதியோர் இல்லங்களுக்குக் கொடுக்கலாம்..நாட்டில் இன்று இல்லாத ஆதரவற்றோர் இல்லங்களா இல்லை?

சரத் பவார்..இலவசமாய் கொடுக்க முடியாது என்றார்..அவர் என்ன சொல்வது நான் சொல்கிறேன் என்கிறார் பிரதமர்.

ஒரு பழைய திரைப்படத்தில்..மருமகள்..பிச்சைக்காரர்க்கு போட ஏதுமில்லை என்பார்...பிச்சைக்காரர் கிளம்புவார்..உடன் மாமியார்..அவரைக் கூப்பிடுவார்.பிச்சைக் கிடைக்கும் என அவர் வருவார்.

பின் மாமியார்..அவ என்ன சொல்றது நான் சொல்றேன்..பிச்சை கிடையாது போ என்பார்.

இப்படி ஒரு நகைச்சுவைக் காட்சி.

கிரிக்கெட் வீரர் மொகீந்தர் அமர்நாத் ஒரு சமயம்..தேர்வுக்குழுவினரை ,'A Bunch of Jokers' என்று சொன்னது இந்த நேரத்தில் ஞாபகம் வந்துத் தொலைக்கிறது.

Sunday, September 5, 2010

கலைஞருக்கு ஒரு கடிதம்




மதிப்பிற்குரிய கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்.

உங்கள் நிர்வாகத் திறமையைக் கண்டு வியக்கும் பல்லாயிரம் மக்களில் நானும் ஒருவன்.

அதே நேரம் உங்கள் தைரியம் , பல நேரங்களில் என்னை வியக்கவைத்துள்ளது.

குறிப்பாக

திருவல்லிக்கேணி, வல்லப அக்ரகாரத்தில் 1967ல் நீங்கள் அண்ணா முன்னிலையில்..நாங்கள் பதவிக்கு வந்தால்..போலீஸ் அமைச்சராகி..காவல்துறையை பழி வாங்குவேன் என்ற அர்த்தத்தில்(சரியான வார்த்தைகள் ஞாபகத்தில் இல்லை) பேசிய பேச்சு..

எமர்ஜென்ஸியில்..காமராஜரை கைது செய்யச் சொல்லியும்..மாட்டேன் என்ற தைரியம்..

பதவி போனாலும் பரவாயில்லை என ஐ.பி.கே.ஃப்., ஐ , முதல்வராயிந்த போதும் வரவேற்க போகாதிருந்தது

கடமை,கண்ணியம்,கட்டுப்பாடு என்னும் தாரக மந்திரத்தை காத்து அண்ணாவிற்குப் பின் கழகத்தை இன்றுவரை கட்டிக் காத்து வருவது

இப்படி உங்கள் மனோதைரியத்தை சொல்லிக் கொண்டே போகலாம்..நீங்கள் பழைய கலைஞராயிருந்தால்..

ஆனால் இப்போது நடப்பது என்ன...

சாதாரண பென்சன் கூட இல்லாத..நடுத்தர ஓய்வு பெற்றவர்..இன்று மகனையும், மருமகளையும் கண்டு பயப்படுவது போல, உங்கள் வாரிசுகளுக்கு நீங்கள் பயப்படுகிறீர்களோ என்ற தோற்றத்தையே ஏற்படுத்துகிறது.

எதையும் தாங்கும் இதயம் வேண்டும் என அண்ணா சொன்னதை சிரமேற்கொண்டவர்..அதை இழந்துவிட்டாரோ என்னும் எண்ணம் உண்டாகியுள்ளது..

அண்ணாவின் நினைவிடத்தில்..சமீபத்தில் நீங்கள் சென்று..அங்கேயே சிறிது நேரம் கண்கலங்கி நின்றதாக ஊடகச் செய்திகள் இதை உறுதிப் படுத்துகிறது.

எல்லாவற்றையும் விட பல தானைத்தலைவர்கள்..அண்ணா,நெடுஞ்செழியன்,மதியழகன்,என்.வி.என்., நீங்கள் ஆகியோர் கட்டிக்காத்த..வளர்த்த திராவிடக் கொள்கைகளை இன்று வளர்க்க வேண்டும் என தாங்கள் கேட்டுக் கொண்டவர்கள்..குஷ்பூ,சி.சுந்தர்....இதை நினைக்கையில் தி.மு.க., தொண்டர் அனைவருக்கும் வேதனைக் கலந்த சிரிப்பே வருகிறது.

இது போதாதென..வைரமுத்து மகன் திருமணத்தில்..ரஜினி..நான் எல்லா விஷயங்களையும்..என் பேங்க் பேலன்ஸ் உட்பட வைரமுத்துவிடம் சொல்வதுண்டு..காரணம்..அவருக்கு எதை வெளியில் சொல்ல வேண்டும்..எதை சொல்லக்கூடாது எனத் தெரியும்..என்று பேசியதற்கு..

நீங்கள் பேசும்போது..'ரஜினிக்கு சொல்லி வைக்கிறேன்..உங்கள் விஷயத்தில் எதையுமே சொல்லாமல் வைத்திருக்கிறார் என நீங்கள் எண்ண வேண்டாம்..சொல்லியிருக்கிறார்..இருந்தாலும் அது என்ன விஷயம் என சொல்ல மாட்டேன்' என்று சொன்னது..அவர்கள் இருவருமே மனதிற்குள் வரவேற்றிருக்க மாட்டார்கள்.

இதை ஏன் நீங்கள் சொன்னீர்கள் என்பது..கிட்டத்தட்ட அனைவருக்கும் புரியும்..ஆனால்..அது இப்போது அவசியம் தானா..என்று தெரியவில்லை.

கடைசியாக..சட்டசபை தேர்தலுக்குப் பின் ஆட்சியை மீண்டும்பிடிப்போமா..என்ற சந்தேகம் உங்களுக்கு வந்துவிட்டது..என சமீபகால உங்கள் நடவடிக்கைகள் சொல்கின்றன..

இலங்கை பிரச்னையில்..தங்கள் மீது அனைத்து தமிழர்களுக்கும் சற்று ஏமாற்றம், கோபம் உண்டு..ஆனால் இன்றுள்ள அரசியல் சூழ்நிலையில் யார் முதல்வராய் இருந்தாலும் இதைத்தான் செய்திருக்க முடியும்.உங்களுக்கு மாற்றாக வர நினைப்பவர் முதல்வராய் இருந்திருந்தால்..இதைவிட நிலை இன்னும் மோசமாய்த் தான் இருந்திருக்கக்கூடும்.

1967லேயே அண்ணாவில் நிறைவேற்ற முடியாத..ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை நீங்கள் நிறைவேற்றி வைத்துள்ளீர்கள்.

இந்த ஆட்சியில்..இது போல பல..நினைத்துக் கூட பார்க்க முடியா திட்டங்கள் நிறைவேறியுள்ளன.

அதற்கு மக்கள் கண்டிப்பாய் ஆதரவு தருவார்கள் என மக்கள் மீது நம்பிக்கை வையுங்கள்..

அதைவிடுத்து..குஷ்பூ போன்றவர்களால்..சில நூறு ஓட்டுகள் கூட கழகத்திற்கு வாங்கித் தரமுடியாது.

அன்புடன்

தங்கள் நலம் விரும்பும் தொண்டன்

Saturday, September 4, 2010

இன்னொரு உமாசங்கர்..





இன்று ஆசிரியர் தினம்..

ஒவ்வொருவருவர் வளர்ச்சிக்கும் ஏணியாய் இருந்து..நல்லதொரு சமுதாயம் வளர உறுதுணையாய் இருக்கும் அனைத்து ஆசிரிய பெருமக்களுக்கும் நன்றியைத் தெரிவிப்போம்.

இந்த நாளில்.. கேரளாவில் இடுக்கி அருகே உள்ள நியூ மேன் கல்லூரியைச் சேர்ந்த மலையாளத்துறை பேராசிரியர் ஜோசப் மத உணர்ச்சியை தூண்டும் விடமாக தேர்வில் கேள்வியைக் கேட்டு, மத உணர்வை களங்கப் படுத்தியதாக கை வெட்டப்பட்டவர்..கல்லூரி நிர்வாகத்தால் டிஸ்மிஸ் செய்யப்பட்டதாக செய்தி வந்துள்ளது.

ஜோசப்..செய்தது..சரியா..தவறா ..என்ற சர்ச்சைக்கு நாம் போக வேண்டாம்.

அவர் அப்படி சிலபஸ்ஸில் இல்லாக் கேள்வியைக் கேட்டிருந்தால்..அதற்கு மாணவர்கள் விடை அளித்திருக்க வேண்டாம்..நடைமுறையில்..பல தேர்வுகளில் அப்படி நடந்து..அதற்கான போனஸ் மதிப்பெண்களை மாணவர்கள் பெற்றுள்ளனர்.

ஆனால்..அவர் நோக்கம்..மத உணர்வைத் தூண்டி விடுவதுதான் ..என்றால்..பணிநீக்கம் என்பது அதிக பட்சத் தண்டனை.

எற்கனவே..இதற்காக ஓரு கும்பல் அவருடைய கையை வெட்டி உள்ளது.

கேள்வித் தாள் தயாரிப்பில் ஜோசப் குற்றம் செய்தது நிரூபிக்கப் பட்டுள்ளது.எனவே டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்' என கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.

தான் ஏதும் தவறிழைக்கவில்லை என்றும்..அதற்கான விளக்கத்தை நிர்வாகத்திடம் அளித்துள்ளதாகவும்..வேலை நீக்கம் தனக்கு அதிர்ச்சி அளித்துள்ளதாகவும் ஜோசப்கூறியுள்ளார்.

ஆசிரியர் தினத்தன்று செய்தித்தாளில் இப்படி ஒரு செய்தி..

நாம் சொல்வதெல்லாம்..'எழுத்தறிவித்தவன் இறைவனாகும்' என்பதை போதிக்கும் ஆசிரியர்கள் அதன்படி தாங்கள் நடந்துக் கொள்ள வேண்டும்.

கழைக்கூத்தாடி..கம்பி மீது பேலன்ஸ் செய்து நடப்பது போல ஆசிரியர் தொழில் இன்றாகிவிட்டது..

இந்நிலையில்.. பெற்றோரும்...எடுத்தற்கெல்லாம் ஆசிரியர் மீது குறை சொல்லாமால்...'தன் குற்றம் காண்பீர்களானால்...'..நல்ல மாணவன் உருவாக்கும் பணியில் நம் பங்கும் இருக்கும்.

உமாசங்கருக்கு குரல் கொடுத்த பதிவர்கள்..ஒரு குற்றத்திற்கு இரண்டு தண்டனை வழங்கப்பட்டுள்ள ஜோசப் பிற்கு குரல் கொடுப்பார்களா?

பெண் எனப்படுபவள்..(கவிதை)


மலையும் மலைசார் இடமும்

குறிஞ்சியாம்

நாட்டு எல்லை காக்கும் மலை

வீட்டின் நலம் காக்கும் நீ

நான் அறிந்த குறிஞ்சி


வயலும் வயல்சார் இடமும்

மருதமாம்

வம்சம் வளர்க்கும் நீயே

நான் அறிந்த மருதம்


கடலும் கடல்சார் இடமும்

நெய்தலாம்

அன்புக் கடல் நீயே

நான் அறிந்த நெய்தல்


என்னைவிட்டு நீ மறைந்த பின்

பாலையானதென் வாழ்வு

Friday, September 3, 2010

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (3-9-10)

ஒரு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை வேறொரு நீதிமன்றம் மேல் முறையீட்டில் மாற்றி வழங்குகிறது.அப்போது..முதல் நீதி மன்ற தீர்ப்பை அடுத்த மன்றம் ஒப்புக்கொள்ளவில்லை என்று தானே ஆகிறது.இதையே தனிமனிதன் சொன்னால்..நீதிமன்ற அவமதிப்பாகிறது.

2)1937ல் தமிழில் முதல் பேசும் படம் 'காளிதாஸ்' வந்தது.இப்படத்தின் நாயகி டி.பி.ராஜலட்சுமி..இவர் திருச்சிக்காரர்.தமிழச்சி..கதாநாயகன் பெயர் நரசிம்மராவ்..இவருக்கு தெலுங்கு மொழி மட்டுமே தெரியும்..இப்படத்தின் நாயகி தமிழ் பேசுவார்..நாயகன் தெலுங்கு பேசுவார்.

3)நம் உடலில் கடினமான பாகம் மண்டை ஓடும், பல் எனாமலும் தான்

4)ஒருநாள் மூச்சுவிட 11000 லிட்டர் காற்று நம் உடலின் உள்ளே போய் வெளியே வருகிறது

5)வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல பேசுவது என்று கூறக் கேள்விபட்டிருக்கிறோம்..ஆனால் வெண்ணெயில் ஊசி ஏற்றுவது போலப் பேசுவது என்றால் என்ன தெரியுமா?..அவ்வப்போது சந்தர்ப்பத்திற்கு ஏற்றாற் போல பேசுவதையே அப்படிச் சொல்வர்.

6)தனிப்பட்ட ஒவ்வொருவருக்கும்..தனிப்பட்ட கருத்து,எண்ணம்,ஆற்றல் ஆகியவை இருக்கும்..அந்த தனிமனித சுதந்திரத்தில் தலையிட நாம் யார்? இதை உணர்ந்தால் நண்பர்களிடையே விரோதம் ஏற்படாது

7)கப்பலோட்டிய தமிழன் என்றால் சிவாஜி என்று அந்த நாட்களில் ஜோக்குகள் வரும்...கூடிய விரைவில்..சிந்து சமவெளி பற்றிய ஜோக்குகளை எதிர்பார்க்கலாம்...வாழ்க தமிழர் பண்பாடு

8)கொசுறு ஒரு ஜோக்

நாம் பிரபல பதிவராக ஆக என்ன செய்ய வேண்டும்
யாரையேனும் திட்டி ஒரு பதிவு போடு..அதற்கு உன்னை பாராட்டி,திட்டி பின்னூட்டம் வரும்..நீ பிரபலம் ஆகிவிடலாம்

ரசிகர்களை மறந்த ரஜினி




மணமக்களுக்கு வாழ்த்துகள்

திரையுலக பிரபலங்கள் பத்திரிகையில் பேட்டி கொடுக்கும் போது 'ரசிகர்கள் தான் என்னை வாழவைக்கும் தெய்வங்கள்' என்று கூறுவதுண்டு,

அதே போன்று..தான் நடித்த திரைப்பட வெற்றி விழா,கலந்துக் கொள்ளும் பொது மேடைகள் இவற்றில் எதை மறந்தாலும் ரசிகர்களை மறக்காமல் அவர்களுக்கு நன்றியை சொல்வதுண்டு.

ஆனால்..அதுவே..தங்கள் வீட்டு விசேஷங்கள் நடந்தால்..ரசிகர்களை..அவர்களை..இந்நிலைக்குக் கொண்டுவந்த , அவர்களை வாழ வைத்த ரசிகர்களை சௌகரியமாக மறந்து விடுவதுண்டு..
அல்லது..கூட்டம் அதிகம் வந்தால் ..சட்டம்..ஒழுங்கு ..பாதிக்கப்படும் என ஒன்றைக் கூறி..அவர்களை புறக்கணிப்பதுண்டு.

அதற்கு..தானும் விதி விலக்கல்ல என்று நிரூபித்துள்ளார்..சூபர் ஸ்டார் ரஜினிகாந்த்.

தன் மகள் சௌந்தர்யா திருமணத்திற்கு..வரும் ரசிகர்களுக்கு சாப்பாடு போடுவது என்பது ரஜினிக்கு முடியாத செயலல்ல..

ஆனால், அவர் செய்ததோ..திருமணத்திற்கு அவர்கள் வர வேண்டாம்..அவர்கள் ஆசி ஒன்றே போதும் என அறிக்கை விட்டு விட்டார்.

ஆமாம்..மேட்டுக்குடி மக்கள் மட்டுமே கூடப்போகும் நிகழ்ச்சிக்கு..'அவன் 'வந்தால் ஒருவேளை கௌரவக்குறைவாகி விடும் என எண்ணினாரோ என்னவோ.

ஆனால்..மாதம் தவறாது ஒரு சிறுதொகையை..லாரன்ஸ் நடத்தும்..மாற்றுதிறனாளிப் பள்ளிக்கு சௌந்தர்யா வழங்கி வருவதால்..அதற்கு நன்றியாக லாரன்ஸ் 5000 பேருக்கு இன்று அன்னதானம் செய்கிறார்.

நடிகர்கள் யாராயிருந்தாலும்..அவர்கள் படம் வரும் அன்று தோரணம் கட்ட, பால்/பீர் அபிஷேகம் செய்ய மட்டுமே ரசிகர்கள் வேண்டும்.

மீத நேரங்களில்..அவன் தேவையில்லை..

ரஜினி மட்டும் விதிவிலக்கா என்ன.

Thursday, September 2, 2010

எம்.பி.,க்கள் என்னும் வியாபாரிகள்





ஒரு ஊரில் ஒரு வியாபாரி இருந்தான்

அவன் வியாபாரம் செழித்து..லாபம் எறிக் கொண்டிருந்தாலும்..தன் குடும்பச் செலவிற்கு தேவையான பணத்தையே லாபத்திருந்து எடுப்பான்.அநாவசிய செலவுகள் செய்ய மாட்டான்.

அவனுக்கு வயதாகிக் கொண்டிருந்ததால்..தன் மகனை தன் வியாபாரத்தில் ஈடுபடுத்தினான்..

ஆனால் மகனோ..தனக்குத் தேவைப்படும் போதெல்லாம்..அவசிய செலவா..அநாவசிய செலவா என்றெல்லாம் யோசிக்காது வியாபாரத்திலிருந்து பணம் எடுக்க ஆரம்பித்தான்.

இப்படியே போய்க் கொண்டிருந்தால்..தான் பாடுபட்டு வளர்த்த வியாபாரமும் அழியும்..கை பணமும் குறையும் என்று எண்ணிய வியாபாரி..மகனை அழைத்து அறிவுரை கூறினான்.

'மகனே..இது நம் வியாபாரம்..நாம் கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை..அநாவசிய தேவைகளுக்கும்..அளவுக்கு அதிகமான செலவுகளுக்கும் உபயோகித்தால்..கூடிய விரைவில் அனைத்தும் இழந்து நாம் வீதிக்கு வர நேரிடும்' என்றான்.

'அப்பா..நீங்கள் சொல்வது புரிகிறது..ஆனால்..நான் சொல்வதையும் கேளுங்கள்..இந்த நாடு..நம்ம நாடு..இந்நாட்டை ஆளும் நபர்களை நாம் தேர்ந்தெடுத்து..நாட்டை அவர்களிடம் ஒப்படைத்துள்ளோம்.ஆனால், அவர்கள் நாட்டை சுரண்டி வருகின்றனர்.அது போதாது என சம்பள உயர்வையும் தங்களுக்கு அளித்துக் கொள்கின்றனர்.16000 சம்பளம் வாங்கியவர்கள்..இனி 50000 வாங்கப் போகிறார்கள்.அலுவலக அலவன்ஸாக 20000 வாங்கிவந்தவர்கள் 40000 வாங்கப் போகிறார்கள்.தொகுதி அலவன்ஸாக 20000 இனி 40000 ஆக ஆகப் போகிறது.தினப்படி 1000 இனி 2000.தவிர்த்து..இனி நீங்கள் வேண்டாம் என மக்கள் சம்பந்தப்பட்ட ஒருத்தரை தேர்ந்தெடுக்காவிடினும்..அவருக்கு ஓய்வூதியமாக 20000 வழங்கப்பட உள்ளது.இப்படி நாம் அமர்த்திய ஒருவர் நம் நாட்டை கொள்ளையடிக்கையில்..நமது வியாபாரத்திலிருந்து நான் பணம் எடுத்துக் கொள்ளக்கூடாதா?' என்றான்.

தந்தை என்ன சொல்வது என்று தெரியாமல் வாய் மூடினார்.

(டிஸ்கி-கேபினட் செயலாளரான அரசு ஊழியர்..வாங்கும் சம்பளத்தை விட..ஒரு ரூபாயாவது சம்பளம் அதிகம் வேண்டும்..எனக் கேட்ட எம்.பி.க்கள்..அரசு ஊழியர் வேலை செய்யாவிடின் (No work-No pay)சம்பளப் பிடித்தம் செய்யப் படுவது போல..பாராளுமன்றத்திற்கு வராவிட்டாலோ..பாராளுமன்றம் நடத்த முடியாமல் ஆர்ப்பாட்டம் செய்தாலோ..சம்பள பிடித்தம் செய்யப்படுமா? 60 வயதுக்கு மேல் ஓய்வு பெற ஒப்புக்கொள்வார்களா?)

Wednesday, September 1, 2010

உண்மையாய் சத்துணவு போட்டது யார்..?




பெருந் தலைவர் காமராஜ் பயணம் செய்யும் போது ஒருநாள்..ரயில்வே கேட் மூடியிந்ததால் நின்றது.அப்போது ஒரு சிறுவன் ஆடு மாடுகளை மேய்த்துக் கொண்டிருந்தான்.

அவனை அருகில் அழைத்தவர்..'ஏம்பா..ஸ்கூலுக்கு போகலியா?' என்றார்.

நான் இஸ்கூலுக்குப் போயிட்டா..யாரு சோறு போடுவாங்க? என்றான் சிறுவன்.

சாப்பாடு கெடச்சா ஸ்கூல் போவியா? என்று தலைவர் கேட்டதற்கு..'ஓ' என்று தலை அசைத்தான் சிறுவன்.

அப்போது தலைவரின் எண்ணத்தில் உதித்ததுதான் மதிய உணவு திட்டம்..

காலப்போக்கில்..எம்.ஜி.ஆர்., தன் ஆட்சியில்..அதே திட்டத்தில் சிறு மாற்றங்கள் செய்து..'சத்துணவுத் திட்டம்' என பெயரிட்டார்.

சத்துணவுத் திட்டம் எம்.ஜி.ஆர்., கொண்டு வந்தது..என விளம்பரப் படுத்தப் பட்டது.

இப்போது கலைஞர் 'எம்.ஜி.ஆர்.கொண்டு வந்த சத்துணவுத் திட்டத்தை மேலும் விரிவாக்கி, அதை உண்மையான சத்துணவாக்கியது(அப்போது எம்.ஜி.ஆர்., காலத்து சத்துணவு என்றது பொய்யா? இதை நான் கேட்கவில்லை..அ.தி.மு.க.வினர் கேட்பர்) தி.மு.க., ஆட்சிதான்.வாரம் 3 முட்டை..முட்டை சாப்பிடாதவர்களுக்கு வாழைப்பழம் என்றாக்கியது தி.மு.க., ஆட்சி என்றார்.

டிஸ்கி- மத்திய (காங்கிரஸ்) அரசின் சாதனைகளையும்..திட்டங்களையும்..மாநில அரசு தன் சாதனையாகக் கூறி வருவதாக..இளங்கோவன் சமீபத்தில்..கூறியதற்கும் இந்த இடுகைக்கும் சம்பந்தமில்லை.

வாய் விட்டு சிரியுங்க..




1) இன்றைய இளைஞர்களின் கனவுக் கன்னியா இருக்கிற நீங்க..அவங்களுக்கு ஏதேனும் சொல்ல ஆசைப்படுகிறீர்களா?
அவங்க விலாசங்களைத் தெரிவிச்சா..அவங்க கனவில நான் வர்ற நேரத்துக்கான என் கால்ஷீட் பணத்தை வாங்க சௌகரியா இருக்கும்

2)தலைவர் பேசும்போது.நடுவே..நடுவே..மீட்டர்..மீட்டர்னு சொல்றாரே ஏன்.
அவர் எதையும் அளந்து தான் பேசுவாராம்.

3)ஆட்டுக்கு தாடி போல நாட்டுக்கு கவர்னர்...இதே போல ஒரு வாக்கியம் சொல்..
ஆட்டுக்கு தாடி போல..ஆட்டோவிற்கு மீட்டர்

4)தமிழ்நாட்டுலே மேல் சபை வந்தா என்ன நடக்கும்?
பல நாடகங்கள் அரங்கேறும்.

5) அந்த டாக்டர் முன்னால துணிக்கடை வச்சிருந்தார்னு எப்படி சொல்ற?
ஆடித் தள்ளுபடி..அறிவிச்சிருக்கார்..ஒவ்வொரு பேஷண்டும்..இன்னொரு பேஷண்டைக் கூட்டிக்கிட்டு வந்தா..ஒருத்தருக்கு வைத்தியம் இலவசமாம்

6)நம்ம பையன் நாலணாக் காசை விழுங்கிட்டான்..
சரி..சரி..டாக்டர் கிட்ட ஐந்து ரூபா காயினை விழுங்கிட்டான்னு சொல்லு..நாலணா ன்னா நம்மைப் பத்தி கேவலமா நினைப்பார்

7) சம்பந்தமில்லாமல் பெயரை வைச்சிருக்காங்க
எந்த படத்துக்கு சொல்றீங்க?
படத்துக்கு இல்ல....இவ்வளவு ஒல்லி ஊசிக்கு குண்டூசின்னு பெயர் வைச்சாங்களே அவங்களைச் சொல்றேன்

8)பதிவர்- வர..வர..பதிவிற்கு வர பின்னூட்டங்கள் குறைஞ்சுப் போச்சே..ஏன்..
பதிவர்2-எல்லாரும்..buzz, facebook,twitter னு மாறிட்டாங்க..