Wednesday, March 21, 2012

திருமங்கலம் ஃபார்முலாவும்...சங்கரன்கோவிலும்...




சங்கரன் கோவிலில் நடந்த இடைத்தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெற்றுள்ளது.

சாதாரணமாக பார்த்தால்..இதில் வியப்பதற்கு ஒன்றுமில்லை.ஆளும் கட்சிதான் இடைத்தேர்தல்களில் வெற்றி பெறும் வாய்ப்புகளை அதிகம் உடையது.தவிர்த்து பணமும் இது போன்ற தேர்தல்களில் இறைத்துவிடப்படுகிறது கட்சிகளால்.

சமீபகாலமாக..இது போல பணத்தால் வெல்லப்படுவதை 'திருமங்கலம் ஃபார்முலா' என்கிறார்கள்.

இச்சமயத்தில் ஒன்றை ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்...பணம் கொடுக்கப்படும் வழக்கத்தை ஆரம்பித்ததே..இந்த இரு திராவிடக் கட்சிகள்தான்..இவர்கள் ஒருவரை ஒருவர்..வெல்லும்போது...பணத்தால் வென்றார்கள் என ஒரு கட்சி மற்ற கட்சியின் மீது புகார் சொல்வது..வேடிக்கையானது..பழகிப்போன ஒன்று.

சங்கரன்கோவிலைப் பொறுத்தவரை..அதிமுக பற்றி அனைத்து கட்சிகளும்..'அதிமுக அமைச்சர்கள் அனைவரும் அங்கு முகாம் இட்டிருந்தனர்..ஆடு, மாடு,மிக்ஸி,கிரைண்டர்,பணம் ஆகியவை கொடுக்கப்பட்டன' என்றுள்ளன.(திமுக மத்திய அமைச்சர்களும் அங்குதான் இருந்தனர்..முக்கியமாக பட்ஜெட் அன்று பழனிமாணிக்கம் இங்குதான் இருந்தார்)

இவற்றில் உண்மை இருக்கலாம்..ஆனால் எவ்வளவு பேருக்கு இப்படிக் கொடுக்கப் பட்டிருக்கும்..ஓரளவு வெல்வதற்கு தேவையான அளவு என்றால்..அதிமுக வின் வெற்றி அபரீதமாக உள்ளதே..பெற்ற வாக்குகள் 94977 வாக்கு வித்தியாசம் 68757..இது எப்படி..

இதற்கான காரணம் என நான் நினைப்பது...

மக்களுக்கு திமுக மீதான கோபம் இன்னமும் போகவில்லை (வேட்பாளர் டிபாசிட் இழந்துள்ளார்)

காங்கிரஸுடன் திமுக கூட்டு உள்ளவரை திமுக வை மக்கள் புறக்கணிப்பர்.

அதிமுக வை மக்கள் நம்புகின்றனர்..இவர்களுக்கு அவர்கள் மேல் என்பது போலத்தான் நம்பப்படுகிறது.

ஆளும் கட்சிக்கு ஓட்டளிக்க வில்லையெனில் நம் தொகுதி கவனிக்கப்படாது என்ற பயம்...இவற்றில் ஒன்றுதான்.



Monday, March 19, 2012

இலங்கைக்கு எதிரான தீர்மானம்: மழுப்புகிறார் பிரதமர் - ஜெ



 அமெரிக்கா தலைமையிலான நாடுகள் ஐ.நா. மனித உரிமை கவுன்சில் மாநாட்டில் கொண்டு வந்துள்ள தீர்மானத்தை ஆதரிப்பது தொடர்பான பிரதமரின் விளக்கம் மழுப்பலாகவும், பயன் இல்லாததாகவும் உள்ளது.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

இலங்கையில் அப்பாவித் தமிழர்களை ஈவு இரக்கமின்றி கொன்று குவித்து இனப் படுகொலைகளை நிகழ்த்தியவர்களைப் போர்க் குற்றவாளிகள் என பிரகடனப்படுத்த ஐக்கிய நாடுகள் சபையை இந்திய அரசு வற்புறுத்த வேண்டும் என்றும் இலங்கை அரசு அனைத்து குடியுரிமைகளையும் தமிழர்களுக்கு வழங்கி அவர்கள் சிங்களர்களுக்கு சமமாக, கண்ணியமாக வாழ வகைசெய்யும் வரை இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை விதிப்பதற்கு மற்ற நாடுகளுடன் இணைந்து இந்திய அரசு செயல்பட வேண்டும் என்றும் தீர்மானம் ஒன்று தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு ஜூன் 8ம் தேதி நிறைவேற்றப்பட்டது.

தமிழக மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கும் வகையில் இந்தத் தீர்மானத்தின் மீது மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வந்த நிலையில், மத்திய அரசு இதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் வாய்மூடி இருந்து வந்தது.

இந்தத் தருணத்தில், ஜெனீவாவில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் இலங்கைத் தமிழர்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா தீர்மானம் கொண்டு வந்துள்ளது. அந்த தீர்மானத்தின் மீது இந்திய அரசு இலங்கைக்கு ஆதரவாகச் செயல்படும் என இலங்கை அரசின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்ததாக கருத்துகள் ஊடகங்களில் வெளியிடப்பட்டது. உடனே அது குறித்து எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்து பிரதமர் மன்மோகன் சிங்குக்கு கடந்த பிப்ரவரி 29ம் தேதி கடிதம் எழுதினேன்.

இந்தக் கடித்ததுக்கு பதில் வராத நிலையில், இலங்கை அரசைக் கண்டித்து அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானம் தொடர்பாக கருத்து தெரிவித்த இந்திய அரசு, 'ஒரு குறிப்பிட்ட நாட்டுக்கு எதிரான தீர்மானத்துக்கு இந்தியா ஆதரவு தெரிவிக்காது, உலக அளவில் நடைபெறும் பிரச்னைகளுக்கு பொதுவாக ஆய்வு செய்யும் அடிப்படையில்தான் இந்தியாவின் அணுகுமுறை இருக்கும்' என்று கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

உடனே மீண்டும் இந்த மாதம் 3-ம் தேதி பிரதமருக்கு இது குறித்துக் கடிதம் எழுதி ஐ.நா. சபையின் மனித உரிமைக் குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக அமெரிக்கா கொண்டு வரும் தீர்மானத்தை இந்தியா உறுதிபட ஆதரிக்க வேண்டும், இலங்கை அரசுக்குக் கடும் கண்டனம் தெரிவிக்க வேண்டும் என வலியுறுத்தினேன்.


மார்ச் 19ம் தேதி மக்களவையில் பிரதமர் பேசும்போது, "அமெரிக்காவால் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தின் இறுதி வடிவம் தன்னிடம் இல்லை. தீர்மானத்துக்கு ஆதரவாக வாக்களிக்கும் மனப்பாங்கில் இந்திய அரசு உள்ளது. அது இலங்கைத் தமிழர்களுக்கு சுயமரியாதை, சம அந்தஸ்து, கண்ணியம் இவற்றுடன் கூடிய எதிர்காலத்தை நிர்ணயிக்க வேண்டும் என்ற இந்தியாவின் குறிக்கோளுக்கு ஏற்றதாக இருக்கும்' என்றுதான் தெரிவித்துள்ளார். இந்த பதிலில் பிரதமர் மனித உரிமைகள் மீறப்பட்டது குறித்து எதையுமே குறிப்பிடவில்லை. மனித உரிமைகள் மீறலுக்காக இலங்கை அரசு கண்டிக்கப்படும் என்றும் கூறவில்லை. இது மழுப்பான, பயனில்லாத பதில்.

இலங்கை அரசின் மனித உரிமை மீறல் பற்றி எதையுமே குறிப்பிடாமல் தெளிவற்ற ஒரு பதிலை கூறியிருப்பது மிகவும் வருத்தத்துக்குரியது என்று கண்டித்துள்ளார் ஜெயலலிதா

(நன்றி தட்ஸ்தமிழ்)

டிஸ்கி- பிரதமரின் அறிக்கையைப் பார்த்தால் நமக்கும் அது ஒரு விளக்கெண்ணெய் அறிக்கையாகவே தோன்றுகிறது.


Sunday, March 18, 2012

தினமணி தலையங்கம்...கண்டிப்பாக படிக்கவும்



இந்தியாவில் ஏறக்குறைய பாதி வீடுகளில் கழிப்பறை வசதி இல்லை. ஆனால், பாதிக்கும் மேற்பட்ட வீடுகளில் தொலைபேசி (பெரும்பாலும் செல்போன்) உள்ளது என்பது 2011   மக்கள்தொகை கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம்.
 இந்தியாவில் உள்ள வீடுகளின் வகைப்பாடு, வசிப்போரின் வாழ்க்கைத்தரம் ஆகியவைபற்றி கணக்கெடுப்பில் தெரியவந்துள்ள புள்ளிவிவரம்: இந்தியாவில் உள்ள மொத்த வீடுகளில் கழிப்பறை வசதி இல்லாமல் திறந்தவெளியைப் பயன்படுத்துவோர் 49.8% பேர். ஆனால், செல்போன் வசதி பெற்ற வீடுகள் 63.2%. என்ன முரண்!
 கழிப்பறை வசதிகள் இல்லாத வீட்டில் வசிப்போர் திறந்தவெளிகளைத் தங்கள் இயற்கையின்அழைப்புக்குப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். கழிப்பறை வசதி இல்லாத வீடுகளைச் சேர்ந்த 3.2% பேர் மட்டுமே பொது கட்டணக் கழிப்பறைகளைப் பயன்படுத்துகிறார்கள்.
 தமிழ்நாடு வளர்ச்சிப் பாதையில் நடைபோட்டாலும், கழிப்பறையைப் பொருத்தவரை ஏறக்குறைய இதே நிலைமைதான். தேசிய அளவில் 49.8% பேர் திறந்தவெளியைப் பயன்படுத்தினால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை 45.7% பேரின் நிலைமை அதுதான்.
 தகவல் தொழில்நுட்பம் எந்த அளவுக்கு மக்களைச் சென்றடைந்துள்ளது என்பதற்காக மகிழ்ச்சிகொள்ளும் அதே நேரத்தில், சுகாதாரம் குறித்த அடிப்படை விஷயத்தில் இன்னமும் நாம் பின்தங்கிக் கிடக்கிறோம் என்பது வேதனைதான்.
 இந்தியாவில் உள்ள 47.2% வீடுகளில் தொலைக்காட்சி பெட்டி போய்ச் சேர்ந்துள்ளது. 63% வீடுகளுக்கு செல்போன் சென்று சேர்ந்துள்ளது. ஆனால், கழிப்பறை மட்டும் திறந்தவெளியாகவே இருக்கிறது என்றால் இதற்குக் காரணம், அரசாங்கத்தைவிட மக்களின் அறியாமை, அலட்சியம் ஆகியவைதான்.
 பெருநகரங்களில் வசிக்கும் நடைபாதைவாசிகளில் பெரும்பாலோர் கட்டணக் கழிப்பறைகளையே பயன்படுத்துகின்றனர். அதைத் தவிர அவர்களுக்கு வேறு வழியும் இல்லை. ஆனால், கிராமப்புறங்களில் உள்ள மக்களிடம்தான் இன்னும் கழிப்பறை குறித்த விழிப்புணர்வு சென்று சேரவில்லை.
 இந்தியாவில் உள்ள 25 லட்சம் கிராமங்களில் வெறும் 25,000 கிராமங்கள் மட்டுமே கழிப்பறை வசதிகளைக் கொண்டவையாக, திறந்தவெளியைப் பயன்படுத்தாத கிராமங்களாக உள்ளன என்பது மூக்கை மூடிக்கொள்ள வேண்டிய அவமானம்தான்.
 ஒவ்வொரு வீட்டிலும் கழிப்பறை வசதி இருப்பதைக் கட்டாயமாக்கவும், கழிப்பறை வசதிகள் இல்லாத வீட்டை, ஒரு குடியிருப்புக்குத் தகுதி இல்லாத இடமாகக் கருதி, குடும்ப அட்டைகள் வழங்கப்படாது என்று அறிவிப்பு செய்வதாலும் இந்தக் குறையை ஒரு சில மாதங்களில் மாற்றிவிட முடியும். ஆனால், கழிப்பறை இல்லாமல் இருப்பது விழிப்புணர்வு இல்லாமையால் மட்டுமல்ல, வசதி இல்லாமையும்கூடத்தான் அதற்குக் காரணம்.
 கிராமங்களில் உள்ள வீடுகளில் கழிவறைகள் அமைக்கப்பட்டால் அந்தக் கழிவுகள் தானாகவே மக்கி உரமாகும் வகையில், இரண்டு சேமிப்புத் தொட்டிகள் - ஒரு தொட்டி நிரம்பியதும் மற்றொரு தொட்டிக்குக் கழிவுகளை மாற்றிவிட்டு, நிரம்பிய கழிவுகள் மக்கி உரமாகும் - வசதி கொண்ட கழிப்பறைகளை வெறும் ரூ.5,000-க்கு மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்தத் திட்டம் புதைசாக்கடை இல்லாத பகுதிகளை மனதில் கொண்டு உருவாக்கப்பட்டவை. இதில் 50 விழுக்காடு மானியம் வேறு. மீதமுள்ள தொகையை தவணை முறையில் உள்ளாட்சியில் குறிப்பிட்ட சில ஆண்டுகளில் கட்டவும் வகை செய்யப்பட்டது. ஆனால், இந்தத் திட்டம் சரியான முறையில் கொண்டுசெல்லப்படவில்லை. அதைத்தான் இப்போதைய மக்கள்தொகை கணக்கெடுப்பில் நாம் வெளிப்படையாகக் காண்கின்றோம்.
 ஒரு வீட்டுக்கு கழிப்பறை தேவை இல்லை என்ற எண்ணம் கிராம மக்களிடம் அதிகமாகவே இருக்கிறது. காலம்காலமாக இருந்து வரும் பழக்கமாக இருந்தாலும், நவீன உலகின் போக்குக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்ளத் தயக்கம் காட்டுகிறார்கள். இதற்காக அரசு ஒதுக்கிய நிதி, மானியம் அனைத்தையும் சரியான முறையில் உள்ளாட்சி அமைப்புகள் பயன்படுத்தவில்லை. கிராமப்புற மக்களுக்கு மானியம் தரப்படுவது பற்றியோ, கழிப்பறையின் இன்றியமையாமை பற்றியோ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டிய உள்ளாட்சி அமைப்புகள் இதில் அக்கறை காட்டவே இல்லை. வாய்ப்புகளை இன்னமும்கூட நழுவவிடுகின்றனர்.
 பொதுக்கழிப்பிடம் அல்லது இலவச சிறுநீர் கழிப்பிடங்களை எடுத்துக்கொண்டால், இதை அடுத்தவரும் பயன்படுத்துவார் என்ற எண்ணமே இல்லாமல், அதை அடுத்தவர் நுழையவும் தகுதியற்றதாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர்களாக நமது மக்கள் இருக்கிறார்கள். இதை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டிய உள்ளாட்சித் துறைகள் இந்த பொது சுகாதார நிலையங்களை உருவாக்கிய பிறகு, அதன் ஊழியர்களை எட்டிப்பார்க்கவும்கூட செய்வதில்லை.
 ஏலம் விட்டு வருமானம் பெறவும், ஆளும் கட்சிக்கு வேண்டிய ஒருவருக்குக் குத்தகைக்கு விடுவதன் மூலம் அவருக்கு வருமானம் கிடைக்கவும் மட்டுமே பொதுக் கழிப்பறைகள் என்கிற மனப்போக்குதான் காணப்படுகிறது.
 அதனால்தான் கட்டணக் கழிப்பறைகள் அருவருப்பான சூழலில் உள்ளன. இந்தியாவில் உள்ள எந்தக் கழிப்பறை வாசலிலும், உள்ளாட்சி அறிவிப்பு இருக்கும். அதில் கட்டணம் என்பது அழிக்கப்பட்டு இருக்கும். அல்லது அதில் ரூ.1 என்று இருந்தாலும், அங்கே கட்டணம் வசூலிப்பவர் ரூ.4 வசூலிப்பார். இவ்வளவு அதிகத் தொகை செலுத்த மனமில்லாதவர்களும் வழியில்லாதவர்களும் தெருக்களை, வழியோர மறைவிடங்களைப் பயன்படுத்துகிறார்கள். அல்லது அவர்கள் அவ்வாறு கட்டாயத்துக்கு ஆளாகிறார்கள்.
 ஓர் ஆரோக்கியமான நகரத்தின் முதல் அடையாளம் தூய்மையான கழிவறை. அது வீடு என்றாலும் சரி, சாலை என்றாலும் சரி. தெருவுக்கு ஒரு கட்டணக் கழிப்பிடம் அமைத்து அதைத் தூய்மையாகவும் குறைந்த கட்டணத்திலும் நடத்தக்கூட சுதந்திர இந்தியாவால் முடியவில்லை என்றால் வெட்கக்கேடு.
 அதைக்கூட நம்மால் தரமுடியாவிட்டால், எதற்காக மாநகராட்சிகளும், உள்ளாட்சி அமைப்புகளும்?


டிஸ்கி - இன்றைய தினசரியில் ஒரு செய்தி..
கணவன் வீட்டில் கழிப்பறை இல்லாததால்...தாய் வீடு திரும்பிய இளம் பெண்ணுக்கு கிராம சுகாதார விழிப்புணர்வு விருது...மத்திய ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஜெய்ராம் ரமேஷ் விருது வழங்குகிறார்.இது போபால் அருகே ஒரு கிராமத்தில் நடந்தது.

Friday, March 16, 2012

கலைஞருக்கு ஒரு கடிதம்...




தலைவர் கலைஞர் அவர்களுக்கு

வணக்கம்..

கட்சித் தலைவர், முன்னாள் முதல்வர், கலைஞர் என்ற பன்முகம் கொண்ட அஷ்டாவதானியான உங்கள் மீது தமிழ் மக்கள் அனைவருக்கும் ஏதோ ஒரு வகையில் பற்று உண்டு.இந்த பற்று கட்சிகளை மீறிய ஒன்று.

ஆனால்..சமீபத்தில் தாங்கள் பேசியுள்ள பேச்சு..என்னைப் போன்று உங்கள் மீது அபிமானம் உள்ளவர்களையும்..அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

ஹிந்தி எதிர்ப்பு போராட்டம் ஆகட்டும்..இலங்கை பிரச்னை ஆகட்டும்...வாலிப உள்ளங்கள் தான் அளவிற்கு அதிகமாக உணர்ச்சி வசப்பட்டு தீக்குளித்துள்ளன..இள ரத்தம், உணர்ச்சி வேகம்,உயிர் தியாகம் செய்யும் நோக்கு ஆகியவை தோன்றும் போது தங்களுக்கு முன்னேயுள்ள தாய், தந்தையர், இளம் மனைவி, குழந்தைகள் ஆகியோர் பற்றி எண்ணம் அவர்களுக்கு தோன்றுவதில்லை.

அதனால்தான், இப்படி ஏதேனும் நேருகையில்...தலைவர்கள் தங்கள் கட்சியைச் சேர்ந்தவர்களை, 'உணர்ச்சிவசப்படாதீர்கள்..தீக்குளிப்பது போன்ற செயல்கள் பிரச்னையை தீர்த்து வைக்காது..' என்றெல்லாம் கூறி இளைகர்கள் உணர்ச்சிகளை கட்டுக்குள் கொண்டுவருவது வழக்கம்.

இதெல்லாம் தெரிந்த நீங்களே..'அண்ணா நூற்றாண்டு நூலகம் , இடிக்கப்படுமேயாயின்...நான் தீக்குளித்தாவது அதை காப்பேன்' என்றுள்ளீர்கள்.பழுத்த அரசியல்வாதியான நீங்கள் உணர்ச்சி வேகத்தில் இதைக் கூறியிருக்க மாட்டீர்கள்..பின்..இதைக் கூற வேண்டிய அவசியம் என்ன...'மக்களின் உணர்ச்சியைத் தூண்டவா?..நீங்கள் இப்படிச் சொன்னதால் சங்கரன் கோவிலில் வாக்குகள் திமுகவிற்கு மக்கள் போடுவார்கள் என்றா? அதற்காக என்றால்...உங்களையே நம்பி..உங்கள் சொற்களையே வேதவாக்காக எண்ணும் லட்சக்கணக்கான தொண்டர்களில்..யாரேனும் ஒருவர்..தலைவரே சொல்லிவிட்டார்..அவர் உயிரே போகையில்..என் உயிரும் முதலில் போகட்டும் என தீக்குளித்தால்..அந்த உயிரை மீண்டும் நீங்கள் தரமுடியுமா?

இப்படி இளைஞர்கள் உணர்ச்சியைத் தூண்டும் வகையில்..மூத்த தமிழகத் தலைவர் நீங்கள் பேசியுள்ளது அழகல்ல...குழந்தைகள் பேசுவது போல பேசியுள்ளீர்கள்..

இதனால் தான் வயதானவர்களும் குழந்தைகளுக்கு சமமாய் நினைக்க வேண்டும் என நம் முன்னோர்கள் சொல்லியுள்ளனரோ?

மொத்தத்தில்...உங்களின் இப்பேச்சு கண்டிக்கத் தக்கதே..

அன்புடன்
ஒரு தமிழக குடிமகன்

வைரமுத்துவும்...மூன்றாம் உலகப்போரும்...(தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் 16-3-12)







1) உலகின் நாலாவது பொருளாதார வல்லரசான இந்தியாவின் தனிநபர் வருமானம் ஆண்டொன்றிற்கு 76933 மட்டுமே (1527 டாலர்), அதே நேரம் மொத்த உற்பத்தியில் மற்ற நாடுகளை விட நல்ல வளர்ச்சியைப் பெற்றுள்ளது இந்தியா..(ஏட்டுச் சுரைக்காய்...???!!!)

2) வடிவேலு, சிங்கமுத்து..இவர்களிடையே நிலத்தகராறு வழக்குகள் இருப்பது நாம் அறிவோம்.இந்த சீரியஸ் ஆன விவகாரத்தை காமெடி ஆக்கியிருக்கிறார் நடிகர் விவேக்..கந்தா என்ற படத்தில் படம் அடுத்த வாரம் வெளிவரிகிறதாம்.கேட்டால்..இந்த வழக்குகளுக்கு முன்னதாகவே..இப்படம் எடுக்கப்பட்டு விட்டது என்கிறாராம்  விவேக்..(நம்புவோம்)

3)இந்திய மாணவர்களின் கல்வித்தரம் குறைந்து வருகிறதாம்.அமெரிக்கா, பிரிட்டன்,கனடா, கொரியா, சீனா, தென் ஆஃப்ரிக்கா ஆகிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் கல்வித்தரத்தில் இந்தியா 73ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாம்.  (ம்ம்ம்.....பெருமூச்சுதான் விட முடிகிறது)

4)ஐந்து கோடி மக்களுக்கு மேல் பேசப்படும் பதின்மூன்று மொழிகளில் தமிழும் ஒன்று.(இதில் பெரும்பான்மையினர் தமிழகத்தில் உள்ளனர்.தமிழகம்..இந்தியாவில் ஒரு மாநிலம்)

5)சிங்கப்பூர் போலவே..சுவீடன் நாட்டில் குடிமக்கள் அனைவரும் கண்டிப்பாக சில காலம் ராணுவத்தில் பணியாற்ற வேண்டுமாம்...

6)மனித உடலில் வியர்க்காத பகுதி உதடுகள் தானாம்..  (இது கமலுக்கு தெரியும்)

7)ஒலிம்பிக் போட்டி நாங்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும்.இந்த ஆண்டு ஜூலை மாதம் 27ல் தொடங்கி ஆகஸ்ட் 12 வரை லண்டனில் நடக்கிரது.இதில் இந்தியா உட்பட 148 நாடுகள் கலந்து கொள்கின்றன.10000 க்கும் மேற்பட்ட வீர, வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்

8) வைரமுத்து விகடனில் எழுதி வரும் மூன்றாம் உலகப் போர் எனக்கு பிடித்த தொடர்.வைரமுத்துவின் எழுத்திற்கு ரசிகன் நான்.அத் தொடரில் வருவதை அவ்வப்போது பதிவிட்டு..மற்றவர்களை படிக்க சிபாரிசு செய்வேன்.ஆனால் இந்த இதழில் அத்தொடரின் முடிவில், வைரமுத்து அவர்கள் 'மூன்றாம் உலகப் போர் ' படைப்பில் இருந்து எந்தக் காட்சியையோ, சம்பவத்தையோ உரிய அனுமதியின்றி எவரும் எந்த வடிவத்திலும் எடுத்தாளக்கூடாது.மீறுவோர் சட்டப்படியான நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும்' என்றுள்ளார்.

ஆகவே..இந்த வாரத்திலிருந்து அது சம்பந்தமாய் பதிவிடுவதில்லை என தீர்மானித்துள்ளேன்..ஆனால் அனைவரும் தவறாது படிக்க வேண்டிய தொடர் அது..என மீண்டும் கூறுகிறேன்.


Wednesday, March 14, 2012

சங்கரன்கோவில் வாக்காளர்களே...நீங்கள் என்ன செய்ய வேண்டும்




இடைத்தேர்தல்கள் அவசியமா..இல்லையா என்ற கேள்விகள் அவ்வப்போது எழுந்தாலும்...இடைத்தேர்தல்கள் தான் ஆளும் கட்சியின் பால் மக்கள் கொண்டுள்ள கருத்தை பிரதிபலிக்கும் கண்ணாடி என்பாரும் உண்டு.

அதே நேரம்..இந்நாட்களில் இடைத்தேர்தல்களில் ஆளும் கட்சிகள் தனது செல்வாக்கு,அரசு இயந்திரங்கள் ஆகியவற்றை பயன்படுத்திக் கொள்வதுடன்...மக்களுக்கும்..அவர்கள் சார்ந்த தொகுதிகளுக்கும் மேம்பாடுகள் செய்யப்படுவதால்..ஆளும் கட்சிகளுக்கே இடைத்தேர்தல்களில் வெல்லும் வாய்ப்பு அதிகம் என்ற எண்ணத்தை அனைவரிடமும் ஏற்படுத்தி விட்டது.

இந்நிலையில்..இவை மாற வேண்டுமாயின் ..அதற்கு முன் மாதிரியாய் சங்கரன்கோவில் வாக்காளர்கள் இருக்கட்டும்..

தவிர்த்து..

அவர்கள் ஆளும் கட்சி வாக்காளருக்கு ஓட்டு போடுவதால்..ஆளும் கட்சிக்கு பயன் ஏதுமில்லை.ஏனெனில் ஏற்கனவே அது பெரும்பான்மை பலத்துடன் உள்ளது.

எதிர்கட்சியான தேமுதிக வாக்களித்தால் அதன் 29 எம் எல் ஏ க்கள் 30 ஆகலாம் ..அவ்வளவுதான்

திமுக விற்கு வாக்களித்தால்..இந்த ஒரு எம் எல் ஏ வினால்..திமுக அங்கீகரிக்கப் பட்ட எதிர்க் கட்சியாய் மாற வாய்ப்பில்லை.

மதிமுக விற்கு வாக்களித்தால்...அந்த கட்சியின் எம் எல் ஏ ஒருவர் சட்டசபைக்கு செல்ல வாய்ப்பு உண்டு. இதுவே பின்னாட்களில் அக்கட்சி ஒரு மாற்றாக உருவாகும் சந்தர்ப்பம் ஏற்படலாம்.மேலும் இவ் வெற்றி..அதன் தலைவருக்கு உற்சாகத்தை அளிக்கும்.

இவற்றை கருத்தில் கொண்டு வாக்காளர்கள் மதிமுக வை இத் தேர்தலில் ஆதரிக்கலாம் என்றே தோன்றுகிறது.


Tuesday, March 13, 2012

காங்கிரஸ் கட்சி ஏன் இப்படி ஆயிற்று...




காங்கிரஸ்..பாரம்பரியம் மிக்க கட்சி.  தன்னலமற்ற..நாட்டு நலன் ஒன்றே குறிக்கோளாக இருந்த கட்சி..காரணம்..அதன் தலைவர்கள்..

அந்த நாள் தலைவர்கள்...எண்ணமெல்லாம்..நாடு..நாடு..நாடு தான்..

ஆகவேதான் ஒரு நூற்றாண்டு கடந்தும் ..அக் கட்சி நாட்டில் நிலைத்து இருக்கிறது..

ஆனால் சமீப காலமாக...என்னவாயிற்று கட்சிக்கு...அதன் தலைவரே (!!) சமிபத்திய உத்தர பிரதேச தேர்தல் முடிவு குறித்து வெளியிட்ட செய்தியில்..'கட்சியில் பல தலைவர்கள் உண்டாகிவிட்டனர்' என்றுள்ளார்., அவர் சொல்லியுள்ளது உண்மை..

பல தலைவர்கள் உண்டாகிவிட்டனர்..இல்லை..இல்லை..பலர் தன்னை தலைவர்களாக எண்ணிவிட்டனர்..அவர்களிடம் தேசப்பற்று காணப்படவில்லை..சுயநலம்தான் காணப்படுகிறது.

ஒரு மத்திய அமைச்சர்...தன் மனைவி வெற்றி பெற வேண்டும் என்பதற்காகவே..மக்கள் ஆதரவு பெற..சிறுபான்மையினர் ஒதுக்கீடு குறித்து...தேர்தல் கூட்டத்தில்..விதிமுறைகளை மீறி பேசுகிறார்.இதை தேர்தல் ஆணையம் சுட்டிக்காட்டினால்..அவர்கள் அதிகாரம் பற்றியும்...அதனால் தனக்கு ஏற்படும் எந்த  இடரையும் எதிர் கொள்வதாகக் கூறிகிறார்..பின்...பின்வாங்குகிறார்.

அவர் விட்ட இடத்தை..அடுத்து மத்திய அமைச்சர் தொடர்கிறார்...

அக்கட்சியின் தலைவரோ...அவரது வருமான வரி கணக்கை கேட்டால்..அதை சொல்ல வேண்டிய அவசியமில்லை என்கிறார்.

இப்படி..பொய், பித்தலாட்டம், சுயநலம், மேலிடத்தின் ஆதரவை பெறலாம் என்ற எண்ணம் எல்லாம் சேர்ந்து..இவர்கள் பேசுவதை மக்கள் ஆதரிப்பார்கள் என எண்ணுகிறார்கள்.ஆனால் மக்கள் யாரையும் நம்பத் தயாராக இல்லை.

அடுத்து....

உலக மக்கள் தொகையில்..கிட்டத்தட்ட 1/6 பங்கு மக்கள் தொகையுள்ள நாட்டில்..பிரதம பதவி வகிப்பவர்...தன் நாட்டில் என்ன நடந்தாலும்...மௌனியாய் இருக்கிறார்.தன் நாட்டு மக்கள் நலனை விட..அடுத்த சிறு நாடுகள் பற்றி கவலைப் படுகிறார்..அவர்களுக்கு பயப்படுகிறார்.

1962 சீன யுத்தமும், 1965 பாகிஸ்தானுடன் யுத்தமும், பங்களாதேசை மீட்டு அந்த மக்களிடம் ஒப்படைத்த தீரமும் கொண்ட தலைவர்கள் இருந்த கட்சி..இன்று தன் நாட்டு வம்சாவளி மக்களுக்கு ஆதரவாக பேசக்கூட இன்று பயப்படுகிறது...

இதே போக்கு நீடிக்குமேயாயின்...நாட்டில் ஒருமைப்பாடும் சீர்குலையும்...நாட்டு எதிர்காலம் கேள்விக் குறியாகும்...

இழந்த வீரத்தையும்..தீரத்தையும் ..மக்கள் நலப் போக்கையும் காங்கிரஸ் மீண்டும் பெற வேண்டும்...அது நடக்குமா?

பொறுத்திருப்பது தான் இந்தியன் குணமாயிற்றே! பொறுத்திருந்து பார்ப்போம்.

பொறுமை கடலிலும் பெரிதுதான்...அந்த கடல் அதை விழுங்காத வரை...

இல‌ங்கை‌ அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது ‌- பிரணா‌‌ப் முக‌ர்‌ஜி



''இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திராக ஐ.நா.‌ ம‌னித உ‌ரிமை ஆணைய கூ‌ட்ட‌த்‌தி‌ல் அமெ‌ரி‌க்கா கொ‌ண்டு வரு‌ம் ‌தீ‌‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌ரி‌க்காது'' எ‌ன்று ம‌த்‌திய ‌நி‌தியம‌ை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்.

‌ம‌க்களவை இ‌ன்று காலை கூடியது‌ம் இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திராக ஐ.நா‌.‌வி‌ல் கொ‌ண்டு வர‌ப்பட‌ம் ‌தீ‌ர்மான‌த்தை இ‌ந்‌தியா ஆத‌‌ரி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று ‌‌தி.மு.க., அ.‌தி.மு.க. உ‌ள்‌ளி‌ட்ட த‌மிழக எ‌ம்.‌பி.‌க்க‌ள் வ‌லியுறு‌த்‌தின‌ர்.

இதையடு‌த்து இல‌ங்கை‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌ம் கு‌றி‌த்து ம‌க்களவை‌யி‌ல் ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்த ‌‌நி‌தியமை‌ச்ச‌ர் ‌பிரணா‌ப் முக‌ர்‌‌ஜி, இல‌‌ங்கை அரசு‌க்கு எ‌திரான ‌தீ‌ர்மான‌ம் கு‌றி‌த்து அரசு ‌வி‌ழி‌ப்பு‌ட‌ன் உ‌ள்ளது எ‌ன்றா‌ர்.

ஜெ‌னீவா‌‌வில் ஐ.நா. ம‌‌னித உ‌ரிமை ஆணைய கூ‌ட்ட‌த்‌தி‌ல் ‌‌தீ‌ர்மான‌ம் தா‌க்க‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு ‌உ‌ள்ளது எ‌‌ன்று‌ம் இது ப‌ற்‌றி த‌மிழக முத‌ல்வ‌ர் ஜெயல‌லிதா, ‌தி.மு.க. தலைவ‌ர் கருணா‌நி‌தி ஆ‌கியோரு‌க்கு அரசு ‌விள‌க்க‌ம் அ‌ளி‌த்து‌ள்ளது எ‌ன்று‌ம் அவ‌ர் தெ‌ரி‌வி‌த்தா‌ர்.

அவ‌ர்க‌ள் இருவரு‌ம் அர‌சி‌ன் ‌நிலை‌ப்பா‌ட்டை தெ‌ரி‌வி‌க்க வே‌ண்டு‌ம் எ‌ன்று வ‌லியுறு‌‌த்‌தியு‌ள்ளதாகவு‌ம் ‌பிரணா‌‌ப் கூ‌றினா‌ர்.

இ‌‌ப்‌பிர‌ச்சன‌ை‌யி‌ல் இ‌ன்னு‌ம் முடிவெடு‌க்க கால அவகாச‌ம் உ‌ள்ளது எ‌ன்று கூ‌றிய ‌பிரணா‌ப், சாதாரணமாக எ‌ந்த நா‌ட்டு ‌‌தீ‌ர்மான‌த்‌தி‌ற்கு‌ம் ஆதரவு அ‌ளி‌க்க‌ப்படுவ‌தி‌ல்லை எ‌ன்றா‌ர்.

ஆனா‌ல் இ‌ப்‌பிர‌ச்சனையை அரசு கவன‌த்‌தி‌ல் கொ‌ள்ளு‌ம் எ‌‌ன்று‌ம் இ‌ன்னு‌ம் கால அவகாச‌ம் உ‌ள்ளதா‌ல் ஆலோ‌சி‌த்து அரசு இறு‌தி முடிவு எடு‌க்கு‌ம் எ‌ன்று‌ம் ‌பிரணா‌‌ப் முக‌ர்‌ஜி கூ‌றினா‌ர்..

நன்றி வெப்துனியா


Monday, March 12, 2012

அழகாக மாற 200 முறை சர்ஜரி செய்து கொண்ட பெண்



 சீனாவைச் சேர்ந்த பணக்கார பெண் ஒருவர் அழகாக மாற 200 தடவை பிளாஸ்டிக் சர்ஜரி செய்துள்ளார். ஆனால் அத்தனை முறை அறுவை சிகிச்சை செய்ததால் அவரது உடல் நிலை பாதிக்கப்பட்டது தான் மிச்சம்.

சீனாவின் நாங்ஜிங் பகுதியைச் சேர்ந்த இளம் பெண்  அப்பகுதியில் உள்ள ஒரு மருத்துவமனைக்கு உடல் பரிசோதனைக்காக சென்றுள்ளார். அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள் அதிர்ந்துவிட்டனர். அவரது உடலில் ஏராளமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டிருப்பது தான் அவர்கள் அதிர்ச்சிக்கு காரணம்.

அவரிடம் இது குறித்து மருத்துவர்கள் கேட்டபோது அவள் கூறியது...

நான் சில காலம் தென் கொரியாவில் இருந்தேன். அப்போது அழகாக ஆக 200 முறை பிளாஸ்டிக் சர்ஜரி செய்தேன். இதில் கண் இமையில் மட்டுமே 16 முறை அறுவை சிகிச்சை செய்தேன் என்று கூறினார்.

அவர் இதற்காக இதுவரை ரூ.3 கோடி செலவு செய்துள்ளார். இருப்பினும் அவர் அழகான பாடில்லை. இத்தனை முறை அறுவை சிகிச்சை செய்து கொண்டதால் அவரது உடல் பலவீனமாக உள்ளது. மேலும் அவரது எலும்புகள் செல்லரித்தும், இடது மார்பில் 3 செ.மீ. நீளத்துக்கு புற்றுநோய் கட்டியும் உள்ளது.

செயற்கை முறையில் அழகாய் தோன்ற அறுவை சிகிச்சை செய்து , தற்போது நோயாளி ஆகியிருப்பது தான் மிச்சம்.
 

பிரபாகரனின் மகன் சுட்டுக் கொல்லப்பட்ட விடியோ:




விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாரகரன் சுட்டுக் கொல்லப்பட்ட விடியோவை சேனல் 4 தொலைக்காட்சி நாளை மறுநாள் வெளியிட உள்ளது.
விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரின் இறுதிக்கட்டத்தில் சரணடைந்த, கைது செய்யப்பட்ட போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட- இலங்கை படையினரால் திட்டமிட்ட அடிப்படையில் நீதிக்குப்புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்று பிரிட்டனின்‘தி இன்டிபென்டென்ட்‘ ஏடு தகவல் வெளியிட்டுள்ளது.
‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் சேனல்- 4 ஆவணப் படத்தை தயாரிக்கும் கேல்லம் மெக்ரே  எழுதியுள்ள கட்டுரையில் இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகன் பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்ட நிலையில் தரையில் கிடக்கும் ரத்தத்தை உறைய வைக்கும் காட்சிகளையும் சேனல்-4 வெளியிடவுள்ளதாக கேல்லம் மெக்ரே  கூறியுள்ளார்.
இதுபற்றி ‘தி இன்டிபென்டென்ட்‘ ஏட்டில் அவர் கூறியுள்ளதாவது:
“12 வயது சிறுவன் தரையில் கிடக்கிறான். இடுப்பில் சுடப்பட்டுள்ளது.அவரது மார்பில் 5 துப்பாக்கிச் சூட்டுத் துவாரங்கள் காணப்படுகின்றன. அவரது பெயர் பாலச்சந்திரன் பிரபாகரன்.
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் மகனான இவர் நீதிக்குப்புறம்பான முறையில் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
அவருக்கு அருகே ஐந்து ஆண்களின் சடலங்கள் கிடக்கின்றன. அவர்கள் அவரது மெய்க்காவலர்களாக இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.
அவர்களைக் கட்டுவதற்குப் பயன்படுத்தப்பட்ட உடைகளும் தரையில் கிடக்கின்றன. அவர்கள் கைகளும் கண்களும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதை அது சுட்டிக்காட்டுகிறது.
ரணடைந்த அல்லது கைது செய்யப்பட்ட பல விடுதலைப் புலிப் போராளிகளும், முன்னணித் தலைவர்களும், சிறுவர்களும் கூட, சிறிலங்கா அரசபடைகளால் முறைப்படியான கொள்கையின் அடிப்படையில் நீதிக்குப் புறம்பாக படுகொலை செய்யப்பட்டுள்ளனர் என்பதற்கு இது ஒரு சாட்சியாகிறது.
இந்த ஒளிப்படத்தில் மே-18ம் நாள் என்று குறிக்கப்பட்டுள்ளது. 12 வயதான பாலச்சந்திரன் மரணம் தொடர்பான புதிய ஆதாரங்கள் அழுத்தங்களை அதிகரிக்கும்.
பாலச்சந்திரன் அவரது மெய்க்காவலர்களின் சடலங்கள் கிடக்கும் மிகத்தெளிவான – உயர் துல்லியம் கொண்ட ஒளிபடங்களை சேனல்-4 பெற்றுள்ளது.
இவை மதிப்புமிக்க தடயவியல் நிபுணரான பேராசிரியர் டெரிக் பௌண்டர் மூலம் ஆராயப்பட்டது.
கண்கள் கட்டப்பட்டிருந்த அவரது மெய்க்காவலர்கள் பார்க்கும் படியாக பாலச்சந்திரன் படுகொலை செய்யப்பட்டிருக்க வாய்ப்புகள் உள்ளதாக அவர் கருத்துக் கூறியுள்ளார்.
முதலாவது சூடு சிறுவனின் மீது சுடப்பட்டிருக்க வேண்டும் என்று பேராசிரியர் பௌண்டர் நம்புகிறார்.
பொட்டுப் போன்ற துவாரப் பகுதியில் பச்சை குத்தப்பட்டது போன்ற அடையாளம் உள்ளது.அதனால், சிறுவனின் நெஞ்சில் இருந்து இரண்டு அல்லது மூன்று அடி அல்லது அதற்குக் குறைவான தூரத்திலேயே சுடப்பட்ட துப்பாக்கியின் குழல்வாய் இருந்துள்ளது.சிறுவன் கையை நீட்டித் துப்பாக்கியை தொடும் நேரத்தில் சுடப்பட்டிருக்கக் கூடும் என்றும் அவர் கூறியுள்ளார்.
சிறிலங்காப் படையினரால் எடுக்கப்பட்ட இந்தக் காட்சிகள் முதல்முறையாக வரும் புதன்கிழமை இரவு சேனல்-4 தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகவுள்ளது.
‘இலங்கையின் கொலைக்களங்கள் – தண்டிக்கப்படாத போர்க்குற்றங்கள்‘ என்ற பெயரில் இந்த ஆவணப்படம் ஒளிபரப்பாகவுள்ளது.
இது கடந்த ஆண்டு ஒளிப்பரப்பப்பட்ட இலங்கையின்போர்க்குற்றங்கள் ஆவணப்படத்தின் தொடர்ச்சியாகும் என்று கேல்லம் மெக்ரே தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்

நன்றி தினமணி