Thursday, July 9, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (10-7-09)

1.மனிதரில் மூன்று பிரிவு உண்டு.விலங்கு,மனிதன்,தேவர்..தனக்காக வாழ்பவன் விலங்கு, பாதி தனக்காகவும்...மீதி பிறருக்காகவும் வழ்பவன் மனிதன்...பிறருக்காகவே வாழ்பவன் தேவன்

2.யார் வீட்டுக் கூரை எறிந்தால் என்ன...என் வீடு பத்திரமாக இருக்கிறது என்ற சுயநலத்துடன் இருக்காதீர்கள்.நாளையே உங்கள் வீடு எரியும் போது மற்றவர்கள் அப்படி எண்ணிவிட்டால்?

3.அவன் உயர்ந்தவன்..நான் தாழ்ந்தவன்..அவ்னுக்கு எல்லாம் தெரியும்...எனக்கு தெரியாது...என்றெல்லாம் தாழ்வு மனப்பான்மையுடன் இராதீர்கள்.பூமிக்கடியில் புதைந்து கிடக்கும்..கரித்துண்டுதான்..ஒருநாள் வைரமாக மிளிருகிறது.

4.மழை தனக்காக பொழிவதில்லை
மரங்கள் தமக்காக வளர்ந்து கனிகளை அடைவதில்லை
சூரியன் தனக்காக உதிப்பதில்லை
ஆறுகள் தனக்காக ஓடவில்லை
காடுகள் அவற்றிற்காக வளரவில்லை
கடல்கள்..முத்தையும்,மீங்களையும்,உப்பையும் தமக்காக வைத்திருக்கவில்லை
பிறருக்கு கொடுக்கவே இவை இப்படி
ஆனால்...மனிதன் மட்டுமே..தனக்காக வாழவேண்டும் என எண்ணுகிறான்.

5.marriage
It is an agreement in which a man loses his bachelor's degree and a woman gains her master's

6.காதலன்; நாம ஓடிப்போய் ரிஜிஸ்தர் ஆஃபீஸ்ல கல்யாணம் பண்ணிக்கலாம்
காதலி;நாம ஓடத்தெரிஞ்சவங்க..சரி...ஓடத் தெரியாதவங்க எங்க போய் கல்யாணம் செஞ்சுப்பாங்க?

சிவாஜி ஒரு சகாப்தம் - 17

1971ல் வந்த படங்கள்
இரு துருவம்
தங்கைக்காக
அருணோதயம்
குலமா குணமா
பிராப்தம்
சுமதி என் சுந்தரி
சவாலே சமாளி
தேனும் பாலும்
மூன்று தெய்வங்கள்
பாபு

இவற்றில் 3 படங்கள் 100 நாள் படங்கள்.அவை குலமா குணமா,சவாலே சமாளி,பாபு.

கே.எஸ்.ஜி.,படம்..குலமா குணமா..பாடல்கள் அருமை..பத்மினி நாயகி

சிவாஜியின் 150 ஆவது படம் சவாலே சமாளி..கே.எஸ்.ஜி.,யின் சீடராய் விளங்கிய மல்லியம் ராஜகோபால் தயாரிப்பு..இயக்கத்தில் வந்த படம். சிவாஜி நடிக்க வந்து 19 வருடங்களில் 150 ஆவது படம்.

சுமதி என் சுந்தரி..நல்ல கதையமைப்பு..பாடல்கள் இருந்தும் எதிர்ப்பார்த்த வெற்றி அடையவில்லை.அருணோதயம்..படமும்..அப்படியே..

இரு துருவம்..பி.எஸ்.வீரப்பா படம்..படத்தின் கதையமைப்பு ரசிகர்கள் எதிர்ப்பார்ப்புக்கு இல்லை.

பாபு..சிவாஜி தான் செய்த தவறுக்காக..ஒரு குடும்பத்தைக் காக்கும் பொறுப்பேற்பார்.

தேனும் பாலும்..நீண்ட நாள் தயாரிப்பில் இருந்ததால் தோல்வியுற்ற படம். பிராப்தம்..சாவித்திரியின் சொந்தப் படம்..தோல்வி.

மூன்று தெய்வங்கள் படத்தில்.. ஜோடி,டூயட்,பாடல் ஏதுமில்லாமல் நடித்திருக்கிறார்.

இவ்வருடம்..ஒரே திரை அரங்கில் தொடர்ச்சியாக 15 மாதங்கள் சிவாஜியின் படங்கள் தொடர்ந்து ஓடி சாதனை புரிந்தது.

மதுரை..ஸ்ரீதேவி திரையரங்கில்..சென்ற வருடம் தீபாவளி முதல்..1971 முடிவு வரை தொடர்ந்து..எங்கிருந்தோ வந்தாள்,தங்கைக்காக,குலமா குணமா,சவாலே சமாளி,பாபு..என மொத்தம் 444 நாட்கள் சிவாஜி படங்கள் திரையிடப்பட்டது.

அடுத்த பதிவில் 1972 படங்களைக் காணலாம்.

Wednesday, July 8, 2009

வாய் விட்டு சிரியுங்க..(ஹோட்டல் ஜோக்ஸ்)

1.அந்த ஹோட்டல் முதலாளி முன்னால ரேஷன் கடையில இருந்தார்னு எப்படி சொல்ற
போர்டுல..இன்றைய இருப்பு 20 இட்லி,30 பூரி,15 தோசை..25 வடைன்னு எழுதியிருக்காரே

2.அந்த ஹோட்டல் முதலாளியை ஏன் கைது பண்ணிட்டாங்க
ஆடிக்கழிவுன்னு போட்டாராம்..சாப்பிட்டவங்க எல்லாம் கழிஞ்சுக்கிட்டே இருக்காங்களாம்..

3.அந்த ஹோட்டலுக்குப் போனால் தகாத உறவெல்லாம் ஏற்படுமா? எப்படி?
இட்லிக்கு கிழங்கும்..பூரிக்கு வடகறியும் கொடுப்பாங்க

4. அந்த ஹோட்டல்ல இரண்டு இட்லி சாப்பிட்டா இரண்டு இட்லி இலவசமா தருவாங்களாம்
ஏன் அப்படி
ஸ்டாக் கிளியரன்ஸாம்

5.அந்த ஹோட்டல்ல காசு இல்லாம சாப்பிட்டா அரைச்ச மாவையே அரைக்க சொல்லுவாங்களாம்
ஏன்
அந்த ஹோட்டல் முதலாளி முன்னால மெகா சீரியல் தயாரிப்பாளராம்

6.அந்த டாக்டர் முன்னால ஹோட்டல் வைச்சிருந்தார்னு எப்படி சொல்ற
கிளினிக் வெளியே போர்டுல பெரும் வியாதியஸ்தர்கள் உள்ளே வரக் கூடாதுன்னு போட்டிருக்காரே!

Tuesday, July 7, 2009

திரை இசைமேதை ஆர்.சுதர்சனம்

ஆர்.சுதர்சனம் என்ற திரைப்பட இசையமைப்பாளரை நம்மில் பலர் மறந்திருப்போம்..அல்லது தெரியாது இருந்திருப்போம்.

அவர் இசை அமைப்பில் வந்த படப்பாடல்கள் அருமை.அவற்றில் சிலவற்றைப் பார்ப்போம்.

ஏவி.எம்.,மின் ஆஸ்தான இசை அமைப்பாளரான இவர்...நாம் இருவர் படத்தில் பாரதி பாடல்களுக்கு இசையை பிரமாதமாக அமைத்துள்ளார்.அவற்றில் ஒரு பாடல் "ஆடுவோமே..பள்ளு பாடுவோமே"

அறிஞர் அண்ணாவின்..திரைக்கதை வசனத்தில் வந்த ஓர் இரவு படத்தில்..'அய்யா சாமி' பாடலும்...'துன்பம் நேர்கையில்' பாடல்கள் இவர் இசை அமைத்தவை.பிந்தைய பாடலின் ஆசிரியர் பாரதிதாசன்.

களத்தூர் கண்ணம்மா படப்பாடல்கள் அருமை.'ஆடாத மனமும்' 'அருகில் வந்தாள்' குறிப்பிடத்தக்கவை.

கொஞ்சும் சலங்கை..'சிங்கார வேலனே' இன்னும் காதுகளில் ஒலித்துக் கொண்டிருக்கிறது.

தெய்வப்பிறவி..'அன்பால தேடிய" மறக்க முடியா பாடல்.

அன்னை படத்தில்..பானுமதி பாடிய "அன்னை என்பவள்'பாடல்,சந்திரபாபு பாடிய 'புத்தியுள்ள மனிதரெல்லாம்" இவர் திறமைக்குச் சான்று.

காட்டு ரோஜா படத்தில்...'ஏனடி ரோஜா" பாடலும்..பி.பி.ஸ்ரீனிவாசன் ஆடிய..கண்ணதாசனின்..'எந்த ஊர் என்றவனே" அருமையானவை.

திலகம் என்ற படத்தில்..'B..O..Y..பாய்' பாடல்..அந்த நாளில் பிரசித்தம்.

'கண்ணா கருமை நிறக் கண்ணா' பாடல் மட்டுமில்லாது..நானும் ஒரு பெண் பாடல்கள் அனைத்தும் அருமை.

பெண் படத்தில்...'கல்யாணம்' என்ற பாடல்..எஸ்.பாலசந்தருக்காக..சந்திரபாபு பிண்ணனி பாடிய பாடல்.

பராசக்தியில் அனைத்து பாடல்களும்..குறிப்பாக..'கா..கா..கா..'பாடல்.

ஸ்ரீவள்ளி படத்தில்...கானாத காயகத்தே..இன்றும் பல திருவிழாக்களில் தெருக்கூத்து நிகழ்ச்சிகளில் பாடப்படுகிறது.

தவிர்த்து..கலைஞரின்..பூம்புகாரில்..'என்னை முதன் முதலாய்' பாடல்..பூமாலையில்..'பாரிஸ் நகர பியூட்டி' பாடல்..

இப்படி...தேனினும் இனிய பல பாடல்களுக்கு இசை அமைத்தவர் சுதர்சனம்.

ஏ.வி.எம்.மின் லோகோ விற்கு இசை அமைத்தது இவர்தான்... இன்றும் நம் காதுகளில் தினம் ஒலித்துக் கொண்டிருக்கிறது அது.

Monday, July 6, 2009

ஒரு வருடம் ஓடிப்போச்சு...

திடீரெனத்தான் ஞாபகம் வந்தது.

இப்படித்தான்..சில விஷயங்களை ஞாபகத்தில் வைத்துக் கொண்டாலும்...சரியாக ஞாபகம் வரவேண்டிய சமயங்களில் அவற்றை மறந்து விடுவோம்.உதாரணமாக..திருமண நாளை முதல் நாள் வரை ஞாபகம் வைத்திருப்போம்.அடுத்த நாள் வீட்டில் மனைவி 'இன்று என்ன சொல்லுங்க பார்ப்போம்.." என ஆவலாய் கேட்கும் போது..மறந்து தொலைத்திருப்போம்.

ஆமாம்...இப்போது எதற்கு அதையெல்லாம் சொல்கிறீர்கள்? ஏதேனும் மொக்கை பதிப்பு போடப்போகிறீர்களா என்கிறீர்களா?

எனக்கு இப்பதிவு மொக்கையில்லை...உங்களுக்கு எப்படியோ..

நான் தமிழ்மணத்தில்..இடுகைகளை போட ஆரம்பித்து..ஒரு வருடம் நேற்றுடன் முடிந்தது.

பதிவுலகில்..யாரையும் தெரியாமல் பதிவிட ஆரம்பித்த எனக்கு...இன்று என் நலம் நாடும்..சகோதர, சகோதரிகள் எவ்வளவு பேர் !!

ஆகஸ்ட் 3ல் ஃபிட்ஜிட் போட்டேன்...இதுவரை 94000 ஹிட்ஸ்..

78 Followers

கிட்டத்தட்ட 6000 பின்னூட்டங்கள்..

இது ஒரு சாதனை இல்லைதான்...சிலரின் சாதனைகளுடன் ஒப்பிடும்போது...

ஆனால் என்னைப் பொறுத்தளவில்...மனம் மகிழ்கிறது...

இதைவிட சாதனை பெரிதல்ல..

அனைவருக்கும் நன்றியும்...அன்பு வணக்கங்களும்..

Sunday, July 5, 2009

'திரை இசைத் திலகம்'கே. வி.மகாதேவன்

இரு திறமைசாலிகள் இருக்கையில்...ஒருவர் மட்டும் பெரும் புகழ் அடைவதும்...அவருக்கு இணையான திறமையுள்ளவர் அவ்வளவு புகழ் அடையமுடியாமல் இருப்பதும் சகஜம் என்றாலும்...திரையுலக இசையமைப்பாளர் கே.வி.மகாதேவனை அனைவரும் மறந்துவிட்டது அவரது துரதிருஷ்டமே.

திரை இசைத் திலகம் மாகாதேவன் என்றதும்..நமக்கு உடன் ஞாபகம் வருவது..அந்த கால எம்.ஜி.ஆர்., படப் பாடல்களே..அதுவும் தேவர் ஃபிலிம்ஸ் படப் பாடல்கள் அனைத்தும் சிறப்பானவை.

ஏமாறாதே..ஏமாற்றாதே,மஞ்சள் முகமே வருக(வேட்டைக்காரன்),மனுஷனை மனுஷன்(தாய்க்குப் பின் தாரம்),சிரித்து சிரித்து(தாய் சொல்லை தட்டாதே),உண்டாக்கி தந்தவர்கள் இரண்டு பேரு(முகராசி),உழைக்கும் கரங்களே..(தனிப்பிறவி),ஏதோ ஏதோ ஒரு மயக்கம்(குடும்பத்தலைவன்),பல்லாண்டு வாழ்க பாடல்கள் இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.விவசாயி படப் பாடல்கல் அனைத்தும் அருமை.

கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் படங்களுக்கும் இசை இவர்தான்...'மாமா..மாமா' பாடலை எளிதில் மறந்துவிட முடியுமா..இப்பாடலுக்குப் பிறகு..மாகாதேவனை திரையுலகினர் அனைவரும் கூப்பிடுவது 'மாமா' என்றுதான்.இவர் இசை அமைத்த மற்ற மறக்க முடியா பாடல்கள்..என் நினைவிலிருந்து...

ஒரே ஒரு ஊரிலே (படிக்காத மேதை)
சிட்டுக்குருவி(டவுன் பஸ்)
மணப்பாரை மாடு கட்டி (மக்களை பெற்ற மகராசி)
அமுதும் தேனும் எதற்கு (தை பிறந்தால் வழி பிறக்கும்)
பசுமை நிறைந்த நினைவுகளே(ரத்த திலகம்)
பறவைகள் பலவிதம்,கண்ணெதிரே தோன்றினாள் (இருவர் உள்ளம்)
தூங்காத கண்ணென்று ஒன்று,சின்னஞ்சிறிய வண்ணப்பறவை (குங்குமம்)

தவிர திருவிளையாடல்,தில்லானா மோகனாம்பாள் ஆகிய படங்கள்.'ஒரு நாள் போதுமா" இவரை சொல்ல.ஏ.பி.என்.படங்கள் இசையை மறந்துவிட முடியுமா?

இதயக்கமலம்..படப்பாடல்கள்..

இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.இவருக்கு உடன் இருந்து கடைசி வரை தொண்டாற்றினார் புகழேந்தி.

ஆமாம்..இவ்வளவு சொல்லிவிட்டு...முக்கியமான ஒன்றை சொல்லவில்லை என்கிறீர்களா?

ஆம்...பல தெலுங்கு படங்களிலும் இவர் இசை பாராட்டப்பட்டது.

மகுடம் வைத்தாற்போல்..'சங்கராபரணம்" பாடல்களை மறக்கமுடியுமா?


இப்படிப்பட்ட இசைமேதை வாழ்நாளில் சரியாக கௌரவிக்கப் படவில்லை..திறமைசாலிகளுக்கு இப்படிப்ப நிலை என்பதுதான் தலைவிதி போலும்.

எப்படி வாழ வேண்டும்..(அரைபக்கக் கதை)

ஒரு சந்நியாசியிடம்..அவர் சிஷ்யன்..ஒருநாள்..'சுவாமி...நான் எப்படி வாழவேண்டும்..என்பதை..தெரிவித்தால்..நலமாயிருக்கும்..'என்றான்.,

குருவும்..தன் ஆயுட்காலம் முடிவதை..அறிந்து..தன் சிஷ்யன் இனி..தனியாக..விவரங்களை தெரிந்துக்கொள்ளட்டும்..என்று...தூரத்தில் நொண்டிக்கொண்டே வரும் நரியைக்காட்டி..'அதனுடன் செல்..அதற்கு உணவு எப்படி கிடைக்கிறது..என்று பார்..அப்போது..நீ எப்படி வாழவேண்டும் என்று தெரியும்..' என்றார்.,

நரியை தொடர்ந்து வந்த சிஷ்யன்..தூரத்தே ஒரு சிங்கம்..இறந்த மானின் உடலை இழுத்து வருவதை பார்த்து ஒளிந்துக் கொண்டான்.அந்த மான் சிங்கத்தால் வேட்டையாடப்பட்டது.அதை சிறிது தின்றுவிட்டு..மீதத்தை..நரியிடம் போட்டு விட்டு சென்றது..சிங்கம்..

உடனே சிஷ்யனுக்கு ..வாழவேண்டிய வழி தெரிந்தது போல இருந்தது..

அடுத்தநாள் முதல்...சிஷ்யன்..உண்ணாமல்...யாரேனும் தனக்கு..உணவு கொண்டுவந்து தருவார்கள் என காத்திருக்க ஆரம்பித்தான்..

நாட்கள் உருண்டன...

ஆனால்..யாரும் உணவை கொண்டுவந்து தரவில்லை..

அவன் உடல் இளைத்து..தெம்பையெல்லாம் இழந்தான்..குருவைத் தேடி வந்தான்..நடந்த விஷயங்களைக் கூறி.'குருவே..அந்த நரிக்கு கொடுத்தாற்போல்..யாரேனும்..எனக்கு ..உணவு கொண்டுவந்து தருவார்கள் என எண்ணினேன்..ஆனால் யாரும் வரவில்லை.'என புலம்பினான்..

பதிலுக்கு..குரு..'அட..மடையா..நீ என்னிடம்..எப்படி வாழவேண்டும் என்று கேட்டாய்...நானும் சொன்னேன்..ஆனால்..நீ..சிங்கம்..நரியைப் பார்த்து..தப்பாய் புரிந்துக் கொண்டாய்..உண்மையில்..நீ என்ன செய்திருக்க வேண்டும்..சிங்கம் போல வாழ நினைத்திருக்க வேண்டும்..மற்றவர்களுக்கு..உதவியாய்...மற்றவர்களுக்கு..உணவளிக்கக் கூடியவனாய் இருக்க எண்ணியிருக்க வேண்டும்'என்றார்..

அப்போதுதான்..சிஷ்யனுக்கு..எப்படி வாழவேண்டும் என்பதற்கான விடை தெரிந்தது.
(மீள்பதிவு )

Saturday, July 4, 2009

வாய் விட்டு சிரியுங்க

அந்த நீதிபதி தீர்ப்பு சொல்லும் போது எல்லாம் கையிலே ஒரு தீப்பந்தத்தை வைச்சிருப்பார்
ஏன்?
சட்டம் ஒரு இருட்டறைன்னு யாரும் சொல்லிடக்கூடாது இல்லையா?

2.உங்களுக்கு மாடு வாங்க லோன் தந்தா அதை எப்படி திருப்பிக் கட்டுவீங்க?
கால் நடையா வந்துதான்.

3.கள்ள நோட்டை அடிச்ச நீ எப்படி மாட்டிண்ட
நோட்டிலே ரிசர்வ் பாங்க் கவர்னர் கையெழுத்து போட வேண்டிய இடத்திலே என் கை நாட்டை வைச்சுட்டேன்.

4.தலைவர் போற இடத்திற்கெல்லாம் ஒரு கட்டு பேப்பர்களை எடுத்துட்டுப் போறாரே..ஏன்?
அவர் மேல உள்ள வழக்குகளுக்கு முன் ஜாமீன் வாங்கினத்துக்கான பேப்பர்களாம்

5.என் கணவர் தூங்கும்போதும் கண்ணாடி போட்டுக்கிட்டுத்தான் தூங்குவார்
ஏன்?
கனவுல வர்றவங்க சரியா தெரியணும்னுட்டுத்தான்

6.நீங்க பேய்,பிசாசு இருக்கறதை நம்பறீங்களா?
கல்யாணம் ஆறவரைக்கும் எனக்கு அதில் நம்பிக்கை இல்லாமல் இருந்தது

Friday, July 3, 2009

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (3-7-09)

1.பிறப்பையும்..இறப்பையும் தவிர..அனைத்தும் மறுபரீசலனைக்குரியது.பூமியில் மிகப் பெரியவனாகத் தெரிபவன்...கடலுக்குள் விழுந்து விட்டால் அதில் உள்ள மீனுக்கு சிறியவனாகி விடுகிறான்.

2.கப்பல் கரையில் இருக்கும்வரை பிரச்னை இல்லை.அது கடலில் செல்லும்போதுதான் புயலை சந்திக்க நேரிடும்.ஆனாலும் கப்பல் என்பது..கரையில் இருக்க கட்டப்பட்டதில்லை.பிரச்னைகளை எதிர்கொண்டு வெற்றி கொள்வதில்தான் திறமை இருக்கிறது.

3.ராமன் ஆண்டா என்ன..ராவணன் ஆண்டா என்னன்னு இருக்கக்கூடாதுன்னு சொல்வாங்க...ஆனா என்னைக் கேட்டா அது தப்புன்னு சொல்வேன்..யார் ஆண்டாலும் நம் குடும்பத்துக்கு நாம் உழைச்சாத் தான் சோறு.இந்த எண்ணம் அனைவருக்கும் வேண்டும்.

4.அச்சத்தை தவிருங்கள்..இதுதான் என் வழி என தீர்மானியுங்கள்.பின்..அந்த லட்சியத்தில் முன் வைத்த காலை பின் வைக்காதீர்கள்.நமக்கு அதில் பயணம் மட்டுமே நம் குறிக்கோளாக இருக்க வேண்டும்.

5.ஒரு ஜோக்
சார்..நீங்க என் அப்பாவைவிட பெரியவங்க.
தம்பி என்ன சொல்றீங்க
ஆமாம்..சின்ன வயசில என்னை தூங்க வைக்க எங்கப்பா படாத பாடு படுவார்.கதை சொல்வார்..பாடுவார்..ஆனா நீங்க இது எதுவும் இல்லாமல் பேசியே எனக்கு தூக்கத்தை வரவழித்து விடுகிறீர்கள்.

6.இந்தவார சிறந்த ஜோக் விருது ஸ்ரீதர் வாண்டையாருக்கு..அவர் சொன்னது
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் 14 இடங்களில் தி.மு.க., வெற்றிக்கு பாடுபடுவோம்னு சொல்லிவிட்டு 12 இடங்களில் வெற்றியை பெற்று தந்துள்ளோம் என்கிறார் மூவேந்தர் முன்னேற்றக் கழகத் தலைவர் ஸ்ரீதர் வாண்டையார்.