Thursday, January 26, 2012

தேங்காய்..மாங்காய்..பட்டாணி..சுண்டல் (27-1-12)




1) இந்தியா நேற்று தனது 63வது குடியரசு தினத்தைக் கொண்டாடியது.இந்திய அரசியல் அமைப்பை தயாரிக்க ஆன செலவு 63,96,724 ரூபாயாகும்.செலவான நேரம் 2 வருடம் 11மாதம் 18 நாள்.பங்குக் கொண்ட அங்கத்தினர்கள் எண்ணிக்கை 368 ஆகும்

2)1000க்கும் மேற்பட்ட உப நதிகளைக் கொண்டுள்ள உலகின் ஒரே நதி அமேசான் நதியாகும்.

3)தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் மருத்துவரிடம் செல்ல வேண்டாம் என்பது பழமொழி.இப்போது..தினமும் ஒரு மாதுளம் பழம் சாப்பிட்டால்..அனைத்து நோய்களும் நம்மை அண்டாது என்கிறார்கள்.

4)நடிகர் 'வினய்' கதாநாயகனாக நடிக்கும் படத்தில் கதாநாயகியாய் நடிக்க அஞ்சலியைக் கேட்டார்களாம்.ஆனால் அவர் மருத்துவிட்டாராம்.'டேம் 999 படத்தில் கதாநாயகனாக வினய் நடித்துள்ளார்.அதனால் தான் மறுப்பாம்.தமிழ் மக்கள் என்னிடம் அன்பாக உள்ளனர்..அதைக் கெடுத்துக் கொள்ளமாட்டேன் என்றுள்ளார்.
(கலைக்கு மொழியில்லை என்றெல்லாம் சப்பைக் கட்டு கட்டும் கலைஞர்களிடையே அஞ்சலி வித்தியாசமானவர்தான்)

5)நமது தேசிய கீதத்திற்கு வயது 100.ரவீந்திர நாத் தாகூர் எழுதிய இப்பாடல் 1911 ஆம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் மஹாநாட்டில் பாடப்பட்டது.1950ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் நால் இந்திய அரசு முறைப்படி இப்பாடலை தேசிய கீதமாக அங்கீகரித்தது.

6)உலகில் பெருகிவரும் வெப்பச் சூழல் காரணமாக பனி மலைகள்,இயற்கை மலைகள் ஆகியவற்றிற்கான அபாயம் பெருகி உள்ளதாம்.

7)இண்டெர்நெட் துவக்கப்பட்ட ஆண்டு 1969 ஆகும்

8)வால்ட்டீஸ்னி 26 முறை ஆஸ்கார் விருது வென்று உலக சாதனை படைத்தவர் ஆவார்

9)இசையமைப்பாளர் ஜீ.வி.பிரகாஷ் இருபத்தினான்கு வயதில் இருபத்தைந்து படங்களுக்கு இசை அமைத்துள்ளார்.

10)ஒரு பொன்மொழி..
  உங்களைச் சுற்றியுள்ள உயிர்களுக்கு என்ன நிகழ்கிறது என்ற அக்கறை இல்லாமல் நீங்கள் இருப்பீர்களானால் நீங்கல் ஒரு குற்றவாளி   - ஜக்கி வாசுதேவ்

11)ஒரு ஜோக்..

தமிழ்ப் புத்தாண்டு சர்ச்சையைத் தீர்க்க என்கிட்ட ஒரு வழியிருக்கு
என்ன வழி
தைத்திங்கள் முதல் நாள் முதல்..சித்திரைத் திங்கள் முதல்நாள் வரை தமிழ்ப்புத்தாண்டு நாட்கள் என அறிவித்து விடலாம்.



இன்னுமொரு ஜோக்

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவோடான நாலாவது டெஸ்ட்ல சக்கைப் போடு போடுது பார்த்தியா?
அப்படியா சொல்ற
ஆமாம்..டெஸ்ட் மேட்ச்சை ஐந்தாவது நாளுக்கும் இழுத்துக்கிட்டு வந்துட்டாங்களே! இது சாதனைதானே

Wednesday, January 25, 2012

உங்களுக்காக கேரளாவைப் பகைக்க முடியாது-தமிழக இளைஞர் காங். பொறுப்பாளர்




சென்னையில் நடந்த தமிழக இளைஞர் காங்கிரஸ் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் கலந்து கொண்டார் மேலிட பொறுப்பாளரும்,
கேரள மாநிலத்தைச் சேர்ந்தவருமான லிஜூ,

தமிழக இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக கட்சி மேலிடம் கேரளாவைச் சேர்ந்தவரான அகில இந்திய இளைஞர் காங்கிரஸ்
பொதுச் செயலாளர் லிஜூவை நியமித்துள்ளது. இதற்கு தமிழக இளைஞர் காங்கிரஸார் மத்தியில் எதிர்ப்புக் கிளம்பியது. இருப்பினும்
அதை காங்கிரஸ் மேலிடம் கண்டு கொள்ளவில்லை.

இந்த நிலையில் நேற்று நடந்த இளைஞர் காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார்.
அவரை மாநில காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன், இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜா உள்ளிட்டோர் சிறப்பாக வரவேற்று அழைத்துச் சென்றனர்.

பின்னர் சத்தியமூர்த்தி பவனில் நடந்த செயற்குழுக் கூட்டத்தில் லிஜு கலந்து கொண்டார். அதன் பிறகு வழக்கம் போல
சத்தம், அமளி, துமளிகள், குற்றங்கள், கூப்பாடுகளுடன் கூட்டம் நடந்தது.

கூட்டத்தின் இடையே ஒரு நிர்வாகி எழுந்து, கூடங்குளம் பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை குறித்துப் பேசினார்.
 முல்லைப் பெரியாறு அணை குறித்த போராட்டத்தை இளைஞர் காங்கிரஸார் போராட்டம் நடத்த வேண்டும். அதற்கு லிஜு தலைமை தாங்க வேண்டும் என்றார்.

அதைக் கேட்டதும் சட்டென்று எழுந்த லிஜு,முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில், உங்கள் நிலைப்பாடு போராட்டமாக இருந்தால்,
அதை நடத்துங்கள். ஆனால் போராட்டத்திற்கு நான் தலைமை வகிக்க முடியாது. அது, கேரள மாநில அரசியலில் எனக்கு சிக்கலை
 ஏற்படுத்திவிடும் என்றார்.

முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் தமிழக இளைஞர் காங்கிரஸ் போராட்டம் நடத்தினால் அதில் நான் பங்கேற்க மாட்டேன்.
உங்களுக்காக எங்களது மாநிலத்தை நான் பகைத்துக் கொள்ள முடியாது என்றும் அவர் கூறியதால் சலசலப்பு ஏற்பட்டது.
இருப்பினும் லிஜூ பேசியதை அமைதியாக ஏற்றுக் கொண்டனர் தமிழக இளைஞர் காங்கிரஸார்.




Tuesday, January 24, 2012

மத்திய அரசுக்கு கருணாநிதி கடும் எச்சரிக்கை




தமிழக மீனவர்களை தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்கி வருவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாகி விடும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் உள்ள மீனவர்களாலும், சிங்களவர்களாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் தாக்கப்படுவதாக வருகின்ற செய்திகள்,
 மத்திய அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா இலங்கைக்கு சென்று, `அமைதியை ஏற்படுத்திவிட்டேன், இனி தமிழக மீனவர்களுக்கு
இலங்கையில் எத்தகைய தொந்தரவும் இருக்காது' என்று உறுதியளித்து விட்டு திரும்பிய சூழ்நிலையில் வருகின்றன.

சற்றும் எதிர்பாராதவிதமாக இலங்கை சிங்களக் கடற்படையினரும், சிங்கள மீனவர்களும் தமிழக மீனவர்களை கொடுமையாகத் தாக்கி,
 அராஜகம் புரிந்துள்ளனர் என்பது தமிழக மக்களுக்கு மிகுந்த கொதிப்பேற்றும் செய்தியாகும்.

அமைதி திரும்பும் என்று மத்திய அமைச்சர் கூறுவதும், அப்படி அவர் சொன்ன வாசகங்கள் அனைத்தும் கடல் காற்றிலேயே கரைந்து போவதும்
 தொடர் நடவடிக்கைகளாக இருந்து வருகிறது. எனவே, இனி பொறுப்பதில்லை என்ற முடிவுக்கு தமிழக மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

தமிழக மீனவர்களை தொடர்ந்து சிங்கள கடற்படையினர் தாக்கி வருவதை நிரந்தரமாக தடுத்து நிறுத்த வேண்டும்.
இல்லாவிட்டால் விளைவுகள் விபரீதமாகி விடும் என்று மத்திய அரசுக்கு திமுக தலைவர் கருணாநிதி கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.



பத்து ஆண்டுகள் பாத்ரூமில் அடைக்கப்பட்டிருந்த பெண்..




பாலஸ்தீனத்தில் தன் மகளை பத்து ஆண்டுகளாக பாத்ரூமில் அடைத்து வைத்திருந்த தந்தையை போலீசார் கைது செய்தனர்.பாலஸ்தீனத்தைச் சேர்ந்தவர் ஹசன் மெல்கம். இவர் இஸ்ரேல் குடியுரிமை பெற்றவர்.

இவர் தனது மனைவி விவாஹரத்து செய்தவர்.ஆனால் தன் மகள் பாராவை தன்னுடன் வைத்துக் கொண்டார்.ஆனால் அவளை சிறிய பாத்ரூமிற்குள் அடைத்து வைத்தார்.அப்போது அவர் மகளுக்கு வயது 11.அவளை இரவு நேரத்தில் மட்டும் வெளியே வர அனுமதித்தார்,ஆனால்..வீட்டை விட்டு வெளீயே போக அனுமதி இல்லை.இத் தகவல் பத்து ஆண்டுகள் கழித்து போலீஸிற்கு இப்போதுதான் தெரிய வந்திருக்கிறது..

இது குறித்து மகள் பாரா கூறுகையில் : நான் 10 ஆண்டுகளாக வெளி உலகை பார்க்கவில்லை. எனது அப்பா எனது முடியை அகற்றி விடுவார். அவ்வப்போது இரும்பு கம்பியால் அடிப்பார். என்றாவது ஒரு நாள் வெளிச்சத்தை காண்பேன் என்ற நம்பிக்கை இருந்தது . இனிமேல் தான் என் வாழ்க்கை துவங்குகிறது, எனது தந்தையை நான் வெறுக்க மாட்டேன் . அதே நேரத்தில் அவர் செய்த செயலை தான் நான்‌ வெறுக்கிறேன். ஏன் அவ்வாறு செய்தார் என்பது எனக்கு இன்னும் புரியவில்லை . அவ்வாறு இருந்தோமே என்ற கவலை எனக்கு இப்போது இல்லை என்றார் கண்ணீர் மல்க.


Monday, January 23, 2012

அரசியலுக்கு நான் ஏன் வரவில்லை - பாரதிராஜா





 பெருந்தலைவர் காமராஜரை இந்த மக்கள் தேர்தலில் தோற்கடித்ததைப் பார்த்த பிறகு, அரசியலுக்கு வரும் ஆசையே
எனக்கு போய்விட்டது, என்றார் பாரதிராஜா.

மதுரையில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.கோவிந்தராஜன் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற
இயக்குநர் பாரதிராஜா, விழாவில் பேசுகையில், "எனது தாத்தா, எங்கப்பா எல்லாருமே பாரம்பரியமாகவே காங்கிரஸ்காரர்கள்.
காங்கிரஸ் குடும்பந்தான் எங்களோடதும்.

எனக்கு அந்தக் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். அப்பா அம்மா, சகோதரர்களுக்கிடையேய முரண்பாடு வருவதில்லையா...
 அப்படித்தான் இதுவும். கருத்து மாறுபாட்டால் முரண்பட்டு மோதல் வருவது சகஜம்.

நான் தீவிர காங்கிரஸ் கட்சிகாரனாக கடந்த 1957-ம் ஆண்டு முதல் 1962 வரை இருந்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்காக மேடையில்
ஏறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். எனது தாயின் நகைகளை விற்று காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் எனது தந்தை.

பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோற்றபோது எனது வீட்டில் 3 நாட்கள் எங்க வீட்ல சமைக்கலை. காமராஜர் தோல்விக்காக
எனது தந்தை அந்த அளவு வருத்தப்பட்டார். நானும் அரசியல்வாதியாகியிருப்பேன். காமராஜர் தோல்வியே
என்னை அரசியலுக்கு வரக்கூடாது என முடிவு எடுக்க வைத்தது. அவரையே தோற்கடித்து விட்டார்களே என்ற ஆதங்கம்
இன்னிக்கு வரைக்கும் என் மனசுல இருக்கு.

தாய் வீடு, மொழி, இனம் காணாமல்போக அனுமதிக்கக் கூடாது. அவை காணாமல்போவது தாயைத் தொலைப்பது போன்றதாகும்.
ஆகவே மக்கள் மொழிக்கு எதாவது ஆபத்து எனில் காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள் முதலில் குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டும்.
அது உங்க கடமை.

தமிழன் எல்லாவற்றையும் இழக்கக் கூடாது. எதிர்ப்பு சக்தியை காட்டாவிட்டால் எதிலும் வெற்றி பெறவும் முடியாது.
அந்த எதிர்ப்பு சக்தியை காட்டியே காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்," என்றார் பாரதிராஜா.


 

அரசியலுக்கு நான் ஏன் வரவில்லை - பாரதிராஜா





 பெருந்தலைவர் காமராஜரை இந்த மக்கள் தேர்தலில் தோற்கடித்ததைப் பார்த்த பிறகு, அரசியலுக்கு வரும் ஆசையே
எனக்கு போய்விட்டது, என்றார் பாரதிராஜா.

மதுரையில் நடந்த காங்கிரஸ் பிரமுகர் கே.எஸ்.கோவிந்தராஜன் நூல் வெளியீட்டு விழாவில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்ற
இயக்குநர் பாரதிராஜா, விழாவில் பேசுகையில், "எனது தாத்தா, எங்கப்பா எல்லாருமே பாரம்பரியமாகவே காங்கிரஸ்காரர்கள்.
காங்கிரஸ் குடும்பந்தான் எங்களோடதும்.

எனக்கு அந்தக் கட்சியுடன் முரண்பாடு ஏற்பட்டிருக்கலாம். அப்பா அம்மா, சகோதரர்களுக்கிடையேய முரண்பாடு வருவதில்லையா...
 அப்படித்தான் இதுவும். கருத்து மாறுபாட்டால் முரண்பட்டு மோதல் வருவது சகஜம்.

நான் தீவிர காங்கிரஸ் கட்சிகாரனாக கடந்த 1957-ம் ஆண்டு முதல் 1962 வரை இருந்தேன். காங்கிரஸ் வேட்பாளருக்காக மேடையில்
ஏறி தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டேன். எனது தாயின் நகைகளை விற்று காங்கிரஸ் கட்சிக்காக உழைத்தவர் எனது தந்தை.

பெருந்தலைவர் காமராஜர் தேர்தலில் தோற்றபோது எனது வீட்டில் 3 நாட்கள் எங்க வீட்ல சமைக்கலை. காமராஜர் தோல்விக்காக
எனது தந்தை அந்த அளவு வருத்தப்பட்டார். நானும் அரசியல்வாதியாகியிருப்பேன். காமராஜர் தோல்வியே
என்னை அரசியலுக்கு வரக்கூடாது என முடிவு எடுக்க வைத்தது. அவரையே தோற்கடித்து விட்டார்களே என்ற ஆதங்கம்
இன்னிக்கு வரைக்கும் என் மனசுல இருக்கு.

தாய் வீடு, மொழி, இனம் காணாமல்போக அனுமதிக்கக் கூடாது. அவை காணாமல்போவது தாயைத் தொலைப்பது போன்றதாகும்.
ஆகவே மக்கள் மொழிக்கு எதாவது ஆபத்து எனில் காங்கிரஸ் தலைவர்களாகிய நீங்கள் முதலில் குரல் கொடுத்து காப்பாற்ற வேண்டும்.
அது உங்க கடமை.

தமிழன் எல்லாவற்றையும் இழக்கக் கூடாது. எதிர்ப்பு சக்தியை காட்டாவிட்டால் எதிலும் வெற்றி பெறவும் முடியாது.
அந்த எதிர்ப்பு சக்தியை காட்டியே காங்கிரஸ் தலைவர்கள் மக்களுக்கு பணியாற்ற வேண்டும்," என்றார் பாரதிராஜா.


 

தமிழர்கள் படுகொலைக்கு உதவிவிட்டு இப்போது பள்ளிக்கூடம் கட்டுகிறார்களாம் _ வைகோ




 இலங்கையில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு
 இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது என்றும்.
அரசியல் சட்டத் திருத்ததை இலங்கையிடம் வலியுறுத்தியதாகக் கூறி தமிழக மக்களையும், உலகத்தையும் ஏமாற்றும்
 வேலைகளில் இந்திய அரசு ஈடுபட்டுள்ளது என்றும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றம்சாட்டியுள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மனிதகுலத்தின் மனசாட்சியை நடுங்கச் செய்யும், கோரமான தமிழ் இனப்படுகொலையை
 இலங்கையின் ராஜபக்சே அரசு செய்தது. லட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். 2008ம் ஆண்டிலும், 2009 மே 18 வரையிலும்,
ஈழத்தமிழ் மக்கள், வயது முதிர்ந்தோர், பெண்கள், குழந்தைகள் என அனைவருமே, சிங்கள விமானப்படை குண்டுவீச்சாலும்,
பீரங்கி தாக்குதலாலும் கொல்லப்பட்டனர்.

சிங்கள அரசு செய்த கொலை பாதகக் குற்றத்தை விசாரிக்க வேண்டும் என்றும், மனித உரிமைகள் அழிக்கப்பட்டதற்கு
ஐ.நா. மன்றமும், மனித உரிமைக் கவுன்சிலும், நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஜெர்மனி உள்ளிட்ட சில நாடுகள்
 ஜெனீவாவின் மனித உரிமைக் கவுன்சிலில் எடுத்த முயற்சியை, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் தோற்கடித்து,
சிங்கள அரசின் இனக்கொலைக் குற்றத்தை மூடி மறைக்க உதவியாகச் செயல்பட்டன.

இலங்கையில் போரின்போது சிங்கள ராணுவம் நடத்திய குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் அறிந்து ஆய்வு செய்து
 அறிக்கை தர, மார்சுகி தாரிஸ்மன், யாஸ்மின் சுகா, ஸ்டீவன் ராட்னர் ஆகிய மூவர் குழுவை ஐ.நா. பொதுச்செயலாளர் பான் கி மூன் அறிவித்தார்.

அதற்குக் கடும் எதிர்ப்பைத் தெரிவித்த ராஜபக்சே அரசு, உண்மைகளைக் குழிதோண்டிப் புதைப்பதற்காக,
essons Learned and Reconciliation Council-LLRC என்ற ஒரு கமிஷனை தானே அறிவித்துக் கொண்டது.

முழுக்க முழுக்க பொய்களைக் கொண்ட 388 பக்கங்கள் கொண்ட அந்தக் கமிசன் அறிக்கையை, கடந்த டிசம்பர் 16ம் தேதி வெளியிட்டது.
 குறிப்பாக, ஐ.நா. மன்றத்தின் மூவர் குழு அறிக்கை, ஆதாரங்களோடு வெளியிட்ட, சிங்கள ராணுவத்தின் இனக்கொலைக் குற்றங்களை,
சிங்கள அரசின் கமிசன் மூடி மறைத்து விட்டது.

சிங்கள ராணுவம் மருத்துவமனைகள் மீது குண்டுவீசித் தாக்கியதற்கு ஆதாரங்கள் இருப்பதால், அதை மறுக்க வழியின்றி,
 விடுதலைப் புலிகள் மீது பழியைச் சுமத்தி உள்ளது. ஈழத்தமிழ் இளைஞர்கள் கண்கள் கட்டப்பட்ட நிலையில்,
அம்மணமாக இழுத்துச் செல்லப்பட்டு, சுட்டுக் கொல்லப்பட்டதையும், இசைப்பிரியா எனும் தமிழ் நங்கை, ராணுவத்தினரால்
 கொடூரமாகக் கொல்லப்பட்டதையும், இத்தகைய பல்வேறு சம்பவங்களைப் பற்றி, ஒரு வரி கூட அந்த அறிக்கையில் இல்லை.

எந்த இடத்திலும் பாதிக்கப்பட்ட மக்களிடத்தில், சுதந்திரமாக சாட்சியம் அளிக்க வாய்ப்பு அளிக்கவில்லை.
ராணுவ சிப்பாய்கள் உடன் இருந்து மிரட்டிய நிலையிலேயே சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

திட்டமிட்டே இனப்படுகொலை செய்த சிங்கள அரசு, உலகின் கண்களில் மண்ணைத் தூவுவதற்காகத்தான்,
தானே மோசடியாக கமிசனை நியமித்து, விசாரணை நாடகத்தை நடத்தி, அறிக்கையும் தந்து விட்டது.

உலகின் பல்வேறு நாடுகள், மனித உரிமை அமைப்புகள், இந்த அறிக்கையைக் கண்டித்துள்ளன.

எனவே, சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக் குற்றத்தை, முழுமையாக உலக அரங்குக்குத் தெரியப்படுத்தவும்,
 அனைத்துலகக் குற்றவியல் நீதிமன்றக் கூண்டில் ராஜபக்சே அரசை நிறுத்தித் தண்டிக்கவும், ஐ.நா. மன்றமும்,
உலக நாடுகளும், நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்குரிய சுதந்திரமான விசாரணை, தமிழர்கள் பாதிக்கப்பட்ட பகுதிகளில்
நடத்தப்பட வேண்டும் என்று, ஐ.நா. மூவர் குழு, ஏற்கனவே தெரிவித்து உள்ளது.

இந்திய அரசுதான் போரை நடத்த உதவியது என்றும், இயக்கியது என்றும், அதனால்தான் புலிகளைத் தோற்கடித்தோம் என்றும்,
 சிங்கள அதிபர் ராஜபக்சேவும் அமைச்சர்களும் இலங்கை நாடாளுமன்றத்திலேயே கூறினர்.
ஈழத்தமிழ் இனக்கொலையின் கூட்டுக்குற்றவாளிதான் இந்திய அரசு ஆகும்.

2009 மே மாதத்துக்குப் பின்னரும், தமிழ் இன அழிப்பு நடவடிக்கைகளிலேயே சிங்கள அரசு ஈடுபட்டு வருகிறது.
தமிழர் தாயகத்தில், சிங்கள இராணுவமும், போலீசும் குவிக்கப்பட்டு உள்ளன. தமிழ்ப் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்வது,
 கற்பழிப்பது போன்ற அக்கிரமங்களில் சிங்கள ராணுவத்தினர் ஈடுபட்டு வருகின்றனர். தமிழர்களின் வழிபாட்டுத் தலங்களிலும்
சிங்கள ராணுவம் அதிகாரம் செலுத்துகிறது. தமிழர்களின் பூர்வீக அடையாளங்களை எல்லாம் அழித்து வருகிறது.
பௌத்த விகாரைகளைத் தமிழர் பகுதிகளில் அமைக்கிறது.

உண்மைகளை வெளியே சொல்ல, ஈழத்தமிழர்கள் அஞ்சுகின்ற அபாயத்தில் உள்ளனர். உலக நாடுகள், சிங்கள அரசின் இனக்கொலைக்
குற்றத்தை அறிந்து வருவதாலும், எதிர் நடவடிக்கைகளை மேற்கொள்ளக் கூடும் என்பதாலும், இந்திய அரசு திட்டமிட்டு,
சிங்கள அரசுக்கு உதவுகின்ற வேலையில் தற்போது ஈடுபட்டு உள்ளது.

2006ம் ஆண்டு செஞ்சோலையில் 61 தமிழ்ச் சிறுமிகள், சிங்கள விமானக் குண்டுவீச்சால் படுகொலை செய்யப்பட்டதைக்
கண்டிக்காத இந்திய அரசு, சுனாமி நிவாரணப் பணியில் ஈடுபட்ட தமிழ் இளைஞர்களை சிங்கள ராணுவம் சுட்டுக் கொன்றதைக்
 கண்டிக்காத இந்திய அரசு, நாடாளுமன்ற உறுப்பினர்களான நான்கு தமிழர்கள் நடு வீதியில் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டிக்காத
 இந்திய அரசு, லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கு உடந்தையாகச் செயல்பட்ட இந்திய அரசு,
இப்போது வீடுகள், பள்ளிக்கூடங்கள் கட்டித் தருகிறோம் என்று மாய்மால வேலை செய்கிறது.

தமிழர் தாயகம் என்பதே கிடையாது என்றும், சிங்கள மொழிதான் ஆட்சி மொழி என்றும், சிங்களவர்களுக்கு அடங்கித்தான்
தமிழர்கள் வாழ வேண்டும் என்றும் சொல்லிவிட்ட ராஜபக்சேவிடம், இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ்.எம். கிரூஷ்ணா
 இப்போது பேசி விட்டதாகவும், 13 ஆவது அரசியல் சட்டத் திருத்தத்தை வலியுறுத்தியதாகவும் கூறி இருப்பது, தமிழக மக்களையும்,
 உலகத்தையும் ஏமாற்றுவதற்காக, இந்திய அரசு செய்கின்ற பித்தலாட்ட வேலை ஆகும்.

தமிழக மீனவர்கள் மீது இனி சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தாது, என்று தன்னிடம் சிங்கள அரசு உறுதி அளித்ததாக கூறிய
இந்திய அமைச்சர் கிருஷ்ணா முகத்தில் சிங்கள அரசு மூன்று நாட்களுக்குள் கரியைப் பூசிவிட்டது. நேற்றும், ராமேஸ்வரம் அருகில்
 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை தாக்கியுள்ளது.

சிங்கள அரசும், இந்திய அரசும் செய்கின்ற மாய்மால வேலைகளை முறியடித்து, ராஜபட்சவை குற்றக்கூண்டில் நிறுத்தவும்,
ஈழத்தமிழர் தேசிய இனப்பிரச்சினைக்குத் தமிழ் ஈழம் மட்டுமே தீர்வு ஆகும் என்பதை நிலைநாட்டவும், ஈழத்தமிழர்கள் மத்தியில்
அதற்கான பொது வாக்கெடுப்பு நடத்தவும், உலகெங்கும் உள்ள ஈழத்தமிழ் உணர்வாளர்களும், மனித உரிமை ஆர்வலர்களும்
உறுதி பூண வேண்டுகிறேன் என்று கூறியுள்ளார் வைகோ.

(தகவல் - தட்ஸ்தமிழ்)


Saturday, January 21, 2012

கைக் குழந்தையுடன் ஈழத் தமிழ்ப் பெண் நார்வேயில் தீக்குளித்து பரிதாப மரணம்!





ஒன்றரை வயது குழந்தையுடன் ஈழத் தமிழ்ப பெண் ஒருவர் நார்வேயில் தனது வீட்டில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டார்.
 அவரது சகோதரி யாழ்ப்பாணத்தில் கொலை செய்யப்பட்டதால் ஏற்பட்ட வேதனையாலும், தனது அகதி புகலிடக் கோரிக்கையை
நார்வே அரசாங்க அதிகாரிகள் நிராகரித்ததால் ஏற்பட்ட மன அழுத்தத்தாலும் அவர் இந்த முடிவைத் தேடிக் கொண்டதாக கூறப்படுகிறது.

24 வயதான அந்தப் பெண் ஈழத்தில் உள்ள சாவகச்சேரி என்ற பகுதியைச் சேர்ந்தவர். கடந்த 2006ம் ஆண்டு முதல் நார்வேயில்
 தஞ்சமடைந்து வசித்து வருகிறார். இவரைப் போலவே நார்வே நாட்டில் தஞ்சமடைந்து வசித்து வரும் குர்திஷ் இனத்தவர்
ஒருவரை காதலித்து கல்யாணம் செய்து கொண்டார். இந்தத் தம்பதிகளுக்கு ஒன்றரை வயதில் குழந்தை இருந்தது.

அகதி அந்தஸ்து கேட்டு இவர் நார்வே குடியேற்றத்துறையில் விண்ணப்பித்திருந்தார். ஆனால் சமீபத்தில் இந்த விண்ணப்பம்
 நிராகரிக்கப்பட்டது. இதனால் இவர் நாடு கடத்தப்படும் அபாயம் எழுந்தது. இந்த சமயத்தில்தான், யாழ்ப்பாணத்தில் வசித்து
 வந்த இவரது 18 வயது சகோதரி மர்மமான முறையில் மரணமடைந்தார். அவர் கொலை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் நார்வேயில் வசித்து வந்த இப்பெண் பெரும் சோகமும், வேதனையும் அடைந்தார்.

இந்த நிலையில் தான் வசித்து வந்த இருப்பிடத்தில் தனது கைக்குழந்தையோடு அவர் தீக்குளித்து விட்டார்.
படுகாயமடைந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர்களில் முதலில் அப்பெண்ணும்,
 பின்னர் குழந்தையும் அடுத்தடுத்து உயிரிழந்தனர்.

இவர்களின் இறுதிச் சடங்கு நிகழ்ச்சியில் ஏராளமான அகதிகள் கலந்து கொண்டனர்.
தற்கொலை செய்து கொண்ட பெண்ணின் வழக்கறிஞர் கிறிஸ்டைன் ஆரே ஹான்ஸ் கூறுகையில், தனது தங்கை மீது இப்பெண்
மிகுந்த பாசத்துடன் இருந்து வந்தார். அவரது மரணம் இவருக்கு மிகப் பெரிய வருத்தத்தையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.
 பெரும் கவலையுடன் இருந்து வந்தார் என்றார்.

(தகவல் தட்ஸ்தமிழ்)


கொள்ளையர்களை ஜாமீனில் எடுத்த நீதிபதி






கொ‌ள்ளைய‌ர்களை த‌ண்டி‌க்க வே‌ண்டிய‌ ‌நீ‌தி‌ப‌தியே, கொ‌ள்ளைய‌ர்களை ‌ஜா‌மீ‌ன் எடு‌த்த கேவலமான ‌நிக‌ழ்வு த‌மிழக‌த்‌தி‌ல் அர‌ங்க‌ே‌‌றியு‌ள்ளது.

‌அ‌ண்மை காலமாக ‌சிவக‌ங்கை மாவ‌ட்ட‌ம், காளையார் கோவிலில் கொள்ளைச் சம்பவங்கள் அதிகரித்து வ‌ந்து‌ள்ளது.
 எ‌ப்போது ‌சி‌க்‌குவா‌ன் கொ‌ள்ளைய‌ன் எ‌ன்று பொ‌றிவை‌‌த்து கா‌த்‌திரு‌ந்த பொதும‌க்களு‌க்கு நே‌ற்று தே‌சியமயமா‌க்க‌ப்ப‌ட்ட வ‌ங்‌கி
 ஒ‌ன்‌றி‌ல் கொ‌ள்ளையடி‌க்க முய‌ன்ற இர‌ண்டு கொ‌‌ள்ளைய‌ர்களை ‌பிடி‌த்தன‌ர். அவ‌ர்களை நைய புடை‌த்த பொதும‌க்க‌ள் ‌பி‌ன்ன‌ர்
காவ‌ல்துறை‌யின‌ர் ஒ‌ப்ப‌டை‌த்து‌ள்ளன‌ர்.

கொ‌ள்ளைய‌ர்க‌ள் காவ‌ல்துறை‌யி‌ல் இரு‌ப்பதை தெ‌ரி‌ந்து கொ‌ண்ட தேவகோ‌ட்டையை சே‌ர்‌ந்த ‌நீ‌திப‌தி சரவணகுமா‌ர் எ‌ன்பவ‌ர்
 ‌விரை‌ந்து வ‌ந்து 2 கொ‌ள்ளைய‌ர்களையு‌ம் தனது சொ‌ந்த ஜா‌மீ‌னி‌‌ல் ‌விடு‌‌வி‌த்து‌ள்ளா‌ர்.

‌நீ‌திப‌தி‌யி‌ன் இ‌ந்த செயலை க‌ண்டு பொறு‌த்து‌க் கொ‌ள்ள முடியாத காளையா‌ர்கோ‌வி‌‌ல் ம‌க்க‌ள் அவரது எ‌திராக
 போரா‌ட்ட‌த்தை தொட‌ங்‌கியு‌ள்ளன‌ர்.

‌நீ‌திப‌தி‌க்கு எ‌திரான இ‌ந்த போர‌ா‌ட்ட‌த்‌தி‌ல் வ‌ணிக‌ர்களு‌ம் த‌ங்க‌ள் கடைகளை அடை‌த்து‌க் கொ‌ண்டு
பொதும‌க்களுட‌ன் கைகோ‌ர்‌த்து‌ள்ளன‌ர்.

‌நீ‌தி‌க்கு தலைவண‌ங்கு‌ம் ம‌‌க்க‌ள் நமது நா‌ட்டி‌ல் இரு‌க்கு‌ம்போது ‌நீ‌திப‌தி ஒருவ‌ரி‌ன் செய‌ல் ‌நீ‌தியை தலைகு‌னிய வை‌த்து‌ள்ளது.
 இ‌ப்ப‌டி‌ப்ப‌ட்ட ‌நீ‌திப‌தியா‌ல் பொதும‌க்களு‌க்கு ‌நீ‌தி ‌கிடை‌க்காது எ‌‌ன்பது உ‌ண்மையா‌கி ‌வி‌ட்டது.

இ‌ப்படி‌ப்ப‌ட்ட ‌நீ‌தி‌ப‌தி ‌‌மீது உடனடி நடவடி‌க்கை எடு‌‌க்க‌ப்படா‌வி‌ட்டா‌ல் ‌நீ‌திம‌ன்ற‌ங்க‌ள் ‌மீது‌ம், ‌நீ‌திப‌திக‌ள் ‌மீது‌ம் ‌ம‌க்களு‌க்கு
 ந‌ம்‌பி‌க்கை‌யி‌ல்லாம‌ல் போ‌‌ய்‌விடு‌ம். இதனா‌‌ல் பல ‌விளைவுக‌ள் ஏ‌ற்படு‌ம் எ‌ன்பது உ‌ண்மை.

நீதி வழங்க வேண்டிய நீதிபதியின் நீதியற்ற இந்த போக்கு ...நீதித் துறைக்கு வெட்கித் தலையை குனிய வைக்கும் ஒன்றாகும்.


Friday, January 20, 2012

பெண்ணை வர்ணிக்கும் வைரமுத்து..




சாதாரணமாக எழுத்தாளர்களும், கவிஞர்களும் பெண்ணை வர்ணிக்கும் போது...

பிறை நுதல், எள்ளுப் பூ நாசி, ஆரஞ்சு சுளை உதடுகள், முத்துப் பற்கள், கயல் விழி என்றெல்லாம் வர்ணிப்பர்.

விகடனில் , மூன்றாம் உலகப் போர் தொடரில் வைரமுத்துவின் பெண் வர்ணனையைப் பாருங்கள்..

கெழங்கு ராணி மாதிரி பிறவிய யாரும் பார்த்திருக்க மாட்டீங்க.பார்த்திருந்தா கடைவாயில பாலு ஊத்தற வரைக்கும் கண்ணைவிட்டுப் போகாது அவ ரூவம்.கொஞ்சம் எக்கி நின்னா ஆறடி இருப்பா அவ.பின்னி வச்ச சடை.பின் முதுகு தாண்டிப் பிருஷ்டப் பள்ளத்தில எறங்கி, கெண்டைக்கால உரசிக் குதிக்காலத் தொட இன்னும் கொஞ்சம் வசதியில்லையேன்னு வருத்தப்படும்.

அகலமான ஒடம்பு அவளுக்கு.சொளகு மாதிரி முதுகு.அதுல - ஒரு துளி இருட்டு ஒழுகி விழுந்த மாதிரி ஒரு மச்சம்.விளைஞ்ச தேனைப் புழிஞ்சு வடிகட்டிவச்சு ரெண்டு நாளைக்குப் பெறகு தொறந்து பாத்தா- தெளிஞ்சு நிக்குமே..அப்படி ஒரு நெறம்.எண்ணால 8 எழுதினா நடுவில ஒடுங்கி நிக்குமா இல்லையா அப்படி ஒரு இடுப்பு.

விளைஞ்ச வெள்ளைப் பாறைய வாழைத்தண்டு பதத்துக்கு வழவழன்னு செதுக்கி வச்ச மாதிரி ரெண்டு காலு.ஊமை காதுல சொன்ன ரகசியம் மாதிரி உள்ளடங்கிப் போன வயிறு.'ஆம்பளையா இருந்தா அடக்கிப் பாரு' ன்னு வாரவன் போறவனை எல்லாம் வம்புக்கு இழுக்கிற மார்பு.இள வாழை இலைய நெய்யில துடச்சுவச்ச மாதிரி மினுமினுன்னு ஒரு கழுத்து.இந்தப் பொருத்தமான உடம்புக்குத் திருத்தமான மூஞ்சி.இதுதாண்டான்னு பிரம்மனே வேட்டி போட்டுத் தாண்டுற மாதிரி செதுக்கிவச்ச மொகம்.


Thursday, January 19, 2012

புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக்க உயர்நீதிமன்றம் தடை!



 புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்ற மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதி
பெறப்பட வேண்டும். அது கிடைக்கும் வரை அப்பணிகளைத் தொடங்கக் கூடாது என்று கூறி புதிய தலைமைச் செயலகத்தை
 மருத்துவமனையாக மாற்றும் தமிழக அரசின் முடிவுக்கு சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்து விட்டது.

சென்னை வாலாஜா சாலையில் உள்ள அரசினர் தோட்ட வளாகத்தில் பிரமாண்டமான அளவில் பல நூறு கோடி செலவில்
புதிய தலைமைச் செயலகம் மற்றும் புதிய சட்டசபையை கடந்த திமுக ஆட்சி கட்டியது. அங்கு சட்டசபையும்
இடமாற்றம் செய்யப்பட்டு கூட்டமும் நடத்தப்பட்டது.

இந்த நிலையில், அதிமுக ஆட்சிக்கு வந்ததும் புதிய தலைமைச் செயலகத்தையும், சட்டசபையையும்
மூட உத்தரவிட்டு விட்டது. சட்டசபையும், தலைமைச் செயலகமும் தொடர்ந்து புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்திலேயே நீடிக்கிறது.

மேலும், புதிய தலைமைச் செயலகத்தை மருத்துவமனையாக மாற்றப் போவதாகவும்,
அங்கு அதி உயர் சிறப்பு மருத்துவமனை அமையும் என்றும் முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார்.
அதுதொடர்பான பணிகளையும் அரசு முடுக்கி விட்டுள்ளது.

இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. வீரமணி என்பவர் இந்த வழக்கைத் தொடர்ந்தார்.
 இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் முருகேசன், ஜனார்த்தன ராஜா முன்னிலையி்ல் விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் வில்சன் வாதிடுகையில்,

புதிய தலைமைச் செயலகத்தை சிறப்பு மருத்துவமனையாக மாற்றுவதற்கு முன்பு மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்தின்
அனுமதி பெற வேண்டும். இந்த அனுமதி இல்லாமல் மருத்துவமனை அமைக்க கூடாது என்று ஆட்சேபனை தெரிவித்தார்.

இதுகுறித்து விளக்கம் அளிக்க அவகாசம் தேவை என்று அட்வகேட் ஜெனரல் நவநீதகிருஷ்ணன் நீதிபதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.

இதையடுத்து புதிய தலைமைச் செயலகத்தில் மருத்துவமனை அமைக்க மத்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகத்திடம்
 அனுமதி வாங்கப்படுமா என்பது குறித்து இன்றைக்குள் தெரிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசுத் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. இதைத் தொடர்ந்து நீதிபதிகள்
இடைக்கால உத்தரவு ஒன்றைப் பிறப்பித்தனர்.

அதன்படி மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதியைப் பெறாமல் மருத்துவமனையாக புதிய தலைமைச் செயலகத்தை
 மாற்ற முடியாது. சுற்றுச்சூழல் அமைச்சகத்திடமிருந்து தடையில்லா சான்று பெறப்பட வேண்டும். அதுவரை மருத்துவமனையாக
 மாற்றும் பணிகளைத் தொடங்கக் கூடாது என்று கூறி நீதிபதிகள் இடைக்காலத் தடை விதித்தனர்.

முன்னதாக புதிய சட்டசபை கட்டிடத்தின் 'ஏ' பிளாக்கில மல்டிஸ்பெஷாலிட்டி மருத்துவமனையும்,
'பி' பிளாக்கில் மருத்துவக் கல்லூரியும் துவங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்திருந்தார்.
அதன்படி 97,829 சதுர மீட்டர் பரப்பளவில் 8 மாடிகள் கொண்ட 'ஏ' பிளாக்கில் மருத்துவமனை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.

தரைத்தளத்தில் புறநோயாளிகள் பிரிவும், முதல் மாடியில் இதயம், நரம்பியல், நோய் கட்டிகள் தொடர்பான சிறப்பு பிரிவுகளும்,
2வது மாடியில் ரத்த சுத்திகரிப்பு மற்றும் ஆய்வகங்களும், 3வது மற்றும் 4வது மாடிகளில் பொது வார்டுகள் அமைக்கப்படவுள்ளன.
 மேலும் 5 மற்றும் 6வது மாடிகளில் சிறப்பு வார்டுகள் உருவாக்கப்படுகின்றது. பொதுமக்கள் பார்வையிட வசதியாக
அமைக்கப்பட்ட 2 மாடிகளின் தென்கிழக்குப் பகுதியில் ஆபரேஷன் தியேட்டர்கள் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இது தவிர இங்கு தீவிர சிகிச்சைப் பிரிவுகள் உருவாக்கப்படவிருக்கின்றன.

மக்கள் வசதிக்காக லிப்ட் மற்றும் சிறப்பு பாதைகள் அமைக்கப்படவிருக்கின்றது. ரூ.26.9 கோடி செலவில்
முதல் கட்ட சீரமைப்பு மற்றும் மின் அமைப்பு பணிகள் துவங்கப்படவிருக்கின்றது. இந்த சீரமைப்பு பணிகள்
 பொதுப்பணித் துறை மூலம் மேற்கொள்ளப்படுகின்றது.

மேலும் பல்வேறு பணிகள் டெண்டர் விடப்பட்டு முடிவு செய்யப்படுகிறது. இது குறித்த விவரங்களை வரும்
24 மற்றும் 25 தேதி தேதிகளில் நடக்கும் கூட்டத்தில் டெண்டரில் பங்கேற்பவர்கள் தாக்கல் செய்ய வேண்டும்
 என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில்தான் தற்போது தடை வந்து விட்டது.

(தகவல் தட்ஸ் தமிழ்)


தன் வங்கி கணக்கில் ரூ 49000 கோடி... அதிர்ந்து போன பள்ளி ஆசிரியர்!!





நேர்மையாளர்கள் எங்கே என்று சகல துறைகளிலும் தேட வேண்டிய ஒரு காலகட்டத்தில், அவ்வப்போது சிலர் தலையை நீட்டி இதோ அப்படி ஒரு ஆள் இருக்கிறேன் என்று நம்பிக்கையூட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்.

பாரிஜாத் சஹா

யாரிந்த பாரிஜாத் சஹா? ஒரு பள்ளி ஆசிரியர். மேற்கு வங்கத்தில் உள்ள பாலுர்கட் என்ற சிறிய நகரத்தில் அரசுப் பள்ளி
 ஆசிரியராக உள்ளார். மாதச் சம்பளம் ரூ 35000.

கடந்த ஞாயிறன்று தனது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா சேமிப்புக் கணக்கில் எவ்வளவு உள்ளது என்று இன்டர்நெட்டில் பார்த்துள்ளார்.
 ரூ 49,570,08,17,538 (அதாவது 9.8 பில்லியன் டாலர்கள்!) இருப்பதாக திரையில் வர, ஷாக்கடித்து நின்றுவிட்டார் மனிதர்.
இந்தத் தொகை இந்திய கல்வித் துறைக்கான ஆண்டு பட்ஜெட்டை விட அதிகம்!

 அடுத்த கணமே அந்த வங்கியில் தனக்குத் தெரிந்த அதிகாரிக்கு போன் செய்தார். "என் கணக்கில் ரூ 49000 கோடி வந்துள்ளது..
சீக்கிரம் உங்கள் தவறை சரி செய்யுங்கள். என் பணம் ரூ 10000 அதில் உள்ளது. எடுக்க வேண்டும்," என்றாராம்.

அவர் நினைத்திருந்தால் அந்தப் பணத்தை ஞாயிறன்றே எடுத்திருக்க முடியும். ஆனால் கணக்கில் நடந்துள்ள தவறைப் பார்த்ததும்
 அடுத்த நாள் வரை காத்திருந்தார்.

விஷயம் வெளியில் கசிந்ததும் உளளூர் தொலைக்காட்சிகள் முதல் சிஎன்என், பிபிசி வரை போட்டி போட்டுக் கொண்டு சஹாவை
பேட்டி எடுத்துத் தள்ளின. அவர்களிடம் சஹா கூறுகையில், "இவ்வளவு பணம் என் கணக்கிலிருப்பது தெரிந்ததும் எனக்கு எந்த உணர்வும்
 ஏற்படவில்லை. முதலில் இந்த தவறை சரி செய்யச் சொல்ல வேண்டும் என்றுதான் தோன்றியது," என்றார்.

ஸ்டேட் பேங்கின் கொல்கத்தா மண்டல அலுவலகமும், மும்பை தலைமை அலுவலகமும் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளன.
 கிட்டத்தட்ட 4 நாட்களாக விசாரணை நடக்கிறது. ஆனால் இந்த ரூ 49000 கோடி வந்த வழிதான் அவர்களுக்குத் தெரியவில்லையாம்.

(தகவல்- தட்ஸ்தமிழ்)