Thursday, May 29, 2008

வாய் விட்டு சிரியுங்க - 6

1.உங்க பையன் நிறைய மார்க் வாங்கியிருக்கான்..m.b.b.s. try பண்ணலாமே
அவன் கொஞ்சம் குள்ளம்..எம்பாம படிக்க முடியுமா?

2.நம்ம படத்திலே கதாநாயகன் ஒரு டெய்லர்..அதனாலே கதையிலே எங்கே எங்கே தொய்வு
விழுதோ அங்கங்க இழுத்து தைச்சுடுவார்.

3.அப்பா காக்காவிற்கு நாக்கு இருக்கா?
ஏண்டா
அம்ம சமைச்சதைப் போட்டா..சாப்பிட மாட்டேன்னு சொல்லுதே

4.கதை என்னன்னு சொல்லாம ஒரு படம் எடுத்தீங்களே..என்னாச்சு?
படம் ரிலீஸ் ஆகி தியேட்டருக்கு வந்தப்போ மக்களுக்கும் கதை என்னனு தெரியாமப் போச்சு

5.பெண் பார்க்க வந்த மாப்பிள்ளை வீட்டார்- பெண்ணுக்கு பாடத்தெரியுமா? ஒரு பாட்டு பாடச்
சொல்லுங்க..
பெண்- (பாடுகிறாள்)சின்ன வீடா வரட்டுமா?பெரிய வீடா வரட்டுமா?

6.உங்க கணவர் தூங்கும்போதும் கண்ணாடி ஏன் போட்டுக்கிறார்?
அப்பத்தான் கனவுலே வர்றவங்களையெல்லாம் நல்லாப் பார்க்க முடியுதாம்.

Wednesday, May 28, 2008

நாடகம் பொழுதுபோக்கா..கலையா - சொற்போர் -5

எந்த ஒரு நடிகரையும்,எந்த சமயத்திலும் காப்பி அடிக்கக்கூடாது.தனக்கென தனி பாணி வேண்டும்.காப்பியடிக்கும் கலை மட்டும் வேண்டாம்.
நாடகக்கலையை பொறுத்தமட்டில்..புதுமைக் கருத்து அல்லது மறுமலர்ச்சிக் கருத்து என்பது ரசிகர்களின் கை தட்டலின் வாயிலாக வெளிப்பட்டால் போதாது..பார்ப்பவர் உள்ளத்தில் அது பாய்ந்து நம் பண்புக்கேற்ற வகையில் அது செயலாக வெளிப்பட வேண்டும்.
கலை என்பது நன்மைக்காக வளர வேண்டும்.மனிதரின் அறிவை நல்ல வழியிலும் திருப்பலாம்.கெட்ட வழியிலும் திருப்பலாம்.நல்லதைவிட தீயதைத்தான் மனித மனம் விரைவில் ஏற்றுக்கொள்ளும் தன்மை வாய்ந்தது.ஆகவே பொழுது போக்கு என்ற பெயரில் நடைபெறும் கலை நிகழ்ச்சிகள் கூட மக்களின் நலன் கருதியே வரவேண்டும்.
நாடக கலாசாலைப்போல நல்ல கலாசாலை நீடுலகில் உண்டோ?என்றார் கவிமணி.ஆம்..நாடகத்தை நல்ல கலாசாலையாக அந்த கவிஞன் நினைத்தான்.
இக்கருத்தின்படி நாட்டில் நாடக நற்கலாசாலைகள் அமைக்க வேண்டும்..நடிப்புக்கலையை போதிக்க வேண்டும்.
அதன் மூலம் மக்களின் கண்களையும்,செவிகளையும் கவர்ந்து,அவர்களுடைய வாழ்வை வளமுடையதாக்க
வேண்டும்.தூய்மைப்படுத்த வேண்டும்.
புராண நாடகம்,இதிகாச நாடகம்,வரலாற்று நாடகம்,கற்பனை நாடகம்,பக்தி நாடகம்,இலட்சிய நாடகம்,சமுதாய நாடகம்,சமுதாய சீர்திருத்த நாடகம்,தேசிய நாடகம்,நகைச்சுவை நாடகம் என நாடகங்கள் நடத்தப்பட வேண்டும்.
நடிப்புக்கலைக்கு உரிய தனிச்சிறப்பு என்ன தெரியுமா?ஒரு ஓவியன்..தன் கலையை செய்து முடித்ததும்..அவன்
வேறாகவும்..அவன் வரைந்த ஓவியம் வேறாகவும் அமைந்து விடுகிறது.அதுபோன்றதுதான் சிற்பக்கலையும்.ஆனால்
நடிகன் நிலை முற்றிலும் மாறுபட்டது.நடிகன் வேறாகவும்..அவன் படைப்பு வேறாகவும் இருக்க முடியாது.நடிகன் படைக்கும் பாத்திரம் அவனுக்குள்ளேயே அடங்கிக்கிடக்கிறது.நடிகனும் அவனே..பாத்திரமும் அவனே..
இந்த சிறப்பை கலைஞர்கள் அனைவரும் உணர வேண்டும்.இது நடிப்புக் கலைக்கே உரிய தனி சிறப்பாகும்.
நாடகத்தில் சொல்லப்படும் கதை அழகோடு,கலையழகோடு..மனித குலத்தின் நல்வாழ்வுக்கும் வழிகோல வேண்டும்.



கலை வழியே-நாடகக் கலை வழியே
அன்பு வழி - அறவழி வளர வேண்டும் நம் நாட்டில்
நன்றி..வணக்கம்

(சென்னை முத்ரா சபாவில் நடைபெற்ற சொற்போரில் ..நாடகம் ஒரு கலைதான் என்று நான் ஆற்றிய
உரை இப்பகுதியுடன் நிறைவுப் பெறுகிறது)

Tuesday, May 27, 2008

வாய் விட்டு சிரியுங்க-5

1.நேற்று டைபிஸ்ட் நளினி ஏன் உன்னை திட்டினாள்?
அவளோட மாமியார் மறைவுச் செய்தி கேள்விப்பட்டு'உன் மகிழ்ச்சியில்
பங்குக் கொள்கிறேன்' என்று சொன்னேன் அதனால்தான்..

2.கோட்டையை கைப்பற்றுவோம்னு தலைவர் பேசினாரே..என்னாச்சு
கோட்டையை கோட்டை விட்டுட்டார்.

3.தலைவருக்கு டாக்டர் பட்டம் கொடுத்ததை சிம்பாலிக்கா எப்படி தெரிவிச்சிருக்கார்
தெரியுமா?
எப்படி
மகாநாட்டிற்கு தொண்டர்கள் பிணி பிணியாய் வருக என்று..

4.நேற்று என் மாமியார் என்னை கட்டிப்பிடிச்சு ஆனந்தக்கண்ணீர் விட்டாங்க
அப்படி என்ன பண்ணினே?
அவங்களுக்கு சமமா நானும் சண்டை போடறேனாம்..

5.முதல் நாளே நீங்க எடுத்த படம் நொண்டுதே
அதனால்தான் படத்துக்கு சுளுக்கு என்று பெயர் வைக்க வேண்டாம்னு சொன்னேன்.

6.எங்க வீட்ல ஒரே நேரத்திலே எங்க பாட்டி,எங்க அம்மா,என் பொண்ணு வாந்தி
கங்கிராட்ஸ்..உங்களுக்கு சித்தப்பா,தம்பி,பேரன் எல்லாம் பிறக்கப்போறாங்களா?

நாடகம் பொழுதுபோக்கா..கலையா?சொற்போர் - 4.

நடிப்புக் கலையைப் பற்றி சற்று பார்ப்போம்.வீட்டில் குழந்தைகள் நாய்,பூனை இவற்றுடன் பயமின்றி விளையாடுகின்றன.அந்த நாயும்,பூனையும் தன் கூரிய நகங்களைக் கொண்டு..குழந்தைகளுக்கு எந்த வித பாதிப்பும் இன்றி எப்படி விளையாடுகின்றன..அதுவும் அவற்றின் நடிப்புத்தானே?
பெண் குழந்தைகள் பொம்மைகளை வைத்துக் கொண்டு..சமையல் செய்வது போல விளையாடுகின்றனவே..
அதுவும் நடிப்புத்தானே?
உலகம் ஒரு நாடக மேடை..நாம் அனைவரும் நடிகர்கள் என்கிறார்களே..அப்படியெனில் நாம் ஒவ்வொருவரும் நடிகர்கள்தானே?நடிப்புக்கலை தெரிந்தவர்கள் தானே?
ஒரு பிச்சைக்காரன்..தனது..நல்ல காலை மடக்கி முடம்பொல காட்டுகின்றானே..அது அவன் நடிப்பு.நன்கு தெரியும்
கண்களை..தெரியாதது போல குருடாக்கிக் காட்டுகின்றானே..அதுவும் நடிப்புத்தானே?
மனிதன் மொழியை உருவாக்குவதற்கு முன்..பேசத்தொடங்குமுன்..நடிப்பின் மூலம் தானே தன் எண்ணங்களை
வெளிப்படுத்தி இருப்பான்.ஹிந்தி தெரியாத நாம் இன்றும் வடக்கே சென்றால்.. நெருக்கடி சமயங்களில்..நடிப்புத்
தானே நம்மை காப்பாற்றி உதவி செய்கிறது.புரிய வைக்க வேண்டியதை கை கால்கள் அசைவு மூலம் புரிய
வைப்பது கலைதானே.நடிகனுடைய கண்கள்தான் மற்ற உறுப்புக்களை விட மிகவும் முதன்மையானது.
கண்கள் இருளிலே ஒளியாக..நடிப்பிலே உயிராக விளங்குகின்றன என்று சொல்லலாம்.சபையிலிருக்கும் மக்கள்
நடிகனின் பாத்திரத்தின்தன்மையை புரிந்துக் கொள்கிறார்கள்.ஒவ்வொரு நடிகனும் நடிப்புக் கலையில் தேர்ச்சிபெற
பேசும் கண்களைப் பெற்றிருக்க வேண்டும்.
மேடையில் நடிக்கும் போது நடிகன் ஒருவன் அதற்குரிய பாவத்தைக் கண்களில் காட்டாது..வேறு எங்காவது
சுழல விட்டுக் கொண்டிருந்தால் சுவை கெட்டு விடும்.பாவத்தைக் காட்டும் கலையை பயில வேண்டும்.
அழும் போது அழகாக அழுவது ஒரு கலை.கோபம் கொண்டாலும் அழகாகக் கோபப் பட வேண்டும்.எந்த வகையிலும்
தன்னை விகாரப்படுத்திக் கொள்ளக்கூடாது.விகாரப்படுத்திக் கொள்ளாமல் கோபப்படுவது ஒரு கலை.குரல் பயிற்சி
..மிக முக்கியமானது.வார்த்தைகளிலே ஏற்றத்தாழ்வு இருக்க வேண்டும்.குழைவு இருக்க வேண்டும்.அன்பு காட்டி
பேசுவதும்..ஆத்திரத்தோடு பேசுவதும் குரலிலேயே தெரிய வேண்டும்.அடுத்த படியாக பேச்சிலே தெளிவு இருக்க
வேண்டும்.அதுவும் ஒரு கலை.ஒரு பாத்திரத்தின் வசனங்களை மனப்பாடம் செய்யும் போது வார்த்தைகளை
நன்கு கவனிக்க வேண்டும்.எந்தெந்த இடத்தில் தெளிவும்..அழுத்தமும் வேண்டும் என உணர வேண்டும்.ஒரு நடிகனின் பேச்சிலிருந்து மற்றொரு நடிகனுக்கு பேச்சு தொடங்கும்.அது போன்ற சமயங்களில் அழுத்தமாக
சொல்லாவிட்டால் மக்களுக்கு புரியாது.அழும் காட்சிகளில் உண்மையாக அழக்கூடாது.அழுதால் பேச்சு தெளிவாக
இருக்காது.அழுகை நடிப்பாக இருந்தால்தான் பேச்சு தெளிவாக இருக்கும்.அப்படி அழ தெரிந்திருக்க வேண்டியது
ஒரு கலை.
(தொடரும்)

Monday, May 26, 2008

வாய் விட்டு சிரியுங்க -4

1.என் மனைவி எப்பவும் பணம்..பணம் என்று நச்சரிக்கிறாள்
நீ கொடுக்கற பணத்தை எல்லாம் என்ன செய்யறா?
யாருக்குத் தெரியும்? இதுவரை நான் கொடுத்திருந்தாத்தானே...

2.டாக்டர்- உங்களுக்கு வந்திருக்கிறது மெமொமோமன்டின் வியாதி
நோயாளி-அது என்ன வியாதி
டாக்டர்- யாருக்குத்தெரியும்?

3.நிருபர்-(நடிகையிடம்) உங்கள் வயது என்ன?
நடிகை-இருபத்தினான்கு
நிருபர்-(சரியாக காதில் வாங்காததால்)திருப்பச் சொல்லுங்க
நடிகை-திருப்பச்சொன்னாலும் இருபத்தி நான்கு தான்
நிருபர்-ஓஹோ 42ஆ

4.கணவன்_(மனைவியிடம்) வர வர t.v நிகழ்ச்சி எல்லாம் போரடிக்க ஆரம்பிச்சிடிச்சு..உனக்கு?
மனைவி- உங்களைவிடவா எனக்கு tv

5.தந்தை-(மகனிடம்)நீ இப்படி படிக்காம திரிஞ்சா உருப்பட மாட்டாய்
மகன்-உங்கப்பா உங்களை சொன்னது உங்க கேஸ்ல வேணும்னா பலிச்சிருக்கலாம்..நீங்க
சொல்றது என் கேஸ்ல பலிக்காது

6.தமிழ் டீச்சரை காதலிச்சது தப்பாப்போச்சு
ஏன்
லவ் லெட்டர் எழுதினாக்கூட எழுத்துப்பிழை,சந்திப்பிழைன்னு
எதாவது தப்பு கண்டுபிடிக்கிறா..

நாடகம் பொழுதுபோக்கா..கலையா -சொற்போர் - பகுதி3

நடிகர்களிடையே பங்குபெறுபவர்கள் கலைஞர்கள்.நாடகக்கலை சிறப்புற இவர்கள் முழு ஒத்துழைப்பும் தேவை.
நடிகர்களிடையே ஒழுங்கும்..கட்டுப்பாடும் இருக்க வேண்டும்.நாடகத்தில் நடிகன் நவரசங்களையும்
காட்ட வேண்டும்.அதாவது சுபாவத்தில் சாதுவாக இருப்பவன்..நடிக்கும் போது..காதல்,வீரம்,சிரிப்பு,கோபம்,
வியப்பு,இழிப்பு,சோகம்,பயம்,சாந்தம் ..இப்படி நவரசங்களையும் காட்ட வேண்டும்.அந்தக் கலை அவனுக்குத்
தெரிந்திருக்க வேண்டும்.அதனால்தான் நாடகத்தை கலை என்கிறோம்.நாடகங்களின் தந்தை என போற்றப்பட்ட
பம்மல் சம்பந்த முதலியார் அவர்கள் 'நடிப்புக் கலையில் தேர்ச்சி பெறுவது எப்படி' என்று ஒரு புத்தகமே எழுதியுள்ளார்.
எங்கேனும் அப்புத்தகம் கிடைத்தால் வாங்கிப் படியுங்கள்.
பெர்னாட்ஷா...எப்போது உலகப் புகழ் பெற்றார் தெரியுமா?
நாடகங்கள் எழுதி செல்வாக்கு பெற்ற பின்னர்தான்..சிறுகதை,நாவல் எழுதுவதைவிட நாடகம் எழுதுவது கடினம்.
நாடகம் மக்களுக்கு அதிகப் பயனைத் தரக்கூடியது என்பது உண்மையான கூற்று.இவ்வளவு பெருமையான
நாடகக்கலையை வெறும் வேடிக்கை நிகழ்ச்சியாகக் கருதக்கூடாது.நல்ல நாடக நிகழ்ச்சிகள் உங்கள் உள்ளத்தை
உயர்த்திச் சென்ற கால சிந்தனைகளையும்,நிகழ்காலத்து உண்மைகளையும்,வருங்காலத்தின் வளமைகளையும்
எடுத்துக் காட்டுகின்றன.ஷேக்ஸ்பியரின் ஹாம்லட் நாடகம்..உங்களுக்குத் தெரிந்திருக்கும்.அந்த நாடகத்தினுள்
ஒரு நாடகம் வரும்.தன் தந்தையைக் கொலை செய்த குற்றவாளியை கண்டுபிடிக்க எண்ணுகிறான் ஹாம்லட்.
அதற்கு நாடகம் தான் நல்ல வழி என்று எண்ணி ..உணர்ச்சி மிக்க நடிகர்களைக் கொண்டு தன் தந்தையின்
கொலை நிகழ்ச்சியை நாடகமாக்கி நடிக்க வேண்டும்.தன் சிற்றப்பன் கிளாடியசும்,தன் அன்னையும் அதை
பார்க்கவேண்டும்.அவர்கள் மன உணர்ச்சி எப்படி மாறுகிறது எனப் பார்க்க வேண்டும் என விரும்புகிறான்.
தானே, கதை எழுதி..நடிகர்களை நடிக்கச் சொல்கிறான்.நாடகம் பார்க்கும் சிற்றப்பன் முகம் மாற..
அவனே கொலையாளி என காண்கிறான் ஹாம்லட்.
நாடகத்தின் மூலம் ஒரு கொலையாளியையும் கண்டுபிடிக்கலாம் என்கிறார் ஷேக்ஸ்பியர்.
நம் நாடு சுதந்திரம் அடைய..நாடகங்கள் ஆற்றிய பணியை யாரும் மறுக்கவோ,மறக்கவோ முடியாது.
பேசும்படம் வந்த போது..நாடக மேடை இறந்துவிடும் என்றார்கள்.இன்றும் நாடகங்கள் அழிந்து வருகிறது
என்கிறார்கள்.ஆனால்..அது அழியாது..
நாடக மேடையை நல்ல முறையில் கையாண்டால்..அதை யாராலும் அழிக்கமுடியாது.
இனி..நடிப்புக்கலைப் பற்றிப் பார்ப்போம்...
(தொடரும்)

Saturday, May 24, 2008

நாடகம் பொழுதுபோக்கா..கலையா சொற்போர்-2

முதன் முதலில் பண்டைக்காலத்தில் நடகக்கலை எப்படி தோன்ற ஆரம்பித்தது?
நம் முன்னோர்கள்..மரத்தால் பொம்மைகளை செய்து அவற்றை ஆடி..ஓடி விளையாட வைத்தார்கள்.
பின்னர் மண்ணாலும்..துணியாலும் மனிதர்களைப்போல் அழகான பொம்மைகள் செய்து அந்த பொம்மைகளின் கை..கால்..தலை..முதலியவற்றை கயிற்றால் கட்டி..பின்னர் ,,அதற்கு பொம்மலாட்டம் என பெயர் வைத்தனர்,இது பொம்மலாட்டக்கலை.நாள் பட நாள்பட இப்படி உயிரில்லா பொம்மைகளை கொண்டு நடத்துவதை விட உயிருள்ள மனிதர்களுக்கு வேடம் போட்டுஇந்த விளையாட்டை அவர்களைக் கொண்டு நடிக்க வைத்தால் எப்படி இருக்கும் என்ற
எண்ணம் தோன்ற..இன்று நாம் காணும் நாடக விளையாட்டு தோன்றியது.அதனால் தான் கிராமங்களில்
நாடகத்தை விளையாட்டு என்கிறார்கள்.அத காரணமாகத்தான் நாடகத்தை ஆங்கிலத்தில் play என்கிறோம்.
மனிதன் தன் எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளியிடும் ஒலிக்குத்தான் மொழி என்று பெயர்.தமிழ் மொழியில் இதை விளக்க முத்தமிழை வகுத்தார்கள்.
அதாவது....இயல்..இசை..நாடகம்
நான் இப்போது பேசிக்கொண்டிருப்பது வார்த்தைகளால்..இது இயல்
இதையே ஒரு பாட்டாக நான் பாடினால் அது இசை
இயலும்..இசையும் மேடையில் சேரும்போது..அதுதான் நாடகம்.
இயல்..இசை..இரண்டும் சேர்ந்தால் நாடகம்.
ஆகவே தான் இயல்..இசை..நாடகம்..என நாம் நாடகத்தை கடைசியில் வைத்தோம்.
ஆம்..நாடகத்தை ஏன் கலை என்கிறோம்?ருசிக்கத்தக்கது..ரசிக்கத்தக்கது..உணரத்தக்கது..மகிழத்தக்கது
எல்லாவற்றையும் நாம் கலை எங்கிறோம்.
ஆய கலைகள் அறுபத்தினான்கினையும் என சரஸ்வதியை ஔவை விளிக்கிறார்.
மகிழத்தக்கதான கலை-மன்மதக்கலை
ருசிக்கத்தக்கது-சமையல் கலை
பார்த்து ரசிப்பது-ஓவியக்கலை
மகிழத்தக்கது-இசை மற்றும் ஓவியக்கலை
ரசிக்கத்தக்கது-நாடகக்கலை
நாடக்கலையில் பங்குபெறுபவர்கள் கலைஞர்கள்.நாடகக்கலை சிறப்புற இவர்கள் முழு ஒத்துழைப்பும் தேவை.
இவை பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்
(தொடரும்)

Friday, May 23, 2008

நாடகம் பொழுதுபோக்கா? கலையா?நடந்த சொற்போரில் நான் ஆற்றிய உரை

இலக்கியம் என்றால் படித்து மகிழ்வது.
நாடக இலக்கியம் என்றால் பார்த்து மகிழ்வது.
நாடகம் கலைகளுக்கெல்லாம் அரசன்.மக்கள் பயன்படுத்தும் ஒரு மகத்தான கலை.
எது ஒருவனை மகிழ்விக்கிறதோ..அது கலை.எது சமுதாயத்தை அப்படியே பிரதிபலிக்கிறதோ அது கலை.
மிகைப்பத்தப்படாதது எதுவோ..அது கலை.அதனால் தான் தத்ரூபமாக வரும் படங்களை art film
என்கிறோம்.நாடகங்களை நாடகக்கலை என்கிறோம்.
நாடகம்...நாடு+அகம்..நாட்டை அகத்தில் கொண்டதே நாடகம்.அதாவது நாட்டின் சென்ற காலத்தையும்,நிகழ்காலத்தையும் தன்னகத்தே காட்டுவதால்..நாடு..அகம்..நாடகம் என பெயர் பெற்றது எனலாம்.
நாடு..அகம்..அதாவது அகம் நாடு..உன்னுள் நோக்கு,உன்னை உணர்..சுருங்க ஒரு வரியில் சொல்ல
வேண்டுமென்றால்..நாடகம் உலக நிகழ்ச்சிகளை காட்டும் கண்ணாடி எனலாம்.
நாடகக் கலை என்பது என்ன? சிந்தித்துப் பாருங்கள்..
நாம் வெளியே போகும்போது எத்தனையோ காட்சிகளைப் பார்க்கிறோம்.ரசிக்கிறோம்.சில காட்சிகள்
நம் மனதில் ஆழமாக பதிந்து விடுகின்றன.
அப்படிப் பதிந்துவிட்ட காட்சியை ஒரு ஓவியன் ஓவியமாக வரைகிறான்.
நம் வீட்டில் குழந்தைகள் செய்யும் குறும்புகளை..மழலை பேச்சுகளை எப்படி ரசிக்கிறோம்.அந்த குழந்தையை
புகைப்படம் எடுத்து..அதைப்பார்த்து எவ்வளவு மகிழ்கிறோம்?கடைகளில் பலகாய்கறிகளைப் பார்க்கிறோம்.
ஆனால் அவற்றை அதிசயமாகவோ..ஆர்வமாகவோ..பார்ப்பதில்லை.ஆனால் அவற்றை மண்ணாலோ..
காகிதத்தாலோ..செய்து வர்ணம் பூசி பார்க்கும் போது..அடடே..நிஜ மாம்பழம் போல இருக்கிறதே
என மகிழ்கிறோம்.
இப்படி நாம் தினசரி பார்க்கும் காட்சிகளை ஓவியமாகவோ..புகைப்படமாகவோ..மண்ணால் உருவான
படைப்புகளாகவோ பார்க்கும் போது தனி மகிழ்ச்சி அடைகிறோமே..அது ஏன்? அந்த உணர்ச்சிக்குப் பெயர் என்ன?அதுதான் கலை உணர்வு.
முதன் முதலில் பண்டைக்காலத்தில் நாடகக்கலை எப்படி தோன்ற ஆரம்பித்தது?
(அடுத்த பதிவில் பார்க்கலாம்)

Friday, May 9, 2008

வாய்விட்டு சிரியுங்க

1.நேற்று கச்சேரியிலே பாகவதர் அமிர்தவர்ஷினி ராகம் பாடினதுமே மழை வந்ததாமே!
ஆமாம்..பாகவதர் வாயைத் திறந்ததுமே..முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவங்க
மேலே எல்லாம் மழைச்சாரல்.

2.உன்னோட கணவர் இன்னிசைக் கச்சேரியில் 'ட்ரம்ஸ்'வாசிப்பார்னு சொன்னே..ஆன வீட்ல
ஒரு சத்தத்தையும் காணுமே..
'ட்ரம்ஸ்'எல்லாம் திருப்பிப் போட்டு தண்ணீர் பிடிச்சு வைச்சிருக்கேன்.

3.கடம் வித்வான் வரலியேன்னு கிரிக்கட் ஆடறவனை அழைச்சுண்டுப் போனது
தப்பாப் போச்சு
ஏன்? என்னவாச்சு?
கடத்தைத் தூக்கிப்போட்டு பிடிக்கிறேன்னுட்டு..தூக்கிப்போட்டு பிடிக்காம கோட்டைவிட்டுட்டான்.

4.நேற்று என் பையன் எதிரில்..வாசல் கதவு 'கீரிச்..கீரிச்' நுசத்தம் போட்டப்போ எண்ணை போட்டது
தப்பாப் போச்சு.
ஏன் அப்படி?
இன்று நான் வயலின் வாசிச்சு முடிந்ததும்..என் வயலினுக்கு எண்ணை போட ஆரம்பிச்சுட்டான்.
5.போன வாரம்தான் உங்க குழந்தைக்கு காது குத்தறோம்னு விடுமுறை கேட்டீங்க..இப்ப திரும்ப
விடுமுறை கேட்கறீங்களே?
போன வாரம் ஒரு காதுதான் குத்தினோம்..இப்போ இன்னொரு காதை குத்த்ப்போறோம்.

Monday, May 5, 2008

அடுத்த முதல்வர் ஸ்டாலின் மறைமுகமாக அறிவிப்பு

நேற்று சட்டப் பேரவையில் தொழில்துறை மானியக்கோரிக்கை மீது விவாதம் நடந்தது.இதற்கு முதல்வர் கலைஞர்
சார்பில் ஸ்டாலின் பதிலளித்து பேசினார்.இது ஸ்டாலின் முதல்வர் ஆவதற்கான ஒரு பயிற்சி எனத் தெரிகிறது.
இதற்கான பயிற்சிகள்'படிப்படியாக மேற்கொள்ளப்படும்' என்றார் முதல்வர்.ஸ்டாலின் பேசிமுடித்ததும்'நான் பேசியது
சரியா?'என தந்தையைப் பார்த்து கேட்டதும்,கலைஞரும் 'நன்றாக செய்தாய்"என பாராட்டினாராம்.கலைஞரின்
மகள் கனிமொழியும்,தன் சகோதரன் ஸ்டாலின் பேச்சைக் கேட்க ராஜ்யசபாவிற்கும் போகாமல் நேற்று சட்டசபைக்கு
வந்திருந்தார்.
வாழ்த்துக்கள் வருங்கால முதல்வரே!!

Friday, May 2, 2008

வாய் விட்டு சிரிங்க.. நகைச்சுவை

1. திருமணம் ஆனப்பிறகு நம்ம காவ்யாவுக்கு கர்வம் ரொம்ப அதிகமாயிடுச்சு
ஏன்?
அவ கணவன் அருமையா சமைக்கிறானாம்.

2.காலை எட்டிலிருந்து ஒன்பது வரை என் மனைவிக்கு செய்திகள் கேட்டாகணும்
டி.வி.லியா
எங்க வீட்டு வேலைக்காரி சொல்ற செய்திகளைத்தான்

3.காதலன்(காதலியிடம்)மழை பெய்யணும்ங்கிறதுக்காக என்னை கல்யாணம்
பண்ணிக்க சொல்றியே...ஏன்?
காதலி- கழுதைக்கு திருமணமானா மழை வரும்னு சொல்லுவாங்களே!

4.மெகா தொடர் இயக்குநரை காதலிச்சியே..என்ன ஆச்சு?
எப்ப திருமணம்னா தொடர் முடியட்டும்னு சொல்றார்.

5.என் காதலர் M.L.A., ஆனதும் என்னையும் அவர் தொகுதியா நினைச்சுட்டார்
என்ன சொல்றே
என்னையும் சுத்தமா மறந்துட்டார்.
6.செவிக்குணவில்லாத போது வயிற்றுக்கு கொடுத்தால் போதும்னு சொல்றாங்களே
..செவிக்கு என்ன மாதிரி உணவு கொடுக்கணும் டாக்டர்

7.உன் பாட்டியை ஆம்புலன்சிலே தூக்கிக்கிட்டு எங்கே போறே?
பாட்டிக்கு உடம்பு சரியில்லைன்னு ...லீவு கேட்டா அதிகாரி நம்பமாட்டேன்னு சொல்றார்.
அதான்.