Tuesday, February 26, 2013

வாய் விட்டு சிரிங்க.





1.நேத்து கண்காட்சியில என் மனைவி காணாம போயிட்டா..
நீ கண்காட்சி போறதை முன்னாலேயே சொல்லக்கூடாது,..நானும் என் மனைவியை அழைச்சுட்டு வந்திருப்பேன்.

2.என் மனைவிக்கும்...எனக்கும் பெரிய சண்டை
ஏன்
ஷாஜகான் மும்தாஜ் ஞாபகமா தாஜ்மகால் கட்டினார்னு என் மனைவி கிட்ட சொன்னேன்..நான் செத்தா நீ என்ன கட்டுவேன்னு கேட்டா..உன் தங்கச்சியை கட்டுவேன்னு சொன்னேன் அதுதான்.

3. நம்ம தலைவர் ..ஒவ்வொரு தேர்தலிலும் ஒவ்வொரு கட்சியோட கூட்டு வைச்சிருக்கறதால...நம்ம கட்சிக்கு பச்சோந்தி சின்னம் கேட்கிறாராம்.

4. சுடச்சுட சாம்பாரைக் கொட்டிட்டேன்னு..காதில பஞ்சை ஏன் அடைச்சிக்கிற
நான் சாம்பாரை கொட்டினது உங்க அம்மா மேல..

5.நடுராத்திரி பெண் பார்க்கப்போறியா...ஏன்?
பொண்ணு ஸாஃப்ட்வேர் இஞ்சினீயர்...நைட்ஷிஃப்ட் அதுதான்..

6.உன்னை நம்பி வந்தவங்களை ஏமாற்ற உனக்கு எப்படி மனசு வருது..
நம்பி வரவங்களைத்தான் ஏமாற்ற முடியும்...நம்பாதவங்களை எப்படி ஏமாற்றமுடியும்?


Monday, February 25, 2013

வெற்றியை அடையும் வழி..(ஒரு பக்கக் கட்டுரை)




எந்த காரியத்தில் நாம் ஈடுபட்டாலும்..அதில் வெற்றி பெற வேண்டும் என்னும் எண்ணம் நம்மை அறியாமல் தோன்றிவிடுகிறது.

எவ்வளவு சிறந்த பயன் கிடைத்தாலும்..அது தவறான வழியில் வருமேயாயின்..அப்பயனை அடைய முயற்சி செய்யாதிருப்பதே நன்மை பயக்கும்.

ஆனால்..இன்று எப்பாடுபட்டேனும் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் இளைய தலைமுறையிடம் காணப்படுகிறது.வாழ்க்கையின் தலையாய நோக்கமாக வெற்றியை எண்ணுகின்றனர்.வாழ்க்கையில் வெற்றியடைவதை விட அமைதியாக வாழ்வதே சிறந்தது என்றனர் நம் முன்னோர்கள்.

கந்துக மதக்கரியை வசமாய் நடத்தலாம்
கரடி வெம்புலி வாயையும் கட்டலாம்..

என்று சொன்னவர்கள்..கடைசியில் 'சிந்தையை அடக்கியே சும்மா இருக்கின்ற திறம் அரிது' என்று கூறினார்கள்.

ஆகவே வெற்றியைக் காட்டிலும் சிறப்புடையதாகக் கருதப்பட்டது மன அமைதியே ஆகும்.

எடுத்தக் காரியம் வெற்றியடைய வேண்டும் என்பதற்கான மாற்றுக் கருத்து எதுவும் இருக்க முடியாது.ஆனால் அப்படிக் கிடைக்கும் வெற்றியில் துன்பக் கலப்பும், தீமைக்கலப்பும் இருத்தல் கூடாது.தவறான வழியில் சென்று பெறும் வெற்றி நிலைத்து இருக்காது.அது இன்பத்தையும் தராது.

எந்த வழியைப் பற்றியேனும் வெல்ல வேண்டும் என எண்ணினால்..அப்படிப்பட்ட வெற்றியைக் காணும் உடன் இருப்போர் மெல்ல மனம் மாறி நம்மை விட்டு விலகும் அபாயம் உள்ளது.இப்படிப்பட்ட வெற்றி உதறித் தள்ள வேண்டும்.

வெற்றி கிடைக்கும் வழி தூய்மையானதாக இருக்க வேண்டும்.சிறந்த வழியின் மூலம் கிடைக்கும் பலன் சிறிதானாலும்..அது ஞாலத்தின் மாணப் பெரிதாகும்.

என்றும் ஒருவுதல் வேண்டும் புகழோடு
நன்றி பயவா வினை

(புகழையும், நன்மையையும் தராத தூய்மையற்ற செயல்களை எந்த நிலையிலும் செய்யாமல் விட்டொழிக்க வேண்டும்)

பிறர் அழும்படியாகப் பெற்ற அனைத்தும்..பெற்றவர்களை அழ வைத்துவிட்டு தாமும் போய்விடும்.

வெற்றியைப் பெறுவது எவ்வளவு அவசியம் என எண்ணுகிறோமோ அவ்வளவு அவசியம் அதை அடைய மேற்கொள்ளும் வழியும்.அதனால் தான் வள்ளுவனும்..

ஈன்றாள் பசிகாண்பான் ஆயினுஞ் செய்யற்க
சான்றோர் பழிக்கும் வினை
என்கிறார்.


Sunday, February 24, 2013

மெய் சிலிர்க்கவைக்கும் ஆஜீத் பாடல்



சூப்பர் சிங்கர் ஜூனியர் ஆஜீத்தின்..இப்பாடல் இன்று கேட்டேன்..மறுமுறை..

மெய் சிலிர்க்க வைத்தது..

இது போன்ற ஞானம் அனைவருக்கும் வருவதில்லை..

இயற்கை..அளித்த வரம்..

வாழ்க..வளர்க...இதைத் தவிர ஏதும் சொல்லத் தெரியவில்லை.

Saturday, February 23, 2013

நான் படித்த அருமையான வரிகள்




1.உங்கள் பெற்றோரை..அவர்கள் உயிருடன் இருக்கும்போதே வணங்குங்கள்..இறந்த பிறகு அவர்களுடைய கல்லறைக்குச் சென்று வணங்குவதால் எந்த பயனும் இல்லை.

2.உங்க கோபம்..எல்லோரையும் ..உங்க கிட்டே இருந்து அந்நியப்படுத்தி விடும்.

3.எண்ணங்கள் தான்.. வாழ்க்கை..நம் எண்ணங்கள் தான்..நம் குணத்தை..நம் வாழ்வை தீர்மானிக்கின்றன.

4.தீபத்தின் ஒளியில்..திருக்குறளும் படிக்கலாம்...ஒரு ஊரையும் கொளுத்தலாம்.

5.வளைஞ்ச மூங்கில் பல்லக்கு ஆகும்..வளையா மூங்கில் பாடையாகும்.

6.நமக்கு தேவையில்லாததை வாங்க ஆரம்பிச்சா..நம்ம கிட்டே இருக்கிற தேவையானதை விற்க வேண்டி இருக்கும்

7.வரவுக்கு ஏத்த செலவு இருக்கணுமே தவிர..செலவுக்கு ஏத்த வரவுன்னு அலையக் கூடாது.

8.உங்களைச் சுற்றியுள்ள உலகத்தைப் பாருங்கள்..தேவைகளை தெரிந்துக் கொள்ளுங்கள்..வாய்ப்புகளை கண்டு பிடியுங்கள்..அவற்றை வெற்றியாக்கிடுங்கள்.

9.லட்சியத்தை மறந்துட்டு..மனுஷ உணர்ச்சிக்கு முக்கியத்துவம் கொடுக்காதீர்கள்.

10.எல்லாம் உனக்குத் தெரியும் என்ற இறுமாப்பு வேண்டாம்...ஆனான பட்ட ஔவைக்கே சுட்டப்பழத்தை சொன்னவன் யாதவ சிறுவன்.

இவற்றை எழுதியவர்களுக்கு நன்றி...


Friday, February 22, 2013

சிரிப்போம்..சிரிக்க வைப்போம்..(ஒரு பக்கக் குறிப்புகள்)




வாழ்க்கை என்பது ஒரு அற்புதம்..அதை இன்பகரமாக வாழ்ந்து காட்ட வேண்டியது..அவரவர் திறமை..ஏன்..அதை அவரவர் கடமை என்று கூட சொல்வேன்..அதற்கு..இன்றியமையா தேவைகள் பல இருந்தாலும்...குறிப்பாக நகைச்சுவை உணர்ச்சி முக்கியம்..

பல முக்கியச் செய்திகள்..நகைச்சுவையோடு கலந்து கொடுத்தால் தான்..நாம் எதிர்பார்த்தபடி..எதிர்ப்பார்த்த நபர்களை சென்று அடையும்.

ஆகவேதான்..திரைப்படங்களிலும்..கலைவாணர் அவர்களின் நகைச்சுவை..சில சீரிய..கருத்துக்களுடன் இருக்கும்.நகைச்சுவையாக சொல்லும்போது..முதலில் சிரித்தாலும்..பின்னர் அதில் பொதிந்திருக்கும் செய்தியை உணர்வோம்.

சிலர்...என்னதான் சிரிப்பான செய்தியைக் கேள்விப்பட்டாலும்...சிரிக்காமல்..எதையோ பறிகொடுத்தது போல் ..முகத்தை..சீரியஸ் ஆக வைத்திருப்பார்கள்.

நம்மை சிரிக்க வைத்த காமெடியன்கள் பலர் வாழ்க்கை..சோகமயமானது.உதாரணத்திற்கு..நடிகர் சந்திரபாபுவை சொல்லலாம்..அவர்கள் தங்கள் சோகத்தை மறந்து..தண்ணீருக்குள் மீன் அழுதால்..அதன் கண்ணீரை யார் அறிவார்..என்பதற்கேற்ப..அவர் தனிப்பட்ட சோகத்தை மறைத்து நம்மை மகிழ வைத்தார்.

பணத்தை பெரியதாக நினைப்பவர்கள்...சிரிப்பை மறந்தவர்கள்..

எந்திர மயமான வாழ்வில்..காலையில் கடற்கரையில்..நின்று ..உடல் நலனுக்காக..வலுக்கட்டாயமாக..சிரிக்க வேண்டியிருக்கிறது இன்று.. சிரிப்பு..அரு மருந்து என்பதால்..

சிரிப்பு...மனிதனுக்கு மட்டுமே..ஆண்டவன் கொடுத்த வரப்பிரசாதம்

சிரிப்போம்..வாய் விட்டு சிரிப்போம்...

வன்மத்தை விட்டு...எதிரியையும் சிரிக்க வைப்போம்..

சாதிக்க முடியாத விஷயங்களையும்..முக மலர்ச்சியுடன், எதிர் கொண்டால்..சாதிக்கமுடியும்..

(பதிவு பிடித்திருந்தால்..ஆதரவு வாக்களிக்கவும்)

Thursday, February 21, 2013

வாய் விட்டு சிரிங்க...




தயாரிப்பாளர்-பொங்கல் படங்களிலேயே உங்க படம் தான் பார்க்கிறார் போல இருக்கு
நடிகர்-அப்படியா
தயாரிப்பாளர்-ஆமாம்..மற்ற தியேட்டர்களில் எல்லாம் மக்கள் கூட்டம்தான் பார்க்க முடியுது.உங்க பட தியேட்டர்ல தான் யாருமில்லை

2)தலைவர் சுடுகாட்டில என்ன பண்றார்..
அவர் ஜலதோஷத்திற்கு ஆவி பிடிக்கச் சொன்னாராம் டாகடர்..அதைத்தேடிக்கிட்டு இருக்கார் பிடிக்க

3)தலைவர் போலீஸ் நிலயத்திற்கு எதற்குப் போனார்..
அவரது துணைவியின் கொடுமை தாங்கலையாம்

4)தயாரிப்பாளர்-ஒவ்வொருவர் தன் படம் ஓட போட்டியெல்லாம் வைக்கறாங்க..அது போல நாமும் ஒரு போட்டி வைக்கலாம்
இயக்குநர்-என்ன போட்டி வைக்கலாம்
தயாரிப்பாளர்-நம்ம படத்தின் கதை என்னன்னு கண்டுபிடிக்கறவங்களுக்கு பரிசு கொடுக்கலாம்

5)துறவி 1- நீங்க துறவியானதற்கு காரணம்
துறவி 2-.........நடிகரைப் போட்டு படமெடுத்தது தான் காரணம்..ஆமாம்..நீங்க..
துறவி1- என்னை உங்களுக்குத் தெரியல..அந்த படத்தை இயக்கியவன் நான்

6)நிருபர்-மக்களுக்கு உங்கள் பொங்கல் செய்தி..
தலைவர்-என்னை எதிர்ப்பவர்கள் நாசமாய் போவார்கள்..கெட்டு அலைவார்கள்..நாட்டை விட்டு ஓடுவார்கள் என்ற என் பொங்கல் வாழ்த்தை மக்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்

7)அந்த மருத்துவர்தான் தலைவரின் கரத்தை பலப்படுத்தியவர் என்கிறார்களே
ஆமாம்..தலைவரின் கை எலும்பு முறிந்த போது அவர்தான் சிகிச்சை செய்தாராம்.


Wednesday, February 20, 2013

தேவையற்றதை பேசாதீர்கள்....(.ஒரு பக்க செய்திகள்)




அவன் வேலைசெய்யும் நிறுவனம் பெரியது.ஆனாலும் நான் இல்லாவிடில் அந்த நிறுவனமே இயங்காது..என்பான்.
ஏதேனும் விவரம் அவனைக் கேட்டால்..அதற்கு பதில் சொல்வதற்கு..தேவையில்லாமல் ஐந்து நிமிடங்கள் பேசிவிட்டு..நாம் கேட்ட விவரத்தை சரியாக சொல்ல மாட்டான்.
தான் அதி புத்திசாலி..மற்றவர்கள் முட்டாள்கள் என்பது அவன் எண்ணம்.
ஒருமுறை அவன் வேலைசெய்யும் நிறுவனத்தின் அதிபர்..ஒரு வாடிக்கையாளரிடம் இருந்து..நிறுவனத்திற்கு கிடைக்க வேண்டிய பணத்திற்கான காசோலையை வாங்கிவரச் சொல்லி அவனை அனுப்பினார்.அவனும்..பயனில்லாமல்..தேவையில்லா இடங்களுக்கு எல்லாம் சென்றுவிட்டு..அந்த வாடிக்கையாளர் இருப்பிடம் சேர்ந்த போது..அவர் நீண்ட நேரம் இவனுக்காகக் காத்திருந்துவிட்டு வெளிநாட்டிற்குக் கிளம்பிவிட்டார்.
நிறுவன அதிபர் இவனை நீ எப்போது அங்குப் போனாய்? என்றார்.
இவனும் நேரத்தைச் சொன்னான்.
நான் உன்னைக் காலையிலேயே போகச் சொன்னேனே..என்றவரிடம்..இவன் ஊர் சுத்திய உண்மையைக் கூற முடியுமா? அதனால்..
"அது சார்..காலைலேயே கிளம்பினேனா..அண்ணா சாலையில் ஒரு அரசியல் கட்சி ஊர்வலம்..டிராஃபிக்ல மாட்டிக் கிட்டேன்.அங்கிருந்துத் தப்பி ராயப்பேட்டை போனேனா அங்கு ஒரு ஆக்ஸிடெண்ட்..டிராஃபிக் திருப்பி விட்டாங்க..மந்தவெளிக்கு ராஜா அண்ணாமலைபுரம் வழியா வந்து சேர்ந்தேன்.." இப்படி சொல்லிக் கோண்டே போனான்..
எது எப்படியோ..நிறுவனத்திற்கு வர வேண்டிய பணம் வரவில்லை.அந்தக் கோபத்தில் இருந்த அதிகாரி..இவனது பயனற்ற சொற்களை கெட்க விரும்பவில்லை.அவனை ஒரு உபயோகமற்றவன் என்று முடிவெடுத்தார்.
அவன் அவரது வெறுப்பை சம்பாதித்துக் கொண்டான்.

சொன்னக் காரியத்தை முடிக்காமல் பயனற்றவற்றைகளைப் பற்றி ஒருவன் பேசிக் கொண்டிருப்பானாயின் அது அவனையே பயனற்றவன் என்று உணர்த்தக் கூடியதாகும்.

நயனில னென்பது சொல்லும் பயனில
பாரித் துரைக்கும் உரை

தவிர்த்து..பலரும் வெறுக்கும்படியான பயனற்ற சொற்களைப் பேசுபவனை எல்லோரும் இகழ்வர்

பல்லார் முனியப் பயனில சொல்லுவான்
எல்லாரும் எள்ளப் படும்


Tuesday, February 19, 2013

பொன்விழா கண்ட கமல்..

                               


தமிழ் திரை உலகில்..நடிப்பு ஒன்றையே முழு மூச்சாய் எண்னிய நடிகர் திலகத்திற்கு அடுத்து கமல்ஹாசன் ஒருவரைத்தான் சொல்லமுடியும்.களத்தூர் கண்ணம்மா படத்தில் 50 வருஷங்களுக்கு முன் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் கமலஹாசன்..சிறுவன் கமலுக்கு ஏ.வி.எம்., சந்தர்ப்பம் கொடுத்தது என்றால்..அவரை நடன இயக்குநர் ஆக்கியது டேன்ஸ் மாஸ்டர் தங்கப்பன் அவர்கள்.அவர் வாலிப வயதை அடைந்ததும்..பாலசந்தர் அவர்களால் அரங்கேற்றம் படத்தில் சாதாரணமான ஒரு பாத்திரம் தரப்பட்டது.பின்..கமலின் திறமையை உணர்ந்த பாலசந்தர் தொடர்ந்து அவருக்கு..அவர்கள், மன்மத லீலை,அவள் ஒரு தொடர்கதை,அபூர்வ ராகங்கள் ,மூன்று முடிச்சு என பல படங்களில் நடிக்க சந்தர்ப்பம் கொடுத்து அவர் திறமையை வெளிக் கொணர்ந்தார்.பின்..கமலுக்கு எறுமுகம் தான்.

16 வயதினிலே சப்பாணி,கல்யாணராமன்,எல்லாம் இன்ப மயம்,கைதியின் டயரி,சிகப்பு ரோஜாக்கள்,வறுமையின் நிறம் சிவப்பு,சகலகலாவல்லவன்,மூன்றாம் பிறை, ராஜ பார்வை,இளமை ஊஞ்சலாடுகிறது,அவள் அப்படித்தான்,நாயகன்,மீண்டும் கோகிலா,வாழ்வே மாயம் என பல படங்களில் தன் திறமையைக் காட்டினார்.மறக்கமுடியா படங்கள் அவை.

ஆனாலும்..கமல் என்னும் நடிகரை நான் முழுமையாக ரசித்த படங்கள்..

சலங்கைஒலி - தனது நாட்டிய திறமையயும் இப்படத்தில் காட்டினார்.கிளைமாக்ஸ் காட்சியில்..கிணற்றின் மேல் நடனமாடும்..இவர் ..எங்கே கிணற்றில் விழுந்து விடுவாரோ என மனம் பதைபதைக்க வைத்தார்.

மகாநதி-கமலின் மாஸ்டர் ஃபீஸ் படம் இது..இன்று நினைத்தாலும் கல்கத்தாக் காட்சி கண்முன்னேயே நிற்கிறது.

அபூர்வ சகோதரர்கள் அப்புவை மறக்கமுடியுமா?

அன்பே சிவம்-இப்படத்தில் கமலின் நடிப்பைப் பற்றி என்ன சொல்வது..வார்த்தைகளே இல்லை..விபத்தில்..முகமே மாற இழுத்து..இழுத்து பேசும் போது நமக்கு வாய் வலிக்கும்.கமல் நீ ஒரு பிறவி நடிகன் என்பதைச் சொன்ன படம் இது.

தேவர்மகன்- சிவாஜி பெரியதேவராக நடிக்க..கமல் கதாநாயகன்..குறை சொல்லமுடியா நடிப்பு..சொந்த குரலில் கமல் பாடிய..இஞ்சி இடுப்பழகி...கமலை சகலகலாவல்லுநராக ஆக்கியது.

விருமாண்டி-இப்படத்தை வெளியிடுவதற்குள்..எத்தனை இடையூறுகள்..எல்லாம் தாண்டி விருமாண்டியாக கண் முன்னே நின்றார்.

ஒரு படத்தின் நாயகன் பாதி படத்திற்கு மேல் பெண் வேடம் தாங்கி அதை வெற்றி படமாகவும் ஆக்கினார் எனில் அது கமல் மட்டுமே..படம் அவ்வை சண்முகி

இந்தியனையும்..இந்திய தாத்தாவையும் மறக்கமுடியுமா?

படம் முழுதும் வசனமே இன்றி..ஊமைப்படங்களாக முதன் முதல் திரைப்படங்கள் உருவானது என்பதை நாம் அறிவோம்..ஆனால்..கலைமேதை கமல் அவர்கள்..படம் முழுதும் வசனமே இல்லாது..ஆனால்..படத்தின் பெயரை பேசும்படம் எனக் கொடுத்து..வெற்றியடைய வைத்தார்.

மற்றும் நாயகன்,புன்னகை மன்னன்,ஆளவ்ந்தான்,சிப்பிக்குள் முத்து ஆகிய படங்களில் கமலின் நடிப்பைப் பாராட்ட வார்த்தைகளைத் தேடத்தான் வேண்டும்

கமல்..பல பரீட்சார்த்த படங்களை எடுத்து..கையை கடித்துக் கொண்டவர்.உதாரணத்திற்கு ஹே ராம்...குணா,நம்மவர்கள்.. சொல்லலாம்.

வசூல்ராஜா..மருத்துவர்களின் போராட்டங்களுக்குப் பின் வெளியானது.இப்படம் ஹிந்தியில் வந்த போது..கண்டனம் சொல்லாத மருத்துவர்கள்..தமிழில் வரும் போது வெகுண்டு எழுந்தது..கமலின் துரதிருஷ்டமே.

ஆரம்ப காலங்களில் ரஜினியுடன் சேர்ந்து ..மூன்று முடிச்சு,அவள் அப்படித்தான்,இளமை ஊஞ்சலாடுகிறது போன்று 17 படங்களில் நடித்துள்ளார்.

கமல் தன்னால் நகைச்சுவை படங்களிலும் பிரகாசிக்க முடியும்..என பல படங்களில் நிரூபித்திருந்தாலும்..சமீப காலங்களில் வந்த..மைக்கேல் மதன காமராஜன்,பம்மல் கே.சம்பந்தம்,பஞ்சதந்திரம்,மும்பை எக்ஸ்பிரஸ்,தெனாலி,சிங்காரவேலன் ஆகிய படங்களைக் குறிப்பிடலாம்.

கமலின் மகுடத்தில் மற்றொரு வைரக்கல் தசாவதாரம்..10 வேடங்களில் நடித்தார்.ஃபிளச்சரும்,பல்ராம் நாயுடுவும் இன்றும் நம் கண்முன்னே நிற்கிறார்கள்.

கமல் படங்களையும்..அவர் நடிப்பையும் பற்றி எழுதிக் கொண்டிருந்தால்...அதற்கு முடிவே இருக்க முடியாது..

அப்படிப்பட்ட உயர்ந்த மாபெரும் கலைஞன் மலையாளம்,ஹிந்தி படங்களிலும் திறமையைக் காட்டியுள்ளார்.

இன்று அக்கலைஞன் நடிக்க வந்து 50 ஆண்டுகள் பூர்த்தி ஆகின்றன.

நேற்று சிவாஜி என்ற மாபெரும் கலைஞன் 1952ல் நடிக்க ஆரம்பித்து 1999 படையப்பாவரை 47 ஆண்டுகள் நடித்தார்.

இன்று கமல் என்ற கலைஞன் 1959ல் சிறுவனாக நடிக்க ஆரம்பித்து இன்று பொன்விழா கொண்டாடுகிறார்.

இரு மாபெரும் கலைஞனும் நம் காலத்தில் வாழ்ந்ததற்கு நாம் பெருமைப் படுவோம்.

கமல் மேன் மேலும் வெற்றி பெற வாழ்த்துவோம்..

இந்தியாவில் கலைஞர்கள் வாழும் போது சரியாக போற்றப்படுவதில்லை..என்ற கூற்றை பொய்யாக்கி..கமலின் திறமையை அரசு மதித்து..அவருக்கு உரிய மரியாதையை தரட்டும்..

வாழ்க கமல்..வளர்க அவர் கலைப்பணி..

(இப்பதிவிடும்போது நினைவிற்கு வந்த படங்களே பட்டியலிடப்பட்டுள்ளன..)

2009ல் இல் இட்ட பதிவு..

(மீள் பதிவு)

Monday, February 18, 2013

தமிழுக்கு அமுதென்று பெயர் -12



பாரதியைப் புகழ்ந்து பலர் பாடியுள்ளனர்..பாரதியின் பால் கொண்ட ..பக்தியால்..பெயர் மாறி பாரதிதாசனாக ஆன கனகசுப்பு ரத்தினம்..பாரதியை 'பைந்தமிழ்ப் பாகன்,செந்தமிழ்த் தேனீ,சிந்துக்குத் தந்தை,கவிக்குயில், என்றெல்லாம் பாடிப் புகழ்ந்துள்ளார்.

பின்னர் பல ஆண்டுகள் கழிந்து...புதுக்கவிதையினால் வைரமுத்து அந்த மீசைக் கவிஞனைப் பாடியுள்ளார்.

ஒரு சிறிய வீரியம் மிக்க விதை நிலத்தில் முளைக்கையில் வெற்றி கொள்கிறது.ஒரு சிறிய விதைக்கான ஆற்றல் இப்படி இயலும் எனில் பாரதியை ஈன்ற அன்னையின் கருப்பை நெருப்பைச் சுமப்பதும், ஒரு தீக்குச்சி எரிமலையைச் சுட்டெரிப்பதும் இயலும்.இதையே வைரமுத்து...

அது எப்படி?
எட்டயபுரத்தில் மட்டும்
ஒருத்திக்கு
நெருப்பைச் சுமந்த் கருப்பை?
அது கூடச் சாத்தியம்தான்
ஆனால்- இது எப்படி
ஏகாதிபத்திய எரிமலையை
ஒரு
தீக்குச்சி சுட்டதே
இது எப்படி?

என்கிறார்...

தவிர்த்து பாரதியின் எளிமை, இனிமையை.. தமிழன்னை விரும்பினாள்..ஆகவேதான் அவனின் 'கிழிசல் கோட்டில் தஞ்சம் புகுந்தாளாம் ..

உன் பேனா
தமிழ்த் தாயின் கூந்தலுக்குச்
சிக்கெடுத்தது!
கிழிசல் கோட்டு
கவிதா தேவிக்குப்
பீதாம்பர மானது

என்கிறார்.

(கவியரசு வைரமுத்துவின் 'நிலத்தை ஜெயித்த விதை' என்னும் கவிதையில் இடம் பெற்றுள்ள வைர வரிகள் மேலே குறிப்பிட்டுள்ளவை)



Sunday, February 17, 2013

வாய் விட்டு சிரிங்க..




1.நேற்று ரமேஷ் வீட்டுக்குப் போனேன்..ஒரு காஃபி கூட குடுக்கலை
அவர் கஷ்டம் அவரோட போகட்டும்னு நினைச்சிருப்பார்

2.பஞ்ச பாண்டவருக்கு ஒரே மனைவி..
இதில் என்ன ஆச்சர்யம்..எனக்கும் ,என் அண்ணனுக்கும் கூடத்தான் ஒரே மனைவி
என்ன சொல்ற நீ
அவருக்கும் ஒரு மனைவி...எனக்கும் ஒரு மனைவி...அதைத்தான் சொன்னேன்

3.டாக்டர்- முன்னே எல்லாம்..நான் ஒரு நாளைக்கு இருபது ஆபரேஷன் செய்வேன்..ம்..அதெல்லாம்..இறந்த காலம்
நோயாளி-இப்ப நீங்க ஒரு ஆபரேஷன் செய்தாலும்..அது நோயாளியோட இறந்த காலம்

4வயதானவர்-(கல்யாண தரகரிடம்) நல்ல பெண்ணாயிருந்தா சொல்லுங்க..
தரகர்-யாருக்கு
வயதானவர்-எனக்குத்தான்..அடுத்த மாசத்தோட எனக்கு அறுபது வயசாகிறது.அப்போ ஒரு கல்யாணம் பண்ணிகலாமாமே...

5.கலாவதியை காதலிச்சுட்டு இருந்தியே..அது என்னாச்சு
அது காலாவதி ஆயிடுச்சு

6.பெண்ணின் தந்தை- என் பொண்ணு..தமிழும்..ஆங்கிலமும் கலந்து நுனி நாக்குல பேசுவா
நண்பர்-சுருக்கமா...தமிழ் டி.வி.சானல்ல காம்பியரிங்க் பண்றான்னு சொன்னா போதுமே..



Saturday, February 16, 2013

குழம்பிய நீரில் மீன் பிடிக்கும் ஊடகங்கள்...




ஊடகங்களின் பணி மக்களுக்கு செய்திகளை சரியாகத் தருவதுதான்.

சக்தி வாய்ந்த இந்த ஊடகங்களால், நாட்டில் அரசியல் மாற்றங்கள் மட்டுமன்றி மக்களிடையே விழிப்புணர்ச்சியும் ஏற்பட்ட காலங்கள் உண்டு.இப்படிப்பட்ட தலையாய, பொறுப்பான தகுதி ஊடகங்களுக்கு இருந்து வந்தது.

ஆம், ,வந்தது...ஏனெனில்..

இப்போதெல்லாம் ஊடகங்கள் நிலைப்பாடு அது அல்ல..

என்ன சொல்லி, என்ன எழுதி..தங்களின் சர்குலேஷனை அதிகமாக்கலாம் என்பதே..

அப்படிப்பட்ட நிலையில்...அதுவரை ஊறுகாய் போல சினிமா செய்திகளை வெளியிட்டு வந்த பத்திரிகைகளில்..சினிமா முழுதுமாக ஆக்கரமித்துக் கொண்டது.சினிமா பிரபலங்களின்  செயல்கள், வாழ்க்கைகளை ,ஏதோ..நாட்டிற்கு உழைத்த தலைவர்களின் வாழ்க்கையைப் போல வெளியிடத்   தொடங்கின.மக்களும் விரும்பிப் படிக்கத் தொடங்கினர்.

இந்நிலையில்...இல்லாததை இருப்பது போல எழுதினால் என்ன . என் ற எண்ணம் தோன்ற, 'இன்வெஸ்டிகேடிவ் ஜர்னலிசம்' என்ற பெயரில்..மனதில் தோன்றுவதை, மோட்டுவலையைப் பார்த்து..அந்தந்த வாரத்திற்கு மக்க ளின் ஆவலைத் தூண்டும் விதமாக எழுதத் தொடங்க ஆரம்பித்தனர்.

இதற்குப் பிறகே..இதுவரை உண்மையாய் இந்த பத்திரிகைகள், பத்திரிகை சுதந்திரத்தை தவறாக பயன் படுத்த ஆரம்பித்தனர்.அடுத்த கட்டம், தலைவர்களின், தனிப்பட்ட வாழ்க்கையையும்..எது சொன்னால்,அவர்கள் கிளர்ந்து எழுந்து, எதிர் அறிக்கை கொடுப்பார்கள்..அதைவைத்து, தங்கள் பத்திரிகையை வளர்க்கலாம்..என வணிக ரீதியாக யோசிக்க ஆரம்பித்தனர்.

விளைவு,,

இன்று ஆங்காங்கு இன்று கூக்குரல் ஒலிக்கிறதே...அதுதான்.

இதற்கு என்ன செய்ய வேண்டும்..

'நீதிமன்றம், வழக்கு இது எல்லாம் சாதிக்க முடியாததை
..சாதிக்கக் கூடிய சக்தி ஒன்றுக்கு மட்டுமே உண்டு

அது, "மக்கள் சக்தி:"

ஆம்..

மக்கள், இனியேனும்..மஞ்சள் பத்திரிகையாக தரத்தில் வரும் பத்திரிகைகளை புறக்கணிக்க வேண்டும்.

அது மட்டுமே..இவர்களுக்கு புத்தி புகட்ட ஒரே வழி.


Friday, February 15, 2013

வாய் விட்டு சிரிங்க..





1)நோயாளி- (மருத்துவரிடம்) டாக்டர் சளி அதிகமாய் இருக்கு..உடனே கரைக்கணும்
மருத்துவர்-முதல்ல ஒரு ஆபரேஷன் பண்ணிடறேன்..அப்புறம் உங்க உறவு..கரைக்கறது..எரிக்கிறது எல்லாம் தீர்மானிக்கட்டும்.

2)நீதிபதி-துணிக்கடையில நுழைந்து ஒரு லட்சம் மதிப்புள்ள பொருள்களை திருடினதை ஒப்புக்கொள்கிறாயா
குற்றவாளி-75000 மதிப்பு பொருள் தாங்க..கடையில் 25 சதவிகிதம் தள்ளுபடி அறிவிச்சிருக்காங்களே

3)தலைவர் கிரிக்கெட் மேட்சுன்னா விட மாட்டார்..கண்டிப்பா போயிடுவார்..
கிரிக்கெட் மேல அவ்வளவு பற்றா
சேச்சே..சியர்ஸ் கேர்ள்ஸ் ஆட்டத்திலதான் பற்று

4)தலைவருக்கு தமிழ் மேல பற்றுன்னு எப்படி சொல்ற
சிரிக்கும் போது கூட ஹி..ஹி..ன்னு சிரிக்காம கீ..கீ..ன்னுதான் சிரிக்கிறார்

5)என்னங்க..அடுத்த ஜென்மத்திலும் நீங்கதான் என் கணவராய் வருவீங்கன்னு ஜோசியக்காரன் சொன்னான்
அப்போ..எனக்கு திரும்பவும் நரகம் தானா

6)உன் கூடப் பொறந்தவங்க..எத்தனைப் பேர்..
ம்..மூணு சகோதரன்..நாலு சகோதரி..இல்லை இல்லை ம்ம்..
இதுக்குப் போய் இப்படி யோசிக்கறே
எங்கப்பா யோசிக்கலையே..அதுதான்.

Thursday, February 14, 2013

ஆதலினால் காதல் செய்வீர்







1.பூக்கள் கொட்டிக் கிடக்கின்றன. அதில் உனக்காக ஒரு பூ கத்திருக்கிறது.அதை தேர்ந்தெடுக்கிறாயே..அதுதான் காதலின் சக்தி.

2.காதல்..என்பது..ஒன்றை அடைதல் அல்ல..ஒன்றை உணர்தல் என்ற எண்ணம் இருவருக்கும் வேண்டும்.

3.காதல் ஒரு அற்புத உணர்வு..பூத்து..காய்த்து..உதிர்ந்திடும் பூ அல்ல அது.மரணம் வரை தொடரும் விஷயம்..மரணம் வரை தொடரும் வாழ்க்கை.

4.இரவில் கவிதை

கவிதையான இரவு

கனவில் நிலவு

நிலவு பற்றி கனவு

தனிமையில் சிரிப்பு

சிரிப்பில் தனிமை

இதுதானா காதல்?


5.காதலில் ஜெயித்தவர்கள் கதை..ஒவ்வொருவருக்கும் மாறுபடும்..ஆனால்..தோற்றவர்கள் கதை ஒரே மாதிரி இருக்கும். புறக்கணிக்கப்பட்ட தோல்வி..அதனால்தான் தாங்கமுடிவதில்லை.


6.காதல் வயப்படுபவன்(ள்)..இடம்..பொருள்..இரவு..பகல்..பேதமிருக்காது.மனம்..உற்சாகத்திற்கும்..லேசான துக்கத்துக்குமாக மாறி மாறி பயணிக்கும்.மனதில் மழை பெய்யும்..மத்தாப்புக்கள் பூ சொரியும்.


7.அழகு..அறிவு..எல்லாவற்றிலும்..கடந்த மென்மையான உணர்வு காதல்.


8.காதல் என்பது எதுவரை

கல்யாண காலம் வரும்வரை - கண்ணதாசன் வரிகள்


9.பறக்கத் தெரியும்

திசை தெரியாது

காதல் ஓர்

இலவம் பஞ்சு


_ கபிலன்


Wednesday, February 13, 2013

அபி அப்பாவிற்கு ஒரு கடிதம்...



அன்பின் தொல்ஸ்,

வணக்கம்.

அபி, நடராஜன் எப்படியிருக்கிறார்கள்?

சரி, விஷயத்திற்கு போகலாமா?

சென்னையிலிருந்து, தலைவர்கள் போல தில்லி உயர் இடத்திற்கு நம்மால் கடிதம் எழுத முடியாவிடினும், சென்னை..மாயவரம் இடையே எழுத முடியும் என்று சொல்வதற்கே இக்கடிதம்.

தங்களின் சமீபத்திய பதிவொன்றில்..நான் , இக்கிணியூண்டு பதிவிடுவதாக ..எழுதியிருந்ததைக் காண முடிந்தது.அதை நகைச்சுவையாக நான் எடுத்துக் கொண்டாலும்..அதற்கான காரணங்கள் என்ன..என உங்களைப் போன்ற என் நலம் நாடுவோர்க்கு சொல்ல வேண்டியதன் அவசியத்தை அது எனக்கு உணர்த்தியது.

முதலில்...என்னைப் பொறுத்தவரை...பதிவிடுவது..என்பது..டயரிக்குறிப்பு போலத்தான்..

நமக்கு இன்று தோன்றுவது..நாளைக்கு மறந்து விடலாம்..அதை மறக்காமல் இருக்க..ட
யரியில் குறித்துக் கொள்வது போல பதிவில் எழுதி விடுகிறேன்.என்ன ஒன்று..என் டயரிக் குறிப்பை மற்றவர் படிக்க முடியாது.ஆனால்..என் பதிவை மற்றவர்கள் படிக்கலாம்.

அடுத்ததாக..

என்ன செய்வது..எனக்கு கற்பனை வளம் குறைவோ என்னவோ....புனைவுகளை நீட்டி முழக்கி எழுதத் தெரியவில்லை.அதற்கு என் தமிழாசிரியர் கூட காரணமாய் இருக்கலாம்....சுருங்கச் சொல்லி விளங்க வைக்க வேண்டும் என எனக்கு முதலில் கற்பித்தவர் அவர்.

மேலும்..புராணகாலங்கள் முதல்..சமீபத்திய நாள் வரை..சுருங்கச் சொன்னவை..பெரும் அர்த்ததைக் கொண்டவையாக இருந்துள்ளன..அவற்றில் சில...

ராமாயணத்தில் அனுமன் சீதையைக் கண்டு வந்ததுமே, ராமனைப் பார்த்து..'கண்டேன் சீதையை' என்றான்.
அவசரக் கால நிலை இந்திரா அறிவித்த போது, ஜெயபிரகாஷ் நாராயணன், 'விநாசக் காலே விபரீத புத்தி' என சுருங்கச் சொன்னார்,
சினிமாக்களில் கூட, 'எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும்' 'சபாஷ் சரியான போட்டி' 'மணந்தால் மகாதேவி..இல்லையேல் மரணதேவி'  போன்ற ஒரு வரி வசனங்கள்..மனதில் 'பிசுக்' என ஒட்டிக் கொண்டவை.
அரசியலில், 'காலத்தின் கட்டாயம்' இன்றும் மறக்க முடியாத கட்டாயமாக உள்ளது.

சினிமா விமரிசனங்களில் கூட, பாலசந்தர் ஒரு விமரிசனத்திற்கு அளித்த, "I plead guilty' பதிலும், ஒரு படத்திற்கு, வார இதழ் ஒன்று எழுதிய ஒரே சொல், 'சே' என்ற விமரிசனமும் மறக்க முடியாமல் மனதில் நின்றவை.

ஆதலால்..நானே எனக்குள்..சிறிய குறிப்புகள்..சிறிய பதிவுகள்..எளிதில் மனதைக் கவர்ந்துவிடும்..என்ற தப்பான அர்த்தத்தை ஏற்படுத்திக் கொண்டுவிட்டேன் என எண்ணுகிறேன்.

அடுத்ததாக, நீங்கள் எனக்கு மிகவும் வேண்டியவர் என்பதாலும்..நீங்கள் யாரிடமும் சொல்ல மாட்டீர்கள் என்பதாலும், இந்த ரகசியத்தை உங்களிடம் சொல்கிறேன்..

நம்ம வலைப்பூவை படிக்க வருபவர்கள்..வெறும்..'கையளவே'..உதாரணத்திற்கு 300 பேர் வருகிறார்கள் என வைத்துக் கொள்ளுங்கள்.நானும், உங்களைப் போல பதிவை பெரிதாக எழுதி அதை 300 பேர் வாசிப்பது பெரிதா...அந்தப் பதிவையே..ஐந்து பிரிவுகளாக்கி,அதை தினம் ஒன்றாக பிரசுரித்து..5x300= 1500 பேர் படிப்பதாக சொல்லிக் கொள்வது பெரிதா..என யோசித்து..சுயநலமிகுதியால்...இரண்டாவதையே தேர்ந்தெடுத்து..அதை நடைமுறைப்படுத்திவருகிறேன், என்றும் கொள்ளலாம்..

இதில் தவறு இருக்கிறதாக நான் நினைக்கவில்லை.அப்படி ஏதேனும் இருப்பதாக..நினைத்தால்..சுட்டிக்காட்டினால்..தவறை திருத்திக் கொள்வதுடன்..நன்றியுள்ளவனாய் இருப்பேன்.

அன்புடன்

டி.வி.ராதாகிருஷ்ணன்.

டிஸ்கி- இது நகைச்சுவைக்காக எழுதப்பட்டதுதான்.வேறு அர்த்தம் எடுத்துக் கொண்டு, மண்டையைக் குழப்பிக் கொள்ள வேண்டாம்..
டிஸ்கி- 2..இன்று என்ன பதிவிடுவது என்ற குழப்பம் ஏற்பட்டது.அதைத் தீர்த்து வைத்த தொல்ஸுக்கு நன்றி.

Tuesday, February 12, 2013

விகடனில் 'நட்சத்திர எழுத்தாளர்களும்' அவர்கள் கதைகளும்





முன்பெல்லாம்..தமிழ் பத்திரிகைகளில் ஆறு அல்லது ஏழு சிறுகதைகள் வரும்.இன்னும் அதிகம் போடலாமே..என வாசகர் கடிதங்கள் வரும்..

ஆனால்..இன்று..ஒன்று அல்லது இரண்டு சிறுகதைகள் வந்தாலே அதிகம்..பல பத்திரிகைகள் ஒரு பக்க கதைக்கு தாவி விட்டன.. சில பத்திரிகைகள்..அரை பக்கக்கதை,கால் பக்க கதை என்றெல்லாம் வெளியிட ஆரம்பித்து விட்டன..கேட்டால்..வாசகர்கள் இதையே விரும்புகிறார்கள் என பழியை வாசகர்கள் மீது போடுகின்றனர்.

பல சிறுகதைகள்..நம்மால் மறக்க முடிவதில்லை..

ஜெயகாந்தன் சிறுகதைகள் பல இன்னமும் எனக்கு ஞாபகம் இருக்கிறது..

ஒரு தொடர்கதையில் இருந்து..பல சிறுகதைகளுக்கான கரு கிடைப்பதுண்டு..ஆனால்..ஒரு சிறுகதையிலிருந்து..பல தொடர்கதைகள் பிறந்திருக்கின்றன..என்றால்..அதை நம்புவது சற்று கஷ்டம்.உண்மையில் ஜெயகாந்தன் சிறுகதை ஒன்றிற்கு ..அப்பெருமை உண்டு.அது...

அக்கினிப்பிரவேசம்..

ஆனந்த விகடனில் வந்த சிறுகதை இது...முத்திரைக்கதை..இந்த கதையை யாரும் மறந்திருக்க முடியாது..இந்த சிறுகதையில் இருந்து பிறந்தவை...

சில நேரங்களில் சில மனிதர்கள்
கோகிலா என்ன செய்கிறாள் ஆகிய தொடர்கள்..

அடுத்ததாக நான் சொல்ல விரும்புவது..பிலஹரியின் ..அரிசி..என்ற கதை..நம்மில் பலருக்கு இக்கதை ஞாபகமிருக்காது..இதுவும் ஆ.வி.யில் வந்த முத்திரைக்கதை..

இக்கதை அம்மாவின் பாசம் பற்றியது..கல்யாணம் ஆனதும் அம்மாவிடம் வெறுப்பு வளர்கிறது அவனுக்கு..ஆனால் அம்மாவின் பாசம்..அதற்கு ஈடு உண்டோ?கதையின் கடைசி வரிகள்..இன்னமும் மறக்காமல் என் ஞாபகத்தில் உள்ளது..

அகோரபசி உள்ள ஒருவன்..முன்னால்..பல இனிப்புகள்..உணவுபண்டங்கள்..ஆனால்..எதைத் தின்றாலும் ஒரு கவளம் சாதத்திற்கு இணை உண்டோ?அந்த அரிசி சாதம் தான்..அம்மா அன்பு..என்பார்.

தமிழ் பத்திரிகைகள்..குறிப்பாக..விகடன்..மீண்டும் தரமுள்ள கதைகளுக்கு முத்திரை அளித்து...முத்திரை கதைகளை வெளியிடலாமே?


இது 2008 அக்டோபர் மாதம் நான் போட்ட பதிவு..

------------------------------------------------------------------------------------------------

அதன்பின் சில மாதங்கள் கழிந்து..நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதை அணிவகுப்பு.. என்ற பெயரில்..பல பிரபல நட்சத்திர எழுத்தாளர்களின் சிறுகதைகள் வாரம் ஒன்று வர ஆரம்பித்தது.

அப்போதுதான்..நாம் சாதாரண எழுத்தாளர்கள் என எண்ணியவர்கள் எல்லாம் நட்சத்திர எழுத்தாளர்கள் என தெரிந்தது (!!!???)

எது எப்படியானால் என்ன..நாம் படிக்க நல்ல கதைகள் கிடைக்கும் எனத் தோன்றியது.

ஆரம்பத்தில் வந்த கதைகள் அதை உறுதிப் படுத்தின...குறிப்பாக..நாஞ்சில் நாடனின் 'நீலவேணி டீச்சர்' ..ஜெயகாந்தனின்..நான் மேலே குறிப்பிட்ட கதையைப் போல..மனதில்..ஃபெவிகால் போட்டு ஒட்டிக் கொண்டது.

சாதாரண வாசகனின் திருப்தி..நீண்ட நாட்கள் நிலைக்கவில்லை..

இப்போதெல்லாம் வரும் கதைகள்..நட்சத்திரக்கதைகளாகத்தான் ..மாறிக்கொண்டிருக்கின்றன...ஆம்....பத்தோடு பதினொன்று..லட்சக்கணக்கான நட்சத்திரங்களுடன் இதுவும் ஒன்று என்ற ரீதியில்...

விகடனுக்கு ஒரு வேண்டுகோள்...

இனி..'நட்சத்திர எழுத்தாளர்கள் கதை' என்பதை மாற்றிவிடுங்கள்....சாதாரண எழுத்தாளர்களை..'நட்சத்திர  எழுத்தாளர்கள்'
ஆக்கியது போதும்.

தரமான கதை என்பதற்கு..பழையபடி ..விகடன் முத்திரையைக் கொடுங்கள்..அந்தக் கதையை..உங்களுக்கு வரும் கதைகளிலிருந்து..அதை எழுதியது யார் எனப்பாராது..'தரத்தை' மட்டும் பார்த்து முத்திரை கொடுங்கள்.

அந்த சிறுகதைகள் காலத்தை மீண்டும் கொண்டு வாருங்கள்.

அது உங்களால்தான் முடியும்...என உறுதியாக நம்புகிறேன்..

விகடனின் பல்லாண்டு கால வாசகன் என்ற பெயரில்.

Monday, February 11, 2013

சிவாஜி ஒரு சகாப்தம் -9




1962ல் வெளியான படங்கள்

பார்த்தால் பசி தீரும்
நிச்சயதாம்பூலம்
வளர்பிறை
படித்தால் மட்டும் போதுமா
பலே பாண்டியா
வடிவுக்கு வளைகாப்பு
செந்தாமரை
பந்தபாசம்
ஆலயமணி

சிவாஜி..பீம்சிங் கூட்டணியில்..பார்த்தால் பசி தீரும்,படித்தால் மட்டும் போதுமா? இரண்டுமே நூறு நாட்கள் படம்.தொடர்ந்து ஒரு நடிகரும்..இயக்குநரும்..பங்கு பெற்ற 5 படங்கள் 100 நாட்கள்.அவற்றில் 3 படங்கள் வெள்ளிவிழா.இந்த சாதனையை இதுவரை வேறு யாரும் முறியடிக்கவில்லை.

ஆலயமணி..கே.ஷங்கர் இயக்கத்தில்..நடிகர் பி.எஸ்.வீரப்பா எடுத்த படம்.100 நாட்கள் படம்.அருமையான பாடல்கள்.
கண்ணான கண்ணனுக்கு,பொன்னை விரும்பும்,சட்டி சுட்டதடா..போன்ற பாடல்கள்.

இந்த வருடம் அமெரிக்க அரசின் அழைப்பை ஏற்று அமெரிக்கா சென்றார்.நயாகரா நகரம்.சிவாஜிக்கு ஒரு நாள் மேயராக பதவி அளித்து கௌரவித்தது.

மற்ற படங்கள் பிரபல இயக்குநர்கள்,தயாரிப்பாளர்கள் ஆகியோருடன்..சிவாஜியின் அற்புத நடிப்பும் இருந்தும்..பிரமாத வெற்றி அடையவில்லை.

1963 படங்கள் அடுத்த பதிவில் காணலாம்.


Sunday, February 10, 2013

கடல் தோல்வியைத் தழுவியதேன்...

 

மணிரத்னம் இயக்கத்தில், ராஜீவ்மேனன் ஒளிப்பதிவில்,ஜெயமோகன் கதை வசனத்தில், .ஆர்.ரஹ்மானின் மனதைக் கொள்ளைக் கொள்ளும் இசையில்,கவிப்பேரரசின் வைரவரிகளில் ஒரு படம் வெளிவருகிறது எனில் அப்படம் மக்களிடம் எப்படிப்பட்ட ஒரு எதிர்ப்பார்ப்பில் இருக்கும்.

தவிர்த்து, முன்னதாகவே வந்து விட்ட பாடல்களின் இனிமை வேறு..ஒரு ரசிகனை அதிக எதிர்ப்பார்ப்பில் வைத்ததூ.

கார்த்திக் மகனும், ராதாவின் மகளும் அறிமுகப் படம் என்றதும்....

மண்வாசனையைக் குழைத்துத் தரும் பாரதிராஜாவின் 'அலைகள் ஒய்வதில்லை' போல, சராசரி ரசிகன் எதிர்பார்த்திருந்திருப்பான். ஏமாற்றம்..

மணியின் , மாஸ்டர் பீஸ்,'அலைபாயுதே' போல ஜிலு ஜிலு என இருக்கும்..என இளவட்ட ரசிகர்கள் எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கும்..ஏமாற்றம்..

'கடல்' என்ற தலைப்பு என்பதால்..'மீனவர்கள் வாழ்வு..பிரச்னை இவற்றை அலசி இருப்பார்..' என கன்னத்தில் முத்தமிட்டால் பட ஞாபகம் உள்ளவன் எதிர்ப்பார்த்திருப்பான்.அதுவும் ஏமாற்றம்.(தவிர்த்து அர்ஜுன், ஒருவனை கொன்றுவிட்டு..இவனை தூக்கிக் கடலில் எறியுங்கள்..பக்கத்து நாட்டான் சுட்டான் என எண்ணிக்கொள்ளட்டும்..என்ற அர்த்தம் வரும் வகையில் ஒரு வசனம் வேறு

மீன் பிடிப்பதும்..அதைக் கூக்குரலிட்டு விற்பதும் தான் மீனவர் பற்றி கடல் சொல்வது.

நீங்களும் படத்தை மூன்று மணி நேரம் எடுத்துவிட்டு..அதை 2 மணி 25 நிமிஷமாக்க பல காட்சிகளை வெட்டி இருப்பீர்களோ..ஆங்காங்கே தொக்கி நிற்கும் காட்சிகள் இந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

சம்பந்தா சம்பந்தமில்லாமல்..உப்புப் பெறாத காரணத்திற்கு..வில்லனுக்கு ..அரவிந்தசாமியை பழி வாங்கும் எண்ணம் வருகிறதாம்..அவனை சிறைக்கு அனுப்பி..அவன் திருத்தி வரும் பையனை தன் கோஷ்டியில் சேர்த்து பெரிய ரௌடி ஆக்கி..அந்த பையன் காதலிக்கிற பெண் ..சற்று மனவளர்ச்சி குன்றியவள் என்றும்..அதற்குக் காரணம் அவ்வில்லனின் மகள் அவள் என்றும் அவன் செய்யும் செயல்கள் அவள் மூளைவளர்ச்சியைப் பாதித்தது என்றும்..போதுமடா சாமி..என்று ஆக்கிவிட்டது.

இந்தக் கதைக்கு ஜெமோ வோ மணியோ தேவையில்லை.

1970 களில் வந்த படங்களைப் பார்த்து..வெறுத்து..நல்ல படங்களைக் கொடுக்கவே திரையுலகில் நுழை

ந்தேன் என நீங்கள் பேசியதில் தவறில்லை, ஆனால், அதை செயலிலும் காட்ட வேண்டும்.

ஆனால் ..செய்தீர்களா..

இப்படம்...மூன்றாம்தரப் படத்திற்கான கதையமைப்பைக்கூட கொண்டிருக்கவில்லையே..

ராஜீவ் மேனனும், ரக்மானும், வைரமுத்து உழைப்பும் விழலுக்கு இறைத்த நீராக ஆக்கிவிட்டீர்களே..

கோபம் ..கோபமாய் வருவதைத் தடுக்கமுடியவில்லை மணீ..சாரி..என்ன ஆச்சு உங்களுக்கு..

உங்களிடமிருந்து பம்பாய்,நாயகன்,ரோஜா,அக்னி நட்சத்திரம், மௌனராகம், கன்னத்தில் முத்தமிட்டால்,அலைபாயிதே போன்ற படத்தையே மக்கள் எதிப்பார்க்கின்றனர்..

அந்த எதிர்ப்பார்ப்பே..இப்படத் தோல்விக்குக் காரணம்.

Friday, February 8, 2013

நீண்ட நாட்கள் வாழ....




இன்று மருத்துவம் மிகவும் முன்னேறியுள்ளது.ஆண்களின் சராசரி வயது 64 ஆகவும்..பெண்களின் சராசரி வயது 65 ஆகவும் உள்ளது.

சிலர் சைவ சாப்பாடு சாப்பிட்டால்..நீண்ட நாட்கள் இருக்கலாம் என எண்ணுகின்றனர்.

நீண்ட நாள் வாழ சைவ,அசைவ சாப்பாடுகள் காரணமில்லை.

சுத்த சைவமான ராஜாஜியும் 94 வயது வாழ்ந்தார்...கடைசி வரை பிரியாணியை விரும்பி உண்ட தந்தை பெரியாரும் 94 ஆண்டுகள் இருந்தார்.

நீண்ட நாட்கள் வாழ குடும்ப ஜீன்ஸ் ஒரு காரணம் என்றாலும்...கட்டுப்பாடான வாழ்க்கையும் அவசியம்.

அளவான சாப்பாடு

உடலுக்கு தேவையான உடற்பயிற்சி (தினமும் குறைந்தது ஒரு மணி நேரம் நடை அல்லது சைக்கிளிங்)

உப்பு குறைவாக சேர்த்துக் கொள்ளவும்..இரத்த அழுத்தத்தை தவிர்க்கலாம்.

சர்க்கரை குறைவாக சேர்த்துக் கொண்டால்..நீரிழிவு கட்டுப்பாட்டிற்குள் இருக்கும்.

வெண்மை நிற..அரிசி,சர்க்கரை,உப்பு,மைதா ஆகியவற்றை குறையுங்கள்.

மனதை சந்தோஷமாக வைத்திருங்கள்.கோபத்தை விடுங்கள்.பிறர் மீது குறை காண்பதை தவிருங்கள்.பொறாமைக் குணம் வேண்டாம்.

மனம் களங்கம் இல்லை என்றாலே...மனம் சந்தோஷமாய் இருக்கும்.ஆரோக்ய வாழ்வு வாழலாம்.

நாம் வாழ்க்கையில் இன்பமாயிருக்கிறோமா?துன்பமாய் இருக்கிறோமா? என்பது நம் கைகளில் தான் இருக்கிறது.

இயற்கை நமக்கு எத்தனை இன்பங்களை வாரி வழங்கி இருக்கிறது.

எத்தனைக்கோடி இன்பம் வைத்தாய் இறைவா..என்றான் பாரதி.பாரதி இன்பமாய் நினைத்தவை...எதை எதைத் தெரியுமா?

தண்ணீர்: இதில் குளித்தால் இன்பம்..குடித்தால் இன்பம்.
தீ ; குளிர் காய்ந்தால் இன்பம்..பார்த்தாலே இன்பம் (தீபம்)
மண் ; இதன் விளைவுகளிலே இன்பம்.,இதன் தாங்குதல் இன்பம்.
காற்று ; இதை தீண்டினால் இன்பம்..மூச்சில் கொண்டால் இன்பம்.
ஆகாயம்;கேட்கவே வேண்டாம்..பகலில் சூரியன் இன்பம்..இரவில் நிலவு இன்பம்
நட்சத்திரக் கூட்டம் இன்பம்.
தவிர..உயிர்களிடத்தில் பழகுதல் இன்பம்.
மனிதர் உறவு இன்பம்
அன்பு இன்பம்
உண்ணுதல் இன்பம்
உழைத்தல் இன்பம்
உறங்கல் இன்பம்
கூடுதல் இன்பம்
கற்றல் இன்பம்
கேட்டல் இன்பம்
பாடுதல் இன்பம்
பார்த்தல் இன்பம்
எழுதுதல் இன்பம்

இப்பொழுது சொல்லுங்கள்..ஆண்டவன் (இயற்கை) எத்தனைக் கோடி இன்பங்களை நமக்களித்துள்ளான்


ஆகவே வாழும் போது துக்கத்தை பெருக்கிக் கொள்ளாது...இன்பமாய் வாழ்வோம்.

இறந்த பின் சொர்க்கம் போக வேண்டும் என்னும் எண்ணத்தை விட்டு...வாழும் போது..வாழ்வை..நரகமாய் ஆக்கிக் கொள்ளாது சொர்க்கமாய் ஆக்கிக் கொள்வோம்

(மீள் பதிவு)


Thursday, February 7, 2013

வாய் விட்டு சிரிங்க...(கொஞ்சம் அரசியல்..கொஞ்சம் சிரிப்பு)




உங்க கட்சியிலே பேச்சு சுதந்திரம் இருக்கா?
தலைவரைக் கேட்டுட்டுத்தான் சொல்லணும்

2)ஆளும் கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏன் வெளிநடப்பு செஞ்சாங்க..
 அவங்க எதிர்க்கட்சியிலே இருந்து ஆளும் கட்சிக்கு தாவினதை மறந்துட்டாங்களாம்

3)ஆளும் கட்சி எது செய்தாலும் உங்கக்  கட்சி ஏன் ஆதரிக்கிறது..
 ராஜ்யசபா சீட் கிடைக்குமான்னுதான்.

4)நாக்கை அடிக்கடி கடிச்சுக்கறேன்..
 கவலைப் படாதே..உனக்கு எதிர்க்கட்சி தலைவர் ஆகும் தகுதி வந்தாச்சு

5)சுகர் அதிகமாயிடுச்சு..டாக்டர் அதிகம் நடக்கச் சொல்றாரே
  என்ன பண்ணினே
 எதிர்க் கட்சியில சேர்ந்துட்டேன்...அப்போ தானே..அடிக்கடி வெளிநடப்பு செய்யலாம்

6)அரசு பொது மருத்துவமனையை ஏன் திடீர்னு மூடிட்டாங்க..
  புதிய தலைமைச் செயலகம்..மருத்துவமனையாக போட்ட தடையை அரசு மருத்துவமனைக்கு நினைச்சுட்டாங்களாம்.


Wednesday, February 6, 2013

உள்ளொன்று வைத்து....

                                   


உள்ளொன்று வைத்து

புறமொன்று பேசுவோர்

உறவு வேண்டாமாம்...

அனாதை ஆனதன் காரணம்

அதுதானாம்.

2)முக நூலில்

சகோதரியே என விளித்து

அக  நூலில்

வேறு உறவாக்குகிறான் அவளை.

2)நான் சாதியம் பார்ப்பதில்லை

என்றிட்டான்

 சாதிச் சான்றிதழை

பார்க்காதது போல பார்த்த

நேர்முகத் தேர்வாளன்

2)மதக்கலவரத்தைத்

தூண்டியவனே

உரைக்கின்றான்...

பாரதம் மதச்சார்பற்ற நாடென


அமரர் டோண்டு ராகவன்..




மூத்த வலைப்பதிவர் டோண்டு சார்...அமரரான செய்தி அறிந்து மிகவும் வருத்தம் அடைந்தேன்.

ஒருவர் மறைவிற்குப் பின்னர் தான்...அவரைப் பற்றி அதிகம் பேசப்படும்..

..டோண்டு வும்..உயிருடன் இருந்தவரை..'சாதியத்தை' விடவில்லை.இதனால் கடைசிவரை பலமுறை சர்ச்சைப் பதிவுகள், கண்டனங்கள் ஆகியவற்றை அவர் அதிகம் சந்திக்க நேர்ந்தது.

முதன் முதல் அவர் என்னிடம் தொலைபேசிய போது..நீங்கள் எந்த காலேஜ்..எந்த வருடம் டிகிரி முடித்தீர்கள்? என்றார்.

நான் சொன்னேன், 'சார்..நேரிடையாகவே எனக்கு என்ன வயது என கேட்டுவிடுங்களேன்..' என்றதும்..

;நான் எதற்காகக் கேட்டேன் என புரிந்துக்கொண்டீர்களே!' என பதில் சொன்னதுடன் அல்லாது..நான் என்ன சாதி என்பதை அறிய , அடுத்த வார்த்தைகளைச் சொன்னார்..'இதுதான் நம்ம சாதிக்கான சூட்சமம்' என.

நான் விடாக்கண்டனாக அவருக்குக் கடைசிவரை என் சாதியத்தை வெளிப்படுத்தவில்லை.பின் கோவியாரின் ஒரு பதிவின் மூலம் என்னைப் பற்றி அறிந்தவர்..'நீங்கள் இப்படியெல்லாம் எழுதக் கூடாது' என என் சிலப் பதிவுகள பற்றி வாதிட்டார்.

எனது, 'மாண்புமிகு நந்திவர்மன்" நாடகத்தைப் பார்த்து, என்னைப் பாராட்டியதுடன்..தனிப்பதிவு ஒன்றே இட்டார்.

நான் வலைப்பதிவு பக்கம் வரக்காரணம் மூவர்..என நான் அடிக்கடி சொல்வதுண்டு.

டோண்டு ராகவன், கோவியார், தமிழச்சி ஆகியோர் அவர்கள்.

எனது சொல்லக் கொதிக்குது நெஞ்சம் நாடகத்தை ஃபிரெஞ்ச் மொழியில் மொழிபெயர்க்க வேண்டிய சூழல் உருவான போது, டோண்டுவைத் தான் அணுகினேன்.அவரும்..எனக்குத் தர வேண்டியதை கறாராகத் தந்துவிட வேண்டும் என்றார்.அவ்வளவு கறாரானவர் அவர்.(பின்னர் இந்த ப்ராஜெக்ட் கைவிடப்பட்டது)

டோண்டுவின் எண்ணங்கள் எனக்கு உடன்பாடில்லை என்றாலும்...அவர் பிடித்த பிடி விடாது எழுதும் எழுத்தின் ரசிகன் நான்.அவர் யாருக்கும்..எப்போதும் விட்டுக் கொடுத்ததில்லை.அதே நேரம் உண்மைகளை மறைத்ததுமில்லை.

அவரின் மறைவிற்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.

Tuesday, February 5, 2013

வாய் விட்டு சிரிங்க..




1.நேற்று கச்சேரியிலே பாகவதர் அமிர்தவர்ஷினி ராகம் பாடினதுமே மழை வந்ததாமே!
ஆமாம்..பாகவதர் வாயைத் திறந்ததுமே..முதல் வரிசையில் உட்கார்ந்திருந்தவங்க மேல எல்லாம் சாரல் மழையாம்


2.உன்னோட கணவர் இன்னிசைக் கச்சேரியில் 'ட்ரம்ஸ்'வாசிப்பார்னு சொன்னே..ஆன வீட்ல
ஒரு சத்தத்தையும் காணுமே..
'ட்ரம்ஸ்'எல்லாம் திருப்பிப் போட்டு தண்ணீர் பிடிச்சு வைச்சிருக்கேன்.

3.கடம் வித்வான் வரலியேன்னு கிரிக்கட் ஆடறவனை அழைச்சுண்டுப் போனது
தப்பாப் போச்சு
ஏன்? என்னவாச்சு?
கடத்தைத் தூக்கிப்போட்டு பிடிக்கிறேன்னுட்டு..தூக்கிப்போட்டு பிடிக்காம கோட்டைவிட்டுட்டான்.

4.நேற்று என் பையன் எதிரில்..வாசல் கதவு 'கீரிச்..கீரிச்' நுசத்தம் போட்டப்போ எண்ணை போட்டது
தப்பாப் போச்சு.
ஏன் அப்படி?
இன்று நான் வயலின் வாசிச்சு முடிந்ததும்..என் வயலினுக்கு எண்ணை போட ஆரம்பிச்சுட்டான்.

5.போன வாரம்தான் உங்க குழந்தைக்கு காது குத்தறோம்னு விடுமுறை கேட்டீங்க..இப்ப திரும்ப
விடுமுறை கேட்கறீங்களே?
போன வாரம் ஒரு காதுதான் குத்தினோம்..இப்போ இன்னொரு காதை குத்தப்போறோம்.


Monday, February 4, 2013

இசை ஞானி

                                     


1)மின்வெட்டே இல்லா
வரிசை விளக்குகள்
விண்மீன்கள்

2)கண்கவர் சுழல்
இருப்பிடம் கட்ட
எங்கு பொறியியல் கற்றது
சிலந்தி

3)தன்னுயிர் ஈந்து
பெண்மானம் காக்கும்
பட்டுப்பூச்சி

4)சிம்பொனியும் அமைக்கவில்லை
திரையிசையும் தெரியாது
காலையில் கூவி அழைக்கும்
இசைஞானி குயில்


Saturday, February 2, 2013

விஸ்வரூபம்... 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதம்... இஸ்லாமியர் ஒப்புதலுடன் வெளியாகிறது படம்!



விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர் எதிர்க்கும் காட்சிகளை நீக்குதல் குறித்த முத்தரப்பு பேச்சு வார்த்தையில் சுமூகமான உடன்பாடு ஏற்பட்டது. இஸ்லாமிய அமைப்புகள் எதிர்த்த 7 காட்சிகளை நீக்க கமல் சம்மதித்துள்ளார். இந்தக் காட்சிகள் அனைத்தும் இஸ்லாமியரை அவமதிப்பதாகவும், இஸ்லாம் மதத்துக்கு எதிரானதாகவும் உள்ளது என முஸ்லிம் தலைவர்கள் சொன்னதை கமல் ஏற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து படத்தை வெளியிட இஸ்லாமிய அமைப்பினர் ஒருமனதாக சம்மதித்தனர். இந்த முடிவு ஏற்பட காரணமான தமிழக முதல்வருக்கு நன்றி தெரித்தார் கமல். சென்னை தலைமைச் செயலகத்தில் நடந்த இந்தப் பேச்சுவார்த்தையில் படத்தின் தயாரிப்பாளரும் இயக்குநருமான கமல்ஹாஸன், அவரது அண்ணன் சந்திரஹாஸன் ஆகியோர் நேரில் பங்கேற்றனர். மாலை 6 மணிக்கு பேச்சு வார்த்தை நிறைவடைந்தது. இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த 24 அமைப்புகளின் பிரதிநிதிகளுடன், தலைமைச் செயலர், உள்துறைச் செயலர், போலீஸ் கமிஷனர் மற்றும் அதிகாரிகள் ஆகியோரும் இந்த பேச்சில் பங்கேற்றுள்ளனர். மாலை 3 மணிக்குத் தொடங்கிய பேச்சு வார்த்தை சுமுகமாக முடிந்ததாக, நிருபர்களிடம் கமல் தெரிவித்தார். முதல்வருக்கு நன்றி... மேலும் கூறுகையில், "இப்படியொரு சந்திப்புக்கு வாய்ப்பு அமைத்துத் தந்த மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கு மிக்க நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்," என்றார் கமல். மேலும் இது தொடர்பான அனைத்து வழக்குகளையும் வாபஸ் பெறுவதாக கமல் கூறினார். அரசும் தடையை விலக்கிக் கொள்ளும் என்று நம்புவதாகக் கூறினார். ரிலீஸ் தேதியை இன்று இரவுக்குள் அறிவிப்பதாக கமல் தெரிவித்தார்.

(தகவல் - தட்ஸ்தமிழ்)

சிவாஜி ஒரு சகாப்தம் - 8




1961ல் வந்த படங்கள்
பாவமன்னிப்பு
புனர்ஜென்மம்
பாசமலர்
எல்லாம் உனக்காக
ஸ்ரீவள்ளி
மருத நாட்டு வீரன்
பாலும் பழமும்
கப்பலோட்டிய தமிழன்

சிவாஜி ரசிகர்களுக்கு மட்டுமின்றி...தமிழ்த் திரை உலகிற்கே மறக்க முடியா ஆண்டு. சிவாஜியின் அமர காவியங்கள் வெளியான ஆண்டு.

பாவமன்னிப்பு...சிவாஜி..பீம்சிங் கூட்டணி...ஜெமினி, சாவித்திரி,தேவிகா,ராதா..என நட்சத்திர கூட்டம்.தவிர அனைத்து பாடல்கலும் தேன்.விஸ்வனாதன்-ராமமூர்த்தி இசை.முதன்முறையாக இசைத்தட்டுகள் அதிக அளவில் விற்கப்பட்டது..இந்த படத்திற்குத்தான்.சாந்தி திரை அரங்கில் வெள்ளிவிழா கொண்டாட்டம்.தேசிய அளவில் இரண்டாம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு வெள்ளிபதக்கம் பரிசு பெற்ற படம்.

பாசமலர்...அண்ணன் தங்கை பாசம்...இன்று பாசத்துடன் இருக்கும் அண்ணன்-தங்கைகளைப் பார்த்து அவர்கள் பாசமலர்கள்..என்று சொல்லும் அளவு அனைவரையும் பாதித்த படம்.அருமையான பாடல்கள்..வெள்ளிவிழா படம்.தமிழின் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட படம்.சாவித்திரி...சிவாஜி..இருவரும் நடிக்கவில்லை...பாத்திரங்களாகவே வாழ்ந்தார்கள்.

பாலும் பழமும்...சரோஜாதேவியுடன் நடிகர்திலகம்..நல்ல பாடல்கள்..திறமையான நடிப்பு..ஆகியவற்றிற்காக 100 நாட்கள் ஓடிய வெற்றி படம்.

கப்பலோட்டியதமிழன்....படம் பார்த்த வா.உ.சி., குடும்பமே சிவாஜி அந்த பாத்திரத்தில்..வா.உ.சி., போலவே இருந்ததாக பாராட்டினர்.படம் ஆனால் உழைப்பிற்கேற்ற பலன் தரவில்லை.தோல்வி. ஆனாலும்..தேசிய அளவில் தேசிய ஒற்றுமைக்கான பட விருது பெற்றது.

மற்றபடி...ஸ்ரீதரின் புனர்ஜென்மம்,எல்லாம் உனக்காக,ஸ்ரீவள்ளி, மருதநாட்டுவீரன் ஆகியவை எண்ணிக்கையை மட்டுமே அதிகரித்தன.

இந்த ஆண்டு..கடந்த இரு வருடங்களில் 5 வெள்ளிவிழா படத்தைக் கொடுத்த சிவாஜி ஆண்டு
கட்டபொம்மன்,பாகப்பிரிவினை,இரும்புத்திரை,பாவமன்னிப்பு,பாசமலர்.
சிவாஜி படத்திற்கே 3 தேசிய விருதுகள் கிடைத்த ஆண்டு.

1962 படங்கள் அடுத்த பதிவில்


Friday, February 1, 2013

வாய் விட்டு சிரிங்க..



1)தலைவர் என்னை சாகும்வரை உண்ணாவிரதம் இருக்கச் சொல்றார்
ஏன்
அப்போதான் என் தொகுதியிலே..இடைத்தேர்தல் வருமாம்..தலைவர் பலத்தைக் காட்டமுடியுமாம்

2)ஆனாலும் அந்த நீதிபதிக்கு பக்தி அதிகம்..குற்றவாளிக் கூண்டில் நிற்கிற அர்ச்சகர் கிட்ட தன்னோட பெயர்,கோத்ரம் எல்லாம் சொல்லி வழக்கை ஆரம்பிக்கறதுக்கு முன்னாலே தன் பெயருக்கு அர்ச்சனை செய்யச் சொல்றார்.

3)தமிழுக்கு துரோகம் செய்யறாங்கன்னு தலைவர் யாரைச் சொல்றார்
அசின்..திரிஷா..வைத்தான்..அவங்க ஹிந்தி படத்தில நடிக்கப் போறாங்களாம்..அதனாலத்தான்

4)அந்த அமைச்சருக்கு திடீர்னு ஏன் நெஞ்சுவலி வந்துது
அவரோட செக்யூரிட்டிக்கு வந்த போலீஸைப் பார்த்ததும்..தன்னைக் கைது பண்ண வந்திருக்காங்கன்னு தப்பா நினைச்சுட்டாங்களாம்

5)நேற்று புதுசா வந்திருக்கிற அந்த படத்தோட டிக்கெட் கிடைச்சும் நீங்க ஏன் போகலை
அதுக்குள்ள எனக்கு வேற ஒரு கஷ்டம் வந்துடுத்து

6)அந்த பல் டாக்டர்கிட்ட மட்டும் ஏன் அவ்வளவு கூட்டம்
அவர்தான் நம்ம சொத்தைப் பத்தி விசாரிக்காம சொத்தையைப் பற்றி விசாரிக்கிறாராம்

7) தலைவருக்கு மருத்துவர்கள் என்ன திடீர்னு அட்வைஸ் பண்றாங்க..
தலைவர் மௌனமாய் அழறேன்னு அறிக்கைவிட்டதாலே..அப்படி உணர்ச்சிகளை அடக்கக்கூடாது..உடலுக்கு கெடுதல்..வாய் விட்டு அழுதுடுங்கன்னு அட்வைஸ் பண்றாங்க