Thursday, September 8, 2016

கலைமாமணி விருதும்...தமிழக அரசும்

கலைமாமணி விருதும்...தமிழக அரசும்


இயல், இசை, நாடகம் ஆகிய வற்றில்     நீண்ட நாள் தொண்டாற்றியவர்கள், கலைஞர்கள், திரைப்படத்தைச் சார்ந்தோர் ஆகியோர்க்கு ,தமிழக அரசு சார்பில், இயல்-இசை-நாடக  மன்றம் "கலைமாமணி' விருது வழங்கி கௌரவிப்பது வழக்கம்

நாட்டிய/நாடகக் கலைஞர்களில் பலர் அந்தந்த கலையின் மீதான  பற்று காரணமாகவே அதில் இடுபட்டுள்ளனர்.

குறிப்பாக நாடகக் கலைஞர்கள், அதுவும் அமெச்சூர் நடிகர்கள் நாடகங்கள் அழியாது காத்து வருகின்றனர் என்றால் மிகையல்ல

இவர்களால் நாடகங்களில் பொருள் ஈட்ட முடியாது..ஆயினும் தொடர்ந்து நாடகங்கள் நடத்தி வரக் காரணம், இவர்களுக்கு மக்களிடம் இருந்து கிடைக்கும் பாராட்டுதல்களும் மற்றும் கிடைத்து வரும் சில விருதுகளும் தான்

ஒரு கலைஞனுக்கு, அவனுக்குரிய அங்கீகாரம் குறித்த காலத்தில் கிடைத்தால்தான், அவனது எஞ்சிய வாழ்நாளில் மகிழ்ச்சியுடன் இருப்பான்

அதை    விடுத்து அவன் முதுமையடைந்து...இன்னும் சில ஆண்டுகளே அவன் வாழ்நாள் என்ற நிலையில்..அவனுக்கு கிடைக்கும் விருதுகளால் அவனுக்கு என்ன பலன்

தமிழக அரசு வழ்ங்கிவந்த "கலைமாமணி" விருது, க்லைத்துறையில் தனக்குக் கிடைக்கும் மிகப்பெரிய அங்கீகாரம் என மகிழும் கலைஞர்கள் எவ்வளவு பேர்!!

ஆனால்,  தமிழக    அரசு சில ஆண்டுகளாக இவ்விருதை யாருக்கும்  வழங்காமல் இருந்து வருகிறது.

கலையுலகினர்   (திரைப்படம்/நாடகம்/நாட்டியம்/நாட்டுப்புற கலைஞர்கள்) அனைவரின் சார்பிலும், தமிழக அரசு மீண்டும் கலைஞர்களுக்கு கலைமாமணி விருதை ஆண்டு தோறும் வழங்கிட வேண்டும் என வேண்டுகிறேன்

காலாகாலத்தில் கிடைக்காத எதற்கும் மதிப்பில்லை..என்பதை உணர்ந்து...    தகுதியுள்ள கலைஞர்களை அவர்கள் வாழ்நாளிலேயே கௌரவிக்க வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்

(பத்திரிகை நண்பர்கள்...இவ்வேண்டுகோளை அரசின் காதுகளுக்கு எட்டச் செய்திட வேண்டுமாய்க் கேட்டுக் கொள்கிறேன்)