Thursday, January 26, 2017

மக்கள் நாயகன் விஜய் சேதுபதி - 1



தமிழ்த் திரையுலகில் பல் வேறு காலகட்டங்களில் பல்வேறு கதாநாயகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம் கே ராதா, ரஞ்சன் போன்றவர்களுக்குப் பின் திரையுலகின் பொற்காலமான 50- 60-70 களில் மூவேந்தர்களாக எம் ஜி ராமச்சந்திரன், சிவாஜி கனேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் இருந்தனர்

இவர்கள் மூவரும் நூற்றுக் கணக்கான் படங்களில் நடித்தனர்..வெற்றிக் கொடி நாட்டியவர்கள் இவர்கள்

இவர்களுடன், எஸ் எஸ் ராஜேந்திரன்,முத்துராமன் போன்றோரும் அடுத்தக் கட்டத்தில் இருந்தனர். த்னியாக கதாநாயகர்களாகவும்..மற்றவர்களுடன் சேர்ந்து துணைப்பாத்திரங்களிலும் நடித்து வந்தனர்

அடுத்த காலகட்டம்..

ஜெயஷங்கர், ரவிசந்திரன் சிவகுமார் போன்றவர்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று நடித்தனர்.ஸ்மால் பட்ஜெட் படங்கள் என இவர்களின் படங்கள்    குறிப்பிடப்பட்டன.  .தயாரிப்பாளர்களுக்கும் ஓரளவு லாபத்தை ஈட்டிக் கொடுத்தனர்.குறிப்பாக ஜெயஷங்கர், வெள்ளிக்கிழமை நாயகன் என்றே குறிப்பிடுவார்கள்.அந்தளவு படங்கள் வெளிவந்தன

இடைபட்ட காலத்தில் வந்து பெரும் நட்சந்திர அந்தஸ்தைப் பெற்றவர்கள் சூபர் ஸ்டாரும், உலக நாயகனும்..இவர்களும் ஒரு கட்டத்தில் வருடத்திற்கு ஓரு படங்கள் என நிறுத்திக் கொண்டனர்

தொடர்ந்து, வி்ஜய், அஜீத், சூர்யா போன்றவர்கள் திரையுலகை ஆண்டு வந்தார்கள்..வருகிறார்கள்..இவர்கள் நடிப்பும்..ஆண்டுக்கு ஓருரு படங்கள் என்றாயிற்று
தவிர்த்து, இவர்களின் படங்கள் வணிக ரீதியான படங்களாகவும்., கிட்டத்தட்ட ஒரே கதையமைப்புக் கொண்ட படங்களாகவும் இருக்கின்றன

இந்நிலையில், வந்தவர்களில் விஜய் சேதுபதி குறிப்பித்தக்கவர்.இவர் படங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்டவையாக அமைந்தவை.மக்க்ள் அதற்காகவே அவரை விரும்ப ஆரம்பித்தனர்.இவர் நடித்தப் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு  லாபத்தையும் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.ஏதேனும் தோல்விபடங்கள் என குறிப்பிடப்பட்டாலும், வசூலில் தோல்வி என்று கூற முடியாதவையாக அமைந்த்ன.

நீண்ட காலத்திற்குப் பிறகு..ஒரு கதாநாயகன்  ஒரே ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த சாதனையை இவர் புரிந்துள்ளார்.

அடுத்த பதிவிலிருந்து..இவர் நடித்த மாறுபட்டப் படங்கள் குறித்து பார்ப்போம்

Friday, January 20, 2017

சிவாஜி ஒரு சகாப்தம் - 33

           
(சிவாஜி நடித்த வேற்று மொழிப்படங்கள்)
(நவீன் கன்னாவிற்கான பதிவு)

தெலுங்கு படங்கள்
------------------------------
 பர்தேசி -
வெளியான நாள் - 14-1-1953

அஞ்சலி தேவிஆதிநாராயணராவ் ஆகியோர் அக்ண்சலி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம் (தமிழில் பூங்கோதை), எல் வி பிரசாத் இயக்கம்.
நாகேஷ்வரராவ், அஞ்சலியுடன் சிவாஜி

பெம்புடு கொடுகு

------------------------------------

வெளி யான நாள் _ 13-11-1953

நடிப்பு - சிவாஜி, புஷ்பவல்லி,சாவித்திரி

இயக்கம் எல் வி பிரசாத்

மங்கம்மா என்ற பெண் மோகன் என்பவனை தத்தெடுத்து வளர்க்கிறாள்.அவளுக்கு ஏற்கனவே முத்து என்ற மகனுண்டு. வீட்டு வேலைகள் செய்து குழ்ந்தைகளைக் காப்பாற்றுகிறாள்.ஒரு சமயம் ஒரு கொலையை அவள் பார்க்க நேரிடுகிறது.பின், அவளே அக்கொலைக்காக கைது செய்யப் படுகிறாள்.விடுதலை ஆகி அவள் வரும் போது..அவளது இரு மகன் களுமே ஒருவருக்கு ஒருவர் பரம எதிரியாய் உள்ளனர்.அவர்கள் திரும்ப ஒன்று சேர்ந்தனரா? என்பதே கதை

பராசக்தி -
---------------- 11-1-1957ல் பராசக்தி திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது

மனோகரா
________________ 3-6-1954ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது

பொம்மல பெல்லி
-----------------------------

வெளியான நாள் - 11-1-1958

தமிழில் பொம்மைக் கல்யாணம் என்ற பெயரில் வந்த படம்

நீரு கப்பின நிப்பு --
-----------------------------

வெளியான நாள்- 24-6-1982

இப்படத்தில் சில காட்சிகளே வந்தாலும் சிவாஜி அருமையாய் நடித்திருப்பார்.ஜக்கையா சிவாஜிக்கு குரல் கொடுத்தார்

பெஜவாட பெபுலி
----------------------------
வெளியான நாள் -14-1-1983

இயக்கம் விஜய நிர்மலா.வி சக்கரவர்த்தி இசை

சிவாஜியுடன், கிருஷ்ணா, ராதிகா, சௌகார் ஜானகி நடித்தனர்

விஸ்வநாத நாயகுடு
--------------------------------

வெளியானது மே 1987

தாசரி நாராயண ராவ் இயக்கம்
சரித்திரப் படம்.கிருஷ்ண தேவராயர் காலம்
சிவாஜி, கிருஷ்ணம் ராஜு, கே ஆர் விஜயா, ஜெயபிரதா நடித்தனர்

அக்னி புத்ருடு
--------------------

வெளியான நாள் - 14-8-1987

அன்ன்பூர்ணா ஸ்டூடியோஸ் சார்பில் கே நாகேந்திர ராவ் இயக்கத்தில், நாகேஷ்வர ராவுடன் சிவாஜி, சிவாஜி, சாரதா நடித்தனர்

பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்
-------------------------------------------------------
தமிழ் வெளியான நாள் - 29-7-1960
தெலுங்கு - 1-7-1960

மக்கள் ராஜ்ய என்று கன்னடத்திலும்,குழ்ந்தைகள் கண்ட குடியரசு என தமிழிலும் வந்தது.

தாதா மிராசி கதை..பி ஆர் பந்துலு தயாரிப்பு, இயக்கம்

ராமதாசு
--------------------
வெளியான நாள் 1-2-1964

தயாரிப்பு, இயக்கம் நாகையா

சிவாஜியுடன் நாகையா ராமதாசராய் நடித்தார்

பங்காரு பாபு
--------------------

வெளியான நாள் - 15-3-1973

ஜகபதி ஆர்ட்ஸ் சார்பில் வி பி ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வந்த படம்

கே வி மகாதேவன் இசை.
நாகேஷ்வர ராவ், வாணிஸ்ரீ நடித்த இப்படத்தில் கிருஷ்ணா, சோபன் பாபு, ராஜேஷ் கன்னா ஆகியோருடன் சிவாஜியும் ஒரு கௌரவ வேடத்தில் வந்திருப்பார்

பக்த துக்காராம்
---------------------------------
வெளியான நாள் - 5-3-1973

அஞ்சலி பிகசர்ஸ் தயாரிப்பு.இயக்கம் வி மதசூதன ராவ்

நாகேஷ்வர ராவ். அஞ்சலி ஆகியொறுடன் சிவாஜி.இப்படத்தில் சிவாஜி சத்ரபதி சிவாஜியாகவே வருவார்

ஜீவன தீரளூ
-------------------

வெளியான நாள் -12-8-1977

ஜி சி சேகர் இயக்கம்.கிருஷ்ணம் ராஜு, வாணீஸ்ரீ நடிப்பு

கே சக்கரவர்த்தி இயக்கம்

இப்படத்தில் நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்தார்

சாணக்ய சந்திரகுப்தா
--------------------------------------    ,

வெளியான நாள் - 25-8-1977

இயக்கம், தயாரிப்பு என் டி ராமாராவ்

என் டி ராமாராவ், நாகேஷ்வரராவ் ஆகியோருடன் சிவாஜி நடித்திருப்பார்.

இப்படத்தில் வீரன் அலெக்சாண்டராய் சிவாஜி நடிப்பு

மலையாளப்படங்கள் -
-------------------------------------

தச்சோளி அம்பு
------------------------- வெளியான நாள் -27-10-1978

பிரேம் நசீருடன் சிவாஜி
நவோதயா அப்பச்சன் தயாரிப்பு, இயக்கம்

கே ராகவன் இசை

மலையாளத்தில் வந்த முதல் சினிமாஸ்கோப் படம்

ஒரு யாத்ரா மொழி
-------------------------------
வெளியான நாள் -13-9-1997

பிரியதர்சன் கதை.பிரதாப் போத்தன் இயக்கம்.இளையராஜா இசை

மோகன்லாலுடன் நடிகர்திலகம் நடித்த படம்

ஸ்கூல் மாஸ்டெர்-
----------------------------

மலையாளப் படம் வந்த நாள் -3-4-1964
பிரேம் நசீர், சிவாஜி நடிப்பு
1958 கன்னடம் வந்தது
அதுவே எங்கள் குடும்பம் பெரிசு என தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது
(பதி பந்தலு என 1959ல் தெலுங்கில் வந்தது

பின் ஹிந்தியில் ஏ எல் ஸ்ரீனைவாசன் தயாரிப்பில் பி ஆர் பந்துலு இயக்கத்தில் வந்தது

இதே படம் மீண்டும் 1972ல்  ராமாராவ் நடிக தெலுங்கில் வந்தது.பின் 1973ல் ஜெமினி சௌகார் நடிக்க தமிழில் ஸ்கூல் மாஸ்டர் என வந்தது)

 ஹிந்தி-
---------------- வெளியான நாள் 6-2-1970

ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய சிவந்தமண் திரைப்படம் தர்த்தி என ஹிந்தியில் வெளிவந்தது.தமிழில் முத்துராமன் ஏற்ற பாத்திரத்தை ஹிந்தியில் சிவாஜி ஏற்றார்