Wednesday, July 8, 2020

இயக்குநர் சிகரம் கேபி - 91

இன்று இயக்குநர் சிகரம் கே.பாலசந்தர் அவர்களின் 91ஆவது பிறந்தநாள்.

அவரின் சாதனைகள்..அவரது அனைத்துப் படங்கள் பற்றிய சிறு குறிப்புகள் என அனைத்தையும் நூல் வடிவத்தில் கொண்டு வந்த பெருமை எனக்கு உண்டு.

"ஆவர் அனைத்தையும் ஆவணப்படுத்த விரும்பினார்.நண்பர் ராதாகிருஷ்ணனின் முயற்சியால் அந்த ஆசை நிறைவேறியிருக்கிறது' என்றுள்ளார் அவரது புதல்வி திருமதி புஷ்பா கந்தசாமி அவர்கள்..எனது "இயக்குநர் சிகரம் கேபி" என்ற நூலில்.மேலும் அவர் சொல்கிறார்..

"Accurate information is the key to motivation"..திறமையும்,உழைப்பும் மட்டுமே மூலதனமாக இருந்த கேபி அவர்களுடைய வாழ்க்கையை மிகச் சரியாகப் பதிவு செய்திருக்கிறது இப்புத்தகம்.

மேலும் சில பாலசந்தர்களை உருவாக்க இது உதவும் என்பது உறுதி..என் கிறார்.

கேபி புரிந்த இமாலய சாதனைகளைச் சொல்லும் இந்நூலிலிருந்து சிலத் துளிகள்.

கதை,திரைக்கதை,இயக்கம் எனபல்வேறு துறைகளில் பாலச்சந்தர் பணியாற்றியுள்ள படங்கள் 125.தமிழ் 87,தெலுங்கு 19,இந்தி 7,கன்னடம் 8,மலையாளம் 4.

இரு கோடுகள், அபூர்வ ராகங்கள்,தண்ணீர் தண்ணீர்,அச்சமில்லை அச்சமில்லை ஆகிய நான்கு படங்களும் இவருக்குத் தேசிய விருதினைப் பெற்றுத் தந்துள்ளன.

தேசிய விருது, பத்மஸ்ரீ,மாநில விருது, அண்ணா விருது,கலைஞர் விருது,கலைமாமணி,ஃபில்ம் ஃபேர் விருதுகள்,பல்கலைக் கழகங்கள் வழங்கிய டாக்டர் பட்டங்கள் ஆகிய பல விருதுகளைப் பெற்ற்வர் இவர். மைய அரசின் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே அவார்ட் விருதினையும் பெற்றுள்ளார்

65 நடிக,நடிகையர்களையும், 36 தொழில்நுட்பக் கலைஞர்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.ஆரம்பக் காலங்களில் ஒவ்வொரு படத்திலும் நான் கு புதுமுகங்களையாவது அறிமுகப்படுத்திய இயக்குனர் இவர்

எதிர் நீச்சல்,மேஜர் சந்திரகாந்த்,நாணல், நீர்க்குழுமி உட்பட 38 நாட்கங்கள் எழுதியுள்ளார்.

தொலைக்காட்சித் தொடர்களான ரயில் ஸ்நேகம்,கையளவு மனசு, மர்ம தேசம் போன்றவை இன்றளவும் பேசப்படுகின்றன.


இவர் படங்களில் நடித்த காதாநாயகிகளின் பாத்திரத்தின் பெயர் நினைவில் இன்றும் நமக்கு இருக்கிறதெனில்..அது அப்படைப்பின் வெற்றியல்லவா?

அவள் ஒரு தொடர்கதை (கவிதா)
அரங்கேற்றம்  - லலிதா
தாமரைநெஞ்சம் - கமலா
மனதில் உறுதி வேண்டும் - நந்தினி
அபூர்வ ராகங்கள்- பைரவி
சிந்து பைரவி- சிந்து
அச்சமில்லை அச்சமில்லை- தேன்மொழி
வறுமையின் சிறம் சிவப்பு - தேவி
புன்னகை மன்னன் - மாலினி,ரஞ்சனி

கதாநாயகிகள் மட்டுமல்ல கதாநாயகனின் பெயர்கள்
எதிர்நீச்சல் -மாது
நவக்கிரகம்- சேது
மன்மத லீலை- பிரசன்னா
உன்னால் முடியும் தம்பி- உதயமூர்த்தி

இப்படி சொல்லிக் கொண்டேப் போகலாம்

சிவாஜிராவ் எனும் நடிப்புக் கல்லூரி மாணவனுக்கு ரஜினி காந்த் என்று பெயர் சூட்டி 1975ல் அறிமுகப்படுத்திவர்.சூபர் ஸ்டாராகபின்உருவெடுத்த ரஜினி..பாலசந்தர் தயாரிப்பில் பல வெற்றிப் படங்களில்  நடித்தார்.

குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் தனது 5ஆம் வயதில் அறிமுகமான கமல்ஹாசனை1973ல் அரங்கேற்றம் படம் மூலம் இளைஞனாக அறிமுகப்படுத்த்னார்..

இப்படி நூற்றுக்கணக்கான கேபியைப் பற்றிய செய்திகளைக் கொண்ட நூல்.."இயக்குநர் சிகரம் கேபி"

அவர் பிறந்தநாளான இந்நாளில் இக்குறிப்புகள் அவரின் சாதனைகள் எனும் தேன்கூட்டிலிருந்து சிதறிய சிலத் துளிகள் ஆகும்

திரைப்படங்கள் வாழும்வரை..இவர் புகழும் வாழும்..போற்றப்படும்.

வாழ்க கேபி...வளர்க அவரது புகழ்

Sunday, July 5, 2020

கலைஞரின் கலைப்பயணம்

கலைஞர் ஒரு திரைப்பட பாடலாசிரியர்.அவரது பாடல்களில் மிகவும் பெயர்ப் பெற்ர சில பாடல்களைக் கீழே கொடுத்துள்ளேன்.

1)ஊருக்கு உழைப்பவன்டி..ஒரு குற்றம் அறியான்டி - மந்திரிகுமாரி

2)என் வாழ்வினிலே ஒளி ஏற்றும்தீபம் - பராசக்தி

3)பூமாலை நீ ஏன் புழுதி மண்மேலே   - பராசக்தி

4)புதியதோர் பாதையை வகுப்போமா - நாம்

5) வாழ்க..வாழ்க..வாழ்கவே  - நாம்

6)எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - நாம்

7)மாரி..மகமாயி..மாரி..மகமாயி - நாம்

8)சொப்பனத்தில் வந்த கடவுளின் அருளால் - நாம்

9) பேசும் யாழே..பெண் மானே - நாம்

10)மணமில்லா மலர் நானம்மா- நாம்

11) பேசும் யாழே (பாடியவர்- ராஜா-ஜிக்கி  -நாம்)

12)ஹா..ஹா..வருவாய்..வருவாய் (நாம்)

13)அம்மையப்பா அருள்வாய்..(அம்மையப்பன்)

14)காதல் புறா காதிலே (அம்மையப்பன்)

15)சின்ன புது மலரே (அம்மையப்பன்)

160நீலக் கடல் பாரு பாப்பா (அம்மையப்பன்)

17)பொதுநலம்..என்றும் பொதுநலம் (ரங்கோன் ராதா)

18)ஓடையில் ஒரு நாள் (ரங்கோன் ராதா)

19)ஆயர்பாடி கண்ணா நீ (ரங்கோன் ராதா)

20) வான் மலர்ச் சோலையிலே  (ரங்கோன் ராதா)

21)தமிழ்த் தேனே..கண்ணே தாலேலோ (ரங்கோன் ராதா)

22)மணிப்புறா..புது மணிப்புறா (ராஜா ராணி)

23) வேலை இல்லாத தொல்லை (ராஜா ராணி)

24) ஆழி சூழ் உலகம்(ராஜா ராணி)

25)வாங்க..வாங்க..எல்லோரும் வாங்க..(ராஜா ராணி)

26)கண்ணற்ற தகப்பனுக்குப் பெண்ணாக (ராஜா ராணி)

27)அலையிருக்குது கடலிலே..ஆசையிருக்கிறது உடலிலே (ராஜா ராணி)

28)வெல்க நாடு  வெல்க நாடு..வெல்க..வெல்கவே (காஞ்சித்தலைவன்)

29)நீர்மேல் நடக்கலாம்..நெருப்பிலே நடக்கலாம் (காஞ்சித் தலைவன்)

30)வாழ்க்கை எனும் ஓடம்  (பூம்புகார்)

31)கன்னம்  கன்னம்..சந்தனக் கிண்ணம் (பூமாலை)

32)ஒன்று கொடுத்தா ஒன்பது கிடைக்கும் (மறக்க முடியுமா?)

33) காகித ஓடம் கடலலை மீது (மறக்கமுடியுமா/)

34)நெஞ்சுக்கு நீதியும்..தோளுக்கு வாளும் (நெஞ்சுக்கு நீதி)

35)குடி உயர கோல் உயரும் (தூக்கு மேடை)

36)ஆயிரம் பிறைகள் காணும் வரை (தூக்குமேடை)

37)குறிஞ்சி மலரொன்று குலுங்கி அழைக்கிறது (தூக்குமேடை)

38)ஒரு பேரொளியின் பயணமிது (தூக்குமேடை)

39)சுருளி மீசைக்காரண்டி (வீரன் வேலுதம்பி)

40)ஆடி அமரக் கொஞ்சம் யோசிச்சுப் பாரு

Thursday, July 2, 2020

# TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 10 - லதா



பொன்னியின் செல்வன் தொடர் முதன் முதலாகக் கல்கியில் வந்த போது..கல்கியின் எழுத்தையும், அதனுடன் அதற்கான மணியம் அவர்களின் ஓவியங்களுடன் ஒன்றிப் போனார்கள் அன்றைய கல்கி வாசகர்கள்.

அதுபோல சில பிரபல எழுத்தாளர்கள் கதையென்றால் அதற்கு ஓவியம் இவராகத்தான் இருக்க வேண்டும் என்பது அந்தநாளின் பத்திரிகை ஆசிரியர்களின் விருப்பமாகவும் இருந்தது..வாசகனின் எதிர்பார்ப்பாகவும் இருந்தது.

எழுத்தாளர் சாண்டில்யனின் இயற்பெயர் பாஷ்யம் ஐயங்கார். அவர் எழுத்துக்கு என்று அமைந்து போன பத்திரிகிய குமுதம் எனலாம். முன்னதாக அவர் அமுதசுரபி இதழில் "ஜீவ பூமி".மலைவாசல்" அகியத்தொடர்களை எழுதியிருந்தாலும்..காலத்தால் மறக்கமுடியா அவரின் தொடர்கள்
கன்னிமாடம், கடல் புறா,யவன ராணி  போன்றவை.

இவரின் தொடர்களுக்கு ஓவியம் வரைந்தவர் லதா ஆவார்.இந்த கூட்டனி ரசிகர்கள் விரும்பிய கூட்டனி.சாண்டில்யனின் வர்ணனைகளுக்கேற்ப லதாவைத் தவிர வேறொருவரின் ஓவியத்தை நினைத்துக் கூட பார்க்கமுடியா அளவிற்கு லதாவின் ஓவியங்கள் இருந்தன என்றால் மிகையில்லை.

சாண்டில்யன் வர்ணித்த மஞ்சள் அழகியை ஓவியமாகத் தீட்டி..இன்னமும் நம்மை மறக்கமுடியாமல் ஆக்கிய லதா பாராட்டுக்குரியவர்.







Wednesday, July 1, 2020

#TVRதமிழ் இதழ்களை அலங்கரித்த ஓவியர்கள் 9 -சித்ரலேகா



ஆனந்த விகடனில் அந்தக் காலக்கட்டத்தில் பிரபல் ஓவியர்கள் பட்டாளமே இருந்தது.

மாலி தலைமையில், சில்பி,கோபுலு, ஸாரதி,ராஜூ,ஸிம்ஹா,வாணி .இவர்களுடன் முக்கியமாகக் குறிப்பிட வேண்டிய ஓவியர் சித்ரலேகா ஆவார்.

நாராயணசாமி எனும் இயற் பெயர் கொண்ட இவர்..இதிகாச, சரித்திர நாயகர்களின் ஓவியங்கள் வரைவதில் மிகவும் திறமைசாலியாய் இருந்தார்.

விகடனில் பி.ஸ்ரீ.எழுதிய "சித்திர ராமாயணம்" என்ற தொடருக்கு இராமாயணக் காட்சிகளை அருமையான சித்திரங்களாக வரைந்தார் இவர்.

கி.வா ஜ...விகடனில் எழுதிய இலக்கியச் சித்திரத் தொடர் "சித்திர மேகலை" என்ற பெயரில் ஐம்பெரும் காப்பியங்களில் ஒன்றான மணிமேகலையை 40 வாரங்களுக்குத் தொடராக எழுதினார்.அதற்கு சித்ரலேகா தான் ஓவியர்.

அவர் வரிந்த ஒவியங்களை இணைத்துள்ளேன்.

சித்திரலேலாவின் மகன் நா.ராஜேந்திரன், கும்பகோணம் காந்தி பூங்காவிற்கு வடக்கேயுள்ள வெங்கட்ரமணா ஹோட்டலில் அன்றாட மெனுவிற்கான பலகையில் பல ஓவியங்களை தினசரித் தீட்டி பார்வையாளர்களை கவர்ந்து வருவதாக ஒரு செய்தி கூறுகிறது.