Friday, October 31, 2008

தீபாவளிக்கு வெளியான பட விமரிசனம்..

இந்த தீபாவளிக்கு வந்த இந்த படம்..வசூலில் ஒரு சாதனையை ஏற்படுத்தும் என்று நம்பலாம்.

படத்தின் பெரும் பகுதி..கிழக்காசிய நாடுகளான சிங்கப்பூர்..மலேசியா,தாய்லாந்த்,ஹாங்காங்,ஜப்பான் இவற்றிலேயே படமாக்கப்பட்டிருக்கிறது.தமிழில் ஒரு படம்..இவ்வளவு வெளிநாடுகளில் எடுக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை எனலாம்.

காமிராவும்..அந்நாடுகளின் இயற்கை அழகை எல்லாம்..அப்படியே அள்ளி..அள்ளி தந்திருக்கிறது.அவ்வழகில் கண்டிப்பாக நாம் மயங்கிவிடுவோம்.இதில் கதானாயகனுக்கு நாலு கதாநாயகிகள்.ஒளிப்பதிவாளர் ராமமூர்த்தி.

அதே போன்று..எது வெளிப்புறக் காட்சி..எது அரங்க அமைப்பு என்றே தெரியாதவாறு..செட் .போட்டிருக்கும் ஆர்ட் டைரக்டருக்கு ஒரு சபாஷ்.

படம் வெளியாகும் முன்னே பாடல்கள் அனைத்தும் வெளிவந்து விற்பனையில் சக்கைப் போடு போட்டுள்ளதால்..இசையைப் பற்றி சொல்ல ஒன்றுமில்லை.

படத்தின்...தயாரிப்பாளரும்..இயக்குநரும்..ஏற்கனவே இரண்டு மாபெரும் வெற்றிகளை கொடுத்தவர்.இதில் ஹேட்ரிக் அடித்துள்ளார்.

படம்-உலகம் சுற்றும் வாலிபன்
இயக்குநர்,தயாரிப்பாளர்-எம்.ஜி.ஆர்.
இசை-எம்.எஸ்.வி.

இறுதிவரை பிரியாதிருக்க...(கவிதை)

இன்று

உன் மணநாள்

இறுதிவரை துணையிருப்பாய்

என்றிருந்தேன்..

ஆயின்..வேறொருவன் துணையானாய்

மரணமே...

இனி என் துணை

மறு பிறப்பென்று ஒன்றிருந்தால்

மறவாமல் உனக்கு

மகனாய் பிறந்திடுவேன்..

அப்போதேனும்..

உன் இறுதி வரை

உனைவிட்டு பிரிய வேண்டாமே!!!!

Wednesday, October 29, 2008

அரசியல் புதிர் போட்டி

தமிழக அரசியலை உன்னிப்பாய் கவனித்து வருபவரா..நீங்கள்...அப்போது கீழ்கண்ட வினாக்களுக்கு பதில் தெரிகிறதா என்று பாருங்கள்..

1.சுடுகாடு ஷெட் ஊழல்..செய்ததாக யார் மீது புகார் எழுந்தது ?தற்போது அவர் எந்த கட்சியில் உள்ளார்?

2.காலில் மனைவி யுடன் விழுந்து...ஆசி வாங்கிய முன்னாள் அ.தி.மு.க.அமைச்சர்..இன்று தி.மு.க.அரசிலும் அமைச்சர்..இவர் யார்?

3.தன் பிறந்த நாள் அன்று...அந்த தலைவர் ஒரு பத்திரிகை ஆசிரியரிடம் ஆசி பெற்றார்..அந்த தலைவர் யார்?

4.அ.தி.மு.க.,ஆதரவாளர் முதலில்..பின் தி.மு.க.தயவால் ராஜ்யசபா உறுப்பினர் ஆகி..மீண்டும் பதவி போனதும் அ.தி.மு.க.வில் சேர்ந்து..இன்று அதிலிருந்து விலகி ஒரு கட்சியும் ஆரம்பித்துள்ளார்.இவர் யார்?

5.தமிழக அமைச்சரவையில் ..இலாகா இல்லாத அமைச்சராக செயல் படும் அமைச்சர் யார்?

6.கலைஞருக்கு தங்கபேனா கொடுத்தவர்..இன்று பரம வைரி..யார் இவர்?

7.தன் முதுகில் குத்து அடிக்கடி வாங்கி...தன் ஜாதகம் அப்படின்னு சொல்லும் பகுத்தறிவு வாதி யார்?

8.பல தலைவர்கள்..பிரபல எழுத்தாளர்கள் படைப்பெல்லாம் அரசுடமை ஆக்கப்பட்டும்..இவருடையது ஆகாமல்.முட்டுக்கட்டை போடப்பட்டுள்ள தலைவர் யார்?

9.புத்தகக் கண்காட்சியில்..தன் பணத்தில் ஒரு கோடி நன்கொடை கொடுத்து..ஒவ்வொரு வருடமும்..சிறந்த எழுத்தாளருக்கு பரிசு வழங்கச் சொன்னவர் யார்?

10.2009ல் எம்.பி., 2011ல் முதல்வர் என கனவு காண்பவர் யார்?

ஒவ்வொரு சரியான பதிலுக்கும் 5 மதிப்பெண்.,
நீங்கள் 50 மதிப்பெண்களையும் பெற்றிருந்தால்...வருங்கால முதல்வர் நீங்கள் தான்...
40 மதிப்பெண் என்றால்..அமைச்சர் ஆகலாம்..
35 மதிப்பெண் என்றால் ஒரு எம்.எல்.ஏ.,ஆகலாம்..
அதற்கும் குறைவு என்றால்..பேப்பர் படிப்பதைக் கூட நீங்கள் விட்டு விடலாம்..காசு மிச்சம்.

வாய் விட்டு சிரியுங்க..

1. டாக்டர் சாப்பிடும் போது..அவசர அவசரமாக சாப்பிட்டு விட்டு ..அப்புறம்..சாப்பிட்டதை வாய்க்கு கொண்டு வந்து அரைச்சு சாப்பிடறேன்..
இந்த நேரத்தில எப்படி என் க்ளினிக் வந்தீங்க?
கால் நடையாகத்தான்

2.டாக்டர்..எனக்கு டைஃபாய்டா...என் நண்பர் ஒருத்தர் டைஃபாய்ட் வந்துதான் செத்தார்..நானும் அப்படி செத்துடுவேனா?
கவலைப்படாதீங்க..அப்படி ஏதாவது ஆச்சுன்னா..உங்களுக்கு வந்தது மலேரியான்னு சொல்லிடறேன்.

3.அந்த ஃபைனான்ஸ் கம்பனி போலியானதுன்னு எப்படி சொல்ற
பணம் போட்டவங்களுக்கு எல்லாம்..duedate ல பணத்தை ஒழுங்கா திருப்பித் தந்துடறாங்களாம்

4.இன்னிக்கு எல்லைப் பிரச்னைக் குறித்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகிறது
எந்தெந்த நாட்டுக்கிடையே
என்னுடைய அம்மாவுக்கும்..மனைவிக்கும் இடையேத்தான்...எல்லை மீறி சண்டை போடுவதில்லை என்று..

5.மாப்பிள்ளை வரதட்சணை வாங்கினார்னு..யாரோ போலீஸ்ல புகார் செஞ்சுட்டாங்க..
அப்புறம் என்ன ஆச்சு?
வரதட்சணை வாங்கற பழக்கம் தனக்கில்லைன்னு ..தன்னோட மூணு மனைவியையும் கொண்டுவந்து சாட்சியா காட்டினாராம்.

6.டாக்டர்- சிஸ்டர்..ஆபரேஷன் முடிஞ்சதும் 'சில்'லுன்னு ஒரு காபி வேணும்
ஏன் டாக்டர்
ஆபரேஷன் பண்ணின உடல்லே இருந்துதான் 'ஆவி'பறக்குமே

Tuesday, October 28, 2008

தி.மு.க.வில் ஆற்காட்டார் இடத்தை பிடிக்கிறாரா பாலு?

தி.மு.க.வில்..இக்கட்டான நேரங்களில்..முரசொலி மாறன் இருந்தவரை அவரை கலைஞர் பேச விடுவார்.ஒரு சமயம் கலைஞர் முன்னிலையிலேயே..அமைச்சர்கள்..எம்.எல்.ஏ.க்கள் என அனைவரையும் ஒரு பிடி பிடித்தார்.
அவரது மறைவுக்குப் பின்..அந்த வேலையை ஆற்காடு வீராசாமியை விட்டு செய்ய வைத்தார் கலைஞர்.பா.ம.க. கூட்டணியில் தி.மு.க.,வை காராசாரமாக விமரிசித்து வந்த போது..அக்கட்சியைச் சேர்ந்த காடுவெட்டி பற்றி பேச வைத்து..பா.ம.க.வை கழட்டி விடும் வேலைக்கு உபயோகித்துக் கொண்டார்.
ஆனால்..பா.ம.க., பிரிந்து சென்றதும்..கம்யூனிஸ்ட்கள் விலகியதும்..தி.மு.க.விற்கு சற்றே கவலையை ஏற்படுத்தியது.எப்படியாவது அக்கட்சியை திரும்ப இழுத்துக் கொள்ள முயன்று வருகிறது.
ஆனால்..மின்வெட்டு...ஆற்காட்டாரை ஓரளவு கலைஞரிடமிருந்து தள்ளி வைத்திருக்க...கலைஞர் பா.ம.க.,வை திரும்ப கொண்டுவரும் வேலையை டி.ஆர்.பாலு விடம் ஒப்படைத்திருக்கிறார் போலிருக்கிறது.
திண்டிவனத்தில்..நான்கு வழி சாலை திறப்பு விழாவில்..பிரிந்தவர்கள்..மீண்டும் கூடி..வரும் தேர்தலில் வெற்றி பெறுவோம்..என மறைமுகமாக..பா.ம.க.,விற்கு அழைப்பு விடுத்திருக்கிறார்.
கலைஞர் சம்மதம் இல்லாமல் அவர் இவ்வேலையை செய்திருக்க மாட்டார் என நம்பலாம்.

மிருகங்களே..மனிதனாய் இருக்காதீர்கள்....

"இனம் காப்போம்
இன மானம் காப்போம்
இனப் படுகொலையை
என்ன விலை கொடுத்தேனும் தடுப்போம்"

-கலைஞர்-






நன்றியில் நாயாய் இரு
வீரத்தில் சிங்கமாய் இரு
ஞாபகத்தில் யானையாய் இரு
உறவுகளில் காக்கையாய் இரு
மானத்தில் மானாய் இரு
தந்திரத்தில் நரியாய் இரு
சேமிப்பில் ஒட்டகமாய் இரு -ஆனால்
மனிதா
மனிதனாய் மட்டும் இருந்திடாதே!!!

ஓ..மிருகங்களே..
நீங்கள் நீங்களாகவே இருங்கள்
மனிதனாகும் ஆசை வேண்டாம்...

Monday, October 27, 2008

இந்த குட்டிக்கதைக்கு வேறு அர்த்தம் கற்பிக்காதீர்....

இப்போது ..இந்த பதிவில் ..உங்களில் பலருக்குத் தெரிந்த குட்டிக்கதை ஒன்றை சொல்கிறேன்..
இதை படித்துவிட்டு..உடனே...மணிகண்டன்..போன்றோர்..வேறு ஏதாவது அர்த்தம் கண்டுபிடிக்காதீர்கள்...

ராமர்..ஒரு சமயம் வனத்தில் நடந்துக்கொண்டிருந்த போது...அடக்கமுடியா தாகம் ஏற்பட்டது..பக்கத்தில் எங்கேயாவது தண்ணீர் கிடைக்குமா?என்று தேடிப்பார்த்த போது...அருகாமையில் ஒரு பொய்கை இருப்பதைப்பார்த்தார்.கையில் இருந்த அம்பை..தரையில் ஊன்றி விட்டு..தண்ணீர் குடிக்கச்சென்றார்.குடித்து விட்டு திரும்பும்போது..அம்பை எடுக்க குனிந்தார்..அம்பு..தரையில் இருந்த ஒரு தவளை மீது குத்தி இருந்தது..தவளையும்..குற்றுயிராய்..மரணத்திற்கு போராடிக்கொண்டிருந்தது.

உடனே..ராமர்..'ஏ..தவளையே...நான் அம்பை தரையில் ஊன்றுவதற்கு முன்..நீ இருப்பதை தெரிவித்திருக்கலாமே?'என்றார்..

அதற்கு..தவளை'ராமா..வேறு..யாராவது இக்காரியத்தை செய்திருந்தால்..நான்..ராமா..எனக்கு உதவு..என உன்னை அழைத்திருப்பேன்..ஆனால்..நீயே இக்காரியத்தை செய்துவிட்டதால்...என்னால் உன்னை அழைக்கமுடியாமல் போயிற்று'என்றதாம்.

இது ஆத்திகவாதிகள் மட்டும் அல்ல..நாத்திகவாதிகளும்..ஒரு கதையாகவே எடுத்துக் கொள்ளவும்.

கலைஞர் பார்ப்பனராய் இருந்திருந்தால்....

கலைஞர் ஒரு பார்ப்பனராய் இருந்து..தமிழக முதல்வராயும் ஆகி..அனைத்துக் கட்சிக்கூட்டம் கூட்டி..இலங்கை தமிழர் பிரச்னைக்கு ..மத்திய அரசு முடிவெடுக்காவிட்டால்..40 எம்.பி.க்களும்
ராஜினாமா செய்வோம் என அறிவித்துவிட்டு,பின் தில்லியிலிருந்து..கண்துடைப்பாய்...பிரணாப் முகர்ஜி வந்ததும்..40வருட போராட்டம் 4 நாளில் முடிவெடுக்க முடியாது என உணர்ந்து..ராஜினாமா நாடகத்தை வாபஸ் பெற்றிருந்தால்..பார்ப்பன எதிர்ப்பு கலைஞர் என்ன சொல்லி இருப்பார்..என யூகித்து பின்னூட்டம் இடுங்கள்...சிறந்த பின்னூட்டம் இடுவோருக்கு...அவர் பதிவுகளுக்கு நான் 6 மாதம் தொடர்ந்து பின்னூட்டம் இடுவேன்.

Sunday, October 26, 2008

தாமிராவும்..பிளீச்சிங்க்பவுடரும்..பின்னே கலைஞரும்

தமிழன் ஒரு இளிச்சவாயான்..அவனை சாதாரண குழந்தையால் கூட கோபமூட்ட வைக்கலாம்...உடன் உணர்ச்சிவசப்படுபவன்...கோபம் வந்த சில நிமிஷங்களில் சமாதானம் அடைபவன்.
தாமிரா... ரிலையன்ஸின் பிரௌசிங்க் சென்டர் போனார்..அவரால் பிரௌஸ் பண்ண முடியவில்லை...அங்கிருந்த ஊழியர்களும் சரியான பதிலை சொல்லவில்லை..உடனே கோபமடைந்தார்..
ரிலையன்ஸ் மீது காறி உமிழுங்கள் என கோபத்தில் பதிவிட்டார்..பின் நண்பர்கள் சிலர் கூற ..கோபம் தணிந்து..ரிலையன்ஸை கண்டிக்கிறேன்..என்று மாற்றிக்கொண்டார்.

பிளிச்சிங்க். அவரது பதிவு ஒன்றால்...ஒருவர் மீது கோபம் கொண்டு..நாய்..சிங்கம் கதையெல்லாம் சென்னை பாஷையில் பதிவிட்டார்..கோபத்தில்..பின்னர்..அவர் நண்பர்களாலும்,கோபமும் தணிந்ததும் ..குறிப்பிட்ட பதிவை விலக்கிக்கொண்டார்.

கலைஞர்..இலங்கை தமிழர்களின் அவல நிலையை குறுந்தகடில் பார்த்தார்..உணர்ச்சிவசப்பட்டார்..அனைத்துக் கட்சி கூட்டத்தைக் கூட்டினார்.மத்ய அரசுக்கு 2 வாரம் அவகாசம் அளித்தார்..அதற்குள் ..அரசு முடிவெடுக்கவில்லை எனில் தமிழக எம்.பி.க்கள் 40 பேரும் ராஜினாமா செய்வார்கள் என்றார்..பிரதமர்..நாத்தழுதழுக்க பேசியதும்..கோபம் சிறிது தணிந்தது.ப்ரனாப் முகர்ஜியை அனுப்பி..கலைஞரின் கோபத்தை தணித்தனர்.கோபம் தணிந்த கலைஞர்..எம்.பி.க்கள் ராஜிநாமா இல்லை என அறிவித்து விட்டார்..

அதாவது..கலைஞரும்..தமிழன் ஆயிற்றே!!
தமிழனுக்கான இளிச்சவாய்த்தனமும்..உணர்ச்சி வசப்படுதலும்..விட்டுக்கொடுத்தலும்,விட்டுக்கொடுத்ததும் சால்ஜாப்பு சொல்வதுமான குணங்கள் அவரிடமும் உண்டாயிற்றே!!
அவரை அறிந்தவர்கள்..கலைஞர் ராஜதந்திரி என்கிறார்கள்..உண்மையா?

தலைவர்களின் தீபாவளி செய்திகள்...

பிரதமர்- இந்த நாள்..நல்ல நாள்..எல்லா மாநிலங்களும் இப் பண்டிகையைக் கொண்டாடுவதால்..என் காதுகளுக்கு இன்று எந்த பிரச்னையும் வராது..நாளை..எந்த மாநில முதல்வர் எந்த பிரச்னையை எழுப்புவார்னு தெரியலை...நீங்க என்ன கேட்டீங்க..தீபாவளி செய்தியா...நான் இதுவரை இந்த விஷயமாக சோனியாஜி யிடம் பேசவில்லை..அவர் இதில் என்ன முடிவு எடுக்கிறாரோ அதுதான் என் முடிவும்..செய்தியும்...

கலைஞர்-உடன்பிறப்பே..இன்று காலை தொலைபேசியில் பிரதமரிடம் பேசினேன்..நரகாசூரனிடம் மக்கள் பட்ட அன்னலை..நாத்தழுதழுக்க கேட்டார்...அவரது இந்த உணர்ச்சி கண்டு..நான் மெய்சிலிர்த்தேன்..39 ஆண்டுகளாக அண்ணா என் கனவில் வந்து..தம்பி..நீ வாளாயிருக்கிறாயே..என கேட்டுக்கொண்டிருந்தார்..இன்று பிரதமரின்..எண்ண அலைகள்..பார்க்கும் போது அண்ணாவின் மனதில் தைத்திருந்த முள் எடுக்கப்பட்டதாகவே உணர்கிறேன்.

ராமதாஸ்-என் நிலைபாடு குறித்து..பலரும்..பலவும்..பேசிக்கொண்டிருக்கிறார்கள்..எது..எப்படி இருந்தாலும்..காங்கிரஸ் உடன் கூட்டணி உண்டு..அன்புமணிக்கு ..மத்திய அமைச்சர் பதவி உண்டு.2011ல் பா.ம.க.ஆட்சி தமிழகத்தில் மலரும்.

ஜெயலலிதா- நரகாசூரன் போன்ற ..வன்முறை சக்திகளை..என் ஆட்சியில் இரும்புக்கரம் கொண்டு அடக்கியவள் நான்..ஆனால்..கருணாநிதி ஆட்சியில் வன்முறை கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளது.வரும் 28ம் தேதி ..கலைராஜன் தலைமையில் எஸ்,வீ.சேகர் வீட்டு முன்..இதற்கான ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

ப.சிதம்பரம்-நாட்டில் பண வீக்கம் இரட்டை இலக்கத்தில் உள்ளது..அடுத்த தீபாவளிக்குள் ஒற்றை இலக்கிற்கு வந்துவிடும்...ஆகவே பங்குசந்தை சீர்பட்டுவிடும்..பயம் வேண்டாம்.

ஆற்காடு வீராசாமி-தீபம்+ஒளி..அதுதான் தீபாவளி.ஆகவே மக்கள் ஒளிக்கு மின்சாரத்தை நம்பாமல்..தீபங்களை ஏற்றி வைத்துக்கொள்ளுங்கள்..அதனால்தான்..கலைஞர் பாமாயில் விலையை லிட்டருக்கு 5 ரூபாய் குறைத்துள்ளார்.

பர்னாலா--இதுபோல சமயங்களில் வாழ்த்துக்கள் சொல்வதுதான் என் வேலை..என எனக்கு நன்கு தேரியும்..ஆகவே ரம்ஜானுக்கு வாழ்த்து சொல்லி முடிந்ததுமே..தீபாவளி வாழ்த்து எழுதிவிட்டேன் (என்றபடி 100பக்கங்கள் எழுதிய புத்தகத்தை கொடுக்கிறார்)

ரஜினி-வாழ்த்து கேட்டு..என்னை யாரும்..கட்டாயப்படுத்த முடியாது..அதே நேரம்..நான் வாழ்த்து சொன்னால்..அதை யாரும் தடுக்க முடியாது..அப்போது ரசிகர்களை அழைத்துக்கொள்வேன்.

(நமது சரடு நிருபருக்கு அளித்த பேட்டி)

Saturday, October 25, 2008

தெய்வம் யார் அவரவர் பாணியில்

...

தெய்வம் இல்லை என்றான்

நாத்திகன்

தெய்வம் கோவிலில் என்றான்

ஆத்திகன்

தெய்வம் தாய்தான் என்றான்

அன்புமகன்

தெய்வம் செய்யும் தொழில் என்றான்

உழைப்பாளி.

Friday, October 24, 2008

தயாநிதி மாறனை வாழ்த்தினார் கலைஞர்..

24-10-08 அன்று..ஒத்திவைக்கப்பட்ட ..இலங்கை தமிழர்களுக்கான மனித சங்கிலி போராட்டம் நடை பெற்றது..காலையிலிருந்து சற்று வெயில் இருந்த நிலையில்..போராட்டம் மழையிலிருந்து தப்பிவிடும் என எதிர்ப்பார்க்கப்பட்டது..ஆனால்..தொடங்க இருந்த நேரம் மழை கொட்ட ஆரம்பித்தது.திறந்த ஜீப்பில் போராட்டத்தை பார்வையிட எண்ணி இருந்த கலைஞர்..அதனால் காரில் அமர்ந்த வாறே பார்வையிட்டார்.கல்லூரி மாணவிகள் உட்பட பலர் கொட்டும் மழையில் நின்றிருந்தனர்.
சென்னை..அண்ணாசாலை அருகே..போராட்டத்தில் கலந்துக்கொண்டு..நின்றுக்கோண்டிருந்த தயாநிதி மாறனிடம்..கைகுலுக்கி..தன் வாழ்த்துக்களை தெரிவித்தார் கலைஞர்.(அழகிரி இல்லை போலும்).,அதே போல தேனாம்பேட்டையில் நின்றிருந்த ராமதாஸிற்கும்..வாழ்த்துக்களை தெரிவித்தார்.
சமீப காலமாக..கலைஞர் பார்வை தன் மேல் பட வேண்டும் என்ற எண்ணத்தில் இருந்த திரை உலகினர் சிலரையும் பார்க்க முடிந்ததுபோராட்டத்தில்.

வாய் விட்டு சிரியுங்க....தீபாவளி ஸ்பெஷல்..

1.உங்க வீட்டு கேசரியிலே கொஞ்சம் சர்க்கரை குறைவா இருக்கு
அடப்பாவி...அது கேசரி இல்ல உப்புமா?

2.என் மனைவி ஸ்வீட்ஸ் செய்யறதிலே எக்ஸ்பர்ட்..உன் மனைவி எப்படி
அவ ஸ்வீட்ஸ் சாப்பிடறதிலே எக்ஸ்பர்ட்

3.இந்த சமயத்திலே நீ வீட்டுக்கு வந்தது என் மனைவிக்கு பிடிக்கலைன்னு நினைக்கிறேன்
ஏன் அப்படி சொல்ற
அவ செஞ்ச அல்வாவை உனக்கு கொண்டு வந்து தர்றாளே!

4.பெண்1- தீபாவளிக்கு வாஷிங்மெஷின்,வெட் கிரைண்டர் எல்லாம் வாங்கலாம்னு இருக்கேன்..நீ..?
பெண்2-எனக்குத்தான் கல்யாணமாயிடுச்சே...

5.மாமனார்-(தீபாவளிக்கு வந்திருக்கும் அமெரிக்க மாப்பிள்ளையிடம்) தீபாவளிக்கு..சரிகை வேட்டி..அங்கவஸ்திரம் எல்லாம் வாங்கியிருக்கேன்..ஆனா இன்னிக்கும் இப்படி அரை பேன்டோ
டுதான் நிற்பேன்னா எப்படி மாப்பிள்ளை?

6.இரண்டு நாளா..ரொம்ப குஷியா இருக்கீங்க?
என் மனைவியை ஊருக்கு அனுப்பி இருக்கேன் ..அதுதான்..

7.என் மனைவி ஒரு மாதம் பிறந்த வீட்டிற்கு போயிருக்கா..
அதுக்கு சந்தொஷப்படாம ..வருத்தப்படறே..
அந்த ஒரு மாசம் இன்னியோட முடியறது.அதுதான்

8.இன்ஸ்பெக்டர்- என்னடா..கபாலி ..மாமூல் வரல்லே..மாமியார் வூட்டுக்கு அனுப்பிடுவேன்
கபாலி-நிஜ மாமியார் வீட்டுக்குத்தான் போயிருந்தேன்...சார்

இன்றைய தமிழனின் நிலை

தமிழன் என்று சொல்லடா..தலை நிமிர்ந்து நில்லடா என்றார் நாமக்கல் கவிஞர்..ஆனால் இன்று ..

அண்டை நாடுகளில் அவன் பிரச்னை..அகதிகளாக..அவன் வரும் நிலை..இவையெல்லாம் இருக்கட்டும்..
சொந்த நாட்டிலேயே அவன் இரண்டாம் தர குடிமகனாகவே இருக்கிறான்..என்பது..மறுக்கமுடியாத உண்மை.
பாருங்கள்..1974ல் முடிந்த ஒப்பந்தம்..புதுப்பிக்காததால்..காவிரி தண்ணீர் பிரச்னை..இன்றுவரை தீர்ந்தபாடில்லை.நாட்டின் உச்ச மன்ற தீர்ப்புக்குக்கூட அடிபணியாத மாநில அரசுகள்..நவம்பர் மாதம் இறுதி தீர்ப்பு வருகிறதாம்..பார்ப்போம் என்ன நடக்கிறது என்று..
அடுத்து..கேரளா..முல்லைப்பெரியாறு அணை விவகாரம்..இதிலும் இதுவரை தமிழன் விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறான்.
சற்று..யோசித்துப்பார்த்தால்...ஹிந்தி தெரியாத மக்கள் உள்ள ஒரே மாநிலம்.நமது..
வெளிநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள்கூட..எம்மாநிலத்தை சேர்ந்தவராய் இருந்தாலும் ஹிந்தியில் பேசிக்கொண்டிருக்கும் போது..அங்கும் தமிழன் தனித்து விடப்படுகிறான்.
இதெற்கெல்லாம் காரணம்..அரசியல்..
இன்றைய தமிழக அரசியல் ..தலைவர்களிடையே உள்ள தனிப்பட்ட பகைமை உணர்ச்சியிலேயே ..நடந்துக் கொண்டிருக்கிறது.
இப்படியே போய்க்கொண்டிருந்தால் 'தமிழன் என்று சொல்லடா...தலை குனிந்து நில்லடா'என்ற நிலை வந்துவிடுமோ என்ற பயம் ஏற்படத்தான்செய்கிறது

Thursday, October 23, 2008

கலைஞரின் ராஜதந்திரமும்...வைகோ கைதும்..

கலைஞருக்கு எதிராக அரசியல் செய்வோர் அவர் அளவிற்கு முடியாவிட்டாலும்..ஓரளவு புத்திசாலித்தனமாக அரசியல் செய்ய வேண்டும்.
வைகோ கைது மீண்டும் இதை நிரூபித்துள்ளது.
சங்கரராமன் கொலை ஆன போது..அதில் சம்பந்தபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கா விட்டால்..தி.மு.க.,ஆர்ப்பாட்டம் செய்யும் என்றதுமே..அவசர அவசரமாக ஜெ அரசு..ஜெயேந்திரரை ஹைதராபாத்தில் கைது செய்தது.இதன் காரணமாக ஜெ ஒரு சாராரின் ஆதரை இழந்தார்.
இப்போது விடுதலைப்புலிகள் இயக்கத்தை ஆதரிப்பவர்களை..தி.மு.க.,அரசு விட்டு வைத்திருக்கிறது..என் ஆட்சிக் காலத்தில் பொடா சட்டத்தில் இவர்களை கைது செய்திருக்கிறேன்..என்று ஜெ சொல்லப்போக...அவர் இப்படி சொன்னதால்தான் வைகோ கைதானாற்போல ஒரு மாயை தோற்றுவிக்கப்பட்டுவிட்டது. கலைஞரும்..ஜெ க்கு ஆதரவாக செயல்பட்டு வந்த கூட்டணிக் கட்சிக்கு வேட்டு வைத்து விட்டார்.,
ஜெ..தனித்து விடப்பட்டுள்ளார்..
நுணலும் தன் வாயாற் கெடும்...

மங்கை உனக்கு ஒரு சல்யூட்....

தமிழ்மண பதிவாளர்கள் அனைவரும் அனேகமாக இவரை அறிந்திருப்பார்கள்.உண்மையில் இவர் இணையத்தை புரிந்துக் கொண்டு..தன் பதிவுகள் மூலம் ஒரு விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தி வருகிறார்கள்.
சமூக அவலம்..மனித நேயம்..கொடுமைகளைக் கண்டு கொதிக்கும் மனபாங்கு..தன்னலமற்ற சேவை..இவற்றிற்கு இவர் ஒரு எடுத்துக்காட்டு எனலாம்.,
எய்ட்ஸ் விழிப்புணர்ச்சிக்கு..இவரின் தொண்டுகள் பாராட்டத்தக்கது
அண்மையில் தில்லியில் அரசு மருத்துவ மனைகளில் இயங்கி வரும் - HIV சோதனை மற்றும் ஆராய்ச்சி மையங்கள் மிக மோசமாக இயங்கி வருவதாகக் கேள்விப்பட்டு..அவற்றில் திடீர் சோதனை நடத்த அதிகாரிகள் உத்தரவிட..மங்கை உண்மை நிலை அறிய..தானே பரிசோதனை செய்துக் கொள்ள வந்துள்ளதாகக் கூறி ஒரு மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.எப்படிப்பட்ட ஒரு முடிவு..எந்த ஒரு மனிதனுக்கும் வராத ஒரு எண்ணம்.
சாதாரண நோயே ..நமக்கு இருப்பது மற்றவர்க்கு தெரியக்கூடாது என்ற எண்ணம் உள்ள சமுதாயத்தில்..இப்படி ஒருவரா...
மங்கை...பாராட்ட வார்த்தைகளே இல்லை.
இதுவரை அவர் பக்கங்களுக்கு போகாதவர்கள்..சென்று அவரது ஒவ்வொரு பதிவையும் படியுங்கள்..
எல்லா பதிவுகளும் படிக்கப்பட வேண்டும் என்பதால்..குறிப்பிட்டு எப்பதிவையும் நான் சொல்லவில்லை.

http://manggai.blogspot.com

மங்கை..அனைவர் சார்பிலும் நன்றி.

Wednesday, October 22, 2008

தீபாவளி ..சுப்பு தாத்தா சொன்ன கதை..

இந்த வருஷம் தீபாவளியை அமெரிக்கவில் ,தன் மகனுடன்..சுப்பு தாத்தா கொண்டாட(!!!) நேர்ந்துள்ளது.மகனும்..மருமகளும் வருந்தி அழைத்ததால்..ஆறு மாதம் ஸ்டேட்ஸ் வந்திருக்கிறார்.
அவர் தன் பேரனிடம் 'ம்..இந்தியாவில் இருந்தா..தீபாவளியை அமர்க்களமா கொண்டாடுவேன்..'என்று கூறப்போய்..அவனும் ஆவலுடன் தீபாவளின்னா என்ன தாத்தா'என்றான்.

தன்னை மதித்து(!!??) தன் பேரன் கேட்பதால் சொல்ல ஆரம்பித்தார்.

"முன்னொரு காலத்திலே..நரகாசூரன்..நரகசூரன்னு ஒருத்தன் இருந்தான்..அவன் மக்களை எல்லாம்..ரொம்ப கொடுமை படுத்தி வந்தான்..அந்த கஷ்டத்தை தாங்காத மக்கள் எல்லாரும்..பூமாதேவி கிட்ட சொல்ல..அவ அவனை வதம் பண்ணினா..சாகறப்போ நரகாசூரன் ..இவ்வளவு நாள் நான் மக்களை எல்லாம் ரொம்ப கொடுமைப் படுத்திட்டேன்..அதனால..நான் சாகிற இந்த நாளை அத்தனைப்பேரும் சந்தோஷமா..புது டிரஸ் போட்டுண்டு..பட்டாசு எல்லாம் வெடிச்சு..ஸ்வீட் எல்லாம் சாப்பிட்டு கொண்டாடட்டும் என்றான்"
அதுதான் தீபாவளி...என்றார்.

'போ..தாத்தா..நீ சொல்றதே புரியலை..அசுரன்னா என்ன..வதம்ன்னா என்ன..பூமாதேவிக்கு என்ன வேலை..ஒரேயடியா குழப்பறே..தாத்தா..'என்றான் பேரன்.

'சரி..உனக்கு புரியறமாதிரியே சொல்றேன்..'என்ற தாத்தா..DVD யில் அவன் சில தமிழ் படங்கள் பார்த்த ஞாபகம் வர..சொல்ல ஆரம்பித்தார்.

'நரகாசூரன்னு ஒரு தாதா இருந்தான்..அவன் கிட்ட நிறைய அடி ஆட்கள்..அவங்களை வைச்சு..ஜனங்களை அடிக்கிறது..கொள்ளையடிக்கிறது..கொலை செய்யறதுன்னு கொடுமைகள் செஞ்சுக்கிட்டு இருந்தான்..பூமாதேவின்னு ஒரு இன்ஸ்பெக்டர் இருந்தா..ஜனங்க அவ கிட்டப் போய் முறையிட்டாங்க..அவங்க நரகாசூரனைக் கூப்பிட்டு இப்படியெல்லாம் நடக்கக்கூடாதுன்னு சொன்னாங்க..அவனோ கேக்கலை...ஒருநாள் அவன் தப்பு செஞ்சப்போ..பூமாதேவி பாத்துட்டாங்க..அவனும் இவங்களைப்பார்த்து ஓட ஆரம்பிச்சான்.உடனே அவங்க என்கவுண்டர்ல
அவனை சுட்டுட்டாங்க...அவன் செத்துப்போறப்ப..நான் எல்லாரையும் ரொம்ப கொடுமைப்படுத்திட்டேன்.அதனாலே..நான் சாகிற இந்த நாள மக்கள்..fire works,cookkie,new dress னு
கொண்டாடட்டும்ன்னான்...அதுதான் தீபாவளி..இப்ப புரியுதா?'என்றார்.

'ஓ..புரிஞ்சிடுத்து..ரஜினி,விஜய்,கமல்..எல்லாம் பூமாதேவி மாதிரி.. அப்பறம்..சுமன்,பிர்ம்மானந்தம்.ஃப்ளச்சர் இவங்க எல்லாம் நரகாசூரன் மாதிரி..சரிதானே'என்றான்.

தாத்தாவும் ஏமாற்றத்தை மரைத்துக்கொண்டு 'ஆம்' என்பது போல தலையை ஆட்டினார்.


பதிவர்கள்..அவர்களது நண்பர்கள்..பின்னூட்டம் இடும் அன்பர்கள் எல்லோர்க்கும் சுப்பு தாத்தா மூலமா எங்க தீபாவளி வாழ்த்துக்கள்.

Tuesday, October 21, 2008

தமிழகம் இரண்டாகப் பிரியப்போகிறதா?

திராவிட முன்னேற்ற கழகம் பிறந்த போது..அதன் முக்கிய கொள்கையே..தனி திராவிட நாடு..ஆனால் ஒரு கால கட்டத்தில்..அண்ணா அந்த கொள்கையை கைவிட்டார்.
மும்பையில் சமீபத்திய வட இந்தியரை எதிர்த்து நடைபெற்ற போராட்டத்தைப் பற்றி பேசும்போதும்..மத்திய அமைச்சர் சிவராஜ் படீல்..'பிரிவினைக் கேட்கும் நபர் யாராய் இருந்தாலும் அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்"என்று கூறியுள்ளார்.
இனி தமிழகத்திற்கு வருவோம்...
ஏற்கனவே..மதுரையில் தனிக்காட்டு ராஜாவாக இயங்கிவரும் அஞ்சாநெஞ்சனை எதிர்த்து அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் நடத்தியது.தனியொரு மனிதனைக் கண்டித்து..அதுவும் எந்த ஒரு பதவியிலும் இல்லாத ஒருவரை குறிவைத்து இதுவரை எந்த ஒரு கட்சியும் போராட்டம் நடத்தியதில்லை.
இந்நிலையில் ..ஒரு சில பத்திரிகைகள் ..எல்லை மீறி ..நடப்பதாகவே தோன்றுகிறது.
ஒரு தமிழ் இதழில்..தென் தமிழக முதல்வர் அழகிரி ..என்று கூறியுள்ளது.
நம் கேள்வி எல்லாம்...
1.இதை ஏன் முதல்வர் கண்டிக்கவில்லை.
2.தமிழகத்தில் வருங்காலத்தில்..இரண்டு முதல்வர்கள் வரும் வாய்ப்புண்டா?
3.சாதாரண கருத்துக்கணிப்புக்கே...குடும்ப சண்டை..பிரிவினை எல்லாம் வந்த போது..இந்த விஷயம் மட்டும் ஏன் அடக்கி வாசிக்கப்படுகிறது.
4.இல்லை..வட தமிழகத்திற்கு தனியாக ஸ்டாலின் முதல்வர் ஆகிறாரா?

வாய் விட்டு சிரியுங்க...

1.யாதும் ஊரே..யாவரும் கேளிர் என்ற கொள்கை உடையவர் எங்க தலைவர்..ஓட்டலுக்குப் போனாலும்..காசி ஹல்வாவும்,கல்கத்தா ரசகுல்லாவும்,மங்களூர் போண்டாவும்..மும்பை மீல்ஸூம் தான் சாப்பிடுவார்.

2.தலைவர் இடைத்தேர்தலுக்கு ஏன் பெண் வேட்பாளரை அறிவிச்சிருக்கார்
'இடை'த்தேர்தல்னா அதுலே பெண்கள்தானே வெற்றி பெற முடியும்.

3.அதோ போறாரே அவர் நம்மை 'சௌக்யமா'ன்னு விசாரிக்கமாட்டார்
ஏன்?
அவர் டாக்டர் ஆச்சே

4.கவர்ச்சி நடிகை காந்தா நிர்வாண நிதி திரட்டறாங்களாம்
ஐயோ..அது நிர்வாணநிதி இல்லை..நிவாரண நிதி

5.கோவியானந்தா- நீங்க துறவியானதற்கு காரணம்?
ராதானந்தா-மனைவி..குழந்தைகள் தான் காரணம்..ஆமாம் நீங்க?
கோவியானந்தா-மனைவி குழந்தைகள் இல்லாததுதான் காரணம்

6.மகன்-(தந்தையிடம்)அப்பா நீ எந்த ஊர்ல பிறந்தே
தந்தை-திருநெல்வேலியில்
மகன்- அம்மா
தந்தை-மும்பையில்
மகன்- நான்
தந்தை-சென்னயில்
மக்ன்- என்ன ஆச்சர்யம்..எங்கெங்கோ பிறந்த நாம எப்படி ஒன்னா திருச்சிலே சேர்ந்திருக்கோம்

Monday, October 20, 2008

இயக்குநர் ஸ்ரீதர் ஒரு சகாப்தம்

அன்றும்..இன்றும்..என்றும்..மறக்கமுடியாத தமிழ் நகைச்சுவை சித்திரம் 'காதலிக்க நேரமில்லை'
கொடுத்த ஸ்ரீதர் மரணச்செய்தி..எல்லா வயதினரையும் துயரடையச் செய்திருக்கிறது.
முதன் முதல்..தனது 'ரத்தபாசம்' நாடகத்தை T.K.சண்முகத்திடம் எடுத்துப்போனார்.அதைப்படித்த சண்முகம்..அதை நாடகமாக நடித்ததுடன்..திரைப்படமாகவும் எடுத்தார்.அப்போது ஆரம்பித்த ஸ்ரீதரின் முன்னேற்றம்...கடைசிவரை நின்றது.
இவரைப்போல..இன்றும் நினைவில் நிற்கும் படங்களை வேறு இயக்குநர்கள் யாராவது எடுத்திருப்பார்களா என்பது சந்தேகமே..
எதிபாராதது இவர் கதை வசனம்..காதலித்த பெண்ணே அம்மாவாகிறார்..(இதன் தாக்கம்தான் பாலச்சந்தருக்கு மூன்றுமுடிச்சு கொடுத்திருக்க வேண்டும்).திரை உலகில் திருப்பம் ஏற்படுத்திய படங்களில் ஒன்று..
அவர் கதை..வசனத்தில்.. வந்த படங்கள்..
புனர்ஜென்மம்,(கதை-வசனம் மட்டும்)
அமரதீபம்(கதை-வசனம் மட்டும்)
மீண்ட சொர்கம்(கதை-வசனம் மட்டும்)
கல்யாணபரிசு
காதலிக்க நேரமில்லை
நெஞ்சில் ஓர் ஆலயம்,காதலிக்க நேரமில்லை
சுமைதாங்கி,கலைக்கோயில் ,வெண்ணிற ஆடை
நெஞ்சிருக்கும் வரை,நெஞ்சம் மறப்பதில்லை
சிவந்த மண்
அவளுக்கென்று ஒரு மனம்
தேன்நிலவு
இளமை ஊஞ்சலாடுகிறது
துடிக்கும் கரங்கள்
தந்துவிட்டேன் என்னை
ஊட்டிவரை உறவு
உரிமைக்குரல்
மீனவநண்பன்
தவிர..நெஞ்சில் ஓர் ஆலயம்,கல்யாணபரிசு,சிவந்தமண்,காதலிக்க நேரமில்லை இந்தியில் வந்துல்ள படங்கள்.

தற்சமயம் எனக்கு ஞாபகம் வந்த படங்கள் இவை..இதுபோல வேறுஇயக்குநர் படங்கள் ஞாபகம் இருக்குமா?தெரியவில்லை.
கடைசிவரை..திரும்ப வந்து படம் கொடுப்பேன் என்று சொல்லிவந்தார்..
பல நடிகர்களை அறிமுகம் செய்தவர்.
சிலரது பெருமை ..வாழும்போது தெரிவதில்லை..அதில் ஸ்ரீதரும் ஒருவர்.
தேசிய அளவில் அங்கீகாரம் ஏற்படுத்திக்கொள்ள தெரியா இயக்குநர்.
பல எழுத்தாளர்களின் நூல்கள் அரசுடமை ஆக்கப்பட்டதுபோல இவரது சில முக்கிய படங்கள் அரசுடமை ஆக்கப்படவேண்டும்.
அரசு செய்யுமா?

அநாவசியமாக யாரும் விஜய்காந்தை விரோதித்துக் கொள்ளாதீர்கள்

சமீப காலங்களாக சில பத்திரிகைகள்..சில இணைய பதிவாளர்கள் கேப்டனை மரியாதை இல்லாமல் விஜய்காந்த் என்று சொல்வதுடன்..அவரை..அவர் அரசியலை கிண்டல் செய்து வருகிறார்கள்.அவர் ஒருவர் மட்டுமே..மரியாதை கொடுக்கமாட்டேன் என்று கூறி கலைஞரை..கருணாநிதி எனக் கூற ஏக போக உரிமை பெற்றவர்.
இவ்வளவு நாட்கள் சந்தேகத்தோடு இருந்த ..என்னைப்போன்றவர்கள்..சமீபத்திய அவர் கட்சியின் இளைஞர் பேரணி பார்த்து மலைத்துப் போயிருக்கிறோம்.கலைஞர் திருடிவிடுவார்..என்பதற்காக பல அரிய திட்டங்களை ரகசியமாக அவர் வைத்திருக்கிறார்..பதிவிக்கு வந்ததும் ஒவ்வொன்றாக அவிழ்த்து விடுவார்.
அவரால் எப்படி பதவிக்கு வரமுடியும் என்கிறீர்களா..
ஒரு எளிய கணக்கு..
இவ்வளவு நாட்களாக அரசியலில் இருந்தும்..கலைஞர்,ஜெயலலிதா ஆகியவர்களுக்கு தெரியாத கணக்கு.
அதை ரகசியமாக வைக்காமல் உடைத்து விட்டார் பேரணி கூட்டத்தில்.
'மொத்தம் 5 லட்சம் பேர் வந்திருக்கிறீர்கள்..ஒருவர் 100 வாக்குகள் வாங்கிக்கொடுத்தால் 5கோடி வாக்குகள்.' என்றார்..பின் என்ன அவர்தான் முதல்வர்.
ஆகவே அனைவரும் இனி அவரை கிண்டல் செய்ய வேண்டாம்.

Sunday, October 19, 2008

ஐ.டி.துறையின் இன்றைய நிலை..

தங்க சுரங்கம்..தகர சுரங்கமாகிறது என்று பத்திரிகையில் வந்த ஒரு கட்டுரையை நான் எடுத்துப்போட http://sowmyatheatres.blogspot.com/2008/10/blog-post_10.html
..தமிழ்நெஞ்சம்..இது பற்றி உங்களது எண்ணம் என்ன..எனக்கேட்டிருந்தார்.அதற்கான பதிவே இது.

ஒரு மாணவன் 9ம் வகுப்பு தேறி 10ம் வகுப்பு போகிறான்..அவனுக்கான பள்ளிச்செலவுகள் போக..மாதம் ஆயிரம் ரூபாய்க்கு செலவு செய்து..கணக்கு..மற்றும் சயின்ஸ் பாடங்களுக்கு டியூஷன் வைக்கப்படுகிறது.அவன் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என குடும்பத்தினர் சில தியாகங்கள் செய்ய வேண்டியிருக்கிறது.புத்திசாலி பையனாய் இருப்பவன் 90 மதிப்பெண்கள் சராசரியாகப் பெற்று தேறுகிறான். அவன் வாங்காமல் போன மதிப்பெண் எங்கே? என்று தேடப்படுகிறது.
+2 சேருகிறான்..சயின்ஸ் குரூப்..மொத்தமாக பள்ளிச்செலவுகள்..வருஷம் முழுதும் என மொத்தமாக டியுஷன் ஃபீஸ்..கணக்கு..பிசிக்ஃஸ்,கெமிஸ்ட்ரி,கம்.சயின்ஸ் என.,இரண்டு வருடங்கள் பெற்றோர் வயிற்றில் நெருப்பு.பையன் நல்ல மதிப்பெண் பெற்று தேறினால்..கவுன்சிலிங்கில் நல்ல காலேஜ் கிடைக்கிறது.சற்று குறைவான(95%!!!)மதிப்பெண் ஆனால் சுயநிதி கல்லூரியில்..வாங்குவதில்லை என்று சொல்லியபடியே வாங்கும் கேபிடேஷன் ஃபீஸ்(லட்சங்கள்)செலுத்தி...ஃபீஸ் 4 வருஷங்களும் கட்டி படிப்பை முடிக்கிறான்.
10ம் மதிப்பெண்,+2 மதிப்பெண்,இஞ்சினீரிங்க் மதிப்பெண்(இது 75%குறையாமை இருந்தால்தான் கேம்பஸ் தேர்வில் நல்ல கம்பெனி ) பார்த்து வேலை கிடைக்கிறது.
இது எல்லாம் ஏன் சொல்கிறேன் என்றால்..இவ்வளவு கஷ்டங்கள்..தியாகங்கள் செய்தால் தான் வேலை.அதுவும் உடனே லட்சக்கணக்கில் இல்லை,..ப்ராஜெக்ட்..டீம் லீடர்..
இப்படியெல்லாம் மாதம் 25000க்குள்தான் சம்பளம்.காலநேரம் பார்க்காமல் ..ஆண்..பெண் என சலுகைகள் இல்லாமல்..உடலை வறுத்தி உழைக்க வேண்டும்.வாழ்வில் பல சௌகரியங்கள்..சின்னச்சின்ன சந்தோஷங்கள் எல்லாம் அவனுக்கு கிடையாது.

சரி இனி தலைப்பு...
இந்திய ஐ.டி.கம்பெனிகள் அமெரிக்கா போன்ற நாடுகளிலிருந்து அவுட் சோர்ஸிங் முறையில் வேலையைப் பெறுகின்றன.ஒரு மணி நேரத்திற்கு 15..20..யு.எஸ்.டாலர் என்ற முறையில் வாங்கிக்கொள்கின்றனர்..ஆனால் வேலையில் இருப்போருக்கு 2 அல்லது 3 டாலர் ஒரு மணி நேரத்துக்கு கொடுக்கப்படுகிறது.இரவு நேர வேலை. ஓரளவு நல்ல சம்பளம்..அதற்கு ஊழியர்கள் கொடுக்கும் விலை..நிம்மதியில்லா வாழ்க்கை,சிறு வயதிலேயே இரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி போன்ற வியாதிகள்.

இப்படி தேவையில்லா வாழ்வானாலும்..பொன் முட்டையிடும் வாத்தே ஐ.டி.துறை.இப்போது..அகில உலகிலேயே பொருளாதார சிக்கல் உள்ளது.ஏர்வேஸ் ஆட் குறைப்பு பற்றி பேசாத நாம்..இத் துறை பற்றி மட்டும் ஏன் அலட்டிக் கொள்ள வேண்டும்.
நம் புத்திசாலி ஊழியர்களும்..தேர்ந்த ஆங்கிலமும் இருக்கும் வரை நமக்கு கவலை இல்லை..
இடையே இப்பொழுது இருப்பதெல்லாம் just passing clouds .

யாரும் மனம் தளர வேண்டாம்.

Friday, October 17, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.நீதிபதி-(குற்றவாளியிடம்)கன்னிப்பெண்ணை கற்பழித்தக் குற்றத்திற்காக உன்னை தண்டிக்க விரும்புகிறேன்..நீ ஏதேனும் கூற விரும்புகிறாயா?
குற்றவாளி- இது என் கன்னி முயற்சி ஐயா..மன்னிச்சு விட்டுடுங்க

2.காதலன்-எவ்வளவு நாட்கள் நாம இப்படியே காதலராய் இருக்கிறது..உங்கப்பாவை வந்து நான் பார்க்கவா?
காதலி-வேண்டாம்..வேண்டாம்..அவர் சம்மதம்னு சொல்லிட்டா..என்ன செய்யறது

3.தயாரிப்பாளர்-நானே திரைக்கதை,வசனம்,இயக்கம்,ஒளிப்பதிவு,பாடல்,இசை எல்லாப்பொறுப்பையும் ஏத்துக்கிட்டு ஹீரோவாகவும் நடிச்சுடலாம்னு பார்க்கிறேன்..
நண்பர்-பக்கத்திலேயே ஒரு தியேட்டர் விலைக்கு வருதாம்..அதையும் வாங்கிட்டீங்கன்னா உங்க படத்தை அங்கே ரிலீஸ் செய்திடலாம்

4.அந்த சேனல் உரிமையாளரை ஏன் கைது பண்ணிட்டாங்க
உலகத்தொலைக்காட்சி வரலாற்றிலேயே முதன் முறையா..பெரிய திரைக்கு வர்றதுக்கு முன்னாலேயே சின்னத்திரையில் படம் போட்டுட்டாராம்

5.தலைவர் வார்த்தைக்கு வார்த்தை தான் டாக்டர்னு சொல்றாரே..படித்து வாங்கின பட்டமா?
இல்ல..கொடுத்து வாங்கின பட்டம்

6.(இரண்டு பெண்கள் பேசிக்கொள்கிறார்கள்) இவ்வளவு வயசாகியும் ஏன் கல்யாணம் பண்ணிக்காம இருக்க
எங்கப்பா இன்னும் தாத்தாஆகிற வயசாகல்லேன்னு என் ஜாதகத்தையே எடுக்கமாட்டேன்னுட்டார்.

சினிமா..சினிமா.. தொடர் பதிவு..

இத் தொடர் பதிவில் அன்போடு என்னை இழுத்துவிட்ட கோவி க்கு நன்றி.

1.எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவு தெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

எந்த வயது என என் பெற்றோர்களைத்தான் கேட்க வேண்டும்..அதற்கு இப்போது வாய்ப்பில்லை..எனக்கும் அவசரமில்லை.!!நினைவு தெரிந்து பார்த்த முதல் படம் அமரதீபம்..உணரும்
வயதி ல்லை அப்போது.அந்த படத்தில்வரும் 'தேன் உண்ணும் வண்டு...'மறக்க முடியாத பாடல்.

2.கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
'தசாவதாரம்'.சென்னை ஐநாஃக்ஸ் தியேட்டரில்.தியேட்டர் சர்வதேச தரத்தில் இருந்தது . பட விமரிசனம் ஏற்கனவே செய்து விட்டேன்.

3.கடைசியாக அரங்கிலன்றி பார்த்த தமிழ் சினிமா எது? என்ன உணர்ந்தீர்கள்?
குசேலன். வாசு இன்னும் சிறிது மெனக்கட்டிருந்தால் இதை வெற்றிப்படம் ஆக்கி இருக்கலாம்.

4. மிகவும் தாக்கிய தமிழ் சினிமா?
பல..உடனே ஞாபகத்திற்கு வருவது...கன்னத்தில் முத்தமிட்டால்...இதைவிட அழகாக இலங்கை பிரச்னையை சொல்லி இருக்க முடியாது.ஹேட்ஸ் ஆஃப் டூ மணிரத்னம்.
அடுத்ததாக 'கற்றது தமிழ்' சொல்லலாம்..இன்றைய பிரச்னைகளை ஓரளவு எதார்த்தத்துடன் சொன்ன படம்.
'அஞ்சாதே' அனைவரும் பார்க்க வேண்டிய படம்.

5.(அ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா..அரசியல் சம்பவம்...
'என்கடமை'என்று ஒரு M.G.R.,படம்.நல்ல படம்..அந்த படம் வெளியான சமயம்..'காமராஜர் என் குரு'என்றார் M.G.R.,ரசிகர்களால்(!!!) அதை ஏற்கமுடிய வில்லை.படம் தோல்வி.
அடுத்து அசோகன்..கஷ்டப்பட்டு..தன் வாழ்நாள் சம்பாதியம் முழுதும் போட்டு எடுத்த படம்'நேற்று..இன்று..நாளை'..அந்த சமயம் M.G.R.,கட்சி ஆரம்பித்திருந்த சமயம்..தி.மு.க.வினரா
ல் ஆர்ப்பாட்டம்..படம் வெளியான தியேட்டர் திரை கிழிப்புகள்..படத்தை தோல்வி அடைய செய்துவிட்டது.அசோகன் பின் மீளவே இல்லை.
தேவையில்லா ..அரசியல்..தனிப்பட்ட மனிதர்களை அழிக்கும்போது மனம் வேதனை அடைகிறது.
(ஆ)உங்களை மிகவும் தாக்கிய தமிழ் சினிமா...தொழில் நுட்ப சம்பவம்..
விடிவெள்ளி என்று ஒரு படம்...தொழில் நுட்பம் வளாராத நேரம்..அப்படத்தில் 'கொடுத்துப் பார்..பார்..'என்றொரு பாடல் காட்சியில்..தென்னை மரத்தை ஒரு குடையைப்போல் காட்டுவார்
அப்பட ஒளிப்பதிவாளர் வின்சென்ட்.
நாடோடிமன்னன் படத்தில்..பாலம் அறுந்து விழ..அதில் கதாநாயகி யுடன்M.G.R. தொங்குவார். மறுமுனையில் அப்பாலத்தை விழாமல் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பார் இன்னொரு
M.G.R., ஒளிப்பதிவாளர் G.K.ராமு.
12 B பட எடிட்டுங்கும்..சமிபத்தில் வந்த நேபாளி பட எடிட்டுங்கும் சொல்லும் படியானவை.

6.தமிழ் சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இவற்றைவாசிக்காவிட்டால்..இன்று தமிழ் பத்திரிகைகள் எதையும் வாசிக்க முடியாது.கிசு கிசு உள்பட எல்லாவற்றையும் வாசிப்பதுண்டு.

7.தமிழ் சினிமா இசை
மிகவும் வளர்ந்திருக்கிறது.ஆனால்.வெறும் ஹார்மோனியம் மட்டுமே வைத்து பாடிய 'அத்தான்..என் அத்தான்' என்ற பாடலிலிருந்து..நாக்க முக்கா வரை..அனைத்து இசை அமைப்பாளர்களுமே இசைத்திலகங்கள் தான்.இளையராஜா..ரஹ்மான் ஆகியர்வர்களுக்கு ஸ்பெஷல் பாராட்டுகள்.

8.தமிழ் தவிர..வேறு இந்திய..உலக மொழி பார்ப்பதுண்டா?
சந்தர்ப்பம் கிடைத்தால்..எல்லா மொழி படங்களும் பார்க்கும் வழக்கம் உண்டு. சமீபத்தில் பார்த்த ஹிந்தி படம்..'தாரே ஜமீன் பர்'(நமது இயக்குநர்களாலும் இப்படி படம் எடுக்க முடியும்)
ஆங்கிலபடம்'IRONMAN'. சமீபத்தில் கொரியன் படம் ஒன்று பார்த்தேன்..சாதாரண காதல் கதைதான்.அருமையாக எடுத்திருந்தார்கள்.பெயர் மறந்து விட்டது.

9.தமிழ் சினிமா உலகுடன் நேரடி தொடர்பு உண்டா?என்ன செய்தீர்கள்?
நேரடி தொடர்பு இல்லை..ஆனால் விசு,மௌலி..போன்ற நண்பர்கள் உண்டு..Y.G.மஹேந்திரன்,S,ve.சேகர் ஆகியவர்களை நன்கு தெரியும்.மேலும் சிலரை தெரியும்..ஆனால் இன்று அவர்கள் அதை ஒப்புக்கொள்வார்களா என்று தெரியும்.
மேலும் ஒரு பிரபல இயக்குநர் 1983ம் ஆண்டு எனது 'காயத்ரி மந்திரம்'என்ற நாடகத்தில் கதாநாயகன் வேடத்தில் நடித்தார்.அவரை இரண்டு ஆண்டுகளுக்குமுன் frankfurt விமான நிலயத்தில் சந்தித்தேன்.அவர் கனடாவிலிருந்து குடும்பத்துடன் வகேஷண் முடித்து connecting ஃப்ளைட்டுக்கு காத்திருந்தார்.நான் U.S.A.,க்கு செல்ல காத்திருந்தேன்.அப்போது அவரைப்பர்த்ததும்..கொஞ்சம் கூட பந்தா இல்லாமல் என்னிடம் பேசினார்.மகிழ்ச்சியாக இருந்தது.அந்த இயக்குநர்...'ஷங்கர்'

10.(அ)தமிழ் சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
எதுவும் யார் தலையிலும் ஓடவில்லை.இளம் இயக்குநர்கள் பலர் திறமையுள்ளவர்கள்.எதிர்காலம் பிரகாசமாகவே இருக்கும்.

10.(ஆ)அடுத்த ஓராண்டில் தமிழில் சினிமா கிடையாது..மற்றும் சினிமா பற்றிய சமாசாரங்கள்..செய்திகள்..எதுவுமே பத்திரிகைகள்..தொலைக்காட்சி இணையம் உள்ளிட்டவை ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக் கொள்வோம்..உங்களுக்கு எப்படி இருக்கும்..தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
அடடா..இந்த கேள்விகேட்டவர்களுக்கு ஏன் இப்படி ஒரு கொல வெறி..என்னை விடுங்கள்..எனக்கு ஒன்றும் ஆகாது..
பொதுவாக இவை எல்லாம் இன்று இல்லாவிட்டால்..மக்கள் பைத்தியம் பிடித்து அலைவார்கள்.நாட்டில் மன நல மருத்துவர் பாடு கொண்டாட்டம்.நாட்டின் ஜனத்தொகை 200 கோடியை விரைவில் எட்டிவிடும்.அவ்வளவுதான்.

இத்தொடர் பதிவுக்கு நான் அழைப்பவர்கள்
மணிகண்டன்
நசரேயன்

Thursday, October 16, 2008

இன்று கவியரசு கண்ணதாசன்நினைவு நாள்

கவிஞர்கள் வாக்கு பொய்க்காது என்பார்கள்..கி.பி.2000 பற்றி கவியரசு என்ன எழுதினார் தெரியுமா?


கி.பி.2000
__________


ஒருநூறு கோடியாய்
மக்கட் தொகைகூடி
உணவுக்கு தத்தளிக்கும்

ஓராயிரம் கட்சி
பேதங்கள் தோன்றியே
உள்நாட்டுயுத்தம் மூளும்

பொருள்நூறு கொண்டவர்
பூட்டை உடைக்கின்ற
புரட்சியை நாடுகாணும்

பூஞ்சோலை காடுகள்
ஏதுமில்லா திந்தப்
பூமியை மக்கள் சூழும்

உருவான தொழிலெல்லாம்
உதவாது போய் எங்கும்
உற்சாக மற்றுவிடுமே

ஒளிதொன்றும் நெஞ்சிலே
இருள் தோன்று கின்றதே
உணர்கபா ரததேச மே!

சூடான இடுகையில் இடம் பெறுவது எப்படி?

பதிவர்கள் பதிவிடும் போதே ..அப்பதிவு சூடான இடுகையில் வர..என்ன தலைப்பு வைக்கலாம் என்று யோசிப்பதுண்டு.பதிவில் எழுதும் விஷயங்கள் பற்றி கவலைப் படுவதில்லை.மலையாள படம் தமிழில் டப் செய்யும் போது..வைக்கப்படும் தலைப்புகள் போல்..'அவளுடைய இரவுகள்''மாமனாரின் மன்மத லீலைகள்' இப்படி வைக்கலாம்.தமிழ்மணம் அனுமதிக்குமா தெரியவில்லை.ஆனால்...சூடான இடுகைக்கு சூடான தலைப்பு என்பது எழுதப்படாத விதியாகும்.
எனது இடுகைகள் சில சூடான இடுகையில் வருவதுண்டு..ஆனால் அப்படி வர..இடுகை இட்டு சில மணி நேரங்கள் ஆகின்றன.ஆனால்..சில நட்சத்திர பதிவர்கள்..என்ன எழுதினாலும்..அடுத்த பத்தாவது நிமிடம் ..சூடாகி விடுகிறது.
சூடான இடுகையில் வர பதிவர்களுக்கு ஏன் ஆசை?
இப்பொழுதெல்லாம்..நாளொன்றுக்கு சராசரி 270 இடுகைகள்
இடப்படுகின்றன.நம் பதிவு வந்த அரை மணி நேரத்தில் முகப்பில் இருப்பதில்லை.யாராவது பின்னூட்டமிட்டால்..வலப்பக்கத்தில் சில நேரம் இருக்கும்..இல்லையேல் அதுவும் இல்லை.அதுவே ..பின்னூட்டம் இல்லையென்றாலும்..அதிகம் பேர் பார்த்தால்..அது சூடான இடுகை.சிறிது நேரம் பதிவு இருந்துக் கொண்டே இருக்கும்.அந்த ஆசை தான் ஒவ்வொரு பதிவரையும் அதற்கு இழுக்கிறது.
அடுத்தது..பதிவிடும் நேரம் மிக முக்கியம்.நமது மென் பொருள் வல்லுநர்களுக்கு அது அலுவலக நேரமாய் இருக்க வேண்டும்.இவர்கள்தான் பதிவுலக அச்சாணிகள்.இவர்கள் படிக்காவிட்டால்..எந்த பதிவாய் இருந்தாலும் கோவிந்தா தான்.
சிலருக்கு..தொடர்ந்து பழைய பதிவுகளுக்கும் பின்னூட்டங்கள் இருந்துக் கொண்டேயிருக்கின்றன.அவை..நூறு நாட்கள் 3 காட்சிகளுடன் ஓடும் படங்களாயில்லாமல்...1000 நாட்கள் பகல் காட்சி மட்டுமே ஓடும் படங்கள் போல.
என் பதிவுகள் எல்லாம் மினிமம் காரண்டி பதிவுகள் ..
இப்படி ஒரு பதிவு போட்டு...சூடான இடுக்கைக்கான தலைப்பும் வைத்து விட்டேன்.
பார்ப்போம் இது சூடான இடுகையில் வருகின்றதா என்று.

வந்ததும்..வராததும்

1.பழனி கோயில் உண்டியலில் வசூல் ரூ.1.12 கோடியை தாண்டியது.இதில் ஒரு பக்தர் போட்டுள்ள160கிராம் எடையுள்ள தங்க யானையும் அடக்கம். (இது செய்தி)
யானை என்றதும் யார் போட்டிருப்பார்கள் என ஓரளவு யூகிக்க முடிகிறது.

2.இலங்கையில் உள்நாட்டு பிரச்னைக்கு நம் ராணுவம் தலையிட முடியாது(செய்தி)
ராஜிவ்காந்தி அனுப்பிய IPKF போலவாவது தமிழரைக் காக்க (ராணுவத்தால் !!!!) அனுப்பப்படுமா? ஸ்ரீலங்கா அரசு கேள்வி.

3.நம் நாட்டில் 7.3 லட்சம் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள்.ஆண்டுக்கு அவர்கள் மொத்த வருமானம் 180 கோடி ரூபாய் -செய்தி
அவர்களிடம் வட்டிக்கு கடன் கிடைக்குமா? மத்திய தர குடும்பஸ்தர் ஒருவர் கேள்வி

4.ராமர் இலங்கையிலிருந்து திரும்பும்போது ராமர் சேது பாலத்தை தன் அம்பாலேயே அழித்துவிட்டார்..சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு மனு -செய்தி
இதிலிருந்து ராமர் இருந்தார் என ஒப்புக்கொள்கிறார்கள் என தெரியவில்லையா? என்கிறார் r.s.s., v.h.p. தலைவர்கள்.

5.லதா மங்கேஷ்வருக்கு 80 வயது -செய்தி
அவர் குரலுக்கு என்றும் 16 என்கிறார் அவர் ரசிகர் ஒருவர்.

Wednesday, October 15, 2008

இலங்கை தமிழர் பிரச்னை...நான் விடைபெறுகிறேன்..நன்றி

இலங்கை தமிழர் பிரச்னை குறித்து..அனைத்துக் கட்சிகள் கூட்டம் நடைபெற்றதும்...அதில் மத்திய அரசுக்கு இரண்டு வார அவகாசம் கொடுப்பதாகவும்..அதற்குள் மைய அரசு இலங்கை அரசுடன் பேசி தீர்வு காண வேண்டும் என்றும் ...தவறினால் தமிழக அனைத்து எம்.பி.க்களும் பதவி விலகத்தயார் என்றும் முடிவெடுக்கப்பட்டது.இதன் தொடர்ச்சியாக கனிமொழியும்..தனது ராஜ்ய சபா உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்வதாக...ராஜினாமா கடிதத்தை கலைஞரிடம் கொடுத்துள்ளதாகத் தெரிகிறது.
இது போன்ற சமயங்களில் கலைஞரின் கரத்தை பலப்படுத்த வேண்டியது..ஒவ்வொரு தமிழனின் கடமை என்பதால்..நானும் பதிவுகள் இனி இடுவதில்லை என தீர்மானித்து..ராஜினாமா கடிதத்தை என் மனைவியிடம் கொடுத்துள்ளேன்.இரண்டு வாரங்களில் மைய அரசு முடிவெடுக்கவில்லை எனில் என் ராஜினாமா ஏற்கப்படும் என என் மனைவி தெரிவித்துள்ளார்.

வாய் விட்டு சிரியுங்க

கணவன்- டாக்டர் என்னை கிச்சன் பக்கமே போகக்கூடாதுன்னு சொல்லிட்டார்
மனைவி-அவர் சொன்னது கிச்சன் பக்கம் இல்லை..சிக்கன் பக்கம்

2.நாட்டு வைத்தியரை காதலிச்சது தப்பாப்போச்சு
ஏன்
எப்ப கல்யாணத்தை பத்த்தி பேசினாலும்..ஒரு மண்டலம் போகட்டும்னு சொல்றார்.

3.அந்த டாக்டர் கிட்ட ஆபரேஷனுக்குப் போனா..நோயாளி குடும்பத்துக்கு ஒரு சௌகரியம்
என்ன?
அமரர் ஊர்திக்கு தனியா சார்ஜ் எதுவும் கிடையாது

4.எதிர்க்கட்சித் தலைவர் என் மேல் சுமத்தும் ஊழலுக்கு பதில் சொல்லும் ஆணவம் என்னிடம் இருக்கிறது
தலைவரே..அது ஆணவம் இல்ல..ஆவணம்

5.அப்பா..நதி நீர் பேச்சு வார்த்தைன்னா என்ன?
தண்ணீருக்காக குழாயடியில் இரண்டு பேர் அடிச்சுக்கிட்டா..அது குழாயடி சண்டை..அதுவே இரண்டு மாநிலம் அடிச்சுக்கிட்டா நதி நீர் பேச்சு வார்த்தை.

6.டாக்டர் நீங்க சொன்ன மாதிரி ஒரு மாசமா..நாள்தோறும் விளையாடியும் எடைகுறையிலே
என்ன விளையாடினீங்க?
சீட்டாட்டம்தான்.

Tuesday, October 14, 2008

நாத்திகம் பேசும் மதன்..

நாத்திகம் பேசினால்..பிராமனீயம் பர்ரி பேசினால்..அல்லது பதிவிட்டால் உடனே பல கண்டனங்கள்..கையாலாகாதவன் என்ற பட்டங்கள்..ஆனால் சென்ற வார விகடனில் மதன் கேள்வி பதிலில் ஒரு பதிலில் அவர் நாத்திகவாதியாய் பேசி இருக்கிறார்..அதை கண்டித்து இதுவரை யாரும்..எழுதவோ..பேசவோ இல்லையே..ஏன்?
சிவபெருமானின் டிரஸ் புலித்தோலா? சிறுத்தைத் தோலா? என்ற கேள்விக்கு..பதிலில் அவர் சொன்னதை பாருங்கள்..
யாருக்குத் தெரியும்?அது மனிதக் கற்பனை.ஆனால்..சிறுத்தையைவிட புலி மேலானது.ஆகவே அது புலித்தோலாகத்தான் இருக்க வேண்டும்.வங்காளத்தில்தான் புலிகள் உண்டு..அங்கிருந்து புலித்தோல்கள் கைலாயத்திற்கும்(???!!!!)போயிருக்கலாம்(இது கிண்டல்தானே-நான்)ஐஸ் மலை மீது புலி,சிறுத்தை எதுவும் வாழ வாய்ப்பு இல்லை.மொத்தத்தில் இதையெல்லாம் ஒரு குறியீடாக எடுத்துக் கொள்ளுங்கள்.
மேலும் ஒரு கேள்வியில் ..நாத்திகம் பற்றி பேசும்போது..இன்னொரு மதத்தை தாக்கினால்,.காரணங்கள் கற்பிக்கப்பட்டு வாதங்கள் எடுபடாமல் போகலாம்.தவிர ,நம் மதத்தில் உள்ள மூடனம்பிக்கைகளுக்கு எதிராக போராடிய பிறகு,மற்ற மதங்களுக்குப் போகலாம்.ஆனால் ..எல்லா மதங்கலும் இதைப் பின்பற்றினால் பண்பாக(??!!)இருக்கும்.
இதைத்தவிர....பூஜை,புனஸ்காரங்கள் எல்லாம் மற்றவர்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்காக புத்திசாலிகள் கண்டுபிடித்த யுக்தி..என ஜாபாலி ராமனிடம் நாத்திக வாதம் புரிவதை தேவையில்லாமல் இங்கு சொல்லி இருக்கிறார்.
மாமியார் உடைத்தால் மண்குடமா??

ரஜினி அரசியல் பிரவேசம் இல்லை..தலைவர்கள் கருத்து

கலைஞர்- ரஜினியின் நடவடிக்கைகள் பாராட்டப்பட வேண்டியவை.ஒரு நடிகன் தன் எல்லையை உணர்ந்துள்ளார். உடன்பிறப்பே இதிலிருந்து அவர் நம்மை மறைமுகமாக ஆதரிக்கிறார் என்று இறுமாப்புள்ளவர்களுக்கு விளங்கவில்லை என்றால் ..உனக்குமா விளங்கவில்லை.
ஜயலலிதா-இவர் அரசியலில் வந்திருந்தால்..தமிழகத்தை ஆண்டவனால் கூட காப்பாற்றியிருக்க முடியாது.என்னால் மட்டுமே முடிந்திருக்கும்.,நாளை தொண்டர்கள் போயஸ் தோட்டத்தில்..என் வீட்டில் மின்சாரம் இல்லாததைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் பண்ணுவார்கள்.
காங்கிரஸ்-(தலைவர்கள் அதிகம் உள்ளதால் ஒரு குறிப்பிட்ட தலைவர் தன் பெயர் வெளியிடுவதை விரும்பாமல்)இந்த விஷயத்தில் தனிப்பட்ட முறையில் கருத்து சொல்வதைவிட அன்னை சோனியாவின் கருத்தே எங்கள் கருத்து.
விஜய்காந்த்-ரஜினியின் அறிக்கை கருணாநிதியின் சதிவேலைதான்..வரும் தேர்தலில் மக்கள் எனக்கு வாக்களித்து இதை நிரூபிப்பார்கள்.
ரஜினி ரசிகன்- அவர் மனதில் ஏதோ இருக்கிறது..கண்டிப்பாக எங்கள் உணர்வுகளை அவர் புரிந்துக் கொள்வார்..சத்யநாராயணன் பார்த்துக்கொள்வார்.நிச்சயம் தலைவதான் அடுத்த முதல்வர்.
பி.வாசு-அப்பாடா...அவ்வலவுதான்னு நினைச்சேன்..கண்டிப்பா அவரை வைச்சு இன்னோரு படம் இயக்கிடுவேன்.
ரஜினி-பாபா படம் முடிஞ்சதும் நுழைய நினைத்தேன்..படம் அவுட்..இப்போ குசேலன் வந்ததும் நுழைய நினைச்சேன் ..ஃப்ளாஃப்..அதனாலே அடுத்து எந்திரன் வந்ததும் பார்த்துக்கலாம்.
பொதுமக்கள்-அப்பாடா...இன்னொரு கட்சி கூப்பாடிலிருந்து தப்பித்தோம்
ராமதாஸ்-கலைஞர் ஆட்சி குறைகளை ஆராய்ந்து வருவதால் இப்பொதய்க்கு கருத்து இல்லை.ஆனால் மக்கள் நடிகர்களை நம்பக்கூடாது என்பதில் உறுதியாய் இருக்கிறோம்.

((பேட்டி-நமது 'சரடு நிருபர்'))

Monday, October 13, 2008

பிராமணர்களும்..தனம் படமும்..

தனம் திரைப்படத்தை இப்போதுதான் dvd ல் பார்த்தேன்.,
படம் எடுத்த இயக்குநர் யாரை திருப்தி படுத்த வேண்டும் ..என்று படம் எடுத்தாரோ..தெரியாது.
படத்தில் தேவையில்லாமல்..ஒரு பிராமண குடும்பத்தை இழுத்துள்ளார்.
அது ஆசாரமான குடும்பமாம்...அவர்கள் ஜோதிடர்..பையனுக்கு தாசி பெண் மருமகளாக வந்தால் லக்ஷ்மி காடாக்ஷம் வரும்?! என சொல்கிறார்.ஏனென்றால் அவர்களது பையன் ஒரு தாசியை காதலிக்கிறான்.,குடும்பம் அதை ஏற்கவில்லை.அந்த ஜோதிடரும் ..அவளிடம் ஒரு முறை போக முயன்றபோது.. அவள் மறுத்து விட..அவளை பழி வாங்க இப்படி ஜோதிடம் சொல்கிறார்.
லக்ஷ்மி வருவாள் என்றதும் ..அந்த குடும்பம் சம்மதித்து விடுகிறதாம் ??!!
அவர்கள் வீட்டு எதிர் வீட்டு திண்ணையில்..ஒரு பிராமண கோஷ்டி..பிறன் மனை என்று தெரிந்தும்..அந்த வீட்டு மருமகளைப் பற்றி பேசுவதும்..ஆபாசமாக பேசுவதும்..
இதுதான் அவர்களின் வேலை என்பது போல் காட்டப்படுகிறது.அந்த பிராமணர்களின் மனைவிமார்தான் வீட்டுப்பொறுப்பை ஏற்று..கடைக்கு செல்வது போன்ற தொழில்களை செய்கிறார்கள்.இவர்கள் வெறும் வெத்து வேட்டு.
இப்போது மீண்டும் ஜோதிடர்..அந்த பெண்ணை நெருங்குகிறார்.அவள் மறுத்து விட...குடும்பத்தாரிடம்..அவல் மூலம் பிறந்த பெண் குழந்தையால் குடும்பத்துக்கு ஆபத்து எனக்கூறி..குழந்தையை கொன்றுவிடச் சொல்கிறார்.அப்படியே நடக்கிறது.பின் அந்த பெண் குடுப்பத்தையும்..அந்த ஜோதிடரையும் விஷம் வைத்துக் கொல்கிறாள்.
என் கேள்வியெல்லாம்
குசேலன் படத்தில்..நாவிதர்களை காமெடி என்ற பெயரில் கேலி செய்திருக்கிறார்கள் என அவர்கள் போராட்டம் நடத்தினார்கள்.
தனம் படத்தில் ஜோதிடர்களை கேவலப் படுத்துகிறார்களே..அவர்கள் ஏன் பொங்கி எழவில்லை.
ஜாதியைக்காட்டாமல்..ஒரு குடும்பத்தைக் காட்டி இருக்கலாமே..ஏன் ஒரு பிராமிண் குடும்பத்தைக் காட்ட வேண்டும்? இதை ஏன் அவர்கள் எதிர்க்கவில்லை?
படம் முழுதும் அந்த பிரிவினரை கிண்டல் செய்ய என்றே எடுக்கப்பட்டதாய் தெரிகிறது..தேவையில்லாமல்.எந்த ஜாதியை இழுப்பவர்கள் ஆனாலும்.அவர்கள் கண்டிக்க பட வேண்டியவர்களே!!.

காலம் மாறுது..ரசனை மாறுது..

காலம் மாறிக்கொண்டேருக்கிறது..
தலைமுறைகள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
ரசனையும் மாறிக்கொண்டே இருக்கிறது.
பாலசந்தரை அன்று ரசித்த தலைமுறை..இன்றுள்ள இயக்குநர்களை ரசிக்கமுடியவில்லை.
இன்றுள்ள தலைமுறை பாலசந்தரையும்..பாரதிராஜாவையும்..பாலு மகேந்திராவையும் ரசிப்பதில்லை.
அதனால்தான் சமீப காலங்களில் இவர்கள் படங்களால் வெற்றி கிடைப்பதில்லை.
இதுதான் யதார்த்தம்..இதை ஒப்புக்கொள்ள முடியாதவர்கள்..ஒப்பிட்டுப் பார்க்கிறார்கள்.
அந்த நாளில் 30..35..பாட்டுக்களுடன் தியாகராஜ பாகவதரை ரசித்தார்கள்..
அடுத்த தலைமுறை..சிவாஜியையும்..எம்.ஜி.ஆரையும் ரசித்தார்கள்
பின் வந்த தலைமுறை ரஜினியும் ,கமலையும் ரசித்தார்கள்
இப்போது கில்லியும்,சாமியும் ரசிக்கப்படுகின்றன.
சுதர்சனம்,எஸ்.எம்.எஸ்.,ஜி.ராமநாதன் ரசிக்கப்பட்டனர்.
விஸ்வனாதன்-ராமமூர்த்தி,கே.வி.மஹாதேவன் பின்னர் வந்தனர்.
இளையராஜா..ரஹ்மான்..பரத்வாஜ்..வித்யாசாகர்..யுவன்..ரசனைகள் மாறிக்கோண்டே இருக்கின்றன.
பீம்சிங்,கோபாலகிருஷ்ணன்,ஸ்ரீதர்,பாலச்ந்தர்,பாரதிராஜா.மகேந்திரன்,பாலுமஹேந்திரா..இப்போது..ஹரி,கௌதம்,அமீர் இப்படி
இதை அனைவரையும் புரிந்துக் கொள்ள வேண்டும்.
கடைசியாக..நடிகர்கள் சிலர் மட்டும்..இரண்டு..மூன்று தலைமுறைக்கும் நிற்கிறார்கள்.
அவர்கள்..சிவாஜி,எம்.ஜி.ஆர்., ரஜினி,கமல் ஆகியோர்தான்.

Sunday, October 12, 2008

வாய் விட்டு சிரியுங்க..

1.மாப்பிள்ளை வீட்டோட இருக்கிறார்னு வருத்தப் படுவியே..இப்ப எப்படி இருக்கிறார்
வீட்டோட அப்பாவா மாறிட்டார்

2ஜோசியர்-உங்க ஜாதகப்படி ..சன்னதி தெருவில இருக்கிற 54ம் நம்பர் வீட்டுல இருக்கிற பொண்ணு மனைவியா இருக்க வாய்ப்பிருக்கு
கேட்பவர்-அது எப்படி உங்களால விலாசத்தைக்கூட கரக்டா சொல்ல முடியுது
ஜோசியர்-என் வீட்டு விலாசம் எனக்குத் தெரியாதா?

3.நேற்று ராத்திரி 12 மணிவரைக்கும் தூக்கம் வரல்லே கடைசில ஆவி வந்ததும்தான் தூக்கம் வந்தது
என்ன சொல்ற
கொட்டாவியைச் சொன்னேன்

4பெண்ணுக்கு லேடின்னு ஏன் இங்கிலீஷ்ல சொல்றோம் தெரியுமா?
ஏன்?
லேடி யை திருப்பிப்படி.அவங்க எல்லாவற்றிலும் டிலேயா இருக்கறதால

5.அவன் அண்டப்புளுகன்னு எப்படி சொல்ற
அவன் ஊர்ல கரண்ட் கட்டே இல்லைன்னு சொல்றான்.

6.டாக்டர் நான் டூட்டில இருக்கறப்போ தூங்கிடறேன்
அதனால தப்பு இல்ல..ஆமாம் என்ன வேலை செய்யறீங்க?
பஸ் டிரைவராயிருக்கேன்

Saturday, October 11, 2008

பதிவர்களுக்கு ஒரு வேண்டுகோள்

நம் எண்ணங்களையும்...செய்திகளையும் ..நிகழ்வுகளையும் பதித்து வைக்க நமக்கு இப்போது blogsம்..இன்டெர்நெட் உள்ளன.
நல்ல எழுத்துத் திறமை இருந்தும்..நம் எழுத்துக்கள் அச்சேறாததை ..நமது தாகத்தை.. ஓரளவுக்கு தணித்துக்கொண்டிருக்கின்றன இணைய இதழ்களும்...வலைப்பூக்களும்.
அதை நல்லமுறையில் பயன் படுத்திக்கொள்ள வேண்டியது நமது கடமை.
ஆனால் அப்படியா நடந்துக் கொண்டிருக்கின்றது இன்று?
ஒரு கணினி கையில் கிடைத்து விட்டது..ஒரு blog ஆரம்பித்துவிட்டோம் என்பதற்காக எதை வேண்டுமானாலும் எழுதுவதா?
சமீப காலமாக இந்த அநாகரிக போக்கு அதிகரித்துக் கொண்டிருக்கிறது.
பார்ப்பன ஜாதி என ஜாதியத்தை தூற்றுவதை விட்டு விட்டு..பார்ப்பனியத்தை தூற்றுங்கள்..இது சமுதாயத்தை திருத்தும் வழியாகக்கூட அமையலாம்.
ஒரு அரசியல்வாதி..நேர்மையாக செயல் படவில்லையானால்..அதை எழுதுங்கள்.
அவன் ஊழலை எழுதுங்கள்.அவனுக்கு கோடி கோடியாக பணம் எப்படி வந்தது என வினா எழுப்புங்கள்.
அவனது தனிப்பட்ட அவன் வாழ்வை விமரிசிக்காதீர்கள்.
ஒரு நடிகனின் நடிப்பை விமரிசியுங்கள்..அவன் நடிக்கும் போது..தண்ணி அடித்தான்..சிகரட் பிடித்தான் என சொல்லாதீர்கள்.அப்படி செய்தது அவன் ஏற்றுக்கொண்டுள்ள பாத்திரம்.
அவன் கோடியாக சம்பாதிக்கிறான் என்றால்..அது அவன் உழைப்புக்கு கொடுக்கப்படும் கூலி..அதை விமரிசிக்க நமக்கு உரிமை இல்லை.
உங்கள் மேலதிகாரி..சாதாரணமாக ..குரலை உயர்த்தி பேசினாலே..மனம் வருந்தும் நாம்...
நடிப்புத் தொழில் செய்பவனை..செருப்பால் அடிப்பேன்..என்றெல்லாம் சொல்வது..பண்பாடற்ற செயல்.
ஒரு சிறு நிகழ்ச்சி ஒன்றை கூற ஆசைப்படுகிறேன்..
ஒரு சமயம் தேர்தலில் தி.மு.க. வேட்பாளருக்கு ஆதரவாக.என்.எஸ்.கே.பேசினார்..அவர் பேசும்போது எதிர்க்கட்சி வேட்பாளரை புகழ்ந்தாராம்..
அவர் சிறந்த மருத்துவர்,ஏழைகளிடம் பணம் வாங்காதவர்,இறக்கும் நிலையில் உள்ள பலரை காப்பாற்றி இருக்கிறார்..என்றெல்லாம்.
அனைவருக்கும் குழப்பம்...கடைசியில் சொன்னார்..'அப்படிப்பட்ட மனிதரை நீங்கள் உங்களிடமே வைத்துக்கொள்ளுங்கள்..ஏன்..பாராளுமன்றத்திற்கு அனுப்புகிறீர்கள்'என்று .
அவருக்கு ஓட்டுப் போட வேண்டாம் என்பதையும் எவ்வளவு பண்போடு சொன்னார் பாருங்கள்.
ஆகவே ..தயவு செய்து..அநாகரிகமாக எழுதுவதை தவிர்ப்போம்..
நம் காலத்தில் நமக்குக் கிடைத்துள்ள இந்த வசதியை நல்லமுறையில் பயன்படுத்திக் கொள்வோம்.

Friday, October 10, 2008

இலங்கை தமிழர் பிரச்னை பற்றி அதி புத்திசாலி அண்ணாசாமி

அதி புத்திசாலி அண்ணாசாமிக்கு வருத்தம் அதிகமாயிடுச்சாம்.,காரணம் கேட்டா சொல்றார்...
இப்ப தமிழ்நாட்டிலே அத்தனைக் கட்சியும் இலங்கை தமிழர் பிரச்னை பத்தித்தான் பேசறாங்க..உண்மையிலேயே தமிழர்கள் மீது இவர்களுக்கு இவ்வளவு பற்று இருக்கே என்று நினைத்து முடிக்கும் முன்னரே பிரச்னைகளும் ஆரம்பம் ஆயிடுச்சு.
தமிழர் பிரச்னைன்னதுமே எல்லாக் கட்சிகளும் குரல் கொடுக்கின்றன.அப்போது அனைத்துக் கட்சிக்கூட்டத்தை முதல்வர் கூட்டினால் மட்டும் நான் கலந்துக்க மாட்டேன்னா என்ன அர்த்தம்.ஒரு அரசை முன்னின்று ந்டத்துபவர் இன்று..கலைஞர்..பிரச்னையோ பொதுவானது..அப்போ எல்லாக் கட்சியும் கலந்துக்கொண்டு தங்கள் கருத்தை கூறட்டும்.முடிவுகளை எடுக்கட்டுக்..அதை விட்டு விட்டு...
ஆமாம்...இவங்களுக்குள்ள ஒற்றுமை இருந்தா..என்னிக்கோ காவேரி பிரச்னை தீர்ந்திருக்கும்...முல்லை பெரியார் பிரச்னை தீர்ந்திருக்கும்..ஓகேனக்கல் பிரச்னை தீர்ந்திருக்கும்.,
அரசியல் ஆதாயத்தைத் தேடும் கட்சிகளும்..ஈகோ பிரச்னையும்..பகை உணர்ச்சியும் இருக்கிறவரை நாம உருப்படமுடியாது.,
தமிழா..இதுதான் உன் தலை எழுத்துன்னா...யார் வந்து அதை மாற்றமுடியும்?

Thursday, October 9, 2008

விஜய்காந்த்திற்கு ஒரு கடிதம்

விஜய்காந்த் அவர்களுக்கு
வணக்கம்.,
நீங்களும் ஒரு கட்சி ஆரம்பித்து...எம்.எல்.ஏ.,ஆகவும் ஆகிவிட்டீர்கள்.அதை பாராட்டும் அதே நேரத்தில்..இப்போதெல்லாம் உங்கள் பேச்சில் ஆணவம் தொனிக்க ஆரம்பித்து விட்டது.,
அதற்கேற்றாற்போல லாயோலா கல்லூரியினர் எடுத்த கருத்துக்கணிப்பில் உங்கள் கட்சிக்கு மக்கள் ஆதரவு 3ம் இடத்தில் இருக்கிறது என்றதும்..உங்களுக்கு சனி உச்சத்தில் வந்துவிட்டது.,கருத்துக்கணிப்பெல்லாம் தவறாக ஆகி விடுவதுண்டு.கோடிக்கணக்கான வாக்காளர்களில் ஒரு சில ஆயிரம் பேரிடமே வாக்கெடுப்பு நடைபெறுகிறது.அதை மறக்க வேண்டாம்.,
தேர்தலில் கட்சிகள் ஜெயிப்பது என்பது..அக்கட்சிகளுடன் வைக்கப்படும் கூட்டணி.,எந்த கட்சியும் சேராத வாக்காளர்களின்..தேர்தல் நாளன்று எடுக்கும் முடிவு ஆகியவை பொறுத்தே இருக்கிறது.,இதை உணராமல் பெரிய தலைகள் கூட தவறு செய்வதுண்டு.,2001ல்..தனது முந்தைய ஆட்சி சிறப்பாக செயல்பட்டதால்..இம்முறை ஜெயித்து விடலாம் என்ற கலைஞரின் எண்ணம் பொய்த்தது.,அ.தி.மு.க., கூட்டணி பலம் பொருந்தியதாய் இருந்ததால் வென்றது.,இதை அறிந்த கலைஞர் 2006ல் பலமான கூட்டணி அமைத்தார்.தி.மு.க.ஆட்சிக்கு வந்தது.,இதை ஏன் சொல்கிறேன் என்றால்..உங்களுக்கு யானை பலம் இருப்பதாக கனவு கண்டால் அது தவறு.,மக்களிடம் தான் பலம் இருக்கிறது. அவர்கள் ஆதரவு பெற அவர்கள் மனதில் இடம் பிடிக்க வேண்டும்.,

கலைஞருடன் பலருக்கு கருத்து வேறுபாடு உண்டு.,அவரால் தூற்றப்படும் பார்ப்பனர்கள் வாக்குகள் கூட தி.மு.க.விற்கு பெருமளவில் விழுகிறது.,இது நான் முன்னமே சொன்னபடி...தேர்தல் அன்று..மக்கள் தேர்ந்தெடுக்கும் முடிவு.,கலைஞரின் நிர்வாகத் திறமை.,கட்சியை கட்டுக்கோப்பாக வைத்திருக்கும் திறன் இவைகளுக்கு விழும் வாக்குகள்.அவர் ஒரு ராஜதந்திரி.,70 வருஷங்கள் பொது வாழ்வில் இருந்தவர்.,பல தில்லி தலைவர்களையும்..மாநில தலைவர்களையும் பார்த்தவர்.,

அப்படிப்பட்டவர்..நேற்று முளைத்த உங்களை அழிக்க வடிவேலு போன்றவர்களை உபயோகப்படுத்திக் கொள்கிறார்..என்று நீங்கள் சொல்வதைப்பார்த்து..சிரிப்புத்தான் வருகிறது.,இது உங்கள் அனுபவக் குறைவையே காட்டுகிறது.
தமிழுக்காக தண்டவாளத்திலே தலை வைக்கிறேன் என்று ரயில் நிற்கும் போது த்லையை நீட்டறதெல்லாம் பெரிய விஷயமா?என்று எள்ளி நகையாடுகிறீர்கள்.
தமிழன்னை அக்கலைஞனுக்கு..கவிதை எழும் திறன்,கதை,வசனம்,எழுதும் திறன்,பிறமொழி காவியத்தை தமிழ் படுத்தும் திறன்,பேச்சுத் திறன் என வாரி வழங்கியிருக்கிறார்.ஒரு சிலரிப்போல 'ழ"க்கூட உச்சரிக்கத் தெரியாதவர் அல்ல இவர்.
தி.மு.க.,இரண்டுமுறை பிளவுப்பட்டும்..(முதல்முறை அ.தி.மு.க.உருவானது அடுத்த முறை ம.தி.மு.க.) அதற்கான தொண்டர்களை இழக்கவில்லை.,
கலைஞரின் நள்ளிரவு கைதுக்கூட கேலி செய்யப்பட்டாலும்(ஐயயோ..கொலை பண்றாங்கப்பா)..அதிலிருந்தது கலைஞரின் ராஜதந்திரம்.அவர் கைதைப் பார்த்த அனைத்து மக்களும் கட்சி வேறுபாடின்றி இதைக் கண்டனம் செய்து...தங்கள் ஆதரவை கலைஞருக்கு காட்டினர்.
அப்படிப்பட்ட ஒரு தலைவனை..வயதிற்குக்கூட மரியாதைத் தராமல்...இனி கலைஞர் இல்லை கருணாநிதின்னு தான் கூப்பிடப்போறேன் என்கிறீர்கள் ஆணவத்தோடு.
நீங்கள் எப்படி வேண்டுமானாலும் சொல்லுங்கள்....
கடைசியாக ஒன்று சொல்ல விழைகிறேன்..
'பெருக்கத்து வேண்டும் பணிவு"

இப்படிக்கு
அப்பாவி தமிழன்

Wednesday, October 8, 2008

M.G.R., ன் உண்மையான வாரிசு யார்?

M.G.R.,
தமிழர்களால் மறக்க முடியாத..பிறப்பால் ஒரு மலையாளியானவர்.
வந்தாரை வாழவைக்கும் தமிழகத்தில்..வந்து..தமிழ் மக்களின் தலைவர்களில் ஒருவராகி..ஓரளவு திறம்பட ஆட்சி புரிந்து மறைந்த நடிகர்..அரசியல்வாதி.
பல நடிகர்களுக்கு முதல்வர் பதவி கனவு இவரால் ஏற்பட்டது..ஆனால் இவர் கடந்து வந்த பாதை கரடுமுரடானது என்பதை இவர்கள் ஏன் நினைப்பதில்லை.
அடிப்படையில் காங்க்கிரஸ்காரரான் இவர்..அண்ணாவின் கொள்கைகளால் கவரப்பட்டு தி.மு.க.வில் இணைந்தார்.அதற்குபின்..அண்ணாவாலேயே எம்.ஜி.ஆர். வந்து முகத்தைக் காட்டினாலே ஒட்டு கிடைக்கும் என பாராட்டப் பட்டார்.
எம்.ஆர்.ராதாவால் தனிப்பட்ட சில காரணங்களால் சுடப்பட்ட இவரது புகைப்படத்தைப் போட்டு தி.மு.க. தேர்தலில் ஓட்டுக் கேட்டது.
இவர் வேறு..கட்சி வேறு என ரசிகர்கள் நினைக்கவில்லை.
ஒரு சமயம் இவரே..'காமராஜர் என் தலைவர்..அண்ணா என் வழிகாட்டி'என்றபோது மக்களால் அதை ஏற்றுக்கொள்ளமுடியவில்லை.
அந்த அளவு கட்சியில் ஒன்றிய இவர் கட்சியின் பொருளாளரும் ஆனார்.அண்ணாவின் மறைவுக்குப் பின் நெடுஞ்செழியன் தான் முதல்வராக ஆகியிருக்க வேண்டும்.,ஆனால் கலைஞர் முதல்வர் ஆனதற்கு இவரும் ஒரு காரணம்.ஆனால் அப்பொதெல்லாம் இவர் தனக்கு அமைச்சர் பதவி வேண்டும் என்று எல்லாம் கேட்டதில்லை.
கட்சியின் பொருளாளர் என்ற முறையில் கட்சியின் கணக்கு கேட்ட போது..கலைஞரால் அதை பொறுத்துக்கொள்ள முடியவில்லை.தி.மு.க. விலிருந்து விலக்கப்பட்டார்.உடன் இவர் அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.பின் அவர் உயிரிருந்தவரை வெற்றி முகம்.
படுத்துக்கொண்டே ஜெயிப்பேன் என்ற காமராஜரையே தோற்கடித்த மக்கள் உண்மையிலேயே படுத்துக் கொண்டு ஜெயிக்கவைத்தது இவர் ஒருவரைத்தான்.
முன்னாள் ஜனாதிபதி கிரி அவர்கள் மறைந்த போது முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர்.,மயானபூமிக்கு செல்கிறார்.அங்கு வந்திருந்த எதிர்க்கட்சி தலைவரான கலைஞர் கடைசியில் நின்றுக்கொண்டிருந்தார்..அவரைக்கூப்பிட்டு தன் பக்கத்தில் நிற்க வைத்துக்கொண்டார்.அந்த பண்பு இன்று திராவிட கட்சியினரிடையே இல்லையே ஏன்?
இவர் மறைவுக்குப் பின்..கட்சி இரண்டாக உடைந்தது..இவர் மனைவி ஜானகி அணி,ஜெயலலிதா அணி..
எம்.ஜி.ஆரால் துவக்கப்பட்ட கட்சி உடைந்ததை அவர்கள் தொண்டர்களால் ஏற்க முடியவில்லை.இரண்டு அணியும் மீண்டும் ஒன்றானதுமே மக்கள் கட்சியை மீண்டும் அங்கீகரித்தனர்.
இன்றும் பல கிராம மக்களிடையே எம்.ஜி.ஆர்.கட்சிதான்..இரட்டை இலை எம்.ஜி.ஆர்.சின்னம் இதுதான் அ.து.மு.க.
சரி விஷயத்திற்கு வருவோம்..அவர் போல வரலாம் என பல நடிகர்கள் கட்சி ஆரம்பித்தனர்..ஆரம்பிக்கின்றனர்..
பாக்யராஜ்..தான் தான் அவர் வாரிசு என ஒரு கட்சி ஆரம்பித்தார்..நிலை?
டி.ராஜேந்திரன் கட்சி பெயரளவில் இருக்கிறது
சரத்குமார் கட்சி
விஜய்காந்த் கட்சி
கார்த்திக் கட்சி
ரஜினியை ரசிகர்கள் எதிப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
விஜய்க்கும் ஆசை வந்திருக்கிறது.
இவர்களெல்லாம்..நடிப்பு சக்ரவர்த்தி சிவாஜி அவர்களே ஒரு கட்சி ஆரம்பித்து தோல்வி கண்டதை மறந்துவிடக்கூடாது.

ஆமாம்..இன்றைய நிலையில் எம்.ஜி.ஆர்.வாரிசு யார்...என் முன் பதிவு ஒன்றை மீண்டும் கீழே கொடுத்துள்ளேன்.

எம்.ஜி.ஆர். ..உண்மையான வாரிசு யார்?

அண்ணாவின் மறைவிற்குப்பின் சில ஆண்டுகள் கழிந்து தி.மு.க. உடைந்து தோன்றிய கட்சி அண்ண திராவிட முன்னேற்ற கழகம்.அந்த சமயத்தில் பல திராவிட கட்சிகள் அண்ணாவை சொந்தம் கொண்டாடின.(அண்ணாவின் மனைவியையும்,குடும்பத்தையும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை என்பது வேறு விஷயம்).எம்.ஜி.ஆர்.தனிப்புகழ்ப் பெற்று ஆட்சியைப் பிடித்ததும் ..நான் தான் அவர் வாரிசு..என அவரே சொல்லி விட்டார் என்றார் பாக்கியராஜ்.(வசதியாக சினிமாவில் தன் வாரிசு என்று சொன்னதை மறைத்து விட்டார்).பின்,சத்யராஜ் சில படங்களில் எம்.ஜி.ஆர்.அணிவதுபோல உடைகளை அணிந்து அவரது பாணியில் நடித்தார்.திருனவுக்கரசர் எம்.ஜி.ஆர்.அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஆரம்பித்தார்.ஆர்.எம்.வீரப்பன் எம்.ஜி.ஆர்.கழகம் ஆரம்பித்தார்.
இது எல்லாம் பழங்கதை.தமிழக கட்சிகளின் தற்போதைய நிலை.....
விஜயகாந்த்- தன்னைத்தானே கறுப்பு எம்.ஜி.ஆர்.எனக் கூறிக்கொண்டார்.தன்னை அவர் வாரிசு என்றார்.இப்படி சொல்வதால் மக்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற காலம் போயிற்று.சினிமாவில் நல்லவராக நடிப்பவர்கள் அனைவரும் நல்லவரல்ல என மக்கள் உணர்ந்துக் கொண்டார்கள்.எம்.ஜி.ஆர்.வாரிசு என்று சொல்லிக்கொள்ளும் இவர்..மதுராந்தகம் அருகே 403 ஏக்கரில் பண்ணை வீடு வைத்துள்ளார்.(நில உச்ச வரம்பு சட்டப்படி ஒருவர் 15 ஏக்கருக்கு மேல் வைத்திருக்கூடாது)அதில் 30ஏக்கர் புறம்போக்கு.இதை அரசு கையகப்படுத்தியுள்ளது இப்போது.இப்படிப்பட்டவர் அவர் வாரிசா?
சரத்குமார்- சமீபத்தில் கட்சி ஆரம்பித்த இவர் தன்னை எம்.ஜி.ஆர். என நினைக்கிறார்.இது வேண்டுமானால் அரசியல் கவர்ச்சியை உண்டாக்கலாம்.ஆனால் மக்களிடம் மாற்றத்தை ஏற்படுத்தாது.
ஜெயலலிதா-எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி இவரிடம் இருக்கலாம்.அதனால் இவர் அவரது வாரிசாக முடியுமா?இவர் உண்மையிலேயே வாரிசு என்றால்..அவர் மறைந்ததும் கட்சி உடைந்த போது இவர் தலைமை வெற்றி பெற்றிருக்க வேண்டுமே..மீண்டும் கட்சி இணைந்ததும் தானே வெற்றிப் பெற்றார்.இது எம்.ஜி.ஆர்.ஆரம்பித்த கட்சி.,எம்.ஜி.ஆரின் சின்னம் இரட்டை இலை..இதுதான் இன்றுவரை அவருக்கு துணை இருக்கிறது.விஜய்காந்த் தான் வாரிசு என்றதும் தான் ஜெ விழித்துக்கொண்டார்.உடன் ராமாபுரம் சென்றார்..தான் தான் வாரிசு என்றார்.
ஆனால்..இவர்களில் யார் உண்மையான வாரிசு?
யாருமே இல்லை..
ஒரு அண்ணாதான்...
ஒரு எம்.ஜி.ஆர்.தான்
மக்கள் மட்டுமே இவர்களது வாரிசுகள்.

Tuesday, October 7, 2008

சித்ரான்னம் 7-10-08

1. ரஜினி வீட்டு கொலுவிற்கு..தயாளு அம்மாளும்,துர்காவும் சென்றார்கள்
(இது செய்தி)
விஜயதசமிக்கு ரஜினி கட்சி ஆரம்பிப்பாரா..இல்லையா என்பது தெரியும் என்றார்கள்
அதற்கும் இதற்கும் சம்பந்தம் இருக்காது என நம்புவோம்.

2.கலைஞர் இலங்கை தமிழர் பிரச்னைப் பற்றி பிரதமருடன் தொலை பெசியில் பேசியதாகவும்..பிரதமர் நாத் தழுதபடி ஆவண செய்வதாக கூறியதாக கலைஞர் பொதுக்கூட்டத்தில் பேச்சு.,
(எப்பவும் முகத்தை பாவமாக வைத்துக்கொண்டிருக்கும் பிரதமர்..இப்பொழுது பேசக்கூட முடியாத நிலையில் இருக்கிறார் போல இருக்கிறது )

3.சிரஞ்சீவி கட்சியில் இப்பவே பாராளுமன்ற தேர்தலுக்கு நிற்க இரண்டு லட்சம் பேர் மனு கொடுத்துள்ளனர்
(மொத்த தொண்டர்களும் மனு கொடுத்துவிட்டனர் போல இருக்கிறது)

4.தமிழகத்தில் இன்னும் 6 மாதங்களுக்கு மின் வெட்டு தொடரும் என மத்திய மின் துறை அமைச்சர் ஜெயராம் ரமேஷ் கூறினார்
(அதற்குப் பின்....மக்களுக்கு அதுவே பழகிவிடும் என்கிறாரோ)

5.அரசுப்பணியில் இருக்கும் மகளிரின் பேறுகால விடுமுறையை 6 மாதங்களாக உயர்த்தியது மத்திய அரசு
(பார்லிமெண்டில் பெண்கள் இட ஒதுக்கிடு 33% என்ன ஆயிற்று என யாரும் கேட்கக்கூடாது இப்போதயக்கு)

6.கேப்டனின் விருதகிரி படத்தில் சிலரை மறைமுகமாக டபாய்க்கும் பெயர்கள் கொண்ட பாத்திரங்கள் இருக்குமாம்
(வடிவேலுவை வெடிவேலு என ஒரு கேரக்டர் ஆக்கிடுவாங்களோ)

பொருளாதார சீர்குலைவுக்கு ரஜினி போன்றோரே காரணம்- புஷ்

சில மாதங்க்களுக்கு முன்..இந்தியர்கள் சத்தான உணவு சாப்பிட ஆரம்பித்து விட்டார்கள்..அதுதான் விலைவாசி ஏற்றத்திற்கு காரணம் என்று சொன்ன புஷ்..நேற்று நம் பத்திரிகைக்கு பேட்டி அளித்த போது நிருபர் கேட்ட கேள்வியும் ..அதற்கான புஷ் அளித்த பதில்க்ளும்..

நிருபர்-அமெரிக்க பொருளாதார சீர்குலைவுக்கு காரணம் என்ன?

புஷ்-அதற்கான முழு காரணமும் இந்தியர்களே

நிருபர்-எப்படி சொல்கிறீர்கள் ..அதற்கான ஆதாரம் ஏதேனும் உள்ளதா?

புஷ்-நான் ஒரு விஷயத்தைச் சொன்னாலே நீங்கள் புரிந்துக் கொள்வீர்கள்

நிருபர்-சொல்லுங்கள்

புஷ்-தமிழக சூப்ப்ர் ஸ்டார் ரஜினி ..நடித்த சிவாஜி படம் பார்த்தேன்..அதில் அவர் 20வருஷங்கள் இங்கு வேலைப்பார்த்து 200கோடி சம்பாதித்து இந்தியா எடுத்துச் சென்றுள்ளார்.அதாவதுகிட்டத்தட்ட
5 கோடி அமெரிக்கன் டாலர்ஸ்.இது ஒருவர் கணக்கு.இதுபோல எவ்வளவு இந்தியர்கள் எவ்வளவு பணங்களை இங்கிருந்து எடுத்துச் சென்றிருக்கிறார்கள்.இப்போது உங்களுக்கு புரிந்ததா? என்றார்.

நம் சரடு நிருபர் விடை பெற்றார்.

Monday, October 6, 2008

சத்தியம் தவறிய ராமதாஸ்

தமிழக மக்களிடையே இருக்கும் கட்சி வெறி ஒழிய வேண்டும்..
இரண்டாவதாக..இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் அவரவர் ஜாதியை மறந்து விட வேண்டும்
என கடவுள் தன் முன் தோன்றினால் தான் கேட்கும் வரமாயிருக்கும் என்ற ராமதாஸிடம்...
உங்களுக்கு வாழ்க்கை முடிய 24 மணி நேரமே உள்ளது என வைத்துக் கொள்ளுங்கள்,
அந்த கடைசி நிமிடங்களில் என்ன செய்வீர்கள் என்று கேட்டதற்கு
'என் மனைவியைக் கூப்பிட்டு..'நான் நம் இன மக்களுக்கு மூன்று சத்தியம் செய்து கொடுத்திருக்கிறேன்.
உப சத்தியமாக,என் வாரிசுகளும் அரசியலில் ஈடுபட மாட்டார்கள் என்று கூறியிருக்கிறேன்.இனி அந்த
சத்தியத்தை நீ தான் காப்பாற்ற வேண்டும் 'என்று கூறுவேன். என்று 1989ல் ஆனந்த விகடனுக்கு
பேட்டி கொடுத்துள்ளார்.அவர் உயிருடன் உள்ளபோதே அவர் சத்தியத்தை அவரால் காப்பாற்ற இயலவில்லை.

Sunday, October 5, 2008

தமிழன் என்றால் இளிச்சவாயனா..? கோவியின் பதிவின் தாக்கம்

நான் ஓட்டுப்போட ஆரம்பித்த நாள் முதலாய் தி.மு.க. விற்கே ஓட்டளித்து வந்திருக்கிறேன்.பலர் இது சம்பந்தமாக என்னை கேலியும் செய்திருக்கிறார்கள்.கலைஞர் எது சொன்னாலும்..செய்தாலும் அவரை ஆதரித்து நண்பர்களிடையே பேசிவந்தவன் நான்.,நான் தி.மு.க.உறுப்பினன் அல்ல...ஆனால் தி.மு.க.அனுதாபி.கலைஞரின் நிர்வாகத்திறமை என்னைப்போன்றோரை அசர வைத்ததுண்டு.
ஆனால் சமீப காலமாக அவரின் நடவடிக்கைகள் எரிச்சலையே ஏற்படுத்தி வந்திருக்கின்றன.

பத்திரிகைகள்..தேர்தல் காலங்களிலோ அல்லது மற்றசமயங்களிலோ மக்கள் ஆதரவு சம்பந்தமாக அவர்களிடம் வாக்களிப்பு எடுப்பதுண்டு.சமீபத்தில் கூட லாயோலா கல்லூரியில் வழக்கம் போல
வாக்களிப்பு நடந்தது.அதில் தனக்கு சாதகமாக இல்லை என யாராவது கண்டனம் தெரிவித்தார்களா? கலைஞரே கூட...இப்படிப்பட்ட முடிவுகளில் தனக்கு நம்பிக்கை இல்லை என்று ஒருமுறை சொல்லி இருக்கிறார்.

ஆனால் தினகரன் பத்திரிகை 'முதல்வராக வர யாருக்கு ஆதரவு' என மக்களிடம் வாக்களிப்பு நடத்தியதில் ஸ்டாலினிக்கு பெரும் ஆதரவு இருந்தது..ஆனால் அழகிரிக்கோ...ஒற்றை இலக்க ஆதரவு.இதைப்படித்த அஞ்சாநெஞ்சன் கோபம் அடைந்தார்..அந்த கோபத்தின் விலை..
மதுரை தினகரன் அலுவலகம் கொளுத்தப்பட்டது..
3 ஊழியர் மரணமடைந்தனர்.(தர்மபுரி பஸ் எரிப்பும் இதற்கும் என்ன வித்தியாசம்)
திறம்பட செயல்பட்டு வந்த தயாநிதி மாறன் பதவி பறி போனது.
ஆனால் சமீிப காலங்களில் கலைஞரும் ஸ்டாலினுக்கு ஆதரவாகத்தானே பேசிவருகிறார்.

அடுத்து...கனிமொழிக்கு எம்.பி.பதவி..இதில் பெரும்பாலோருக்கு இணக்கம் இல்லை.

பூங்கோதை லஞ்ச வழக்கு ஒன்றில் தனக்கு வேண்டியவருக்கு உதவப்போனதால் பதவி பறிக்கப்பட்டது.அதுவே டி.ஆர்.பாலு மீது பல குற்றச்சாட்டுக்கள்...அவரை ஒரு வார்த்தைக்கூட கேட்கவில்லை. இன்னும் சொல்லப்போனால்..இப்போது தி.மு.க.விற்கும் மத்திய அரசுக்கும் டில்லி பாலம் அவர்.

எஸ்.சி.வி.க்கு தொந்தரவு கொடுத்து வந்ததுடன் நில்லாது..ராயல் கேபிள் விஷன் ஆரம்பித்தது...காதலில்வீழ்ந்தேன் படம் வெளிவராமல் தடுத்தது..இப்படி..மதுரையில் தனி ராஜ்ஜியமே நடந்து வருவதை இவரால் இன்றுவரை தட்டிக் கேட்கமுடியவில்லை.

இலங்கையிலிருந்து IPKF திரும்பிய போது..அது தமிழர்கள் பலரை அழித்தது..ஆதரவாக செயல்படவில்லை என ..அவர்களை வரவேற்க செல்லாத கலைஞரை அன்று பாராட்டினோம்..அந்த பற்று இன்று குறைந்து விட்டதே ஏன் கலைஞரே?

நம் இஸ்லாமிய சகோதரர்களுக்காக (எல்லோருமே அவர்கள்) பாகிஸ்தானுடன் போரிட்டு பங்களாதேஷ் உருக்கியவர்கள் நம் ராணுவத்தினர்.ஆனால் இலங்கை பிரச்னையில் அவதிப்படுவது தமிழன் தானே என ஒரு எண்ணம் வேண்டாம்.
நம் ராணுவம் நினைத்தால்..இலங்கையில் தமிழர்களுக்கு விடிவுகாலம் பிறக்கும்.

கலைஞரே..இன்று நீங்கள்சொல்வதை கேட்கும் நிலையில் மத்திய அரசு உள்ளது..இச்சமயத்தில் இப்பிரச்னை சம்பந்தமாக உறுதியான முடிவெடுக்க வையுங்கள்.

அதைவிட்டிவிட்டு எப்போதும் போல மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளேன்.என்று சொல்லாதீர்கள்.,மக்களை தந்தி அனுப்பச்சொல்லாதீர்கள்.

இதுவரை எங்கள் எண்ணத்தில் உள்ள தமிழினத் தலைவராக இருங்கள்.,

இல்லையேல்..

உங்களை கோபாலபுர வீட்டிற்கும்,சி,ஐ.டி.நகர் வீட்டிற்கும்,கிரீன்வேஸ்சாலை வீட்டிற்கும்,மதுரை வீட்டிற்குமே அக்கறை ஊள்ளவர் நீங்கள் என்ற எண்ணத்தை தோற்றுவீக்காதீர்கள்.

வாய் விட்டு சிரியுங்க...

கணவன்_(திருமணம் ஒன்றில்) நாடு எப்படிப்போகுது பாரு..மணமேடையில் தலையை விரிச்சுப் போட்டுக்கிட்டு ஜாக்கெட் கூட போடாம பொண்ணு உட்கார்ந்து கிட்டு இருக்கு
மனைவி- நல்லா கண்ணடியை போட்டுக்கிட்டுப் பாருங்க..அது பொண்ணு இல்ல..புரோகிதர்

2.உன் உடம்புலே எல்லாம்..திட்டுத் திட்டா படைபோல இருக்கு.,அதைப் பற்றி கொஞ்சம் கூட கவலை இல்லாம இருக்கே
எனக்குத்தான் ஒரு தம்பி இருக்கானே! தம்பி உடையான் படைக்கு அஞ்சான்..கேள்விபட்டதில்லையா?

3.தொண்டர்களே...உஷாராய் இருங்கள்..எதிக்கட்சியினர் 'புதியதோர் உலகம் செய்வோம்'என்கிறார்கள்..பழைய இந்த உலகத்தை எடுத்து சென்றிட அவர்கள் போடும் திட்டம் இது.

4.டாகடர்(நோயாளியிடம்)உங்க உடம்பு நல்லா ஆகணும்னா..ஆஃபீஸூக்கு லீவ் போடாம போங்க..அங்கபோய் நல்ல தூக்கம் போட்டா சரியாயிடும்.

5.என்னைக் கல்யாணம் பண்ணிக்கச் சொல்லி ஒரே தொந்தரவு
யாரு..உன் காதலனா?
இல்லை...என் அம்மாவும்..அப்பாவும்

6.உனக்கும் உன் மனைவிக்கும் கருத்து வேறுபாடே வராதா?
வரும்..ஆனால் நான் ஒரு வார்த்தை சொன்னதும் அவ சரியாயிடுவா
என்ன சொல்வே
நீ சொல்றதுதான் சரின்னு சொல்லிடுவேன்

Saturday, October 4, 2008

கிரீமி லேயரும்..இட ஒதுக்கீடும்..

எந்த பிரச்னைகளுக்கும்..முடிவு என்று ஒன்று உண்டு.,ஆனால் இந்த இடஒதுக்கீடு பிரச்னைக்கு..இந்தியாவில் முடிவே இல்லை எனலாம்.
பிற்படுத்தப்பட்டோருக்கு I.I.T.,I.I.M., இவற்றில் 27சதவிகிதம் இட ஒதுக்கீடு அமுல் செய்வதில் பிரச்னை வளர்கிறது.
அவர்களுக்கு இட ஒதுக்கீடு செய்வதால் வருஷம் ஒன்றிற்கு 9 சதவிகிதம் என மூன்றாண்டுகளுக்கு இடங்கள் அதிகரிக்கும் என ஒரு தேவையில்லாத ஒன்றும் உள்ளே நுழைந்து விட்டது.

அடுத்து...பிற்படுத்தப்பட்டோருக்கான இடங்கள் காலியாக இருப்பவை..பொதுவில் சேர்ந்துவிடும்..ஆகவே..பொருளாதாரத்தை வைத்துப் பார்க்காது அனைத்து பிற்படுத்தப்பட்டோருக்கும் இட ஒதுக்கீடு வேண்டும்..என்கின்றனர்.இது எனக்கு சரியாகவே படுகிறது.இதில் எதற்கு ஒரு கிரீமி லேயர்..வருஷம் 4.5 லட்சத்திற்குள் வருமானம் வருபவர்கள் இதில் வரவேண்டுமாம்.அப்பா..சாமி..அவனுக்குள்ள 27%ல் அவனைச் சார்ந்த யார் வந்தால் உனக்கென்ன..அதில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்.

அடுத்து ஒரு குற்றச்சாட்டு..கல்வியின் தரம் குறைந்து விடுமாம்...

ஆடு நனைகிறது என்கிறது ஓநாய்

இன்று மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைப்பாருங்கள்..O.C.மாணவர்கள் வாங்கும் மதிப்பெண்களைவிட இவர்கள் அதிகம் வாங்குகிறார்கள்.

அவர்களுக்கும்..இவர்களுக்கும்..கட் ஆஃப் மதிப்பெண்களில் பெரும் வித்தியாசம் இருப்பதில்லை.1 அல்லது 2 மதிப்பெண்கள்தான் வித்தியாசம்.

கடைசியாக..பொதுவாக..ஒன்று..

படிக்கும் மாணவன் எந்த இடத்தில் இருந்தாலும் படிப்பான்...ஆகவே கூப்பாடு போடுவதை நிறுத்துங்கள்

Friday, October 3, 2008

கலைஞர் ஆட்சியும்...மின் வெட்டும்..

"மின்சாரத் தாக்குதல்"
தமிழக அரசு மக்கள் மீது ஒரு குண்டைத் தூக்கிப் போட்டுள்ளது.'இப்படிப் போடப்போகிறோம்,போட வேண்டியிருக்கலாம்'என்றெல்லாம் முன் எச்சரிக்கை கொடுத்துவிட்டதனால் மட்டும், தாக்குதலின் அதிர்ச்சி குறைந்துவிட முடியாது.
அக்டோபர் முதல் தேதியிலிருந்து தமிழ்நாடெங்கும் 15 சதவிகித மின்சார வெட்டு அமுலுக்கு வந்துள்ளது.இதை குறித்துத் தொழில் வர்த்தகத் துறையில் ஈடுபட்டுள்ளவர்களும் பொது மக்களும் அதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு, முதலில் 25 சதவிகிதம்,பிறகு 50சதவிகிதம்,அதன் பின்னர் ஃபெப்ரவரியில் 75 சதவிகிதம் என்று மின்வெட்டை அமுலுக்கு கொண்டுவந்த போது,'தென்மேற்குப் பருவ மழை ஏமாற்றிவிட்டது; நீர்த்தேக்கங்களில் தண்ணீர் இல்லாததால் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டுவிட்டது.'என்று இயற்கையின் மேல் பாரத்தைப் போட்டார்கள்.மக்களோ,அந்த எட்டு மாதங்கள் சொல்லொணா அவதிக்கு இலக்காகி,இருளில் கிடந்து திண்டாடினார்கள்.தமிழகத்தில் உற்பத்தி பெரிதும் பாதிக்கப்பட்டது.பல தொழிற்சாலைகள் குறைந்த நேரம் இயங்கி, வேலையில்லாத் திண்டாட்டத்தை ஏற்படுத்தின. பம்பு செட்டை நம்பிய பயிர்கள் வாடி உலர்ந்து பதராகிவிட்டன.
இத்தனைக்கும் தென்மேற்குப் பருவ மழை இவ்வாண்டு ஏமாற்றவில்லை.நீர்த்தேக்கங்கள் பல நிறைந்துள்ளன.மேட்டுர் அணையில் இதுவரை ஏற்பட்டிராத அளவு நீர் தேங்கியிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது.இந்த நிலையில் வெட்டு எதற்கு?
ஒன்று மட்டும் நிச்சயம்.இப்படி அடிக்கடி வெட்டு ஏற்படுமென்ற அச்சம் தோன்றினால், புதுத் தொழில்களைத் துவக்கவோ, ஏற்கனவே உள்ள தொழில்களைப் பெருக்கவோ அத்துறைகளில் ஈடுபடுபவர்கள் பயப்படுவார்கள்.தடையில்லாமல் வசதியாக மின்சாரம் கிடைக்கும் மாநிலங்களைத் தேடிப் போவார்கள்.தமிழகம் பின்தங்க வேண்டிய நிலை ஏற்படும்.
எப்படியாகிலும் தொழில் வளர்ச்சிக்கும் இதர துறைகளுக்கும் தேவையான மின்சாரத்தை உற்பத்தி செய்தே தீருவது என்ற உறுதியோடு, தற்போதைய மின்சார நெருக்கடியை ஓர்'அவசர நிலையா'கக் கருதி, தமிழக அரசு செயலாற்ற வேண்டும்.,

(இது ஆனந்த விகடன் தலையங்கம்..வெளியான தேதி..7-10-73)..இன்றைக்கும் பொருந்தியுள்ளது அல்லவா?

நன்றி- ஆனந்தவிகடன்

அதி புத்திசாலி அண்ணாசாமி ஜோக்ஸ்..

அண்ணாசாமி வேலை செய்யும் கம்பேனியில் 6 மாதமாக வேலைநிறுத்தம்.அங்கு தொழிலாளர் யூனியனுக்கு அண்ணாசாமிதான் காரியதரிசி.அவரை நிர்வாகம் பேச்சு வார்த்தைக்கு அழைத்தது.நடந்த பேச்சு வார்த்தை.

அதிகாரி - ஒரு வருஷத்திற்கு எத்தனை நாட்கள்

அண்ணாசாமி-365 நாட்கள்

அதிகாரி-நாம லீப் வருஷத்தையே எடுத்துப்போம்.366 நாட்கள்.அதுல ஒரு நாளுக்கு 8 மணி நேரம் வேலைப் பார்க்கறீங்கன்னு வைச்சுப்போம்.அதாவது ஒரு நாளைக்கு 1/3பாகம் வேலை செய்யறீங்க.அதாவது வருஷத்திற்கு 122நாள் .அதில் வருஷத்திற்கு 52ஞாயிற்றுக்கிழமையும்,சனிக்கிழமை 1/2 நாளா இருக்கறதால 26 நாளும்..ஆக மொத்தம் 78 நாட்கள் நீங்க வேலை
செய்யறதில்லை.122 வேலை நாட்கள்லே விடுமுறை 78 நாைள் கழிச்சா மீதி 44 நாட்கள்.இதுதான் உண்மையிலேயே நீங்க வேலை செய்யற நாட்கள்.அந்த 44 நாட்கள்ல வருஷத்திற்கு
30நாள் earn leave,12நாட்கள் casual leave போச்சுன்னாமீதி 2 நாள்.இந்த 2 நாள் தான் நீங்க வேலை செய்யறீங்க.அதுக்கு சம்பள உயர்வு தேவையா?

அண்ணாசாமி யோசனை செய்தார்.அதிகாரி கூறுவது உண்மைதான் போலிருக்கு என்ற முடிவுக்கு வந்தார்.2 நாட்கள் வேலை செய்ய சம்பள உயர்வு கேட்பது அநியாயம் என்று வேலை நிறுத்ததை வாபஸ் வாங்கினார்.

Thursday, October 2, 2008

M.G.R. படப் பாடல்களும்..அறிவுரைகளும் - பாகம் 3

விவசாயி பாட்டில் விவசாயி பற்றி..

முன்னேற்ற பாதையிலே மனசை வைச்சு
முழு மூச்சா அதற்காக தினம் உழைச்சு
மண்ணிலே முத்தெடுத்து பிறர் வாழ வழங்கும்
குணமுடையோன் விவசாயி
(இதன் பாடலாசிரியர்-மருதகாசி)

ஆனந்தஜோதியில்...

ஒருதாய் மக்கள் நாமென்போம்
ஒன்றே எங்கள் இனமென்போம்
இறைவன் ஒருவன் தானென்போம்
சமரசம் எங்கள் வாழ்வென்போம்.

ரிக் ஷாக்காரன் படத்தில்

அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்
அது ஆணவ சிரிப்பு-ஆணவ சிரிப்பு
வயிறு வலிக்க சிரிப்பவர்கள் மனித ஜாதி-பிறர்
வயிறெரிய சிரிப்பவர்கள் மிருக ஜாதி

கணவன் படத்தில்..காங்கிரஸ் ஆட்சி முடிந்து தி.மு.க.ஆட்சிக்கு வந்த நேரம்
ஒருபாட்டில் இந்த வரிகள் வரும்

அதிகாரம் செய்தவரோ
ஆட்சியை முடித்தார்
இங்கே அன்பு வழி நடந்தவரோ
ஆட்சியைப் பிடித்தார்

தி.மு.க.ஆட்சிக்கு வர.M.G.R.பாடல்கள் பல உறுதுணையாய் இருந்திருக்கின்றன.

மீண்டும் மேலே சொன்ன ஆனந்தஜோதி படப்பாடலிலேயே மேலும் சில வரிகள்

அன்று மனிதன் காட்டை அழித்து
நாட்டைக் காட்டினான்

இன்று மனிதன் வெண்ணிலாவில்
இடத்தை தேடினான்-நாளை
மனிதன் ஏழு உலகம் ஆளப்போகிறான்

(தொடரும்)

வாய் விட்டு சிரியுங்க..

1.தலைவர்..பொருளாதாரம் பலமாக இருக்கிறது...பலஹீனமாக இருக்கிறது என இரண்டு தலைப்பிலும் பேச்சை தயாரிக்கச் சொல்லி இருக்கார்..ஆளும் கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..எதிர்க் கட்சி கூட்டணியில் சேர்ந்தாலும் சரி..அதற்கேற்ப பேசிடலாம்னு.

2.என் மனைவியை கண் கலங்காம வைச்ச்க்கணும்னு பார்த்தேன்..முடியலை
ஏன்?என்ன ஆச்சு
அவ மெகா சீரியல் நடிகையா இருக்கறதாலே..வீட்ல எது பேசினாலும்..கண்ணீரோடத்தான் பேசறா

3.கடைக்காரர்-இலவச இணைப்பை 'கேட்'டு வாங்குங்கன்னு சொல்றது..இந்த சின்னப் புத்தகத்தாங்க..வீட்டு 'கேட்"டு இல்லைன்னு சொன்னா புரிஞ்சுக்க மாட்டேன்னு சொல்றீங்களே

4.உங்கம்மாவோட நான் சண்டை போடறதால எனக்கு சாபம் கொடுத்துட்டாங்க
என்னன்னு
காலத்துக்கும் சுமங்கலியா இருன்னு

5.டி.வி.ல நிகழ்ச்சி கொடுக்க ஏன் உங்க நாயை இழுத்துக் கிட்டு வர்றீங்க
இது டாக் ஷோன்னு சொன்னாங்களே

6.நீதிபதி-(குற்றவாளியிடம்)உனக்குத் தேவையானால் அரசாங்கமே வக்கீல் ஏற்பாடு செய்யும்
குற்றவாளி-வேண்டாங்க...எனக்கே நல்லா பொய் பேசத் தெரியும்.

Wednesday, October 1, 2008

M.G.R.,படப்பாடல்களும்..அறிவுரைகளும்.. பாகம்-2

மேலும் சிலப் பாடல்களை இப்பதிவில் பார்க்கலாம்.,

கொடுத்தெதெல்லாம் கொடுத்தான் - அவன்
யாருக்காக கொடுத்தான்
ஒருத்தருக்கா கொடுத்தான்-இல்லை
ஊருக்காகக் கொடுத்தான்

மண்குடிசை வாசலென்றால்
தெய்வம் வர மறுத்திடுமா

சிலர் வாழ வாழ
பலர் வாட வாட
ஒருபோதும் தெய்வம் கொடுக்கவில்லை

ஆனந்த ஜோதி படப் பாடலில்

ஒன்று எங்கள்ஜாதியே
ஒன்று எங்கள் நீதியே
உழைக்கும் மக்கள் யாவரும்
ஒருவர் பெற்ற மக்களே

வெள்ளை மனிதன் வேர்வையும்
கருப்பு மனிதன் கண்ணீரும்
உப்பு நீரின் வடிவிலே
ஒன்று சேரும் கடலிலே

எங்கவீட்டுப் பிள்ளைபடத்தில் நான் ஆணையிட்டால் பாடலில்

ஒரு தவறு செய்தால்
அதை தெரிந்து செய்தால்
அவன் தேவன் என்றாலும் விடமாட்டேன்
உடல் உழைக்க சொல்வேன்-அதில்
பிழைக்கச் செய்வேன்-அவர்
உரிமைப் பொருள்களைத் தொடமாட்டேன்

விவசாயி படப்பாடலில்

என்ன வளம் இல்லை இந்த திருநாட்டில்
ஏன் கையை ஏந்த வேண்டும் வெளிநாட்டில்
ஒழுங்காய் பாடுபடு வயக்காட்டில்
உயரும் உன் மதிப்பு அயல்நாட்டில்

(தொடரும்)

சக பதிவர்களுக்கு நன்றி

கோவி..சில நாட்களுக்கு முன் என் பயோடேட்டாவை பதிவிட்டு இருந்தார்.அதில் என் வலைப்பக்கம் பற்றியும்..என் மனைவியின் வலைப்பக்கம் பற்றியும் எழுதி இருந்தார்.

அதைப் படித்து எங்களை வாழ்த்திய அனைத்து அன்பு நெஞ்சங்களுக்கும் எங்கள் மனங்கனிந்த நன்றி.

குறிப்பாக..கோவி, விக்னேஸ்வரன்,சுபாஷ்,விஜய் ஆனந்த்,வடகரை வேலன்,ச்சின்னப்பையன்,தமிழ்சினிமா,பரிசல்காரன்,நசரேயன் ஆகியவர்களுக்கு

ஸ்பெஷல் தேங்க்ஸ்.,

உங்களை சந்திக்கும் தினம் கண்டிப்பாக ,ஒரு பார்ட்டி உண்டு.

உடனே பயம் வேண்டாம்....என் செலவில்தான்.