Saturday, December 23, 2017

திருச்சிற்றம்பலம்

யாமாமாநீ யாமாமா
யாழீகாமா காணாகா
காணாகாமா காழீயா
மாமாயாநீ மாமாயா

யாகாயாழீ காயாகா
தாயாராரா தாயாயா
யாயாதாரா ராயாதா
காயாகாழீ யாகாயா

தாவாமூவா தாசாகா
ழீநாதாநீ யாமாமா
மாமாயாநீ தாநாழீ
காசாதாவா மூவாதா

நீவாவாயா காயாழீ
காவாவானோ வாராமே
மேராவானோ வாவாகா
ழீயாகாயா வாவாநீ

யாகாலாமே யாகாழீ
யாமேதாவீ தாயாவீ
வீயாதாவீ தாமேயா
ழீகாயாமே லாகாயா

மேலேபோகா மேதேழீ
காலாலேகா லானாயே
யேனாலாகா லேலாகா
ழீதேமேகா பொலேமே

நீயாமாநீ யேயாமா
தாவேழீகா நீதானே
நேதாநீகா ழீவேதா
மாயாயேநீ மாயாநீ

நேணவரா விழயாசைழியே
வேகதளேரிய ளாயுழிகா
காழியுளாய ரிளேதகவே
யேழிசையாழவி ராவணனே

காலேமேலே காணீகா
ழீகாலேமா லேமேபூ
பூமேலேமா லேகாழீ
காணீகாலே மேலேகா

வேரியுமேணவ
காழியொயே
யேனைநிணேமட ளோகரதே
தேரகளோடம ணேநினையே
யேயொழிகாவண
மேயுரிவே

நேரகழாமித யாசழிதா
யேனனியேனனி
ளாயுழிகா
காழியுளானின
யேனினயே தாழிசயா
தமிழாகரனே

திருச்சிற்றம்பலம்

Tuesday, May 30, 2017

நீயும் நானும் ஒன்னு - (சிறுகதை)


--------------------------------------
"முனுசாமி...முனுசாமி" என்று தனது குடிசைக்கு முன்னால் நின்று யாரோ அழைப்பதைக் கேட்டு வெளியே வந்தார் எழுபது வயது ஏழுமலை
தனது, வலது கையை, கண்களுக்கு மேல் வைத்துக் கொண்டு"யாரு?" என்றார்
"நான் மாட்டுத் தரகன் பொன்னுசாமி.உங்க வீட்டு மாடு பால் வத்திப் போச்சு..சரியா இப்போ பராமரிக்க முடியல.அதனால... அடிமாட்டுக்குன்னாக் கூடப் பரவாயில்லை, எதாவது கிராக்கியைப் பாரு " அப்படின்னு முனுசாமி சொன்னான்..ஒரு கிராக்கி மாட்டியிருக்கு..அதான்..மாட்டை ஓட்டிக்கிட்டு போகலாம்னு வந்தேன்" என்றான் வந்தவன்
எழுமலை..அவர்களையேப் பார்த்துக் கொண்டிருந்த மாட்டைப் பார்த்தார்
அது, பல ஆண்டுகளுக்கு முன்னால், மாட்டுச் ச்ந்தையில் வாங்கிய மாடு.அந்த மாடு வாங்கியதும்..தனது நிலை சற்று உயர்ந்ததால் அம்மாட்டிற்கு லட்சுமி எனப் பெயரிட்டார்.தினமும் வஞ்சகமில்லாமல் பாலைக்கொடுத்தது. .தனது மகனுக்கும், மகளுக்கும்அவர்கள வளரக் கொடுத்த பாலைத் த்விர மீதத்தை வெளியே விற்றார்..அது வந்த பிறகு ராஜபோக வாழ்க்கை என சொல்ல முடியாவிட்டாலும்..வசதியான வாழ்க்கை வாழ்ந்தார் ஏழுமலை
தன் மகளுக்கு திருமணம் முடித்தார்.முனுசாமிக்கும் செங்கமலத்தை மனைவியாக்கினார்.
லட்சுமி, ஈன்ற கன்றுகளாலும் பயன் அடைந்தார்
.
கிட்டத்தட்ட அந்த வீடே அந்த லட்சுமியால் லட்சுமிகடாட்சத்துடன் இருந்தது
இந்நிலையில்..
எழுமலைக்கும் வயது ஆகிவிட்டபடியால் எந்த வேலையையும் செய்ய முடியவில்லை.
லட்சுமிக்கும் வயதாகியதால் பால் முற்றும் வற்றிவிட்டது.அக்குடும்பத்திற்கு அதனால் இப்போது பயனில்லை
வறுமை வாட்ட...முனுசாமியும், செங்கமலமும் கூலி வேலைக்குப் போகத் தொடங்கினர்
முனுசாமியும், தன் தந்தையை கவனிக்க ஆளில்லாததால் முதியோர் இல்லத்தில் சேர்க்க எண்ணினான்.லட்சுமியையு ம் அடிமாடாக விற்க த்யாரானான்
பொன்னுசாமி சொன்னவற்றைக் கேட்ட ஏழுமலை. வாசலில் கட்டியிருந்த லட்சுமியைப் பார்த்தார்
தன்னை வாங்கத்தான் பொன்னுசாமி வந்திருக்கிறான் என லட்சுமிக்கும் தெரிந்தது.இதுநாள் வரை தன்னால் முடிந்ததைக் கொடுத்துவிட்டோம்.இனி, தன் இறைச்சியை உண்டு மக்கள் பசியாற்ற சந்தர்ப்பம் கிடைத்ததை எண்ணி சற்று மகிழ்ந்தாலும்..அதன் கண்களில் கண்ணீர்
அதைப் பார்த்த ஏழுமலைக்கு, "இவ்வளவு நாள் உன் குடும்பத்துக்கு உழைத்த என்னை..இப்படி அனுப்புகிறாயே!" என்று லட்சுமி சொல்வது போலத் தோன்றியது
முனுசாமிவந்துவிட்டான்
பொன்னுசாமியைப் பார்த்து, "வாங்க..நீங்க இப்பவே மாட்டை ஓட்டிக் கிட்டுப் போகலாம்" என்றான்.
பின் , அவரிடமிருந்து பணத்தை வாங்கி்எண்ணினான்
அப்பாவைப் பார்த்து, "அப்பா..உன்னை முதியோர் இல்லத்தில் சேர்க்க ஏற்பாடு பண்ணிட்டேன்..நாளைக்குப் போகலாம்" என்றான்
இப்போது லட்சுமியை, ஏழுமலைப் பார்த்தார்..
அது, இப்போதுஅவரது நிலையை எண்ணி கண்ணீர் விடுவதைப் போல இருந்தது

Monday, May 22, 2017

கிறுக்கல் கவிதைகள்

1)நான் கோடு போட்டா
ரோடு போடுவாள்
நான் புள்ளி வைச்சா
கோலம் போடுவாள்
நான் காதலிச்சேன் - அவள்
திருமணம் செய்துச் சென்றாள்

2)இரயில் நிலையத்தில்
வரவேற்க வந்தவரின் 
பார்வையோ 
என் கை மஞ்சள் பையில்

3)பிஞ்சுக் கைகளில்
பிடிக்கு அடங்கா மூங்கில்
பஞ்சு பாதங்களை
பதம் பார்க்கும் கயிறு
கழைக்கூத்தாடி சிறுமி

4)அவசர அவசரமாக 
செல்லும் போதும்
எதிரில் வருபவரை
குசலம் விசாரிக்கும்
எறும்பு வரிசை

5)விடியலின் 
பனித்துளிகள்
போதையில்
மலர்கள்

6)உயிர்மெய் எழுத்தென்ன
கேட்டதும் சொன்னது
காகம்

Wednesday, May 17, 2017

இன்னா நாற்பது - பாடல்கள் 1,2,3

பாடல்: 01 (பந்தம்...)
பந்தம் இல்லாத மனையின் வனப்பு இன்னா;
தந்தை இல்லாத புதல்வன் அழகு இன்னா;
அந்தணர் இல் இருந்து ஊண் இன்னா; ஆங்கு இன்னா,
மந்திரம் வாயா விடின்.


சுற்றமில்லாத மனையின் அழகு துன்பம். தந்தையில்லாத மகனின் அழகு துன்பம். துறவோர் வீட்டிலிருந்து உண்ணுதல் துன்பம். அவ்வாறே மந்திரங்கள் பயன் தராவிடில் துன்பம்.

பாடல்: 02 (பார்ப்பார்...)
பார்ப்பார் இல் கோழியும் நாயும் புகல் இன்னா;
ஆர்த்த மனைவி அடங்காமை நற்கு இன்னா;
பாத்து இல் புடைவை உடை இன்னா; ஆங்கு இன்னா
காப்பு ஆற்றா வேந்தன் உலகு.

பார்ப்பாருடைய வீட்டில் நாயும், கோழியும் இருத்தல் துன்பம். கட்டிய மனைவி கணவனுக்கு அடங்காமை துன்பம். பகுப்பு இல்லாத புடைவையை உடுத்தல் துன்பம். அவ்வாறே காப்பாற்ற அரசன் இல்லாத நாடு துன்பம்.

பாடல்: 03 (கொடுங்கோல்)
கொடுங் கோல் மற மன்னர் கீழ் வாழ்தல் இன்னா;
நெடுநீர்ப் புணை இன்றி நீந்துதல் இன்னா;
கடு மொழியாளர் தொடர்பு இன்னா; இன்னா,
தடுமாறி வாழ்தல் உயிர்க்கு.

கொடுங்கோல் அரசனது கீழ் வாழ்தல் துன்பம். தெப்பம் இல்லாமல் பெரிய ஆற்றினைக் கடந்து செல்லுதல் துன்பம். வன்சொல் கூறுவோரது தொடர்பு துன்பம். உயிர்கள் மனம் தடுமாறி வாழ்தல் துன்பம்.

தமிழ் இலக்கியம் - இன்னா நாற்பது



உள்ளே புகுமுன்...

தமிழில், தமிழையும், புலவர்களின் பாடல்களையும் சுவைக்க பல நூல்கள் உள்ளன.அவற்றில், என்னால் முடிந்தவற்றை அனைவரும் ரசிக்கும் வகையில், ருசிக்கும் வகையில், புரிந்து கொள்ளும் வகையில் எளிமையாகத் தர வேண்டும் என்ற எண்ணத்தில் தொடங்கப்பட்டதே இத்தொடர்

இதில் நான் பதியும் பாடல்களை படியுங்கள், ரசியுங்கள்...

முதலில்  "இன்னா நாற்பது:

நாற்பது என்னும் எண் தொகையில் குறிக்கப் பெறும் நூல்கள் நான்கு.. அவை...

கார் நாற்பது,களவழி நாற்பது,இன்னா நாற்பது, இனியவை நாற்பது ஆகும்.

இன்னா நாற்பதும், இனியவை நாற்பதும் அறம் உரைப்பவை.இரண்டும் முறையே துன்பம் தரும் நிகழ்ச்சிகளையும், இன்பம் தரும் செயல்களையும் உரைக்கின்றன.

இன்னா நாற்பதில், கடவுள் வாழ்த்து நீங்கலாக நாற்பது பாடல்கள் உள்ளன.ஒவ்வொரு பாடலும் நான்கு கருத்துக்களைக் கொண்டு, அவை இன்னா எனக் கூறுதலால் இன்னா நாற்பது எனப் பெயர் பெற்றது.

இந்நூல் ஆசிரியர் கபில தேவர்

கடவுள் வாழ்த்தில், சிவபெருமான், பலராமன்,திருமால், முருகன் என அனைத்து கடவுளையும் குறிப்பிட்டுள்ளது சிறப்பு..

இனி கடவுள் வாழ்த்து...

கடவுள் வாழ்த்து

முக் கட் பகவன் அடி தொழாதார்க்கு இன்னா;
பொற்பனை வெள்ளையை உள்ளாது ஒழுகு இன்னா;
சக்கரத்தானை மறப்பு இன்னா; ஆங்கு இன்னா,
சத்தியான் தாள் தொழாதார்க்கு.



முக்கண்களுடைய சிவபெருமானின் திருவடிகளை வணங்காதவர்களுக்குத் துன்பமுண்டாம். அழகிய பனைக் கொடியையுடையவனாகிய பலராமனை நினையாமல் இருத்தல் துன்பமாம். திருமாலை மறத்தல் துன்பம் தரும். அவ்வாறே சக்தியான் வேற்படையை உடையவனாகிய முருகக் கடவுளின் திருவடிகளைத் தொழாதார்க்குத் துன்பம் உண்டாகும்.

இனி அடுத்த பாடல்கள் அடுத்த பதிவில்.

Thursday, January 26, 2017

மக்கள் நாயகன் விஜய் சேதுபதி - 1



தமிழ்த் திரையுலகில் பல் வேறு காலகட்டங்களில் பல்வேறு கதாநாயகர்கள் கோலோச்சிக் கொண்டிருந்தனர்.
சின்னப்பா, தியாகராஜ பாகவதர், எம் கே ராதா, ரஞ்சன் போன்றவர்களுக்குப் பின் திரையுலகின் பொற்காலமான 50- 60-70 களில் மூவேந்தர்களாக எம் ஜி ராமச்சந்திரன், சிவாஜி கனேசன், ஜெமினி கணேசன் ஆகியோர் இருந்தனர்

இவர்கள் மூவரும் நூற்றுக் கணக்கான் படங்களில் நடித்தனர்..வெற்றிக் கொடி நாட்டியவர்கள் இவர்கள்

இவர்களுடன், எஸ் எஸ் ராஜேந்திரன்,முத்துராமன் போன்றோரும் அடுத்தக் கட்டத்தில் இருந்தனர். த்னியாக கதாநாயகர்களாகவும்..மற்றவர்களுடன் சேர்ந்து துணைப்பாத்திரங்களிலும் நடித்து வந்தனர்

அடுத்த காலகட்டம்..

ஜெயஷங்கர், ரவிசந்திரன் சிவகுமார் போன்றவர்கள் மக்களின் அங்கீகாரத்தைப் பெற்று நடித்தனர்.ஸ்மால் பட்ஜெட் படங்கள் என இவர்களின் படங்கள்    குறிப்பிடப்பட்டன.  .தயாரிப்பாளர்களுக்கும் ஓரளவு லாபத்தை ஈட்டிக் கொடுத்தனர்.குறிப்பாக ஜெயஷங்கர், வெள்ளிக்கிழமை நாயகன் என்றே குறிப்பிடுவார்கள்.அந்தளவு படங்கள் வெளிவந்தன

இடைபட்ட காலத்தில் வந்து பெரும் நட்சந்திர அந்தஸ்தைப் பெற்றவர்கள் சூபர் ஸ்டாரும், உலக நாயகனும்..இவர்களும் ஒரு கட்டத்தில் வருடத்திற்கு ஓரு படங்கள் என நிறுத்திக் கொண்டனர்

தொடர்ந்து, வி்ஜய், அஜீத், சூர்யா போன்றவர்கள் திரையுலகை ஆண்டு வந்தார்கள்..வருகிறார்கள்..இவர்கள் நடிப்பும்..ஆண்டுக்கு ஓருரு படங்கள் என்றாயிற்று
தவிர்த்து, இவர்களின் படங்கள் வணிக ரீதியான படங்களாகவும்., கிட்டத்தட்ட ஒரே கதையமைப்புக் கொண்ட படங்களாகவும் இருக்கின்றன

இந்நிலையில், வந்தவர்களில் விஜய் சேதுபதி குறிப்பித்தக்கவர்.இவர் படங்கள் ஒவ்வொன்றும் மாறுபட்டவையாக அமைந்தவை.மக்க்ள் அதற்காகவே அவரை விரும்ப ஆரம்பித்தனர்.இவர் நடித்தப் படங்கள் தயாரிப்பாளர்களுக்கு ஓரளவு  லாபத்தையும் ஈட்டிக் கொடுத்துக் கொண்டிருக்கின்றன.ஏதேனும் தோல்விபடங்கள் என குறிப்பிடப்பட்டாலும், வசூலில் தோல்வி என்று கூற முடியாதவையாக அமைந்த்ன.

நீண்ட காலத்திற்குப் பிறகு..ஒரு கதாநாயகன்  ஒரே ஆண்டில் அதிகப் படங்களில் நடித்த சாதனையை இவர் புரிந்துள்ளார்.

அடுத்த பதிவிலிருந்து..இவர் நடித்த மாறுபட்டப் படங்கள் குறித்து பார்ப்போம்

Friday, January 20, 2017

சிவாஜி ஒரு சகாப்தம் - 33

           
(சிவாஜி நடித்த வேற்று மொழிப்படங்கள்)
(நவீன் கன்னாவிற்கான பதிவு)

தெலுங்கு படங்கள்
------------------------------
 பர்தேசி -
வெளியான நாள் - 14-1-1953

அஞ்சலி தேவிஆதிநாராயணராவ் ஆகியோர் அக்ண்சலி பிக்சர்ஸ் சார்பில் தயாரித்த படம் (தமிழில் பூங்கோதை), எல் வி பிரசாத் இயக்கம்.
நாகேஷ்வரராவ், அஞ்சலியுடன் சிவாஜி

பெம்புடு கொடுகு

------------------------------------

வெளி யான நாள் _ 13-11-1953

நடிப்பு - சிவாஜி, புஷ்பவல்லி,சாவித்திரி

இயக்கம் எல் வி பிரசாத்

மங்கம்மா என்ற பெண் மோகன் என்பவனை தத்தெடுத்து வளர்க்கிறாள்.அவளுக்கு ஏற்கனவே முத்து என்ற மகனுண்டு. வீட்டு வேலைகள் செய்து குழ்ந்தைகளைக் காப்பாற்றுகிறாள்.ஒரு சமயம் ஒரு கொலையை அவள் பார்க்க நேரிடுகிறது.பின், அவளே அக்கொலைக்காக கைது செய்யப் படுகிறாள்.விடுதலை ஆகி அவள் வரும் போது..அவளது இரு மகன் களுமே ஒருவருக்கு ஒருவர் பரம எதிரியாய் உள்ளனர்.அவர்கள் திரும்ப ஒன்று சேர்ந்தனரா? என்பதே கதை

பராசக்தி -
---------------- 11-1-1957ல் பராசக்தி திரைப்படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது

மனோகரா
________________ 3-6-1954ல் மொழிமாற்றம் செய்யப்பட்டு வந்தது

பொம்மல பெல்லி
-----------------------------

வெளியான நாள் - 11-1-1958

தமிழில் பொம்மைக் கல்யாணம் என்ற பெயரில் வந்த படம்

நீரு கப்பின நிப்பு --
-----------------------------

வெளியான நாள்- 24-6-1982

இப்படத்தில் சில காட்சிகளே வந்தாலும் சிவாஜி அருமையாய் நடித்திருப்பார்.ஜக்கையா சிவாஜிக்கு குரல் கொடுத்தார்

பெஜவாட பெபுலி
----------------------------
வெளியான நாள் -14-1-1983

இயக்கம் விஜய நிர்மலா.வி சக்கரவர்த்தி இசை

சிவாஜியுடன், கிருஷ்ணா, ராதிகா, சௌகார் ஜானகி நடித்தனர்

விஸ்வநாத நாயகுடு
--------------------------------

வெளியானது மே 1987

தாசரி நாராயண ராவ் இயக்கம்
சரித்திரப் படம்.கிருஷ்ண தேவராயர் காலம்
சிவாஜி, கிருஷ்ணம் ராஜு, கே ஆர் விஜயா, ஜெயபிரதா நடித்தனர்

அக்னி புத்ருடு
--------------------

வெளியான நாள் - 14-8-1987

அன்ன்பூர்ணா ஸ்டூடியோஸ் சார்பில் கே நாகேந்திர ராவ் இயக்கத்தில், நாகேஷ்வர ராவுடன் சிவாஜி, சிவாஜி, சாரதா நடித்தனர்

பிள்ளலு தெச்சின செல்லனி ராஜ்ஜியம்
-------------------------------------------------------
தமிழ் வெளியான நாள் - 29-7-1960
தெலுங்கு - 1-7-1960

மக்கள் ராஜ்ய என்று கன்னடத்திலும்,குழ்ந்தைகள் கண்ட குடியரசு என தமிழிலும் வந்தது.

தாதா மிராசி கதை..பி ஆர் பந்துலு தயாரிப்பு, இயக்கம்

ராமதாசு
--------------------
வெளியான நாள் 1-2-1964

தயாரிப்பு, இயக்கம் நாகையா

சிவாஜியுடன் நாகையா ராமதாசராய் நடித்தார்

பங்காரு பாபு
--------------------

வெளியான நாள் - 15-3-1973

ஜகபதி ஆர்ட்ஸ் சார்பில் வி பி ராஜேந்திர பிரசாத் இயக்கத்தில் வந்த படம்

கே வி மகாதேவன் இசை.
நாகேஷ்வர ராவ், வாணிஸ்ரீ நடித்த இப்படத்தில் கிருஷ்ணா, சோபன் பாபு, ராஜேஷ் கன்னா ஆகியோருடன் சிவாஜியும் ஒரு கௌரவ வேடத்தில் வந்திருப்பார்

பக்த துக்காராம்
---------------------------------
வெளியான நாள் - 5-3-1973

அஞ்சலி பிகசர்ஸ் தயாரிப்பு.இயக்கம் வி மதசூதன ராவ்

நாகேஷ்வர ராவ். அஞ்சலி ஆகியொறுடன் சிவாஜி.இப்படத்தில் சிவாஜி சத்ரபதி சிவாஜியாகவே வருவார்

ஜீவன தீரளூ
-------------------

வெளியான நாள் -12-8-1977

ஜி சி சேகர் இயக்கம்.கிருஷ்ணம் ராஜு, வாணீஸ்ரீ நடிப்பு

கே சக்கரவர்த்தி இயக்கம்

இப்படத்தில் நடிகர் திலகம் கௌரவ வேடத்தில் நடித்தார்

சாணக்ய சந்திரகுப்தா
--------------------------------------    ,

வெளியான நாள் - 25-8-1977

இயக்கம், தயாரிப்பு என் டி ராமாராவ்

என் டி ராமாராவ், நாகேஷ்வரராவ் ஆகியோருடன் சிவாஜி நடித்திருப்பார்.

இப்படத்தில் வீரன் அலெக்சாண்டராய் சிவாஜி நடிப்பு

மலையாளப்படங்கள் -
-------------------------------------

தச்சோளி அம்பு
------------------------- வெளியான நாள் -27-10-1978

பிரேம் நசீருடன் சிவாஜி
நவோதயா அப்பச்சன் தயாரிப்பு, இயக்கம்

கே ராகவன் இசை

மலையாளத்தில் வந்த முதல் சினிமாஸ்கோப் படம்

ஒரு யாத்ரா மொழி
-------------------------------
வெளியான நாள் -13-9-1997

பிரியதர்சன் கதை.பிரதாப் போத்தன் இயக்கம்.இளையராஜா இசை

மோகன்லாலுடன் நடிகர்திலகம் நடித்த படம்

ஸ்கூல் மாஸ்டெர்-
----------------------------

மலையாளப் படம் வந்த நாள் -3-4-1964
பிரேம் நசீர், சிவாஜி நடிப்பு
1958 கன்னடம் வந்தது
அதுவே எங்கள் குடும்பம் பெரிசு என தமிழில் மொழி மாற்றம் செய்யப்பட்டது
(பதி பந்தலு என 1959ல் தெலுங்கில் வந்தது

பின் ஹிந்தியில் ஏ எல் ஸ்ரீனைவாசன் தயாரிப்பில் பி ஆர் பந்துலு இயக்கத்தில் வந்தது

இதே படம் மீண்டும் 1972ல்  ராமாராவ் நடிக தெலுங்கில் வந்தது.பின் 1973ல் ஜெமினி சௌகார் நடிக்க தமிழில் ஸ்கூல் மாஸ்டர் என வந்தது)

 ஹிந்தி-
---------------- வெளியான நாள் 6-2-1970

ஸ்ரீதர் தயாரித்து இயக்கிய சிவந்தமண் திரைப்படம் தர்த்தி என ஹிந்தியில் வெளிவந்தது.தமிழில் முத்துராமன் ஏற்ற பாத்திரத்தை ஹிந்தியில் சிவாஜி ஏற்றார்