Saturday, June 16, 2012

கலாம் என்றால் கலகக்காரரா.....





கலாம் என்றாம் கலகம் என்று பொருள் என்ற முறையில்..அப்துல் கலாம் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதாக வரும் செய்திகள் பற்றி கேட்ட போது கலைஞர் கூறியுள்ளார்.

கலகம் என்று சொன்னதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது..இஸ்லாமிய சகோதரர்களும் வெகுண்டு எழுகின்றனர்.

ஆனால்..கலைஞர் சொன்னதன் பொருள்...இந்து இதிகாசம்,புராணங்களில் வரும் நாரதரை கலகக்காரர் என கூறுவதுண்டு.அதே சமயம் நாரதர் செய்யும் கலகம் அனைத்தும் நன்மையிலேயே முடியும் என்றும் கூறுவர்.

கலைஞரும் அந்த அர்த்தத்தில்தான் கலாம் என்றால் கலகம் என்று கூறியுள்ளார்..அதாவது அப்துல் கலாமால் நல்லதே நடக்கும் என மக்கள் உணரவேண்டும் என்பதே கலைஞரின் கருத்து..

எப்படி என் சமாளிப்பு....