Saturday, August 11, 2012

இ‌ந்‌தியாவு‌க்கு ‌நிதான‌ம் தேவை - அறிவுரை சொல்கிறார் ராஜபக்க்ஷே



''அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பாக இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும்'' எ‌ன்று இல‌ங்கை அ‌திப‌ர் மஹிந்த ராஜபக்சே கூ‌றியு‌ள்ளா‌ர்.

இந்திய ஊடகமொன்றுக்கு  அளித்த பே‌ட்டி‌‌யி‌ல், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அல்லது வேறும் அரசியல் கட்சிகளுடன் தனித் தனியாக பேச்சுவார்த்தை நடத்தினாலும் இறுதித் தீர்மானம் நாடாளுமன்றின் ஊடாகவே எட்டப்படும். இதன் காரணமாகவே அனைத்து தரப்பினரும் நாடாளுமன்றத் தெரிவுக்குழுவில் அங்கம் வகிக்க வேண்டுமென வலியுறுத்துகின்றோம்.

ஜனநாயக ரீதியில் பிரச்சனைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்பதே எனது நிலைப்பாடாகும். கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை அமுல்படுத்தப்படவில்லை என சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் உண்மையில்லை. ஆணைக்குழுவின் பரிந்துரைகள் உரிய முறையில் ஆராயப்பட்டு அதன் பின்னர் அமுல்படுத்தப்படும்.

70 வீதமான இராணுவத்தினர் வடக்கில் நிலைநிறுத்தப்பட்டுள்ளதாக விடுதலைப் புலி ஆதரவாளர்கள் பிரச்சாரம் செய்கின்றனர்.எனினும், இந்தப் பிரச்சாரத்தில் உண்மையில்லை. 2009ம் ஆண்டு டிசம்பரில் 27000 படையினர் யாழ்ப்பாணத்தில் நிலைநிறுத்தப்பட்டிருந்தனர். தற்போது அந்த எண்ணிக்கை 15000 மாக குறைக்கப்பட்டுள்ளது. மறைத்து வைக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் தொடர்ந்தும் வடக்கிலிருந்து மீட்கப்பட்டு வருகின்றன.

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் நீண்ட காலமாக நெருங்கி உறவு பேணப்பட்டு வருகின்றது. அயல் நாடுகளின் விவகாரங்கள் தொடர்பில் இந்தியா எடுக்கும் தீர்மானங்கள் நிதானத்துடன் எடுக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை அமர்வுகளில் இலங்கைக்கு எதிரான தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவளித்தமை தொடர்பில் அவர் இத்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இது செய்தி....

இனி நாம்...

இந்த விஷயத்தில் அறிவுரைக் கூற இவர் யார் என்ற கோபம் நமக்கு எழுந்தாலும்...

அடப்பாவிகளா..ஆமையைவிட நிதானமாய் செயல்படும் மைய அரசைப் பார்த்து..இன்னும் நிதானம் தேவை என்கிறாரே..இதற்குமேல் எப்படி...என்று அதிசயிக்கிறோம்.

இது சம்பந்தமாக மைய அரசு பேச்சுவார்த்தைக்கு ஒரு நாயரையோ..மேனனையோ அனுப்பும் என பட்சி சொல்கிறது.

1 comment:

கவி அழகன் said...

Ponkaiya poi pulla kuddiya padikka vaikkira velaya parunka ithu rajapakshakku