Friday, April 5, 2013

மணிஜியின் வாழ்க்கைத் துணைவிக்காக பிரார்த்தியுங்கள்..



பிரபல பதிவரும், நண்பரும் குறிப்பாக மனித நேயம் மிக்கவருமான மணிஜி யின் மனைவியார் வீட்டில் சமைக்கும்போது சிறு தீவிபத்தில் சிக்கி கிட்டத்தட்ட இரண்டு மாதங்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் இரு தினங்களுக்கு முன் அவரிடம் தொலைபேசியபோது...அவர் குரலில் காணப்பட்ட தெளிவு, என் மனதிற்கு சற்று நிம்மதி அளித்தது.

ஆனால்..நேற்று இரவு அவர் பிளஸ்ஸில் இப்படி செய்தி இட்டுள்ளார்..

"உடல்,மனது...இரண்டும் களைத்து விட்டது. மிகக் கடுமையான போராட்டம்.. பிரார்த்தனைகள் மட்டுமே ஏதேனும் அற்புதம் நிகழத்தலாம்.. பிரார்த்தியுங்கள் நண்பர்களே."

அவரது அலைபேசி ரிங் டோன் கூட..'குறையொன்றும் இல்லை' என்றே ஒலிக்கும்.

அவருக்குக் கண்டிப்பாக குறையேதும் ஏற்படாது என நம்புவோமாக..

மருத்துவர்களால் முடியாததையும்..கூட்டு பிரார்த்தனைகள் நிறைவேற்றியுள்ளதை...நாம் அறிவோம்...

ஆகவே..நண்பர்களே..நாம் அனைவரும் நாளை ஞாயிறு காலை 8 மணிக்கு அவரவர் இல்லத்திலோ..அல்லது கோவிலிலோ, சர்ச்சிலோ, மசூதியிலோ இருந்தவாறு பிரார்த்திப்போம்.

இறைநம்பிக்கை இல்லாதோர்..பிரபஞ்ச சக்தியை வேண்டுங்கள்..

நல்லதே நடக்கும்...நம்புவோம்..


18 comments:

Unknown said...

"விரைவில் குணமடையவும் மேலும் பல்லாண்டு வாழவும்
இறைவனை பிரார்த்திக்கிறேன் "

-வான்மீகீ பிரார்த்தனை மன்றம்
வான்மீகீயூர் L .L சங்கர்

Unknown said...

"விரைவில் குணமடையவும் மேலும் பல்லாண்டு வாழவும்
இறைவனை பிரார்த்திக்கிறேன் "

"வான்மீகீ பிரார்த்தனை மன்றம்" வான்மீகீயூர் L .L சங்கர்

Unknown said...

"விரைவில் குணமடையவும் மேலும் பல்லாண்டு வாழவும்
இறைவனை பிரார்த்திக்கிறேன் "

"வான்மீகீ பிரார்த்தனை மன்றம்" வான்மீகீயூர் L .L சங்கர்

Unknown said...

"விரைவில் குணமடையவும் மேலும் பல்லாண்டு வாழவும்
இறைவனை பிரார்த்திக்கிறேன் "

"வான்மீகீ பிரார்த்தனை மன்றம்"வான்மீகீயூர் L .L சங்கர்

வவ்வால் said...

மிகவும் வருத்தமான செய்தி, விரைவில் குணமடையட்டும்.

அபி அப்பா said...

சார்! நீங்கள் சொன்னபடி நாளை ஞாயிறு காலை எட்டு மணிக்கு என் இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் கூட்டு பிரார்தனை செய்வேன்.மணிஜியின் அன்புக்குரியவர்கள் எல்லோரும் அவ்வாறே செய்வர் என நம்புகிறேன். செய்ய வேண்டும் என நானும் வேண்டுகோள் விடுக்கின்றேன்! நிச்சயம் நல்லதே நடக்கும்!

அபி அப்பா said...

சார்! நீங்கள் சொன்னபடி நாளை ஞாயிறு காலை எட்டு மணிக்கு என் இல்லத்தில் இருந்து குடும்பத்துடன் கூட்டு பிரார்தனை செய்வேன்.மணிஜியின் அன்புக்குரியவர்கள் எல்லோரும் அவ்வாறே செய்வர் என நம்புகிறேன். செய்ய வேண்டும் என நானும் வேண்டுகோள் விடுக்கின்றேன்! நிச்சயம் நல்லதே நடக்கும்!

திண்டுக்கல் தனபாலன் said...

விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்...

ராமலக்ஷ்மி said...

வருத்தம் தருகிறது செய்தி. பிரார்த்தனையில் இணைகிறேன்.

ஜோதிஜி said...

எங்கள் குடும்பத்தின் உளப்பூர்வமான பிரார்த்தனைகள்.

ப.கந்தசாமி said...

மனதாரப் பிரார்த்திக்கிறேன்.

வல்லிசிம்ஹன் said...

மணிஜி ஜியின் மனம் அமைதி அடையவும்,
வரது மனைவியின் உடல் நலம் சீராகவும் எங்கள் பிரார்த்தனைகள் கட்டாயம் இறைவனை அடையும்.

Rathnavel Natarajan said...

திரு மணிஜி அவர்களை நெல்லை பதிவர்கள் சந்திப்பில் பார்த்திருக்கிறேன். அவரது மனைவி விரைவில் குணம் பெற பிரார்த்திக்கிறோம்.

”தளிர் சுரேஷ்” said...

மணிஜியின் மனைவி குணமடைய எல்லாம் வல்ல ஸ்ரீ வாலீஸ்வரனை பிரதோஷ நேரத்தில் பிரார்த்திக்கிறேன்! நன்றி!

Ashok D said...

romba naal kazhithu ulle vandhal ipadi oru seidhi, naalai kandippaga prarthikiren

அமர பாரதி said...

மணிஜி அவர்களின் மனைவி விரைவில் பூரண குணமடைய இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.

Unknown said...

அவர்கள் விரைவில் குணமடைய இறைவனை வேண்டுகிறேன்...

எமது வலைப்பகுதி
தமிழ் வாழ் வலைப்பகுதி
திருக்குறள்

Unknown said...

கூட்டு பிராத்தனைக்கு என்றுமே ஷக்தி அதிகம் விரைவில் குணமடயும் நானும் பிராத்திக்கிறேன். கவலை வேண்டாம், விரைவில் நல்ல செய்தி வரட்டும்.